Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கருணாநிதி- உலகத் தமிழர்களின் தலைவரா? தலைவலியா? :மைந்தன்.

இனியொரு... by இனியொரு...
10/11/2009
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

karuka“A delegation of ten MPs from Tamil Nadu headed by DMK parliamentary party leader T.R. Baalu which includes Ms Kanimozhi, DMK Rajya Sabha MP and Thol.Thirumavalavan, VCK chief will travel to Colombo on Saturday to study the situation of the IDP camps in Vavuniya in northern Sri Lanka.Heeding the request of the delegation of DMK-Congress MPs from Tamil Nadu who met Prime Minister Manmohan Singh and Congress president Sonia Gandhi in the national capital on Septemeber 22, the central government has given the nod to a delegation of 10 MPs from Tamil Nadu to visit the camps where an estimated 2.8 lakh displaced Tamils are settled temporarily.The delegation of MPs from Tamil Nadu which included union communications and IT minister A.Raja urged the Prime Minister to put pressure on Sri Lanka to send back those in the IDP camps to their traditional homes immediately.Later, Prime Minister was reported as saying that he would consider the request to send a delegation of Tamil MPs to the island country with the consent of the Sri Lankan government to study the situation in the IDP camps in Vavuniya.The team comprising Mr T.R.Baalu, DMK Parliamentary party leader, Ms Kanimozhi, DMK Rajya Sabha MP, Mr Thol.Thirumavalavan, MP and VCK chief, Mr E.M. Sudarsana Natchiappan, Congress Rajya Sabha MP, Mr A.K.S. Vijayan, DMK MP, Mr T.K.S. Elangovan, DMK MP, Ms Helen Davidson, DMK MP, Mr N.S.V.Chittan, Congress MP, Mr K.S. Alagiri, Congress MP, Mr J.M. Haroon, Congress MP will travel to Sri Lanka on Saturday.The delegation will travel in Sri Lanka for five days to assess the situation. Mr Baalu will lead the team and the delegation will be back in India on October 14.யார் அனுப்பினார்கள்?எங்கிருந்து அனுப்பப்பட்டது ?

என்கிற எந்த விபரமும் இல்லாத, இப்படியான ஒரு மொட்டைக் கடிதத்தின் மூலமாகவே காங்கிரஸ், திமுக எம்பிக்கள் குழு இலங்கைக்குச் செல்ல உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிந்தது. இப்போது கருணாநிதி அறிவித்துள்ள படி இக்குழுவினரின் பயணம் என்பது இந்திய அரசின் பயணம் எல்ல என்றும் அது அவரவர் கட்சிச் செலவிலேயே இலங்கைக்கு சென்றிருப்பதையும் தெரிய முடிகிறது.

அப்படியானால் டி.ஆர் பாலு தலைமையிலான தமிழக எம்பிக்கள் குழு பிரதமர் மன்மோகனைச் சந்தித்த போது, விரைவில் இந்திய அரசு இலங்கைக்குச் செல்லும் குழுவை அறிவிக்கும் என்று ஏன் திமுகவினர் செய்தி பரப்பினார்கள். அனைவருமே சென்றிருக்கிற குழு அரசுக் குழு என்று நினைத்துக் கொண்டிருக்கும் இப்போது எங்கள் சொந்த செலவில் செல்கிறோம் என்று தாந்தோன்றித்தனாமாக செய்தி வெளியிட்டுள்ள கருணாநிதிக்கு என்னதான் பிரச்சனை? அரசுக்குழுவினராக இவர்கள் செல்லாத போது தனிப்பட்ட முறையிலான பயணம் என்றால் எதற்காகச் சென்றார்கள்.

இந்தக் குழுவில் உள்ள அனைவரும் அரசியல் வாதிகள் மட்டுமல்ல மிகப்பெரிய தொழில் முதலைகள், டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமாக பிரமாண்டமான கப்பல் நிறூவனங்கள் உண்டு, கனிமொழிக்கு ஏராளமான நிறுவனங்கள், மலேஷியாவிலும்,பாங்காக்கிலும் உண்டு என்னும் போது முகாம் மக்களைச் சாட்டாக வைத்து தொழில் முதலீட்டுச் சலுகைகளைப் பெற இந்த தொழில் முதலாளிகள் சென்றிருக்கக் கூடாது என்பதற்கு என்ன? உத்திரவாதம்.

இக்குழுவினரின் பயணத்திற்கான கிழக்கு மாகாண விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் நடத்திய விவாதத்தில் மாணவர்கள் கடும் கொந்தளிப்புகளை இவர்கள் மீது காட்டியதாகவும், கனிமொழியும், திருமா உள்ளிட்ட தலைவர்கள் மௌனமாக இருந்ததாகவும். டி.ஆர் பாலு மாணவர்களிடம் பேசும் போது “உலகத் தமிழர்களின் தலைவர் கருணாநிதி அனைத்தையும் செய்வார்” என்று சொன்னதாகவும் தெரிகிறது. ஏண்டா நாய்களா? ஐம்பதாயிரம் மக்கள் கொலை செய்யபப்ட்டு, மூன்றூ லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு, அன்றாடம் பாலியல் வன்முறையும்,கொலையுமாகிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திடம் போய். உலகத் தமிழர்களின் தலைவர் கருணாநிதி என்று சர்ட்டிபிக்கேட் பிரிண்ட் பண்றியே உங்களுக்கெல்லாம் ஈவிரக்கமே கிடையாதா?

