Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கருணாநிதி – தி கிரேட் கோமாளி:மலரவன்

இனியொரு... by இனியொரு...
10/02/2009
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
28
Home பிரதான பதிவுகள் | Principle posts

karuna100தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் உலக வரைபடத்தை தன் கையில் வைத்துக் கொண்டு குரங்காட்டம் ஆடிக் கொண்டிப்பார் ஹிட்லர். மேதை சாப்ளினின் நடிப்பில் அது அவளவு நகைச்சுவாய இருக்கும். தமிழக முதல்வர் கருணாநிதியின் தற்கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது அவரும் தமிழக வரைபடத்தை கையில் வைத்துக் கொண்டு குரங்காட்ட குத்துக்குரணம் ஒன்றை நடத்திக் கொண்டிருப்பது நமக்குப் புரிகிறது. பலர் கருணாநிதியை மூத்த திராவிட இயக்கத்தலைவர் என்பதால் விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள். பலர் மௌனமாக கருணாநிதியின் அல்லக்கையாக மாறுவதற்கான தருணத்தைக் எதிர்பாத்துக் காத்திருக்கிறார்கள். கவிஞர்கள், திரைத்துறையினர், தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் என்று பலரும் கருணாநிதியை சகித்துக் கொண்டிருப்பதற்கு இதுவே காரணம்.

ஊழல், அராஜகம். போலீஸ் காட்டாட்சி, ஊழல், சாதி வெறி அரசியல் இதில் எந்த ஒன்றிலும் அதிமுகவிற்கு கருணாநிதி குறைந்தவரல்ல என்று அம்பலப்பட்டுக் கிட்ககும் சூழலில் இந்தியாவிலேயே தமிழகம்தான் அதிக என்கவுண்டர் நடக்கும் மாநிலமாக மாறியிருபப்தை எந்த மனித உரிமை ஆர்வலர்களும் கண்டு கொள்ளவில்லை. காரணம் கருணாநிதி மீதான திராவிடப் பாசம்.

சரி அதெல்லாம் இருக்கட்டும். காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடந்த அண்ணாதுறையின் நூற்றாண்டுவிழா மாநாட்டில், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி, தமிழை தேசீய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற மாதிரி தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார் கருணாநிதி. இதே விதமான தீர்மானங்களை திமுக தொடங்கிய காலத்தில் இருந்தே போட்டுக் கொண்டிருக்கிறது.

 ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மத்தியில் அரசைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது திமுகாதான். ஈழ மக்கள் போரில் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்களை காக்க உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதோடு அவர்களின் உயிர்களையே ‘‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’’ என்று கொச்சைப்படுத்தியது போக இறுதிப்போரின் போது மக்கள் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லபப்ட்டுக் கொண்டிருந்த போது குடும்ப சகிதமாக டில்லிக்கு சென்று பதவிக்காக டில்லியிலேயே ஐந்து நாட்களுக்கு மேல் கிடந்தவர்தான் இந்தக் கருணாநிதி.

ஈழத் தமிழர்களுக்குத்தான் எதுவும் செய்யவில்லை, உள்ளூரிலாவது சுயாட்சிக்கும், தமிழுக்கும் என்ன செய்திருக்கிறார் கருணாநிதி என்று பார்த்தால் கடந்த பல வருடங்களாக தீர்மானம் போட்டிருக்கிறார் என்பதைத் தவிற எதுவுமே செய்யவில்லை.தன் மகள் கனிமொழியை எம்பியாக்கினார். அழகிரியை அமைச்சர் ஆக்கினார். சமீபத்தில் நாடாளுமன்ற அமைச்சர் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் திமுக எம்பிக்களால் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஏண்டா இத்தனை நாள் வைக்காத கோரிக்கையை திடீரென இப்பொ வைக்கிறாங்களே? என்னடா என்று கேட்டால் அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாதாம். அதனால் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பதில் சொல்ல அனுமதிக்க வேண்டுமாம். என்ன கொடுமையப்பா? இது? அழகிரிக்கு தமிழ் மட்டும் ஒழுங்கா பேசத் தெரியுமா?

