Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கர்நாடக இசை தமிழிசையே (இறுதிப்பாகம்) : T.செளந்தர்

இனியொரு... by இனியொரு...
04/23/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, ஆக்கங்கள், இலக்கியம்/சினிமா
0 0
165
Home பிரதான பதிவுகள் | Principle posts

கல்+நாடு=கன்னாடு. கன்னாடு என்பது மலைகள் நிறைந்த நாடு . மலைகள் நிறைந்த பகுதியாதலால் தமிழர்கள் அதனை இவ்வாறு அழைத்தார்கள்.

ஆங்கிலத்தில் கில் என்ற சொல் சொல்லும் கல் என்பதிலிருந்து கிடைத்ததே என ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். சோமேசபுல்லேகமால் என்ற மன்னன் தவறுதலாக கூறியது நிலை பெற்றுவிட்டது. ஆனால் பார்ப்பனர்கள் அது தமிழ்நாட்டு இசையல்ல என்று காட்டுவதற்காகவே திட்டமிட்டு கர்நாடக இசை என்று பயன்படுத்திவருகிறார்கள்.

கர்நாடக இசை என்பதே தமிழிசைக்கு பார்ப்பனர்கள் இட்டுக்கட்டிய பெயர் என்றும், தமிழிசை தான் கர்நாடக இசை என்றும் ஒத்துக் கொள்ளும் பார்ப்பன இசையறிஞர்கள் மறந்தும் தமிழிசை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது கிடையாது. இன்று சில சங்கீத நூலாசிரியர்கள் சிலர் தமிழிசை வேறு என்று சாதுர்யமாகவும்,சமரசமாகவும் எழுதிவருகின்றனர்.

“ஆதி இசை வகைகள் 12000 .பண்கள் 103வகை. இசைகுறிப்பெயர்கள் ” என்று தமது ஆராச்சிமுடிவுகள் குறித்து நூலாக எழுது முன்பே ஆப்ரகாம் பண்டிதர் , சுதேச மித்ரன், த இந்து போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பினார் ஆனால் அவை இருட்டிப்பு செய்யப்பட்டன..

 சங்கீதமும் மூர்த்திகள் :

1.தியாகய்யர்(1767- 1847)

 2.சியாமாசாஸ்திரி(1762- 1827)

 3.முத்துஸ்வாமிதீட்கிதர்(1776- 1835)

தமிழருக்குப் புரியாத மொழிகளில் பாடு முன்னரே தமிழில் கீர்த்தனைகள் எழுதியும் பாடியும் த்மிழிசையை வளர்த்த மூவர் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்தார்கள். அவர்கள்

1.சீர்காழி முத்துதாண்டவர்(1525- 1605)

 2.சீர்காழி அருனாசலகவிராயர்(1711- 1779)

 3.மாரி முத்தாபிள்ளை(1712_ 1787)

தாம் வாழ்ந்த காலத்திலேயே புகழ் பெற்ற இந்த மூவரின் அடியொற்றியே பின் வந்த மூவர்களும் மும் மூர்த்திகள் ஆனார்கள். முத்துத்தாண்டவர் தான் முதன் முதலில் கீர்த்தனை வடிவத்தை அமைத்தார். பல்லவி, அனுபல்லவி, சரணம் எனும் அமைப்பு முறையையும் வகுத்தவர் அவரே.

கீர்த்தனை இசை வடிவம் தமிழ்நாட்டு மக்களுடையது. புரந்தரதாசருக்கோ, அன்னமாச்சாரியாருக்கே இந்த வடிவம் தெரியாது. இறைவனின் பெயர்களை வரிசையாககூறும் தேவர்நாமா என்ற வடிவத்தை புரந்தாதாசரும், நாமபஜனை என்பதைதான் அன்னமாச்சாரியாரும் எழுதியுள்ளனர். அவர்களும் கீர்த்தனைகள் இயற்றவில்லை.

இராமபிரமம் என்பவர் பிழைப்பு தேடி தமிழ்நாட்டில் குடியேறிய தெலுங்கு பிராமணர். அவரின் புதல்வர்களில் ஒருவர் தான் தியாகய்யர் என்று அறியப்படுகின்ற தியாகராஜர்.இவர்களது தாய் மொழி தெலுங்கு .தியாகய்யர் தான் வாழ்நாளிலே ஒரே ஒரு தடவை தான் ஆந்திரா சென்றுள்ளார். தமிழ் நாட்டில்பிறந்து வளர்ந்த அவர் தமிழ்நாட்டு இசையைத்தான் கேட்டார் .

கோவில்களில் இசைக்கப்பட்ட தேவார இசையையும்,நாதஸ்வர இசையையும், தமிழ் கீத்தனங்களையுமே அவர் கேட்டிருப்பார்.இவ்விதம் தமிழர்களிடமிருந்து தான் பெற்ற இசை அறிவை பயன்படுத்தி தனது தாய் பாசையில் பாடல்களாக எழுதினார்.

அவரது பாடல்கள் கொச்சை தெலுங்கில் எழுதப்பட்டவை என்றும் இன்று விளங்குவது போல் விருத்தி பெற்ற இசையாக இருக்கவில்லை என்பதும், பின் வந்த இசைக்கலைஞர்கள் பாடும் முறைகளில் பல விருத்திகளை செய்தார்கள் என்பதும் . இசை ஆராய்ச்சியாளர்கள் கூற்று.

தியாகய்யர் எந்தெந்த தமிழ் கீத்தனங்களை தேவாரங்களை எல்லாம் “காப்பி” அடித்து தெலுங்கில் பாடல்களாக்கினார் என்று நீண்டதொரு பட்டியலை இசை அறிஞர் ச . ராமநாதன் வெளியிட்டு பாடியும் காண்பித்தார். தியாகய்யர் ஒரு பார்ப்பனர் என்பதால் அவரை தலையில் வைத்துக் கொண்டாடும் பார்ப்பனர்கள் இவற்றை எல்லாம் கேட்டும் செவிடர்கள் போல நடிக்கிறார்கள் அறிவால் வெல்லும் தகுதி அற்ற பார்ப்பனர்கள் சூழ்ச்சியாலும், சதியாலுமே தமது காரியங்களை சாதித்து வருகிறார்கள்.

thavilதமிழர்கள் உருவாக்கிய இந்த இசை என்னென்றும் பக்திசார்ந்த இசையாக இருந்ததில்லை. தமிழ் கவிதை யாப்பு , இலக்கண நூல்களிலும், ,அவற்றின் உரைகளிலும் பக்தி மார்க்கம் குறித்த கவிதைகள் பற்றி விவாதிக்கப்படவில்லை. அது பற்றிய தவல்களுமில்லை. இலக்கியமும், இசையும் கி.பி.7 ம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமயப்போராட்டங்களின் பின்னர் தான் பக்திமார்க்கத்தில் இணைக்கப்பட்டன. இலக்கியமும் அவ்வாறே . ஆரம்பகால பக்தி இலக்கியங்கள் இலக்கியம் என்றளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.என்பதும் சந்தேகமே.

சைவ ,வைணவ வளர்ச்சிக்காகவும் ,பெளத்த ,சமண சமயங்களுக்கு எதிராகவும் இசை திருத்தப்பட்டது. பார்ப்பனர்கள் தங்கள் தேவைக்காக கடவுளையே உருவாக்கக் கூடியவர்கள் . கணபதி, முருகன் கதைகள் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். சிவபெருமானின் பிள்ளையான முருகனை வட இந்தியர்கள் வழிபடுவதில்லை என்பது சிறிய உதாரணமாகும். இசை தமிழ்நாட்டில் இறைவனுக்கும்.அல்லது பக்திக்கும் என என்றென்றும் இருந்ததில்லை.

அக்கால (கி.பி.7ம் நூற்றாண்டு) அரசியலே அதனையும் தீர்மானித்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

இவ்விதம் தமிழிசை பக்தி இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்பது தமிழ் மக்கள் மத்தியில் இசைக்கு இருந்த செல்வாக்கினையே காட்டுகிறது . பின் அதுவே சம்பிரதாயமாகவும் மக்கள் மேல் திணிக்கப்பட்டது. தமிழிசையின் வ்லிமையால் தான் பிற சமயங்களிலிருந்து சைவத்தையும், வைணவத்தையும் காப்பாற்றமுடிந்தது. பார்ப்பனர்கள் உண்டாக்கிய இறைவனால் அல்ல. இந்த மத்ப் போராட்டங்களால் தான் தாழ்த்திவைக்கப்பட்டிருந்த (சாதிகள்) பாடகர்களின் தேவை முக்கியமாகியது. பாடல்களைப் பாடக்கூடியவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு கோயில் மண்டங்களுக்குள் நிறுத்தப்பட்டனர். பின்னர் இவர்களை “இசை வேளாளர்கள்” என உயர்த்தப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் பாலர் வகுப்புக்களில் நான் படித்த சைவ சமய பாடத்தில் சொல்லித்தரப்பட்ட நம்பியாண்டார்நம்பி என்பவரின் கதை இதை எழுதும் போது என் நினைவுக்கு வருகிறது . இந்த சைவ சமயம் என்பதை ஒரு பாடமாக படிப்பதில் என்ன லாபம் இருக்கிறது. எனநான் பல முறை சிந்தித்ததுண்டு ,சமணர்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டார்கள்.

நம்பியாண்டார் நம்பி ஓர் அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த ஆரம்பகால தேவாரப்பாடல்களை எவ்விதம் மீட்டெடுத்தார் போன்ற கதைகளின் முழுப்பரிமாணமும் இப்போது தான் புரிகிறது.

 சமணர்கள் கழு மரத்தில் ஏற்றப்பட்டார்கள் என்பதை நான் அவர்கள் ஏதோஒரு மாமரம் போன்ற ஓர் மரத்தில் ஏற்றப்பட்டார்கள் என்றே நீண்ட காலம் எண்ணியிருந்தேன். (தவறு செய்யும் மாணவர்களை ப்ள்ளி ஆசிரியர்கள் பெஞ்சில் ஏற்றுவதுபோல ) .நம்பியாண்டார்நம்பியும் ,பேரரசன் இராஜராஜ சோழனும் தேவாரப்பாடல்களை மீட்டெடுக்கச் சென்றபோது பார்ப்பனர்கள் எப்படி எல்லாம் சதி செய்து நாடகமாடினார்கள் என்பதை சிவாஜி கணேசன் நடித்த ராஜராஜசோழன் என்ற தமிழ் சினிமாவில் மிக அழகாகக் காண்பித்தார்கள்.

சமணர்களை வெறுப்பதில் புகழ் பெற்றிருந்த சம்பந்தரைப் புகழ்ந்து பாடல் புனைந்த நம்பியாண்டார் நம்பிக்கும் காரியம் இலகுவாக இருக்கவில்லை .நம்பியின் பாடல்களில் சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதை காணலாம் பார்பனியத்திற்கு என்னென்ன விதமாக சேவை செய்தாலும் தமிழ் தமிழர்விரோதம் என்பதே அவர்களது கொள்கையாக இருந்து வருகிறது.

தமிழில் பாடு என்ற கோசம் எழும்பும் போதெல்லாம் ‘துவேசம்’ பேசுகிறார்கள் என்றும்’தமிழ்வெறியர்கள்’ என்றும் கூறுபவர்கள்’ இசைக்கு மொழி இல்லை என்பார்கள் . இசைக்கு மொழி இல்லை என்பது தமிழில் பாடு என்று சொல்லும் போதே வருகிறது. இசைக்கு மொழி இல்லை என்பதும் அரை உண்மையே.

அப்படி கூறும் பார்ப்பனர்கள் யாராவது நாதஸ்வரத்தையோ, தவிலையோ தொட்டிருக்கிறார்களா? வாசிப்பார்களா? மதம் மொழி கடந்து பலரும் நாதஸ்வரக்கலைஞர்களாக இன்று திகழ்கிறார்கள்.முஸ்லீம்கள்.பெண்கள் என பலர் நாதஸ்வரக்கலைஞர்களாக உள்ளனர். இசைக்கு மொழி இல்லை என்று மற்றவர்களின் வாயை அடைக்கும் பார்ப்பனர்கள் யாராவது நாதஸ்வரக்கலைஞர்களாக உள்ளனரா? இதற்கு காரணம் நாதஸ்வரம் தவில் சாதி என்ற பாகுபாட்டுடன் உள்ளடங்கி இருப்பதே. பறையும் இதைப்போலவே. இதற்கான இதற்கான சாதிகளையும் உருவாக்கியவர்கள் பிராமணர்கள்தான்.

தேவடியாள்கள் நட்டுவர்கள் பறையர்கள் கூத்தியர்கள் என இழிவு படுத்தப்பட்ட இந்த மக்களால் தான் நாதஸ்வரமும் சதிராட்டமும் தமிழிசையும் காலங்காலமாக தமிழ் மக்கள் மத்தியில் நிலைபெற்று வருகிறது. தேவடியாள்களால் ஆடப்பட்ட சதிராட்டமும் தமிழ்நாட்டு நடனமே. இந்த சதிராட்டம் என்பதே இன்று பரதம் எனப்படுகிறது. 2000 வருடங்களுக்குமேலாக ஆடப்பட்டு வரும் இந்த சதிராட்டம் வரும் இந்த சதிராட்டத்தை முதன் முதலாக ஒரு பிராமணப் பெண் ஆடியது 1931ம் ஆண்டுதான்.

ஆடிய அந்த சிறுமியின் பெற்றோரை கும்பிட்டு மன்றாடி பெரும்பாடுபட்டே நடாத்தப்பட்டது. ஆனால் 1994 ல் நடைபெற்ற தமிழிசைச் சங்க பண் ஆராய்ச்சி மாநாட்டில் பத்மா சுப்ரமணியம் என்பவர் “பரதம் ஒன்றிற்குதான் இருக்கிறது, வட மொழியில் தோறியது தான் அது. தமிழ்நாட்டில் இந்த நடனம் தோன்றியத்ற்கான ஆதாரம் ஏதுமில்லை . இதோடு ஆரியர்கள் ,திராவிடர்கள் என பேசுகின்ற இனவாதத்தை உடனே நிறுத்த வேண்டும். என்னைக்கேட்டால் இந்த நாட்டில் திராவிடர்கள் இருந்தார்கள் ஆரியர்கள் ஆக்கிரமிப்பு செய்தார்கள் பிறகு பண்பாட்டு ரீதியாகவும் ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கின்ற எல்லா பாட நூல்களையும்தடை செய்ய வேண்டும் ” என தமிழிசை சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் அந்த இயக்கத்தின் வீழ்ச்சி பார்ப்பணியத்துடனான அதன் சமரசத்தின் பின்னனிகளை சிந்திப்பது பயன் தரும்.

இந்த அடிப்படையிலிருந்து தான் கர்நாடக இசை என்பது களவாடப்பட்ட இசை என்று தெரிந்திருந்தும், தமிழிசையைப்பற்றி ஏராளமான தகவல்களைக் கொண்டுள்ள தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எழுதிய 1360 பக்கங்கல் கொண்ட “கானமிர்த சாகரம்” மற்றும் சிலப்பதிகாரத்தில் இசை பற்றிய பகுதியான “அரங்கேற்றுக்காதை” சங்கீத பாடத்திட்டதில் சேர்க்கப்படவில்லை.

தமிழில் பாடுவது அவசியம் என்பது மற்றைய மொழிகளின்மீதான வெறியல்ல. இதை எல்லாம் தன் வாழ்நாளில் உணர்ந்து தெலுங்குமொழி தெரியாமல் சங்கீத வித்துவான்கள் சங்கீத கொலை செய்வதைக் கண்ட பார்ப்பணியத்தின் “மாந்தப்பற்று” முகம் கொண்ட பாரதி பின்வருமாறு கண்டனம் செய்கிறான்.

“இசை ஞானமில்லாதபடி பல்லவிகளும் ,கீத்தனங்களும் பாடுவோர் சங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள். இந்த காலத்தில் சங்கீத வித்துவான்களிலேயே பலர் சங்கீதத்திற்கும் ரசங்களே உயிர் என்பதை அறியாதவர் .முக்காலே மும்மாகாணி வித்துவான்களுக்கு இந்த கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது . எழுத்துக்களையும், பத்ங்களையும் கொலைசெய்தும், விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவனுக்கு ரசம் தெரிய வாய்ப்பில்லை.

நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக்கொண்டே வருகிறேன். பாட்டுக்கச்சேரி தொடங்குகிறது .’வாதாபிகணபதிம்’ என்று ஆரம்பம் செய்கிறார். ‘ராம நீ சமானமெவரு’…மரியாத காதூரா’…’வரசொசரி’….அய்யய்யோ அய்யய்யோ. ஒரே கதை ஒரேகதை;….” இப்படி மேலும் எழுதிக் கொண்டே போகிறான் பாரதி.

பொறுமையிழந்த பாரதியின் வாக்குமூலம் அது. கர்நாடக இசையின் தோற்றம் பற்றி கூறும் பார்ப்பணர்கள் அது சாம கானத்தில் பிறந்தது என்பர் . K.B.தேவாஸ், கிளைமென்ட்ஸ் போன்ற இசையறிஞர்களுக்கு ஆப்ராகாம் பண்டிதர் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு அறுதியிட்டு கூறுகிறார்.

“மேலும் ஆரிய சங்கீதமென்ற ஒரு சங்கீதம் இருப்பதாக நாம் கேட்டதுமில்லை. நூல்களில் பார்த்துமில்லை , ஆரியர்கள் பாடிக்கொண்டிருப்பதினால் மாத்திரம் ஆரிய சங்கீதம் என்றும் , சமஸ்கிருதத்தில் எழுதியதெல்லாம் ஆரியருக்குச் சொந்தமென்றும் சொல்வது பொருந்தாது”.

கர்நாடக இசை இன்று பெரும்பாலான மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருப்பதற்கான முக்கிய காரணம் அது பக்தி என்ற ஒரு உணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தி நிற்பதே. அதைத்தான் பாரதி’ ஒரே கதை”என்றான். சினிமாஇசையின் தோற்றம் பெரும்பாலான மக்கள் புதிய இசை வடிவங்களைக் கேட்க வழிசமைத்தது. சினிமா இசையையும் மட்டம்தட்டவும் ,இருட்டிப்பு செய்யவும்,குட்டுவைக்கவும் எத்தனையோ முயற்சிகளை எல்லாம் அவர்கள் செய்தார்கள். சினிமா சங்கீதத்தை வானொலியில் இருட்டிப்பு செய்தார்கள்.

சினிமா இசை உலக மக்களின் உழைப்பில் தோன்றிய இசை வடிவங்களைச் சாரமாக பலவடிவங்களில் நமக்கு அறிமுகம் செய்து பார்ப்பனர்களின் இருட்டடிப்புகளை எல்லாம் முறியடித்துள்ளது. மக்களின் பல விதமான உணர்வுகளையும் பிரதிபலித்தது சினிமாஇசை.

கர்நாடக இசையும் பெரும்பாண்மையான மக்களைச் சென்றடைய வேண்டுமாயின் அது பக்திஉணர்ச்சி என்ற தடையை கடக்க வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
Tags: சினிமாசௌந்தர்இசை
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தீவிரமடையும் மாணவர் போராட்டங்கள் : புதிய நம்பிக்கை

Comments 165

  1. uma says:
    15 years ago

    நன்றி செளந்தர் அவர்களே
    தங்களைப் போல் தமிழிசையை மட்டுமன்றித் தமிழ் நாட்டியத்தைப் பற்றியும் பலரும் எழுத வேண்டும். புலம்பெயர் தமிழரிடையே பெரும் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. கலைப்பாடத்திட்டத்தில் கட்டாயமாகத் தமிழுக்குரிய இடம் வழங்கப்பட வேண்டுமெனக் குறிப்பிடுகின்றனர். நோர்வேஜில் நடைபெறும் பரத நாட்டிய நிகழ்வுகள். அரங்கேற்றங்களில் முழுவதும் அல்லது பெரும்பான்மையான பாடல்கள் தமிழ்ப்பாடல்களாகவே இருக்கின்றன. கலைஞர்கள் தமிழ்ப்பற்றுடன் செயற்பட ஆரம்பித்துள்ளனர். இந்நிலை தொடருமென நம்புவோமாக.

  2. thurai ilamurugu says:
    15 years ago

    கீர்த்தனை இசை வடிவம் தமிழ்நாட்டு மக்களுடையது. புரந்தரதாசருக்கோ, அன்னமாச்சாரியாருக்கே இந்த வடிவம் தெரியாது. இறைவனின் பெயர்களை வரிசையாககூறும் தேவர்நாமா என்ற வடிவத்தை புரந்தாதாசரும், நாமபஜனை என்பதைதான் அன்னமாச்சாரியாரும் எழுதியுள்ளனர். அவர்களும் கீர்த்தனைகள் இயற்றவில்லை”
    கீர்தனை இஅசை வடிவம் தமிழரெளடையது என்பதர்கு வேறு சான்றுகள் எது உளதா?.

    தமிழர்கள் உருவாக்கிய இந்த இசை என்னென்றும் பக்திசார்ந்த இசையாக இருந்ததில்லை. தமிழ் கவிதை யாப்பு , இலக்கண நூல்களிலும், ,அவற்றின் உரைகளிலும் பக்தி மார்க்கம் குறித்த கவிதைகள் பற்றி விவாதிக்கப்படவில்லை. அது பற்றிய தவல்களுமில்லை
    நாம் இப்போது இசையைப் பற்றி வாதம் புரி ந்து கொண்டிருக்கிறோம் கவிதை பற்றி இல்லை கவிதைப் பற்றிய நூல்களில் ஏன் பக்தியைப் பற்றி இலக்கணம் இருக்க வேண்டும்? தேவையில்லை ஆயினும் உங்கள் கருத்து தவறனாதே . நந்திக் கலம்பகதை புலவர்கள் ஏற்க மறுத்தனர் ஏன்/ அதில் கடவுளைப் பற்ரிய கடவுள் வாழ்த்துப்பவும்ம் , அடுததபடியாக் பார்ப்பனர் பற்ரிய வாழ்த்துப் பாவும் இல்லை என்பதற்காவே . திருக்குறளில் முதல் இர்ண்டு அதிகாரங்கள் கடவுள் வாழ்த்தாகவும் , நீத்தார் பெருமையாகவும் இருபதைக் காணக் அது இரண்டும் இல்லவிட்டல் அதை ஒரு நூல் என்றே கருதியுருக்க மாட்டர்கள்
    “ம்பியாண்டார் நம்பி ஓர் அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த ஆரம்பகால தேவாரப்பாடல்களை எவ்விதம் மீட்டெடுத்தார் போன்ற கதைகளின் முழுப்பரிமாணமும் இப்போது தான் புரிகிறது.
    தேவாரப்பாடல்களை மீட்டெடுக்கச் சென்றபோது பார்ப்பனர்கள் எப்படி எல்லாம் சதி செய்து நாடகமாடினார்கள் என்பதை சிவாஜி கணேசன் நடித்த ராஜராஜசோழன் என்ற தமிழ் சினிமாவில் மிக அழகாகக் காண்பித்தார்கள்”.
    சினிமாவில் காட்டுவதை யெல்லாம் நம்பினால் எப்படி? ராசராச சோழன் தேவர்ரப் படல்களை மீட்டான் என்பதற்கு எந்த சான்றும் கிடையாது .பெரிய புரானத்தில் நம்பியைப் பற்றி வருகிறது ,. ராச ராச சொழனைப் பற்றி ஒரு வரி கூட இல்லை ஏண் ? (சேக்கிழார் பார்ப்பனர் இல்லை }

    .
    “சினிமா இசை உலக மக்களின் உழைப்பில் தோன்றிய இசை வடிவங்களைச் சாரமாக பலவடிவங்களில் நமக்கு அறிமுகம் செய்து பார்ப்பனர்களின் இருட்டடிப்புகளை எல்லாம் முறியடித்துள்ளது. மக்களின் பல விதமான உணர்வுகளையும் பிரதிபலித்தது சினிமாஇசை.

    கர்நாடக இசையும் பெரும்பாண்மையான மக்களைச் சென்றடைய வேண்டுமாயின் அது பக்திஉணர்ச்சி என்ற தடையை கடக்க வேண்டும்.”
    தேவை இல்லை என்பது நமது கருத்து . இப்பொதிய வடிவில் உள்ள தமிழிசையோ அல்லது கரு நாடக இசையோ தமிழருக்கு தேவை இல்லை புதிய வடிவில் உள்ள சினிமா இசையை தமிழப் படுத்தி பயன்படுத்தினாலே போதும் 3 மணி நே கர் நாடக் இசையை அமர் ந்து கவனிக்கததேவையான பொறுமையும் நேரமும் யாருக்கும் இல்லை .இன்று அய்ரொப்ப்வில் யாராவது சிம்பனி இஅசையை ரசிக்கிறார்களா? பாப்பிசையும் ,கலக்தின் குரலா டாப் இசையுமே வெகுசன மக்களால் விரும்பப்படுகிறது மேட்டுமைக் குடியன்ரும் பார்பனருமே கரு நாடக இசையைக் கட்டிகொண்டு அழட்டும் தமிழர்கள் தமக்கென ஒரு புதிய வடிவவும் உள்ளத்கமும் கொணட் இசையினைக் கண்டுகொண்டார்கள் அது சினிமா இசையே அதைத்தரப் படுத்தி வணிகத்தின் கோரப் பிடியிலிருந்த்து விடுவித்து வீட்டாலே போதுமானது
    பெரியார் சிறந்தசெயல்பாட்டாளர். மாபெரும் சிந்தனையாளர் அல்ல”

    • THAMILMARAN says:
      15 years ago

      சேக்கிழார் பார்ப்பணர் இல்லை என்றால் தெலுங்கரா? அசல் பார்ப்பணர் சேக்கிழார்.

      • thurai ilamurugu says:
        15 years ago

        சேக்கிழார் வெள்ளாளா வகுப்பைச் சேர் ந்தவர் .பெரியபுரணத்தைப் பற்றிய என்த நூலின் முன்ன்யஉரையிலும் இதைக் காணலாம்

  3. நாவலன் says:
    15 years ago

    கர்நாடக சங்கீதம் தமிழிசையே என்ற உங்களின் வாதம் அது குறித்த தேடல்களை அனைவர் மத்தியிலும் உருவாக்கும் என்பது உண்மை. என்னைப் பொறுத்தவரை கர்னாடக சங்கீதம் தமிழ் இசையா இல்லையா என்பதை விட, இந்து தத்துவத்தையும், பார்ப்பனீய சிந்தனை முறையையும் அனைத்துத் தளங்களிலும் இவற்றின் மேலாதிக்கத்தை நிலைநாட்டும் அருவருப்பான செயன்முறையையும் அம்பலப்படுத்தியுள்ளீர்கள்.
    பார்பனீய சிந்தனை சமூகத்தின் சாதிய அமைப்பபைப் பாதுகாப்பதற்கும் சாதீய அடக்குமுறையை தீவிரப்படுத்தவும் இசை போன்ற இயற்கையான கலைவடிவங்களையே பயன்படுத்திக் கொள்கின்றது என்ற உண்மையை உலகிற்குச் சொல்லியுள்ளீர்கள்.

    இந்திய உற்பத்தி முறையின் மாறாத் தன்மை குறித்து கார்ல் மார்க்சிலிருந்து பலர் பேசியுள்ளனர். சமூகத்துன் ஒவ்வொரு அங்கத்திலும் அது தனது மாறாநிலையைப் பேணுகிறது. அதற்கு அடிப்படையாகவிருப்பது பார்ப்பனீய சிந்தனை முறையாகும். கலைகளில் கூட அது தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறது என்பதை மறுபடி ஒரு முறை கூறியுள்ளீர்கள்.
    தவிர,
    கர்நாடக ச்ங்கீதமும் அதன் ஒழுங்கைமைப்பும் (தாய்ராகம், ஜன்னிய ராகங்கள், மேளகர்த்தா ராகங்கள் போன்ற அமைப்பு) இன்றைய கணனி மென்பொருட்களில் காணப்படும் -Object oriented -முறையை ஒத்ததான அமைப்பாகக் காணப்படுகிறது. எந்த இசைவடிவத்தையும் அதனும் அடக்கிவிடக்கூடிய அதிசய அமைப்பு முறையைக் கொண்டது. ஆனால் அவற்றை அறிந்தவர்கள் மட்டுமே ரசிக்கமுடியும். அதே வேளை புதிய இசைகளை உருவாக்குவதற்கு கர்நாடக சங்கீதத்தை கருவியாகப் பயன்படுத்த முடியும். இளையராஜா, ரஹ்மான் போன்ற இசையமைப்பளார்கள் கர்நாடக சங்கீதத்தை புதிய இசைவடிவங்களை உருவாக்குவதற்கு நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றே நம்புகிறேன்.

    • xxx says:
      15 years ago

      வள்ளுவர் பெருமளவும் சமணர் என்றே கொள்ளப்படுகிறார். பவுத்தச் சிந்தனைகளையும் உள்வாங்கியுள்ளார். இரன்டு மதங்களும் நாத்திக மதங்கள். முதலாவது அதிகாரம் கடவுள் வாழ்த்து என்பது, மிக அகச்சார்பான சைவ/இந்துத்துவ விளக்கம் என்றே தெரிகிறது.
      இறைவன் என்பது கடவுளைக் குறிக்கத் தேவையில்லை.

