Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தாய்லாந்தில் நடப்பது என்ன?

இனியொரு... by இனியொரு...
07/05/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
11
Home பிரதான பதிவுகள் | Principle posts

நேபாளம், தாய்லாந்து ஆகிய இரண்டு ஆசிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக பரந்துபட்ட சாதாரண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் ஆட்சியில் நீடிப்பதற்கான உரிமைக்காக நாடெங்கும் உள்ள உழைக்கும் மக்களின் பெருந்திரளான பங்கேற்புடன் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நாட்டின் தலைநகரில் குவிந்து முற்றுகை போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முற்றுகைப் போராட்டங்களில் அந்நாட்டு மக்கள் நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து வந்து நாள்கணக்கில் வாரக்கணக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசியாவில் இத்தகைய ஒரு புதிய ஆராக்கியமான போக்கு உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஊடகங்கள் அவற்றின் வரம்புகளுக்கு ஏற்பவே இத்தகைய போராட்டங்களைப் பற்றி செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தோ சிதைத்தோ சித்தரித்து தமது கடமையை சிமேற்கொண்டு செய்து வருகின்றன.

இந்த நிலைமையில் இத்தகைய போராட்டங்கள் எவ்வாறு ஏன் நடைபெற்று வருகின்றன என்பதை அறிய வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்.

தாய்லாந்தில் 1992முதல் 2005 வரை பத்திரிகையாளராக பணியாற்றிய சத்யா சிவராமன் 25.5.10 அன்று சென்னைக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக வந்தார். தாய்லாந்தில் இருந்தபோது NDTV-ன் செய்தியாளராகவும் தாய் மொழியில் நடத்தப்பட்ட பத்திரிகைகளில் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக தனது அலுவல் காரணமாக ஆண்டிற்கு 3 முறை தாய்லாந்து சென்று வரும் அவர் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் விவகாரங்களை கூர்ந்து கவனித்து வருகிறார்.

மேலும் ஈராக் சிக்கலை ஒட்டி இவர் எழுதிய கட்டுரைகள் Contercurrents.org வெளிவந்துள்ளன. தவிர ஹிந்து ராமை நையாண்டி செய்து அம்பலப்படுத்தும் நாடகம் ஒன்றையும் எழுதியுள்ளார். இவை தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளன.

சென்னை வந்து அவரிடம் தோழர் பாஸ்கர் (ஆசிரியர் குழு உறுப்பினர், ‘புதிய போராளி’ இதழ்) தாய்லாந்து நிலைமை பற்றி கலந்துரையாடினார். அப்போது சத்யா சிவராமன் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் பின்வருமாறு.

கடந்த மே 19 வரையில் 1 1/2 மாதமாக தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கை முற்றுகையிட்டு நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டோர் ‘சர்வாதிகார எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி’ என்ற பெயரில் செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் பின்வரும் கோரிக்கைகளுக்காக இவ்வாறு போராடி வருகின்றனர்.

அக்கோரிக்கைகள் பின்வருமாறு:

1. தற்போதைய பிரதமர் அபிசித் வெஜ்ஜஜிவாவின் பதவி விலகல்.
2. நாடாளுமன்றத்தை கலைத்தல்.
3. நாடாளுமன்றத்திற்கான புதிய தேர்தல்.
4. 1997-ல் இயற்றப்பட்ட அரசியல் சாசனத்தை மீட்டமைத்தல்.

இப்போராட்டமானது 2006ல் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலமாக தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட தக்ஷின் ஷினவத்ரா என்பவர் தலைமையில் நடக்கிறது. அவர் வெளிநாடுகனில் இருந்துகொண்டு இதைச் செய்து வருகிறார். அவர் செப். 2006ல் ஐ.நா.அவையில் உரையாற்றச் சென்றபோது இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது.

அவர் 2001ல் ஆட்சியில் அமர்ந்தபோது சாதாரண மக்களுக்கான சில நலவாழ்வு திட்டங்களை அமல்படுத்தினார். அனைவருக்கும் குறைந்த செலவில் மருத்துவம் தாய்லாந்தின் நாணயமான பாட் (ஙிணீலீt)- ல் ஒரு பாட் செலவழிக்கப்பட்டால் சாதாரண காய்ச்சல் முதல் நவீன அறுவை சிகிச்சை வரை மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம். மேலும்கல்வி, உழவர்களுக்கு தாராள சலுகைகளுடன் கடன், கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை போன்றவையே அந்த திட்டங்கள் ஆகும்.