ஆனால் கருணாநிதிக்கு சமீபத்தில் விருதுகள் மேல் விருதுகள் வழங்கப்படுகின்றன. எண்பது வயதைக் கடந்து விட்ட இன்னும் இளைஞராகவே இருக்கும் கருணாநிதிக்கு இத்தனை வேகமாக ஏன் இவளவு விருதுகள் வழங்குகிறார்கள் என்று தெரியவில்லை. காஞ்சிபுரம் விழாவில் அவருக்கு அண்ணா விருது வழங்கியிருக்கிறார்கள்.அண்ணா விருது திமுக கட்சியால் வழங்கப்படுகிற விருது. திமுக என்பது கருணாநிதியின் கட்சி அதன் தலைவரும் அவரே, கேள்வியும் நானே பதிலும் நானே என்று தினம் தோறும் அறிக்கை விடுகிற மாதிரி விருது கொடுப்பதும் நானே, பெற்றுக் கொள்வதும் நானே என்று அண்ணா விருது பெற்றிருக்கிறார்.

அடுத்த நாளே திரைப்பட விருதுகளை அறிவித்திருக்கிறார் கருணாநிதி மொத்த விருதுகளையும் தன் திரைத்துறை அல்லக்கைகளுக்கு அள்ளி வழங்கிவிட்டதோடு விடாமல் உளியின் ஓசை என்ற தனது படத்திற்கு தான் எழுதிய வசனத்திற்கு சிறந்த உரையாடல் ஆசிரியர் – மு.கருணாநிதி (உளியின் ஓசை) என்று தானே விருது கொடுத்திருக்கிறார். இந்த விருதுகளிலும் திருஷ்டிப் பொட்டு மாதிரி சா.தமிழ்செல்வனுக்கும் விருது கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கமலஹாசனை விட சிறந்த இயக்குநர்கள் வந்து விட்டார்கள், பாலா, அமீர், சசிகுமார், மிஸ்கின், என்று தமிழ் சினிமா பல சாத்தியங்களைக்கொண்டு பலவீனங்களோடு இயங்கிக் கொண்டிருக்க ஸ்கூல் பசங்க மாறுவேடப்போட்ட்டிக்கு வேஷம் கட்டுகிற மாதிரி சிறுபிள்ளைத்தமாக படத்திற்கு படம் கமல் கட்டுகிற மாறுவேடப்போட்டிக்கு விருது கொடுக்கிறார் கருணாநிதி. ஆனால் ஒரு நல்ல கதையை உருவாக்கிய சுபரமணியபுரத்திற்கு உருப்படியான எந்த விருதுகளும்.இல்லை. விருது தொடர்பாக சிறந்த பதிவு இதில் இருக்கிறது படியுங்கள்.
http://truetamilans.blogspot.com/ 

 அப்பாடா என்று கண்ணைக்கட்டி டிவியை அணைக்கலாம் என்று போனால் அடுத்த செய்தி. கருணாநிதிக்கு உலக சாதனையாளர் விருதாம் வழங்க இருப்பவர்கள் சினிமா தொழில்நுட்பக்கலைஞர்கள். இப்போ தெரிகிறதா? ஹிட்லர் கையில் இருந்த உலக வரைபடம் கருணாநிதி கையில் என்னவாக இருக்கிறது என்று.

நேற்று அதிமுகவில் இருந்து வந்த ஒரு கூட்டத்தினரை வரவேற்றுப் பேசும் போது சொல்கிறார் ‘’நமது சாதனைகளைப் பார்த்து தமிழக மக்கள் பூரித்துப் போயிருக்கிறார்களாம்” ஆமாம் கருணாநிதியின் ஆட்சியில் மக்கள் பூரித்த பூரிப்பில்தான் ஆங்காங்கே வகைதொகையில்லாமல் கொலைகள் விழுகின்றன. சில அரசியல் படுகொலைகளில் கொலை செய்தவர்களும் போலீஸ் நிலையத்திலேயே இறந்து போய் விடுகிறார்கள்.

இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலையிழந்து பட்டினியால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழக கிராம மக்கள் பாரம்பரீய விவாசயத்துக்கு விடை கொடுத்து விட்டு நகரங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். கிராமத்து மக்கள் பல வெளிமாநிலங்களின் கல்குவாரிகளில் கொத்தடிமைகளாக இருக்க தமிழகமே மகிச்சியில் பூரித்திருக்கிறது என்று இவரே பூரித்துக் கொள்கிறார்.

 ஜெயலலிதாவை மேரி மாதாவோடு ஒப்பிட்டு விளம்பரத் தட்டி வைத்த போது சிறுபான்மை கிறிஸ்தவர்களை தூண்டி விட்டு அதை பெரிய கலவரமாக மாற்றத் துடித்தவர் கருணாநிதி. ஆனால் கடவுள் மறுப்புப் கொள்கையே தனது கட்சி,குடும்ப ( ஆழ்வார்பேட்டைம், கோபாலபுரம், இரு குடும்பங்களின்) கொள்கை என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட கருணாநிதியின் மகன் ஸ்டாலினின் மகன் கட்அவுட் தமிழ் கடவுள் முருகனைப் போல சித்தரித்து வைக்கப்பட்டுள்ளது. வீரமணி ஒரு வேளை புது வியாக்கினாம் இதற்குக் கொடுக்கலாம். மேரி மாதாவோடு ஜேவை ஒப்பிட்டது தவறு என்றால் முருகவோடு ஸ்டாலினை ஒப்பிட்ட திமுகவை எதைக் கொண்டு வரவேற்பது எனத் தெரியவில்லை.

கடவுளில் என்னடா? தமிழ் கடவுள் இங்கிலீஷ் கடவுள்?
இபப்டியான கூத்துக்கள் எவளவோ கருணாநிதியின் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. சிறுபான்மையின்ரரின் ஆதரவாளர், திராவிட இயக்கத்தின் கடைசித் தூண், தமிழகத்தில் இருக்கும் ஒரே கம்யூனிஸ்ட் இப்படி எல்லாம் கருணாநிதிக்கு முகம் உண்டு. ஆனால் முற்போக்குச் சக்திகளை ஒடுக்கியது, ஈழ ஆதரவுப் போராட்டங்களை புலி ஆதரவுப் போராட்டங்களாக சித்தரித்து அவர்களை அடக்கி ஒடுக்கியது, கடைசி நேரத்தில் ஈழ மக்களுக்கு துரோகம் செய்தது எல்லாம் போக சிறுபான்மை மக்களையும், இடதுசாரிகளையும் கூட வாய்ப்பு வரும் போதெல்லாம் கழுத்தறுத்தவர்தான் இந்த கருணாநி.இதற்கு எத்தனையோ உதாரணங்களை வரலாற்றில் இருந்து சொல்ல முடியும். ஆனால் அவருக்கு இருக்கும் முற்போக்கு முகங்களில் எந்த ஒன்றை வைத்தேனும் இன்றைய கருணாநிதியை அளவிட்டுப் பாருங்கள். தன் பதவிக்கும், ஆட்சிகும் ஆபத்து வரும் என்றால் எத்தகைய இழிவான செயலையும் செய்யத் தயங்காத கருணாநிதியின் இன்றைய வருத்தமெல்லாம் உலக்த் தமிழர்களின் தலைவர் பதவி பறிபோய் விட்டதே என்ற கவலைதான்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பொலிஸாரின் விரோதப் போக்கை கண்டித்து செங்கல்பட்டு அகதிகள் 10ஆவது நாளாக உண்ணாவிரதம்!

