Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

முள்ளிவாய்காலில் பிரபாகரன் தனக்கு வைத்த கொள்ளி : பாண்டியன் தம்பிராஜா

இனியொரு... by இனியொரு...
05/18/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
38
Home பிரதான பதிவுகள் | Principle posts

=கீர்த்தி  கட்டமைக்க  முனையும் விம்பம் – ஒரு எதிர்வினை=

வன்னிப் போரில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கும் மனித நேயம் மிக்க சாதாரண புலிப் போராளிகளுக்கும் சிங்கள கிராமங்களில் இருந்து வறுமையின் காரணமாக இந்த யுத்தத்தில் ஈடுபட்டு மரணித்த இராணுவ வீரர்களுக்கும் முதல் அஞ்சலியை செலுத்துவோம்.

கீர்தியின் கட்டுரைக்கு எதிர்வினை ஒன்றை முன்வைக்க வேண்டும் என்ற சமூகக் கடமை புலி- புலி எதிர்ப்பு என்ற எல்லைக்கு அப்பால் சிந்திக்கும் அனைவருக்கும் உண்டு.

கட்டுரையாளர் புலித்லைமை மேல் சில விம்பங்களை உருவாக்க முயற்சிக்கிறார். முதலில் புலித் தலைமையானது குறிப்பாக பிரபாகரனும் தமிழ் மக்களின் இந்த எழுச்சி போராட்டம் தோல்வியில் முடிந்ததற்கு முதன்மைப் பொறுப்பு வகிக்க வேண்டியவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டு எழுதியிருந்தால் இந்த கட்டுரையில் எள்ளவேனும் அர்த்தம் இருந்திருக்கும்.

ராணுவ ரீதியில் பிரபாகரன் ஒரு சிறந்த தந்திரோபாயம் மிக்கவர் அல்ல என்பது புலியில் இருந்த அடுத்த கட்ட தலைவர்களுக்கு தெரியும். எந்தத் தத்துவார்த்த அரசியல் நோக்கமுமின்றி மக்களை அணிதிரட்டி மக்கள் சார்ந்த போராட்டமாக முன்னெடுக்கப்படாத எந்தப் போராட்டமும் வெற்றிபெற்றதாக வரலாறிலில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவு என்பது வெறுமனே தோல்வி என்ற எல்லையையெல்லம் கடந்து பேரினவாதம் நடத்திய மனிதப் பேரழிவாகவே நாம் கருத முடியும். குறுகிய நாள் எல்லைக்குள் குறுகிய நிலப்பரப்பில் உலகின் அனைத்து விதிகளை எல்லாம் சிதறடித்துஇ ஐம்பாதாயிரத்திற்கும் மேற்பட்ட மனிதப் பிணங்களை வீழ்த்திய இந்த அழிவிற்கு பிரதான காரணங்களில் ஒன்று பிரபாகரனை அவரது துதிபாடிகள் கடவுள் அளவிற்கு உயர்த்தியதாகும்.

தவறாக வழி நடத்தப்பட்ட போராட்டம் என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால், ஒரு தலைமையானது சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்காவிடின் என்ன நடக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் எமது மக்களின் அழிவாகும்.

கேபி காஸ்ரோ நெடியவன் கொடியவன் போன்ற எல்லாம் பேசவல்ல அதிகாரிகளை பிரபாகரன் இவர்களின் எந்த அரசியல் சாணக்கியம் இராஜதந்திர கற்கைகளின் அடிப்படையில் நியமித்தார். பிரபாகரன் மேல் இவர்கள் காட்டிய (போலி) விசுவாத்தை தவிர வேறு எந்த தகுதிகளும் இவர்களுக்கு தந்திரம் மிக்க இந்த உலகத்தை வென்றெடுக்க இல்லை.

மனித நேயம் திறமை மிக்க போராளிகளை எல்லாம் காவு கொடுத்து விட்டும் நல்லெண்ணம் கொண்ட மாற்று இயக்க உறுப்பினர்களை கொலை செய்தும் நாட்டை விட்டு துரத்தி விட்டும் சண்டித்தனமாக போராட்டத்தை நடத்திய புலித்தலைமையின் அழிவிற்கு வேறு யாரையும் பொறுப்பாக்க முயல வேண்டாம். புலித்லைமையின் இந்த சண்டித்தன போராட்டத்தால் தமிழ் தேசியம் என்பது ஏதோ கேட்கக் கூடாத பேசக் கூடாத பொருளாகி எமது மனதை இன்றும் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.