      • thurai ilamurugu says:
        15 years ago

        வள்ளுவர் பெருமளவும் சமணர் என்றே கொள்ளப்படுகிறார். பவுத்தச் சிந்தனைகளையும் உள்வாங்கியுள்ளார். இரன்டு மதங்களும் நாத்திக மதங்கள். முதலாவது அதிகாரம் கடவுள் வாழ்த்து என்பது, மிக அகச்சார்பான சைவ/இந்துத்துவ விளக்கம் என்றே தெரிகிறது.
        இறைவன் என்பது கடவுளைக் குறிக்கத் தேவையில்லை.
        சமண மதம் நாத்திக மதம் அன்று . பெருமளவில் பௌத்த மதம் கடௌலளைப் பற்றிப் பேசுவதில்லை என்பதால் நாத்திக மதம் என்று கொள்ளலாம் சமணத்தில் மறுபொஇறப்பு , சொர்க்கம் நரகம் பெண்ணடிமைத்தனம் எல்லாம் உண்டு கான்க மயிலை சீனி வேங்கிட சாமி எழுதிய தமிழும் சமணமும்
        இறைவன் கடவுள் இல்லை என்றால் வேறுயார்? வள்ளுவர் கடவுள் இறைவன் என்ற இரண்டு சொற்களையும் பயன் படுத்தியுள்ளார் சரி நீத்தார் பெருமைஎன்பது என்ன? வானை ஏன் வாழ்த்த வேண்டும்?

        • xxx says:
          15 years ago

          சமணத்துக்குக் கடவுட் கொள்கை உண்டென்பதற்குச் சமண மத நூல்களிலிருத்து ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்.
          சமணம் ஊழ் பற்றிப் பேசுகிறது ஆன்மா பற்றிப் பேசுகிறது. ஆண்டவனைப்பற்றியல்ல.
          குறளில் கடவுள் என்ற சொல் எங்கே வருகிறது என்று சொல்லுங்கள். பணிவுடன் என்னைத் திருத்திக் கொள்கிறேன்.
          தெய்வம் என்ற சொல்லுண்டு. “வானுறையும் தெய்வத்துள்” என்பது தேவர்களைக் குறிப்பது. தேவர்கள் மட்டுமன்றிப் பிற இயற்கை சாரத வாழ்வினங்கள் பவுத்தத்திலும் உள்ளன.

          • THAMILMARAN says:
            15 years ago

            ஆதி பகவன் யாரென்றால் அவரே அகிலத்திற்கும் முதலவர் என் கிறார்.

          • thurai ilamurugu says:
            15 years ago

            சமணம் ஊழ் பற்றிப் பேசுகிறது ஆன்மா பற்றிப் பேசுகிறது.” இது இரண்டப் பற்ரிப் பேசினாலே கடவுள் கொளகை உண்டு என்பது தான் பொருள் தங்களின் அகராதியில் கடவுள் என்றால் என்ன பொறுளோ?

            தெய்வம், இறைவன், உலகியிற்றியோன், கடவுள் என்ற சொற்கள் ஒத்த பொறுளைத்தருவன . வேறுபடூ உண்டு என்றல் விளக்கவும் நான் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
            சில பெரியார் அனபர்கள் கட்வுள் வாழ்த்துப் பக்திக்கு தங்கள் நோக்கில் பொருள் எழுதி இருப்பது சரியில்லை என்பது எமது கருத்து

      • xxx says:
        15 years ago

        துரை இளமுருகு
        சமணத்தைச் சேர்ந்த யாரையாவது கேட்டு விட்டு எழுதிங்கள். நீங்கள் உய்த்தறிய முயல்வது போல அங்கு கடவுட் கொள்கை இல்லை என்பது பலராலும் உறுதி செய்யப்பட்ட விடயம். இதற்கு மேல் உங்களுடன் விவாதித்து ஒரு பயனுள்ள முடிபிற்கும் வர இயலாது. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

    • Shiva says:
      15 years ago

      பயனுள்ள குறுக்கிடு, நாவலன்
      “கர்நாடக” இசையை மெல்லிசையாக்கும் முயற்சி தமிழ்ப் பேசும்படத்துடன் தொடங்கி விட்டது. எனினும் மெட்டுக்கள் ராக அமைப்புக்கு நேரடி உடன்பாட்டுடன் இருந்தன.
      பின்னர் விலகல்கள் தொடங்கின. இந்திப் படச் செல்வாக்கும் அதனூடாக மேற்கினதும் புகுந்தன. லத்தின் அமெரிக்காவினதும் உள்வாங்கப் பட்டது.
      திரை இசையின் பன்முகப்பட்ட நவீனமாக்கலில் சி.ஆர். சுப்பராமனின் பங்கு பெரியது. (அவரின் வழியிலேயே விஸ்வனாதன், ராமமூர்த்தி போன்ற பலர் உருவாயினர்).
      நாட்டார் இசையை (நல்லதம்பியில்) வெற்றிகரமாகப் பாவித்த அவர் “கர்நாடக” இசையையும் தமிழ்ச் சுழலுக்குப் புறம்பான இசை வடிவங்களையும் பயன் படுத்தினார்.

      திரை இசையில் சோர்வு ஏற்பட்ட சூழலில் இளையராஜாவின் வருகை நிகழ்ந்தது.
      அவரது ஆற்றல் மட்டுமன்றி, அவர் திரையுலகிற் புகுந்த சூழலின் வணிக வளர்ச்சியும் நவீனத் தொழிநுட்பமும் கவனிப்பிற்குரியன.
      அவருடன் ஒப்பிடுகையில் ரகுமானின் “கர்நாடக” இசை, நாட்டாரிசை ஈடுபாடும் பயன்பாடும் குறைவானவை என்பேன். இசைக் கருவிகளின் ஆதிக்கம் மிகுந்த மேனாட்டு நவீன இசை வடிவங்களின் பண்புகளை ரகுமான் உள்வாங்கி வெற்றி கண்டார்.

      இன்றைய பார்ப்பனியம் இளையராஜாவையும் ரகுமானையும் உள்வங்கும் வல்லமை கொண்டது. அது இப்போது பார்ப்பன-பணியா கூட்டாக ஏகாதிபத்தியதுடன் கைகோத்து நிற்கிறது.
      பழமைவாதம் என்பது வர்க்க நலன்களைப் பேணும் அளவுக்கு மட்டுமே. (இது சகல அடிப்படைவாதங்கட்கும் பொருந்தும்).

  4. Shiva says:
    15 years ago

    தேவாரங்கள் பண்ணோடு பாடுவதற்கே எழுதப்பட்டன. அவை தமிழரின் முதலாவது பக்தி இயக்கதிற்குரியவை.
    மாணிக்கவாசகரின் பாடல்கள் யாவுமே இசையோடு பாடுதற்கானவை. நாலாயிரப் பிரபந்தங்களிற் பலவும் அவ்வாறே.
    அவை அனைத்துக் கீர்த்தனைகட்கும் முன்னோடியானவை எனின், இசைநோக்கிலோ உள்ளடக்க நோக்கிலோ, அவற்றைக் ‘கர்நாடக’ இசைக் கீர்த்தனைகளுடன் ஒப்பிட்டால் புலனாகும் ஒற்றுமை வேற்றுமைகளை செளந்தர் விளக்கின் உதவியாயிருக்கும்.

    பார்ப்பனர்களல்ல, பார்ப்பனியமே நம் பிரச்சனை என்பது முக்கியமானது. பார்ப்பனியம் தமிழ் விரோதத்தை வரித்துக் கொண்டது எப்போது என்று சொல்வது கடினம். ஆனால் அது வெகு காலம் முன்பே நடந்துவிட்டது.
    தமிழில் வழிபாட்டுக்கு நாமறிய, எப்போது பிராமண அர்ச்சகர்கள் உடன்பாடாயிருந்தனர்? அண்மைய சிதம்பரப் போராட்டம் ஒரு நல்ல சான்று.

    • THAMILMARAN says:
      15 years ago

      தேவாரத்தமிழ் என வியந்தான் கண்ணதாசன் அதனால்தான் தன் காதலியை தேவாரபாட்டாக என விளீத்தான்.பார்ப்பணீயம் ஏன் தமிழை அழிக்க நினைக்கிறது என்பதை கமலகாசனில் நீங்கள் அறீந்து கொள்ளலாம் அவரே வாழும் விளக்கம்.அடுது சோ…அவர் ரமணரையும், வள்ளலாரையும் எழுதும் போது அவர்களது அழுக்காற அழகாக வெளீப்படுதுதுவார்….இன்னும் மாலன்…சுதாங்கன் ….மணீசங்கர அய்ய்ர் என நீளூம் பலரை நாம் வாழும் காலத்தில்தான் பார்க்கிறோமே.

  5. நாவலன் says:
    15 years ago

    xxx, thurai ilamuruku,
    பௌத்தம் என்பது அடிப்படையில் நிலப்பிரபுத்துவ உருவாக்கத்தோடு இணைந்து உருவான தத்துவம். குழு நிலை சமூக அமைப்பிலிருந்து நிலப்பிரபுத்துவம் உருவான காலப்பகுதி போர்கள் நிகழ்ந்த காலமாகும். குழுக்களைச் சார்ந்த சிறிய மன்னர்கள் அழிக்கப்பட்டு சாம்ராஜ்யங்கள் உருவான காலகட்டம். நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக குழுநிலை சமூக அமைப்பு சார்ந்து கோட்பாடுகளை முன்வைத்தவர்கள் தான் மாகாவீரர் புத்தர் போன்றோர்.
    போர்களுக்கு எதிரான சமாதானம் குறித்த புத்தரின் கருத்து இங்கிருந்து தான் உருவாகிறது. இது ஒரு வகையில் இந்து மதத் தத்துவங்களுக்கு எதிரான போக்கைக் கொண்டிருந்தது. கடவுள் மறுப்பு உட்பட. ஆசியப் பொருளுற்பத்தி முறையின் வேறுபாடு தனித் தன்னை வாய்ந்தது என்பதற்கு முக்கிய காரணம் குழுக்களின் தொடர்பின்மையும் ஆகும். ஆக, மையப் பேரரசுகள் குழுக்களை உற்பத்திக்காக ஒருங்கிணைக்க முற்பட்ட வேளையில் இந்து தத்துவம் உதவி புரிந்தது. மையப்பேரரசின் அதிகாரத்திற்கு இசைவாக்கம் அடைவதற்கு ஏற்ப ஒவ்வொரு குழுக்களது நம்பிக்கைகளும் இந்து மதத்துள் உள்வாங்கப்பட்டது. சாதி அமைப்பு முறை உருவாக்கப்பட்டது. etc..
    பௌத்ததின் இந்து மதத்திற்கு எதிரானதும் இறை மறுப்பும் இங்கிருந்து தான் உருவாகிறது என்று நான் கருதுகிறேன்.
    பின்னதாக, ஜெயினிசமும் இதே புறச் சூழலில் உருவானது எனினும் பௌத்தம் போன்று நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான சமூக இயக்கமாக உருவாகவில்லை. ஜெயினிசம் பல சந்தர்ப்பங்களில் குறுநில வழிபாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியது மட்டுமன்றி இந்து மதத்திற்கு எதிரான சமூக இயக்கமாக எப்போதும் அமைந்தாக எனது வாசிப்பிற்கு உட்பட்ட எல்லையில் தெரியவில்லை.
    ஆக, திருவள்ளுவர் ஜெயினிசதின் செல்வாகிற்கு உட்பட்டவராக இருந்திருக்கலாம் என்பதற்கான முடிவிற்கு வர முனையலாம்.

  6. Sundararaj Thayalan says:
    15 years ago

    Excellent article. Many many thanks for the author for bringing out so many things that are unheard off. Brahminism is a very dangerous evil.

    • xxx says:
      15 years ago

      முற்றாக உடன்படுகிறேன்

  7. யோகன் says:
    15 years ago

    நண்பர் தமிழ்மாறன்

    ஆதிபகவன் யாரென்றால் அவரே அகிலத்திற்கும் முதலவர் என் கிறார்.
    நீங்கள் முதலவர் என்று மு.கருணாநிதியை தானே குறிப்பிடுகிறீர்கள்?

  8. T .சௌந்தர் says:
    15 years ago

    நண்பர் துரை இளமுருகு
    நீங்கள் பல கேள்விகளை இங்கே எழுப்பியுள்ளீர்கள் .உங்கள் கேள்விகளுக்கு பதிலாகவும் இக்கட்டுரை சம்பந்தமாகவும் எனது இறுதியான கருத்தை தெரிவிக்கவிரும்புகிறேன்.

    கீர்தனை இசை வடிவம் தமிழரெளடையது என்பதர்கு வேறு சான்றுகள் எது உளதா?.
    இன்று நமக்கு கிடைக்கின்ற கீர்த்தனை இசை வடிவம் என்பதை முத்து தாண்டவர் (1525- 1605) என்பவர் ஆரம்பித்து வைத்தார்.கீர்த்தனை இசையின் அடித்தளம் என்பது தேவார இசையிலிருந்தே தொடங்குகிறது.
    சீர்த்தி = கீர்த்தி = கீர்த்தனை . சீர்த்தி செய்யப்பட்டது கீர்த்தனம்.சீர்த்தி அடி ஒற்றி கீர்த்தனம் வந்தது என்பார் டாக்டர்.வி.ப.சுந்தரம் என்ற இசையறிஞர். கீர்த்தனை என்பதும் தமிழ் சொல்லே.பழங் காலத்தில் செந்துறை, வெண்முறை ,வரி , உரு என இசைப் பாட்டுகள் இருந்ததென்றும் இன்றைய கீர்த்தனை உரு என்ற வடிவத்துள் அடங்கும் என்பார் இசை ஆய்வாளர் மேரிமனோகரன். அது பற்றி பழந் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் உரு பற்றிய குறிப்புக்களை தருகிறது.
    “சங்கத் தமிழும் பிற்கால தமிழும்” என்ற தனது நூலில் வ.உ.சாமிநாதையர் 100 வகை இசை பற்றி கூறுவதுடன் இன்று நடைமுறையில்உள்ள கீர்த்தன வடிவம் அதில் ஒன்று என்கிறார்.பழைய இசை வடிவங்களைப் பற்றி அந் நூலில் விபரிக்கிறார்.பழைய உரு தான் கீர்த்தனை என்பார் உ.வே .சா.
    கீர்த்தனையில் வரும் பல்லவி என்பதும் தமிழ் சொல்லே . முதலில் தளிர்ப்பது என்பது அதன் பொருள் .சூடாமணி நிகண்டு பல்லவிக்கு தளிர் என விளக்குகிறது.பல்லவி = தளிர்த்தல் .
    அனு ( வட சொல் ) என்பது பின்னால் வருவது , சரணம் ( வட சொல் ) பாதம் என்ற பொருளில் வரும்.

    இசையும் ,கவிதையும் என்றென்றும் கடவுளுக்கானதாக என்றென்றும் இருந்ததில்லை .இசை, ஓவியம், சிற்பம்,நடனம் ,கவிதை போன்ற நுண்கலைகள் எல்லாவற்றையும் இறைவனோடு சேர்த்து பேச பார்ப்பனீயம் பழக்கியுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் இறைவனைப் பற்றி அங்கங்கே பேசப்பட்டாலும் ,முற்று முழுதாக பக்தி இயக்க காலத்திலேயே அவை எல்லாம் I இறைவனை மட்டும் பாடும் படி ) சைவத்துள் அமுக்கபாட்டன என்பதை தெரிவிக்கவே அக் கருத்து கூறப்பட்டது.

    சினிமாவில் காட்டுவதை யெல்லாம் நம்பினால் எப்படி? ராசராச சோழன் தேவர்ரப் படல்களை மீட்டான் என்பதற்கு எந்த சான்றும் கிடையாது .பெரிய புரானத்தில் நம்பியைப் பற்றி வருகிறது ,. ராச ராச சொழனைப் பற்றி ஒரு வரி கூட இல்லை ஏண் ? (சேக்கிழார் பார்ப்பனர் இல்லை }

    ராஜா ராஜா சோழனை பற்றி ஒரு வரி கூட இல்லை என்பதால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று முடிவு எடுப்பது எவ்வளவு பொருத்தம் என்பதை அடியேன் அறியேன்.நம்பியாண்டார் நம்பி தான் இப்போது நமக்கு கிடைக்கின்ற இசைக்கருவூலமான தேவாரங்களை பன்னிரு திருமுறைகளாக தொகுத்து தந்தவர் என்கிறார்கள்.அவர் தான் தொகுத்தாரா ? என்று நீங்கள் கேட்டால் அதற்க்கு வரலாற்று சான்றுகள் என்னிடம் கிடையாது.!!!
    நம்பியின் வாழ்க்கையை வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்( முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.) தொகுத்ததில் சிலவற்றை கீழே தருகிறான்.இது தொடர்பில் ஏதும் ஐயம் இருப்பின் அங்கேவிசாரிக்கவும்.

    .”……..மன்னன் விரும்பிய வண்ணம் நம்பிகள் பிள்ளையார்க்கு அபிடேக ஆராதனை கள் புரிந்து மன்னன் கொண்டு வந்த நிவேதனப் பொருள்களைப் படைத்து அமுது செய்தருளுமாறு
    வேண்டிய அளவில் பிள்ளையார் அவற்றை ஏற்றருளினார்.
    அது கண்டு மகிழ்ந்த மன்னன் தன் நெடு நாளைய கவலையை நம்பிகளிடம் தெரிவித்தான். மூவர் அருளிய தேவாரத் திருமுறைகளும், திருத்தொண்டர் வரலாறும் தமிழ் மக்க ளுக்குக் கிடைக்குமாறு செய்தருள வேண்டுமெனக் கேட்டுக் கொண் டான். நம்பிகள் மன்னனின் வேண்டுகோளைப் பிள்ளையாருக்குத் தெரிவித்தார். அவர் வேண்டுகோளை ஏற்ற பொல்லாப் பிள்ளையார் `தில்லையில் தேவாரமூவர் கையடையாளத்துடன் ஒரு அறையில் தேவாரத் திருமுறைகள் வைக்கப்பட்டுள்ளன` எனக் கூறியதோடு திருத்தொண்டர் வரலாறுகளையும் நம்பியாண்டார் நம்பிகளுக்கு உணர்த்தியருளினார்.

    அவற்றைக் கேட்டு மகிழ்ந்த நம்பிகளும் அபய குலசேகரனாகிய சோழ மன்னனும் மகிழ்ந்து தில்லையை அடைந்து அவ்வறையைத் திறக்கு மாறு தில்லைவாழ் அந்தணர்களைக் கேட்டுக் கொண்டனர். தில்லைவாழ் அந்தணர்கள் தேவாரமூவர் கையடையாளம் இட்டுள்ளதால் அவர்கள் வந்தால் அன்றி அவ்வறைக் கதவைத் திறத்தல் இயலாது எனக் கூறக்கேட்ட மன்னன் மூவர் திருவுருவங் களுக்கும் அபிடேக ஆராதனைகள் செய்வித்து எழுந்தருளச் செய்து அவ்வறைக்கு எதிரே நிறுத்திட மூவரும் வந்துவிட்டனர். கதவைத் திறக்கலாமே எனக் கூறத் தில்லைவாழ் அந்தணர்கள் வேறு வழியின்றிக் கதவைத் திறந்தனர். அங்குப் பாதுகாப்பாக வைக்கப்பெற்றிருந்த ஏடுகளைக் கறையான் புற்று மூடியிருக்கக்கண்ட மன்னன் மனம் வருந்தி எண்ணெய் சொரிந்து புற்றை அகற்றிப் பார்த்த அளவில் ஏடுகளில் பல செல்லரித்திருந்ததை அறிந்து அளவிலாத துயருற்றான். அந்நிலையில் `தேவார ஏடுகளில் இக்காலத்துக்கு வேண்டுவனவற்றை மாத்திரம் வைத்து விட்டு எஞ்சியவற்றைச் செல்லரிக்கச்செய்தோம் கவலற்க` என்றொரு அசரீரி அனைவரும் கேட்க எழுந்தது. மன்னன் ஆறுதல் அடைந்து அவ்வேடுகளைச் சிதையாமல் எடுத்து அவற்றைத் தொகுத்துத் தருமாறு நம்பியாண்டார் நம்பிகளை வேண்டிக் கொண்டான்.,,,,,, ”
    என்றும் ,மேலும்

    “…..நம்பியாண்டார் நம்பிகள், திருமுறைகளை வெளிப்படுத்திய முதல் இராசேந்திர சோழன் காலத்திலும் வாழ்ந்தவர் என்றே சமய உலகில் இராசராச சோழன் (கி.பி. 985-1014) காலத்திலும், முதல் இராசேந்திர சோழன் காலத்திலும் வாழ்ந்தவர் என்றே சமய உலகில் பலரும் கருதுவர். உமாபதி சிவாசாரியார் திருமுறைகண்ட புராணத் துள் அபயகுல சேகரன் இராசராசன் என்றே குறிப்பிடுகின்றார். பன்னிரு திருமுறைகளில் பதினொரு திருமுறைகளை நம்பியாண்டார் நம்பிகளே தொகுத்தருளினார் என்பதாலும், அவரால் தொகுக்கப் பட்ட ஒன்பதாம் திருமுறையில் இராசராசசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலும் கங்கை கொண்ட சோழபுரத்தில் இராசேந்திர சோழன் எடுப்பித்த கோயிலும் இடம் பெற்றுள்ளமையாலும் இவ்விரு மன்னர் காலங்களிலும் நம்பிகள் வாழ்ந்தவர் என்று கொள்ளலே முறை. அங்ஙனமாயின் நம்பிகள் காலம் கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டுகட்கு இடைப்பட்ட காலம் எனக் கோடலே பொருந்துவதாகும்.”
    என்றும் முடிக்கிறார். பூட்டப்பட்ட பாடல்களை மீட்டார் என்பதை மட்டும் எடுக்கவும் . மற்றப்படி தமிழ் சினிமாவை வரலாற்று ஆதாரங்களுக்கு அழைக்கும் “ஆபத்தை” அறியாதவனல்ல .

    கர்நாடக இசையும் பெரும்பாண்மையான மக்களைச் சென்றடைய வேண்டுமாயின் அது பக்திஉணர்ச்சி என்ற தடையை கடக்க வேண்டும்.”
    தேவை இல்லை என்பது நமது கருத்து . இப்பொதிய வடிவில் உள்ள தமிழிசையோ அல்லது கரு நாடக இசையோ தமிழருக்கு தேவை இல்லை ….
    இந்த கருத்திலிருந்து நான் சற்று முரண் படுகிறேன் .கர்னாடக இசையும் ,சிம்போனி இசையும் பெரும்பானமையான மக்களுக்கு புரியவில்லை என்பதால் அவை எல்லாம் வீணான கலைகளா ? இன்று நாம் ரசிக்கும் மெல்லிசை ,நாட்டுப்புற இசை என்றென்றும் தமிழ் மக்கள் ரசித்து வந்தவை தான். சிந்துப் பாடல்களை எண்ணிப் பாருங்கள் .நம்மிடம் எல்லாம் உண்டு.பார்ப்பனீயம் எல்லாவற்றிலும் புகுந்து ,அவற்றில் ஏறி மிக இலகுவாக சவாரி செய்து வருகிறது.அதற்கு எதிர் திசையில் சிந்திக்கிறவர்களின் மத்தியில் தான் பல குழப்பங்கள்.அவர்கள் இசையை எவ்வித சலனமும் இன்றி கையாளுகிறார்கள்.நாட்ட்ப்புற பாடல்கள் என்று சொல்லப்படுகின்ற விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனின் பாடல்களில் வரும் பக்தியை ஒரு தடவை எண்ணி பாருங்கள்.அதற்காக நாட்டுப் புற இசையை “அவர்கள் கட்டி அழட்டும் ” என்று விட்டு விடுவதா. மக்கள் கலை இலக்கிய கழகம் வெளியிட்ட சில பாடல் தொகுப்புக்களை புஷ்பவனம் குப்புசாமி என்பவர் நாட்டுபுற இசையில் கம்யூனிஸ கருத்துக்கள் பாடக் கூடாது என்று கூறியதாக அறிந்தோம்.அதற்க்கு தோழர் மருதையன் உழைக்கும் மக்களிடமிருந்து பிறந்த இசையை உழைக்கும் மக்களின் விடுதலைக்கு தான் பயன் படுத்த வேண்டும் என்றும் ,குப்புசாமி போல ஒரு கச்சேரிக்கு 30 ,000 ருபாய் வாங்கவா நாட்டுபுற இசை இருக்கிறது ? என்று பதிலடிகொடுத்தார்.

    உங்கள் பின்னூடங்களில் இருந்து நீங்கள் பழைய இலக்கியங்களில் பரீட்சயம் உள்ளவர் என்பது தெரிகிறது.இதைப்பற்றி எல்லாம் ஒரு சாதாரண ,சாராசரி தமிழனிடம் கேட்டால் என்ன பதில் சொல்லுவான் என்பது உங்களுக்கேபுரியும்.
    உலக நாகரீகங்களை அங்கு உண்டாகிய கலை வடிவங்களை வைத்துத் தானே அளவிடுகிறார்கள்.அந்த நாகரீகங்களின் ஓவியம் ,சிற்பம் ,நடனம், கட்டிடம் போன்ற கலைகள் தானே அதன் உயர்வின் அளவுகோலாக உள்ளது என்பதை உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் ஒப்பு கொள்கிறார்கள்.அப்படி உலகம் வியக்கும் கலைகளை நமது முன்னோர்கள் படைத்திருக்கிறார்கள் .இவற்றை எமது சோம்பேறி தனத்தினாலும் ,தாழ்வு மனப்பான்மையாலும் ,இரவல் கொடுப்பின்னாலும் பரி கொடுத்து ஓர் இரங்கத்தக்க நிலையில் நாம் உள்ளோம்.
    இன்றைய சினிமா இசையில் நமதுதமிழ் செவ்வியல் இசையின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியுமா? பழைய படங்களில் வந்த ஏராளமான் பாடல்கள் இன்றும் நிலைத்து நிர்ப்ப்தர்க்கு காரணம் அவற்றின் முதுகெலும்பு தமிழ் செவ்வியல் இசை தான்.மெல்லிசையும் ,செவ்வியல் இசையும் ,நாடுப்புற இசையும் என்றென்றும் நம்மவர்கள் ரசித்து வந்தவை தான்.தமிழ் செவ்வியல் ( கர்னாடக இசை ) இசையையும் பாமரர்களும் ரசிப்பார்கள்.
    “…….அது சினிமா இசையே அதைத்தரப் படுத்தி வணிகத்தின் கோரப் பிடியிலிருந்த்து விடுவித்து வீட்டாலே போதுமானது ”
    அது போலவே தமிழிசையையும் ( கர்னாடக இசை ) பார்ப்பனீயத்தின் கோரப் பிடியிலிருந்து நீக்க வேண்டும்.

    இறுதியாக தமிழிசையை தமிழ் மன்னர்களும் சேர்ந்து அழித்தார்கள் என்பது தொடர்பாக … மன்னனுக்கு மக்களை சுரண்டுவது தலையாய பணியாக இருந்தது.அதன் தத்துவம் பிராமணீயம்.அந்நாளைய மன்னர்களும் புலவர்கள் பாடும் புகழ் பாட்டிலே மயங்கி இருந்திருக்கலாம். ஆனால் பார்ப்பனர்களின் எப்போதும் தமிழர் விரோதம் என்பதை எப்போதும் உள்ளீடாக வைத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள்.இன்று வரை அதன் தொடர்ச்சியை நாம் அனுபவிக்கிறோம்.அவர்கள் அந்த விடயத்தில் மிக தெளிவாகவே உள்ளார்கள்.அன்றுதமிழில் பாடிய தேவாரங்களை எல்லாம் தலையில் வைத்துக் கொண்டாடினார்கள்.அது அன்றை அவர்களது தேவை. இன்று தமிழில் அதே தில்லையில் தமிழில் பாடிய சிவனடியாரை அடித்து முறித்தார்கள்.அன்று மன்னன் அவர்களுடன் சேர்ந்து தமிழிசையை அழித்தான் என்றால் இன்று நாம் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதையும் வருங்கால சந்ததியினர் நாமும் சேர்ந்து தான் அழித்தோம் என்பார்கள்.

    உங்கள் பின்னூட்டங்கள் இவை தொடர்பான என் ஆவலை மேலும் ஊக்கியுள்ளன.
    நன்றி வணக்கம்.

