Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்பு: அசோக் யோகன்

இனியொரு... by இனியொரு...
12/08/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா, அரசியல்
0 0
77
Home பிரதான பதிவுகள் | Principle posts

புகலிட இலக்கிய ஆர்வலர்களின், 40வது இலக்கிய சந்திப்பிற்கான லண்டன் குழுவின் சார்பில், ஓவியர் கிருஷ்ணராஜாவும், “இதுவரை ” ஆசிரியர் பௌசரும் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டு ருக்கின்றார்கள். லண்டன் 40வது இலக்கிய சந்திப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த ராகவன், இலங்கையில் 40வது இலக்கிய சந்திப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்ட்ட குழுவில், தனது பெயர் அனுமதியின்றி சேர்க்கப்பட்டுவிட்டதாகவும், இலக்கிய சந்திப்பு சம்பந்தமான சர்ச்சையில், தான் எந்த பக்கச் சார்பும் எடுக்கவும் விரும்பவில்லை, எனவே இலண்டன் இலக்கிய குழு விடும் அறிக்கையில், தனது பெயரை பயன்படுத்தவேண்டமென தம்மை கேட்டுக்கொண்டுள்ளார் எனவும், கிருஷ்ணராஜா பௌசர் இருவரும் வெளியிட்ட அறிக்கை குறிப்பாக சுட்டிக்காட்டுகின்றது. கருத்துச் சொல்லவேண்டிய அல்லது நிலைப்பாடு எடுக்கவேண்டிய நிலையில் ராகவன் ” நடுநிலை ” (!) கடைப்பிடிப்பதாக அறிக்கை சொல்கிறது.

இந்த அறிக்கை, கிருஷ்ணராஜாவினால் எனக்கும் அனுப்பப்பட்டிருப்பதால் , இலக்கியச் சந்திப்பின் செயல்பாட்டாளர்களில் ஒருவன் எனும் வகையில், இலக்கியச் சந்திப்பின் இன்றைய நெருக்கடிக்கான காரணம் குறித்துச் சில அவதானங்களை முன்வைப்பது எனது பொறுப்பு என நான் கருதுகின்றேன்.

இலக்கியச் சந்திப்பின் தொடக்க கால தார்மீக அறமும் ,கடப்பாடும் குறித்து இருவரின் அறிக்கை மிகச் சரியாகவே குறிப்பிட்டிருக்கின்றது. ஜனநாயக உரிமைகளுக்கான குரலாகவும், அதிகாரத்திற்கெதிரான தளமாகவும் புகலிட இலக்கிய சந்திப்புகள் அமைந்து வந்திருக்கின்றன என இலக்கியச் சந்திப்பில் இருந்த இரு அற அடிப்படைகளை அறிக்கை காத்திரமாகக் குறிப்பிடுகின்றது. கலைஞர்களின், படைப்பாளிகளின், இலக்கிய ஆர்வலர்களின் அடிப்படை வலிமை இந்த அறத்தின் மீதுதான் கட்டப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் எதுவும் வெளிப்படையாகப் பேசமுடியாத சூழலில், இலங்கையிலும், புகலிட நாடுகளிலும் அதிகாரம் செலுத்திய இலங்கை அரசு-விடுதலைப் புலிகள் என இரு அரசியல் அமைப்புக்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும், ஏகத்துவ அதிகாரத்திற்கு எதிராகவும் பேசிய கலைஞர்களையும், படைப்பாளிகளையும், இலக்கிய ஆர்வலர்களையும், பெருமளவிலான இடதுசாரி மரபாளர்களையும் கொண்டுதான் புகலிட இலக்கியச் சந்திப்புகள் நடைபெற்று வந்தன. காலஞ்சென்ற தோழர்கள் கலைச்செல்வன், புஷ்பராஜா, பரா போன்றவர்களின் செயல்பாட்டு வழிநடாத்தல்களில் இலக்கிய சந்திப்புக்களின் தளம் இவ்வாறுதான் அமையப்பெற்றிருந்தது.

ஆனால் இன்றைய அன்மைக்கால இலக்கிய சந்திப்புக்களின் வெளிப்பாடுகள் என்னவாக இருந்தன?

குறிப்பாக 2012 நவம்பரில் வெளியான ஐக்கிய நாடுகள் அமைப்பில் மறுபரிசீலனை அறிக்கையின்படி , ‘ 2009 மே மாத இறுதி யுத்தத்தில் இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் இலங்கை அரசினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் ’ எனச் சொல்லப்படும் இன்றைய நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கை இராணுவத்தினரின் முழுமையான தாக்குதல் நடைபெறும் சூழலில், இவ் இலக்கிய சந்திப்பு பற்றிய சமீபகால செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்வது அவசியமென கருதுகின்றேன்.

ஜனநாயக உரிமைகளுக்கான குரலாகவும், அதிகாரத்திற்கெதிரான தளமாகவும் புகலிட இலக்கிய சந்திப்புகள் அமைந்து வந்திருக்கின்றன என இருவரது அறிக்கை குறிப்பிடுவது உண்மையானால், கடந்த சில ஆண்டுகளில் நடந்த இலக்கியச் சந்திப்புக்கள் இந்த அடிப்படையான தார்மீக நெறிகளைக் கைகழுவிவிட்ட ‘’ வெறும் உயிரற்ற ஜடமாகவே ’’ இருந்துவந்திருக்கிறது என்பதனை நாம் வெளிப்படையாகக் காணமுடியும்.

இது எவ்வாறு நிகழ்ந்தது?

சில தரவுகளை நாம் வரிசைப்படுத்திக் கொள்வோம். இலக்கியச் சந்திப்பின் தொடக்க காலத்திற்கும், இன்றைய நிலைக்கும் இடையில் குறிப்பிடத்தக்க சில செயல்பாடுகள் நிகழ்ந்துள்ளன . இலக்கியச் சந்திப்பிற்கு வெளியில் தலித் மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்) , இலங்கை ஜனநாயக ஒன்றியம்- எஸ்.எல்.டி.எப் (இங்கிலாந்து) , புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கான சர்வதேச அமைப்பு (ஐஎன்எஸ்டி-ஜெர்மனி) , இலங்கை தமிழ் மொழிச் சமூகங்களின் கூட்டமைப்பு (இங்கிலாந்து) போன்ற அமைப்புக்கள் அன்மைய ஆண்டுகளில் தோற்றம் பெற்றன. இவை அதிக அளவில் அரசியலை மையப்படுத்திய அமைப்புகள். இவ் அமைப்புக்களில் அங்கம் வகித்தவர்களில் பெரும்பாண்மையானவர்கள், இன்று வெளிப்படையாக இலங்கை அரசை ஆதரிக்கின்றவர்களாக, இலங்கை அரசில் அங்கம் வகிக்கின்ற டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் ,கருணா, சிறீரெலோ குழு போன்றவர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு செயல்படுபவர்களாக அல்லது இவர்களது அரசியலை ஏற்பவர்களாக இருந்தார்கள் . இவர்களே அன்மைய ஆண்டுகளின் இலக்கிய சந்திப்பின் நிகழ்ச்சி நிரல்களை தீர்மானிப்பவர்களாக, இலக்கிய சந்திப்பினுள் அதிகாரம் செலுத்துபவர்களாக வளர்ச்சி பெற்றார்கள் . இந்த அமைப்புக்களைச் சேர்ந்த பலர் அந்தந்த புகலிட நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து செயல்படுபவர்களாகவும் இருந்தார்கள்.

ஆனால் 2009 மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின் இவர்களது அமைப்புக்கள் செயலிழந்தன. பிரான்ஸ் தலித் மேம்பாட்டு முன்னணி நபர்களின் இலங்கை அரசசார்பு பிழைப்புவாத அரசியல் அம்பலப்பட்டு போனது. இலங்கை ஜனநாயகத்திற்கான ஒன்றியம் (இங்கிலாந்து) தனது இருத்தலை இழந்தது. இவர்கள் இப்போது வெளிப்படையாக தங்களது இலங்கை அரசு ஆதரவு அரசியலைப் பேசுவதற்கு தயங்கினார்கள். எனினும் தமது ‘’ மறைத்துக்கொண்ட திட்டமாக’’ அதே அரசியலை தனிப்பட்ட வகையில் கொண்டிருந்தார்கள். முழுமையான அரசியல்வாதிகளான இவர்கள், தங்களது பிழைப்புவாத அரசியல் அம்பலப்பட்டுப்போனதினால், இப்போது தமது அரசியல் அமைப்பின் செயல்பாடுகளை பின்னிலைப்படுத்தி, முழுமையான இலக்கியவாதிகளாக “இலக்கிய முகமூடி” அணிந்து தங்களை தகமைத்துக்கொண்டார்கள்.

தங்களுடைய இலங்கை அரசுசார்பு அமைப்புக்களுக்கு பிரதியாக “இலக்கிய வாசிப்பு மனோநிலை” போன்ற சொல்லாடல்களில் இலக்கிய வியாபாரங்களை தொடங்கினார்கள். இவர்களே இன்றைய புகலிட இலக்கிய சந்திப்பிலும் அதிகாரம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள் என்பதை சாதாரணமாகவே நாம் புரிந்து கொள்ள முடியும்.
இது எவ்வாறு நிகழ்ந்தது?

இலக்கியச் சந்திப்பின் மரபிலேயே இதற்கான பதில் இருக்கின்றது. ஜனநாயகத்தையும், அதிகார எதிர்ப்பையும் முன்னிலைப்படுத்திய புகலிட இலக்கியச் சந்திப்பு சார்ந்தவர்கள், விடுதலைப் புலிகளால் புகலிடத்திலும், இலங்கையிலும் இருந்த அச்சுறுத்தலால் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்களாக இருந்தது இயல்பாக இருந்தது. 2009 மே 19 முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்பு நிலைமை வேறாகியது. புலிகள் அமைப்புரீதியில் வீழ்ச்சியுற்றார்கள். அவர்களது அதிகார மேலாண்மை கட்டுறுதி குலைந்தது. அவர்களது அரசியலும் வீழ்ச்சியுற்றது. இப்போது இலக்கியச் சந்திப்பு முன்னிறுத்தி வந்த ஜனநாயகம், அதிகார எதிர்ப்பு என்பதற்கு மிக்பெரும் அச்சுறுத்தலாக இலங்கை அரசு ஆகியது.

இப்போது தமிழ்மக்களின் இருப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் இலங்கை அரசுதான். இந்தப் புதிய நிலைமைகளை கவனத்தில் கொண்டு இலக்கிய சந்திப்பு தனது தார்மீக அறங்களைக் கடைப்பிடிக்கவில்லை.
இதற்கான காரணங்கள் என்ன?