நடுத் தெருவில் நாய்கள் நிணம் புசிக்க எத்தனை போராளிகள் புலிகளால் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று மகிந்த ராஜபக்சவின் இராணுவ சர்வாதிகாரம் தமிழ்ப்பகுதிகளை புற்றுநோய் போல அழித்துக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் புலிகள் போராட்டத்தைத் தவறாக வழிநடத்தியதும் ஒரு காரணம் என்பதைப் பற்றி கீர்த்தி மூச்சுக்கூட விடவில்லை. நாம் சார்ந்த சமூகத்தின் எதிர்கால விடுதலையை குறித்துச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் கடந்தகாலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதனூடாகவே முன்னோக்கிச் செல்ல முடியும் அவற்றை நியாயப்படுத்துவதனூடாக அல்ல!

கட்டபொம்மன்,சங்கிலியன் காலத்து  வீரத்தைப் பேசிப் பேசியே காலத்தை ஓட்டியவர்கள் நாங்கள், சாகடிக்கப்பட்ட தமிழ் மக்களையெல்லாம்  மறந்து புலிகளின் வீரத்தை பேசி மகிழ்வதை எப்போ நிறுத்தப் போகிறோம்?

தமிழ் மக்களின் இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்கவில்லை. மாறாக பேரழிவே ஏற்பட்டது. எனவே தமிழ் பேசும் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுக்கும் அதே வேளையில் இனவாத அரசினாலும் புலிகளாலும் அழிக்கப்பட்ட எம்மக்களையும் போராளிகளையும் தொடர்ந்து நினைவு கூருவதோடு தவறுகாளிலிருந்து கற்றுக்கொள்ள உறுதிகொள்வோம்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஈழப்போர் : சாம்பல் மேடுகளிலிருந்து..

Comments 38

  1. ethayam says:
    16 years ago

    புலித்லைமையின் இந்த சண்டித்தன போராட்டத்தால் தமிழ் தேசியம் என்பது ஏதோ கேட்கக் கூடாத பேசக் கூடாத பொருளாகி எமது மனதை இன்றும் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.”

    ஆயிரத்தில் ஒரு வார்த்தை. இந்தபுலி செய்து காட்டிய போராட்டத்தால் இடதுசாரிகளிடமும்(?) , தமது சமூகக்கடமையில் இருந்து தப்பி பிழைக்க சாட்டுக்கள் தேடும் சுயநலவாதிகளிடமிருந்தும், யாழ் மேட்டுக்குடிகளிடம் இருந்தும் நாம் பெறும் தாக்குதல்கள் கணக்கில் அடங்காது.

  2. வாதம் says:
    16 years ago

    அய்யய்யோ! அய்யய்யோ!

    அய்யர்தான் முப்பது வருசம் தவம் கிடந்து எழுத வெளிக்கிட,

    அதைப் பார்த்து,முதல் வருசம் முடிய முதல் கீர்த்தி,பாண்டியன்

    (இவையளும் என்ன முன்னனாள் மத்திய குழு உறுப்பினர்களோ?)

    எண்டு சுடச்சுட வரலாறு படைக்கினம்.

    இனியொரு காட்டில எழுத்து மழை பொழியுது.

    படிக்காதவன் கிழிச்சிட்டான்,

    இனி படிச்சவன் என்ன கிளிப்பான்’ எண்டு பார்ப்பம்.

    கோவிந்தா! கோவிந்தா!

  3. Guru says:
    16 years ago

    வாதம்,
    உங்களுக்கு என்ன இப்போ தேவை. பாண்டியன், கீர்த்தி, ஐயர் போன்ற எல்லாரும் வாயை மூடிக்கொண்டு போத்துக்கொண்டு படுக்க வேணும். நீங்கள் மட்டும் தான் கதைக்க வேணும். இதல்லவோ சனநாயகம். நீங்கள் அசல் தமிழன் தான் போங்கள்.

  4. rooto says:
    16 years ago

    டாய் நீங்க எல்லாம் சேர்ந்து ஒரு 2 வருசத்துக்கு முன்னால பிரபாகரனயோ, அல்லது புலிதலைமையையோ சந்தித்து உதுகள சொல்லி இருக்கலாம்?? இல்லாட்டி இப்ப கூட ஒன்னும் கெட்டுபொகேல்ல இதயம் , பாண்டி இப்பிடி எல்லாரும் சேர்ந்து இந்த போரட்டத்தை அடுத்தகட்டத்ட்குக்கு/ மக்கள் மயமாக்கி/ அரசியல் சாணக்கியத்தோட முன்னெடுங்களன் ??  போய் புழைப்பை பாருங்கப்பு, பிள்ளைகுட்டியயாவது படிக்கவையுங்க!!!!!

