Sunday, March 15, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சிதைவடையும் நாடுகடந்த தமிழீழமும் புதிய அரசியலின் தேவையும் : கோசலன்

இனியொரு... by இனியொரு...
03/26/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஒருபுறத்தில் இலங்கை அரச பாசிசத்தின் இருப்பென்பது சிறுபான்மை இனங்களின் மீதான ஒடுக்கு முறையில்ருந்தே நிலைபெறுகின்றது, அதன் மறுபுறத்தில் ஒடுக்கு முறைக்கு எதிரான சமூகச் சிந்தனையை, மக்களின் உணர்வை வெற்றுச் சுலோகங்களின் மாயைக்குள் மட்டும் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்ற அரசியல் நுட்பத்தை 80 களில் அதிவேகமாக வளர்ந்த விடுதலை இயக்கங்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட இராணுவக் குழுக்கள் கற்றுக்கொண்டன.

எமது நோக்கம் தமிழ் ஈழம் என்ற சுலோகமும் அதனை அடைவதற்காக “ஒற்றுமைப்படுங்கள்” என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படது. இந்தக் கோரிக்கைக்கான ஏகப் பிரதிநிதிகளாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மைப் பிரகடனபபடுத்திக் கொண்டனர்.

தமிழீழம் என்ற முழக்கத்தை வெற்றிகொள்வதற்கான ஒரே வழிமுறை என்பது இராணுவக் குழுக்களின் பலத்தைப் பெருக்கிக்கொள்வதும், இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்வதுமானதாக் அமைந்திருந்தது. தன்னுரிமைக்கான போராட்டத்தின் நண்பர்கள், எதிரிகள் போன்ற அடிப்படை விடயங்களைத் தீர்மானிப்பது கூட இராணுவ வலிமையை உயர்த்திக்கொள்வது என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது.
புலிகளைப் பொறுத்தவரை, ஒரு புறத்தில் இலங்கை இராணுவ பலத்திற்கும் மறுபுறத்தில் விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்திற்கும் இடையேயான மோதல் என்ற ஒருங்கு புள்ளியில் போராட்டம் குறுக்கப்பட்டது.

இலங்கை அரசிடம் தனது அரசமைப்புக்களை பேணிக்கொள்வதற்கான அரச இயந்திரத்தின் கூறுகள், இராணுவ பலம் என்பதற்கு அப்பாலும் விரிவடைந்திருந்து. தாம் சார்ந்த நட்பு சக்திகள் குறித்து மிகத் தெளிவான வரைமுறைகளை கொண்டிருந்த இலங்கை அரசு உலகின் ஏனைய அனைத்து நாடுகளையும் போலவே பலமான அரசமைப்பு முறையையும் கொண்டிருந்தது.

ஏனைய அரசுகளைப் போலவே இலங்கை அரசின் நலன்களும் மக்கள் சார்ந்தவையல்ல. மக்கள் விரோதமானவை. இலங்கை அரசுடனான ஏனைய அரசுகளின் நட்பும், முரணும் அடிப்படையில் சந்தைப் பொருளாதாரத்தை மையப்படுத்தியதாக அமைந்திருக்கும் என்பது அரசியலில் பாலர் பாடம். குறிப்பாக வல்லரசுகளிடையேயான உள் முரண்பாடுகள், சந்தைப் பொருளாதாரத்திற்கான ஆதிக்கப்ப் போட்டியை அடிபடையாகக் கொண்டவை.

மக்களுடைய விடுதலைக்கான கட்சி அல்லது இயக்கம் என்பவற்றின் நலன்கள் மக்கள் சார்ந்தவை. அதிலும் ஒடுக்கப்படுகின்ற மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்தவை. இவை ஏக போக வல்லரசுகளதும், அதிகார அமைப்ப்புக்களதும் நலன்களுக்கு அடிப்படையில் முரணானவை; ஆக, மக்கள் சார்ந்து போராடுகின்ற எந்த அமைப்புக்களதும் நலன்கள் சார்ந்தவையல்ல.

இலங்கை அரசினதும், மக்கள் சார்ந்த போராட்டக் அமைப்புகளதும் நட்பு சக்திகள் வேறுபட்டவை. ஆனால், ஈழப் போராட்டத்தில் இதன் எதிர்மறையை மட்டுமே காணமுடியும்.