Comments 28

  1. அர்ச்சுனன் says:
    17 years ago

    நல்ல கட்டுரை. இன்னும் தெளிவாக சான்றுகளுடன் சொல்லியிருந்தால் கருணாநிதி ஆதரவாளர்கள் கொஞ்சம் தங்கள் தலைவரைப் பற்றித் தெரிந்துகொண்டிருப்பர். இன்னும் பல்லாயிரம் திமுக அடிமட்டத்தொண்டர்கள். கண்மூடித்தனமாக கருணாநிதியை வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மகா கேவலமான ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார் என்றால் அது கருணாநிதி ஒருவர் மட்டுமே. நிர்வாகத்திறன் குறைந்த முதல்வர் இவர். இதற்கு திமுக தொண்டர்கள் கோபப்படலாம். ஆனால் உண்மை இதுதான். தந்திரம் சூழ்ச்சி போன்றவற்றை நன்கு அறிந்தவர் மற்றும் அபார நினைவு சக்தி உடையவர் மற்றபடி அரசை வழிநடத்தக்கூடிய அறிவு இல்லை என்பதே உண்மை. மக்களிடம் ஓட்டு வாங்குவதற்கு என்னென்ன செய்யலாம் என்ற வித்தைகள்(உருப்படாத திட்டங்கள்) தெரிந்து அவற்றைத் தீட்டி மக்களை 21 ஆம் நூற்றாண்டிலும் முட்டாள்களாக ஆக்கிக்கொண்டிருப்பவர். அந்த எமனுக்கே பிடிக்காத ஒரு தலைவர் இவராகத்தான் இருக்க முடியும். தமிழனின் தலையெழுத்து ஒரு தெலுங்கரை(திரு செட்சிணாமூர்த்தி) தமிழினத் தலைவர் என்று கூறி வருவதுதான். வெட்கக்கேடு.

  2. Ramea says:
    17 years ago

    உலகத் தமிழர் தலைவர் பதவி போய்விட்டது என்று யார் சொன்னது? கருணாநிதியைத் தலைவராகக் கொள்பவர்க்ள் மட்டுமே தமிழர்கள். மற்றவர்க்ள தமிழ்த் துரோகிகள். பிரச்சினை முடிந்தது.

    (இராமியா)

  3. mukilvannan says:
    17 years ago

    PLEASE LEAVE HIM ALONE

    • R.Vasudevan says:
      16 years ago

      கருனனிதியய் பட்ரி யின்னும் சொல்ல்வன்டிஅய்த்ய்துநெரையவெ இருக்கிரது. செபெச்ட்ரும் உழலை ஷெய்ய சொல்லிவிட்டு, ஒரு டலிதய்யெ மாட்டிவிட்டு வெடிக்கை பார்க்கும் அவரை என்னும் புரிந்துகொல்லமல் சில டலித் மக்கலும் அவரை நம்ப்புவடு தான விந்தை.

  4. guru says:
    17 years ago

    //PLEASE LEAVE HIM ALONE//
    we can but he doesnt want let the tamils be alone..

  5. தமிழவன் says:
    17 years ago

    சரியான நேரத்தில் மிகத்தெளிவாக (சான்றுகள் இல்லையெனினும்) சுருக்கமாக சொல்லப்பட்ட கட்டுரை, இதையெல்லாம் பார்த்தும் சகித்தும் வருகிற எமது மக்களும் கோமாளிகளே! கருணாநிதி கூற்றுப்படி.

  6. jeyan says:
    17 years ago

    மானங்கெட்டவனுக்கு என்ன கிரேT?
    பணத்திற்க்காய் ஆத்தாளாயும் விப்பான் பொட்டய் க்கிழவன்
    ஒரு காலத்தில்நானும் தி.மு.க. காரன் 
    ஏமந்துட்டேண்யா!

  7. Kannan says:
    17 years ago

    நல்ல கட்டுரை. கருணாநிதியை தோலுரித்துள்ளார். செய்ய வேண்டியதுதான். விருது விசயத்தில் கருணாநிதியை சாட வேண்டும் என்பதற்காக முழு கமலகாசனையும் சாட வேண்டியதில்லை.