    • thurai says:
      16 years ago

      புலிகள் தங்கள் பிழைப்பை தொடர்ந்தும் பார்க்கின்றார்கள். அன்றும் இன்றும் அவர்கள்
      செய்தது அதுதான். இதில் வேறு யாரிற்கும் வேலை வெற்ரிடம் கிடையாது. அவ்ர்களிற்குள்ளேயே பிழைப்பிற்கு அடிபிடி சண்டைகள். இதனை இன்னுமா அறியவில்லை அய்யோ பாவ்ம் றூட்டோ. துரை

      • rooto says:
        16 years ago

        துரை வாங்க நான் நினைச்சன் உங்களுகு இப்ப அரசு பணெளதவி செய்வதில்லையாமே??  ஆமாம் கிழக்கை விடியசெய்துவிட்டிங்களோ?? வடக்கில் வசந்தம் ஈபிடீபி, புலொட், டெலோவால் நல்லா வீசுட்கு. இளம் பிள்ளைகள் எல்லாம் காணமல் போவட்கும் கடத்தபட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுவதும் கண்கொள்ளாகாட்சிகள்!! உனக்கு வெக்கமா இல்லையாட *** இப்பவும் புலிப்பூச்சாண்டி யாருக்கு ???

        • thurai says:
          16 years ago

          எழுத்தைப்பார்த்தால் தெரியுது 16 வய்திலை புலியிலை இருக்கும்போது 60 வயது வயோதிபரை இருத்தி
          எழுப்பின் மாதிரியே. தாலிகொடிய்றுத்துக் கொண்டு ஓடிய கள்ளன் திரும்பி வந்து சங்கிலியறுத்தவனைப் பிடியடா என்று
          சொன்ன மாதிரியில்லையா? துரை

      • rooto says:
        16 years ago

        அட வேலவா கந்தா முருகா!!! யாரு பெத்த பிள்ளையளோ கொஞ்சமாவது இவங்களுக்கு புத்திய கொடு!!! நீங்க எல்லாம் இப்ப யாழ் வந்ட்கு பாருங்கோவன்!! இன்னமும் முகாமிலை இருக்கிற சனங்கள வந்து பாருங்கோ!! சகோதர போராளிகள் எனப்படுபவர்களால்தான் தமிழ் மக்களும், புலிகளும் பெரும் உயி இழப்பை அடையநேர்ந்தட்கு. நீங்கள் போராடுவதற்கு புலிகள் மறுத்தால் அதற்காக அவர்களையும், மக்களையும் கொல்வதற்காக இராணுவத்துடன் அட்குவும் தமிழர்களையே கொல்லும், இன்னமும் சொல்லபோனால் யாருக்கு எதிராக போராட(???) புறப்பட்டார்களோ அவர்களுடன் இணைந்து இன்றுவரை உங்கள் சுயலாபத்திற்காக கொலை,கொள்ளை செய்யும் நீங்களும், துரையும் எந்தவகையிலும் தமிழருக்குள் அடங்கமாட்டார்கள்!!!  நீங்க என்னும் 20 வருசத்துக்கு முன்னால செத்த உயிர்கள் அதுவும் சிலநூறுக்காக வீண்விதண்டாவாதங்களை வைத்துகொண்டு கடந்த வருடம் இறந்த சுமார் ஒரு லட்சம் தமிழர்களுக்கும் உங்களும் சம்பந்தமில்லாதவாறும், அதற்கு நீங்களும் நேரடிப்பொறுப்பு என்பதை ஏற்க மறுத்து, மீண்டும்மீண்டும் உங்கள் பிறப்பை சந்தேகப்படுத்தாதீர்கள்!!!

        • thurai says:
          16 years ago

          வன்னிகுள்ளே நடந்த புலிக்ளின் கொடுமைக்ளிற்காக எப்போதவ்து எங்காவது குரல் கொடுத்தவ்ர்களே சிஙக்ள
          அரசினையும்மற்ரவ்ர்களையும் குற்ரம் சொல்ல தகுதியுடையவர்கள் புலியினை ஆதரித்தவ்ர்கள் யாவ்ரும்
          , புலியின் தவ்றுகளை ஏற்காதவ்ரை இன்னமும்புலிகளே. துரை

  5. rooto says:
    16 years ago

    அதுசரி எட்கு சகோதரப்போராளிகள்???? உந்த டக்கியின்ர ஆள்கடத்தல் காரங்களோ?? இல்லாட்டி டெலொ எண்ட பேரில இப்ப வவுனியாவில அடாவடி பண்ணுற, பெண்கள் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்துற ***? இல்ல புலொட் எண்ட பேரில சண்டிதனம் காட்டி பள்ளிகூடபிள்ளையளிட்டகூட காசு பறிக்கிற கூட்டத்தையா சொல்லுறிங்க????  எனக்கு 1995 ற்கு பிறகு இவர்களைதவிர வேறு எவரையும் தெரியாது அப்பு!!! அப்ப அதுக்கு முதல் கதை 15 வருசத்துக்கு முதல் நடந்த கதையை ஏன் கதைக்கிரறீர்கள்?