இலங்கை அரசு நட்புப் பாராடுகின்ற அத்தனை அரச அதிகாரங்களையும் 80 களின் பின்னர் இராணுவ வளர்ச்சி கண்ட இயக்கங்களும் நட்பு சக்திகளாகக் கருதிக்கொண்டன. இந்தியா, அமரிக்கா, ஐரோப்பா என்ற அனைத்து அதிகாரங்களும் ஏதாவது ஒரு சந்திப்பில் நட்பு சக்திகளாகவே கருதப்பட்டன.

மக்கள் மீது நம்பிகையற்ற கோழைத்தனமான இந்தச் சார்பு நிலை உலகின் அத்தனை சமூகப் பற்றுள்ள அமைப்புக்களிடமிருந்தும் ஈழப் போராட்டத்தை அன்னியப்படுத்திய போது அதன் பலவீனம் ஆரம்பமானது.

ஆக, இலங்கை அரசும் 90 களின் பின்னர் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. இரண்டு பகுதியினரதும் நண்பர்கள் ஒரு வகையானவர்களே.
இலங்கை அரசிற்கும், ஏக போக நாடுகளுக்கும் இடையாயான உள் முரண்பாடென்பது புதிய ஒழுங்கு வடிவத்தை எடுத்த வேளையில் புலிகள், அவர்கள் நண்பர்களாகக் கருதியவர்களாலேயே அழிக்கப்பட்டனர். அழிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட அரசியல் வியாபாரிகள், புலிகளின் முன்னை நாள் உறுப்பினர்கள் போன்றோர் அழிப்பிற்கான நிகழ்ச்சித் திட்டத்தை இலகுபடுத்தப் பயன்படுத்தப்பட்ட முகவர்களே தவிர, அதன் சூத்திரதாரிகள் புலிகள் நண்பர்களாகக் கருதிக்கொண்ட நாடுகளும் அதிகார மையாங்களும் மட்டுமே.

உலக மயமாதலின் பின்னதாக உருவாவன புதிய சந்தைப் பொருளாதார ஆதிக்கப் போட்டியில் புலிகளிடம் தமது நண்பர்களுக்கு வழங்குவதற்கு எதுவும் இருந்ததில்ல்லை. இலங்கை அரசிடம் ஒரு நாட்டின் பயன்படுத்தப்படாத வழங்களும், சந்தையும் காத்துக்கொண்ட்ருந்தது.

இதற்கு முன்னைய காலங்களில் கூட புலிகளை தமது நலன்களுக்காக் கையாண்ட ஏகபோகங்களும், பிராந்திய விஸ்தரிப்பு வாத அரசான இந்தியாவும் பல மனித உயிர்களைப் பலிகொண்டன.

புலிகளின் இராணுவ வெற்றிகள் தோல்விகள் என்ற அனைதையுமே அதிகார வர்க்கம் நிர்ணயித்துக்கொள்ள, புலிகள் வெறுமனே ஏவல்களாகவே தொழிற்பட்டனர். எவ்வைகையான அரசியல வேலைத்திட்டமுமின்றிய இராணுவ வெற்றிகளை நோக்கமாகக் கொண்டிருந்த புலிகளைப் பயன்படுத்திக் கொள்வதென்பது மிகவும் இலகுவான செயன்முறையாகவிருந்தது.

இவ்வகையான போராட்டங்களிலிருந்து கற்றுக்கொள்வதையும் குறைந்தபட்சம் தமது சார்பு நிலைகளை மறுசீரமைத்துக்கொள்வதையும் முற்றாக நிராகரிக்கின்ற அமைப்பாக நாடுகடந்த தமிழீ அரசு புலிகளின் அழிவின் பின்னதாக உருவாகிறது.

வெற்று முழக்கங்களையும், அதற்கான கோரிக்கைகளையும் முன்வைத்து உருவான நாடுகடந்த அரசின் நண்பர்கள் யாரோ அவர்களே இலங்கை அரசின் நண்பர்களுமாகின்றனர். இந்திய மேலாதிக்க வல்லரசு, அமரிக்க ஏகாதிபத்தியம், ஐரோப்பிய நாடுகள் என்ற அதே பட்டியல் மறுபடி வரையப்படுகின்றது. புலிகளின் அழிவிற்குக் காரணமான அவர்களின் நண்பர்கள் மீண்டும் தமிழ் மக்களின் நட்பு சக்திகளாகப் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். சிஐஏ இன் சிலந்தி வலைக்குள் நாடுகடந்த அரசு “பெருமைக்குரிய” பாராளுமன்றத்தைக் கூடுகிறது.