  9. வாலி says:
    15 years ago

    நான் அப்போ புதிது, ஒரு உணவகத்துக்கு அத்தார் கொண்டு வேலைக்கு சேர்த்திருந்தார் ,கோப்பை கழுவும் வேலை .வேலை குறைவான நேரத்தில் ஒருசாக்கு வெங்காயத்தை கொண்டுவந்து போட்டு உரித்து சுத்தம் செய்யச்சொல்லி இந்தியன் குக். கிச்சினுக்குள்ளிருந்த ரேப் ரைக்கோடரை ஓன் பண்ணிவிட்டு பாட்டைக்கேட்டுக்கொண்டு குயிக்கா வேலையை முடிக்கச்சொல்லி போய்விட்டார், நல்ல பாட்டு ஹிந்தியோ தெலுங்கோ மொழி புரியவில்லை ராகமும் அந்தமெலோடியும் இதமாக இருந்தது. வேலை சுறுக்காக முடிந்துவிட்டது, அங்கு வேலைசெய்த தமிழ் நண்பன் வந்து அவசரப்படாதை மெல்லமாய் செய், கெதியா முடிச்சியெண்டால் அடுத்த வேலைதருவாங்கள் என்று அதட்டிவிட்டுப்போனார், (அவர் கூறியதன் அர்த்தம் எனக்கு அப்போ தெரியவில்லை , எனது சுறுசுறுப்பு தன்னை பின்னுக்குத்தள்ளிவிடுமோ என்ற பொறாமை என்பது பின்பு அறிந்தேன் ,)பாட்டைக்கேட்டுக்கொண்டு கையை சும்மா வைத்திருக்காமல் சில வெங்காயங்களை கோது கோதாக உடைத்தேன் கடைசிவரை வெங்காயத்துள் ஒன்றுமில்லை என்பதை அறிந்தேன் ஆனால் கண் எரியும் என்பதையும் பாடலின் இதத்தையும் நன்கு அறிந்துகொண்டேன்,

  10. thurai ilamurugu says:
    15 years ago

    ந்ணபர் சவு ந்தர் தன்னுடைய கட்டுரையை முடித்துக் கொண்டதாகச் சொல்லிவிட்டார் ஆயின் வாததை தொட்ர்வது நல்லது என்று நினைக்கிறேன் .
    ராச ராச் சோழன் தன்னுடையை காலத்தில் நடந்தசிறு நிகழ்வுகளையும் கல்வெட்டுகளாக்ப் பதித்து விட்டு சென்றுள்ளான் தன்னுடைய கோவிலில் பணிபுரியும் ஆடற் பெண்டுகள் முகவரி முதல் அவர்களுக்கு எத்தனை மரக்கால் நெல் கொடுக்கவேண்டும் . என்த மரக்காலால் அளக்க்வேண்டும் , தான் வடித்த செப்பு மேனிகளின் சிலை அதன் உயரம் அகலம் எடை இதுபபோன்ரற தகவல்களைக் கூட துல்லியமாக குறித்த மன்னன் . தன்னுடைய காலத்தில் தேவாராத்தை மீட்டது குறித்து எழுதாமல் விட்டிருப்பானா/வாத்த்திற்கு பொருத்த்மாக இல்லையே .
    நம்பி , பொல்லப் பிள்ளையார் கதையை நானும் சிறு வயது முதல் கேட்டு வருகிறேன் ஆனால் சான்றுகளதான் கிடைக்கவில்லை உமாபதி சிவாச்சாரியரை விட சேக்கிழார் உண்மையைச் சொல்லக்கூடியவர் என்பது எமது கருத்து அபயகுல சேகரன் என்றால் தேவாராத்தை மீட்டவன் என்று பொருளா விளங்கவில்லையே / அது செல்க
    கருனாடக் இசையை மிக்க உழப்பை செலுத்திமீட்டாலும் அதன் பலன் வெகு சனங்க்ளுக்கு போய் சேராது என்பது எனது வாதம் எப்படியுரு ந்தாலும் பழமையை மீட்டுத்தான் எடுப்பன என்று முயல்வோருக்கு எமது வாழ்த்துகள் கரு நாடக / தமிழ் இசையி இருந்து பக்தியைப் பிறித்து எடுத்தால் ஒன்றும் மிஞ்சாது மிஞ்சுவதும் மக்களுக்குப் பயந்த்ராது / பேத்தொவனின் கடைசி சிம்பொனியை மேல் நாட்டினரில் மேட்டுகுடியனர் மட்டுமே ரசிகின்றனர் பாப்பிசை அப்படி இல்லை கலக இசை அனவ்ருக்கும் புரிகிறது பீட்டில்ஸ் முதல் மைக்கேல் ஜஷ்சொன் வரை மக்கலளுக்குப்,புரிகிறது பிடிக்கிறது ஏறத்தாழ
    அந்த நிலயில் உள்ள திரை இசையை ப் ப்யன் படுத்தாமல் கரு நாட்க இசையை மீட்டுக் கொணர்வது பழமை வாத்தைப் புதுமையாக காட்ட முயலும்முற்சியாகும் சொல் புதிது , சுவை புதிது என் நவ நவமாய் க் கலைச் செல்வங்களைக் கொணரச் சொன்னான் பாரதி. இல்லை என் பாட்டன் கிணறு உப்பாய் இருந்தாலும் அதைதான் உண்பேன் என்பது அவர்ரவர் விருப்பம்
    புஷ்பவனம் கச்சேரிக்கு 30,000 வாங்கு வதிகல் தவறீல்லை ஒரு பாட்டுக்கு பல இல்லகம் வாங்கும் பாட்கி/ப்படகர்கள் உள்ளனர்
    பாதி கூட நிரம்பாத கரு நாடக் இசை அரங்குளை கண்ட எவரும்தை ஒரு வெகு சனங்களுக்கு உரிய கலைய்யாக் க் கருதமட்டர்ர் மேலாணமைச் சாதியிணரும் , மேட்டுகுடி மக்களும் கரு நாடக இசையை பார்பனர்களைட்மிரு ந்து காத்து தமிழரின் இசை என்று நிலை நிறுத்த முயன்றால் எமக்கு அக்கறை இல்லை எப்படி தமிழர் என்பது
    வர்க்கங்களுக்கு அப்பற் பட்ட ஒன்று இல்லையோ அது போன்றே தமிழ் இசை என்பதும் வர்க்கஙகளூக்கு அப்பாற்பட்ட ஒன்று அல்ல :

  11. செல்வன் says:
    15 years ago

    சௌந்தரும்,துரை இளமுருகுவும் ஏறத்தாழ ஒரே விஷயத்தை சொல்லுகிறீர்கள்.எந்த ஒரு உயர்ந்த கலையையும் ரசிப்பதற்கு பரீட்சயம் மிகவும் அவசியம் .பழைய தமிழ் இலக்கியங்களை படித்து புரிந்து கொள்ள முயர்ச்சியும் ,உழைப்பும் மிகவும் அவசியம். ஒரு முயர்ச்சியும் இல்லாதவர்கள் இசையையும் ,இலக்கியத்தையும் மதிப்பிடுவதேன்பது ஒருவருடன் பழகிப் பாராமல் “அவரை கெட்டவன்” என்று முத்திரை குத்துவது போன்றதாகும்.
    துரை இளமுருகு ,உங்களுக்கு இலக்கியத்தில்அதிக ஈடுபாடு உள்ளது. “இவட்ற்றைஎல்லாம் படித்து என்ன பிரயோசனம் “என்று கேட்ட்ப்பவர்கள் தான் நம் மத்தியில் உள்ள பலரும்.
    நல்ல கட்டுரை.எழுதிய சௌந்தருக்கு நன்றி.

  12. Ramea says:
    15 years ago

    When the great leader Selva approached EVR, he told him that the Tamil in India are slaves of Delhi and a slave can not help another slave. The total Tamil people forgotten these words of Periyar. That is the reason we are failing in all fronts including Tamil Ealam issue.

    The logic we should always remember and propagate is that all brahmins are not intellectuals. There are people with different level of I.Q from bottom to top within brahmins. Similarly there are people with different level of I.Q from bottom to top within other communities. But, when education and job opportunities are concerned lion share is taken away by brahmins in the guise of competency. It is perfectly against natural justice and solid proof that the system is fault and it allows incompetent people only to climb up. In order to clean the system, proportionate reservation for F.C., B.C., S.C. S.T. and Religious minority in proportion to their population should be given. By this system the brahmins whose I.Q. is low should be forced to do unskilled low paid jobs. Similarly oppressed people whose I.Q is high should be given top level jobs. if the jobs at all levels are not represented by people of all communities it should be clearly declared that malpractices have been played. Those who don’t accept low I.Q brahmins for low level jobs or that there is no brahmin with low I.Q. they should be declared as criminals against nation. It is not enough, if oppressed people are given place at decision making level. it should be clearlay ensured that brahmins are not over represented at decision making level. Unless we complete this duty, all our other exercises will meet only failure. So, first let us relieve ourselves from all other unnecessary works and concentrate only on proportionate reservation for F.C., B.C., S.C., S.T.& Religious minorities according to their population at all levels.

    Why I am pointing out here is there is no use of arguing whether Karnatic music is of Tamil origin or else. All arguments however truth / logic / strong (and what not) they may be, it will be of no use as far as net result for the oppressed class people.
    If only we succeed to snatch our share in the nations wealth and only if the brahmins (whose I.Q. is less) are forced to do low level jobs correct and good decisions will be taken and implemented.. If we don’t succeed in this issue then we will never succeed in any issue. Please remember that Tamil Ealam failed only because brahmins did not like it and only brahmins and people subverted to them alone are at decision making level.

    Please understand Periyar’s words in letter and spirit.

  13. செல்வன் says:
    15 years ago

    When the great leader Selva approached EVR, he told him that the Tamil in India are slaves of Delhi and a slave can not help another slave. The total Tamil people forgotten these words of Periyar. That is the reason we are failing in all fronts including Tamil Ealam issue.

    Please understand Periyar’s words in letter and spirit.

  14. thurai ilamurugu says:
    15 years ago

    நானும் நண்பர் சவுந்தரும் ஒரெ விடயத்தை சொல்லுவதைப்ப்போல் தோன்றினாலும் இரண்டிற்கும் மிக்க் வேறுபாடு உணடு
    1 சவுந்தர் எப்பாடு பாட்டயினும் கருடாக இசை / தமிழ் இசையை மீட்டு தமிழப் படுத்த வேண்டும் என்கிறார்
    நான் அது தேவை இல்லை எனகிறேன். ஏன்?
    1 அதில் இருந்து பக்தியையும் பார்ப்பனியத்தையும் , நீக்கிவிட்டால் மிஞ்சுவது வெறும் சக்கையாகத்தான் இருக்கும்
    2 அதைவிட க்வனத்தில் கொள்ளவேண்டியது அது வெகு சணங்கக்ளுடைய ஊடகம் அன்று மிக உழைப்பையும் பயிற்சியையும் செலுத்திதான் ஒரு ஊடகதை /இசையை ரசிக்கமுடியும் என்றால் அது வெகு சணங்கக்ளுக்கு உவப்பாயிருக்காது அதற்கான நேரமும் பொறுமையும் இ ந்த கணினி உலகில் கிடைய்யாது. என்வே மீட்டாலும் அது மக்களுக்கு பயன் பட்ப்போவதில்லை .
    3 அதற்கு மாற்றக ஒரு இசை வடிவம் ஆயதத்மாக திரை இசை என்ற வடிவில் உள்ளது அதைப் பயன் படுத்திக் கொள்ளுதல் எளிது . மக்களிடம் எளிதில்போய்ச் சேரும்
    இலக்கிய உலகில் இசை , இலக்கியம் இவை துய்ப்பதற்காக்வே .அது வெகு சிலருக்குத்தான் முடியும் அதுவே உயர்ந்தது .வெகு சணங்கக்ளுக்கு புரியாது
    புரிந்த்து விட்டால் அது சிறன்த இலக்கியமே/ இசையே அல்ல என்ற ஒரு கருத்து உண்டு
    இதற்கு மாற்றாக வெகு சணங்கக்ளுக்கு சென்று அடைவதே இலக்கியத்தின் பணி. வெகு சணங்கக்ளுக்கு மகிழச்சியையும் , புரிதலையும் . அவர்கள் உணர்வு நிலையினை மேம்படுத்தாத இலக்கிய/ இசை வடிவம் முன்னிறுத்தபட வேண்டிய தேவை இல்லை என்று இர்ண்டு பிரிவுகள் உண்டு நான் இரண்டாம் வகை நண்பர் சவுந்தர் முதல்வகையை சேர்ந்தவராய் இருக்கலாம்
    பழைய இலக்கியங்களுடன் எமக்கு ஈடுபாடு உணடு என்பது உண்மையே. . பழைய இலக்கியங்களைக் கற்றால்தான் பழமை வாதிகளின் கருதுகளீல் உள்ள பொயகளைக் கண்டுபிடிக்கமுடியும் என்பதற்காக்வே அதை நான் கற்று வருகிறன் மற்றபடி அதைக் கற்றல் தான் தமிழுக்கு விடியல் கிடைக்கும் என்ற கருத்து எல்லாம் எனக்கு கிடையாது

  15. thurai ilamurugu says:
    15 years ago

    பெரியார் ஈழம் பற்றி சொன்ன்து . “ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது” என்பது ஆகும் இதை அவர் 1974இல் சொன்னார் அப்பொது
    முதல்வர் கருணாநிதான் அவரையும் சேர்த்து தான் சொன்னார் அது தான் உண்மையும் கூட. தமிழ் நாட்டின் என்த முதல்வரும் நடுவண் அரசின் கொள்கை முடிவுகளூக்கு மர்றாக எந்த செயலும் செய்யமுடியது பெரியார் சொன்னதில் உள்ள உண்மையின்/ நேர்மையின் சூடு தாங்கமுடியாத தமிழ்த் தேசியர்களும் ஈழத்தமிழர்களின் நண்பர்களைப் போல் நடிப்ப்வர்களும் பெரியாரை வடுகன் வன்தேறிஎன்று வசை பாடி
    வருகின்றனர் கருணானிதியும் பெரியாரின் மேற்கோளை அடிக்கடிசொல்லுவது உண்டு ஆனால் அதில் நேரமைகிடையாது . நடுவண் அரசில் பங்கு வ்கிப்பதால் மட்டும் அதன் கொளகை முடிவுக்ளை மாறறி அமைத்து விட முடிய்யாது . அவர் அங்கு அதிக சமபலளம்/ கிம்பளம் வாங்கும் ஒரு சிறப்பு அடிமை அவ்வளவுதான்

    • THAMILMARAN says:
      15 years ago

      அடிமைதான் இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் ஏனெனில் இன்னொரு அடிமையால்தான் அடிமையின் உணர்வைப் புரிய முடியும்.தமிழகத்தின் ஆதி திராவிடரும்,நாயுடுக்கலும் புலிகள ஆதரித்ததும் இதே உணர்வால்தான்.

  16. thurai ilamurugu says:
    15 years ago

    புரிந்து கொள்ளுவது, ,ஆதரிப்பது வேறு உதவுவது வேறு இரண்டிற்கும் இடையே நிறைய வேறுபடு உண்டு
    நாம் அதரிக்கும் அனைத்திற்கும் புரிந்துகொள்ளும் அனைத்திற்கும் உதவிட முடியாது ஆதரிப்பது என்றால் என்ன ?கூட்டம் போடுவதா? தீக்குளிப்பதா/ இதுகளினால் ஈழத்தமிழருக்கு பயன் ஏதும் இல்லை மறாக முடிவு துரித்தப் படுத்தப் படும் என்பதைத்தான் அண்மக்கால நிகழ்வுகள் சுட்டுகின்றன . இது தமிழ் நட்டு அரசியலுக்கு உதவக் கூடும் ஆனால் ஈழத்தமிழருக்கு ஒரு ப்யனும் இல்லை .

  17. சங்கரன் says:
    15 years ago

    பழைய இலக்கியங்களுடன் எமக்கு ஈடுபாடு உணடு என்பது உண்மையே. . பழைய இலக்கியங்களைக் கற்றால்தான் பழமை வாதிகளின் கருதுகளீல் உள்ள பொயகளைக் கண்டுபிடிக்கமுடியும் என்பதற்காக்வே..

    துரை இளமுருகு

    அப்படி என்ன பொய்களை கண்டீர்.? விளக்க முடியுமா ?

    • THAMILMARAN says:
      15 years ago

      வால்மீகியின் ராமர் கதையை தமிழர் வாழ்வியலோடு இணத்தான் கம்பன்.பீட்டில்ஸீல் இருந்த லெனின் புரட்சிக்குரலாய் இருந்ததால் கொல்லப்பட்டான்,பொப் மார்லிக்கும் இதே நிலை.இலக்கியம் மக்களீன் குரல.கற்பனையாகவும் வெறூம் கதையாகவும் இருந்தால் இன்றூ யாரும் இலக்கியம் பற்றீப் பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.இதே காரணமே முருகபூபதி கொழும்புவில் இலக்கிய மகாநாடு நடத்தும் போது எதிர்ப்புக் குரலாகிறது.இலக்கியம் கற்பனை எனில் இலக்கியவாதிகள ஆதிக்கவாதிகள் சிறயிடுகின்றன்ர்.புதுவை கொல்லப்பட்டது ஏன்?இலகியம் மக்களீன் வாழ்க்கை மட்டுமல்ல ம்க்களீன் வாழ்க்கையையும் மாற்றூம்.தமிழ்மாறன்.

      • thurai ilamurugu says:
        15 years ago

        எல்லா இலக்கியக்ங்களும் கற்பனை தான் அதில் மக்களுக்கு உரிய தேவையான செய்திகள் அது மக்கள் இலக்கியமாக மாறுகிறது அது நிலைத்து வாழக் கூடும் நாம் பேசிக் கொண்டிருப்பது ப்ழம் இலக்கியங்களைப் பற்றி அதில் மக்கள் முன்னேற்றத்திற்கான கூறுகள் மிகக் குறைவு திருக்குறல் ஒரு விதி விலக்கு .
        கம்பன் காட்டியதமிழர் வாழ்வியல் என்ன விள்ள்குவரா தமிழ் மாறன்?

  18. thurai ilamurugu says:
    15 years ago

    நிறைய சொல்லலாம் எ. கா 1 கண்ணகி தன்னுடைய முலையைத்திருகி எறிந்து மதுரையை எரித்தாள் 2 தன் இறந்த கோவலனுடன் வானவூர்தி ஏறி வானுலகம் சென்றாள் சொல்லிகொண்டே போகலாம்

  19. சங்கரன் says:
    15 years ago

    துரை இளமுருகு ,

    //அது மக்கள் இலக்கியமாக மாறுகிறது அது நிலைத்து வாழக் கூடும் …//
    அப்போ மகாபாரதத்திலும் ,ராமாயணத்திலும் இன்றும் மக்களுக்கு தேவையான செய்தி உண்டு என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளுகிறீர்களா ?அப்படி இல்லை என்றால் அது எப்படி நிலைத்து நிற்கிறது.?

    தமிழ்மாறன்
    தமிழ் சூழலில் எவ்வாறு இலக்கியம் மக்களை மாற்றியுள்ளது ?கொஞ்சம் விளக்குங்களேன்.

  20. thurai ilamurugu says:
    15 years ago

    மகாபரதத்திலும் ராமாணயத்திலும் கடவுள் கொள்கைகள் உள்ளன மக்களில் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அதனால் அன்த ” இலக்கியங்கள் ” நிலைத்து நிற்கின்றன அவை இலக்கியம் என்பதற்காக் இல்லை அவை கடவுள் , பக்தி நெறியைப்
    பரப்புகின்றன எனதற்காவே நிலைத்து நிற்கின்றன பார்பனர்கள் அவற்றை நிலை பெறச் செய்து விட்டனர்
    தமிழச் சூழலில் இலக்கியம் மக்களை மாற்றியிருக்கிறது/ அல்லது ஏமாற்றி இருக்கிறது இதற்கு எடுத்துக்காட்டுகள் தேவை இல்லை என்று எண்ணுகிறேன்

    • Shiva says:
      15 years ago

      துரை இளமுருகு
      உங்கள் கூற்றுக்கு ஆதாரம் என்ன?

      ராமாயணமும் அதினும் முக்கியமாகப் பாரதமும் அவற்றின் கதைச் சுவைக்காகவே பேசப்பட்டும் பரவியும் வந்தன.
      மதம் அவற்றின் மீது ஏற்றப்பட்டது இன்னொரு விடயம் என்றே உலகின் மகா காவியங்கள் பற்றிய எனது சிற்றறிவு உணர்த்துகிறது.

      கர்நாடக இசையிலிருந்து பார்ப்பனியத்தை நீக்கினால் அது வெறும் சக்கையாகி விடுமா? ஏவ்வாறு?
      பார்ப்பனியம் மறுத்த தமிழ் அடையாளத்தை மீட்டால் அதுவும் கேடாகி விடுமா? எவ்வாறு?
      இசை சமகாலத்தைப் பற்றிப் “பேச” முற்பட்டால் அதுவும் இசைக்குக் கேடாகி விடுமா?

      மதம் இல்லாமல் கர்நாடக இசைக்குக் கீர்த்தனங்கள் பல இல்லாமற் போகலாம். அதனால் இசை இல்லாமற் போய்விடுமா? புதியன ஆக்குதற்குத் தடையாய் இருப்பது எது?

  21. சங்கரன் says:
    15 years ago

    நீங்களும் முன்னைய சிலர் போல” பார்ப்பான் “என்று புலம்புகிறீர்கள் .அவர்கள் மக்களுக்கு தேவையானதை கொடுக்கிறார்கள் உங்கள் வார்த்தையில் …” வெகு சணங்கக்ளுக்கு மகிழச்சியையும் , புரிதலையும் . அவர்கள் உணர்வு நிலையினை மேம்படுத்தாத இலக்கிய/ இசை வடிவம் முன்னிறுத்தபட வேண்டிய தேவை இல்லை…”
    அப்போ நீங்கள் பேசும் “இடதுசாரி ” அரசியல் மக்களிடம் சென்றடையவில்லை.அப்போ இங்கு கத்திக்கொண்டிருக்கும் சில “இடதுசாரி “அன்பர்களுக்கு இது புரியவில்லை. மக்களுக்கு புரியாத மாக்க்சியம் தேவைய்ல்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா ?

    • Ramea says:
      15 years ago

      பார்ப்பனர்கள் மக்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்கவில்லை. மக்கள் மயங்கி தங்கள் உரிமைகளை உணராமல் இருக்கும்படியாக மயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இது ஆரோக்கியமானது அல்ல. இதை எதிர்த்துத் தான் சுதந்திரம் வேண்டுவோர் போராடுகின்றனர். சங்கரன் போன்ற பார்ப்பனர்கள் / பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங்களைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் எங்கள் சுதந்திர வேட்கைக்கு எதிராகத் தொடுக்கும் அம்புகள் தான் இவை போன்ற கருத்துகள். என்ன செய்வது? நீங்கள் வலிமையாக இருக்கிறீர்கள். எங்கள் மக்களுக்கு உண்மையை உணர்த்தி அனைவரும் நன்றாக வாழும் ஆரோக்கியமான சமுதாயத்தை அமைக்க வலிமையைக் கூட்டு;ம் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு வலிமை குறைவு தான்.

  22. சங்கரன் says:
    15 years ago

    எங்கே இளமுருகு போய்விட்டீர்கள.?

  23. thurai ilamurugu says:
    15 years ago

    இளமுருகு எங்கும் போகவில்லை
    மக்களுக்கு தேவையானது எது ? பர்ர்பனர்கள் எதைக் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள் என்பது எல்லொரும் அறிந்த்ததே . இடது சாரி அரசியலைப் புரின்துகொள்ளவில்லை என்று எப்படிமுடிவு செய்தீர்கள்? இடதுசரிகள் தங்களை தனிப் பெரும் சக்தியாக் வளர்த்துக் கொள்ளுவதற்கு அதில் கூட்டணி என்று அலைந்து தங்களுடைய வாய்ப்பினை நழுவவிட்டனர் இந்தியா
    சுதந்திரம் அடைந்தபோது இடது சாரிக்ளே காங்கிரசுக்கு கு மாற்றான சக்தியாக இருந்தனர் பிறகு வாயப்பு கை மாறிவீட்டடது வல்து இந்து தீவிர வாதம் அதன் இடத்தைப் பிடித்துக் கொண்டது இதில் மார்க்சிய தத்துவப் புரிதல் எங்கே வந்ததது. மக்கள் கட்சிகளின் கொளகைகளைப் புரி ந்த்த் கொண்டு அல்ல, அவர்களின் அண்றாட நடவடிக்கைகளைக் கண்ட பின்ன்ரே ஒரு முடிவிற்கு வருகின்றனர். அவர்கள் உஙளை விட அறிவு மிக்கவர்கள்

  24. சங்கரன் says:
    15 years ago

    இளமுருகு

    // மக்கள் கட்சிகளின் கொளகைகளைப் புரி ந்த்த் கொண்டு அல்ல, அவர்களின் அண்றாட நடவடிக்கைகளைக் கண்ட பின்ன்ரே ஒரு முடிவிற்கு வருகின்றனர் ..///
    பகுத்தறிவுவாதமும் ,பொதுவுடைமைவாதத்தையும் நிராகரித்த மக்களையா இங்கே சொல்கிறீர்கள் ?

    Ramea !
    ..//..மக்கள் மயங்கி தங்கள் உரிமைகளை உணராமல் இருக்கும்படியாக மயக்கிக் கொண்டிருக்கிறார்கள்…//
    என்கிறீர்கள் முடிந்தால் நீங்களும் மயக்குங்களேன் !! இசைக்கு அந்த வல்லமை உண்டல்லவா !!!

    • Ramea says:
      15 years ago

      மக்களை மயக்குவது எங்கள் நோக்கமல்ல. அவரவர்கள் அவரவர்களுடைய உரிமைகளை அடைய வேண்டும் எள்பதே எங்கள் நோக்கம்.
      ஒரு சிறிய உண்மையைப் பார்ப்போம். பார்ப்பனர்கள் அனைவரும் அறிவாளிகள் அல்ல. அவர்களில் பல்வேறு நிலைகளில் அறிவுத் திறன் உள்ளவர்கள் இருக்கிறார்கள். இது போலவே அனைத்து வகுப்பு மக்களிலும் பல்வேறு நிலைகளில் அறிவுத் திறன் உடையவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதிகாரம். பணம். உடல் உழைப்பு தேவைப்படாத தெழில்களைப். பார்ப்பனர்களே சுருட்டி வைத்துக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்? இதனால் நாட்டில் திறமையற்றவர்கள் மேல் நிலைக்குச் செல்வதற்குப் பொதுப் போட்டி முறை வழி வகுக்கிறது என்று புரியவில்லையா? திறமையற்றவர்கள் உயர்நிலைக்குச் செல்வது நாட்டின் நிர்வாகத்தைப் பாழடிக்கும் தேசத் துரோகச் செயல் அல்லவா?
      இப்படிப்பட்ட தேசத் துரோக வழிமுறைகளைக் களைந்து பார்ப்பனர்களில் திறமை குறைந்தவர்கள் கீழ் நிலைப் பணிகளில் இருந்து தப்பிவிடாதபடி செய்ய என்ன செய்யப் போகிறீர்கள்? அப்படிச் செய்யத் தயாராயில்லை என்றால் அது தேசத் துரோகம் அல்லவா?
      அதைவிட்டுவிட்டு வேறு எதை எதையோ ஏன் பேசுகிறீர்கள்?

      ஒடுக்கப்பட்ட மக்களே. பார்ப்பனர்களும் அவர்களிடம் விலைக்குப் போனவர்களும் இவ்வுண்மைநிலையைப் பற்றிக் கவலைப் படமாட்டார்கள்.நாம் தான் உண்மையை உணர்ந்து நமது போராட்டங்களைச் சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும்.

      பார்ப்பனர்களில் நல்லவர்கள் இருந்தால் திறமையற்ற பார்ப்பனர்களை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும் இப்போதைய பொதுப் போட்டிமுறைக்கு மாற்று ஏற்பாட்டைக் கொண்டு வரட்டும். பார்ப்பனர்கள் என்பதற்காகவே மேல்நிலைக்குச் செல்ல முடிவதைத் தடுக்கட்டும். திறமையிருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதற்காக வழி கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்கு வழி கிடைக்கும்படி செய்யட்டும். அதை விட்டுவிட்டு தேவையில்லாதவற்றைப் பேசி தாங்கள் தேசத் துரோகிகள் என்று பறைசாற்றிக் கொண்டு இருக்க வேண்டாம்.

      இராமியா

  25. thurai ilamurugu says:
    15 years ago

    பார்ப்பனியதை மட்டும் அல்ல பக்தியியைம் நீக்கிவிட்டால் அது சக்கை என்பது என்னுடைய கருத்து நீங்கள் பார்ப்பனியத்தை மட்டும் எடுத்துக் கொண்டீர்கள் . ராமனும் , கிருட்டினணனும் திரொபதியும் கடவுளாக வணங்கப் படும் நாட்டில் ராமயணமும் மகாபாரதமும் கவிதைச் சுவைக்கக கொண்டாடப் படுகிறது என்று நீங்கள் எண்ணிணால் உங்கள் அறிவு உண்மையிலேயே சிற்றறிவு தான்

    சன்கரன் மக்கள் பகுததறிவுவையும் பொது உடமைக் கருத்தையும் ஏற்றுக் கொலள்ளவில்லை என்றால் அது கருத்தின் பிழயன்று , அக்கருதினைப் பிழைப் பட எடுத்து சொல்லப்பாட் விதமே ஆகும். ஆம் பகுத்தறிவை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று எப்படி சொல்லுகிறீர்கள்

    • Shiva says:
      15 years ago

      விவாதம் பார்ப்பனியம் பற்றியது என்பதாலேயே அதை மட்டும் குறிப்பிட்டேன். பக்திக்குக் பார்ப்பனியத்துக்கும் பெரும் முரண் உள்ளது.
      பக்தி என்று கருதப்படுவதை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள் “பேரறிஞரே”!
      அதனால் என் கருத்து பாதிக்கப் படாது.

      “கவிதைச் சுவைக்கக கொண்டாடப் படுகிறது” என்று எங்கே சொன்னேன் “கதைச் சுவைக்காக” என்றல்லவா சொன்னேன். அக் கதைகளின் பரவலும் உபகதைகளின் சேர்ப்பும் மதநோக்கை விட விசாலமான பரிமாணங்கள் கொண்டவை. அவ்வாறே, சடங்குகளும் கூத்துக்களும் பல வேறு கலை வடிவங்களும் ஒற்றைப் பரிமாணமுடையவையல்ல.

      தமிழிசை (கர்நாடக இசையும் தான்) மத அடிப்படயில் தோன்றி வளர்ந்ததல்ல. மதமும் பார்ப்பனியமும் அதைப் பயன்படுத்தின. அந்தப் பரிமாணங்களை மீறியும் தமிழிசைக்கு ஒரு வலுவன தளமும் மேற்கட்டுமனமும் உள்ளன. நீங்கள் சாரத்தையும் சக்கையையும் தவறாக மாற்றிப் புரிந்துகொண்டீர்கள் போலுள்ளது.

      இவை போக, உங்கள் கூற்றுக்களுக்கான ஆதாரங்களைக் கேட்டேன். தருவீர்களா?