    • a voter says:
      16 years ago

      ” 15 வருசத்துக்கு முதல் நடந்த கதையை ஏன் கதைக்கிரறீர்கள்?”
      அப்ப 1983 இல நடந்ததையும் தனிச் சிங்களச் சட்டத்தையும் எல்லோ மறக்க வேணும்.
      டெலோ. புளட். டக்ளசின் ஈபிடீபி டஎன்ற எல்லோரும் மக்கள் விரோதக் கூட்டம் தான். ஆனால் இவர்களை அப்படி உருவாக்குவதில் புலிகளின் பங்கு குறைவானதல்ல.

    • rajes says:
      16 years ago

      சரியாகச் சொன்னிர்கள் rooto

  6. Shiva says:
    16 years ago

    புலிகளின் சார்பில் பேசுகிற எவரும், முதலில், கடந்த 30 வருடத்தின் சரி பிழைகளை நேர்மையாக மக்களுக்கு விளக்க வேன்டும். ஏனென்றால் அவர்களது செயல்கள் தமிழ் மக்களுக்கு எற்படுத்திய நட்டங்கள் பெரியன. அதைச் செய்யாமல் மீண்டும் ஒரு போராட்டத்துக்கு மக்களை அழைக்க முடியாது.

    புலிகளை எதிர்ப்போரும், தங்களது கடந்தகாலச் செயல்களால் மக்களுக்குக் கேடுநேர்ந்துள்ளது எனச் சுட்டிக் காட்டப் படும் போது அதை மூடி மறைக்காமல் பேசத் துணிய வேன்டும்.
    ஒவ்வொருவரதும் போராட்டத்தின் தொடக்கப் புள்ளிகளே கேள்விக்குரியனவாக உள்ளன.
    நிலைப்பாடு ஒவ்வொன்றுமே மீளாய்வுக்குரியது. செயல் ஒவ்வொன்றுமே விமர்சனப் பார்வைகுரியது.

    இன்றைய அவலத்துடன் நேரடித் தொடர்புள்ள ஒவ்வொன்றையும் நம்மால் துணிவுடனும் புரிந்துணர்வுடனும் பேச முடியாதா?
    விடாது யாரையும் திட்டிக் கொண்டிருப்பதால் எதுவும் உருப்படியாகநடக்காது.

    • thurai says:
      16 years ago

      நல்ல கருத்துக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வாழும் இடங்களில்,நண்பர்கள் உற்வினர்களோடு
      விவாதிக்க வேண்டும். ஒவ்வொரு தமிழனும் அரசியல்தெளிவுள்ளவனாக மாறுவ்தன் மூலமே

      யாராலும் ஏமாற்ரப்படாமலும் தவறாக் வ்ழிநாடத்தப்படாம்லும் தமிழினத்தைக் காப்பாற்ரமுடியும்.

      துரை

  7. velavan says:
    16 years ago

    Ok. It is not the time of talking about those things. Let’s talk about some thing else. What can we do? what sould we do? How can we do? Where can we do? There are so many quetions. We have to start something but it should be in a deplomatic way. Like IRA or some other western group not like those Maoist or red shirts fellows.Now what we have lost just only life and assets.So we have to produce more populations and also we have to build up business development. The second one is easy. The first one is to be implemented. So, there are three or four ways to implement the first project. 1. Every one must get married at the age of Ninteen to twenty old. 2. No one should go abortion for any reasons. 3.Those who are younger and wealthy can get married second wife with the permission of the first wife. 4. We have to give financial support for those who are willing to married those widows who lost their husbands during the war. 5.If the sinhalese come to north, we have to get married sinhalese girls and convert them into Hinduism and make them to speak our language. In five years ,we can capture entire Srilanka without even a Palakkathy or Alavankku. Otherwise like an idiot don’t wast your time in talking about the past and destroy our community.

    • thurai says:
      16 years ago

      கல்யாணம் ஈழத் தமிழன் கட்டுவதானால் 19 வயதில் பார்க்கத்தொடங்கினால்தான்
      சாதி,மதம்,ஊர்,தாய்,தகப்பன் எல்லாம் சரியாக் வந்து 30வதில் திருமணம் முடிக்க்லாம்.

