தமிழர் நட்பு கழகம் சார்பாக ‘பச்சை ரத்தம் ‘குறும்படம் திரையிடல் நிகழ்வு ,மும்பை தாராவியில் ௦3/07/2011,மாலை,6 ..மணியளவில் நடந்தது ,
தோட்டத் தொழிலாளர்களின் இரு நூற்றாண்டுப் போராட்டம்
தேயிலைத் தோட்டங்களை நினைக்கும்போதே அதன் பசுமையும், குளுமையும் மனதிற்குள் ஒரு சேர விரியும். கோடையில் குளிர் கொண்டிருக்கும் சுற்றுலா தலங்களாகவும், தமிழ…்த் திரைப்படங்களின் கனவுப்பாடல்களுக்கான பேரழகு மலைகளாகவும்தான் தேயிலைத் தோட்டங்களை நாம் அறிவோம். ஆனால், நம் புத்துணர்ச்சியைத் தூண்டி, நண்பர்கள் சந்திப்பை இனிமையாக்குவதற்கும் மேலாக – தேயிலைத் தோட்டங்களைப் பற்றி நாம் பேசுவதற்கும், நினைப்பதற்கும் நிறைய இருக்கிறது என்பதைப் பற்றி விளக்குகிறது, “பச்சை ரத்தம்’ என்ற ஆவணப்படம்.ஆவணப்படத்தின் இயக்குநர் தவமுதல்வன். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றை ஒரு பாடமாகப் படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது இந்த “பச்சை ரத்தம்’ நிகழ்ச்சிக்கு வந்ததவர்கள் ஆனைவரும் மன நிறைவோடு சென்றார்கள் ,இதுபோல் இன்னும் பல குறும்படங்கள் மும்பையில் ஆறிமுகம் செய்யவேண்டும் என கேட்டுகொண்ட்டனர் … ஆகில இந்தியா இளைஜர் பெருமன்ற தமிழ் மாநில தலைவர் தோழர் திருமலை மற்றும் மு.எ.பாரதி ,கு.ராஜா ,ஆகியோரோடு புதுச்சேரி மாநில தலைவர் பா.அந்துவான் ,பா.சரவணன் ஆகியோர் கலந்து கொன்றனர்கள் .அதோடு மும்பை தோழர் நாடோடி தமிழன், இறைச.ராஜேந்திரன் ,மா.கதிரவன் ,வருண் ,ஆதிமுலம் ,சௌந்தராஜன் ,தமிழ்பலா ,மணிமாறன் என தோழர்கள கலந்துகொன்றனர்கள் ….