இலக்கியச் சந்திப்பைக் கைப்பற்றியிருந்த முன்னாள் புலிகளும், வேறுபட்ட இயக்க அரசியல் கொண்ட விடுதலைப் புலி எதிர்ப்பாளர்களும், புதிய நிலையை அங்கீகரிப்பது தமது இருத்தலுக்கான அச்சுறுத்தலாக அமையும் எனக் கருதினார்கள்.
இவர்களில் இரண்டு விதமான சக்திகள் இருந்தார்கள். அரசு ஆதரவை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள் முதலாவது பகுதியினர். பிள்ளையான் ஆதரவாளர்கள் , சிறி டெலோ சார்ந்தவர்கள் , டக்ளஸ் தேவானந்தாவுடன் நேரடி தொடர் கொண்டவர்கள் இவர்கள்.

இரண்டாவது பகுதியினர் முன்னாள் புலிகள். நேர்ந்த அழிவுகளில் தமது பொறுப்பை முழுக்க நிராகரித்து, தமது கடந்த காலத்தை மறுத்து, புலிகளின் தலைமையின் மீது அனைத்துத் தவறுகளையும் சுமத்தித் தப்பிக்க நினைத்தவர்கள் இவர்கள். இவர்களது இருத்தலுக்கு தொடர்ந்து புலி எதிர்ப்பைப் பேசுவது என்பது, இலங்கை அரசின் அனுசரணையுடன் இலங்கையில் இவர்கள் அரசியல் செய்வதற்கு ஏதுவாக இருந்தது. ஆகவே இவர்கள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள், படுகொலைகள் போன்றவற்றைக் குறித்து புகலிடத்திலும் பேசவில்லை. இலங்கையினுள்ளும் பேசவில்லை.

சமகாலத்தில் இவர்களில் சிலர் இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தேர்தல் அரசியலிலும் ஈடுபட்டார்கள். சிறி டெலோ , தலித் மேம்பாட்டு முன்னணி போன்றவை இந்த அமைப்புக்கள். இலக்கியச் சந்திப்பை இலங்கைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் இவர்கள்தான். இலக்கியச் சந்திப்பை முழுமையாக இலங்கை அரசுக்கான அமைப்பாகப் புகலிடத்திலும் புலத்திலும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளையே இதன்வழி இவர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.

அரசியல்வாதிகளான இவர்கள், அரசியலில் நேரடியான ஈடுபாடற்ற இலங்கைக் கலைஞர்களையும், இலக்கியவாதிகளையும் கூட தமது அரசியலின் கீழ் திரட்டுவதற்காகவே இப்போது இவர்கள் “இலக்கிய முகம்” அணிந்திருக்கிறார்கள்.

இலக்கியச் சந்திப்பு தொடர்பாக இப்போது எழுந்திருக்கும் சர்ச்சைகளின் பின்னிருக்கும் அரசியல் என்பது இதுதான்.

புகலிட நாடுகளை மையப்படுத்தி இதுவரை நடைபெற்று வந்த புகலிட இலக்கியச் சந்திப்பினை புகலிட எல்லைக்கு வெளியில், முதன் முதலாக ஒரு நாட்டில் நடாத்த முன்வருகின்றபோது, இலக்கிய சந்திப்பு நடைபெறும் ஒரு பொது அரங்கில் இவ்விடயம் பேசப்பட்டு, பொதுச்சபையின் ஒப்புதலுடன் கொண்டு செல்வதே சிறந்த வழிமுறையாகும் என்று கிருஷ்ணராஜா , பௌசர் வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

“புகலிட இலக்கியச் சந்திப்பு” என அழைக்கப்பெற்ற ஒரு இலக்கிய நிகழ்வு ஏன் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்? அதற்கான அவசியம் என்ன என்பது ஒரு மிக முக்கியமான கேள்வி.

இலங்கையில் இப்போதும் இலக்கிய நிகழ்வுகள் , புத்தக வெளியீடுகள் , வாசகர் சந்திப்புகள் யாழ்ப்பாணத்தில் நடக்கின்றன. கொழும்பை மையமாகக் கொண்டு இலக்கிய மாநாடுகள் நடத்தப்படுகின்றன. அங்கிருந்து இலக்கியச் சஞ்சிகைகள் வருகின்றன. தமிழகத்திலும் புகலிடத்திலும் இருந்து எழுத்தாளர்கள் அங்கு சென்று வருகின்றார்கள். இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றார்கள். அதுபோலவே இலங்கையிலிருந்து வரும் எழுத்தாளர்கள் புகலிட இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றார்கள். இச்சூழலில் புகலிடத்துக்கென அமைந்த இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

இலங்கையில் நடைபெறும் எந்த இலக்கியச் சந்திப்பிலும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோதச் செயல்பாடுகள், பள்ளிவாசல் அகற்றம் முதல் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் மீதான ஒடுக்குமுறை வரை அதிகாரச் செயல்பாடுகள் குறித்து இலங்கையில் இலக்கியவாதிகள் பேச முடியாத சூழலில், புகலிட நாடுகளில் அதனைப் பேசுவதற்கான சூழல், புகலிட இலக்கியச் சந்திப்பினுள் இருக்கும் வரை, அதனை ஏன் இலங்கைக்குக் கொண்டு செல்ல ஒரு தரப்பினர் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றார்கள்?

இதிலிருக்கும் அரசியல் என்ன?

இதற்கான பதில் மிக மிக வெளிப்படையானது. ஜனநாயகம், மனித உரிமை, அதிகாரம் தொடர்பான இலங்கை அரசின் மீறல்களைப் பேசாது, என்றென்றும் மீளமுடியாதபடி இலக்கியச் சந்திப்பை இலங்கை அரச ஆதரவு அமைப்பாக நிரந்தராக மாற்ற முயல்பவர்களே, இத்தகைய அரசியல்வாதிகளே புகலிட இலக்கியச் சந்திப்பை இலங்கைக்குக் கொண்டு செல்ல, அதனது தனித்தன்மையை அழித்துவிட முனைப்புக் காட்டுகின்றார்கள்.

இந்த நிலைபாட்டுக்கு எதிராக ஒரு சில சுயாதீனமான கலைஞர்களும், இயல்பாக இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்களும், அதனது துவக்க நாட்களின் ஆர்வலர்கள் எனும் அளவில் புகலிட இலக்கியச் சந்திப்பின் தனித்தன்மையைக் காக்க விரும்புகின்றவர்களும் , கடும்போக்கு அரச ஆதரவு அரசியல்வாதிகளிடமிருந்து ஒப்பீட்டளவில் கலைகளின் சுயாதீனத்தைக் காக்க நினைப்பவர்களும்தான் இப்போது இந்த அரசியல் எதேச்சாதிகாரிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றார்கள் என நாம் கருதுகின்றோம். (அவர்களது தனிப்பட்ட அரசியல் சர்ச்சைகுரியது என்றாலும்) அந்த அளவில்தான் “ஒரு சாரார் தன்னிச்சையாக இலங்கையில் இலக்கிய சந்திப்பு நடைபெறும் என அறிவித்திருப்பதானது, புகலிட இலக்கிய சந்திப்பு பொது அரங்கிற்கு இந்த விடயத்தினை கொண்டு சென்று முடிவினை எடுக்கும் நிலைக்கு எம்மை தள்ளியுள்ளது“ என அறிவித்திருக்கிறார்கள் என நாம் கருதுகிறோம்.

இந்த நெருக்கடி இப்போது உருவாகியது அல்ல. இலக்கியச் சந்திப்பு படிப்படியாகத் தனது சுயாதீன நிலைபாட்டை இழந்து வந்திருப்பதன் தர்க்கபூர்வமான வளர்ச்சியே இன்றைய நிலை. இதிலிருந்து மீள இலக்கி யச் சந்திப்பின் முன் பல்வேறு பக்கப் பாதைகள் இல்லை. ஓரே ஒரு பிரதான சாலைதான் உண்டு.

அது , ஜனநாயக உரிமைகளுக்கான குரலாகவும் , அதிகாரத்திற்கெதிரான தளமாகவும் புகலிட இலக்கிய சந்திப்புகள் அமைந்து வந்திருக்கின்றன என்பதன் தொடர்ச்சியைப் பேணுவதனால் மட்டுமே பயணிக்கக்கூடிய சாலை. இலக்கியச் சந்திப்பு அதனது மேலே குறிப்பிட்ட தார்மீக அறங்களை மறுபடியும் மீட்டுக் கொள்ள வேண்டும். இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் , தாம் சார்ந்த இயக்கங்கள் , தனிமனிதர்களாகத் தாம் என அனைவரின் மீதுமான விமர்சனத்தின் மீதும் , சுயவிமர்சனத்தின் மீதும்தான் இந்தத் தார்மீக அறங்கள் கட்டியெழுப்பப்பட முடியும்.

இத்தகைய ஆழமான தளங்களுக்குச் செல்லாமல் ஏதோ சில தனிமனிதர்களுக்கு இடையிலான சர்ச்சையாக இதனைச் சித்தரிப்பது நெருக்கடியின் அடிப்படைகளைத் தீண்டமுடியாத வெறும் அர்த்தமற்ற சொற்குவியலாகவே இப்பிரச்சினை எஞ்சி நிற்கும். இலக்கியச் சந்திப்பின் சுயாதீனத் தன்மையையும் அதனது தார்மீக அறங்களையும் காப்பதற்கான வரலாறு அளித்திருக்கும் இறுதி வாய்ப்பு இது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லையெனில் புகலிட இலக்கியச் சந்திப்பின் நிரந்தரத் தார்மீக அழிவு நிச்சயம்.

==================================================================================

இலண்டன் குழு
இதுவரையான இலக்கிய சந்திப்பு ஏற்பாட்டாளர்களுக்கு………

40வது இலக்கிய சந்திப்பு அறிவித்தலை இலங்கையில் நடாத்துவதாக ‘தூ’ உட்பட இன்னும் சில இணையத்தளங்களில் பிரசுரமான அறிவித்தல் தொடர்பாக லண்டனில் 40 ஆவது இலக்கிய சந்திப்பை நடத்த கோரியவர்கள் என்கிற அடிப்படையில் சில விடயங்களை தெளிவுபடுத்துவது எமது பொறுப்பு என நம்புகிறோம்.

1988ம் ஆண்டு புரட்டாதி மாதம் 24ம் திகதி Germany யின் Herne நகரில் முதலாவது இலக்கிய சந்திப்பு தொடங்கப்பட்டு, 2012ம் ஆண்டு வைகாசி மாதம் 05ம் திகதி Toronto, Canada வரையில் இதுவரை முப்பத்தொன்பது சந்திப்புகள் நடாத்தப்பட்டுள்ளன. ஜனநாயக உரிமைகளுக்கான குரலாகவும், அதிகாரத்திற்கெதிரான தளமாகவும் புகலிட இலக்கிய சந்திப்புகள் அமைந்து வந்திருக்கின்றன.