போராடுகின்ற மக்கள் பிரிவினரிடமிருந்தும், புரட்சிகரப் புத்திசீவிகளிடமிருந்தும், ஜனநாயக, மனிதாபினாமன, முற்போக்கு சக்திகளிடமிருந்தும் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் மறுபடி அன்னியபடுத்தப்படுகிறது.

2010 இற்குப் பின்னான காலப்பகுதி போராட்டங்களுக்கானதென அமரிக்க உளவுத்துறை “எச்சரிக்கிறது”. எதிர்கொள்ள முடியாத அளவிற்குப் போராட்டங்கள் உலகம் முழுவதும் உருவாகலாம் என எதிர்வு கூறுகின்றது. தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தவரை இது சரணடைவிற்கான இன்னொரு காலம்.

இப்போது நாடுகடந்த தமிழீழம் முன்வைக்கும், “தேசியத் தலைவர்”, “தமிழீழ தாயகம்” போன்ற வெற்று முழக்கங்களைப் பயன்படுத்தியே மக்களின் எதிரிகளின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை அரச தொடர்பாடலும், கே,பியுடனான தொடர்பும் இந்த எல்லைக்குள் இருந்தே மேற்கொள்ளப்படுகிறது. இவற்றைக் கையாள்வதற்காக உருத்த்திரகுமார் ஈறான பல சந்தர்ப்பவாத முகவர்கள் ஒழுங்குபடுத்தப்படுகின்றனர்.

இப்போது நாடுகடந்த தமிழீழம் இரண்டுபட்டுள்ளது. ஜனநாயக அணி என்ற புதிய பிளவு அதே முழக்கங்களோடும், கோரிக்கைகளோடும், முன்னைய ஏகாதிபத்திய நண்பர்களோடும் உருவாக்கப்படுள்ளது. இவர்களின் பிளவிற்கு கொள்கை அடிப்படையில் எவ்வகையான முரண்பாடுகளையும் காணமுடியாது, வெறும் நிர்வாக மட்டத்திலான முரண்பாடுகள்.

தமிழ்ப் பேசும் மக்களை அவர்களின் எதிரிகளிடம் ஒப்படைப்பதற்கு ஜனநாயக அணி எதற்கு? உருத்திரகுமார் அணியே போதுமானாது!
இலங்கை இந்திய அரசுகளுக்கு அழுத்தங்கள் வழங்கவும், ஐரோப்பிய அமரிக்க அரசுகளை எதிர்கொள்ளவும், உருவாகவல்ல புதிய அரசியல் சிந்தனை வழியாக நாடுகடந்த அரசின் அடிப்படைக் கருத்தியல் அழிக்கப்பட வேண்டும். அழிவிலிருந்து கற்றுக்கொண்ட புதிய அரசியல் தலைமை உருவாக வேண்டும்.

இலங்கையில் மக்கள் அமைப்புக்களை உருவாக்குவதற்கான ஜனநாயக் இடைவெளிக்கான போராட்டங்களை இந்திய, இலங்கை ஜனநாயக, முற்போக்கு சக்திகளோடு இணைந்து முன்னெடுக்க வேண்டும்.

ஐரோப்பிய அமரிக்க போராடும் முற்போக்கு, ஜனநாயக, மனிதாபிமான சக்திகளுக்கு எம்மை புதிய அரசியலோடு அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும். அன்னியமாகிப் போன, சந்தர்ப்பவாதமாகக் கருதப்படுகின்ற, அதிகாரவர்க்கத்தை நம்பிய எமது போராட்டத்தின் புதிய முகம் மக்களின் எதிரிகளுக்கு எதிரான திட்டமிட்ட போராட்டங்கள் ஊடாகவே சாத்தியமானதாகும்.

இவ்வாறான குறைந்தபட்ட்ச வேலைத்திட்டங்களோடு புலிகள், புலியெதிர்ப்பு என்ற அடையாளங்களுக்கு அப்பால் மக்கள் என்ற அடையாளத்தோடு இணைதல் சாத்தியமாக வேண்டும். அழிவுகளைத் தன்னகத்தே கொண்ட நாடுகடந்த தமிழீழம் கலைக்கப்பட்டு மக்கள் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

முள்ளிவாய்க்காலில் கழுத்தறுத்த ‘மர்ம’ நபர் - சேரமான்

Comments 1

  1. siva says:
    15 years ago

    சந்தர்ப்பவாதமாக திட்டமிட்ட பிளவுகளை உருவாகவல்ல சிந்தனை இது

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...