கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ் தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் உதயகுமார், புஷ்பராஜன் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். எப்படி இருந்தாலும் இன்று உதயகுமார் கைது செய்யப்படுவது உறுதி என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
கூடங்குளத்தில் தமிழகம் கண்டிராத போலீஸ் ஒடுக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எல்லைகள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டு மக்கள் எமக்காகப் போராட வேண்டும் என்று எதிர்பார்க்கும் புலம்பெயர் கும்பல்கள் அங்கே ஜெயா ரவுடிகளால் மக்கள் தாக்கப்படும் போது கண்ணை மூடிக்கொண்டு கற்பனையில் இருக்குறார்கள் ..