உங்கள் அனைவருக்கும் தெரிந்த வகையில், இலக்கிய சந்திப்பு பாரம்பரியத்திற்கு அமைவாக சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் அடுத்த சந்திப்பு நடைபெறும் இடத்தினை தீர்மானிப்பதற்கான விடயம் உள்ளடக்கப்பட்டு, அடுத்த சந்திப்பினை எங்கு நிகழ்த்துவதென்ற தீர்மானம் ஜனநாயக ரீதியில் எடுக்கப்படுவதே இலக்கிய சந்திப்பின் பாரம்பரியமாக ,வழமையாக இருந்து வந்திருக்கிறது. இலக்கிய சந்திப்புக்கு கறாரான விதிமுறைகள் இல்லையெனினும் சில எழுதப்படாத அனுசரணைகள் உண்டு.

39வது இலக்கிய சந்திப்பு கனடாவில் நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன், கனடாவின் “39வது இலக்கிய சந்திப்பு குழு,” அதன் பிரதான ஏற்பாட்டாளரான சுமதிக்கு , எம்மால் 40வது இலக்கிய சந்திப்பினை இலண்டனில் நடாத்த கோருபவர்கள் என்கிற அடிப்படையில் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு, அந்தமடல் கிடைத்ததையும் உறுதிப்படுத்தி, எமது வேண்டுதலை 39வது இலக்கிய சந்திப்பு பங்குபற்றுனர்கள் முன்னிலைக்கு தெரியப்படுத்துமாறும் கோரி இருந்தோம்.

எமது மின்னஞ்சல் 39வது இலக்கிய சந்திப்பில் வாசிக்கப்பட்ட போது, நண்பர் “கற்சுறா” 38வது இலக்கிய சந்திப்பு பிரான்சில் நடைபெற்ற போது இலங்கையில் நடத்துவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டது என்று சொன்ன நிலையில், 40வது இலக்கிய சந்திப்பினை எங்கு நடத்துவது என்கிற இறுதிமுடிவு எடுக்கப்படாத நிலையில் கனடா இலக்கிய சந்திப்பு முடிவுற்றதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது.

கனடாவில் அடுத்த இலக்கிய சந்திப்பினை எங்கு நடாத்துவது தொடர்பில் முடிவு எடுக்கப்படாத நிலை இப்பிரச்சனைக்கு வழிவகுத்தது. இதன் அடுத்த கட்டமாக ,கனடா குழுவானது இந்த விடயத்தில் ஒரு முடிவை எடுக்குமாறு நாம் சுமதிக்கு சுட்டிக்காட்டி கேட்டிருந்தோம். 39வது இலக்கிய சந்திப்பு குழுவின் பிரதான ஏற்பாட்டாளராக செயற்பட்ட சுமதி அடுத்த சந்திப்பிற்கான கோரிக்கையை எழுத்து மூலமாக கேட்டவர்கள் என்கிற அடிப்படையிலும்,39வது சந்திப்பில் அடுத்த இலக்கிய சந்திப்பினை கோரிய ஒரே தரப்பு என்கிற வகையிலும் லண்டனில்தான் அடுத்த சந்திப்பு என தெரிவித்து இருந்தார். பின்னர் எழுந்த நிலைமையின் காரணமாக , சுமதி தன்னால் இதற்குமேல் ஏதும் செய்ய முடியாது என சொல்லி இரு தரப்பாரையும் பேசி முடிவெடுக்க சொல்லி விட்டார்.

39வது இலக்கிய சந்திப்பு குழுவின் பிரதான ஏற்பாட்டாளராக செயற்பட்ட சுமதி அடுத்த சந்திப்பு லண்டனில்தான் என தெரிவித்து இருந்தாலும் கூட, 40 வது இலக்கிய சந்திப்பு இலண்டனில் நடாத்தப்பட வேண்டுமென்ற அவரது தனிப்பட்ட முடிவு ,ஜனநாயக ரீதியிலும்,இலக்கிய சந்திப்பின் பாரம்பரியத்தின் வழிமுறைக்கு ஊடாகவும் எடுக்கப்படவில்லை என்பதில் நாம் தெளிவாக இருந்தோம். நாம் ஜனநாயக அடிப்படையில் முடிவெடுப்பதனையும், அதனை பேணுவதிலும் இன்றுவரை நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

40வது இலக்கிய சந்திப்பினை லண்டனில் நடத்த ஒரு தலைப்பட்சமாக எம்மால் முடிவெடுக்க முடியாது . ஆனால் ஒரு சாரார் தன்னிச்சையாக இலங்கையில் இலக்கிய சந்திப்பு நடைபெறும் என அறிவித்திருப்பதானது ,புகலிட இலக்கிய சந்திப்பு பொது அரங்கிற்கு இந்த விடயத்தினை கொண்டு சென்று முடிவினை எடுக்கும் நிலைக்கு எம்மை தள்ளியுள்ளது.

*புகலிட நாடுகளை மையப்படுத்தி இதுவரை நடைபெற்று வந்த புகலிட இலக்கிய சந்திப்பினை, புகலிட எல்லைக்கு வெளியில் முதன் முதலாக ஒரு நாட்டில் நடாத்த முன்வருகின்ற போது, இலக்கிய சந்திப்பு நடைபெறும் ஒரு பொது அரங்கில், இவ்விடயம் பேசப்பட்டு பொதுச்சபையின் ஒப்புதலுடன் கொண்டு செல்வதே சிறந்த வழிமுறையாகும்.

*கனடாவில் தீர்மானிக்கப்படாத விடயத்தினை வாய்ப்பாகக் கொண்டும், லண்டனில் இலக்கிய சந்திப்பினை நடாத்தக் கோரியவர்கள் ,இலக்கிய சந்திப்பு பாரம்பரியத்தினை மதிக்கிறார்கள் என்பதனை பலவீனமாகக் கருதி தன்னிச்சையாகவும் ஏகபோகமாகவும் முடிவெடுக்க முடியாது.

*38 இலக்கிய சந்திப்பினை பிரான்சில் நடாத்திய ஒரு பிரிவினரே 40வது இலக்கிய சந்திப்பினையும் நடாத்தக் கோருவது அடிப்படையிலே நியாயம் காண முடியாத ஒரு கோரிக்கையாகும், ஏனெனில் 2006ம் ஆண்டில்தான் (33 வது இலக்கிய சந்திப்பு) லண்டனில் நடைபெற்றது. ஐந்து ஆண்டுகளின் பின்புதான் இலக்கிய சந்திப்பினை நாம் லண்டனில் நடாத்தக் கோரி இருந்தோம். முறையாக எமக்கு வாய்ப்பளிக்கப்படுவதே நியாயமானதாகும்.

*புகலிட இலக்கிய சந்திப்பினை இலங்கையில் நடாத்த வேண்டுமென அங்குள்ள படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள் யாரும் எழுத்து மூலமாக கோரிக்கையை விடுத்தார்கள் என்பது இதுவரையான புகலிட இலக்கிய சந்திப்பின் பொது அரங்கு முன் முன்வைக்கப்படவில்லை.

*இலங்கையிலுள்ள எழுத்தாளர்கள்,கலைஞர்களை,
செயற்பாட்டாளர்களை நாம் இந்த விடயத்தில் குறைகாணவும் இல்லை, அவர்களை இந்த விவகாரத்தில் வலிந்து சம்பந்தப்படுத்தவும் முனையவில்லை.

ஆகவே இன்றைய நிலையில் ஒரு முன்மொழிவாக, இது தொடர்பாக தீர்மானிக்கும் உரிமையை

இலக்கிய சந்திப்பின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை இயங்கி சந்திப்பினை நடாத்தியவர்கள் முன்வந்து எழுத்து மூலமாக தமது முடிவினை தெரிவிப்பதுதான் சிறந்த வழிமுறை எனக் கருதுகிறோம்.

பெரும்பான்மையானவர்களின் முடிவிற்கு நாம் மதிப்பளிக்கிறோம். இன்றைய திகதியிலிருந்து இரு வார காலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. (18-12-2012 வரை )எனவே இக்கால எல்லைக்குள் உங்கள் பதில் எழுத்து மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விடயத்தில் ஒரு முடிவினை காண்பதற்கு உங்கள் பங்களிப்பு அவசியமானதாகும்.

உங்கள் பதிலினை கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்—-
40thilakkiyachanthippu@gmail.com

நன்றி
இலண்டன் குழு

*கிருஸ்ணராஜா
*பௌசர்

0 4-12-2012

குறிப்பு- இலன்டன் இலக்கிய சந்திப்பு குழுவில் இருந்த நண்பர் ராகவன் அவர்கள் ,இலங்கையில் இலக்கிய சந்திப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட குழுவில் தனது பெயர் தனது ஒப்புதல் இன்றி சேர்க்கப்பட்டு விட்டதாகவும், இலக்கிய சந்திப்பு சம்பந்தமான சர்ச்சையில் தான் பக்கசார்பு எடுக்கவும் விரும்பவில்லை.
எனவே இலண்டன் இலக்கிய குழு விடும் அறிக்கையில் தனது பெயரை பயன் படுத்த வேண்டாம் என எம்மை கேட்டுக் கொண்டுள்ளார்.

===========================================================================================