      • thurai ilamurugu says:
        15 years ago

        கதைச் சுவை என்று வைத்துக் கொண்டலும் அவைப் பக்தி சார்ந்தகதைகள் என்பதற்காகவே நினைவுக் கொள்ளப்படுகின்றன இன்தியாவில் நிறைய கதைகள் உண்டு புத்தரின் ஜாதகக் கதைகள் பஞ்ச தன்திரக்கதைகள் இவைகளுக்கு மகாபாரத ராமாயணம் போல் சிறப்பு உண்டா? வீணே கதைக்க வேண்டாம்
        தமிழிசை பாடிய மூவர் என்று கதை அளக்கிறிர்களே அவர்கள் புரட்சிப்பாடல்களயாப் பாடிவிட்டார்கள் அதே கடவுள் பாடல்கள் தனே . அதே கமப ராமயணத்தைத்தானே அருணாச்சலக் கவிராயர் பாடினார் அதற்கு என்ன இவ்வளவு சத்தம் தமிழில் பாடினால் ராமாயணம் உன்ன்த கதை ஆகிவிடமுடியுமா> ஒருவன் மனவியை ஒருவன் தூக்கிக் கொண்டு ஓடிய கதைதானே அதில் என்ன சுவைக் கண்டீர்கள் மாபெரும் அறிஞர் திலக்மே? 5 பேருக்கு ஒரு மனைவி அது போதாதது என்று கர்ணனையயும் விரும்பிய கதை உமக்கு
        பிடிந்திருந்தால் வைத்துக் கொள்ளுங்கள் தமிழ் நாட்டில் இது எல்லாம் பற்றிக் கவலைப்படாமல் திரொபதைக்கு தீமிதி கொண்டாடி கொண்டிருகிறோம் அது திரோபதை கர்ணனை விரும்பிய கதைக்காக என்று எண்ணுகீறீர்கள் போல

        • THAMILMARAN says:
          15 years ago

          தணீணீர் லாரியில் முட்டி மோதினால் நட்டம் நமக்கே எனக் குமுதத்தில் எழுதியிருந்தார்கள்.நீங்கள் உங்கள் கெட்டிக்காரத்தனத்தை மட்டுமே காட்ட விளவைதால் உங்களால் நமது நம்பிக்கைகளீல் இருக்கும் உண்மை புரியவில்லை இதையே பெரியாரும் செய்ததால்தான் தமிழன் இன்னும் மொட்டையாகவே இருக்கிறான்.ஆனால் இந்த அறீவிசார்ந்த வாதம் எனக்குப் பிடிக்கிறது கோப்பி தீர்ந்து விடுவது தெரியாமலே அமர்ந்திருக்கிறேன்.

  26. செல்வன் says:
    15 years ago

    “அது கருத்தின் பிழயன்று , அக்கருதினைப் பிழைப் பட எடுத்து சொல்லப்பாட் விதமே ஆகும் “என்று சொல்ல வரும் துரை இளமுருகு அப்படி என்றால் கரநாடக இசை பெரும்பாலான மக்களின் ரசிப்புக்குரியதாக இல்லாமல் இருப்பதற்கும் நீங்கள் எழுதிய கருத்து பொருந்துகிறது அல்லவா ?

  27. thurai ilamurugu says:
    15 years ago

    ஏறக்குறைய நீங்கள் சொல்லுவது சரிதான். பக்தியை தவிர்த்துவிட்டு , தியகராசர் ஆரராதனையை நிறுத்திவிட்டு , தமிழிலில் மட்டுமே படுவேன் என்று சுதா ரகுநாதன் வகைய்றாக்கள் வருவார்கள் என்றால் , சேரிகளிலும் சிறு நகரங்களிலும் பாட வன்தால் , அத்தைக்கு மீசை முளைதால் கரு நாடக இசை தமிழ் நாட்டில் பல்கிப் பெருகுவதில் நமக்கு ஒன்றும் தடையில்லை ஆனால் அது ஒரு போதும் நடவாது . கரு நாடக் இசையைக் கற்றுக் கொண்ட தமிழனும் ஒருபுதிய பார்ரப்பன ஆக மாறுவானே தவிர பார்பனன் ஒருபோதும் மக்களூக்கு என்று தங்களின் பார்ர்பனிய இசைவடிவத்தை விட்டுக் கொடுக்கமாட்டர்கள் அவ்வ்வறு செய்ய முயலுவது ஒரு வீண் முயற்சி

  28. Shiva says:
    15 years ago

    எது நல்ல முயற்சி எது வீண் முயற்சி என்பதைத் தமிழிசையின் எதிர்காலம் பற்றிச் சிந்திப்போர் எடுத்துக் கொள்ளட்டும்.

    இசை என்பதற்கு ஒரு சமூக-அரசியற் பரிமாணம் உண்டு. பழையதில் இருந்து எதைக் கொள்ளுவது எதைத் தள்ளுவது என்பதும் புதிதாக எதை ஆக்குவது என்பதும் தமிழிசை இயக்கம் எதிர் நோக்கும் சவால்கள். (அங்கும் பழமைவாதத்துடனும் பிற்போக்குச் சிந்தனையுடனும் போரிட நேரும்).

    எனினும், மூன்றே மூன்று பேரின் சாகித்தியங்களே கர்நாடக இசையின் முழுமையும் என்று தானே நமக்குச் சொல்லப்ப் பட்டது.
    சினிமாத் துறையிலேயே எத்தனை பேரின் பாடல் இயற்றும் பேராற்றலும் புலமையும் வீணாகிறது.
    எனவே வளமான ஒரு புதிய தமிழிசைப் பாடற் தொகுப்பைக் கட்டியெழுப்புவது ஆகாத விடயமல்ல.
    போராடாமல் எதுவும் வெல்லப் பட்டதுமில்லை

    • thurai ilamurugu says:
      15 years ago

      ஆமாம் அன்றாடம் நாம் கேட்கும் தமிழ் திரை இசையின் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு?அதைப் பாமரனும் கேட்கிறான் நாமும் கேடப்தா என்ற மேட்டிமைதனமா? ஏன் புலமை வீணகவேண்டும்/ 1940 களில் இருந்து தமிழிசைப் பற்றி முழக்கம் எழுப்பபடு கிறது இது வரை எத்தனை தமிழ்க் கீர்தனைகள் இயற்றப் பட்டன? வைரமுத்துவையும் வாலியையும் கீர்த்தனை எழுத்வேண்டாம் என்று தடுத்த்வர் யார்? இன்னும் அருணாசாலக் க்விராயரையே தொங்கி கொண்ட்ருப்பது ஏன்? பாரதிதாசன் பாட்டை தமிழசைக் கச்செரிகளில் கேடிருக்கிறிர்க்ளா? பாரதியைப் பாடுவார்கள் அதையும் சிதைதுப் பாடுவர்கள் பாரதி பள்ளுப்பாட்டு மெட்டு என்று திருத்மாக எழுதிவைத்தாலும் நீட்டி முழக்கி அதன சாரத்தைக் கொன்று விட்டு தான் பாடுவார்கள் எ. கா “ஆடுவோமே ப்ள்ளுப் பாடுவோமே” விடுதலைப் பாட்டை பக்திபாட்டைப்போல் சினிமவில் பாடிவிட்டார் டி கே பட்டம்மாள் அதற்கு மேல் நீங்கள் அதிலிருந்து எதை மீட்கப் போகிறிர்கள்?

    • Shiva says:
      15 years ago

      thurai ilamurugu
      தயவு செய்து எல்லாவற்றுக்கும் வலிந்து பொருள் கொள்ளாதீர்கள்.
      நான் ஏற்கெனவே சொன்னவை போதுமானவை. அதற்கும் மேலாக இவ்விடத்து விளக்கங்கள் தேவையில்லை என்பது என் மதிப்பீடு.
      பயனற்ற குறுக்கு விசாரணைகளுக்குட்பட்டு விவாதத்தைத் திசை திருப்ப நான் உங்களுக்கு உதவப் போவதில்லை.
      நீங்கள் வலிந்து பொருள் கொள்ளுமாறு தான் நான் சொன்னவை அமைய வேண்டும் என்பது உங்கள் விருப்பமாயின், அவ்வாறே ஆகுக.

  29. சங்கரன் says:
    15 years ago

    சிவா .செல்வன்
    துரை இளமுருகு முதலில் “..அது சக்கை என்பது என்னுடைய கருத்து …” என்றார், பின் “…..ஏறக்குறைய நீங்கள் சொல்லுவது சரிதான்…” என்றார் ( அதையும் முழு மனதுடன் ஏற்று கொள்ள இஸ்டமில்லை ), பின் “…அவ்வாறு செய்ய முயலுவது ஒரு வீண் முயற்சி ” என்கிறார் பாருங்கள்.அவருக்கு இருப்பதெல்லாம் கர்னாடக இசை மீதான வெறுப்பு என்பது தான் இதன் சாராம்சம்.உங்களைபோல் திறந்த மனதுடன் அவர் உரையாட தயாரில்லை.அவர் கேள்வி மட்டும் தான் கேட்பார் போலும் .

  30. thurai ilamurugu says:
    15 years ago

    இன்று நீங்கள் எதை தமிழிசை என்று கூறுகிறீர்களோ அது பக்தியின் மூலம் மட்டுமே தளமிடப் பட்டது மேற்கட்டுமானமும் அதுவே உண்மையான தமிழிசை
    சங்கப் பாடல்கள் , பள்ளுப் பட்டு இவை வாய் மொழி வழக்கு மட்டுமே உடையவை பணர்கள் பாடியது சஙக் காலம். அவை தொகுக்கப்பட்டது பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு பாடியவன் தெரியாது தொகுத்தவனுக்கு பாடியவனைப் பற்றித்தெரியாது தொகுத்தவன் புலவன் மட்டுமே. பாடிய பாணன் தாழ்த்தப் பட்டவன் தொகுத்தவன் புலவன் இன்று அதைப்,பயன்படுத்துபவன் பார்ப்ப்னன் மற்றும் மேட்டுமைக் குடிகள் ஒரு சுரத்தை ஒரு மணி நேரம் நிரவல் செய்தால் அதைக் கேட்கும் பொறுமை உடையவன் யார்? தனி ஆவர்ததனதை உனட்கார்ன்து கேட்பவன் ஒரு தொழிலாளியா? ஒரு கச்சேரிக் கேட்டுவிட்டு காலை வயலுக்கு விடியலில் செல்லமுடியுமா? மேட்டுமைக் குடிகள் த்ங்கள் வசதிக்கு கர் நாடக் இசையை தமிழிசை என்று பெயர் மாற்றி ப்யன் படுத விரும்பினால் செய்யட்டுமே செஞ்சுர்ட்டிப் பண் என்றாலும் சங்கராபரனம் என்றாலும் எமக்கு ஒன்றுதான் அது எமக்குப் புரியப்போஅதுவும் இல்லை அதற்கென மெனக்கெட்டு முலப் போவதும் இல்லை எமது உழப்பின் களப்பை நீக்க ஒரு இசை வேண்டும் அது எமக்குப் புரிய வேண்டும் அவ்வளவுதான் சக்கைய சாரம் என்றும் சாதிக்க வேண்டாம்

  31. சங்கரன் says:
    15 years ago

    துரை இளமுருகு அவர்களே ,

    சினிமா இசையை யாரிங்கே வெறுத்தார்கள்.?முதலில் மற்றவர்கள் சொல்லும் கருத்தை நிதானமாக வாசியுங்கள்.நீங்கள் ஒரு தீர்க்கமான முடிவில் நிற்கிறீர்கள் ( எப்படியாவது கர்னாடக இசை என்ற சொல்லையே எதிர்ப்பது ) உயர்ந்த இலக்கியங்களை படிக்கும் நீங்கள் ( சேற்றில் களை எடுப்பவனுக்கு ரொம்பவும் அவசியம் தேவையான ஒன்று !!? ) கர்னாடக இசையும் இதே நிலைமையில் இருப்பதை ஏன் வலிந்து மறுக்கிறீர்கள் ?சினிமாவில் வரும் இன்றைய பாடல்களை ( பெரும்பான்மையான மக்கள் ரசிக்கும் ?! )உயர்ந்த இலக்கியம் என்று ஒரு ரஜனி ரசிகன் சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தயாரா? நீங்கள் சொல்லும் கருத்து தான் சரியென்று புலம்புவது நியாமில்லை.நாகரீகமும் இல்லை.

    • THAMILMARAN says:
      15 years ago

      மாற்றம் கொண்டுவா மனிதனை மேன்மை செய்…..இது சினிமாப்பாட்லே.சினிமா உயர்ந்த இலக்கியமா? பாமரனையும் படிக்க வைக்கும் சக்தி இன்றூ வரை சினிமாவிடமே இருக்கிறது.

      • xxx says:
        15 years ago

        முக்காலா முக்காப்பிலா…
        ஜிஞ்ஜின்னாக்கடி ஜிஞ்ஜின்னாக்கடி ஜிஞ்ஜின்னா…
        ஜாலிலோ ஜிம்கானா டோலொலோ டும்கானா…
        மாமேன் ஒரு நா மல்லியப்பூக் கொடுத்தான்…
        என்னவெல்லாம் படிக்கிறோம்! ஆகா, ஆகா, ஆகா!!!

    • xxx says:
      15 years ago

      சங்கரன்
      முட்டாள்கள் தவறுகளை ஒப்புக்கொண்டதாக வரலாறு இல்லையே.
      எப்படியும் இறுதியான “சரியான” வாதம் அவர்களுடையதாகவே இருக்கும்.

    • thurai ilamurugu says:
      15 years ago

      நண்பரே நான் புலம்பவும் இல்லை கதறவும் இல்லை ரஜினி ரசிகன் என்றால் இழிவும் இல்லை பாமர மக்களின்ன் ரசனையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இலலை அது தாழ்வு உடையது என்று நான் கருதவும் இல்லை அவனுக்கு கொடுக்கப் படுவதில்
      சிறப்பாக உள்ளதை ரசிக்கவே செய்கிறான்
      இப்போதிய கேள்வி பாடல்களைப் பற்றி அல்ல இசையைப் பற்றி மட்டுமே. அங்காடித்தெரு ஓடவில்லையா/ எத்த்னையோ படங்கள் சொல்லலாம் . பாமரன் ரசிக்கும் இசை வடிவிலேயே அவனுக்கு செய்திகளைச் சொல்ல வேன்டும் என்று கருதுகிறேன் இல்லை அவனை கரு நாடக இசையை , தமிழ்ப் படுத்தி ரசிக்கவைத்து அதன் மூலம் தான் செய்திகளைச் சொல்லவேண்டும் என்று நினைத்தால் அதற்கு வெகு காலம் ஆகும் மற்றபடி கரு நாடக இசையை நான் வெறுக்க்வில்லை அது சரி உங்களில் எத்தனை பேர் முழு நேர கரு நாடக / தமிழிசைக்
      கச்சேரியை அமர் ந்து கேட்டிருக்கிறீர்கள் எத்தனை முறை கேட்டிறிக்கிறிர்கள் . சமைத்துகொண்டே . குளித்துக் கொன்டே தாளம் போட்டுக் கொண்டு கரு நாடக / தமிழிசை ரசிக்க கூடிய ஒன்றா? பிறகு அதை ஏன் பிடித்துக் கொண்டு தொங்குகிறீர்கள் இதுவே எமது கேள்வி

  32. சங்கரன் says:
    15 years ago

    எல்லாவற்றிற்கும் பொழிப்புரை வழங்க தமிழ்மாறன் இருக்கிறார் ஜிம்கானா !!!

    • THAMILMARAN says:
      15 years ago

      ஜிம்கானா கிரிக்கெட் கிளப்பையும் வென்றவர் நாம்.ஒன்றல்ல பலமுற.அது வெல்லாம் யாழ்பாணத்தான் சரித்திரம்.

  33. செல்வன் says:
    15 years ago

    துரை இளமுருகு , தமிழ்மாறன்

    ஒரு வாதத்திற்கு கேட்கிறேன் நாம் ரசிக்கும் இன்றைய சினிமா பாடல்கள் வர்க்கப்புரட்சியையா பரப்புகிறது.?இதற்கும் களை எடுப்பவனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.? இன்றைய ரகுமானின் இசை என்ன வர்க்கபுரட்சி பேசுகிறது ? இந்த சூட்சுமம் புரியாமலா அவருக்கு அமெரிக்கா ஒஸ்கார் கொடுக்கிறது.நாட்டுப்புற இசையின் தாளங்களை எல்லாம் வர்க்க நலனுக்காகவா பயன்படுத்திகிறார்.?
    நீங்கள் /// எமது உழப்பின் களப்பை நீக்க ஒரு இசை வேண்டும் அது எமக்குப் புரிய வேண்டும்/// என்று சொல்கிறீர்கள .உங்களுக்கு என்ன புரிகிறது ? உங்களுக்கு இதுவும் புரியவில்லை,கர்னாடக இசையும் புரியவில்லை என்பது தான் உண்மை.இன்றிய நமது ரகுமான் அமெரிக்க மைக்கேல் ஜாக்சனை முன் மாதிரியாக கொண்டு தான் செயல் படுகிறார்.
    அவர் வந்த ஆரம்பத்தில் அவரது பாடல்களை பலரும் முகம் சுழித்தே ,ஒருவித அருவருப்புடன் கேட்டு சிரித்தார்கள். லியோனியின் பட்டிமன்றபேச்சுக்களில் கந்தலானார் ரகுமான்.இப்போ எல்லாம் கொஞ்சம் பழகி விட்டது இல்லையா ? இதைதான் நான் சொல்கிறேன் ஒன்றில் முதலில் பரீட்சயம் வேண்டும் என்று.
    நமது இசை அடையாளங்களை எல்லாம் அழிக்கும் விதமாக உள்ள மேற்க்கத்திய பொப் இசையின் வால்பிடிப்பாலராகவே இருக்கிறார் ரகுமான்.தெருப் பொறுக்கிகளின் கூச்சல் எல்லாம் இசையாகி விட்டது.உலகமயக் கொள்கைகளை ஏற்கும் இந்திய அரசுக்கு அவர் தான் பொருத்தமானவராக உள்ளார் இல்லையா.அதனால் தான் அவருக்கு இந்த மதிப்பு !!!

    /// …இன்று நீங்கள் எதை தமிழிசை என்று கூறுகிறீர்களோ அது பக்தியின் மூலம் மட்டுமே தளமிடப் பட்டது ..///
    நீங்கள் சொல்லும் களை எடுப்பவன் காலையில் எழுந்து” முருகா எங்களை காப்பாற்றப்பா ” என்று சொல்லி விட்டுத்தான் போவான்.அப்படித்தான் பெரும்பாலான மக்கள் உள்ளனர்.
    அதனால் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ” அம்பிகையே முத்து மாரியம்மா உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா ” என்று மக்களுக்கு தெரிந்த வழியில் போய் மக்கள் பிரச்னையை பாட்டாக எழுதினார்.இதே தன்மையை ஆந்திராவின் நக்சல் பாரி இயக்கத்தின் புரட்சிப் பாடகர் என்று போற்றப்படும் தோழர் கத்தாரும் தனது பாடல்களில் அங்கங்கே பாடி வருகிறார்.
    இசையின் நுட்பங்களை ( கர்னாடக இசை உட்பட ) எல்லாம் நாம் மக்களின் நலனுக்காக பயன்படுத்தத் தவறினால் ,அதன் வளங்களை எல்லாம் புறக்கணித்தால் மக்கள் விரோதிகள் தான் பயனுறுவர்.குறிப்பாக இசையிலும் வர்க்கம் பற்றி பேசுவோர் கவனத்தில் எடுக்க வேண்டும்.
    ///…போராடாமல் எதுவும் வெல்லப் பட்டதுமில்லை.// என்ற சிவாவின் கருத்தை மண்டையில் ஏற்ற வேண்டுகிறேன்.
    பாய்… பாய்..

    • thurai ilamurugu says:
      15 years ago

      நல்லது நண்பரே . ரகுமான் இசை முதலாளித்துவ சார்ர்புடையதுதான் அதில் ஒன்றும் தவ்றில்லை நாம் இன்று முதாலாளித்துவ உலகில் தான் வாழ்ந்து வருகிறோம் ரகுமனை ஆய்வு செய்ய உங்களுக்கு லியோனிதான் கிடைத்தை எண்ணி வருந்துகிறன் அவருடைய உயர்னத இலக்கிய பட்டி மன்ற்ங்களைக் கேட்டு இனி பரிச்சயம் செய்து கொள்ளுகிறேன்
      பட்டுக்கோட்டை நிறை பாடல் களை சினிமாவிற்காக்ப் பாடியுள்ளார் அன்தப் படங்களின் நிலைக்கு ஏற்றவறு பாடல்கள் அமையும் அவ்வளவுதான் ஒரு மாரியம்மன் பாட்டு முழு பட்டுக் கோட்டை ஆகிவிடாது.
      “தெருப் பொறுக்கிகளின் கூச்சல் எல்லாம் இசையாகிவிடாது” என்ன செய்வது தெருப் பொறுக்கிகளை வைத்துதான் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டீருக்கிறது இல்லை உங்களுக்கு ச்ங்காராச் சாரியின் காலை நக்கிக் கிடக்கும் , தமிழ் மானாட்ட்டுக்கு இசை அமைக்க மறுக்கும் ,தான் ஒரு தலித் ஆக
      இருந்தலும் பெரியார் சிலைக்கு மாலையிட கூட மறுக்கும் இசை ஞானிகள்தான் தேவை என்றால் அவர் ப்ழைமை வாத இந்து சமய பக்திப் பாடல்கள்தான் தேவை என்றால் வைத்துக் கொள்ளுங்கள் திருவாசகத்தை சிம்பொனி வடிவில் கொடுப்பதுதான் தமிழிசை என்றால் அது எமக்கு தேவை இல்லை ஆனால் அதுதான் தமிழிசை என்று முடிவு செய்து அதை தெருப் பொறுக்கி பாமரத்தமிழர்களீன் மீது திணிக்காதீர்கள்
      …போராடாமல் எதுவும் வெல்லப் பட்டதுமில்லை.// என்ற சிவாவின் கருத்தை மண்டையில் ஏற்ற வேண்டுகிறேன்.
      உண்மை ஆனால் எதற்காகப்போராடுவது என்று முடிவு செய்யும் உரிமை எமக்கு இருக்கிறது

      • THAMILMARAN says:
        15 years ago

        இளயராஜா இந்து அவரால் பெரியார் சிலைக்கு மாலை போட முடியாது, அய்யப்பனுக்கு வேண்டுமானால் போடலாம்.திருவாசகத்தை செம்பொனியாக்கியது தமிழுக்கு பெருமையில்லையா? அப்படியானால் மகாவம்சத்துக்கு செய்திடலாம்…..முன்னைப் பழம் பொருதும் முன்னைப் பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றீயனே ஏனும் மனிவாசகர் வாழ்ந்த நெறீயில் அவர் தந்த திருவாசகம் சிம்பொனியானது தமிழுக்குப் பெருமை இல்லையா?

    • THAMILMARAN says:
      15 years ago

      தெருப் பொறூக்கி இசை என நாம் அழைப்பது ராப்……

  34. சங்கரன் says:
    15 years ago

    எங்கே சக்கையை காணவில்லை ?

    • THAMILMARAN says:
      15 years ago

      தீதும் நன்றூம் பிறர் தர வாரா எனும் நன் மொழியே நம் பொன்மொழியாம் இந்த செம்மொழிப் பாடல் கேட் கும் போது மின்வெட்டு நேரத்திலும் மின்சார அதிர்ச்சி ஏற்படும் உணர்ச்சி வரக் காரணம் ரகுமாந்தான்…………….ஓசானா…ஒசானா……..அந்தநேரம்..அந்தி நேரம்….நான் ஆடிப் போகிறேன்…………

  35. ramu says:
    15 years ago

    திரையிசையில் சிலர் சாதனைகளையும், சில புறநடையான அற்புதங்களையும் நிகழ்த்தியிருந்தாலும் பொதுவாக சினிமாவில் இசையை பயன்படுத்தப்படுகின்ற முறையில் இசையினதும் சினிமாவினதும் வளர்ச்சியை மட்டுப்படுத்தியே வந்திருக்கின்றது என்பது என் அபிப்பிராயம். தமிழர்கள் தங்கள் தமிழிசையை மீட்டெடுப்பது அவசியமாதென்றே கருதுகின்றேன். செளந்தரின் கட்டுரை சிறந்த பயனுடையது என்பதில் ஐயமில்லை. திருக்குறளை படைத்த திருவள்ளுவரை விட அதற்கு பொழிப்புரை எழுதிய கருணாநிதி அறிவால் உயந்தவர் என வாதாடுகின்ற திராவிட செம்மல்களை சந்தித்திருக்கின்றேன். எல்லா மக்களுக்கும் குறிப்பாக உழைக்கும் மக்களிற்கு புரியும் வகையில் திருக்குறளை தேனும் பாலும் குழைத்து தந்தார் என வாதிடுவார்கள். திராவிட அரசியலும், சிந்தனை முறையும், சாரம் இழந்து சக்கையாக இன்றிருக்கும் இழிநிலையின் வெளிப்பாடுதான் அது. இசை,சினிமா,ஊடகம் என்பன பெருமுதலாளிகளாலும்,விநியோகர்தர்களாலும், இன்று மிக தந்திரமாக தீர்மானிக்கப்படும் நிலையில் மக்கள் ரசனையென்பது நுகர்வுக்காக திட்டமிட்டுவளர்க்கப்படுவது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தமிழ்சினிமா இயக்குனர்கள் மக்கள் விருபுவதனை கொடுக்கவேண்டியிருக்கின்றது என்று கிளிப்பிள்ளை போல அபத்தமாக கூறிக்கொண்டேயிருப்பார்கள். இது குண்டான் சட்டிக்குள் குதிரையோட்டுவது போன்றதே. உழைக்கும் வர்க்கம் பலநாடுகளிலும் தமது இசையை விருத்திசெய்துள்ளமை மட்டுமன்றி உயர்வர்க்கத்து இசைகளாக கருதப்பட்ட இசைகளை கூட தமதாக்கிகொண்டிருப்பதனையும் அவதானிக்கலாம்.

  36. செல்வன் says:
    15 years ago

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சினிமாவுக்காக எழுதினார்.ஆந்திரா நக்சல்பாரி கத்தார் எந்த சினிமாவுக்கு எழுதினார் ?

  37. செல்வன் says:
    15 years ago

    மீண்டும் துரை இளமுருகுவின் திசை திருப்பல்கள் தொடக்கி விட்டன.
    இப்போ இளையராஜாவை வலிந்து விவாதப் பொருளாக்க முனைகிறார்.பாவம்.!!
    பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு தோளில் மஞ்சள் துண்டு போட்டு கொண்டு மக்களை கொள்ளையடிப்பதை காட்டிலும் பெரியார் சிலைக்கு மாலை போடாதிருப்பதும் . தமிழ் மாநாட்டுக்கு இசைக்க முறுப்பது ராஜாவின் நேர்மையான (அவரது தனிப்பட்ட விருப்பு / வெறுப்பு ) செயல்.
    ஒருவர் தலித் என்றால் பெரியார்க்கு மாலை போட வேண்டும் என்று பெரியார் சொல்லிவைத்தா சென்றார்.?அப்படி என்றால் தமிழரை சூத்திரன் என்று பிராமணர்கள் எழுதி வைத்ததை அம்பலப்டுதிய பெரியாரை சூத்திர தமிழர்கள் எல்லாம் ஆதரித்தார்களா? அப்படி சூத்திர தமிழர்கள் எல்லாம் பெரியாரை ஆதரித்திருந்தால் ஏன் இந்த நிலைமை!!!

    பெரியார் செய்ததைப் போல இசையில் இளையராஜா நிகழ்த்தியிருப்பதும் மாபெரும் சாதனை தான்.!!(சத்தம் போடாமல் )

    ” என்ன செய்வது தெருப் பொறுக்கிகளை வைத்துதான் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டீருக்கிறது” என்கிறார்.
    மேற்க்கத்திய போப் இசையின் மேலாதிக்கம் ,அதை வைத்து உலகமக்களின் இசைகள் மீது ஆதிக்கம் செலுத்தி வரும் மேற்க்கத்திய வல்லரசுகள் அதன் இந்திய அடியாளாக செயல் படும் ரகுமானை குறிப்பிட்டால் அவர் ஏன் வலிந்து இளையராஜாவை இழுக்க வேண்டும்.?

    அவர் ரகுமானை வைத்து உழைக்கும் மக்களின் விடிவுக்கு இசையை பயன்படுத்தப் போகிறார்.எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.துரை இளமுருகுவின் ரசனை கடை கோடிக்கு வந்ததை எண்ணி வியப்பில்லை.உயர்ந்த இலக்கியம் படிக்கும் கலை மனம் (ரஜினி படம் பார்ப்பது ) அவருடையது. இசைதான் அவருக்கு வேப்பங்காய்

    கல்வி கற்றவர்கள் என்று சொல்லும் பலருக்கே இசை பற்றிய தெளிவில்லை.படித்தவர்களுக்கே அதைப் பற்றி அக்கறை கிடையாது. பாமரர்களைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை

    இங்கு நடந்த விவாதங்களை படித்தவர்கள் ஒன்றை அவதானித்திருக்கலாம்.அதுதான் துரை இளமுருகு எந்த கேள்விக்கும் அறிவு நாணயமாக பதில் சொல்ல முயற்சி செய்ததில்லை.செய்வதெல்லாம் குறுக்கு விசாரணையும் ,குதர்க்கமும் ,திசை திருபுதலுமே.!! .வலிந்து வலிந்து பொருள் கற்ப்பித்தலுமே!!கேள்வி கேட்ட்கத்தான் அவருக்கு தெரியும் .