இந்த திட்டங்களை அமலாக்குவதற்கு மது, சூதாட்டம் போன்றவை மீது வரியை விதித்தார்.

1997-ல் தென்கிழக்காசிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பொழுது தாய்லாந்து திவாலானது. அப்போது சர்வதேச செலவாணி நிதியமானது (மிவிதி) கடும் நிபந்தனைகளுடன் கடனுதவியை வழங்கியது. தக்ஷின் 2001ல் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த நிபந்தனைகளுக்கு செவிசாய்க்காமல் மேற்கண்ட நலவாழ்வு திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். மிவிதி-ன் கடனை திருப்பிச் செலுத்தவும் செய்தார்.

2001ல் நடந்த தேர்தலின்போது கொடுத்த மேற்கண்ட நலவாழ்வு திட்டங்கள், வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றிய அவர் 2005ல் நடந்த தேர்தலில் மீண்டும் அதிக இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தார்.

இதைப் பொறுத்துக் கொள்ளாத மேட்டுக்குடியினரும் மஞ்சள் சட்டையினர் என்று அழைக்கப்படும் கட்சியினரும் (இவர்கள் மஞ்சள் சட்டைகளை அணிந்து கொண்டு வீதிகளில் போராடினர்) பாரம்பரிய ஆளும் வர்க்கத்தினரின் (அரசர், ராணுவம், அதிகாரவர்க்கம்) தீவிர ஆதரவோடு களம் இறங்கினர்.

விளைவாய், தக்ஷின் 2006ன் தொடக்கத்தில் மீண்டும் தேர்தலை நடத்தினார். மஞ்சள் சட்டையினர் இதைப் புறக்கணித்தனர். ஆனால் தக்ஷின் பெரும் வெற்றியைப் பெற்றார்.

ஆனாலும் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாத பாரம்பரிய ஆளும் வர்க்கம் அவர் செப்.2006ல் நாட்டின் பிரதமர் என்ற வகையில் ஐ.நா. அவைக்கு உரையாற்ற சென்றபோது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் பதவியிலிருந்து தூக்கியெறிந்தது.

அத்துடன் அவரது கட்சியையும் தடை செய்தது. சொத்துக்களை முடக்கியது. நேரடியாக விசாரிக்காமலேயே 2 ஆண்டு சிறைத்தண்டனையை விதித்தது.

அனைத்திற்கும் மேலாக 1992முதல் 1996 வரை மக்கள் போராடியதால் 1997ல் இயற்றப்பெற்ற அரசியல் சாசனம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நீதிபதிகளையும் அதிகார வர்க்கத்தினரையும் ஏன் பிரதமரையும் கூட திரும்ப அழைக்கிற உரிமையை மக்களுக்கு வழங்கியது. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின் இந்தச் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது.

அதே நேரத்தில் மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்ற 30 பாட் என்ற மருத்துவ திட்டத்தில் மாற்றம் செய்து அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவம் என்பதாக அறிவிக்கப்பட்டு இராணுவ ஆட்சிக்கு ஆதரவைப்பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்றுக்கொள்ளாத தக்ஷின் கட்சியினர், ஆதரவாளர்கள் மற்றும் பெரும் மக்கள் திரளினர் களத்தில் இறங்கினர். இதையட்டி இராணுவம் தவிர்க்க இயலாமல் தேர்தலை நடத்தியது. அதிலும் தக்ஷின் தொடங்கிய புதிய கட்சியே (மக்கள் சக்தி கட்சி) பெரும் வெற்றி பெற்றது. சோமக் சுந்தரவெஜி என்பவர் பிரதமர் ஆனார்.

இதையும் பொறுக்க முடியாத பாரம்பரிய ஆளும் வர்க்கம் அரசியல் சாசன நீதிமன்றத்தின் மூலமாக அவரை பதவி நீக்கம் செய்தது. தொலைக்காட்சி இதழியலாளரான இவர் பதவிக்கு வருவதற்கு முன்பு ஒப்புக்கொண்டவாறு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதற்கு பணம் பெற்றார் எனக் கூறி இதனால்  பிரதமர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என அவ்வாறு செய்தது.

