Wednesday, March 11, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழகத்தின் எழுச்சி மட்டுமே இந்தியாவின் கருத்தை மாற்ற வைக்கும் ஆற்றல் வாய்ந்தது:சென்னை கண்டனக் கூட்ட பதிவுகள்!

இனியொரு... by இனியொரு...
09/14/2009
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
3
Home பிரதான பதிவுகள் | Principle posts

 “சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை” – என்ற தலைப்பில் “சேவ் தமிழ்ஸ்” கூகுள் குழுமத்தின் சார்பில்   கண்டனக் கூட்டம் செப். 12, சனிக்கிழமை சென்னையில்  நடைபெற்றது.

   ‘சேவ் தமிழ்ஸ்” கூகுள் குழுமம் தகவல் தொழில்நுட்பவியலாளர்களினால் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.  இலங்கைஇராணுவம் ஈழத் தமிழர்களை கண்மூடித்தனமாகக் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் இக்குழுமத்தின் சார்பில் மனிதச் சங்கிலி, பட்டினிப் போராட்டம் உட்பட பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன. பின்னர் வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்கக் கோரியும் பேரணி போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

   ஈழத் தமிழர் நலன்களுக்காக நடத்தப்பட்ட பல நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, திசநாயகத்திற்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகால சிறை தண்டனையை உடனடியாக இரத்து செய்து அவருக்கு நிபந்தனை அற்ற விடுதலை வழங்கக் கோரியும், ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குள் பன்னாட்டு ஊடகங்களை அனுமதிக்கக் கோரியும்,   இலங்கை அரசின் ஊடக ஒடுக்குமுறையைக் கண்டித்தும்   செப். 12, சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு சென்னை தியாகராய நகர் செ. தெ. நாயகம் பள்ளியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

   இக்கருத்தரங்கத்தில் இந்தியாவின் முன்னணி ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

   மூத்த ஊடகவியலாளரும், சன் டிவியின் முன்னாள் செய்தி ஆசிரியருமான ஏ. எஸ் பன்னீர்செல்வம் தனது உரையில் ‘திசநாயகத்தின் கைது ஒரு குறிப்பிட்ட ஏதேச்சையான நிகழ்வு அல்ல. அதற்கு பின்னணியில் இலங்கை அரசியல் சட்டத்தின் அமைப்பும் அது அரசுக்கு வழங்கியுள்ள உச்சபட்ச அதிகாரமும் இருக்கிறது. அந்த அரசியல் சட்டம் நீக்கப்படாமல் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வு கிடையாது” என ஆணித்தரமாக விளக்கினார்.

   டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழின் மூத்த செய்தியாளர் வெங்கட்ரமணன் தனது உரையில், திசநாயகத்தின் வழக்கின் பின்னணியையும், எவ்வாறு திசநாயகத்திற்கு ஆதரவாக சாட்சியம் அளித்தவர்களின் சாட்சியங்கள் எவ்வித நியாயமான காரணமுமின்றி நிராகரிக்கப்பட்டன என்பதையும், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பே வழங்கப்பட்டது என்பதையும் விரிவாக விளக்கினார்.

   ஓய்வு பெற்ற அய்.ஏ.tesaaஎஸ் அதிகாரியும் ஈழம் தொடர்பாக தொடர்ந்து ஊடகங்களில் எழுதி வருபவருமான தேவசகாயம் ‘சீனா இலங்கையில் காலடி எடுத்து வைப்பது என்பது இந்தியாவின் நலன்களுக்கும் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரானது. ஓர் இந்தியக் குடிமகனாக எனக்கு இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

   இந்நிலையில் தமிழர்களை இந்தியா நட்பு சக்தியாக்கிக் கொள்வது மட்டுமே இந்தியாவிற்கு நன்மை பயக்கும். இலங்கை மண்டியிட வைப்பதற்கான ஒரு வழியாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடர் பிரச்சாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்கா தடை செய்யப்பட்டதைப் போன்று இலங்கையும் கிரிக்கெட் மற்றும் பிற உலகளாவிய விளையாட்டுகளில் விளையாட தடை செய்யப்பட வேண்டும்” என கூறினார்.

   ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியின் செய்தியாளரும் சமாதான காலங்களிலும் பிற நேரங்களிலும் 5 முறை ஈழத்திற்கு சென்று பதிவு செய்தவருமான ராஜேஷ் சுந்தரம் இந்நிகழ்விற்காக தில்லியில் இருந்து வந்திருந்தார். அவர் தனது உரையில்,

   ‘முகாம்களில் மக்களை அடைத்து வைப்பதன் மூலம் வெறுப்பையும் போராட்ட உணர்வையுமே இலங்கை அரசு வளர்க்கிறது. இன்று முகாமில் வளரும் 10-11 வயது சிறுவன் தன் கண் முன் தனது 2 வயது தங்கையும் 80 வயது தாத்தாவும் மருந்தின்றி மடிவது கண்டும், தனது தாய், தந்தை, மூத்த சகோதரர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவது கண்டும் வளரும் நிலையில் அதற்கு எதிரான போராட்ட உணர்வே அவன் மனதில் மேலோங்கும்.

   எனது கணிப்பில் இன்னும் 6 மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ மீண்டும் ஆயுதப் போராட்டங்கள் ஈழத்தில் வெடிக்கும் என்றே கருதுகிறேன்.

   இந்தியாவைச் சுற்றி நண்பர்களே இல்லாத நிலையில் ஈழத்தையும் தமிழர்களையும் தனது நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தமிழகத்தின் எழுச்சி மட்டுமே இந்தியாவின் கருத்தை மாற்ற வைக்கும் ஆற்றல் வாய்ந்தது. நீங்கள் ஆயுதம் ஏந்த வேண்டியதில்லை. ஆனால் காந்திய முறைப்படி பல போராட்டங்களை நடத்தலாம்.

   இலங்கையின் சுற்றுலாத் துறை இந்த ஆண்டு மட்டும் இந்தியாவிலிருந்து 7.5 இலட்சம் பேர் இலங்கைக்கு சுற்றுலாவிற்கு வருவார்கள் என கூறுகிறது. இந்த 7.5 இலட்சம் பேர் ஆளுக்கு 100 டாலர்கள் குறைந்தபட்சமாக செலவழித்தால் கூட அந்த பணம் இலங்கை அரசு மேலும் ஆயுதங்கள் வாங்கவும், மேலும் ஆட்களை இராணுவத்தில் சேர்க்கவுமே பயன்படப் போகிறது. இதனை தடுக்க, இலங்கைக்கு சுற்றுலாச் செல்ல வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரச்சாரங்கள் செய்ய வேண்டும்.

   இலங்கைப் பொருட்களை பயன்படுத்துவதை எதிர்த்து பிரச்சாரங்கள் செய்ய வேண்டும். இவை இலங்கையின் பொருளாதாரத்திற்கு நெருக்கடியை அளிக்கும். அதன் மூலம் இலங்கை அரசுக்கு நெருக்கடி அளிக்கலாம்” என்றார்.

   மேலும், வீக் ஆங்கில வார இதழின் கவிதா முரளிதரன், டெக்கான் கிரானிக்கல் பீர் முகம்மது, குங்குமம் இதழின் அருள் எழிலன், நக்கீரன் இதழின் லெனின், குமுதம் இதழின் கார்டூனிஸ்டு பாலா ஆகியோரும் தங்கள் கண்டனத்தையும் கருத்துக்களையும் பதிவு செய்தனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மறுபடியும் பட்டு அல்லது காஞ்சீவரம்! :சுப்ரபாரதிமணியன்

Comments 3

  1. pasupathi says:
    16 years ago

    சிறப்பான பதிவு! நன்றி நண்பர்களே!

  2. Rama says:
    16 years ago

    ..தோழர்கள் ஒழுங்குபடுத்திய இக் கண்டன கூட்டத்தில் இலங்கை அரசும் அம்சாவும் வீசி எறிந்த எலும்புத் துண்டுகளுக்கு விலைபோன போலி பத்திரிகையாளர்கள் எவரும் வரவில்லைப்போல் தெரிகிறது. குறிப்பாக அமாக்ச்சின் விசுவாசக் கும்பலைச் சேர்ந்த பணத்திற்கும் எலும்புத் துண்டுகளுக்கும் தண்ணிக்கும் விழுந்தடித்து விலைபோகும்……………………………………. ஆகிய இந்த மூன்று போலி பத்திரிகையாளர்க ளும் வரவில்லையா? அறியத்தரவும்.

  3. Guru.Radhakrishn an,Nellikuppam--607105 --Cuddalore District says:
    16 years ago

    பத்திரிக்கைகாரர்களின் பொழிவுகள் மற்றும் வென்டுகொள்கள் சிறப்பாக இருந்தன.உலகநாடுகளின்நெருக்குதல்கள் உடனடித் தெவை. பக்ஷெயின் கொட்டம் அடஙக் அதுதான் சிறந்தது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...