  8. yoga says:
    17 years ago

    மானங்கெட்டவனுக்கு என்ன கிரேT?
    பணத்திற்க்காய் ஆத்தாளாயும் விப்பான் பொட்டய் க்கிழவன்
    ஒரு காலத்தில்நானும் தி.மு.க. காரன்
    ஏமந்துட்டேண்யா!

  9. haran says:
    17 years ago

    well i dont have any words to say abt him he is son of ..B****…. even that word is not good for him worse than that.

  10. Ramea says:
    17 years ago

    கருணாநிதியைக் கோமாளி என்று கூறுவது கோமாளிகளை அவமானப்படுத்துவது போல் உள்ளது.

  11. Shivam says:
    17 years ago

    உப்பு போட்டு சோறு திங்கிற எந்த தமிழனும் இந்த ஆளை தமிழன்னே ஒப்புக்க மாட்டான்..அப்பறம் என்னடா தமிழனுக்கு இவன் தலைவன்?? ங்கொய்யாலே..தமிழ்த்துரோகி…

  12. pala.manickam says:
    16 years ago

    அந்த நாயை ஆழ விட்டு ,, என் அப்பன் உரங்கியது நாம் அனுபவிக்கிரொம்.இனி இவனும்,இவன் வாரிசும் ஆலமுடியாது.அப்படி ஆலவிட்டா நாமெல்லாம் கேனப் பயல்கல்.

  13. MEYYAPPAN says:
    16 years ago

    You people do not have any other work. Please stop writing on these issues. You people might have been very happy had Prabhakaran been saved even at the last minute by some sort of intervention by INDIA; but alas! that did not happen. He was killed in the war which was futile right fromm the beginning. You do not have any other way to show that anger and Karunanidhi is there to vent your feelings! Mind you, I am not in politics!

    • thamilmaran says:
      16 years ago

      oh, and we had nothing better to do

      well, we had nothing better to do. the same couldnt be said for you.

    • Garammasala says:
      16 years ago

      Mr Meyyappan
      The reality is that the plight of the Tamils was taken advantage of by India since 1978 to exercise control over Sri Lanka. It achieved that by 1987. When the LTTE stood in its way it sought to punish the LTTE. It failed then and was humiliated in 1989. It never forgave the LTTE.
      The LTTE misjudged the global situation since 2001. That the LTTE will be let down by the West in which it placed its trust was well known to those on the left, but those views were ignored by LTTE’s mentors in the West.
      None of what happened will take away from the Tamil people in TN & in SL that Karunanithi was playing games all along and betrayed the trust of the Tamils.
      That apart, MK has been an ace swindler of public funds who has enriched himself by foul means. That is one reason why he plays along with Delhi.
      You are oversimplifying issues when you say “You do not have any other way to show that anger and Karunanidhi is there to vent your feelings!”
      It will be good to check your facts before commenting on matters that you are not familiar with.

      • MEYYAPPAN says:
        16 years ago

        Dear Mr. Garammasala (if at all it is your real name), I only feel sorry if you think I am not familiar with the facts involved in the issue! In any case, I am very much familiar with the issue vis-a-vis my country (INDIA) is connected to the SL Tamil’s issue and I think it is sufficeinet for me to commnet on the article. You are thoroughly and thoroughly wrong in sayinhg that “None of what happened will take away from the Tamil people in TN & in SL that Karunanithi was playing games all along and betrayed the trust of the Tamils”. I am also a Tamil and very much belong to TN and do not feel as you have mentioned! Mind you again, I am not in politics!

