Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

திசநாயகத்திற்கு சிறைத் தண்டனை – சென்னையில் கண்டனக் கூட்டம்.

இனியொரு... by இனியொரு...
09/12/2009
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

tissanayagamamஇலங்கை, சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக நாடு. வெளியில் இருந்து வேறு யாரும் மூக்கை நுழைக்கக் கூடாத அளவுக்கு இறையாண்மை இருப்பதாக வாதாடும் நாடு. இவை கேள்விக்கு உள்ளானதைவிட நம் கண் முன் நிற்கும் கேள்வி வேறு ஒன்று.

இந்த நூற்றாண்டில் மனித உயிர்களை மலிவானதாக்கி, மனித உரிமைகளை அரிதாக்கிவிட்ட “பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ” என்று சொல்லப்படும் ஒன்றை நடத்தி முடித்திருக்கின்றது இலங்கை. ஆனால், இங்கு தான் ஆப்கான், இராக்கில் நடந்ததை விட ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறை உச்சத்திற்கு போய் விட்டது.

சர்வதேச ஊடகங்களுக்கு சுதந்திரமாக செயல்பட அனுமதி இல்லை. உள்நாட்டு ஊடகங்கள் ஊமையாக இருக்க வேண்டும். மீறினால் மரணம் வரை போகக் கூடிய அளவுக்கு ஊடகத்தின் மீதான ஒடுக்குமுறை.

இந்த சூழலில் தான், தன் துறைக்கு இருக்க வேண்டிய நேர்மையுடன், சமரசமின்றி இலங்கையின் “அரசியல் மற்றும் இராணுவ சூழலை” வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக அக்டோபர் 2000ல் பிபிசி ரிப்போட்டர் திரு. நிர்மலாராஜன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சண்டே லீடர் ஆசிரியர் திரு. லசந்தா விக்ரமதுங்கே அடையாளம் தெரியாத நபரால் ஜனவரி 2009ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை அரசின் போர் முறைகளை வன்மையாக விமர்சித்து எழுதியவர் இவர்.

மே 2009ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சானல் 4 தொலைக்காட்சியின் மூன்று செய்தி சேகரிப்பாளர்கள் கைது செய்யப்பட்டு பின் நாடு கடத்தப்பட்டார்கள்.

2006ல் தொடங்கி இன்று வரை 18 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டார்கள்; 35 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக் நாட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள். ஆனால், கொல்லப்பட்டவர்கள் குறித்து விசாரணைக் கூட நேர்மையாக நடத்தப்படவில்லை.

இந்நிலையில் தான், திஸ்ஸநாயகம் என்ற மூத்த பத்திரிக்கையாளருக்கு தீவிரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசர கால சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கி உள்ளது இலங்கை நீதிமன்றம். வடகிழக்கு ஹெரால்டு மாத இதழில் 2006ல் எழுதிய இரண்டு கட்டுரைகளுக்காகத் தான் இவர் இந்த விலையைக் கொடுத்துள்ளார். அதே சமயத்தில் இவருடைய துணிச்சலான மற்றும் நேர்மையான ஊடகப் பணிக்காக இவருக்கு இரண்டு சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்போது நமக்கு எழும் கேள்விகள் இரண்டு.

1. ஜனநாயகத்தின் அங்கமான ஊடகத்தை இப்படி அறுத்து எறிவது ஜனநாயகமா இல்லை அரச பயங்கரவாதமா?

2. இவ்வளவு ஒடுக்குமுறைகள் இருக்கும் போதும், நம்மைப் போல் யதார்தவாதிகளாக இல்லாமல் லசந்தா, திஸ்ஸநாயகம் போன்றவர்கள் ஏன் உண்மையின் பக்கம் நின்றார்கள்?

லசந்தா, தான் அரசால் கொல்லப்பட இருப்பதை உணர்ந்த நிலையில் எழுதிய இறுதிக் கட்டுரை இந்தக் கேள்விகளுக்கான விடைகளைச் சொல்கின்றது.

”உண்மையில் ஜனநாயகத்தின் அங்கங்களை அடி பணிய வைப்பதற்கு இந்த அரசு கொலை செய்வதையே தன் கொள்கையாகக் கொண்டு உள்ளது. இன்று நாங்கள்(பத்திரிக்கையாளர்கள்). நாளை நீதிபதிகளும் தப்பிக்கப் போவதில்லை. எந்த அளவிற்கு இரு பிரிவினருக்கும் சமூகப் பொறுப்பு உள்ளதோ அதே அளவிற்கு இங்கு அரசின் அச்சுறுத்தலும் அவர்களுக்கு உள்ளது.