இலங்கை அரச ஆதரவு நபர்கள் சந்திப்பு

40வது இலக்கியச் சந்திப்பு

புகலிட இலக்கிய ஆர்வலர்களின் கவனத்திற்கு
தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இலக்கியச் சந்திப்பின் 39வது சந்திப்பானது கனடாவில் நடைபெற்றது. 40வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கான விருப்பத்தை சிலரும், இலண்டனில் நடத்துவதற்கான விருப்பத்தை சிலரும் 39வது இலக்கியச்சந்திப்பில் முன்வைத்தபோது, 40வது இலக்கியச்சந்திப்பு இலண்டனில் நடைபெறும் என்பதாகவே முடிவெடுக்கப்பட்டிருந்தது.
பிரான்சில் நடைபெற்ற 38வது இலக்கியச் சந்திப்பின் இறுதியில் 39வது சந்திப்பை இலங்கையில் நடத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டபோது, நோர்வேயில் நடைபெற்ற 37வது சந்திப்பில் கலந்துகொண்ட சுமதி ரூபன் அவர்கள் 39வது சந்திப்பை கனடாவில் நடத்த விருப்பம் தெரிவித்த சம்பவம் நினைவுறுத்தப்பட்டு அவ்வாறே 39வது சந்திப்பு கனடாவில் நடைபெற்றது.
இலக்கியச் சந்திப்பின் தொடர்ச்சியை இலங்கையில் நடத்துவதற்கான விருப்பத்தை பிரான்சில் நடைபெற்ற 38வது இலக்கியச்சந்திப்பிலேயே அனைவரும் அறிந்திருந்தார்கள். இருந்தபோதும் 40வது இலக்கியச் சந்திப்பை இலண்டனில் நடத்துவதற்கான தமது விருப்பத்தை நண்பர்கள் கோரியிருந்தார்கள். தற்போது இலண்டனில் தாம் செய்யமுடியாத சூழல் இருப்பதாக அவர்கள் தெரிவித்த பட்சத்தில் 40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில் நடைபெற இருக்கின்றது.
இலங்கையில் நிகழ்ச்சி நிகழ்வுகளுக்கான ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அவர்களது பெயர் விபரம் கீழே தரப்பட்டடிருக்கின்றது. புகலிடத்தில் இலங்கையில் நடத்துவதற்கு விருப்பமும், ஒத்துழைப்பும் தரும் சிலரது பெயர்களும் கீழே தரப்பட்டுள்ளது. மேலும் இணைந்து செயல்படுவதற்கும், நிகழ்ச்சிகள் செய்வதற்கு ஆர்வமுள்ளவர்களும் கீழ்காணும் மின் அஞ்சல்மூலமாக தொடர்புகொள்ளவும். 2013 ஆண்டு யூலை, ஆகஸ்ட் மாதங்களே புகலிடத்தில் இருந்து வருபவர்களுக்கு வாய்ப்பாக இருக்கும் என அதிகமானவர்கள் கருதுகின்ற பட்சத்தில் அக்காலங்களிலேயே இலங்கையில் இலக்கியச்சந்திப்பை நடாத்த உத்தேசிக்கப்பட்டிருக்கின்றது. திகிதி விபரங்கள் பின்பு அறிவிக்கப்படும்.
இலங்கையிலுள்ள நிகழ்ச்சி நிகழ்வுகளுக்கான ஆலோசனைக்குழு
————-
1 சோதிதாசன் – (இலக்கியகுவியம்) யாழ்ப்பாணம்
2 ஆத்மா (கவிஞர்) – மட்டக்களப்பு
3 லெனின் மதிவாணன் (படைப்பாளி) – தென்இலங்கை
4 நவாஸ் – (கவிஞர்)மட்டக்களப்பு
5 கருணாகரன் (படைப்பாளி) – கிளிநொச்சி
6 யோ.கர்ணன் (படைப்பாளி) – யாழ்ப்பாணம்
7 வாசுகி (இலக்கிய, சமூக ஆர்வலர்) – யாழ்ப்பாணம்
8 தமிழ் அழகன் (சமூகசெயல்பாட்டாளர்) – யாழ்ப்பாணம்
9 வேல்தஞ்சன் (சமூகசெயல்பாட்டாளர்) – யாழ்ப்பாணம்
10 வசீம் அக்ரம் – (படைப்பாளி) மட்டக்களப்பு
11 திசோரா – (படைப்பாளி) மட்டக்களப்பு
————-
புகலிடத்து நிகழ்ச்சி நிகழ்வுகளுக்கான ஆலோசனைக்குழு
1தேவதாசன் – பிரான்ஸ்
2 அசுரா- பிரான்ஸ்
3 கற்சுறா – கனடா
4 ஜீவமுரளி – ஜேர்மனி
5 ராகவன்- இலண்டன்
(மேலும் ஆலோசனைக்குழுவில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் தமது விருப்பத்தை தெரிவிக்கவும்)
புகலிடத்திலிருந்து ஒத்துழைப்பவர்களும், இதில் கணிசமானவர்கள் இலங்கைக்கு வந்து கலந்து கொள்ளவும் ஆர்வமுள்ளவர்கள்.
1 ஸ்ராலின் – பிரான்ஸ்
2 விஜி – பிரான்ஸ்
3 சோபாசக்தி – பிரான்ஸ்
4 சுந்தரலிங்கம் – பிரான்ஸ்
5 யோகரட்ணம் – பிரான்ஸ்
6 அதீதா – கனடா
7 உமா – ஜேர்மனி
8 சந்தோஸ் – இலண்டன்
9 தமயந்தி – நோர்வே
10 பானுபாரதி – நோர்வே
11 கீரன் – இலண்டன்
12 ரெங்கன் – இலண்டன்
13 ஜோர்.இ.குருஷேவ் – கனடா
14 பாபு பரதராஜா – கனடா
15 பேராதரன் – கனடா
16 மெலிஞ்சி முத்தன் – கனடா
17 அரவிந் அப்பாத்துரை -பிரான்ஸ்
18 சபேசன் – கனடா
தொடர்புகளுக்கு : ilakkiyachchanthippu40@gmail.com

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு : கொள்ளையர்களுக்கு கதவு திறக்கப்பட்டடது

Comments 77

  1. Raphel says:
    13 years ago

    வணக்கம் அசோக் அண்ணா.
    உங்களுடைய பதிவுதேவையானதே. ஆனால் விரிவாக இல்லை. தெளிவாகவும் இல்லை. ஓர் முழுமையான கட்டுரையாக இதை வைத்திருக்கலாம். 

    தமிழநாட்டிலும் புலம்பெயர் இடங்களிலும் இலங்கையிலும் இலக்கியச் சந்திப்பு தொடர்பாக தெளிவற்று பலர் இருப்பார்கள். அதைநோக்கி ஓர் கட்டுரையை எழுதியிருப்பீர்கள் என நினைத்தேன். திருப்பியும் திருப்பியும் புலம்பெயர் பரிஸ்-லண்டன்-ஜெர்மன் தமிழர்களை நோக்கி எழுதினால் பலன் இல்லை.

    மீண்டும் உங்களிடம் விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன். 
    (இனியொரு ஆசிரியருக்கு…! எனது பெயர் இருப்பதால் அதை அறிந்து பல விலங்கினங்கள் கருத்தும் கேள்வியும் எழுப்பும். அவற்றுக்கு என்னிடம் பதிலை தார்மீக அடிப்படையில் எதிரிபார்க்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். 😉 )

    • நெருஞ்சி says:
      13 years ago

      கருத்தும் கேள்வியும் எழுப்பும் இனியொரு ஆசிரியரே!

      இந்த Raphel என்கிறது, எந்த இனத்தை சேர்ந்தது என்பதை, அறிவிப்பீராக!

      • Totia says:
        13 years ago

        Why is it important here ? Lets say he is Jaffna Vellala Tamil Hindu of dark complexion with brown eyes and grey hair, does that make any difference now?

        • Raphel says:
          13 years ago

          If the comment coming from ‘Na’vi’  it is OK. 😉 

      • மனோ says:
        13 years ago

        இந்த கேள்வியின் பின்னணி இதுதான்.
        கந்தன், செல்லன் தமிழ் பெயர்கள் அல்ல! அது இழிசனர் வழக்கு!!
        இப்ராகீம், அப்துல்லா அறபிப் பெயர்கள்!
        மைக்கல், கொன்ஸ்ரரைன் இலத்தீன் பெயர்கள்!
        சிவகுமார் (Shiva Kumar), சுப்பிரமணியம் (Subramanyam) தூய தமிழ் பெயர்கள்!!!
        பிராமணியத்தைக் கொண்டாடும் யாழ் சைவ-வேளார் மரபினரின் கேள்வி இதன்றி வேறென்ன?
        Political Correctness என்று ஒரு சொல் இருக்கின்றது என்றாவது தெரியுமா?

        • நெருஞ்சி says:
          13 years ago

          உந்தக் சாதிக் கருத்து இங்கை என்ன சம்பந்தம்?
          யாராவது தாறம் எண்டு சொன்னவையளோ!

          • Rowthiran says:
            13 years ago

            The fault is with Onioru to entertain such silly comments. Some are a waste of space in this world.

      • Raphel says:
        13 years ago

        மன்னிக்கவும் ஆசிரையரே! நான் விலங்கு என்பதோடு தாவரம் என்பதைச் சேர்க்க மறந்துவிட்டேன்.
        (இப்போது முன்பு போல் அல்ல.அனைத்தையும் படமாகவும் சேமிக்க முடியும்.)

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      I see comraae Vasudeva Nanayakkara. That is very comforting. He is a l lawyer too.

  2. ஓணான் says:
    13 years ago

    எலி கொழுத்தால் வளையில் தங்காது 

  3. அசோக் யோகன் says:
    13 years ago

    அன்புடன் ரபேல் வணக்கம். உங்கள் அபிப்பிராயத்தை கவனத்தில் கொள்கின்றேன்.இக் குறிபபுக்கள் கிருஷ்ணராஜா- பெளசர் இணைந்து வெளியிட்ட அறிக்கைக்கான என் அபிப்பிராயங்களே. சிலவேளைகளில் விடுபடலும் தெளிவின்மையும் காணப்படலாம். நீங்கள் அவ்விடயங்களை குறிப்பிட்டால் எதிர்வரும் காலங்களில் அதன்மீது கவனம் செலுத்த முடியும். ரபேல் நீங்களும் ஒரு காலகட்டத்தில் இலக்கிய சந்திப்பின் முக்கிய செயல்பாட்டாளராக இருந்துள்ளீர்கள்.நீங்களும் உங்கள் அபிப்பிராயத்தை முன் வைப்பது ஆரோக்கியமானது. இன்றைய அரசியல் இலக்கிய சமூக உலகம் ஆயோக்கியர்களின் கரங்களில் அகப்பட்டுக்கொண்டுள்ளது.அதிகாரத்தை எதிர்ப்பதாய் சொன்ன நமது நண்பர்களே இன்று அதிகார ஆசைகளோடும் அதன் கனவுகளோடும் இலங்கை பாசிச அரசின் காலடியில் மகிந்தாவின் கடைக்கண் பார்வைக்கு தவம் இருக்கின்றார்கள்.நாம் என்ன செய்யமுடியும்?

    அன்புடன் அசோக்

    • அடங்காத்தமிழன் says:
      13 years ago

      அசோக் அண்ணா,
      நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் நபர்களும் மற்றும் இதற்கு ஆதரவாக தங்கள் பெயர்களை பதிவு செய்திருப்பவர்களும் ஏற்கனவே மகிந்த விசுவாசிகளாக வெளிப்படையாக செயற்படுபவர்கள்.
      புதிதாக இக்கூட்டுக்குள் இணைந்திருப்பவர்தான் இரயாகரன். இவர் கனடாவில் இருக்கும் சபேசன் ஊடாக காய் நகர்ந்துகிறார். இதன் மூலமாக நாம் மக்கள் முன்னணி அரசியல் ரீதியாக மகிந்த அரசுக்கு ஆதரவாக செயற்படுவதாக எடுத்துக்கொள்ளலாமா? மக்கள் முன்னணியின் மத்திய குழுவின் ஏனைய அங்கத்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

  4. shathis says:
    13 years ago

    அன்புடையீர்இ இலங்கை ஆதரவு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கையொப்பம் இட்டவர்களில் சபேசன் என்ர பெயர் காணப்படுது. இவர் பனிமலர் சபேசனா? யாராவது அறியத்தரவும்.

    • Kandhi says:
      13 years ago

      இந்த சபேசன் ரயாகரன் உடைய ஜனநாஜக மக்கள் முன்னணிஜின்  மத்திய குழு உறுப்பினர்.