    //அது எமக்கு தேவை இல்லை..///.அது எமக்கு தேவை இல்லை///……. என்று தான் இன்றைய இழிந்த நிலை வந்துள்ளது.

  38. xxx says:
    15 years ago

    மிரொஸ்லாவ் ஹொலுப் (Miroslav Holub) என்ற செக் கவிஞர் எழுதியது:
    ‘பூமி சுழல்கிறது’ என்கிறார் மாணவர்.
    ‘அப்படியில்லை, பூமி சுழல்கிறது’ என்கிறார் ஆசிரியர்.
    ‘மலைகள் பசுமையாகின்றன’ என்கிறார் மாணவர்.
    ‘அப்படியில்லை, மலைகள் பசுமையாகின்றன’ என்கிறார் ஆசிரியர்.
    ‘ஈரிரண்டு நான்கு’ என்கிறார் மாணவர்.
    ‘அப்படியில்லை, ஈரிரண்டு நான்கு’ என்று திருத்துகிறார் ஆசிரியர்.
    ஏனென்றால் ஆசிரியருக்கே அதிகம் தெரியும்.
    . (நன்றி: “பணிதல் மறந்தவர்”, தமிழாக்கக் கவிதைகள்)

    இது யாரையாவது, எதையாவது, நினைவூட்டுகிறதா?
    தெரிந்தாலும் சொல்லாதீர்கள் — இன்னொரு நீன்ட வி(தண்டா)வாதம் தொடங்கக் கூடும்

  39. thurai ilamurugu says:
    15 years ago

    வாதம் இப்போது இளமுருகு என்ன செய்கிறார் என்பது பற்றி வ ந்து விட்டது. நல்லது நான் நாணயமாக செயல் படவில்லை என்பது குற்றச் சாட்டு அதை விளக்கினால் பதிப் சொல்ல வசதியாய் இருக்கும்
    பொப்பிசை பிறக்கும் போது கலகத்தின் குர்லாகதான் பிற ந்த்து அதை என்த வல்லாதிக்கமும் பயன்படுதிக் கொள்ளவில்லை மிக்கெல்ல் ஜாக்சென் வல்லாதிக்கத்தின் பிரதி நிதி என்பதில் எமக்கு உடன் பாடில்லை அதைப்போல் தான் ரகும்மானும் ஒஸ்கார் விருது வாங்கியவன் எல்லாம் வல்லாதிக்கத்தின் பிரதி நிதி என்று முதிரைக் குத்த வேண்டும் அது தான் வர்க்கப் பற்று என்று கத்தார் விஸிறிகள் நினைக் கிறார்கள் போல

    கத்தார் என்த கடவுளை வாழ்த்திபாடியுள்ளார் என்பதைச் சொன்னால் நல்லது அவர் குடுக்டுப்பயை கையில் வைத்துக் கொண்ட்ரு ந்தால் பக்தி இசையில் பாடுகிறார் என்று பொருளா
    தமிழ் நாட்டில் தற்போது நிறைய இசைக் குழுக்கள் எழுதாளார் மானாடுகள் , இடது சாரி இயக்கங்கள் அவற்றின் பொதுகூட்ட்டங்களில் இசை நிகழ்ச்சி நடத்து கின்றன அது என்ன இசை? பெரும்பாலும் திரை இசைப் பாடல்களின் மெட்டுகளில் அமை ந்த்துள்ளன கருத்துகளை மட்டும் மாற்றி அமைத்துப் படுகிறார்கள் அது மக்க்ளுக்கு எளிதில் புரிகிறது
    நான் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் எமது நாணயத்தை எடைபோட வராதீர்கள் .
    இளையராஜவை நான் வலிந்து கொண்டு வரவில்லை ரகுமானைப் பற்றிப் பேசும்போது இளையராஜவை ப் பற்றி பேசக் கூடாதா? பஞ்சமரான இளையராஜவை இ ந்து என்று எப்படி சொல்லுகிறிர்கள் அவர் செயேன்திரன் என்ற கொலைகார, பெண்களைக் காமப் பொருளாகக் கருதிய அன்த அயோகிய சிகாமணியை குற்ற்வளிக் கூண்டில் நின்று கொண்டு சாட்சிகளை விலைக்கு வாங்கி தப்பிக்க நினைக்கும் வனைப் புகழ்வது இளையராஜவின் தனிப்பட உரிமை அப்படித்தானே? பர்ர்ப்பனர்களில் கூட சிலர் செயேன்திரனை விலக்கி வைத்துவிட்டனர் அனால் தமிழிசைச் செம்மல் அவனைப் புகழ் ந்து கொண்டிருக்கிறார் அவர் இசை அமைத்த திருவாசகம் சிம்பொனி தமிழிசைகுப் பெருமைஅதுவும் அப்படிதானோ? அ ந்தப் பாடலில் ஒரு வரிகூட புரியாத அளவுக்கு இசைஅமித்ததிறமை இளையராஜவைத்தவிர வேறு யாருக்கும் வ்ராது .
    தெருப் பொறூக்கி இசை என நாம் அழைப்பது ராப்…..
    னல்ல பெயர் கொடுதீர்கள் தெருப்படகன் இசை என்றாவது அழைதிருக்க்லாம் அது என்ன பொறுக்கி? இவர் எம்மை குறை சொல்லுகிறார் .
    //அது எமக்கு தேவை இல்லை..///.அது எமக்கு தேவை இல்லை///……. என்று தான் இன்றைய இழிந்த நிலை வந்துள்ளது.
    இல்லை அதனால் தமிழ் இழிவுபடவில்லை பழமையைம் மீடபதில் ஒரு நூற்றன்டுகளத்த வீணடித்த கொடுமையால் தாழ்வுற்றது . புதிய இசை வடிவத்தை தேடாமல் பர்ப்ப்னன் வாந்திஎடுத்த கரு நாடக் இசையை வேன்டுவதால் தாழ்வு நிலைக்கு வன்துள்ளது தமிழில் புதியனவற்றக் கொணராமல் ப்ழமை வாதம் பேசியே எம்மினதை அழிக்க ஒரு கூட்டம் எப்பொதும் இருக்கும் அது இப்போது உலகம் முழுவதும் பரவி இருக்கிறது

  40. xxx says:
    15 years ago

    போச்சடா!
    சொல்லாமலே தொடங்கி விட்டது.

  41. செல்வன் says:
    15 years ago

    ……..”.அதனால் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ” அம்பிகையே முத்து மாரியம்மா உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா ” என்று மக்களுக்கு தெரிந்த வழியில் போய் மக்கள் பிரச்னையை பாட்டாக எழுதினார்.இதே தன்மையை ஆந்திராவின் நக்சல் பாரி இயக்கத்தின் புரட்சிப் பாடகர் என்று போற்றப்படும் தோழர் கத்தாரும் தனது பாடல்களில் அங்கங்கே பாடி வருகிறார்..” என்று குறிப்பிட்டு எழுதினேன்.ஆனால் இளமுருகு என்ன கேட்கிறார் பாருங்கள்.

    // கத்தார் என்த கடவுளை வாழ்த்திபாடியுள்ளார் என்பதைச் சொன்னால் நல்லது //
    என்று நான் சொல்லாததை திரிக்கிறார்.
    ” கடவுளை வாழ்த்திபாடியுள்ளார்” என்று நான் எங்கே எழுதினேன் ?

    /// மக்கள் பிரச்னையை பாட்டாக எழுதினார்/// என்று தான் எழுதினேன்.பிறகு கத்தார் விசிறி என்று கிண்டலும் வேறு அடிக்கிறார்.

    .”…முதலில் மற்றவர்கள் சொல்லும் கருத்தை நிதானமாக வாசியுங்கள். ” என்று திரும்ப திரும்ப சொல்வது அதனால் தான்.!!!

    “பொப்பிசை பிறக்கும் போது கலகத்தின் குர்லாகதான் பிற ந்த்து அதை என்த வல்லாதிக்கமும் பயன்படுதிக் கொள்ளவில்லை “என்பதிலிருந்து உங்களுக்கு இசையறிவு/இசைவரலாற்றறிவு கம்மி என்பது தெரிகிறது.
    உங்களை படிப்பிப்பது நமது வேலை அல்ல.நீங்கள் சார்ந்த அமைப்பை வைத்து மாநாட்டை நடாத்துங்கள்.அதற்க்கு இசை அமைக்க ரகுமானை அமர்த்துங்கள்.வர்க்க புரட்சி வாழ்க.
    வாழ்த்துக்கள்.

    • THAMILMARAN says:
      15 years ago

      நீ அலை போல ஓடிக் கொண்டிரு…..என்றூ ரகுமானின் பாடலிலும் புரட்சி உண்டு.கத்தார் பாடல்கள் மக்களப் பற்றூவதால் அவர் புரட்சியாளர்.ஆர் என் பி,ராப்,பொப் என்றூ மட்டுமல்ல லத்தீன் இசைப் பாட்ல்களூம் ஏழை மக்களீன் குரல்களே.ஏழைக்குத்தான் இசை தேவைப்படுகிறது.இது என குரல் இனி மக்களீன் குரல் என பாடகன் புரட்சியின் குரலாக இருக்கிறான்……புரட்சியிலே சரித்திரத்தை மாற்றீட வேண்டும் பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட.வீரம் உண்டு வெற்றீ உண்டு விள்யாடும் கரம் உன்னிடம் உண்டு வா…..வா….என் தோழா…………….

  42. சங்கிலி says:
    15 years ago

    தமிழ்மாரனும் ஒரு ஆழிப்பேரலை என்பது பின்னூட்டங்களில் தெரிகிறது.ஓயவே மாட்டார் போல் உள்ளது.

  43. thurai ilamurugu says:
    15 years ago

    அதனால் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ” அம்பிகையே முத்து மாரியம்மா உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா ” என்று மக்களுக்கு தெரிந்த வழியில் போய் மக்கள் பிரச்னையை பாட்டாக எழுதினார்.இதே தன்மையை ஆந்திராவின் நக்சல் பாரி இயக்கத்தின்”
    பட்டுக் கோட்டை பல பாடல்கள் எழுதியிருக்க அவருடைய அம்பிகைப் பாட்டை தேர்வு செய்து எழுதியுள்ளஈர்கள் கத்தாரும அதே தன்மையில் என்று வேறு எழுதியுள்ளீர்கள் பிறகு அதை எப்படி புரி ந்துகொள்வதாம் வெறும் வர்த்தைகளை வைத்து விளயாட வேண்டாம் நீங்க்ள் எழுதியதை அப்படித்தான் புரி ந்து கொள்ள இயலும்
    விசிறி என்றாள் கிண்டல் என்றால் தெருப் பொறுக்கி என்றால் என்னபொருள் ?
    ரகுமா னை வைத்து அல்ல அவருடையைய பாடல்களை மற்றி அமைத்து பாடி பல இசைக்குழுக்கள் பாடல்களைப் பாடி வருகின்றன அதில் பல இடது சாரி இயக்களும் உண்டு உட்னே இவர் வர்க்கப்புரட்சிக்குப் போய்விட்டார்
    சரி இளையராஜா பற்றிய எனது கேள்விக்கு பதில் இல்லையே ?
    நீங்க்கள் சுதா ரகு நாதன் உன்னி கிருஸ்ணன் வகையறக்களை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் மறுமலர்ச்சியா? மவொயிசப் புரட்சியா??

  44. செல்வன் says:
    15 years ago

    ” வர்க்கங்களுக்கு அப்பற் பட்ட ஒன்று இல்லையோ அது போன்றே தமிழ் இசை என்பதும் வர்க்கஙகளூக்கு அப்பாற்பட்ட ஒன்று அல்ல …..”என்று யாரோ ஒருவர் புலம்பியதால் வந்த வில்லங்கம் தான் இது.

    நீங்கள் சார்ந்த இடது சாரி இயக்கம் ரகுமானின் படைப்புக்களை மாற்றி நடாத்தப் போகும் வர்க்க புரட்சிக்கு பாடல்களை பயன்படுத்துங்கள்.அதில் நமக்கொன்றும் மறுப்பில்லை.
    நீங்கள் சார்ந்த அமைப்பின் படைப்பாற்றல் திறமை இங்கு வெளிப்படுகிறது.
    இங்கே ரகுமானை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் அவரின் இசையை வைத்தே.அவர் யார் யாரின் கால்களை கழுவுகிறார் என்பதல்ல.அவருடைய இசை தெருவில் நின்று வம்பளக்கும் பொறுக்கிகளின் சேஷ்டைகளுக்கு ஒப்பாக இருக்கிறது என்கிறோம்.உயர்ந்த இலக்கியம் படிக்கும் உங்களுக்கு இது புரியவில்லை என்றால் யாரும் பொறுப்பாக முடியாது.உங்கள் ரசனையை நாம் தெரிந்து கொண்டோம். அதை நாம் குறை சொல்ல முயலவில்லை.
    இசையில் பொருக்கி தனத்தை கொண்டு வந்த ரகுமானை சொல்கிறோம்.அவர்டைய பாடலகளில் வரும் கூக்குரல்கள், காட்டுகத்தல்கள் ,அருவருப்பான புலம்பல் சத்தங்களை வைத்தே சொல்கிறோம். அப்படி இல்லை என்றால் இளமுருகு அதை இல்லை என்று சொல்ல வேண்டும் .
    அதற்காக இளைய ராஜாவை ஏன் இழுக்க வேண்டும்.?He is an old man.அது சரி யாரிங்கே இளையராஜாவுக்கு வக்காலத்து வாங்கியது?இளையராஜா பற்றிய விமர்சன கச்சேரியை நாம் தனியே தாரளமாக வைத்துக் கொள்ளலாம் சார் !!
    துரைமுருகு, ராஜா குறித்து ஒரு கட்டுரை எழுதினால் அதில் நாம் விவாதிக்கலாம்.

    இதைதான் சொல்கிறோம் வலிந்து கற்பிதம் செய்வதென்று.மீண்டும் மீண்டும் ஒரே தவறு.அது மீண்டும் ,மீண்டும். மீண்டும் ,மீண்டும் ,மீண்டும், மீண்டும் தொடர்வது அலுப்பு தட்டுகிறது.

    நண்பர் xxx , இதற்க்கு பொருத்தமாக் ஒரு கவிதை இருந்தால் சொல்லுங்கள்!!

    இதை விட நீங்கள் நேரடியாக மைக்கேல் ஜாக்சனின் பாடல்களையும் பயன் படுத்தலாம்.அதில் ரஜனிகாந்தை அழைத்து நாடியமும் ஆட வைக்கலாம்.மக்கள் விரும்புவார்கள் அல்லவா ?!! நமீதாவையும் சேர்க்கலாம்.அதை கோகோ கோல ஸ்பொன்சர் செய்யலாம்..சன் டிவி யிலும் ஒளிபரப்பலாம்.

    நாப்பிற ………….பாப்பியா …….நாப்பிரனாப்பியா ………….நாப்பிற ……நாப்பியா ..எந்திரனில் ரகுமான் சொல்லும் புதிய செய்தி இது தான்.

  45. Ramea says:
    15 years ago

    விவாதத்தில் பங்கு கொள்பவர்கள் யாரும் சமூக அக்கறை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. பொழுது போக்கிற்காக எழுதுவதாகத் தான் தெரிகிறது. சமூக மாற்றத்திற்கான வேலை என்பது ஒரு மாலை நேர விருந்து போன்ற சுகமான காரியம் அல்ல. எம்ப்ராய்டரி போன்ற எளிமையான காரியமும் அல்ல. அது அயோக்கியத்தனம் செய்யும் ஆளும் வர்க்கத்தை அடியோடு பெயர்த்தெடுத்து எறிய வேண்டிய கடுமையான வேலையாகும். பொழுது போக்கு அம்சங்கள் அதற்குப் பெரும் தடைகளாகும்.

    கர்நாடக இசை தமிழிசையாக இருந்தால் என்ன: தெலுங்கு இசையாக இருந்தால் என்ன? அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வது தான் தீர்ப்பாக இருக்குமே ஒழிய உண்மை என்றுமே தீர்ப்பாக இருக்கப் போவதில்லை.. உண்மை தீர்பபாக இருக்க வேண்டும் எனறால் உழைக்கும் வர்க்கம் ஆட்சியில் இருக்க வேண்டும்.

    உழைக்கும் வர்க்கம் ஆட்சியில் அமர்வதற்கு எதிராக உள்ள தடைகளில் முதலும் முதன்மையானதும் இந்தியாவைப் பொறுத்த மட்டில் பார்ப்பன அதிகாரப் பிடிப்பு தான். அதை அடித்து நொறுக்காமல் செய்யப்படும் வேறு வேலைகள் யாவும் வீணே.

    இதற்கு ஒரே வழி அதிகார மையத்தில் பார்ப்பனர்கள் அவர்களுக்கு உரிய பங்கை விட அதிகம் பெறாமல் பார்த்துக் கொள்வது தான். அதாவது தகுதியற்ற / திறமைக் குறைவான பார்ப்பனர்கள் மேல் நிலைக்குச் செல்வதைத் தடுப்பது தான். இதற்கு ஒரே வழி பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் கீழ் நிலைப் பணிகளில் இருந்து தப்பித்து விடாமல் பார்த்துக் கொள்வதும் திறமையான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு தவறாமல் பார்த்துக் கொள்வதும் தான். இதற்கு ஒரே வழி அனைத்துத் துறைகளிலும் (தனியார் துறைகளையும் சேர்த்துத் தான்) அனைத்து நிலைகளிலும் உயர் சாதியினர் பிற்படுத்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பழங்குடியினர் மத சிறுபான்மையினர் ஆகியோர்களுக்கு மக்கள் தொகையில் அவரவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாசாரத்தில் ஒதுக்கீடு செய்வதும் தான். இது நடவாமல் செய்யப்படும் எந்த திட்டமும் பாரிஸ் கம்யுன் தோல்வி அடைந்தது போல் தோல்வியையே அடையும்.

    ஒடுக்கப்பட்ட மக்களே! திறமையற்ற பார்ப்பனர்களை உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் இன்றைய பொதுப் போட்டி முறைக்கு முடிவு கட்டாமல். திறமையானவர்களை உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் விகிதாசார ஒதுக்கீடு முறை அமலுக்கு வராமல் வேறு எதைச் செய்தாலும் இறுதியில் அது தோல்வியாகத் தான் முடியும்.

    உயர்சாதிக் கும்பலினர் இதை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். நம்மைப் பொறுத்த மட்டில் இது தான் முதலில் சாதிக்கப்பட வேண்டிய செயல். இதைச் சாதிக்காமல் வேறு எதைச்செய்தாலும் அது பயனற்றதாகவே முடியும்.

    ஆகவே பிற விஷயங்களில் நம் ஆற்றலை வீணடிக்காமல் விகிதாசார ஒதுக்கீட்டிற்காக மட்டும் நமது முழு ஆற்றலை ஈடுபடுத்தினால் நமக்கு நல்லது. அப்படிச் செய்யாமல் இருப்பது நம் குழந்தைகளுக்குச் செய்யும் துரோகம் ஆகும்.;

  46. பாபு says:
    15 years ago

    இந்த விவாதங்களுக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று யாராவது விளக்கமுடியுமா ?எழுதுபவர்கள் அறிஞர்கள் என்பது தெரிகிறது. கழுத்தை அறுக்காதீர்கள்.

    • xxx says:
      15 years ago

      மன்னிக்க வேன்டும்: ஒரு திருத்தம்: எழுதுபவர்கள் அறிஞர்கள் போலத் தெரிகிறார்கள். தோற்றமும் உண்மையும் ஒன்றல்ல.

      நீங்கள் சொல்வது எறத்தாழ எல்லா நல்ல கட்டுரைகட்கும் நடப்பது தான்.

    • Ramea says:
      15 years ago

      இதில் எழுதுபவர்கள் சமூக அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்வதால் அப்படிப்பட்டவர’கள் செய்ய வேண்டிய சரியான வேலைகளைப் பற்றி கருத்து கூறப்பட்டது. சமூக அக்கறை இல்லாமல் வெறும் பொழுத போக்கிற்காகத் தான் எழுதுவதாக இருந்தால் அவர்களுக்கு இந்த விவாதங்கள் கழுத்தறுப்பாகத் தான் இருக்கும்.

      இராமியா

    • xxx says:
      15 years ago

      இராமியா
      பொதுவாகவே விவாதங்கள் வலிந்து திசை திருப்பப்பட்டுச் சிலர் தமக்குத் தெரிந்ததையும் (தெரியாததையும்) தம் மன அவசங்களையும் கொட்டித் தீர்க்கிறார்கள்.
      இது பொதுவாக எல்லா இணையத் தளங்களிலும் உள்ள யதர்த்தமான நிலைமை.
      கனதியாக எழுதுவோர் கூடுதலாகவும் விஷயச் சார்பாகவும் விடாது எழுதினால் அலட்டற்காரர்கள் சிலராவது ஓயக் கூடும். அதற்கு மேல் எதிர்பார்ப்பது பேராசை.

      • Ramea says:
        15 years ago

        அதாவது இணைய தளத்தைப் பொழுது போக்கிற்காகத்தான் உபயோகிக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். மிக்க நன்றி.

        இராமியா

        • p.s.nesan says:
          15 years ago

          எரிமலை எப்படிப் பொறூக்கும் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் இதை வைரமுத்துதான் எழுதினார் என்பதை இணயம்தான் சொல்லியது அப்படியானால் வைரமுத்து படைப்பாளீ இல்லையா?

  47. thurai ilamurugu says:
    15 years ago

    இப்பொட்து நமீதவாஇ வலிந்து இழுப்வர் யார்? எந்திரனில் செய்தியைதெடுபவர் எப்படி இருப்பார் இளைய ராஜவின் பாடலகளில் முக்கலைக் காணமுடியாது பட்டியல் கெவையா?
    இப்பொகு நடைப் பெறும் கமிழிசைக/ கருனாடக் இசைக் அச்சேரிகளை ஸ்பான்ஸர் செயவ்து யார்?டிவிஸ் , சீராம் சிட்ச் இவர்கள் யார் ? வாழ்கசெலவ்னின் தமிழ்ப் பற்று
    ராமியா அவர்களே எல்லவற்றிற்கும் ஒரே தீர்வு இட ஒதுக்கீடு என்ற பெரியார்காலம் மலை ஏறிவிட்டது மீண்டும் அதே தவற்ற்றை செய்ய முயலாதீர்கள் இடஒதுக்கீட்டை பெற்று உஅர்ந்த தமிஅழன் தமிழுக்கு செய்த்தெள என்ன அவன் புதிய பார்ர்ப்பனன் ஆகி விட்டான்

    • Ramea says:
      15 years ago

      துரை இளமுருகு அவர்களே பெரியார் காலம் மலையேறிவிட்டது என்று ஏதோ பெரியார் தான் இடஒதுக்கீட்டைக் கண்டு பிடித்தது போல் கூறியிருக்கிறீர்கள். பெரியார் பிறப்பதற்கு முன்னால் ஆங்கிலேயர்களே இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். மேலும் ஏதோ இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்பட்டுவிட்டது போலவும் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் பிரச்சினைகள் இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படாததால் தான். முழுமையான ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் இப்பிரச்சினை மறைந்துவிடும்.

      அது சரி! பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் தாழ்நிலைத் தொழிலில் இருந்து தப்பிவிட முடியாத வழியைத் தேட வேண்டும் எனறால் ஏன் கோபம் வருகிறது?;

      • xxx says:
        15 years ago

        மிக்க நன்றி, Ramea
        துரை இளமுருகுவுடன் பார்ப்பனியம் பற்றி விடாது விவாதியுங்கள்.
        வேறு விடயங்களைப் பற்றி நாம் உருப்படியாக எதையாவது பேச ஒரு சிறு வய்ப்பை ஏற்படுத்தியதற்கு மீண்டும் நன்றி.

      • thurai ilamurugu says:
        15 years ago

        அய்யா, நான் பெரியரைப் பற்றிக் குறையாக சொலவில்லை.
        இடஒதுகீட்டினால் பயன் பெற்ற தமிழன் நன்றி, பெரியாரை, மறந்து புதிய பார்ப்பனன் ஆகிவிட்டான். இல்லாவிட்டால் தமிழக்த்தில் திராவிடர் கழகக் கூட்டங்களுக்கு ஆட்களை தேடிபிடிக்கும் நிலை ஏற்பட்டிருக்குமா? திறைமை யுள்ள /திரறமையற்ற பர்ப்பனன் எக்கேடு கெட்டலும் எமக்கு கவலை இல்லை. இடஒதுக்கீடு மட்டும் சமூக நோயக்கு தீர்வாகாது என்பதே எமது கருத்து

        • Ramea says:
          15 years ago

          ஐயா.
          பிரச்சினையைப் புரிந்து கொள்ளுங்கள். இட ஒதுக்கீட்டினால் உயர்நிலைக்கு வந்தவர்கள் நன்றி கெட்டவர்களாக இருப்பதற்குக் காரணமே அது முழுமையாகச் செயல்படுத்தப்படாததால் தான். போதுமான அளவில் (எண்ணிக்கையிலும் தரத்திலும்) ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பிரநிதித்துவம் கிடைத்தால் இது போன்ற அஞ்சி ஓடுபவர்கள் இருக்க மாட்டார்கள். திறமையற்ற பார்ப்பான் எக்கேடு கெட்டால் என்ன என்று விடுவது தேசத் துரோகச் செயல். திறமையற்ற பார்ப்பான் உயர்நிலையில் இருப்பதால் நிரவாகம் சீரழிகிறது. திறமையுள்ள மற்றவரகள் மேலே செல்ல முடியாமல் போகிறது. ஆகவே இதற்கு மாற்று ஏற்பாடு அவசியம் தேவைப்படுகிறது. இடஒதுக்கீடு இதைச் செய்யும் என்று எங்கள் சாதாரண அறிவிற்குத் தோன்றுகிறது. திறமையற்ற பார்ப்பனர்கள் கீழ்நிலை வேலைகளில் இருந்து தப்ப முடியாதபடிக்கும் திறமையுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் நிலைக்குச் செல்வதைத் தடுக்க முடியாதபடிக்குமான வேறு ஒரு நல்ல வழியைத் தயவு செய்து சொல்லுங்களேன்.

          • THAMILMARAN says:
            15 years ago

            இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் ராஜா மந்திரியாகி இருக்க முடியாது,நாராயணன் ஜனாதிபதி ஆகி இருக்க முடியாது.தமிழன் வெள்ளக்காரன் ஆகும் போது ,சோனகன் என தன்னைச் சொல்லிக் கொள்வதில் பெருமை அடையும்போது பார்ப்பணன் ஆவது சாதாரணம்.திராவிடர் கழகம் பெரியாருக்குப் பிறகு பிராடுகள் கழகமானதே மக்கள் வராததுக்கு காரணம்.

          • thurai ilamurugu says:
            15 years ago

            முழுமையான இட ஒதுக்கீடு என்பது என்ன /விகிதாச்சாரப்படி உள்ள இட ஒதுக்கீடு இப்பொழுது உள்ளதை விட அதிக மாகஸ் சாத்திது விடும் என்ர் எந்த அடிப்படையில் கூறுகிறிர்கள்? ப்ரும்பானமையான தமிழரகல் இட ஒதுக்கீட்டிபடி பயன் அடிந்த்தும் தன் பயனை புதிய பார்னான் அவதர்கு பயன் படுத்துகிறான் பெருகிவிட்ட பக்தி மார்க்கம் இதைதெள்வாகக் காட்டும் . திறமைற்ற பர்ர்ப்பன் ஆள்வதே மேல். திறமையான பார்ர்ப்பபன் ஆணடால் கதி கந்தல் ஆகி விடும் மீல் நிலைக்கு சென்ர ஒடுக்கப் பட்ட மக்கல் தங்க்களுடிய பழைய வாழ்க்கயை மறக்காமல் தன்னுடைய இனத்தைமுன்னேற்றமுன்றால் மாடும் கூட போதும் இட ஒதுக்கிட்டை நான் எதிர்க்கவில்லை அதுவே எல்லவ்றிறகும் தீர்வாகிவிடாதுஎன்பது எமது கருத்து,

  48. GST says:
    15 years ago

    நண்பர்களே !
    உழைப்பாளி மக்களின் விடுதலைக்கு கர்னாடக இசையோ அல்லது ரகுமானின் மேற்க்கத்திய இசையோ உதவ போவதில்லை.கர்னாடக இசை மதத்தின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.சினிமா இசை பெரு முதலாளிகளின் கையில்
    கையில் சிக்கியுள்ளது.இன்றுள்ள மதமும் ,சினிமாவும் மக்களை ஏமாற்றி வரும் இரண்டு மிகப் பெரிய சுரண்டல் ஸ்தாபனங்கள்.வெளியே இரு துருவங்களாக போல தெரிந்தாலும் மக்களை ஏமாற்றுவதில் அவர்கள் ஒற்றுமை உள்ளீடாக இருக்கிறது.
    மதம் மக்களிடம் இல்லாத ( சொர்க்கம் – நரகம் ) ஊரைப் பற்றி பேசுகிறது/ வழிகாட்டுகிறது .சினிமாவோ இருக்கிற ஊருக்கு தவறான வழியை காட்டிக்கொண்டிருக்கிறது.

  49. thurai ilamurugu says:
    15 years ago

    அய்யா மததையும் சினிமாவையும் ஒரே நிகராக பர்ர்பது தவறு நீங்க்கள் விரும்பினால் ஒரு நல்ல சினிமாவைக் கொடுக்க முடியும் ஒரு நல்ல மதம் என்பது கிடையாது.சினிமவைக் கொண்டு பல சீர்த்திருத்தக் கருதக்களை எல்லா மொழியுலும் பலர் சொல்லியுருக்கின்றனர் .மதத்தைப்பற்றி அப்படி சொல்லமுடியாது, மத்ம்

  50. GST says:
    15 years ago

    தம்பி ராசா முருகு !