      போரின் பின் அநாதைகளின் எண்ணிக்கை கூடியிருக்கும் போது மேலும் பிள்ளைகளைப்
      பெற்று

      நிலைமையை மோசமாக்க வேண்டாம். பணமுள்ளவர்கள் இரண்டு தாரமா? ஒருகுடும்பமாவ்து

      உருப்படியாக் வாழ் வேண்டாமா? விதைவைகளிற்கு பண் உதவி செய்து ம்றுமணம் செய்வது வரவேற்கத்த்க்கது. சிங்களப் பெண்களை மறுமண்ம் செய்ய முன் திருமணமாகமிலிருக்கும்
      தமிழ் பெண்களை சாதி,மத பேதமின்றி தமிழர்களே திருமண்ம் செய்வதே மேல் என் நான் கருதுகின்றேன். துரை

      • பழசு says:
        16 years ago

        தம்பி துரை கேட்கிறன் எண்டு குறை நினைக்கக் கூடாது உங்கடை முழு நேர உத்தியோகமே பின்னூட்டம் எழுதிறது தானோ அல்லது வேறை ஏதாவது செய்கிறனீங்களோ. எனக்கென்ன கவலை எண்டால் நீங்கள் எப்படி பிள்ளை குட்டியள பாக்கிறனீங்களெண்டு தான். அது சரி எல்லாம் உங்கட உரிமை.

        • thurai says:
          16 years ago

          ப்ழசு ந்ல்ல கேள்விதான். நானும் பார்க்கின்றேன் தமிழரிலை
          அக்கறை கொண்டு ஏதும் செய்தால் ந்லலா வரலாமென்று.
          ஆனால் முடியவில்லை. புலத்திலை 30 வருடமாக ஈழ்த்தமிழரில் அக்கறைகொண்டவரெல்லாம் நல்லாத்தான் இருக்கினம். யாரையும் தெரிந்தா எப்படியென்று கேட்டு எனக்கு சொல்லுங்கோவன். துரைக்

    • pop says:
      16 years ago

      R u mad or what?
      Your thoughts are like childish……..
      Where r u living? in a forign country????????????
      That’s what make you talk like this…
      Marriage in small ages????????
      You know well , that we have very strong culture and tradition.. how we can offer such nasty ideas like 2nd marriage and thinks….
      And marriage to sinhala girls really stupid idea.. do u believ that our guyz should change those girls… never ever!!!!! u r planning to change our young society as singalese!!!!!!!!!!!

  8. ethayam says:
    16 years ago

    வேலவனின் கருத்துக்களைப் பார்த்தால் மேல் வீடு கொஞ்சம் சரியில்லைப் போல இருக்கிறது. அதனால் சற்று விலகி நடப்போம்.

  9. ethayam says:
    16 years ago

    டாய் நீங்க எல்லாம் சேர்ந்து ஒரு 2 வருசத்துக்கு முன்னால பிரபாகரனயோஇ அல்லது புலிதலைமையையோ சந்தித்து உதுகள சொல்லி இருக்கலாம்?? இல்லாட்டி இப்ப கூட ஒன்னும் கெட்டுபொகேல்ல இதயம் இ பாண்டி இப்பிடி எல்லாரும் சேர்ந்து இந்த போரட்டத்தை அடுத்தகட்டத்ட்குக்கு/ மக்கள் மயமாக்கி/ அரசியல் சாணக்கியத்தோட முன்னெடுங்களன்”

    புலித் தலைமையை நாங்கள் சந்தித்து இருந்தால் அநேகமாக உயிரோடு வந்திருக்க மாட்டோம். தலைவர் வன்னிக்குள் படுத்திருந்தாலும் நாங்கள் ஊர்ப்பக்கம் இருபது முப்பது வருடம் போகாமல் இருக்கிறோம். ஏனென்றால் தலைவர் என்ன செய்வார் என எங்களுக்கு தெரியும். இப்பவும் எதுவும் கெட்டுப் போகவில்லை என்பது உண்மைதான். தமிழ் மக்கள் எதற்காக போராடினார்களோ அதற்கான காரணிகள் கிஞ்சித்தும் மாற்றமடையாமல் தான் உள்ளது. என்ன பொய்யர்களையும் கபடதாரிகளையும் வயிறு வளர்ப்பவர்களையும் தாண்டித்தான் போக வேண்டியுள்ளது. அதற்காகவே இந்த எழுத்துக்கள்.

  10. JAMES FRIEDRICH says:
    16 years ago

    அண்ணே வேலவன்!!,நீங்கதான் அண்ணே அந்த “வேலவன்(முருக பெருமான்)”!!.”So we have to produce more populations,we have to get married sinhalese girls” இதையும்,”Those who are younger and wealthy can get married second wife with the permission of the first wife”இதையும் நான் செய்துடுரேன் அண்ணே,மத்தத பத்தி கேதாதேயுங்கோ..கோ..நீங்கதான் அடுத்த விடுதலைப் புலி தலைவர்!,சூரியதேவன்,உங்கள் இரண்டாவது மனைவி,”வள்ளி” இலண்டனில் எந்த தொலைக்காட்சியில் வேலை செய்கிறார்!.”ஈழப்பதீஸ்வரர் அலயத்திற்கு” கூப்பிட்டு கண்க்கு பண்ணிவிடுகிறேன்,தப்பாக நினைக்க வேண்டாம்,”உண்டியலில் காணிக்கை செலுத்தி விடுகிறேன்”…திருசிற்றம்பலம்…திருச்சிற்றம்பலம்…..