  5. Tharmalinkam says:
    13 years ago

    இலங்கை ஆதரவுக் குழு கூட்டத்தில் கோவை.நந்த்தன் உள்ளார். யாழ்பாணத்தில் ஜனநாயகம் இல்லை என்றீர்களே இப்ப என்ன சொல்றீங்க என்று உட்டாரு இணையத்தில்க எயுதியுள்ளார்.

  6. arunthasivan says:
    13 years ago

    மகிந்த அரசின் சனனாயக முயற்சிக்கு இலக்கியசந்திப்பு வழஙகும் வாழ்த்துகள்!! யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படும் பாடு இலக்கியக் கண்கள் அறியாதது அதிசயம்.நீரோ மன்னனின் வாரிசுகள் இவர்களா?

  7. thavarajasingam says:
    13 years ago

    இலக்கியச்சந்திப்பு பெரிய உலகமகா புரட்சி.
    அதுக்குப்போய் வெத்துவேட்டுகள் வியாக்கியானம் வேற.
    வீட்டுக்கொரு இலக்கியச்சந்திப்பை நடத்துங்கோவன் – துப்பிருந்தால்.  அதவிட்டுப்போட்டு ஒண்டுமில்லாத ஒண்டுக்கு ஏன் அலயிறியள்.  புகலிட நாடுகளில நடந்தா பகிஸ்கரிப்பபினம். பிறகு அது எங்க நடந்தா என்ன?  வெத்துவேட்டுகளுக்கு விசயம் ஒண்டுமில்ல. சும்மா

    • Raphel says:
      13 years ago

       என்ன அண்ணா/அண்ணி இது நக்கல்ஸா?

  8. P.V.Sri Rangan says:
    13 years ago

    புதிய ஜனநாயகத் மக்கள் தோழமை முன்னணி (புலம் பெயர்) விடுக்கும் தோழமைக்கான அறைகூவலும் எச்சரிக்கையும்!

    யாழ்ப் பல்கலைக்கழக மாணவரது போராட்டம் இலங்கை பூரகவும் படர்கிறது.இஃது, புரட்சிக் கிளை-விழுதெறிந்து மகிந்தா அரசினது பாசிசத்தைத் தோற்கடிக்கும். புதிய ஜனநாயக மார்க்சிய-லெனியக் கட்சியானது பெருந்தலைவர் தோழர் திரு.செந்தில்வேல் தலைமையில் சிங்கள முற்போக்குச் சக்திகளிடம் “புரட்சிக்குரிய புறநிலைகளைத் தகவமைத்துக்கொண்டு” வருகிறது.

    புரட்சிக்குரிய “புறவயச் சூழல் மற்றும் அகவயக் காரணியின் ஒற்றுமைகள்” சிங்களச் சமுதாயச் சூழலில் எவ்வகையில் நிலவுகிறதென்பதைப் பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களது தலைமையில் கட்சியானது கள ஆய்வுப்பணியை முடுக்கி விட்டிருப்பது மகிழ்ச்சியே!

    இந்தக் கள ஆய்வில்”புரட்சியின்அடிப்படை விதியை அலட்சியப்படுத்துவது அரசியலில் அதி சாகசத்துக்குட்பட்டுப் புரட்சியைத் தோல்விக்கிட்டுச் செல்லும்” என்பதால் தோழர் இரயாகரன் தானே கவனித்துப் பரிசீலிப்பதற்கான பணியைப் பொறுப்பேற்றிருப்பதும் நமக்கு நம்பிக்கைய இரட்டிப்பாக்கிறது.

    அந்த நம்பிக்கைக்கு, உரஞ் சேர்ப்பதுபோல தம்பி பழ.ரிச்சர்ட்டும் தொடர்ந்து நிலத்திலிருந்து புரட்சிகரமான நகர்வுகளைச் செய்து எதிரிக்கெதிராக நெஞ்சை நிறுத்தி, மக்கள் முன் வருகிறான்.இது,இன்றைய நிலத்து இளைய தலைமுறைக்கு வலுவான நம்பிக்கையைத் தருவதும்,புலம் பெயர் இளைய படைப்பாளிகள்,சிந்தனையாளர்களுக்கும் ஆதர்சத்தைத் தருவதாகவும் உணரப்படுகிறதென்றுணரப்படுகிறது.மொத்தத்தில் இஃது,ஒரு இளைய நட்ஷத்திரம் உருப்பெற்றதன்பலனைக் காட்டியம் கூறி நிற்கிறது.

    இன்றைய முதலாளித்துவத்தின் பொது நெருக்கடிச் சகாப்தத்தில் பாசிச மகிந்தாவின் ஆட்சிக் கவிழ்ப்பு பிற்போக்கு வர்க்ககங்களின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையின் வெளிப்பாடாக இருக்குஞ் சந்தர்ப்பத்தைக் கவனத்திலெடுக்கும் பேராசான் தோழர் இரயாகரன் அவர்கள், இது, குறித்துக் கவனமாக இருக்கவேண்டுமெனத் தோழர் பழ.ரிச்சர்ட்டுக்கு எச்சரித்துக் கண்காணித்து வருகிறார்.எந்த நூல்களை-பத்திரிகைகளை,நபர்களை வாசிக்க-அணுக வேண்டுமெனவும் இளைய தோழருக்கு எடுத்தியம்பி வர்க்கவுணர்வுமிக்க உளவியற்றொடர்ச்சிக்கும் பணியை முடுக்கிவிட்டிருக்கும் இந்தச் சூழலில் புரட்சியென்பது ஒரு தேசத்துக்குள்நிலவமுடியாதது.அது, உலகு தழுவியது-நீண்டகாலத்துக்கானதென்பதிலும் தோழர் ஸ்டாலினின் ஆலோசனையைப் படிப்பினையாகவும் நாம் கொண்டிருப்பதால் மகிந்தாவின் பாசிசத்தை முறியடித்து அவரது பதிக்கு காலத்துக்கு முன்பே இலங்கைப் பாட்டாளியவர்க்கச் சர்வதிகாரத்தை நிறுவி இலங்கையில் புரட்சிகரமாகச் சமுதாயத்தை மாற்றியப்போம் என நாமும் பகிரங்கமாக அறைகூவுகிறோம்!புதிய ஜனநாயக மக்கள்தோழமை முன்னணியினரான நாமும்நிலத்தில் புதிய ஜனநாயக மார்க்சிய-லெனியக் கட்சியான நமது தாய்க் கட்சியின் பின் தோழமையோடு புரட்சிகர போராட்டத்துள்புரட்சி நடைபோட்டுத் தொடர்கிறோம்.இஃது,உத்தியோக பூர்வமான எமது அறிவிப்புத் தோழர்களே,நமக்குத் தோழமையையும் தங்கள் பொருளாதாரவுதவியையும் மக்களது விடுதலைக்காகத் தமிழ்பேசும் மக்களது விடுதலைக்காகத்தந்து புரட்சியைத் தொடருமாறும் நாம் செவ் வணக்கமிட்டுச் சொல்கிறோம்.

    அத்தோடு, புலி அழிப்புக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப் படுத்தப்படுகிறது.சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது.சிங்கள அடையாளஞ்சார் பண்பாட்டு மேலாத்திக்கம் பற்பல வடிவத்தில் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்புகளில் கட்டியெழுப்பும் கருத்தியற் பலமானது மேலுஞ் சிக்கலான அக அழுத்தத்தைத் தமிழ்பேசும் மக்களிடம் உருவாக்கும்போது ,அவர்களால் “தமது அடையாளந் தள்ளிவைப்பதெனும் தப்பித்திலே” இந்தச் சிங்களப் பண்பாட்டு மேலாத்திகத்தால் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.இலங்கையை ஆளும் மகிந்தாவினது அரசுக்கு மிக அண்மையாக இயங்க முனையும் ஆசிய மூலதனமானது ஆசியாவின் இருபெரும் வல்லதேசங்களால்(இந்தியா-சீனா)நிர்வாகிக்கப்பட்டுப் புதிய சந்தை-கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் போக்குவரத்துக்கான வியூகத்தில், இலங்கையைக் குறிவைக்கின்றன.

    இவ்வெதிர்காலப் பொருளாதார வல்லரசுகள், தமது நோக்கையை மிக இலகுவாக வென்றெடுக்கப் பலியாக்கப்படும் தென்னாசியச் சிறுபான்மை இனம் தமிழ்பேசும் இலங்கை மக்களாக வரலாற்றின் முன் நிற்கிறார்கள்.இந்நிலையுள்,சிங்கள வரலாற்றுப் புனைவுகளைப் புதுப்பிக்க முனையும் சிங்களப் பழமைவாத ஆதிக்க வர்க்கத்துக்குத் தமது தேசத்தின் இறைமையைவிடத் தமிழ் மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் நோக்குக்கு எவர் அங்கீகாரம் வழங்குகின்றனரோ அவருடன்கூடித் தேசத்தை மொட்டையடித்தாலுங்கூடத் தமிழ்பேசும் மக்களுக்குத் துண்டுவுரிமையும் இலங்கையில் நிலவக்கூடாதென்ற சமூகவெண்ணவோட்டத்தின் தொடரில் தமிழ் அரசியலோ(கட்சி-இயக்க,தலித்துவச் சங்கம் முதல் வேளாளச் சதி அரசியல்வரை) கலந்து சங்கமிக்கிறது.இதுதாம்,இந் நூற்றாண்டின் மிகக் கேடான அரசியல் சூதாட்டம். இவர்களையும் எச்சரித்துப் புலம் பெயர் தளத்தில் இலங்கையரசின்-மகிந்தாவின் பாசிசத்தின் தொங்கு சதைகளான ஞானம்,தேவதாசன்,கீரன்,ரெங்கன்,சோபா சகதி,போன்ற அனைத்து விரோதிகளையும் பேராசான் தோழர் இரயாகரன் தலைமையில் வீழ்த்துவோம் என்பதும் உறுதி.

    இப்படிக்கு,
    தங்கள் உண்மையுள்ள
    ப.வி.ஸ்ரீரங்கன்

    மத்திய குழுவுறுப்பினர்
    புதிய ஜனநாயகத் மக்கள் தோழமை முன்னணி (புலம் பெயர்)

    08.12.2012 ஜேர்மனி.

    • Raphel says:
      13 years ago

      வ ணக்கம் சிறீரங்கன்

      சரியான ஓர் வாசிப்பு தரும் எழுத்து இது. பாராட்டுகள். சிரிப்புக்கிடமாயினும் நல்ல முயற்சி.