அடுத்த பிரதமரானவர் சோம்சாய் வாங்சாட் என்பவர் ஆகும். இவர் வாக்குகளை விலை கொடுத்து வாங்கியதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு இவரையும் பதவி நீக்கம் செய்தது அதே நீதிமன்றம்.

மேலும் தக்ஷின் தலைமையிலான கட்சியின் தலைவர்கள் பலரை ஏதோ சாக்குப்போக்குச் சொல்லி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அந்தக் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்து ஆட்சி அமைக்கும் உரிமை இல்லாமல் போய்விட்டது.

அதன் பின்னர் பிரதமரான அபிசித் வெஜ்ஜஜிவா ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறார். இவருடைய பதவி விலகலைக் கோரியும் நாடாளுமன்றத்தை கலைக்கக் கோரியும் நாடாளுமன்றத்திற்கு புதிய தேர்தலை நடத்தக் கோரியும் நாடாளுமன்றத்தை கலைக்கக் கோரியும் நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தலை நடத்தக் கோரியும் 2 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் அங்கமாக அண்மையில் தற்காலிகமாக முடிவுற்ற 45 நாள் பாங்காக் முற்றுகைப்போராட்டம் ஆகும்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் பாங்காங் நகரத்தைச் சேர்ந்த எழை மக்கள், வடக்கு மற்றும் வடகிழக்கு தாய்லாந்தைச் சேர்ந்த ஏழை விவசாயிகள்- கைவினைஞர்கள் முதலியோர் விடா முயற்சியுடன் போர்க் குணமிக்க வகையில் பங்கெடுத்தனர்.

அரசாங்கமே ஸ்தம்பித்துப் போனது. போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு போலீஸ் மறைமுகமாக ஆதரவாக இருந்தது.
1.5-2 லட்சம் பேர் கலந்துகொண்ட இந்த முற்றுகைப் போராட்டத்தில் நாட்டின் இராணுவப் பாசறைகளை முற்றுகையிட்டனர்.

1932லிருந்து 32 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் நடந்த தாய்லாந்தில் இராணுவத்திலேயே ஜெனரலாக பணியில் இருக்கும் போதே சேடங் எண்பவர் 50-60 இராணுவ வீரர்களுடன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார். இராணுவம் அவரை சுட்டுக்கொண்று போராட்டத்தையும் நசுக்கி முடிவுக்கு கொண்டு வந்தது.

இந்தப் போராட்டம் தற்காலிகமாகத்தான் முடிவுக்கு வந்துள்ளது, மீண்டும் விரைவில் தொடங்கக் கூடும். ஏனெனில் இந்தப் போராட்டமானது வெறுமனே நலவாழ்வுத் திட்டங்களுக்கானது அல்ல, அல்லது இது அத்தகைய திட்டங்களைத் நடைமுறைப்படுத்திய தக்ஷின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான போராட்டம் மட்டும் அல்ல. இந்தப் போராட்டமானது மன்னர் தலைமையிலான பாரம்பரிய ஆளும் வர்க்கத்திற்கு எதிரானது. சாராம்சத்தில் மக்கள் தாம் தேர்ந்தெடுத்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான, அத்தகைய ஆட்சியை கவிழ்ப்பதற்கான உரிமையை மன்னர் தலைமையிலான பாரம்பரிய ஆளும் வர்க்கத்திற்கு தர மறுக்கின்ற போராட்டமாகும்.
மொத்தத்தில் இது குடியரசுக்கான போராட்டமாகும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கை ஆசியாக் கண்டத்தின் அதிசயம் : டக்ளஸ்

Comments 11

  1. Garammasala says:
    16 years ago

    “நாட்டின் தலைநகரில் குவிந்து முற்றுகை போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ” என்று தலைப்பு விரிவாக்கப் பட்டிருந்த்தை வாசித்த போது அண்மைய தகவல் எதையோ தவறவிட்டுவிட்டேனோ என்ற எண்ணம் எற்பட்டது.
    இது சமகால நிலையைத் தவறாக அடையாளங்காட்டும் ஒரு கூற்று.
    செய்தி வெளியீட்டில் இவ்வாறான விடயங்களிற் கூடிய கவனம் தேவை.