  11. velavan says:
    16 years ago

    Dear brothers

    Thank you for you all your comments. So, there are four comments for my comments. I have been telling this for long time. But my friends said ,”NO”, first Tamil elam and then only we have to ammend all these things in our community, At the age of ten or eleven , I walked in the political path of Jaffna Kathigesu master. Now his daughter living in Canada (Scarbrough.) When she contested in Scarbrough , she got just less than five hundred votes. In that case , it is a muslim person, all muslim would have given their votes to their man but our people didn’t show any support for their own politician. What I am trying to telling here is unity. If you want to build up the strongest unity. Our thoughts , action and speech all have to be same. In the past , we never ever tested the power of the unity. Just we have learnt the maximum consequences of the disunion.Religions is more powerful than the language.There are more than three thousands and five hundred languages in this world. you can speek all the languages and still you will not lose your language. but if you change your religions, you are alread half dead in your community. When Rome emperor fallen , they took Roman gatholic religon as their weapon. Phrofet Mohamed born on the later part of the sixth century, he told his people to produce the maximum children and also told them get married as much as they could.Today they have ove thrity five countries. Whereeve the Bristish went they did spread their religions to control those people. Finally Rajapaksha went to all Bhuddist countries to get the maximum finance and other various help.In the whole world ,we are the people get married at the age of 40 to 50 and still our people crying for dowry. There are over fifty thousands widows in our community.It is not for your jokes and passing time. I am trying to tell the truth. Truth has no attraction but truth is truth.I didn’t tell you to go to sinhalese are and get married sinhalese girls but if they come our place, there is no other way to fight at this moment. So we have to use some other ways. If our boys get married them and convert them to our way and they won’t come to our site.Look at this western contries are giving you aslum and then slowly and slowly they destroy all your culture , religions and language and make you all the way they want to you people to be.

  12. rajes says:
    16 years ago

    புலிகளை மக்கள் ஆதரிதுவருவதும், அவர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்ததும் உங்களுக்கு தெரியாதா? ஆக பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு அறிவில்லை, உங்களைப்போன்ற “அறிவாளிகள்” தீர்க்க சிந்தனை கொண்டோர் ஈழத்தில் இல்லை, இதுதானே எமக்கு பெரிய இழப்பு..!! ஐயாக்களே போங்கோவன் ஈழத்துக்கு..பொய் மக்களை இனியாவது இனப்படுகொலை, பாலியல் துன்புறுத்தல்,கடத்தல்,கப்பம் கோருதல் என நீண்டிருக்கும் தமிழருக்கெதிரான வன்செயல்களை தடுக்கலாமே(அதுக்கு நீங்க முதல்ல எலும்புத்துண்ட நக்கிறத நிற்பாட்டோணும்) 

    • Garammasala says:
      16 years ago

      புலிகளின் கட்டுப்பாட்டில் மக்கள் வாழ்ந்தது தெரியும்.
      தயவு செய்து, மக்கள் இப்போது எந்தப் “புலிகளை ஆதரித்துவருகிறர்கள்'” என்று சொல்லுவீர்களா?

      • rajes says:
        16 years ago

        போராட்டத்தில் பின்னடைவு வருவது இயல்பானது, புலிகளை எத்தனைதரம் அழித்ததாக சிங்கள அரசு சொல்லியது? “தவறு உன்னுடையது என கை காட்டும்போது மூன்று விரல்களும் உன்னையே காட்டிநிற்க்கும்..”

        • thurai says:
          16 years ago

          விடுதலை,போராட்டம் என்பது ஈழத்தமிழர்களிற்குச் சொந்தமானது. பயஙரவாதம் புலிகளிற்குச் சொந்தமானது.

          இலங்கை அரசாஙமும் உலக்மும் அழித்த்து எதிர்ப்பது
          புலியின் பயங்கரவாத்தை மட்டுமே. பய்ங்கரவாதிகள் தமிழினத்தின்மீது ஆதிக்கம் செலுதியதாலேயே தமிழர்களிற்கு பேரளிவேற்பட்டது.

          துரை

          • rajes says:
            16 years ago

            பயங்கரவாதமென்று நீங்கள் சொல்வது நீங்க வாங்கிற ஆக்கள் செய்தது. புலிகளது போராட்டம் தமிழ் மக்களின் உழைப்பினாலும் ,மதிப்பினாலும் வளந்ததனால்தான் தமிழர்களை கொத்துக்கொத்தாய் சிங்கள காடையர்கள் கொன்றனர்.