கருணாநிதிக்கு உலகெங்கிலும் ஒரு அதிருப்தி நிலவுகிறது. உலக்த் தமிழ் மாநாடு நடைபெறுவதற்கு முன்னால் எப்படியாவது அதைச் சரிக்கட்டி உலக்த் தமிழர் பட்டத்தை வங்கிவிட வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் நாடகம்தான் இந்த தமிழக எம்பிக்களின் இலங்கைப் பயணம். மாணவர்களுடம் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு. வெளியில் வந்த போதும் பல மாணவர்கள் இக்குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

மக்களின் துன்பத்தையும் கண்ணீரையும் காவிய நாடகமாக நடத்திக் கொண்டிருக்கும் கருணாநிக்கு ஏற்பட்டுள்ள களங்கம் என்பது காலத்தால் கழுவப்பட முடியாததாகும். இந்தப் பயணத்தில் கூட ராஜபட்சே கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தின் பெயரில் இலங்கை அரசின் ஒப்புதல் பெற்றே இக்குழு இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதும் தெரிகிறது.

இதில் மிக முக்கியமான கவனிக்கப்பட வேண்டியது இவர்கள் தமிழ் தேசீய கூட்டமைப்பினரைச் சந்தித்திருக்கிறார்கள். போர் உச்சத்தில் நடந்து கொண்டிருந்த போது மக்களையும், போராளிகளையும் காப்பாற்ற பல முறை கருணாநிதியை சந்திக்க வேண்டி சென்னையில் வந்து தவம் கிடந்தனர் தமிழ் தேசீய கூட்டமைப்பினர். அவர்களை கடைசி வரை கருணாநிதி தேவையான போது சந்திக்கவே இல்லை. என்பதோடு டக்ளஸ் தேவானந்தா போன்றோர். இந்திய பிரதமர் வரை சந்தித்துக் கொண்டிருந்த போது, சம்பந்தன் குழுவை போர் முடியும் வரை பிரதமர் சந்திக்க வில்லை, பிரதமரிடம் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும் படி கருணநிதியிடம் கெஞ்சிய போதும் கருணாநிதி உதவவில்லை.

 போர் நடந்து அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட போது இந்த உலக்த் தமிழர்களின் தலைவர் என்ன செய்தார் தெரியும்? கனிமொழிக்கும், அழகிரிக்கும், தயநிதி மாறனுக்கும் பதவி வேண்டி டில்லியில் தள்ளுவண்டியில் சென்று மண்டியிட்டுக் கிடந்தார். அப்படி தன்னுடைய ஆட்சியிலேயே ஐம்பதாயிரம் மக்களைக் கொலையை கண்மூடி துரோகம் செய்து சகித்துக் கொண்ட இந்த உலகத் தமிழர்களின் தலைவலிக்கு. இப்போது அதை சரி செய்ய வேண்டிய நிர்பந்தம் . ஆகவே நாடகம் மேல் நாடகம் ஆடுகிறார். அப்படியான நாடகத்தின் ஒரு 14 வது ரீல்தான் இப்போது இலங்கையில் தமிழக எம்பிக்களால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. முழு நீளப்படத்தின் இன்னும் பல பாகங்களை நீங்கள் அடுத்தடுத்து கண்டு களிக்கக் கூடும்.

 

 

 

 
 

 

 

 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இந்திய நாடாளுமன்றக் குழுவின் யாழ்ப்பாண விஜயம்:மக்களை பொறுத்தவரையில் திருப்தி தரவில்லை!

Comments 4

  1. soundarasolan says:
    17 years ago

    தமிலகமெ வெதி தலைகுனிகிரது

  2. raja says:
    17 years ago

    கருணாநிதியின் அடிவருடிகளும்..சிங்களத்தின் கைக்கூலிகளும்..அங்கு சென்றுருப்பது வெறும் கண்துடைப்பே.. இதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம். கருணாநதி தமிழ் மக்களின் மற்றும் தமிழ்நாட்டின் மிக மோசமான சீரழிவின் ஒரு மையம்.. தயவு செய்து அவரது பெயரை எங்கயும் குறிப்பிட வேண்டாம்.. இந்த படுபாவிகளுக்கு கவிஞர் தாமரை எழுதிய ஈழத்தை பற்றி கவிதை வாழ்நாள் சமர்ப்பணம்… நாம் மிக மோசமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு கருணாநிதியின் வாழ் நாட்களே சாட்சி..

  3. பொன்னிலா says:
    17 years ago

    கருணாநிதி குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. உலகத் தமிழர்களின் தலைவர் என்று ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்ட ஒரு பூமியில் போய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

  4. தமிழவன் says:
    17 years ago

    சில நேரங்களில் செயலலிதாவின் சொற்கள் கூட இப்படி செயல் வடிவமாகிறதோ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...