        • sarinihar says:
          16 years ago

          Dear MEYYAPPAN

          you are some how right. Mr Meyyappan
          We have to understand kalaingyar karunanithis situation too.But you can not deny the fact that the Indian involvement in srilankan affairs..specially at the last phase of the war. India had actively supported srilankan government…

      • Garammasala says:
        16 years ago

        Mr Meyyappan, what difference it makes to you if my real name is Garammasala or Maturaiyaimeettasuntharapaandiyan or anything else?
        What matters here are views and their validity.
        If you do not think that MK has been an ace swindler of public funds who has enriched himself by foul means and the reason why he and other political racketeers play along with Delhi are self interest and security, GOOD LUCK to you. Thamilnadu electoral politics stinks and from what I hear from you, nobody gives a damn.

        Sarinihar:
        Could you kindly elaborate a little on what in ‘kalaingyar karunanithis situation too’ thay you ‘have to understand’.
        The role of India at the last stages cannot be isolated from what went on from 1978.

  14. sarinihar says:
    16 years ago

    India is a regional power. It was, it is and it will be influencing our politics. that is a fact…Sri lanka is also cooperating with other couturiers to minimize Indian influence….it has started long before 1978. the politics is a balancing act.
    The sad thing is that Sri Lanka’s friends are undemocratic and authoritarian and more corrupt than India..

    In my opinion the followings are the major actors in the Present-day politics who can guarantee a reasonable life for Tamils and other minorities in sri lanka
    TNA ,
    TAMILMADU- ACTIVISTS,
    K ALAINHYAR,
    INDIA
    WEST

    • sarinihar says:
      16 years ago

      Please include Diaspora-organizations in that list

    • Garammasala says:
      16 years ago

      I asked for a clarification of a statement by you.
      I repeat: “Could you kindly elaborate a little on what in ‘kalaingyar karunanithis situation too’ that you ‘have to understand’.”

  15. sarinihar says:
    16 years ago

    Do that really need an explanation? If you can see the politics as a balancing act…if not no exploration will help you.

    • xxx says:
      16 years ago

      Wonderful.
      I did not realise that it is so simple as that.
      So, “we have to understand kalaingyar karunanithis situation” in terms of balancing (or is it juggling as well?).
      There is black momey budget to balance.
      There are swindled public funds to balance.
      There are the family feuds for power and succession to balance.
      There are ‘the hare and the hound’ to balance, in running with the one and chasing with the other — that applies to the plight of Sri Lanklan Tamils.
      So thanks very much for the theory that explains everything.

    • Garammasala says:
      16 years ago

      I only asked for an explanation, as the statement left me guessing.
      If you do not want to, so be it!

  16. kathir says:
    15 years ago

    one of great joker in tamil nadu

  17. கோடீஸ்வரராக says:
    15 years ago

    தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி
    கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.

    *1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.

    இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
    இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

    பக்கம் 81,82 ல்…………..
    *விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

    இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்…………….
    * பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.

    பக்கம் 92,93 ல்…………………………
    * பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

    இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
    இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
    2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
    3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
    4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
    5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
    6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
    7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
    8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
    9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
    10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
    11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
    12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
    13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
    14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
    15. தயாநிதி மாறன் வீடு
    16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
    17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
    18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
    19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
    20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
    21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
    22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
    23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
    25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
    26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
    27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
    28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
    29. அந்தமான் தீவின் நிலங்கள்
    30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
    31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
    32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
    33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
    34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
    35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
    36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
    37. செல்வம் வீடு
    38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
    39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
    40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள்,

  18. dravidan says:
    14 years ago

    தம்பி மலரவா அடியும் இல்லாமல்நுனியும் இல்லாமல் அடிப்படை அரிவும் இல்லாமல் நீ எடுட்ட வாந்தி சில் பேருக்கு உனவாகியிருக்கிரது. ஒரு மனிதனுடய வால்கையில் எங்கிருந்து எஙுகு வந்திருக்கிரான் என்ட்ரு பார்து மகில்ஷி அடைபவனே மனிதன் நீ வைதெரிஷல் படுகிராய த்ப்பு. உன்னை க்ருனானிதி பட்ரி எலுதெலென்னு யாரு அலுதா அல்லது இதை எலுத யாருகிட்டெ எவ்வலு துட்டு வாஙினே?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...