  2. K.R.அதியமான் says:
    16 years ago

    …the Shinawatra government also faced allegations of electoral fraud, corruption, authoritarianism, treason, conflicts of interest, acting non-diplomatically, and muzzling of the press.[11] Thaksin was accused of tax evasion, lèse majesté (insulting the dignity of a reigning sovereign) and selling national assets to international investors.[12][13] Independent bodies, including Amnesty International, criticized Thaksin’s human right s record. http://en.wikipedia.org/wiki/Thaksin_Shinawatra

    • Garammasala says:
      16 years ago

      Dear K.R.A.
      Thai parliamentary politics has been corrupt all along. I had a Thai friend –lost touch since he became an MP 8 years ago– who bought his way into parliament, believe me, without contesting an election. Thaksin Shinawatra’s election was not as simple as it is made out to be — i.e. corrupt practices on his part. There is more to it.
      The dismissal of his government was sheer manipulation by the conservative ellite and the armed forces. His party won again, that too was dismissed by creating a scene of disorder.

      Today’s issues seem to have transcended TS. The deeds for which he is still popular with the rural and urban poor have themselves become issues, and there is a campaign for democratic reform. State repression of the protests is likely to push the situation beyond its aim of keeping TS out.
      (I am reminded of the Americans making a loveable pet of Saddam. I hope that TS does not become a martyr and his return an end in itself).

  3. thamilmaran says:
    16 years ago

    வர்க்கப் புரட்சியே தாயலாந்தில் நடக்கிறது.

    • K.R.அதியமான் says:
      16 years ago

      sure. and it certainly will end in a red revolution.

    • Garammasala says:
      16 years ago

      Dear K.R.A.
      I wish I could share your optimism. It is going to be a long and painful process before it gets there.
      The ‘red shirts’ are not quite politically red yet.
      There is also a lack of organisation.
      But I agree with your feeling that the system cannot go on.

      • K.R.அதியமான் says:
        16 years ago

        i was kidding and meant in a ironical sense. joking actually !!! :))))) there is no chance for ‘revolution’ in any nation anymore. may be anarchy, bankruptcy and chaos : like in Zimbawe. Communist ideas are bankrupt and proved to be counter productive. repeat : counter productive. that is they result in the exact opposite of intentions and ideals. theory is different from practise. Capitalism for all its faults is the only viable system as proved in liberal democracies like W.Europe. there is lots of versions of capitalism and US model is not the only one. I admire Netherlands and esp German model. Pls read about German miracle after 1948. more in my blogs.

        • K.R.அதியமான் says:
          16 years ago

          and Karl Marx’s prediction about the eventual collapse of capitalism, when the net surplus value in a system is reduced to a bare minimum in the course of time has been proved wrong. he predicted / projected that the standard of living of the average worker (esp in Europe, which he witnessed in the 19th century) will worsen with each depression. but the opposite happened. and his hypothesis that each business cycle will be worse than the preceding one was also proved wrong. The core of Das Capital has been discredited empirically. and hence his basic premise about ‘surplus value’ and its exploitation itself is wrong and unscientific. but dogmatics will continue to belive in his theories. that is unrealisitc and as superstitious as any irrational belief in religion or miracle.

        • xxx says:
          16 years ago

          What happened in neighbouring Nepal?

      • K.R.அதியமான் says:
        16 years ago

        and there is lots of ‘leftist’ ideas and polcies within the current ‘capitalistic model’ which actually is not real free market system as envisaged by ‘true capitalists’ or real free market polices. I am an admirer and follower of Cato Institute which is a liberal think tank based in Washington. They are against US millitary interventions, big governments and endless subsidies which distort the markets. esp they are against Keynesian deficit financing which lies at the heart of the world economic crisis. this is a complex subject in the realm of economics and need more inputs. Pls try this important article :

        http://www.cato.org/pub_display.php?pub_id=11916 Financial Reform Bill Won’t Stop Next Crisis

  4. Garammasala says:
    16 years ago

    Irrespective of what one may admire and believe in, the current global capitalist crisis ir real and will take a heavy toll on the system.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...