Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கிரேக்கத்தில் புதிய கம்யூனிச எழுச்சி : ஐரோப்பிய அதிகாரம் அழிவை நோக்கி..

இனியொரு... by இனியொரு...
06/20/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
8
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றில் மிகப் பிரதானமான தேர்தல்களில் ஒன்றாகக் கருதப்படும் கிரேக்கத் தேர்தல் கடந்த ஞாயிறு – 17.06.2012- அன்று நடந்து முடிந்திருக்கிறது. கிரேக்கத்தில் அந்த நாட்டின் அரசும், அரசின் இயக்கமும் தொடர முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது. வரலாறு காணாத பஞ்சமும் பட்டினியும், ஏழ்மையும் தலைவிரித்தாடுகின்றது. இவை அனைத்தும் இனிமேலும் நிலைக்க முடியாத முதலாளித்துவப் பொருளாதாரத்தின் முடிவை அறிவிக்கின்றது.

கிரேக்க அரசு தனது தனியார் கடன் வழங்குனர்களின் கடனை நிவர்த்தி செய்வதற்காக மே மாதம் 2010 இல் 110 பில்லியன் யூரோக்களைக் கடனாகப் பெற்றுக்கொண்டது. ஐரோப்பிய ஒன்றியமும், சரவதேச நாணய நிதியமும்(European Union and IMF) இணைந்து இந்தக் கடன் தொகையை வழங்கியிருந்தன. பெரு முதலாளிகள் சூறையாடிய பணத்தை அவர்களே கடனாக வழங்கும் வேடிக்கையான ‘பிணையெடுப்பு’ (Bailout) நடவடிக்கை அரங்கேறி சில மாதங்களுக்கு உள்ளாக மீண்டும் பொருளாதார நெருக்கடி ஆரம்பமானது.

மறுபுறத்தில் கிரேக்கத்தில் நடைமுறையில் இருந்த குறைந்தபட்ச சமூக நலத் திட்டங்கள், இலவச மருத்துவம், ஓய்வூதியம் போன்றவற்றின் மீது அரசு கைவைத்தது. மக்கள் சாரி சாரியாக வேலையிழந்தனர். இளைஞர்கள் வேலைச் சந்தையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் ஒரு பிணையெடுப்பை சர்வதேச நாணய நிதியமும் ஐரோப்பிய ஒன்றியமும் வழங்க முன்வந்தன. ஏற்கனவே வறுமையின் விழிம்பிற்குள் தள்ளப்பட்ட பெருந்திரளான வறிய மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வாதரத்தைக் கொள்ளையிட்டு இந்தக் கடனை நிவர்த்தி செய்யுமாறு சரவ்தேச நாணய நிதியமும் ஐரோப்பிய ஒன்றியமும் வெளிப்படையாகவே வேண்டுகோள் விடுத்தன.

இந்த நிலையிலேயே 17ம் திகதி ஜூன் மாதம் கிரேக்கத்தில் தேர்த்தல் நடத்தப்பட்டது.

சிக்கனம் (Austerity)அல்லது அரச செலவீனக் குறைப்பு என்ற தலையங்கத்தில் மக்கள் மீது சுமத்தப்படும் பொருளாதாரப் பழுவிற்கு எதிராகவும், ஆதரவாகவும் இரண்டு முகாம்களாக கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டன.

கிரேக்கத்தின் முதலாளித்துவ மேட்டுக்குடிகளின் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி (New Democracy-ND) 29.6 வீத வாக்குக்களையும், சிரைசா(SYRIZA) 26.9 வீத வாக்குக்களையும், நிறவாதக் கட்சி(Golden Dawn (neo-nazi, racist party) 6.9 வீத வாக்குக்களையும், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of Greece -KKE) 4.5 வீத வாக்குக்களையும், சமூக ஜனநாயகக் கட்சி(PASOK (social-democrats)) 12.3 வீத வாக்குகளையும் பெற்றுக்கொண்டன. இந்த நிலையில் 29.6 வீத வாக்குக்களைப் பெற்றுக்கொண்ட சிறுபானமைக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி ஆட்சி அமைக்கின்றது.

ஐ.எம்.எப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வாக்குகளைப் பெற்றுக்கொண்ட கட்சிகளின் வீதம் 56.

ஆக, பெரும்பான்மையான மக்கள் ஐ.எம்.எப், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் கொள்ளையான ‘பிணையெடுப்பு’ நடவடிக்கைக்கும் அரசின் சிக்கன நடவடிக்கு எதிராகவும் வாக்களித்த போதிலும் மக்களின் உனர்வுகளுக்கு எதிரான சிறுபான்மை அரசே ஆட்சியைக் கையகப்படுத்தியுள்ளது.

தவிர, கொள்ளைக் காரர்களின் பிடியிலுள்ள கிரேக்க ஊடகங்கள், ஜேர்மனிய அதிபர், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உட்பட அனைவரும் கிரேக்க மக்கள் மீது ஒழுங்கமைக்கபட்ட உளவியல் யுத்ததையே நடத்தியிருந்தனர். புதிய ஜனநாயக் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் கிரேக்க மக்களைக் காப்பாற்ற யாரும் முன்வர மாட்டார்கள் என்று ஜேர்மனிய அதிபர் சட்டவிரோத மிரட்டல் விடுத்ததை கிரேக்க ஊடகங்கள் நாளாந்த தலையங்கங்களாகப் பிரசுரித்தன.