    • Eelamaran says:
      13 years ago

      தோழர் ப.வி.ஸ்ரீரங்கன், எங்கள் பேராசான் தோழர் ரயாகரன் தலைமயில்  இந்த மக்கள் விரோதிகளுக்கு எதிராக நாங்கள் போராட புறப்பட போகும் பொழுது அடுத்த தலைவராக உருவாகி  வரும் Norway ஸ்ரீ அவர்கள் எங்களுக்கு கால்தடம் போட இருப்பதாக உளவு செய்தி வந்துள்ளது. இது எமது கட்சிக்குள் உருவாகிவரும் அதிகார போட்டியில் எமது இலட்சிய பயணத்தில் நாங்கள் தோற்றுப போய்விடுவோம என்று பயமாக இருகின்றது. இது சமந்தமாக நிலந்தில் இருக்கும் எமது தாய் கட்சியான புதிய ஜனநாயக மார்க்சிய-லெனினிய கட்சியின் பெரும்தலைவர் தோழர் திரு செந்திவேல் அவர்களுக்கு எமதுபின்தள உளவுஅறிக்கையை அனுப்பி வைக்குமாறு தாழ்மயுடன் கேண்டுக் கொள்கிறேன் 
      இப்படிக்கு தங்கள் தோழமயுள்ள              ஈழமாறன் 

      • Raphel says:
        13 years ago

        like!

  9. வரதன் காஸ்ரோ says:
    13 years ago

    புலம்பெயர்  இலக்கியச்சந்திப்பு  ஒரு அச்சானியிளே நகந்தது  இனி இரு அச்சானியிளே நகரும் போல் தெரிகிரது .பலம் பலவீனம் என்பது ஆகிவிட்டது சமுகத்தின் மாற்றம் .அதில் நாம் எந்த புள்ளீயில் நிக்கின்றோம் என்பதே இலக்கியச்சந்திப்பு  அதில் புலம்பெயர்  இலக்கியச்சந்திப்பு என்றால் என்ன உங்கள் இலக்கியம் இதுவா என்ற கேல்வி என்னுல் எளூகிறது .அமைப்புகழின் ஆதிக்க தன்மையே காரணம் .புலம்பெயர்  இலக்கியச்சந்திப்பு என்ற சொல்லாடலுக்கு உங்கள் பகஜை மறந்து இலக்கியத்திற்கு பயன்படுங்கள்  நீங்கள் அனைவரும் சமுகத்திற்கு உண்மையானவர்களே    அன்புடன் . வரதன் (காஸ்ரோ)

    • Raphel says:
      13 years ago

      அய்யோ ராசா உங்களுக்கான சொல்ற உரிமையிருக்கு…ஆனா இத அவ்வளவு அபத்தமா சொன்ன எங்களுக்கு விளங்காதீய்ய்ய்ய்ய்ய்…!

    • malayagakk kadalan says:
      13 years ago

      mmmmmmmm……………gawanam puli varum nari varum kurangu warum evaigal kooda alosanaigal valangum gavanam

  10. நெருஞ்சி says:
    13 years ago

    “கடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்பு: அசோக் யோகன்” என்கிற எழுத்தை,அப்படியே தேசம்நெட் மீள்பதிவு செய்திருக்கிறது;
    Thankyou Inioru.com என்ற குறிப்புடன்.
    தமிழ் இணைய உலகின் புரட்சி இதுதான்.இதுதான் யோக்கியம் என்பது.

    பிற்குறிப்பு:”டேய் நெருஞ்சி,உன்னால ஒரு காரியம் நடந்தேறியிருக்கிறது.”

    • மனோ says:
      13 years ago

      பெரிய சாதனைதான்!

      • நெருஞ்சி says:
        13 years ago

        மனோ அண்ணை! மத்திய குழு உறுப்பினரா வந்து சொல்லுறியளோ!

    • Raphel says:
      13 years ago

      கடசில இந்த தாவரம் ஒரு ஆண்பால் என்பது தெரிஞ்சிட்டுது. 

  11. suhirthan says:
    13 years ago

    ப.வி. சிறீரங்கனிடமிருந்து இவ்வளவு உச்சமான கிண்டல் எழுத்தை இதுவரை நான் படித்ததில்லை. 

  12. sugethia says:
    13 years ago

    இலங்கையில் 40வது இலக்கிய சந்திப்பு அது தன்னகத்தே கொண்டிருந்த அனைத்து அராஐகத்திற்கும் எதிரான குரலாக சமூகமாற்றத்திற்கான மாற்று கலை இலக்கியம் பற்றி பேசும் சந்திப்பாக அமையுமானால் அது நிட்சயம் நடைபெற வேண்டும். ஆனால் அதற்கான சூழல் தற்போது இலங்கையில் இல்லை என்பதை அங்கு நடைபெறும் அண்மைய நிகள்வுகள் எடுத்துக் காட்டுவதுடன் ஏற்பாட்டாளர்களில் பலர் இலக்கிய சந்திப்பை சரியான திசைவழியில் கொண்டு செல்பவர்களாகவும் இல்லை!
    ஏனவே 40வது இலக்கிய சந்திப்பு லண்டனில் நடைபெறுவதே சரியானதாக அமையும் என்பது எனது கருத்தும்!

    ஈழவிடுதலை வரலாற்றில் பல தவறான நிகழ்வுகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட சரினநிகள்வுகளில் ஒன்று இலக்கியசந்திப்பு! இது அன்றைய காலத்தின் தேவையாக இருந்தாலும் இலக்கியசந்திப்பு எடுத்துக்கொண்ட கோட்பாடும் அதைமுன்னின்று நடத்தியவர்களின் பரந்த அரசியல் பார்வையும் போராட்ட குணாம்சமும் பலதரப்பட்டவர்களையும் அணிதிரட்டி ஓர் நீண்ட எல்லைவரை பயணிக்கது வைத்தது! சொல்லமறுக்கப்பட்ட விடையங்களை சொல்வதற்கான தளமாக ஐனனாயக மறுப்புக்களை மனிதவிரோத செயல்பாடுகளை எல்லைகடந்து அம்லப்படுத்தம் அமைப்பாக ஈழமண்ணில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட புரட்சியாளர்களின் சரணாலையமாக என்னும் எத்தனை எத்தனை … பலவற்றில் உடன்பட்டு சிலவற்றில் முரண்பட்டு பயம்தொலைத்து நட்புடன் கைகோர்து நண்பர்களாக உலாவிய நாட்கள் …தோலைந்து போகவில்லை சூறையாடப்பட்டது கூடியிருந்து குழிபறிக்கப்பட்டது …

    தமிழ்த்தேசியம் எவ்வாறு ஈழவிடுதலை போராட்டத்தை சீரளித்து சின்னாபின்னமாக்கியதோ அதேபோல் இலக்கியசந்திப்பை பிரதேசவாதமும் சாதியவாதமும் மட்டுமல்லாது மதுவும் பணமும் சேர்ந்தே சீரளித்து சின்னாபின்னமாக்கியுள்ளது. இதன் தொடற்சியே இன்றைய ஈழத்தில் இலக்கிய சந்திப்பு!
    அன்றாட செலவுபோக அங்கொன்றும் இங்கொன்றுமாக மிஞசும் சில்லறையில் ரீகுடித்து அரசியல்கதைக்கம் எம்மைவிட கைநியைற காசோடு இலங்கைக்கும் இந்தியாவிற்மும் பறந்து சென்று கிழக்கில் ஒருவிருந்தும் ககோர்னாபீச்சில் ஒருபாட்டியும் கொழும்பில் ஒரு சந்திப்பையும் முடித்துவிட்டு ஈழத்தில் இலக்கிய சந்திப்பை நடத்துவது மிகவும் இலகு!!
    ஆனாலும் காற்றின் திசை ஒருநாள்மாறும் அர்த்முள்ள இலக்கியசந்திப்பு இங்குமட்டுமல்ல இலங்கையிலும் தொடரும் ..

  13. prapa. says:
    13 years ago

    //இந்த சபேசன் ரயாகரன் உடைய ஜனநாஜக மக்கள் முன்னணிஜின் மத்திய குழு உறுப்பினர்.//

    காந்தி அவர்களே இது ரூமச் நக்கல். மத்திய குழுவா? அது என்ன? மேலதிக தகவல் ஒன்று இந்த கனடா சபேசன் மகிந்தாவின் அடிவருடியும் இனப்படுகொலை இலங்கையில் நடக்கவில்லை என்று பிரச்சாரம் செய்து திரியும் பக்கா வியாபாரி கனடா நோயல் நடேசனின் சொந்த தம்பி. அதுமட்மின்றி கனடா இலங்கை தூதுவர் ஆலயத்தோடு தொடர்புகொண்டு அண்ணன்வழிநடப்பவர். பொய்யென்றால் இங்கு (கனடாவில்) விசாரித்து அறிந்துகொள்ளவும்.

    • பாலகுமார் says:
      13 years ago

      கிழக்கின் விடிவெள்ளி பிள்ளையான் அம்பலப்பட்டுப் போக, இப்போது வடக்கில் வசந்தத்தின் தலைவன் தேவானந்தாவுக்கு குடைபிடிக்க புறப்பட்டுவிட்டது இந்த அல்லக்கைகள்.
      டக்கருக்கும், அங்கயனுக்கும் நடக்கும் கொள்ளை(கை!)யை பங்குபோடும் போட்டியில், அப்புக்காத்து ரங்கன் ஊடாக புதிதாக கூட்டுசேர முனையும் சில்லறை வியாபாரிகள் இவர்கள்.

    • மனோ says:
      13 years ago

      கட்ந்த காலத்தில் இலக்கிய சந்திப்பு, பெண்கள் சந்திப்பு என்பவை பெரியளவில் பல சாதனைகளை படைகாகவிட்டாலுங்கூட, இவை அந்தந்த காலகட்டங்களில் நிலவிய அதிகாத்துவத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்திற்காகவும் குரல்கொடுத்த அமைப்புகள் என்பதில் யாருக்கம் மாற்று கருத்து இருக்க முடியாது.
      ஆனால் கடந்த சில வருடங்களாக உள்ளே நுழைந்த சிலர் தமது குறுகிய அரசியல் பார்வைகளினால் இவற்றை பயன்படுத்த முனைந்தார்கள். அதன் விளைவு இந்த அமைப்புகள் தமது ஆன்மைவை இழந்து போயின.
      இந்த செயற்பாடுகளின் தர்க்கரீதியான நீட்சியே இன்று இவர்கள் அதிகாரம், ஜனநாயகமறுப்பு என்பவற்றிற்கு ஆதரவாக செயற்பட முன்வந்திருப்பதாகும்.
      இதற்கு மேல் இது இலக்கிய தளத்தை கடந்து, சிறீலங்கா அரச ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொள்கிறது. மேற்கொண்டு இதனை வெறும் இலக்கிய நிகழ்வாக சித்தரிப்பதும், இதற்கு அரசியல் சாயம் இல்லை என்று வாதிட முனைவதும் அபத்தமானது: அயோக்கியத்தனமானது.
      இப்போது கடந்த காலத்தில் கொள்கைக்காக செயற்பட்டதாக கூறிக்கொள்பவர்கள் தத்தமது அரசியலை முன்வைப்பது இப்போது அவசியமானதாகிறது. அக்கறையுள்ள அனைவரும் சம்பந்தப்பட்ட நபர்களையும், அவர்களது அரசியலையும் சரிவர இனம்காண ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
      ஜனநாயகத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும், மகிந்த அரசுக்கு சாமரை வீசும் இந்த செயற்பாட்டை நிராகரிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

      • Jeeva says:
        13 years ago

        லண்டன் குழுவின் கடிதத்தை பார்க்கும் பொழுது கடசியாக கனடாவில் நடந்த இலக்கிய சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அடுத்த சந்திப்பை கேட்டவர்கள் என்ற நிலையில் லண்டன் குழுவிற்கே அனுமதி அளிக்கப்படவேண்டும். அதுதான் நீதி ஆனது. நான் அறிந்த வரையில் லண்டன் குழுவின் கடிதம் சபையில் வாசிக்கும் பொழுது கற்சுறா அவர்கள் தாங்கள் அடுத்த சந்திப்பை     இலங்கையில் நடத்துவதிற்கு கோரிக்கை முன்வைக்கவில்லை.அம்படி இருக்கும் பொழுது எப்படி இந்த குழப்பநிலைமை ஏற்பட்டது. இதை சுமதி  அவர்கள் தான் தெளிவு படுத்த வேண்டும். மற்றும் இந்த நிகழ்வில் பங்கு பற்றியவர்கள் உண்மை நிலைமயை தெளிவு படுத்த முன்வரவேண்டும். 