    நீர் முதலில் நான் எழுதிய கருத்தை ஊன்றி வாசியும்.இங்கு நடப்பது இசை பற்றிய வாதம்.நீர் இப்போ வேறெங்கோ போகப் பார்க்கிறீர்.

  51. thurai ilamurugu says:
    15 years ago

    ஊன்றிப் படித்து விட்டேன் நான் எழுதிய கருத்தில் பிழை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை

  52. xxx says:
    15 years ago

    ‘ஈரிரண்டு நான்கு’ என்கிறார் மாணவர்.
    ‘அப்படியில்லை, ஈரிரண்டு நான்கு’ என்று திருத்துகிறார் ஆசிரியர்.
    ஏனென்றால் ஆசிரியருக்கே அதிகம் தெரியும்.

    • THAMILMARAN says:
      15 years ago

      எண்ணீரண்டு பதினாறூ என்றார் கண்ணதாசன் அதிலே விழுந்து எழுந்து அர்த்தமுள்ள இந்து மதம் தந்தார்.இங்கு இருந்து இந்தியா போனார் ஒருவர் அவர் கல்கியை யாரும் ஈழத்தில் படிப்பதில்லையாம், ஜெயகாந்தனைத்தான் படிப்பார்களாம் எப ஸ்டேட்மெண்ட் விடுகிறார்.அவருக்கு வைரமுத்துவின் கருவாச்சி காவியம் தெரியவில்லை இவரெல்லாம் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியர் என்பதை தாங்க முடியவில்லை.இங்கே என்ன நடக்கிறது நித்திரையில் புலம்புவது போல தம்பி இளமுருகு புலம்புகிறார் அவர எழுப்ப வெளீக்கிடும் அண்ண ஜி.எஸ்.ரி.க்கு தான் தூங்கி எழுந்து விட்டதாய் இளமுருகு நடிக்கிறார்.யாரை யார் எழுப்புவது என்பதே பிரச்சனையாகி விட்டது இஙே.

      • thurai ilamurugu says:
        15 years ago

        ஒன்னும் புரியல்லியே ம் ம் ம் ஒன்னும் புரியல்லியே மொன்னும் புரியல்லியே மொன்னும் புரியல்லியே ம்

        • THAMILMARAN says:
          15 years ago

          வைரமுத்து,மு.மேத்தா,நா.காமராஜன்,தமிழன்பன் என நாங்கள் காவித் திரிந்த காலம் நினைவில் மோதி நிலைக்காலம் போய் விட்டேன்.வசந்தா வைத்தியநாதன் ஈழத்தில் சிறந்த கர்நாடக இசைப் பாடகி, இன்னொருவர் இப்போது கனடாவில் இருக்கிறார் பெயர் மறந்து விட்டது.கவிதைக்கு நாங்கள் புதுவையை நேசித்தோம்.கர்நாடக இசையை வானொலியில் போடுவார்கள்.போர் மூர்க்கம் கொண்டது.ஒன்றூம் புரியவில்லை நமது வாழ்க்கை ஏன் இப்படியாயிற்றூ.

  53. GST says:
    15 years ago

    தம்பி ராசா முருகு
    உமக்கு அப்படியான புரிதல் இருக்குமென்றால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.இங்கே நான் குறிப்பிட்டது தமிழ் சினிமாவை ,நீர் உலக சினிமாவுக்கு தாவி விட்டீர். நீர் இப்படியே தாவித் ,தாவிக் கொண்டே இரும்.
    வாழ்த்துக்கள்.

  54. செல்வன் says:
    15 years ago

    நாப்பிற ………….பாப்பியா …….நாப்பிரனாப்பியா ………….நாப்பிற ……நாப்பியா

    மீண்டும் ஒரே தவறு.அது மீண்டும் ,மீண்டும். மீண்டும் ,மீண்டும் ,மீண்டும், மீண்டும் தொடர்வது அலுப்பு தட்டுகிறது.

  55. thurai ilamurugu says:
    15 years ago

    தமிழில்நல்ல சினிமாவே வ்ரவில்லை என்பது உங்கள்து கருத்து போலும்

  56. thurai ilamurugu says:
    15 years ago

    தமிழ் மாறன் ராசா மந்திரி ஆகி என்ன செய்தார்? இப்பொதிய செய்திகளைப் படிக்கவும் நாரயனன் குடியரசு தலவராகி என்ன செய்தார் அவர் மற்றும் ஒரு ரப்பர் அச்சாகவே செயல் பட்டர் கொஞ்ச்கம் முரண்டிப் பார்த்தார் அவ்வலுதான். கெ ஜி பாலகிர்ட்டினன் உக்க நீதி மனற நீதிபதி யாகி என்ன செய்தார் தமிழன் பார்ப்ப்னன் ஆகினால் பரவயில்லை என்பது உங்க்கள் எண்ணம் , இன்னொரு பர்ப்பனக் கூட்டத்திற்கு அமைப்பட நாம் த்யாராஅக இல்லை யாருக்கவாது அடிமை ஆகத்தான் இருக்க வேடும் என்றால் புதிய என்ன பழைய என்ன ?/

  57. THAMILMARAN says:
    15 years ago

    ராசாவின் தலைவிதி அவரை விளயாட வைத்து விட்டது அவரோடு சேர்ந்து விளயாடியோர் எப்படியோ தப்பி விட்டனர்.சனாதிபதி பதவி ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமேபால் கிருஸ்ணன் தலைமை நீதிபதி என்பதையே நினைத்துப் பார்த்திருக்க முடியுமா.எம்மால் பார்ப்பணனாக சிந்திக்க முடியுமே தவிர பார்ப்பணனாக முடியாது ஏனெனில் நாம் சூத்திரர்.

    • thurai ilamurugu says:
      15 years ago

      தமிழ் மாறன் தலைவிதி, பார்ப்பனன் போல் சிந்திப்பது எங்கே போய்க் கொண்டிருக்கிறிர்கள்?

      • THAMILMARAN says:
        15 years ago

        பரிகாரம் பார்ப்பதற்கு குருக்களீடம் போய்க் கொண்டிருக்கிறேன்.லண்டனில் குருக்களாய் இருப்போரில் அனேகர் அழகான மாளீகைகள் வைத்திருப்பதால் இங் கிருந்து செல்வோர் தங்க வசதியாக இருக்கிறது.அது மட்டுமல்ல பார்ப்பணரை எதிர்ப்போர் என்போரும் அவர்கள் வீடுகளீல்தான் தஞ்சமடைகிறார்கள்.என்ன கொடுமையய்யா இது.

  58. GST says:
    15 years ago

    தம்பி இள முருகு
    இப்படி வருகிற வாய்ப்புகளை விட்டதால் தான் ,மலையாளிகள் எல்லாம் அதிகாரத்தில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.உம்மைப்போல வீரம் பேசி தான் தம்பி பிரபா கொட்டை விட்டார்.
    மண்ணில் நடக்க முயற்சி செய்யவும். விண்ணில் பறந்தது போதும்.

    • thurai ilamurugu says:
      15 years ago

      அய்யா ,20 /30 வருடங்க்களுக்கு முன் தில்லி செயலகம் முழுவதும் தமிழ்ப் பர்ப்பனர்களே இருந்த்னர் அத்னல் என்ன நன்மை வந்து விட்டது . சாதியை மட்டும் எண்ணாமல் சிறிது வர்ககதைப்பற்றியும் சிந்தியுங்கள்; மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

      • Ramea says:
        15 years ago

        பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள மாட்டோம் என்று எப்படித்தான் அடம் பிடிக்க முடிகிறதோ தெரியவில்லை. பார்ப்பனர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரை விடிவு இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இந்தியாவைப் பொறுத்த மட்டில் வர்க்கம் சாதிக்கு உட்பட்டு இருக்கிறது.
        திறமையற்ற பார்ப்பனர்கள் தாழ்நிலை வேலைகளிலிருந்து தப்ப விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் ஏன் கோபம் வருகிறது?

        • thurai ilamurugu says:
          15 years ago

          பார்ப்பனர்க்ள் அதிகாரதில் இருக்கும்வரை விடிவு இல்லை சரி ஆனால்ல் சூத்திரன் ஆட்சிக்கு வந்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடாது. உழைக்கும் வர்க்கதை சேர்ந்த சூத்திரன் ஆட்சிக்கு வந்தால் தான் சரியாகும்.. சூத்திரர்கள் எல்லாம் நல்லவரகள் அல்ல 60 ஆண்டுகால இட ஒதுக்கீடு இதை நிருபித்துவிட்டது.
          நீங்க்கள் எனக்கு வலிந்து பார்ப்பனமுதிரைக் குத்தமுயல்வது எனக்கு புரிகிறது . திறமை இல்லாத பார்ப்னாப் பற்றி உங்களுக்கு ஏன் இவ்வளவு கவலை ?
          விகதாச்சாரப்படி இட ஒதுக்கீடு என்பது ஒரு வீண் கனவே. பொதுப் பட்டியல் என்ற ஒன்று இல்லாமல் போவதை எந்த நீதிமன்றமும் ஒப்புக் கொள்ளாது

          • THAMILMARAN says:
            15 years ago

            உழைக்கும் வர்க்கம் என்பது உழைக்கும் வரைக்கும்தான் அந்த உழைப்பாளீ உயர்ந்து விட்டால் அவனும் பார்ப்பனாகி விடுகிறான்

          • Ramea says:
            15 years ago

            விகிதாசார ஒதுக்கீட்டிற்கு இப்போதைய நீதிமன்றம் ஒப்புக்கொள்ளாது. ஆனால் மக்கள் ஒன்றுபட்டால் முடியும். திறமையில்லாத பார்ப்பனர்கள் கீழ் நிலையில் இருந்து தப்பித்து விடுவதால் திறமையுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் அவ்விடங்களில் புகும்படி சமூகச் சூழல் வற்புறுத்துகிறது. இது மனித வளத்தை வீணாக்கும் தேசத் துரோகச் செயல். விகிதாசார ஒதுக்கீடு இருந்தால் சாதி அடிப்படையிலான உயர்வு தாழ்வு மறைய அரம்பித்துவிடும். அப்பொழுது வர்க்க வேறுபாடு முன்னணிக்கு வரும். இது முடியாது: ஆகவே வேண்டாம் என்று பார்ப்பனர்கள் கூறினால் அயோக்கியத்தனம். மற்றவர்கள் கூறினால் கோழைத்தனம்.

  59. Ramea says:
    15 years ago

    நன்றி இளமுருகு அவர்களே! இட ஒதுக்கீட்டை எதிர்க்காததறகு நன்றி. இடஒதுக்கீடு ஒன்றே தீர்வல்ல என்பது சரி தான். அதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுங்கள். திறமையற்ற பார்பபான் ஆள்வது மேல் என்பது எப்படியும் பார்ப்பான் கையில் இருந்து அதிகாரம் நழுவி விடக் கூடாது எனத் துடிக்கும் பார்ப்பனர்களின் துடிப்பாகத் தான் இருக்க முடியும். இந்த தேசத் துரோகச் செயலை எப்படி ஜீரணிப்பது? ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் நலனுக்காக இருக்க முடியாமல் செய்யும் சக்தியே பார்ப்பனரகளின் கையில் தளராது இருக்கும் அதிகாரப் பிடிப்பு தான். புதிதாக அதிகாரப் பணிகளில் நுழையும் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை;ப் பற்றி மெளனம் சாதித்து அவர்களுடைய இயலாமையைக் குறை கூறுவது என்ன நியாயம்? ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வரும்போது அவர்களைச் சமூக நீதிக்காகச் செயல்பட விடாமல் தடுக்கும் பார்ப்பனத் தந்திரங்களைத் தணிக்கை செய்து அவற்றை வேரறுக்கும்படியான அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் கைப்பற்றும் பொழுது நிலைமை சீர்திருந்தும். இப்பொழுது பார்ப்பனர்கள் தங்களிடம் வலிமை இருக்கிறது என்ற மமதையில் இருக்கிறார்கள். ஆம் பார்ப்பனர்கள் வலிமையானவர்கள் தான். ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்களை எதிர்த்துத் தங்கள் வலிமையை ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது. பல சமூக மாற்றங்கள் இப்படிப்பட்ட தடங்கல்களைத் தாண்டித்தான் நிகழ்ந்துள்ளன.

  60. புத்திரன் says:
    15 years ago

    தமிழ்மாறன் அவ்வப்போது சில நல்ல கருத்துக்களை வெளியிடுகிறார். தன்னை சூத்திரன் என்கிறார்.
    தாழ்த்தப்பட்டவர்களை ” தலித் ” என்று நா கூசாமல் எழுதும் பல “அறிவாளிகள் ” வெள்ளாள ,வன்னிய ,தேவர்,கள்ளர் இன்ன பிற சாதிகளை சேர்ந்தவர்களை ஏன் “சூத்திரன் ” என்று எழுதுவதில்லை ?
    உதாரணமாக இளையராஜாவை ” தலித் ” என்று கூசாமல் எழுதும் எந்த ஒரு முற்ப்போக்கு வாதியும் மறந்தும் சூத்திரன் ரகுமான் என்றோ ,சூத்திரன் வைரமுத்து என்றோ ,சூத்திரன் பாரதிராஜா என்றோ , ,சூத்திரன் சத்தியராஜ் என்றோ எழுதுவதில்லை.
    சூத்திரர்களே கொஞ்சம் நிதானமாக சிந்தியுங்கள். நீங்கள் பிராமணர்களை விமர்சிக்கும் அருகதை யற்றவர்கள்.
    துரைஇளமுருகு வின் கருத்துக்கள் மறுக்க முடியாதவை.

    • THAMILMARAN says:
      15 years ago

      தங்கள் கருத்துக்களூக்கு தலை வணங்குகிறேன் ஆனால் ஒன்ற விளங்க முடிகிறது உங்களூக்கு தமிழில் வாசிப்பு குறவு புத்திரன்,பார்ப்பணனே சாதிகள கூசாது எழுதி தமிழரிடை சிண்டு முடிப்பவன் முற்போக்குவாதி அல்ல.அது மட்டுமல்ல தன்னைப் பார்ப்பணன் எனப் பெருமை பேசுபவன்.பாலகுமாரன்,வாலி, கமல்காசன், சோ,என போகும் வரிசையின் நீளம் அதிகம்.

  61. selvan says:
    15 years ago

    இசையை தாண்டி ராஜா சோழன் ,பின் இளையராஜா ,இப்போ இட ஒதுக்கீடா துரை இல முருகுவும் .தமில்மாரனும் ஓயவே மாட்டார்கள் போலுள்ளது .

  62. THAMILMARAN says:
    15 years ago

    செலவன் இசையே தன்னை சாதி வகுத்துத்தான் இசைக்கிறது.தலித்தின் இசையாக பறயும்,பார்ப்பணரின் இசையாய் கர்நாடகமும் இல்லை என்பீர்களா? அலைகள் ஓய்ந்தாலும் நமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

  63. thurai ilamurugu says:
    15 years ago

    நீங்க்கள் சொல்லுவது உண்மைதான் தமிழ் மாறன் . அது போல்தான் சூத்திரனும். பணம் சமபாதிக்கும் வரைதான் பார்ப்பன எதிப்பாளி அப்புறம் புதிய பர்ப்ப்னன் இந்த் சிக்கல் தீருவதற்கு ஒரே வழி வர்க்கப் போராடடாத்தையும் சாதி ஒழிப்பு போராட்டாத்தையும் இணப்பதுதான் ஆனால் அது நட்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவதில் சாதீயத் தலவர்க்ள் / . பூர்வீக ப்பொதுவுடமைவாதிகள் இருவரும் கவனமாய் இருக்கிண்றனர் அது உடையும் நாளே தமிழனுக்கு பொன்னாள். .
    இரமீயா
    சினம் கொள்ளவேண்டாம் இன்றைக்கு இயலக் கூடியதை நான் சொன்னேன் மக்கள் ஒன்று பட்டால் அத்துடன் நிறுத்த வேண்டியதேவை இல்லை / முழுமையான தன்னாட்சிக்கோ அல்லது முழுமையான நிகரமைக்கோ சென்றுவிடலாம் மக்கள் இணைய மறுப்பதும் அவர்க்ளை தலவர்கள் இணைக்க மறுப்பதும்தான் சிக்கலே . அப்படி இருக்க விகிதாச்சார இடஒதுக்கீடு எப்படி மக்களை இணைத்துவிடும் என்று எதிர் பார்க்க்கிறிர்கள் இருகின்ற 69% தக்கவைக்க தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் இதில் ???? எண்ணித் துணிக கருமமென்பது வள்ளுவர் வாக்கு .அதைச் சொன்ன நான் கோழையாகவே இருந்துவிட்டுப் போகிறேன்

    • Ramea says:
      15 years ago

      இன்றைக்கு இயலவல்லை எனபதற்காக எதிரிகளிடம் சரணடைந்து விடுவேன். அது தான் எண்ணித் துணியும் கருமம் என்று வள்ளுவரை வேறு துணைக்கு அழைப்பது விசித்திரமாக இருக்கிறது. ஆரம்ப காலத் தோல்விகளையும் நம்முள் உள்ள துரோகிகளையும் காரணம் காட்டி எதிரிகளின் பக்கம் சேர்ந்து கொள்வது வள்ளுவரின் அறிவுரையின்படி நடப்பதாக ஆகாது. அதற்குப் பதிலாக சும்மா இருந்து விடலாம். அது சமூக நீதிக்கான கருத்துருவாக்கத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாமலாவது இருக்கும்
      ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றைக்கு அடைந்துள்ள ஓரளவு முன்னேற்றமும் மிகுந்த இடர்ப்பாடுகளுக்கு அப்புறம் தான் கிடைத்தது. தாங்கள் கூறுவது போல் முடியாது என்பதற்காக எதிரிகளின் பக்கம் சேர்ந்து இருந்தால் இந்தச் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்பட்டு இருக்காது.

      • Ramea says:
        15 years ago

        வர்க்கப் போராட்டத்தைப் பற்றியும் சாதி ஒழிப்பு பற்றியும் பேசியிருக்கிறீர்கள். சாதியைச் சந்திக்காமல் புரட்சியைச் சந்திக்க முடியாது என்று மாமேதை அம்பேதகர் கூறியதை நினைவு கொள்ளல் நலம்.

        • thurai ilamurugu says:
          15 years ago

          அம்பேத்கார் சாதியை சந்திக்காமால் புரட்சி செய்யமுடியாது என்று சொன்னார் சரி அது போல் வர்ககப் போரராட்டம் இல்லாமல் சாதிகொடுமைகளை ஒழிக்க முடியாது . அம்பெத்காரின் வர்க்கம் பரற்றிய பார்வை தவறானது அவர் தம்மை பொதுவுடமை தத்துவத்தின் எதிரி என்று பகிரங்கமாக முழங்கியவர் அவ்வாறு முழங்கிய மற்றும் ஒரு தலவர் ராசாசி. இரு துருவங்கள் எங்கே சந்திகின்றன் பாருங்கள் , கார்ல் மார்க்ஸின் தத்துவங்கள் காலாவதி ஆகிவிட்டன. நான் காங்கிரசுடன் வேண்டுமானாலும் ஒன்று பட்டுப்போராடுவேன் ஆனால் கம்யூனிஸ்டுகளை என்னல் சகிக்கமுடியாது இவை எல்லாம்கூட அம்பெத்காரின் பொன்மொழிகள் தான் பெரியார் பொதுவுடமையை வெறுத்தவர் அல்ல . கம்யூனிஸ்டு அறிக்கையை முதலில் தமிழில் மொழிபெய்ர்த்து வெளியிட்டது அவரது குடியரசு பத்திரிக்கை அதற்காக அவரின் அண்ணன் [அவர் அப்போது குடியரசின் பதிப்ப்பாளார்” சிறை செய்ப்பட்டார். தென்னாட்டின் முதல் பொதுவுடமையளர் சிங்காரவேலருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் பெரியார். அம்பெத்கார் இந்தியத்தை ஒரு பொழுதும் எதிர்த்தில்லை பெரியார் ஒரு போதும் இந்தியத்தை ஒத்துக் கொண்டவரில்லை.அம்பேத்கார் மேற்கோளைக் காட்டி என் வாயை அடைக்க முயலவேண்டாம்.

      • thurai ilamurugu says:
        15 years ago

        தமிழ் நாட்டில் இதுவரை இட ஒதுக்கீட்டுக்கு எனபெரிய அளவில் மக்கள் திரள் போராட்டங்காள் நடைப் பெற்றதில்லை . மொழிப்போர் போலொரு இட ஒதுக்கிடு போரட்டம் காட்டமுடியுமா? எல்லாம் அரசுகள் பார்த்து செய்தவை
        தலித் இட ஒதுக்கீடு ஆங்கிலேயா ஆட்சியின் வட்டமேசை மானாட்டில் முடிவு செய்யப் பட்டது விடுதலைக்குப்,பிறகு தமிழ் நாட்டில் பிற் பட்டோருக்கான இட ஒதுக்கீடு பெரியார் தலையீட்டின் விளைவாக நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டம் திருத்தப் பட்டு ஏற்பட்டது . இதில் என்ன மக்கள் பங்குஇருக்கிறது”

  64. புத்திரன் says:
    15 years ago

    தமிழ்மாறன்
    பார்ப்பான் செய்கிறான் ஒப்பு கொள்கிறேன். இப்போ எந்த வெப் சைட் காரர் “தலித் ” என்று எழுதுவதில்லை என்று நீங்கள் சொல்வீர்களானால் அவர்களை நான் பார்வையுடுகிறேன்.
    தலித் என்று சொல்வது அவர்களை மேலும் இழிவு படுத்தும் ஒரு சொல். அது இப்போ புது சாதியாக உருவாக்கி விட்டது.
    அ.மார்க்ஸ் என்ற புண்ணியவான் தான் இதை காவிக் கொண்டு ஊர் எல்லாம் வித்தவர்.சோபசக்தியின் வெப் சைட் இல் கவிஞர் வ.ஐ .ச .ஜெயபாலன் தனது மேதா விலாசத்தை எடுத்து இயம்பி இருக்கிறார்.ஒருக்கா அங்கே போய் பார்க்கவும்.
    shopasakthi.com

    • THAMILMARAN says:
      15 years ago

      புத்திரன் தங்கள் மீது இனம் தெரியாத ஸ்னேகம் எனக்கு ஏனென்றால் வீட்டில் கரெண்ட் கட்டானது போல நீங்கள் கத்துவதுதான்.யதார்த்தம் எதுவோ அதை மறத்து பொய் முகமூடி போட முடியாது.மார்க்ஸ் இற்கு முன்பே தலித் இருக்கிறது.இது நந்தனார் கதையில் இருந்து நட க்கும் நாடகம்,காட்சிகள் மாறீக் கொண்டிருக்கின்றன அவ்வளவே.

  65. புத்திரன் says:
    15 years ago

    சக்தி எல்லாம் திரண்டு “சிவம்” பெருக .
    சிவம் எடுக்கும் பல அவதாரங்களில் ஒன்றே “தமிழ்மாறன் “என்பது புரிகிறது.விசயங்களை திசை திருப்புவதில் வல்லவர் நீங்கள் என்பது தெளிவாக தெரிகிறது.என் கேள்விக்கு என்ன பதில் ?
    இப்போ எந்த வெப் சைட் காரர் “தலித் ” என்று எழுதுவதில்லை என்று நீங்கள் சொல்வீர்களானால் அவர்களை நான் பார்வையுடுகிறேன்.
    இந்த தலித்தியத்தை சி.கா.செந்திவேல் ஏற்கிறாரா ?

  66. Ramea says:
    15 years ago

    ஐயா. துரை இளமுருகு அவர்களே! வர்ககம் சாதிக்குள் முடங்கிப் போயிருப்பது தான் இந்திய நாட்டின் விஷேஷ நிலைமை. ஜெர்மானியர்களிடையேயும் பிரெஞ்சுக்காரர்களிடையேயும் இல்லாத பிரச்சினை. கத்தோலிக்க கிருத்தவர்களிடையேயும் புராட்டஸ்டண்ட் கிருத்தவர்களிடையேயும் இல்லாத பிரச்சினை நம் நாட்டிலுள்ள சாதிகளிடையே இருக்கிறது. ஜெர்மானியர்களில் அனைத்து நிலைகளிலும் வேலை செய்பவர்கள் உண்டு. அது போல் பிரெஞ்சுக்காரர்களிலும் கத்தோலிக்க மற்றும் புராடஸ்டண்ட் கிருத்தவர்களிலும் அனைத்து நிலைகளிலும் வேலை பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் நம் சாதிகளின் நிலைமை அப்படியா? பார்ப்பனன் என்பதற்காக அதிகாரம் கொண்ட அதிக ஊதியம் உள்ள உடல் உழைப்பு தேவைப்படாத தொழில்கள் (அவர்களுக்குத் திறமை இலலாவிட்டாலும்) கிடைக்கும். மற்றவர்களுக்கு அந்த வசதி கிடைக்காது. சுரண்டலை ஒழிக்கப் போவதாக மார்தட்டும் கம்யூனிஸ்டுகள் இந்தியாவில் நிலவும் இக்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதைப் பற்றி அக்கறை காட்டாத பொழுது அம்பேத்கர் அவர்களைச் சாடியதில் தவறு என்ன இருக்கிறது? சாதியையும் வர்ணத்தையும் ஆதரித்த காங்கிரஸ் எதிரி என்றால் சுரண்டலை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு சாதிக் கொடுமைகளைக் களைவதைப் பற்றிப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றால் அவரகள் கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள் அல்லவா? எதிரியை நம்பினாலும் துரோகியை நம்பக் கூடாது என்ற அடிப்படையில் அம்பேத்கா; சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?

    அம்பேத்கரின் வர்க்கம் பற்றிய பார்வையில் தவறு இருக்கிறதா இல்லையா என்ற வாதம் எப்பொழுது எழும்? சாதி அடிப்படையில் வேலையின் தன்மை நிர்ணயிக்கப்பட முடியாமல் போகும் பொழுது தான். இன்று வரையிலும் இது முடியவில்லை. உயர்நிலை வேலைகள் அனைத்திலும் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். இடஒதுக்கீடு முழுமையாகச் செயல்படாத நிலையில் அதிகார வட்டத்திற்குள் சென்றுள்ள மிகக் குறைந்த அளவிலான ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய வலுவற்ற நிலையில் பார்ப்பனர்களை எதிர்த்துப் போராட முடியாததைச் சுட்டிக் காட்டி இட ஒதுக்கீடே கூடாது என்று கூக்குரலிட வைக்கும் உயர்சாதிக் கும்பல். மொத்தத்தில் பார்ப்பனர்கள் (திறமையில்லாவிட்டாலும்) சுகம் அனுபவித்தே தீர வேண்டும் என்பதில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது. மற்றவர்கள் மனித வாழ்வின் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று ஆசையே படக் கூடாது. பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு தான்.

    சரி! வாதத்திற்காக வர்க்கப் போராட்டம் நடைபெறுகிறது என்றே வைத்துக் கொள்வோம். இன்று திறமையற்ற பார்ப்பனர்களை தாழ்நிலை வேலைகளுக்கு அனுப்பமாட்டோம் என்று அடம் பிடிக்கும் கும்பல் புரட்சி முடிந்த பின் மட்டும் சாதியை அடிப்படையாகக் கொள்ளாமல் திறமையை மட்டும் அடிப்படையாக் கொண்டு வேலைகளை நிர்ணயிக்கும் என்று எப்படி ஏற்றுக் கொள்வது? பழைய வர்ணாசிரம முறையை அமல்படுத்திவிட்டு வேலையில்லாத் திண்டாட்டம் இல்லை பாருங்கள் இது தான் சோஷலிச சமுதாயம் என்று மார்தட்டமாட்டாரகள் என்பது என்ன நிச்சயம்?

    இன்றைய பொதுப் போட்டி முறை உயர்நிலை வேலைகளுக்குத் திறமைசாலிகளைத் தெரிந்தெடுக்காமல் உயர்சாதிக் கும்பலையே தெரிந்தெடுக்கும் புற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ளது. குணப்படுத்த முடியாத இந்த புற்று நோயை ஒரேயடியாக அழித்து விட்டு விகிதாசார ஒதுக்கீடு முறையை அமல்படுத்தினால் தான் அனைத்து நிலைகளிலும் அனைத்து சாதியினரும் பிரநிதித்துவம் செய்ய முடியும். அப்படி நிகழும் போது ஜெர்மானியர்களுககிடையிலும் பிரெஞ்சுக்காரர்களுக்கிடையிலும் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டண்ட் கிருத்தவர்களிடையேயும் வேலைப் பிரிவினையில் கொடுமைகள் நிகழாதது போல இந்தியாவிலும் சாதிகளுக்கு இடையே கொடுமைகள் நிகழாது. அப்புறம் வர்க்க முரண்பாடுகள் முன்னணிக்கு வரும். அதற்கு உடனடித் தேவை பொதுப் போட்டி முறையைப் பீடித்துள்ள புற்று நோயைப் பற்றியும் விகிதாசார ஒதுக்கீடு மட்டுமே திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரே வழி என்பதைப் பற்றியும் விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் உருவாககுவதே.

    அப்படிப்பட்ட நிலை உருவானால் இப்பொழுது துரோகம் இழைத்துக் கொண்டு இருக்கும் அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். உயர்சாதிக் கும்பலும் மக்கள் சக்திக்கு முன் மண்டியியிட வேண்டி வரும்.

