செப்டெம்பர் மாதம் 12ம் திகதி, 63 குர்தீஸ் சிறைக் கைதிகள் துருக்கி சிறைகளில் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். 13 பெண்களும் 50 ஆண்களும் 7 துருக்கிய சிறைகளில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். இவர்களுக்கு ஆதரவாக 600 அரசியல் கைதிகள் துருக்கியில் உண்ணாவிரதமிருந்து வருகின்றனர். சுயநிணய உரிமை கோரிப் போராடும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி (PKK), குர்தீஷ் பெண்கள் விடுதலை முன்னணி(PAJK), சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான கட்சி(BDP) ஆகியவற்றைச் சேர்ந்த போராளிகளும் ஆதரவாளர்களும் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்படமைக்கு எதிரான போராட்டம் இன்று 29 சிறைச்சாலைகள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2009 ஆண்டில் உலகம் முழுவதும் திட்டமிட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கள் கட்டவிழ்த்துவிடப்ப்பட்டதன் ஒரு பகுதியாக இன்று வரை குர்திஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், போராளிகள் என 9 ஆயிரம் பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.









Sri Lanka is one nation under God. That is my life’s experience. So is Iraq. Americans gave the power to the Shia majority. It is the British that gave it to the Sunni minority. Kurdistan is just another dream lost in the annals of history.