        • Cheliyan says:
          13 years ago

          இவர் மாறியது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள தேவை இல்லை. புலிகளின் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் தற்பொழுது அரசுடன் சேந்து இயங்கும் பொழுது  இவர்கள் எம்மர்திரம் எமது தேசியத் தலைவர் முள்ளிவைக்கால் யுத்தத்தில் இறந்த பின்னர் அடுத்த தேசியத் தலைவராக தன்னை பிரகடனப்படுத்திய கே. பி அவர்கள் அரசின் விருந்தினர் ஆக தற்பொழுது  இருக்கிறார் அவர் மாத்திரம் அல்லாமல் புலிகளின் களம் பல   கண்ட தளபதிகளும் மகிந்த அரசுடன் சேர்த்து தமிழர்களின் நலனுக்காக வேலை செய்கிறார்கள். அவர் மாத்திம் அல்லாமல் குறிப்பாக இளம்பருதி ( இவர் தான் யாழில்      முஸ்லிம் மக்களை வெளி ஜேற்றுவதிற்கு பொறுப்பாக இருந்தவர்) பாப்பா, கடற்புலிகளின் முன்றாவது தர நிலையில் இருந்த இளம்செழியன், போக்குவரத்துக்கு பொறுப்பாக இருந்த குட்டி மற்ற ும் தயா மாஸ்டர், ஜார்ஜ் மாஸ்டர் போன்றோர் தட்ஸ் சமயம் அரசுடன் சுதந்திரமாக செயாட்படுகிரர்கள்.முன்னால்  புலிகளும்,   முன்னால் மரற்று கருத்தாளர்களும் தற்ஸ் சமயம் ஒரே புள்ளியில் சந்திக்கிறார்கள். இலங்கையில் இலக்கிய சந்திப்பு நடத்துவதற்கான ஆலோசனைக் குழுவில் இடம் பெறும் பெயர்களில் கருணாகரன், யோ.கர்ணன் ஆகிய முன்னால் புலிகளின்  பெயர்களும் இடம் பெற்று உள்ளன. இவர்கள் புலிகளின் கடந்த கால செயற்பாடுள் பற்றிய விமர்சனங்களை மகிந்த இவர்களுக்கு அளித்த ஜனநாயக தளத்தில் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.இவர்கள் புலிகள் அமைப்பில் சேரும் பொழுது புலிகள் மற்றைய சகோதர அமைப்புகள் எல்லாவற்றையும் தடை செய்ததும் நில்லாமல் அதன் உறுபினர்களை கொலை செய்தும் இருந்தார்கள் இதன் பின்னர் தமது ஏக போக சர்வதிகாரத்தை தமிழ் மக்கள் மேல நிறுவினார்கள்.இதன் படிப்படியான விளைவுகளாக தமிழர் தேசத்தில் இருந்துமுஸ்லிம் மக்களை வெளியேற்றிய நிகழ்வு நடந்தது.இவளவும் நடந்தபின்னர் தான் இவர்கள் புலிகள் அமைப்பில இணைத்தார்கள்.புலிகளின் அதிகார மையம்களில் இவர்கள் இருந்த பொழுது அங்கு ஜனநாயகம் கொடிகட்டிபறந்த்து. இப்பொழுது மஹிந்த வின் அதிகாரத்தில் இவர்களுக்குஜனநாயம் கொடிகட்டிபரக்குது 

        • Ranji says:
          13 years ago

          கடைசியாக  கனடாவில் இலகியசந்திப்பை நடாத்திய குழுதான் தற்பொழுது ஏற்பட்டு இருக்கும் இந்த குழு முரண்பாடுகளுக்கு பொறுப்பு எடுத்தல் வேண்டும்.இவர்கள் தமது பொறுப்பை தட்டிக்கழிப்பது போல் உள்ளது. சுமதி மற்றும் கனடாவில் உள்ள இலக்கியசந்திப்பு குழுவில் உள்ளவர்கள் உண்மை நிலைமைஜ வெளிக்கொண்டு வரவேண்டும்.லண்டன் குழுவின் அறிக்கையில் அடுத்த. சந்திப்பை எங்கு நடத்துவது என்று கனடாவில் நடந்த இலக்கிய சந்திப்பில் முடிவு ஒன்றும் எடுக்கப்படாமல் முடிவடைந்ததாக கனடா குழு தேரியாயப்படுதியதாக சொல்லப்படுகிறது. இலங்கை அரச அதரவலர்களின்அறிக்கையில் 40 வது இலக்கிய சந்திப்பு லண்டனில் நடத்துவதாக முடிவு எடுத்ததாக குறிப்பிடப்படுகிறது அனால் லண்டன் குழு தற்போது தாம் செய்ய முடியாத சுழல் இருபதாக சொன்னதாக சொல்கிறறர்கள். இதில் யார்  சொல்வது உண்மை லண்டன் குழு சார்பாக என்று தானே முடிவெடுத்து ராகவன் சொன்னதா அல்லது     கனடாவில் நடந்த இலக்கிய சந்திப்பு முடிவு எடுகப்பட்டாமல் முடிந்ததாக சுமதி சொல்வது உண்மையா? 

          • Ravi says:
            13 years ago

            கனடா  இலக்கிய சந்திப்பு குழுதான் அடுத்த சந்திப்பு நடைபெறும் வரை பொறுப்பாக இருக்கும் குழு. இந்தக் குழு ஏன் தற்பொழுது மவுனமாக இருகிறார்கள். இது புரியாத புதிராக இருக்கின்றது.கனடாவில் நடதுவதிர்க்கு காட்டிய ஆர்வத்தில் ஒரு சிறு பங்களிப்பாவது இதில் காட்டினால் நடந்த உண்மை நிலைமையினை இனிஒரு வாசகர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். மவுனம் கலைப   பரா சுமதி ?!???

          • Mathu says:
            13 years ago

            ரஞ்சி,நீங்கள் சொல்வது உண்மைதான். இந்தக் கனடாக் குழு, தமது பொறுப்பை தடிக்களிப்பது போல் உள்ளது இவர்களின் மவுனம் இலங்கையில் நடத்த இருக்கும் குழுவுக்கு சார்பான  நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகேறது. தாங்களும் இலங்கைக்கு சென்று பீலா காட்டலாம் என்று அசை போல்.

          • Nirmala says:
            13 years ago

            கனடா இலகியசந்திப்பு குழுவில் உள்ள சிலரும் இலங்கைக்கு செல்லும் குழுவில் தமது பெயரை பதிவு செய்துள்ளார்கள் இதானால் தான் இவர்கள்l  மவுனம் கலைக்க மறுக்கிறார்கள்.அனால் பொதுவெளியில் தங்களை  பெரிய ஜனநாயக வாதிகளாக காட்டிக் கொள்பவர்கள்

          • Sarmi says:
            13 years ago

             அன்புள்ள சுமதி அக்காவிற்கு, நலம். நலம் ஆவல். எப்படி இருக்கிறீர்கள் உங்களுடைய தொடர்சியான எழுத்து முயட்சிகள் எப்படி போகின்றது.கிடடடியில் எதாவது சோர்ட் பிலிம் எடுத்தீர்களா? பார்வைக்கு ஒன்றும் கிடைக்கவில்லை புது நாடகங்களில் எதாவது நடிக்கிறிரகலா பெண்கள் சார்ந்த முயற்சிகள் எப்படி போகின்றது.ஈழத்திலும் தமிழ் பெண்களின் நிலைமை மோசமாகிப் போகின்றது கடசியாக கிடைத்த தவகளின் படி கட்டாயத்தின் பேரில் ராணுவத்தில சேர்க்கப்பட்ட தமிழ் யுவதிகளின் நிலைமை கவலையை அடைய வைத்துள்ளது. ஏற்கனவே இனப்படுகொலையை நடத்தி  முடித்த  அரசுதொடர்சியாக தனது சொந்த மக்கள் மீது  கொடூர அடக்கு முறையை ஏவி வருகின்றது. இதை எல்லாம் ஜனநாயக சுழலில் இருந்து கொண்டே கண்டிக்க முன்வராத உங்கள்எழுத்தாள நண்பர்கள் தற்பொழுது ஜனநாயகமே முற்றாக மறுக்கப்படிருக்கும் ஒரு நாட்டுக்கு சென்று இலக்கிய திருவிழா செய்ய துடிப்பதன் நோக்கம் தான் என்ன. மகிந்தா தமிழ் மக்களை   யுத்தத்தின் மூலம் மொட்டைஅடித்து விட்டார். எஞ்சிய மக்களையும் இவர்கள் மொட்டை அடிக்க புறப்பட்டு விட்டார்கள் மிகுதி உங்கள் கடிதம் கண்டு உங்கள் அன்புத்தங்கை சர்மி 

          • ravi (swiss) says:
            13 years ago

            இங்கு ரவி என்ற பெயரில் உள்ள பின்னூட்டம் எனதல்ல. (ரவி-சுவிஸ்)

        • மணியம் says:
          13 years ago

          அட போங்க சார்,
          நீங்க சுமதிய ஒரு பலமான ஆள் என்டு எடுத்துக்கிட்டு பதில் சொல்லும்படி கேக்கிறீங்க!
          அவங்க ரொம்ப நல்லவங்க. வெளுத்தது எல்லாம் பால் என்டு நம்புற அளவுக்கு அப்பாவியா இருக்காங்க. அதனால, இலக்கியம் என்ட பெயரில இந்த மொக்கைகள் செய்யியதுக்கு பின்னால இருக்கிற அரசியல பிடிச்சுக்கொள்ளுற அளவுக்கான சாமர்த்தியம் எல்லாம் அவங்களுக்கு கிடையாது. யாரு அவங்ககிட்ட நல்லா பேசி கூட்டத்துக்கு கூட்பிட்டாலும் அங்க எல்லாம் போவாங்க. ஏற்கனவே இவங்க கனடாவில நடத்தின சில நிகழ்வுகள் பத்தி பல விமர்சனங்கள் இருக்கில்ல!! எங்க மறுப்பாங்களா எண்டு கேட்டுப்பாருங்க.
          நீங்க வேணும்னா இருந்து பாருங்க. அவங்க, யாரு செய்தாலும் நல்லதுதானே! என்டு சொல்லிக்கிட்டு கொழும்புக்கே போகக்கூடிய ஆளு அவரு.