    இதை நன்றாகப் புரிந்து கொண்டுள்ள உயர்சாதிக் கும்பல் இக்கருத்தின் பால் மக்கள் சிந்தனை சென்றுவிடக் கூடாது என்று படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது. உயர்சாதிக் கும்பலின் சாகசத்தில் மயங்கப் போகிறோமா அல்லது நம் நலன்களை நாம் முன்னெடுத்துக் கொண்டு செல்லப் போகிறோமா?

  67. கணேஷ் says:
    15 years ago

    சாதாரண ஒரு சினிமா படமான மம்முட்டி நடித்த் ” அம்பேத்கார் ” திரைப்படத்தை வெளியிட துப்பில்லாத அநாகரீகம் படைத்தவர்கள் வர்க்க போராட்டத்தை நடத்துவதாக சொல்வது பொய் வேலை.உழைக்கும் வர்க்கம் இந்தியாவில் சாதியே தவிர வேறில்லை.சாதி ஒழிப்பு போராட்டம் என்பதை முன்னிலைபடுத்த உயர்சாதியினரிடையே தான் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.அவர்கள் தான் இந்த கேவலமான நிலையை பற்றி சிந்திக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் கால காலமாக இதற்காக போராடி வருகிறார்கள்.உயர் சாதியினர் எண்டு சொல்ல படுபவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.ஒரு வகையில் தாழ்த்தப் பட்ட மக்கள் சலித்து விட்டார்கள்.
    தம்மை நாகரீக மக்கள் என்று “உயர் மக்கள் ” கருதினால் அவர்கள் தான் முன் வர வேண்டும் .இந்த நோயை ஒழிக்க.இது தான் வழி.

    • Ramea says:
      15 years ago

      பெரியார் படத்தை உப்பு சப்பு இல்லாமல் எடுத்தது போல அம்பேத்கர் படத்தையும் எடுத்திருந்தால் வெளியிட்டு இருப்பார்கள். அம்பேத்கர் படத்தை நல்ல விதமாகப் பிடித்து விட்டார்கள் போலிருக்கிறது.

  68. thurai ilamurugu says:
    15 years ago

    அய்யா, ,
    எதிரிகளை விட துரோகிகள் கொடியவர்கள் என்று அம்பெதகார் கருதியிருக்கலாம் என்று கூறுகிறீர்கள் . நன்று இதைத்தான் சென்ற தேர்தலின் போது சிலர் சொல்லிக் கொண்டு பார்ப்பன செயலலிதாவை ஆதரித்தனர் . இதைதான் ஈழ விடுலைப் போரின் போது சொன்னார்கள் இன்று துரொகியயும் காணவில்லை , போராட்ட நாயகர்களையும்காணவில்லை /எதிரி ரஜபட்சே மட்டும் இருக்க்கிறான் . ஒரே இனத்தை சேர்ந்தவர்களை அழித்துக் கொள்ளுவதற்கு மேற் சொன்ன வாசகத்தை விட சிறந்தவழி வேறு கிடையாது, அப்படியே செய்யுங்கள் துரோகிகள் என்று பெய்ரிட்டு நன்பர்களை குத்துங்கள் எத்ரியுடன் குலாவுங்கள் உங்கள் இலக்கை விரைவில் அடைவீர்கள்
    அம்பெத்கார் படத்தை உயர் சாதியினர் வெளியிடவேண்டுமாம் ஒருவர் புலம்பியுருக்கிறார் ஏண் ? தலித் தலைவ்ர்களுக்கு என்ன ஆயிற்று? தொல் திருமா. கிருட்டுணசாமி . செ.கு தமிழரசன் நினைதால் வெளிக் கொணரமுடியாதா? தலித்கள் என்று தங்களைப் பெருமையுடன் அழைத்துகொள்ளும் உயரதிகாரிகள், எழுதாளார்கள், கவிதாயினிகள் நினைத்தால் செய்ய முடியாதா? 2% விழுக்காடுப் பார்ப்பனன் தன் விருப்பம் போல் செய்கிறான் அரசு உதவியை நாடுகிறானா/? 18% இட ஒதுக்கீடு பெற்ற பின்னரும் தலித்துகளால் ஏன் செய்யமுடியவில்லை? தேவை எல்லாம் பணமல்ல .மனம்தான் அம்பெத்காரை வைத்துக் வோட்டுகேட்கும் கட்சியினர்செய்யமாடார்களாம் கம்யூனிஸ்டுகள் [ உங்கள் மொழியில் துரொகிகள்]] செய்யவேண்டுமாம் /

    அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு3% செய்தபோது அதைஎதிர்த்தவர்கள் யார்? உடயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது யார் ? தங்களுக்கு உள் கீழானா அருந்த்தியினருக்கு நன்மை செய்வதை எதிர்த்தவர்கள் விகதாச் சார இட ஒதுக்கீடு போராட்டத்தில் குதிக்கப் போகிறார்களாம் இராமியா சொல்லுகிறார் நாம் நமபவேண்டுமம்?
    ஒரு வாத்த்திற்கே வைத்துக் கொள்ளுவோம்
    சாதிகள்முற்றும் ஒழித்த பிறகு அமைகின்ற சமூகத்தில் நீங்கள் வர்க்கப் போராட்டாத்தை ஏற்றுக் கொள்ளூவிர்கள் என்பது என்ன உறுதி? மூலதனம் போட்ட்வனுக்குத்தான் முதலிடம் உழைக்கிறவன் விருப்பம் இருந்தால் வேலை செய்யட்டுமம் இல்லை யென்றால் ஓடட்டுமென்று சொல்ல மாட்டிர்க்ள் என்று என்ன உறுதி?புதிய வருணஸ்ரமத்தை உண்டாக்கமாட்டிர்கள் என்பது என்ன உறுதி?
    மார்க்சீயப் புரிதலின்று நடத்தப் பட்ட எந்த் புரட்சியும் வெற்றிப் பெர்ற்றதாக வரலாறு இல்லை மொழி, இனம்,சாதி அகியவற்றை முன்னிருத்திய போரட்டங்கள் என்னகதி ஆயிற்று என்று இரமீயாவிற்கு தெரியாதா? மார்க்சீயத்தில் குறைகளிருக்கலாம் ஆனால் இன்றுவரை ஒடுக்கப் பட்ட மக்களுக்கு வழிகாடியாகவேறு த்ததுவம் இல்லை இராமியா ஏதாவ்து வைத்திருந்தால் எடுத்துவிடட்டுமே?
    தீண்டமை ,,இரட்டைக்குவளை போண்ற கொடுமைககளைக்கூட விகதாச்சார இடஒதுக்கீடுப் போராட்டதை முடித்தது விட்டுதான் செய்வதாக நொக்கம போல.
    அரசியல் இட ஒதுக்கிட்டினால் ஆட்சிக்கு வந்த மாயாவதி என்று என்ன செய்துக் கொண்டிருக்கிறர்? ஊழலின் உச்ச கட்டதை தொட்டுக் கொண்டிருக்கிறார் பார்ப்ப்னை ஒடுக்குவத்ற்குப் பதில் ஓ BCகலை ஒடுக்கிக் கொண்டிருக்கிறார் தெளிவானப் புரிதலின்றி வெற்று முழக்கங்கள் மட்டும் என்ன பயனை விளவிக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு அவர். பர்ர்பனர்கள் குறுக்கீட்டினால் முழுமையாகச் செயல் படாமல் போய்விடுகிறதாம் .ராமியா எழுதுகிறார் மாயாதேவி கூட்டு வைத்தது பார்பனர்களுடன் தானே? அவ்ர் இன்று ஒரு புதிய பார்பனராகி பொருளாதார இட ஒதுக்கீடுப் பர்ற்றிப் பேச அரம்பித்துவிட்டார்

    • Ramea says:
      15 years ago

      எதிரியை விட துரோகி மோசமானவர்கள் என்று துரோகிகள் சொல்வதற்கும் அம்பேத்கர் சொல்வதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் உண்டு. பொதுவாக அதிகார வர்க்கத்தினர் பிரச்சினைகளைப் பின்னால் தள்ளி விட்டு. தனிப்பட்ட நபர்களை முன் வைத்து வாதம் செய்வார்கள். இது தான் இப்போது நடைபெற்றிருக்கிறது.
      பார்ப்பனர்கள் அரசு உதவியைப் பெறுவதில்லை என்று ஒரு உலக மகா பொய்யை உதிர்த்து இருக்கிறார். மொத்த அரசே அவர்களுக்காகத் தான் இயங்கிக் கொண்டு இருப்பதை அவரால் எப்படி இவ்வளவு அனாயாசமாக மறைக்கத் தேன்றுகிறது என்பதை நினைத்து வியப்படையாமல் இருக்க முடியவில்லை.
      அருந்தியர்க்குத் தனி இட ஒதுக்கீடு பற்றிப் பேசியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 18மூ எந்தக் காலத்திலாவது முழுமையாக நிரப்பப்பட்டு இருக்கிறதா? என்றைக்குமே 5மூ எட்டியதில்லை. ஜெகஜீவன்ராம் இரயில்வே அமைச்சராய் இருந்த பொழுது எடுத்த கண்டிப்பான நடவடிக்கைக்குப் பிறகும் கூட இரயில்வே இலாகாவிலேயே 10மூ எட்டிப் பிடிக்க முடியவில்லை. எல்லாத் துறைகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18மூ கொடுத்த பிறகும் அருந்ததியர்கள் அதில் பங்கு கிடைக்காமல் போயிருந்தால் அந்நிலையில் நிச்சயம் தனி இட ஒதுக்கீடு தேவை. இப்போது கொடுக்கப்பட்டு இருக்கும் தனி ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட மக்களிடையே பிளவு ஏறபடுத்தும் நோக்கம் கொண்டது. முதலில் இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்துவதைப் பற்றிப் பேசுங்கள்.
      சாதிகள் ஒழிந்த சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் போய்விட்டால் என்ன செய்வது? உண்மையில் துரை இளமுருகு அவர்களின் கற்பனையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
      இன்றும் நாங்கள் வர்க்கப் போராட்டத்தை ஆதரிக்கவே செய்கிறோம். ஆனால் வர்க்கப் போராட்டம் சாதிக்குள் முடங்கி நொண்டிக் கொண்டு இருப்பதைத் தான் சுட்டிக் காட்டுகிறோம். முரண்பாடுகளின் மோதல்களில் வளர்ச்சி ஏற்படுகிறது. அம்முரண்பாடுகளில் முதன்மையான அம்சத்தை முதலில் முன்னெடுக்க வேண்டும் என்று கூறுகிறோம்.
      மார்க்சியத்தில் குறைகள் இருப்பதாக துரை இளமுருகு நினைக்கிறார். நான் அப்படி நினைக்கவில்லை. சாதியச் சூழ்நிலைக்கு ஏற்ப அதைச் செழுமைப்படுத்த வேண்டும் என்றே கூறுகிறேன்.
      விகிதாசார ஒதுக்கீட்டின் மீது ஏன் இப்படிக் கரித்துக் கொட்டுகிறார்? விகிதாசார ஒதுக்கீடு கண்டிப்பாக அமல் படுத்தப்படும்போது சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரிலும் அனைத்து நிலைகளிலும் வேலை செய்பவர்கள் இருப்பார்கள். சாதியின் பெயரில் உயர்வு தாழ்வு இருக்க முடியாது. அப்போது வர்க்க உணர்வு சாதிய உணர்வை முந்திக் கொண்டு வரவே செய்யும்.
      மீண்டும் கூறுகிறேன். இந்திய சமுதாயத்தைப் பற்றிய சரியான புரிதல் மக்களிடையே ஏற்பட்டு விட்டால் அரசியல் துரோகிகள் தங்களை மாற்றிக் கொண்டே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆகவே நமது பணி மக்களிடையே விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் ஏற்படுத்துவது தான். நம்மிடையே துரோகிகள் இருக்கிறார்கள் என்பதற்காக எதிரிகளிடம் சரணடைந்து விடுவது எப்படி சரியான வழியாக இருக்க முடியம்?

      • THAMILMARAN says:
        15 years ago

        இந்த அரச உதவி எனும் நினைப்புத்தான் முன்னேறத் தடுக்கிறது.அருந்ததியை பிடித்தி அய்யர் குடியிருப்பில் வளர்த்தால் அவரது சிந்தனைப் போக்கு மாறூவதை காணலாம்.இங்கிலாந்தில் தமிழரைக் கவனியுங்கள் இதை நடைமுறயில் காணலாம்.ராமய்யா புத்தகம் படிப்பு மட்டுமல்ல பிரக்டிக்கலாகவும் பார்க்க வேண்டும்.சாதிகல் இருப்பதால் வர்க்கம் பற்றீய சந்தை வியாபாரம் நடக்கிறது.சாதிகல் இல்லாமல் போனால் சந்தையில் வேறூ வியாபாரத்தை பிடிக்க வேண்டும்.

        • Ramea says:
          15 years ago

          என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

          • THAMILMARAN says:
            15 years ago

            அருந்ததியினத்தைச் சேர்ந்தோர் இங்கிலாந்தில் ஆசிரியராக கடமை ஆற்றூகின்றனர்,சிங்கப்பூரில் அரச பணீகளீல் உள்ளனர் அவர்களீடம் வர்க்கச் சிந்தனை கிடையாது,தமது சாதி பற்றீய தாழ்வு மனப்பான்மை கிடையாது.

  69. கணேஷ் says:
    15 years ago

    படம் இன்று வெளி வரும் என்கிறார்கள் .ராமியா வின் கருத்தை படம் பார்த்த பின் கதைக்கலாம்.

  70. thurai ilamurugu says:
    15 years ago

    இந்த வாதம் அம்பெத்கார் பற்றியது அன்று.என்வே இத்துடன் அவரைப் பற்றி எழுதுவதை விட்டு விடலாம்
    நீங்கள் மார்க்சியத்தை அவ்வளவு விரும்பினால் வர்க்க அடிப்படியிலானப் புரட்சியை எதிர்ப்பது ஏன்?
    60 ஆண்டுகால இட ஒதுக்கீடு சாதிக்கமுடியாத்தை விகிதாச்சார இட ஒதுக்கீடு சாதித்துவிடும் என்பது பச்சைப் பொய் இட ஒதுகிட்டினால் பலன் பெற்றவர்கள் அதன் பலன் கீழே கசிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவதில் கவன்மாய் இருக்கிறார்கள் தங்களுடைய உட்சாதிகளுக்கு பலன் போய்ச்சேர்வதைக் கூட அவரகள் விரும்புவதில்லை என்பதையே அருந்ததியினர் சிக்கல் காட்டுகிறது இவை எத்ற்குமே உங்களிடம் பதில் இல்லை

    • Ramea says:
      15 years ago

      வர்க்க அடிப்படையிலான புரட்சியை எதிர்ப்பதாக நினைத்துக் கொள்ளும் கற்பனை வளத்தைப் பாராட்டியே தீர வேண்டும். வர்க்க அடிப்படையிலான புரட்சியை எதிர்க்கவில்லை. வர்க்க முரண்பாட்டைச் சாதிய முரண்பாடுகள் பின்னுக்குத் தள்ளி இருப்பதைத் தான் எதிர்க்கிறோம்.
      60 ஆண்டுகளில் இட ஒதுக்கீடு செயல்பட்டு இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு இருக்கிறீர்கள். அவ்வாறு செயலபடுத்தப்படவில்லை என்று ஏற்கனவே எழுதியிருப்பதை வசதியாக மறந்து விட்டீர்கள். அப்படியே அமல்படுத்தப்பட்டு இருந்தால் நிலைமை சற்று நன்றாக இருந்திருக்கும். ஆனால் அது மட்டும் போதாது என்று; உயர்சாதிக் கும்பலின் செயல்பாடுகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. ஒடுக்கப்பட்ட வகுப்பினர் அரையுங் குறையுமாகப் பெற்றிருக்கும் உரிமைகளைக் கீழே கசிய விடவில்லை என்று வருந்துவதைவிட எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒப்புக் கொள்ளக் கூடாது என்ற அளவை விடப் பல மடங்கு பலன்களை அனுபவித்துக் கொண்டு இருக்கும் உயர்சாதிக் கும்பலிடம் இருந்து பறித்து ஒடுக்கப்பட்ட மக்ககளிடம் சேர்கக வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?
      அருந்ததியினர் சிக்கல் பற்றித் தெளிவாகவே கூறியிருக்கிறேன். முதலில் இட ஒதுக்கிட்டை முறையாக அமல்படுத்தட்டும். 18சதவிகித இட ஒதுக்கீட்டில் 5 சதவிகிதம் கூட நிரப்பப்படாத போது தனி இட ஒதுக்கீட:டுச் சட்டம் இல்லாமலேயே அருந்ததியினருக்கு வாய்ப்பு அளக்க முடியுமே? இச்சட்டத்தின் நோக்கமே தாழ்த்தப்பட்ட மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது தான்.
      எது எப்படி இருந்தாலும் பார்ப்பனர்கள் எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தால் அவர்கள் நிச்சயமாக மனித வளத்தை வீணடிக்கும் தேசத் துரோகிகளே. பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் இருந்து தப்பிவிடும் இன்றைய பொதுப் போட்டி முறையை ஒழித்துவிட்டு அனைத்து வகுப்பினரும் அனைத்து நிலை வேலைகளிலும் இருக்க முடிய வேண்டிய வழிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றால் அதில் என்ன தவறு இருக்கிறது? அப்படிச் செய்தால் சாதி ரீதியான ஏற்றத் தாழ்வு மறைந்து விடும் அல்லவா? அப்பொழுது வர்க்க முரண்பாடு தானே முன்னே நிற்கும்? இதை எதிர்ப்பதும் ஒதுங்கிப் போவதும் சாதிக் கொடுமைகளை நிரந்தரப்படுத்தவும் வர்க்கப் புரட்சி – வர்க்கப் புரட்சி கிடக்கட்டும் – வர்க்க முரண்பாடே முன்னணிக்கு வராமல் தடுக்கும் துரோகச் செயல் அல்லவா?

      • thurai ilamurugu says:
        15 years ago

        அதாவது 18% விழுக்காடு இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவு செய்யப் படும் வரை அருந்தயினர் காத்திருக்க வேண்டும் அவர்களுக்குரிய இடதைப் பெற. நல்ல சமூக நீதி சாதி ஒழிய்ழ் ஆயிரமாண்டுகள் ஆகும அது வரை வர்க்கப்புரட்சி காடிருக்க வேண்டும் நல்ல வேடில்க்கை ராமீஅ வரும் வரை கடல் அலைகள் காத்திருக்க வேன்டும்

        • Ramea says:
          15 years ago

          ஐயா நீங்கள் து}ங்குகிறீர்களா அல்லது து}ங்குவது போல் நடிக்கிறீரகளா? 18 சதவிகிதம் நிரப்பப்படும் பொழுது அதில் அருந்ததியர்களுக்கு இடம் கிடைக்காது என்று எப்படி முடிவு செய்தீர்கள்?
          சமூக நீதி கிடைக்காமல் வர்க்கப் புரட்சி சாத்தியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதைத் தான் அம்பேத்கர் சாதியைச் சந்திக்காமல் பரட்சியைச் சந்திக்க முடியாது என்று இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார்.
          பரட்சி நடக்கும் வேளையில் நாட்டு நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொள்ளப் போதிய எண்ணிக்கையில் ஆட்கள் இருக்க வேண்டும.; பாரிஸ் கம்யூன் தோல்வியடைந்தற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
          நீங்கள் கூறும் உவமானம் தங்களுக்குத் தான் சரியாகப் பொருந்துகிறது. சாதிக் கொடுமைகளை ஒழிக்காமல் வர்க்கப் புரட்சிக்காக எவ்வளவு காலம் காத்திருக்கப் போகிறீர்கள்? கடல் அலைகள் ஓயும் வரையிலா?

          • THAMILMARAN says:
            15 years ago

            கலைஞர் ஆள்கிறார்.அவரே தன்னைத் தலித் என்றூதான் சொல்லுகிறார்.அவரது ஆட்சியில் அருந்தயினர்க்கும் உண்டு விடுதலை அவர் சொன்னால் மத்திய அரசில் மறூ பேச்சில்லை.நாம் நம் தமிழிசை பற்றீப் பேசுவோமா?

  71. thurai ilamurugu says:
    15 years ago

    ராமீய நீங்கள் தலை கீழாக நிற்கிறீர்கள். 18* % இட ஒதுக்கிட்டு தமிழ் நட்டில் உள்ள எல்லாமருத்துவக் கல்ல்லூரிக்ளிலும் நிரப் ப்பட்டுள்ளன ஆனால் அருந்ததியுருக்க்கான 3% ஒதுக்கிடு இன்னும் கிடைக்கவில்லை .வர்க்கப் புரட்சி இன்றி சாதியை ஒழிக்க முடியாது அம்பெத்கார் ஒரு கம்யூனிஸ்டு எதிரி என்பதையும் தாங்கள் புரிந்து கொள்ளவேண்டூம்

    • Ramea says:
      15 years ago

      என்னுடைய சிறுவயதுச் சம்பவம் ஒன்று நினைவிற்கு வருகிறது. எங்கள் பக்கத்து வீட்டுச் சிறுமகளை மாவாட்டும் வேலையை அவர்களுடைய தாயார் கொடுப்பார். சிறிது மாவாட்டிய உடன் உரலுக்கும் ஆட்டுக் கல்லுக்கும் இடையில் முதலில் நசுங்கி இருக்கும் மாவைக் காட்டி வேலை முடிந்து விட்டது என்று கூறுவார்கள். துரை இளமுருகுவும் அதைத்தான் செய்திருக்கிறார். ஏதோ ஒரு இடத்தில் 18மூ கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதற்காக எல்லாமே முடிந்து விட்டது என்றாகிவிடாது. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இட ஒதுக்கீடு சிறிதளவு கூட நிறைவேற்றப்படவில்லை என்று கதறிக் கொண்டு இருப்பது கேட்கவில்லை. ஏதோ ஒரு மூலையில் உரலிடுக்கில் மாவு ஆனது போல் கொடுக்கப்பட்ட ஒதுக்கீட்டைக் காட்டி ஒரேயடியாக இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையையே மூடி மறைக்கப் பார்க்கிறார்.
      இன்று தெரிவு செய்யப்படும் முறையில் சொல்லி வைத்தது போல் உயர்சாதிக் கும்பலினர் உயர்நிலைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் தாழ்நிலைகளிலும் வைக்கப்படுகிறார்கள். இது இயற்கை நியதிக்கு முற்றிலும் விரோதமானதாகும். திறமை என்பது எல்லா இடத்திலும் பரவி இருக்கிறது. எல்லா வகுப்பினரிலும் அனைத்து நிலையிலும் அறிவுத் திறன் கொண்டோர் இருக்கிறார்கள். ஆகவே பார்ப்பனர்களில் அறிவுத் திறன் குறைவாக உடையோர் இருப்பதை மறைக்க முடியாது. அப்படிப்பட்ட திறமைக் குறைவான பார்ப்பனர்களை அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளிலிருந்து தப்பவிட்டால் அவ்விடத்தில் திறமை மிகுந்த ஒடுக்கப்பட்ட மக்கள் வலுக்கட்டாயமாகப் புகுத்தபடுகிறார்கள். இந்தக் கொடுமைகளை என்று தீர்ப்பது என்று திட்டமிட்டு இருக்கிறீர்கள்? புரட்சி முடிந்த பிறகா? திறமையற்ற பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு விடக் கூடாது என்று இன்று அடம் பிடிப்பவர்கள் அன்று மட்டும் மனம் மாறுவார்கள் என்பதை எப்படி நம்புவது? தாங்கள் எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் இன்றைய சமூக அமைப்பில் வெடிப்பு விழுவதையே பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் புரட்சி செய்து அமைக்கும் சமூக அமைப்பில் கீறல் விழுவதைக் கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள் அல்லவா? உயர்நிலைகளில் உயர்சாதிக் கும்பலினர் இருப்பதும் தாழ்நிலைகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் இருப்பதும் லாபத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறை இல்லாமல் இருப்பதும் பழைய வர்ணாசிரம முறை தானே? சாதியைக் கணக்கில் கொள்ளாமல் முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழித்த சமூகம் வர்ணாசிரம சமூகமாகத் தானே இருக்க முடியும்?
      ஸ்பார்டகஸ் சோஷலிச சமூகத்தை மனதில் கொண்டு போராடவில்லை. ஆகவே அவர் கம்யூனிஸ்டுகளின் எதரி என்று சொல்வதைப் போன்றது தான் அமபேத்கர் கம்யூனிஸ்டுகளின் எதரி என்று கூறுவது. தாழ்த்தப்பட்ட மக்கள் படும் கொடுமைகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாதவர்கள் தான் அவரைக் கம்யூனிஸ்டுகளின் எதரி என்று கூற முடியும். தாழ்த்தப்பட்ட மக்கள் அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் விகிதாசாரத்தில் பிரதிநிதித்துவம் செய்த பிறகு அவர்கள் சோஷலசத்தை எதிர்த்தால் அப்பொழுது அவர்களைக் கம்யூனிஸ்டுகளின் எதரி என்று கூறலாம். அதுவரை சற்றுப் பொறுக்கலாமே?
      ஐயா நீங்கள் தான் தலை கீழாக நிற்கிறீர்கள். அது மட்டுமல்ல. தலையை பூமிக்குள் புதைததுக் கொண்டு எதையும் பார்க்காத படியும் செய்து கொள்கிறீரகள்.

    • Ramea says:
      15 years ago

      என்னுடைய சிறுவயதுச் சம்பவம் ஒன்று நினைவிற்கு வருகிறது. எங்கள் பக்கத்து வீட்டுச் சிறுமகளை மாவாட்டும் வேலையை அவர்களுடைய தாயார் கொடுப்பார். சிறிது மாவாட்டிய உடன் உரலுக்கும் ஆட்டுக் கல்லுக்கும் இடையில் முதலில் நசுங்கி இருக்கும் மாவைக் காட்டி வேலை முடிந்து விட்டது என்று கூறுவார்கள். துரை இளமுருகுவும் அதைத்தான் செய்திருக்கிறார். ஏதோ ஒரு இடத்தில் 18% கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதற்காக எல்லாமே முடிந்து விட்டது என்றாகிவிடாது. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இட ஒதுக்கீடு சிறிதளவு கூட நிறைவேற்றப்படவில்லை என்று கதறிக் கொண்டு இருப்பது கேட்கவில்லை. ஏதோ ஒரு மூலையில் உரலிடுக்கில் மாவு ஆனது போல் கொடுக்கப்பட்ட ஒதுக்கீட்டைக் காட்டி ஒரேயடியாக இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையையே மூடி மறைக்கப் பார்க்கிறார்.
      இன்று தெரிவு செய்யப்படும் முறையில் சொல்லி வைத்தது போல் உயர்சாதிக் கும்பலினர் உயர்நிலைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் தாழ்நிலைகளிலும் வைக்கப்படுகிறார்கள். இது இயற்கை நியதிக்கு முற்றிலும் விரோதமானதாகும். திறமை என்பது எல்லா இடத்திலும் பரவி இருக்கிறது. எல்லா வகுப்பினரிலும் அனைத்து நிலையிலும் அறிவுத் திறன் கொண்டோர் இருக்கிறார்கள். ஆகவே பார்ப்பனர்களில் அறிவுத் திறன் குறைவாக உடையோர் இருப்பதை மறைக்க முடியாது. அப்படிப்பட்ட திறமைக் குறைவான பார்ப்பனர்களை அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளிலிருந்து தப்பவிட்டால் அவ்விடத்தில் திறமை மிகுந்த ஒடுக்கப்பட்ட மக்கள் வலுக்கட்டாயமாகப் புகுத்தபடுகிறார்கள். இந்தக் கொடுமைகளை என்று தீர்ப்பது என்று திட்டமிட்டு இருக்கிறீர்கள்? புரட்சி முடிந்த பிறகா? திறமையற்ற பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு விடக் கூடாது என்று இன்று அடம் பிடிப்பவர்கள் அன்று மட்டும் மனம் மாறுவார்கள் என்பதை எப்படி நம்புவது? தாங்கள் எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் இன்றைய சமூக அமைப்பில் வெடிப்பு விழுவதையே பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் புரட்சி செய்து அமைக்கும் சமூக அமைப்பில் கீறல் விழுவதைக் கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள் அல்லவா? உயர்நிலைகளில் உயர்சாதிக் கும்பலினர் இருப்பதும் தாழ்நிலைகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் இருப்பதும் லாபத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறை இல்லாமல் இருப்பதும் பழைய வர்ணாசிரம முறை தானே? சாதியைக் கணக்கில் கொள்ளாமல் முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழித்த சமூகம் வர்ணாசிரம சமூகமாகத் தானே இருக்க முடியும்?
      ஸ்பார்டகஸ் சோஷலிச சமூகத்தை மனதில் கொண்டு போராடவில்லை. ஆகவே அவர் கம்யூனிஸ்டுகளின் எதரி என்று சொல்வதைப் போன்றது தான் அமபேத்கர் கம்யூனிஸ்டுகளின் எதரி என்று கூறுவது. தாழ்த்தப்பட்ட மக்கள் படும் கொடுமைகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாதவர்கள் தான் அவரைக் கம்யூனிஸ்டுகளின் எதரி என்று கூற முடியும். தாழ்த்தப்பட்ட மக்கள் அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் விகிதாசாரத்தில் பிரதிநிதித்துவம் செய்த பிறகு அவர்கள் சோஷலசத்தை எதிர்த்தால் அப்பொழுது அவர்களைக் கம்யூனிஸ்டுகளின் எதரி என்று கூறலாம். அதுவரை சற்றுப் பொறுக்கலாமே?
      ஐயா நீங்கள் தான் தலை கீழாக நிற்கிறீர்கள். அது மட்டுமல்ல. தலையை பூமிக்குள் புதைததுக் கொண்டு எதையும் பார்க்காத படியும் செய்து கொள்கிறீரகள்.