          • thurai says:
            16 years ago

            ராஜேஸ் , புலிகளெதற்காக ஆயுதம் தூக்கினார்கள், யாரை காக்க ஆயுதமேந்தினார்கள்.
            அத்ன் முடிவென்ன என் விள்க்கினால் யாவரிற்கும்நனமையாக இருக்க்கும்.

            துரை

          • rajes says:
            16 years ago

            துரை வரலாறு தெரியாதவர்களுடன் விவாதத்துக்கு வரவில்லை.

      • Garammasala says:
        16 years ago

        ராஜேஸ்
        கேட்ட கேள்விகட்கு மறுமொழியைக் காணவில்லை. ஏதேதோ சொல்லுகிறீர்கள்.

        உங்களுடைய 3 விரல்களைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா?
        கிட்டத் தான் உள்ளன. கண்ணைத் திறந்தால் தெரியும்.

        • rajes says:
          16 years ago

          நாங்கள் கண்ணை திறந்து பலவருடங்களாகிவிட்டன நீங்கள்தான் மற்றவர் கண்ணை திறப்பதை சொல்லிக்கொண்டு,எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் ஒத்தூதிக்கொண்டிருக்கிறீர்கள், எங்களுக்கு பொதுவான எதிரிகளுக்கு நாம் ஒற்றுமையாய் இருப்பது போல் பாசாங்காவது செய்யவேண்டும், கதிர்காமர் அன்றைய அரசாங்கத்தில் வெளிநாட்டமைச்சராக இல்லாதிருந்திருந்தால் உலகு என்றோ தமிழர் பிரச்சனையை உணர்ந்திருக்கும்….இப்போ டக்லசும்,கருணாவும் சொல்லுவதுக்கும் நீங்கள் சொல்லுவதுக்கும் வேறுபாடு எமக்கு தெரியவில்லை. அதுதான் மாற்றுக்கருத்து பேர்வழிகளை தமிழினம் துரோகிகள் என்கிறதுகிறது, இதுக்கும் தமிழர்கள் இப்போது அப்படி சொல்லவதில்லை என்று நீங்கள் வாதாடுவீர்கள்.உண்மை நீங்கள் சொல்வதென்றால் மாற்றுக்கருத்து அரசியல் எப்பதோ இலங்கை பாராளுமன்றில் பெரும்பாண்மை பெற்றிருக்கும்.

  13. velavan says:
    16 years ago

    Hello Guys

    Let’s to be a small answer to Mr. Pop’s comments. I have five sisters and four brothers. They are all in Srilanka. I am one of well being guys in my present country but still I didn’t take anyone of them to this country. My friends , relatives all respest me becase there is no any deffirence between my thoughts, action and speech. you are little bit too sensitive to read and write. First of all , let me explain what I wrote. First thing is our people dont get married in early age and they normally get married in late forties. Those who late marriage people cannot have enough children and also sometimes they find it difficult to have children. Even some of them are going for abortion as they think it is too late to have children. Just only ten to fifteen per cent of the tamils parents meet their grandchildren before die. You know over 50,000 abortions have taken place in the last twenty years. Why? Our culture is strongly advise to everyone to get married and lead a happy life. Our culture never taught to anyone or never ever advised to any one to wait until they get big dowry. Our religion never ever taught or intruduced all these caste system. In 1983 communal riots, I was in the camp and when I saw these bloody caste problem even inside the camp, I left the camp and walked on the street in the middle of the riots.And finally .Our culutre and religions neve ever told to anyone not to get married widows. There are over 35000 widows in our community. When pakistan formedin 1947, there was just only ten millions muslim in India and now the ten millions has become hundred forty million. Look at the power of the population. you don’t know some of the muslim purposly get married Hindu grils and convert them in to Islam.I said if those sinhalese come to north, our boys must get married those girls and convert them to our religion and culture.It is very hard to convert the muslim and chritians into Hindu life but it is easy to convert the sinhalese into hindu culture. Because those who living in forign countries are no going to stay in north and east. So however we have increase our population.I am not writing just today and yesterday. I have been telling for a long time. What we lost our people and their assets both we have to get by hook or crook. I am not against to anyone and I am not going towrite about any one. I am always writing what I think is good for our people not for my or my pocket. Sorry about anything if there is any mistake but we have to get together to build up our unity. We may have millions of differences but still we have to learn one strong lession from the past that we should not let even the millions of difference to break our unity.