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், நாளேடுகள், தொலைக் காட்சிகள் என்ற அனைத்து தரப்பிலிருந்தும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான பிரச்சாரங்கள் மூர்க்கத்தனமாக மேற்கொள்ளப்பட்டன.

இவை அனைத்தையும் மீறி 5 அல்லது 6 வீதமான வாக்குகளை மட்டுமே வழமையாகப் பெற்றுக்கொள்ளும் சிரைசா 26.9 வீதமான வாக்குகளைப் பெற்று இரண்ட்டாவது பலம்பொருந்திய கூட்டணியாக மாற்றமடைந்தது. புதிய ஜனநாயகக் கட்சிக்கும் சிரைசாவிற்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2.7 வீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு மற்றொரு பிரதான விடையம் கிரேக்கக் கம்யூனிச அமைப்பின் வெற்றியாகும். சிரைசா என்ற கட்சிகளின் கூட்டமைப்பில் இரண்டாவது பலம்பொருந்திய கட்சியான கிரேக்கக் கம்யூனிச அமைப்பு மாவோயிச சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சியாகும்.
கம்யூனிச இயக்கத்தின் தோழர்களில் ஒருவரான நியோமா பிரித்தானியாவிலிருந்து கூறிய போது, கிரேக்க மக்கள் பாராளுமன்ற வழிமுறைகளில் நம்பிகை இழந்து போய்விட்டனர். அதற்கு இந்தத் தேர்தல் பெரும் பங்களிப்பை செய்துள்ளது என்றார்.

சிரைசா கூட்டமைப்பை தேசிய ஜனநாயக ஐக்கிய முன்னணியாகவே கருதும் கம்யூனிச அமைப்பானது, கூட்டமைப்பில் கோட்பாட்டு ஆளுமையைச் செலுத்துகிறது.

ஐக்கிய முன்னணியை நிராகரிக்கும் பாரம்பரிய கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலின் பின்னர் புதிய ஐக்கியம் குறித்து ஆராயப்போவதாக அறிவித்துள்ளது.
இதே வேளை பல குற்றச் செயல்களில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள நிறவாதக் கட்சி 6.9 வீத வாக்குக்களைப் பெற்றுள்ளமை அச்சம் தரும் நிகழ்வு என அனைத்து ஜனநாயக முற்போக்கு வாதிகளும் தெரிவிக்கின்றனர்.

கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத இடதுசாரிகளின் எழுச்சி ஐரோப்பா முழுவதும் பரந்து வாழும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு புதிய இரத்தம் செலுத்துவது போல அமைந்துள்ளது என பிரித்தானிய மாவோயிச சார்புக் கட்சியச் சேர்ந்த தோழர் இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.நேர்காணலின் முழுமையான மொழியாக்கம் வார இறுதியில் பதியப்படும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சகாபுதீன் பாகிஸ்தானின் புதிய பிரதமராக அறிவிப்பு

Comments 8

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    That is just political pluralism among the leftists there already, There was a time that they talked about something called euro communism. European Union will survive. The Euro zone and Euro will continue to be under a lot of pressure. Greeks should learn how to live within heir means. Others are not going to bail them out all the time.

  2. k.t.kulam says:
    14 years ago

    தோழர் இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.நேர்காணலின் முழுமையான மொழியாக்கம் வார இறுதியில் பதியப்படும்.
    many article never published. Thanks.

  3. PhilipPhilip says:
    14 years ago

    Greeks are the founders of democracy and they are very proud of that too. Why would they embrace socialism that was in fact the brain child of an Englishman which failed in many countries in the past. The remaining criminal countries like North Korea, Cuba, Burma etc. etc. are in what shape we all know. The Greeks will wake up to the reality of these socialists and determine their future on their own. I wish our good promoters of socialism go and live in those countries and see the plight of the peasants there before their crow here the glory ( or gory ) of those people there.

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    You are right Philip. I think Greek is also a Stem Language like Latin, Sanskrit and Tamil. Burma is a matter of time this year or so. Cuba is for the Americans only to handle. North Korea is at the United Nations level. This is what the Sri Lankan Tamils have achieved for themselves and for others admire and respect..

    • PhilipPhilip says:
      14 years ago

      நீங்க எப்ப அடுத்தவாட்டி கனடா போறதா உத்தேசம் ? பையன பாக்க ஆஸ்திரேலியா போவல்லியா ?

      • veeran says:
        14 years ago

        Why would they embrace socialism that was in fact the brain child of an Englishman which failed in many countries in the past. The remaining criminal countries like North Korea, Cuba, Burma etc. etc. are in what shape we all know.

        well said my friend

        • PhilipP says:
          14 years ago

          I am glad common sense has prevailed.

  5. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Veeran , North Korea is the stand off. Panmunjam. Dr. Richard Landini, Professor of English and the famous ninth President of the Indiana State University in USA was a mortar man at the Pusan Perimeter in September 1950 in Korea. Dr. Chuck Gehring brought him to a guest appearance at the Problems in College Teaching Class – Terre Haute. Indiana, USA. 1964.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...