  72. thurai ilamurugu says:
    15 years ago

    தமிழ் மாறன் செய்தி அருந்ததியுருக்க்கான 3% ஒதுக்கிடு இன்னும் கிடைக்கவில்லைஎன்பது மட்டும் அல்ல அவ்வறு கிடைப்பதி மற்ற தலித்துகள் எதிர்க்கிறார்கள் வழக்குதொடுக்கிறார்கள் என்பதுதான் இருப்பதை பங்கௌவைப்பதை பொறுக்க முடியாதவர்கள் வர்க்கப்,புரட்சிக்கு உதவி செய்யப்போகிறார்கள் என்று ராமீய கதை விடுகிறார்

  73. புத்திரன் says:
    15 years ago

    சாதியத்திற்கு எதிரான போராட்டமா ?தேசிய விடுதலைப் போராட்டமா ?வர்க்கப் புரட்சியா ? விவாதம் எண்பதுகளுக்கு திரும்புகிறது.
    வர்க்கப் போராட்டத்தை ,சாதியப் எதிர்ப்பு போராட்டத்துடன் இணைப்பதே வெற்றியளிக்கும்.வர்க்க எதிரிகள் எங்கிருந்தாலும் ( உயர் /கீழ் சாதிகளில் அவர்கள் இருந்தாலும் )அப்போது தான் ஒழிக்கப்படுவார்கள்.

    • THAMILMARAN says:
      15 years ago

      புலத்தில் சாதீயம் தமிழர் பெருமை பேசுவதறகானது ஆனால் அது தாயகத்தில் வாழ்வோடு இணந்தது.இப்போது அது உக்கிப் போன சாக்காக உபயோகமற்றூப் போய் விட்டது நல்ல விசயம்.இருந்தாலும் ஆங்காங்கே அது இருக்கவே செய்கிறது கால மாற்றத்தில் சாதீயம் இல்லாமற் போகலாம்.கடற்காற்றூ வீசும் கரையில் கடலோரத்தில் கட்டுமரத்தில் அமர்ந்து நாமெல்லாம் இலக்கியம் பேச நாளோன்றூ தோன்றாதோ.

  74. புத்திரன் says:
    15 years ago

    சமூகத்தின் மிக தாழ்ந்த நிலையில் ஒரு செருப்புகட்டியின் மகனாக பிறந்தவரான ஸ்டாலினை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவராக்கினார் லெனின்.அந்த மனப்பான்மை இப்போதுள்ள கம்யுனிஸ்ட்துக்களுக்கு இருக்கா ?
    மனமாற்றம் ” மேலிடத்திலிருந்து ” வர வேண்டும்.

    • THAMILMARAN says:
      15 years ago

      தோட்டங்களீல் புகையில வெட்டி முடிந்ததும் அங்கு வளரும் காளான் கள நான் சிறூவயதில் கவனிப்பது வழக்கம் அது நாங்கள் வைத்த்து அல்ல தானாகவே வளரும் அது போல மல்லிச் செடிகள் யார் முள போட்டார்கள் எனத் தெரியாமலே வளர்ந்திருக்கும் அது போலவே ஸ்டாலின், ஏபிரகாம் லிங்கன்,பொன்றோர்.

  75. thurai ilamurugu says:
    15 years ago

    அய்யா அம்பெதகார் கம்யூன்ஸ்டுகளின் எதிரி என்று நான் சொல்லவில்லை அதுஅவர் கொடுத்துள்ள வாக்கு மூலம் அது மட்டும் அல்ல தொழிலாளிகள்கம்யூன்ஸ்டுகளின் தலைமையில் நடக்கும் போராட்டங்க்ளில் பங்கெடூக்கக் கூடாது என்று தன்னுடையசாதியைஸ் சேர்ந்தவர்களைக் கட்டுபடுத்தியும் வைத் திருந்தார் அவரால் ஒரு பொது தேர்தலில்ல் கூட வெல்லமுடியாமல் போனத்ற்கு காரணம் இதுவே நான் தமிழ் நாடு நிலையைச் சொல்லுகிறேன் நீங்கள் அகிலை ந்தியப்,ப்ரட்சிப் பற்றிப்,பேசுகிறீகள் அகில இந்திய அளவில் புரட்கி என்பது ஒரு மாபெரும் புரட்டு அதைய் பற்றிபெரியாரைக் கேட்டு உணரவும் தமிழ் நாட்டில் தாழததப்,பட்டவ்ர்க்ளுக்கு 18% நிரப்படாத துறை எது அ.அப்படி நிரப்பட்ட துறைகளில் அருந்த்தயினருக்கு உரிய இட் ஒதுக்கிடு கிடைத்துள்ளதா என்பதே அது மட்டுமல்ல அருந்ததினருக்கு இட ஒதுக்கிடு கிடைப் பதை மற்ற தலித்கள் எப்படி நோக்குகிறார்கள் என்பதும்கவனிக்க வேண்டியஒன்று ஆகும் என்வே இட ஒதுக்கீடு எல்லாவற்றையும் பெற்றுத்தரும் என்பது பொய்

    • Ramea says:
      15 years ago

      ஒருவருடைய சிந்தனை அவர் சார்ந்திருக்கும் வர்க்கத்தையும் வாழும் காலத்தின் சூழ்நிலையையும் பொறுத்தே அமைகிறது. அம்பேத்கரின் முன்னே நின்ற முக்கியமான பணி அவர் பிறந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சாதிக் கொடுமைகளிலிருந்து மீட்பது தான். சுரண்டலை ஒழிபப்பதாக் கூறிய கம்யூனிஸ்டுகள் சாதிக் கொடுமைகளைப் பற்றி சொல்லளவில் மட்டுமே பேசி செயலளவில் ஏமாற்று வித்தையைக் கையாண்ட சூழ்நிலையில் அம்பேத்கரின் எதிர்ப்புக் குரலை விமர்சனம் செய்யும் தகுதி யாருக்கும் இல்லை. கூலி உயர்வு வட்டத்தை விட்டு வெளியே வர மறுக்கும் இந்தியக் கம்யூனிஸ்டகளுக்கு நிச்சயமாகத் தகுதியில்லை.
      எந்த ஒரு போராட்டமும் இல்லாமலேயே 8மணி வேலை நேரச் சட்டத்தை அமல் படுத்தியவர் அம்பேத்கர். அவரைத் தொழிலாளர் வர்க்கத்தின் எதிரி என்று கூறுபவர்கள் தத்துவத்தை வறட்டுத்தனமாகக் கற்றவர்களே. பொதுவுடைமைத் தத்துவததை வறட்டுத்தனமாகப் பார்க்காமல் இந்திய சூழ்நிலைக்குப் பொருத்தி சாதிக் கொடுமைகள் வெந்து சாம்பலாகியே தீர வேண்டும் என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டு அம்பேத்கரை நினைத்துப் பாருங்கள். அவர் கம்யூனிஸ்டுகளின் மிகச் சிறந்த கூட்டாளி என்பது புலப்படும்.
      இட ஒதுக்கீடு பற்றி அகில இந்திய அளவில் பேசாமல் தமிழகத்தைப் பற்றி மட்டும் பேசுவதும் அரைகுறையாய் மாவை அரைத்து இடுக்குகளில் சிக்கிய மாவை எடுத்துக் காட்டுவது போலத் தான். அப்படியே பார்த்தாலும் தமிழகத்திலும் முழுமையாக நிரப்பப்படாத துறைகள் ஏராளமாக உண்டு. ஒரு அலுவலகத்தில் மொத்த பணியாளர்களில் தாழ்த்தப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையைக் காட்டி தேவைக்கும் அதிகமாகவே நிரப்பி விட்டதாக அறிக்கை சமர்ப்பித்து இருக்கும் கதைகளும் ஏராளமாக உண்டு. (வர்ணாசிரம காலத்திலும் அனைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வேலை கொடுக்கப்பட்டு இருந்தத) உயர்நிலைகளில் அவர்களுடைய பிரதிநிதித்துவம் பற்றி மெளனம் சாதிக்கும் புள்ளி விவரங்களை என்னவென்று சொல்வது?
      அகில இந்திய அளவில் பரட்சியை நடத்தாமல் தமிழக அளவில் புரட்சி செய்யப் போகிறீர்களா? நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

      • thurai ilamurugu says:
        15 years ago

        ரம்மீயா அம்பெத்கார் இந்திய கம்யூன்ஸ்டுகளை மட்டும் அப்படி சொல்வில்லை மார்க்சீய தத்துவமே கல்லவதியாகி விட்டது என்கிறார் அவர் பொதுடமையின் எதிரி என்று நான் சொல்லவில்லைஅவரே சொல்லுகிறார் . புரட்சி என்பது
        தேசிய இன அள்வில்தான் நடக்க வாய்ப்பு உள்ளது அதுவும் பெரியார் வழியில் மாக்சீயப்புரிதலோடு அகில இந்திய
        புரட்சி என்பது புர ட்சி இல்லை என்பத்ற்கு ஒப்பானது நீங்கள் சாதியை ஒழிக்க வேனப்டும் என்றலும் அது தமிழகத்தில் இருந்துதான் தொடங்கப்படவேண்டும் பீகார் முதல் குசராத்வரை சாதியைஒழித்துவிட்டு வர்க்கப்,புரட்சி என்பது நல்ல வேடிக்கை தெசிய இனங்களுக்குள் உள்ள ஏற்ற இறக்கங்க்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மணக் கணக்கு போடுகிறீர்கள்

  76. புத்திரன் says:
    15 years ago

    ஸ்டாலினை நீங்கள் புகையிலை கண்டுக்குள் முளைத்த காளான் என்கிறீர்களா தமிழ்மாறன் ?
    சர்வம் சிவ மயம் என்பது சைவர்கள் வாதமல்லவா.

  77. Ramea says:
    15 years ago

    சோவியத் புரட்சி முடிந்த பிறகு விவசாயிகளில் ஒரு பகுதியினர் லெனினின் நிலம் பற்றிய அரசாணையை ஒப்புக் கொள்ள மறுத்தனர். லெனினுடைய தோழர்கள் அரசாணையை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டத் தேவையில்லை என்றும் அரசதிகாரத்தைப் பயன்படுத்தி விவசாயிகளின் எதிர்ப்பை நசுக்கி விடலாம் என்றும் அதற்கான வலிமை சோவியத் அரசுக்கு இருக்கிறது என்றும் கூறினர். ஆனால் லெனின் விவசாயிகள் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களைப் பகைத்துக் கொள்வதை விட அவர்களுடைய போக்கில் சென்று நிலைமையைச் சீர்திருத்த வேண்டும் என்று கூறி புதிய பொருளாதாரத் திட்டம் ஒன்றைப் புகுத்தினார். அதன்படி நிலம் விவசாயசகளின் உடைமையாக இருக்கும். அவர்கள் கூலிக்கும் ஆட்களை வைத்துக் கொள்ளலாம். இப்புதிய பொருளாதாரத் திட்டம் சிறிது காலம் (லெனின் காலமான பின்னாலும்) அமலில் இருந்தது. அதன் பின் சிறிது சிறிதாக வலுவிழந்து மறைந்து போயிற்று.
    ஸ்டாலின் காலத்திலும் கூட்டு பண்ணை விவசாயத்தைச் சிலர் எதிர்த்தார்கள். அவர்களை ஸ்டாலின் ஒடுக்கவில்லை. அவர்களுடைய விருப்பத்திற்கு விட்டு விட்டார். சிறிது காலம் கழித்து சொந்தப் பண்ணையை விட கூட்டுப் பண்ணை வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை அனுபவத்தில் கண்டார்கள். தங்களை மாற்றிக் கொண்டார்கள்.
    லெனினும் ஸ்டாலினும் தத்துவத்தை வறட்டுத்தனமாகப் பிடித்துத் தொங்கவில்லை. நடைமுறைச் சிக்கலைப் புரிந்து கொண்டு வெற்றிகரமாகக் கையாண்டார்கள்.
    அம்பேத்கர் விஷயமும் அப்படித்தான். அவர் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர். அவர் முன்னால் இருந்த அவசர அவசியமான பிரச்சினை தாழ்த்தப்பட்ட மக்கள் படும் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுவதே. அதைப் பற்றிய திட்டம் எதுவும் இல்லாத ஒன்றை விமர்சிப்பதற்கு அவர் முழுத் தகுதியுடையவரே. லெனினும் ஸ்டாலினும் விவசாயிகளின் மனதைப் புரிந்து கொண்டதைப் போல் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். சொல்லப் போனால் அதைவிட அதிகமாகவே புரிந்து கொள்ள வேண்டும். அந்த விவசாயிகளைப் பொறுத்த மட்டில் கால மாற்றத்தைப் புரிந்து கொள்வதில் இருந்த சுணக்கம் தான் எதிர்ப்புக்குக் காரணமாக இருந்தது. ஆனால் அம்பேத்கர் உலகின் எந்த ஒரு பகுதியிலும் இல்லாத பிறவி அடிப்படையிலான கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார். ‘ரொட்டிக்கு வெண்ணெய் இல்லாவிட்டால் ஜாம் வைத்துச் சாப்பிட வேண்டியது தானே’ என்று பிரெஞ்சுப் புரட்சியின் போது மகாரணியார் கூறியது போல் அம்பேத்கரை விமர்சிக்க வேண்டாம்.
    அது சரி! பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்கள் கூட உயர்நிலையில் இருந்து சிறிது கூட சரிந்து விடக் கூடாது என்ற எண்ணத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு மாரக்சியத்தைப் பெரியார் வழியில் புரிந்து கொள்ளப் போகிறீர்களா? ஐயா நான் தங்களிடம் தோற்றுவிட்டதாக ஒப்புக் கொள்கிறேன்.

  78. thurai ilamurugu says:
    15 years ago

    “அம்பேத்கர் விஷயமும் அப்படித்தான். அவர் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்”
    அம்பெதகார் உழைக்கும்வர்க்கத்தை சார்ந்தவர் அன்று அவர் தாழ்த்தப்,பட்ட மகர் வகுப்பை சார்ந்தவர் தாழ்த்தப்பட்டவர் எல்லோரும் உழைக்கும் வர்க்கம் அன்று .அம்பெத்கார் ஆங்கில வல்லாதிககத்தின் செல்லப்,பிள்ளை சுத ந்திரப்ருக்கு ஆதரவாக சுட்டுவிரலிக்கூட அசைக்காமல் அதன் முதல் அமைச்சரவையில்ல் இடம் பெற்றவர் அவருடைய கருத்தையும் லெனின் கருத்தையும் ஒப்பிட்டு பேசவெண்டாம் லெனின் புரட்சியை ஒத்திவைத்துவிட்டு புதிய பொருளதார் திட்டத்தை கொண்டு வரவில்லை புரட்சி வெற்றிப்,பெற்ற பின்னர் ஒரு சலுகையாக அதைக் கொணர்ந்தார் ராமீயா நீங்கள் மறுபடியும் தலை கீழாக நிற்கிறீர்கள்
    அது சரி விகிதாச்சார இட ஒதுக்கீட்டின்படி திறமை அற்ற பர்ப்பனர்கள் உயர்ந்த பதவிக்கு செல்லமாட்டார்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள் ?

    • THAMILMARAN says:
      15 years ago

      பெரியாருக்கு பிடித்த வார்த்தை வெங்காயம் தலித்துக்கு பிடித்த தலைவர் அம்பேத்கார் ஆனால் தலித்துக்கள் வெங்காயங்களாகவே இருக்காமல் நாட்டின் சனாதிபதியாக மாற வழிகாட்டியோர் இருவரும்தான் ஆனால் பெரியார் சிலை தமிழ் நாட்டில்தான் இருக்கிறது அம்பேத்கார் நாடு முழுவதும் இருக்கிறார் என்றால் அவரது சட்டங்கள் சமத்துவத்தைக் காட்டுவதே.

      • thurai ilamurugu says:
        15 years ago

        காந்தி சிலைஉலக்ம்முழுவதும் காணப்படுகிறது அதன் பொருள் எண்ண தமிழ் மறன் அவகரளே

        • THAMILMARAN says:
          15 years ago

          காந்தி சேர்ச்சிலையே தோற்கடித்தவர்.அரை முளம் வேட்டித் துண்டோடு அகிம்சையை போதித்தவர்.அரிஜனண் என ஏழைத் தலித்தின் எதிர்காலம் குறீத்துச் சிந்தியாதவர்.ராமா,ராமா என உச்சரித்து முஸ்லீமுக்கு நாமம் போடப் பார்த்தவர் ஆனால் அது நடக்கவில்லை ஜின்னா பாகிஸ்தான் தேசியத் தந்தையானார், இன்னொரு காரணமாய் பச்சைப் பிராமணீ நேருவும் உடந்தை.

          • suganthan says:
            15 years ago

            காந்தி வின்ஸ்ரன் சேர்ச்சிலை எதில் தோற்கடித்தார்? கபடியிலா.

          • karuththu kanthasamy says:
            15 years ago

            கருத்தில்,சிந்தனையில்,தான் நின்ற கொள்கையில்.இந்திய மண்ணீன் விலங்கை உடைத்த சுதந்திரச் எழுச்சியில்.

    • Ramea says:
      15 years ago

      ஐயா நீங்கள் எதையும் வறட்டுத்தனமாகத் தான் புரிந்து கொள்வது என்று முடிவெடுத்தால் யாராலும் உதவ முடியாது. அம்பேத்கரும் தாழ்த்தப்பட்ட மக்களும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றால் இந்த சுரண்டல் நாட்டின் ஆளும் வர்க்கத்தைச் சோ;ந்தவர்களா? எந்த ஆட்சி பீடத்தில் எப்பொழுது அமர்ந்திருந்தார்கள்?
      ‘ரொட்டிக்கு வெண்ணெய் கிடைக்காவிட்டால் ஜாம் வைத்துச் சாப்பிட வேண்டியது தானே’ என்று பிரெஞ்சுப் புரட்சியின் போது ரொட்டியே கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த மக்களைப் பார்த்து மகாராணியார் கேட்டது போல எந்த ஆட்சி இருந்தாலும் அடிமைகளாகவே நடத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஆங்கில ஆட்சியை மட்டும் ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்பது உங்களுக்கு வறட்டுத்தனமான வாதமாகத் தோன்றவே இல்லையா? சரி! ஆங்கிலேயர்கள் வெளியேறினால் தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை முன்னேறும் என்பதற்கு ஏதாவது முகாந்திரம் இருந்ததா? அது போகட்டும். ஆங்கிலேயர்களின் ஆட்சியில் வர்ணாசிரம அமைப்பில் விழுந்த கீறல்கள் நீக்கப்பட்டு பழைய நிலைமைக்கே திரும்பாது என்பதற்கான சூசகமாவது இருந்ததா?
      ஆங்கிலேயர்கள் சாதி வேறுபாடு பாராமல் கல்வியைத் தருகிறார்கள் என்பதற்காக சூத்திரர்கள் அங்கு போய்க் கல்வி பயிலக் கூடாது என்று பாலகங்காதர திலகர் 11-11-1917 அன்று ஆதானியில் ஒரு பொதுக் கூட்டத்தில் கடுமையாக எச்சரித்தாரே! அதை அப்படியே ஒப்புக்கொண்டு எங்களுக்குக் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்று ஆங்கிலேயர்களை எதிர்த்து அம்பேத்கர் போராடியிருக்க வேண்டுமா? அப்படிச் செய்திருந்தால் அவர் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியதாக ஒப்புக் கொள்வீர்களா? ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான எந்த ஒரு அம்சமும் இல்லாத போராட்டத்தில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
      ஐயா! அம்பேத்கருக்கு அமைச்சரவையில் சேரும் எண்ணம் இருந்ததே இல்லை. இந்தியாவிற்கென அரசியல் நிர்ணயச் சட்டம் எழுதுவதற்காக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு நேருவின் து}தர்கள் காவடி எடுத்துப் போன போது பிரிட்டிஷ் சட்ட வல்லுநர்கள் எங்களுக்கே சட்டத்தைக் கற்றுக் கொடுக்கும் ஆசானாகிய அம்பேதகரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஏன் இப்படி அலைகிறீர்கள் என்று கேட்ட போது இந்தியாவின் மானம் சந்தி சிரித்தது. பிறகு வேறு வழியில்லாமல் அம்பேத்கரிடம் நேரு கெஞ்ச வேண்டியதாயிற்று. அம்பேத்கர் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டிருக்கிறார்
      தோசையை வைத்தால் அதை உண்பதற்குப் பதிலாக அதில் உள்ள துளைகளை எண்ணுவது போல் சம்பந்தமே இல்லாமல் பரட்சிக்கு முன் பரட்சிக்குப் பின் என்று கூறியிருக்கிறீர்கள். தங்கள் கொள்கைகளுக்கும் செயல் திட்டஙகளுக்கும்; எதிராக இருப்பவர்களின் வர்க்க குணாம்சத்தைக் கணக்கில் கொண்ட லெனினும் ஸ்டாலினும் நிலைமையை எப்படிக் கையாண்டார்கள் என்பதைப் பாருங்கள். தாழத்தப்பட்ட மக்களை அவர்கள் படும் கொடுமைகளில் இருந்து விடுவித்தால் அவர்களுடைய குணாம்சம் எப்படி இருக்கும் என்று பாருங்கள். ஐயா நீங்கள் பூமியில் இருப்பதாகவே தெரியவில்லை. முதலில் பூமிக்கு வாருங்கள். அப்புறம் இந்தியாவிற்கு வாருங்கள். பின் யார் தலை கீழாக நிற்கிறார்கள் என்பது புரியும்.
      விகிதாசார ஒதுக்கீடு வந்தால் திறமையற்ற பார்ப்பனர்கள் உயர் பதவிகளுக்குச் செல்ல மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? வேடிக்கையான கேள்வி. பாரப்பனர்கள் வீம்புக்காக தங்களிடையே உள்ள திறமைசாலிகளை உயர்நிலைக்கு அனுப்பாமல் திறமையற்றவர்களை அனுப்பி வைத்தால் அங்கே இருக்கும் திறமைசாலிகளான ஒடுக்கப்பட்ட மக்களிடையே தாக்குப் பிடிக்க முடியாமல் கீழே விழுந்து விடுவார்கள். சிறுது கால ஏற்ற இறக்கத்திற்குப் பிறகு நிலைமை சரியாகிவிடும். அதைப் பற்றி அனாவசியக் கவலைகள் வேண்டாம்.
      அது சரி! பார்ப்பனர்களில் திறமையற்றவர்கள் கூட உயர்நிலையில் இருந்து சிறிது கூட சரிந்து விடக் கூடாது என்ற எண்ணத்தை விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டு மார்க்சியத்தைப் பெரியார் வழியில் எப்படி புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?

      • THAMILMARAN says:
        15 years ago

        பாலகங்காதரருக்கு பைத்தியம் பிடித்தால் அது அம்பேத்காருக்கும் பிடிக்க வேண்டியதில்லை.முரண்டு பிடிக்காமல வளந்தும் கொடுத்து சாதித்திருக்கிறார் அமபேத்கார்.இன்னொன்றயும் நீங்கள் உணர வேண்டும் நேரு எனும் பார்ப்பணரால் இந்தியா சைனாவிடம் தோற்றது.நீங்கள் யாருக்கு காவடி தூக்குறீர்கள் எனத் தெரியவில்லை.

        • Ramea says:
          15 years ago

          ஐயா நான் யாருக்கும் காவடி து}க்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதே என் நோக்கம்.

  79. செல்லா says:
    15 years ago

    சரி சரி அனைவரும் முட்டையில் மயிர் பிடுங்கிக்கொண்டிருங்கோ.
    கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட் டத்தில் தமசந்திரா கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ் ணய்யா. இவரது மகள் தீபிகா வேறு சாதி யைச் சேர்ந்த வெங்கடேஷை திருமணம் செய்தார். மகள் திருமணத்தை எதிர்த்த ராமகிருஷ்ணய்யா மகள் மற்றும் அவரது 4 மாதக் குழந்தையை கொலை செய்தார்.இதுதொடர்பாக தீபிகாவின் கணவர் வெங்கடேஷ் காவல்நிலையத்தில் மாம னார் ராமகிருஷ்ணய்யா மாமியார் கவு ரம்மா மற்றும் 4 பேர் மீது புகார் செய்துள் ளார். இந்த 6 பேரும் தலைமறைவாக உள்ளனர்.பிப்ரவரி 1ம்தேதியன்று ராமகிருஷ் ணய்யா மகள் தீபிகாவுடன் தொலைபேசி யில் பேசினார். அப்போது தாயார் மருத் துவமனையில் இருப்பதாக கூறியுள்ளார்.இதனை உண்மை என நம்பிய தீபிகா தமசந்திரா கிராமத்திற்கு பஸ்சில் வந்தார். அதன்பின்னர் வெங்கடேஷ் தீபிகாவை பல வாரங்கள் காண முடியவில்லை. பிப்ரவரி 27ம்தேதியன்று மனைவி மற்றும் தனது குழந்தை குறித்து தமசந்திரா கிராமம் வந்த வெங்கடேஷ் வினவினார். அப்போது தனது மனைவியையும் குழந்தையையும் உறவினர்கள் கொன்றதாக தகவல் கிடைத்ததாம். 
    செளந்தர் , பின்னூட்டம் இடுபவர்கள மாபெரும் சாதிமான்களாக தொடர்ந்து அதே முட்டையில் மயிர் பிடுங்கி இயளயராசனின் அழுக்கில் முகம் கழுவி கட்டுரைகளை மட்டும் நான்கு சுவர்களுக்குள் வீற்றிருந்து எழுதுங்கள். 

  80. நம்பிகெட்டவன் says:
    15 years ago

    கட்டுரைக்கும் இந்த இடுகைக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா செல்லா ?

  81. பானு பிரானஸிஸ் says:
    14 years ago

    பிராமணன் சாதி நோக்கில் மட்டுமே நாதஸ்வரத்தையும் தவிலையும் தள்ளி வைக்கவில்லை. அவன் எப்போதுமே கடினமான காரியங்களை தமிழனிடம் தள்ளி விட்டுவிடுவான். மற்ற வாத்தியங்கள் போல சுலபமானது அல்ல நாதஸ்வரமும் தவிலும். நாதஸ்வரம் தம் கட்டி ஊதவேண்டும். தவில் வெயிட் சுமந்த நிலையில் வாசிக்க வேண்டும்.

    தஞ்சை திருச்சி (சோழ நாட்டு) பகுதிகளில் வளர்ந்(த்)த கலைகள் இவை. ஆடல் மகளிரையெல்லாம் தேவ(ர)டியார் பட்டம் கட்டி ஒழித்து விட்டு இன்று சபாவுக்கு சபா பார்ப்பனப் பெண்டிர் அடவு பிடித்தாடுகிறார்கள் ஏதோ இசை இவர்களுக்கானது மட்டுமே என்பது போல்.

    கலாஷேத்திரா ருக்மணியை வெளிச்சம் போட்டு அபிநய சரஸ்வதி என்று அழைக்கப்பட்ட ஐ. நா.வில் ஆடிய பால சரஸ்வதியை இருட்டில் தள்ளியவர்கள்.

    இசைவேளாளர் இனத்தைச் சேர்ந்த மதுரை சுந்தரவடிவின் மகளான M.S. சுப்புலஷ்மி கல்கி சதாசிவத்தின் புண்ணியத்தால் தன் இன அடையாளம் மறைத்து கடைசிவரை தன்னை ஒரு ஐயர் போல வெளிக்காட்டிக் கொண்டார்.

    ஒன்று மட்டும் நிச்சயம், அன்றிலிருந்து இன்று வரை பிராமணனை எதிர்த்தால் ஓழித்து விடுவார்கள் நம்மை.

  82. Ramea says:
    14 years ago

    பார்ப்பனர்களை எதிர்த்தால் ஒழித்துக் கட்டிவிடுவார்கள் என்பது சரியான வெளிப்பாடு அல்ல. பார்ப்பனர்கள் தங்கள் நலன்களுக்காக எத்தகைய அயோக்கியத்தனத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பது தான் சரி. பார்ப்பனர்கள் மிகவும் வலுவாக இருப்பதால் அவர்கள் ஜெயிக்கிறார்கள். நாம் நம்முடைய வலிமையைப் பெருக்கிக் கொண்டால் நாமும் ஜெயிக்க முடியும். ஸ்பார்டகஸ் தொடங்கி பிடல் காஸ்ட்ரோ ஹோ சி மின் வரையிலும் நடத்திய விடுதலைப் போர்களில் முதலில் ஆதிக்கவாதிகள் வலுவாகவும் விடுதலை வீரர்கள் வலுக் குறைவாகவும் தான் இருந்தனர். ஆனால் வலுவை அதிகரித்துக் கொள்ள முடியாத ஸ்பார்டகஸ் வீர மரணம் அடைய நேர்ந்தது. வலிமையை அதிகரித்துக் கொள்ள முடிந்த லெனின் பிடல் காஸ்ட்ரோ ஹோ சி மின் போன்றோர் வெற்றி பெற்றனர். நாமும் நம்முடைய வலிமையைப் பெருக்கிக் கொண்டால் வெற்றி பெற முடியும்.

  83. கண்ணன் says:
    14 years ago

    சௌந்தர்
    உங்கள் ஆக்கம் படித்தேன்
    கர்னாடக இசை தமிழிசையே மிக நல்ல நோக்கில் எழுதபட்ட கட்டுரை .இன்னும் மறைக்கப்பட்ட இசை பற்றி எழுதுங்கள் .வாழ்த்துக்கள்.
    கண்ணன்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...