பின், நாங்கள் ஏன் இதை செய்ய வேண்டும்? நானும் ஒரு சராசரி கணவன். மூன்று அழகான குழந்தைகளுக்கு தந்தை. பத்திரிக்கை மற்றும் சட்டத் துறையில் நான் முன்னேற எனக்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இந்நிலையில், ”என்னை இந்த அபாயத்திற்கு உட்படுத்துவதில் எதாவது பலன் உண்டா?” எனில், பலரின் பதில் ‘இல்லை’ என்பது தான். பத்திரிக்கைத் துறையை கைவிடுதல், அரசியலுக்குள் பிரவேசித்தல், என் விருப்பம் போல் எனக்கு மந்திரிப் பதவி, நாட்டைவிட்டு வெளியேறுதல் என்று எனக்கு எண்ணற்ற வாய்ப்புகள் இருந்த வண்ணமே உள்ளன.

ஆனால் தொழில், புகழ், பாதுகாப்பு இவை எல்லாவற்றுக்கும் மேலானது மனசாட்சியின் குரல் தான்.”

லசந்தா, திஸ்ஸநாயகம் போன்றவர்கள் உண்மைக்காகவும், தங்கள் மனசாட்சிக்காகவும் விலை கொடுக்கும் போதே, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள நம்மைப் போன்றவர்களுக்கும் அறை கூவல் விடுத்தே போகின்றனர்.

நம் காதுகளில் நுழைந்து, இதயத்தைத் துளைக்கிறதா அந்த குரல்?

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, உலக பத்திரிக்கை சுதந்திர நாள் (மே 3, 2009) செய்தியில் :

“பத்திரிக்கை சுதந்திரத்தின் மறுக்கவியலாத முக்கியத்துவத்தை உலகம் ஏற்றுக்கொண்டிருந்தாலும் பத்திரிகையாளர்கள் உயிருக்கு அடிக்கடி ஆபத்து ஏற்படுகிறது. உலகப் பத்திரிகை சுதந்திர நாள் முதலாவதாக 16 வருடங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டதிலிருந்து இதுவரை 692 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் தான் போர் முனையில் செய்தி சேகரிப்பது போன்ற ஆபத்தான பணிச்சூழலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லோருமே தங்கள் சொந்த நாடுகளிலேயே பணியின் போது கொலையுண்டவர்கள் தான். இன்னும் பல நூற்றுக்கணக்கானோர் உண்மைக்கான தேடலுடன் சமூகத்திற்கு செய்தி சொல்லும் பணிகளைச் செய்ததற்காக தங்கள் நாடுகளிலேயே சிறைப்பட்டவர்கள். இந்த துயரம் தரும் போக்கிற்கு ஆகச்சிறந்த உதாரணம் இலங்கையின் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் போன்றவர்கள்.”

ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளும் கண்டனக் கூட்டமும், கருத்துப் பகிர்வும்.

கண்டன உரை:

· ஏ.எஸ்.பன்னீர் செல்வம்,

· தேவசகாயம், ஐ.ஏ.எஸ்

· லெனின்,

· பீர் முகமது,

· வெங்கட்ரமணன்,

· கவிதா முரளீதரன்,

· மோகன், தலைவர், சென்னை பத்திரிக்கையாளர் சங்கம்

· ராஜேஷ் சுந்தரம், இணை ஆசிரியர், ஹெட்லைன்ஸ் டுடே

· அருள் எழிலன்,

· வினோஜ் குமார்.

மற்றும் பலர்

.

இடம்: தெய்வநாயகம் பள்ளி, வெங்கட்நாரயணா சாலை, தி நகர், சென்னை.(திருப்பதி தேவஸ்தானம் அருகில்). நாள்: செப் 12, சனிக்கிழமை.
நேரம்: காலை 10:30 மணி முதல் 1:30 மணி வரை

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கருணாநிதியின் இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு!

Comments 1

  1. kumarathasan says:
    16 years ago

    Sri Lanka is ruled under Emergency Law and Draconian Prevention of Terrorism Act which gives wide powers to the Brutal Armed forces to arrest and put them in prison for an indefenite time. They are very tactful and capable of planting false evidence and framing false charges against anyone who does not agree with them. The Armed forces are charged several times for obtaining
    confession by force and beating. There is no democracy in Sri Lanka. It is DEMONCRACY. IN SRI LANKA. Now the demons and devils are ruling the country.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...