    • JAMES FRIEDRICH says:
      16 years ago

      வேலவன்,1983 ல் நீங்கள் கலவர கேம்பில் இருந்தீர்கள் என்றால்,தற்போது,நற்பது நாற்பத்தைந்து வயதுக்கு மேல் இருகும்,எனகு அப்போது பதிமூன்று வயது,விவரம் அவ்வளவாக தெரியாது.நீங்கள் பெரும்பாலும் கொழும்பு வாசி என்று தெரிகிறது.எங்களுக்கு அப்போதே சென்னை அண்ணாநகரில் இரண்டு….அப்படியிருக்கும் போதே,நீங்கள் தற்போது கூறும் “சுக போகங்களை(லக்சூரிஸ்)” அனுபவிக்க நினைக்கும் போதே குலை நடுங்குகிறது.- இரண்டு பெண்டாட்டி வைத்திருப்பதும் விதவைகளுக்கு வாழ்வு? கொடுப்பதும்!.கலைஞர் கருணாநிதியும்,பேராசிரியர்? க.அன்பழகனும் எங்களைப் போன்ற முட்டாள்களால்,பல சகாப்தங்கள் அதிகார பதவிகளில் இருப்பதால்,ஜமீந்தார்களை போல்(இவர்கள்தான் ஜமீந்தார்களை எதிர்த்தவர்கள்),”இரண்டு ++ பெண்டாட்டிகளை வத்துக் கொண்டும் வெத்திலை பாக்கு மெல்ல முடிகிறது!.ஆனால் எங்களுக்கு,”பல ஜமீந்தார் மைனர் உறவினர்களின் கண்ணீர் கதைகளை” அறிந்திருப்பதால் குலை நடுங்குகிறது.யார் உங்களுக்கு இந்த ஐடியா கொடுத்தது…கோவில்களை கட்டி வைத்துக்கொண்டு வசூல் செய்பவர்கள்தானே!.. முருகப் பெருமானாக ஆக!….கனடாவில் ஜன்னலை திறந்து பாருங்கள்,உங்கள் ஊரில்(யாழ்?) எவ்வளவு வெள்ளைக்காரர்கள் நடமாடுகிறார்கள் என்று!!.

  14. ethayam says:
    16 years ago

    போராட்டத்தில் பின்னடைவு வருவது இயல்பானது முதலில் போராட்டம் என்றால் இழப்புக்கள் சகஜயம் என்றார்கள். எதை இழப்பது எவ்வளவு இழப்பது என்ற ஒரு அறிவு வேண்டாமா? இப்போது தோற்று விட்டு அதை பின்னடைவு என கயிறு விடப் பார்க்கிறார்கள். அது மட்டுமன்றி இந்த தோல்விக்கான காரணிகளை ஆராயத் தொடங்கியவுடன் தாம் அம்பலமாவதை தடுக்க ஒரு விரல் மூன்று விரல் என தத்துவங்களை சொல்ல தொடங்குகிறார்கள். துப்பாக்கி முனையில் போராட்டத்தை வைத்திருந்தால் இப்படித்தான் முள்ளி வாய்க்காலில் கவிழ்ந்து போகும் என்பதை புலியோடு இருந்து அனுபவித்தவர்கள் ஒப்புக் கொள்ள முடியாதுதான்.

  15. xxx says:
    16 years ago

    JAMES FRIEDRICH & velavan
    என்ன பொருத்தமான அழுகல் குப்பைக் கிடங்கு ஜோடி!
    இந்தப் பொருத்தம், உலகில் பிறருக்கீனும் பொருத்தமோ!

    • JAMES FRIEDRICH says:
      16 years ago

      XXX புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரில் 90 சதவீதமானவர்கள், இப்படிதான்!.சாக்டையை கிளரினால்தான் பலருக்கு தெரியும் சாக்கடை இருக்கிறதென்று!- நாற்றமடிப்பதை கண்டு!.மனப்புழுக்கத்தால் கத்துகிறீர்கள் ஆனால் விட்டால் அப்படியே உறை நிலையில் இருப்பீர்கள்!.எங்கேயாவது இன்னொரு பள்ளத்தில் விழுந்து,அதற்கொரு விளக்கத்தை சொல்லிக் கொண்டு.முப்பது வருடங்களுக்கு முன்பு த இந்து பத்திரிக்கையில் ஒரு வாசகம் வந்தது “SRILANKAN TAMILS,EVEN AT THE VERGE OF ANNIHILATION THEY ARE VERY CONFIDENT!!?(freezing,than undu than padu undu,yaar kuthi arisiyanal enna”– எனக்கேன் நான் வாயைப் பொத்திக் கொள்கிறேன்!.

    • xxx says:
      16 years ago

      மஞ்சள் பத்திரிகைகளும் இப்படியே தான் தங்களை நியாயப்ப்படுத்துகினற்ன.
      சரியாகவே உங்களை அடையளப்படுத்தியமை மெச்சத் தக்கது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...