          • Babu says:
            13 years ago

            மணியம் அன்னை  எப்படி சுமதி அம்மாவின் யாதகத்தை அச்சொட்டாக அப்படியே சொல்கிறீர்கள் உங்களிடம் சுமதி அம்மாவின்   யாதகம் ஒன்றும் இல்லையே அவருடைய யாதாக பலன் அப்படி அவர் என்ன செய்ய முடியும் ஆனர அவர் முவு எடுத்தர எடுத்ததுதான்  எங்கள் ஜெயலலிதா அம்மா மாதிரி ஆனால் இந்த விடயத்தில் சற்று தயக்கம் காட்டுவது இந்த சோமாரி சோபாசக்தியால்தான்.நீங்கள் என்ன சொன்னாலும் எதிர் காலத்தில் அவருடை எழுத்திற்கு அங்கீகாரம்      இல்லாமல் போவதை அவர் விரும்ப மாட்டார். அம்மா ஆர அமர யோசித்துதான் முடிவெடுப்பார். உங்கடை அவசரத்துக்கு எல்லாம் உடனடியா முடிவு எடுக்க முடியாது.

      • Suresh says:
        13 years ago

        தட் சமயம் 40 வது இலக்கியச் சந்திப்பின்   ( இலங்கையில்) நிகழ்ச்சி நிகழ்வுகளுக்கான       புகலிட ஆலோசனைக்.குழுவினரின் உடக அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. அந்த அறிக்கையில் உள்ள சிறு பதிவை இங்கு இனைத்து உள்ளேன். //இலங்கையில் சுதந்திரமாகக் கருத்துத் தெரிவிக்கும் சூழல் இல்லாத நிலையில் இங்கு சந்திப்பை நடத்துவது பொருத்தமில்லாதது எனவும் ஒரு கருத்துச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் இடையீடு செய்து சாத்தியமான வழிகளிலெல்லாம் கருத்துச் சுதந்திரத்திற்கான திறப்புகளைச் செய்துவிடவே நாங்கள் விரும்புகின்றோம்.//இது உண்மையில் இவர்களின் மனதில் இருந்துவந்ததா? இதன் முன்னணி செயட்பாட்டலர்களாக இருப்பவர்கள் சொந்தமாக இணையத்தையும், ப்ளாக் மற்றும் அமைப்புகளையும் வைத்திருப்பவர்கள் .இலங்கையில் இதுவரை நடந்த மனித உரிமை மீறல்கள், காணாது   போதல், கொலை செய்யப்படுதல், கடசியாக நடந்து முடிந்த இனப்படுகொலை தொடர்ச்சியாக நடை பெற்று வரும் தமிழ் மக்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறை சமிப்பத்தில் நடந்த யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் மீதான தாக்குதல்கள் சம்பந்தமாகஇதுவரை இவர்கள் எதாவது பதிவுகள் வைத்து இருக்கிறார்களா.அதுமட்டுமல்ல இந்த அடக்கு முறைகளை புரிபவர்களுடன் நேரடியான தொடர்புகளை பேணிக்கொண்டு ?? ஒடுக்குமறை சுழலில் இடையீடு செய்து கருத்து சுதத்திரத்தை ஏற்படுத்த போகிறர்களாம்?? ஆடு நனையுது என்று ஓநாய் கவலைப்பட்ட மாத்ரி  இது வரை இவர்கள் இலங்கையில் கருத்து சுத்திரத்துக்காக குரல் குடுப்பதை  தவிர்த்தே வந்திருகிறார்கள் இப்படி உண்மை இருக்கும் பொழுது புதிய பொய்யை  புதிய தளத்தில் கடமிக்கிரர்கள் 

        • Suresh says:
          13 years ago

          \\இலங்கையில் சுதந்திரமாக கருத்துத தெரிவிக்கும் சுழல் இல்லாத நிலையில் இங்கு சந்திப்பை நடாத்துவது பொருத்தம் இல்லாதது எனவும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது //இலங்கையில் இந்த நிகழ்ச்சியை நடாத்துபவர்களுக்கு ஒன்றுமே தெரியாது பாவம் யாரோ சொல்லித்தான் எதோ பிரைச்சனை என்று கேள்விப் பட்டு இருகிறார்கள். இவர்களுக்கு லசாந்தா கொல்லப்பட்டது பற்றியோ அல்லது 25 மேற்பட்ட சிங்கள ஊடகவியலளர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடியது பற்றியும்     இனப்படுகொலை நடந்து அதில் ஒரு லட்டசம் மக்கள்  கொலப்படது பற்றியும் எந்தவித தகவலும் இவர்களுக்கு கிடைக்க இல்லை

    • இராமநாதன் says:
      13 years ago

      ஜோர்ஜ் குருசேவ் உடைய பத்திரிகையான பூபாளம் தமிழ் தேசியத்தை ஆதரித்து கருத்து வெளியிடுகிறது. இவரது பெயரும், இந்த பத்திரிகையில் பத்தியாளர்களாக இருக்கும் கற்சுறா, மெலிஞ்சி முத்தன் ஆகியோரது பெயர்கள்களும் அரச ஆதரவு பட்டியலில் இடம் பெருகிறதே. தயவு செய்து இதனை நீங்கள் தெளிவுபடுத்த முடியுமா?
      அல்லது இதனையும் வியாபார தந்திரம் என்று கொடுப்புக்குள் சிரிக்கிறீர்களா.

      • Geevan says:
        13 years ago

          இவர்கள் எல்லோரும் தற்போது வியாபாரி ஆகிவிட்டார்கள் இதில் எழுதும் பலபேர் மகிந்தா மற்றும்  கேபி ஆதரவு எழுத்தாளர்கள் குறிப்பாக நமு பொன்னம்பலம், சிவதாசன், பரம் ஜி, ஜார்ஜ், கற்சுறா, சிவா ஈஸ்வரமூர்த்தி, தவபாலன் மாஸ்டர், இதற்கு பணம் வழங்கியவர்கள் பெரும்பாலோர் அரச அதரவாளர்கள். புலி காச்சல் பிடித்தவர்கள்     வியாபார நோக்கமாக கொண்டவர்கள் 

      • Karan says:
        13 years ago

        மீராபாரதி அவர்களின் நல்ல நண்பர்தான்      மெலிஞ்சி முத்தன்.மீரா அண்மையில்     இலங்கை. சென்று வந்தவர் அது தொடர்பாக இணையத்தில் பதிவும் வைத்தவர் இலங்கை தொடர்பான தான் பார்த்த நிலைமைகளை எடுத்து சொல்லி  இருந்தால் சில நேரம் இவர்         இலங்கை அதரவு நிலைப்பாடை எடுத்திருக்கமாடார். இவர் வன்னியில் இருக்கும் பொழுது புலிகளின் கலை கலச்சரப்ப்பிரிவுடன் வேலைசெய்தவர். புதுவையுடன் நட்பாக இரந்தவர் பின்பு பாரிஸ் வந்தவுடன் புலிகளின் பாரிஸ்கிளையுடன் வேலைசெய்தவர். தமிழ்தேசியத்தின் அதரவாளராக வெளியில் தன்னை காட்டிக்  கொண்டவர்  எப்படி தற்போழுது அரச அதரவாளராக மாறிஉள்ளார்? 

        • Raphel says:
          13 years ago

          என்ன புது குழப்பம்.
          ஓசோ  எப்போது புலிகளின் கலாசாரப் பிரிவுக்கு ஆதரவு கொடுத்தார்.
          (இந்த விசாரணையில் பல உண்மைகள் வெளியில் வரும்போல் இருக்கிறது!)

          • Murali says:
            13 years ago

            எங்களுக்கு தெரிந்த தமிழ் ஓசோ மீரா பாரதி அவர்கள் தான். எனக்கும் குழப்பம் தான் ஏப்ப இவர் புலிகளின் கலாச்சாரப் குழுவுக்குள் நுழைந்தவர் மனுஷன் நுழைந்து இருந்தால் மாற்றத்தை ஏற்படுத்தாமல் சும்மா வெளியில் வநது இருக்க மார்ட்டர் ஜோசித்து பார்த்தால் சில நேரம் மெலிஞ்சி முத்தன் வன்னியில் புலிகளுடன் உடன் வேலை செய்த பொழுது உதவிக்கு ஹுபிட்டரோ தெரிய வில்லை.யாரும்  விபரம் தெரிந்தவர் இருந்தால் சொல்லுங்கள் 

          • Vipul says:
            13 years ago

            அன்னை ரபல் உந்த இலகியசந்திப்பின் தற்போதைய நிலைமை சம்பந்தமாக எதாவது தவகல் கிடைத்ததோ.போற போக்கை பார்த்தால் எப்பிடியும் இரண்டு திருவிழா நடக்கும்போல இருக்குது.யார் உதுக்கு தீர்ப்பு வழங்கிறது.எல்லாம் உந்த கனடா குழுவின் சூழ்ச்சிதான். குழுவில் இருக்கிறவர்களில் சிலர் பழம் திண்டு கொட்டை போட்டவர்கள்.

  14. நெருஞ்சி says:
    13 years ago

    அசோக் அண்ணை! நீங்க எல்லா இணையத்திற்கும் எழுதி அனுப்பினியளோ அல்லது உவங்க திருடிப் போடுறாங்களோ!
    http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86381/language/ta-IN/article.aspx

    • Tharmalinkam says:
      13 years ago

      எப்புடி போட்டானுவளோ அது வேற கத. சுவிஸ் உட்டாரு கம்பனி… அதான் பிள்ளையான் பிடித்து விளையாடியவங்கோ,.. வேற டக்ளசு கம்பனிக்கு எதிரா கத உட்ராங்க பாருங்க..

  15. அசோக் யோகன் says:
    13 years ago

    இலக்கிய சந்திப்புப் பற்றிய இந்த கட்டுரையை இனியொரு மற்றும் குளோபல் தமிழ் நியூஸ் ஆகிய இரு இணையத்தளங்களுக்கு நானே அனுப்பிவைத்தேன்.

    • நெருஞ்சி says:
      13 years ago

      நன்றி அசோக் யோகன்.
      ஆனால் இனியொருவில் எழுதிப்பின் வெட்டப்பட்ட எழுத்தை,
      “தேசம்நெட்”டிற்கு “நோர்வே நக்கீரா”, இணைய இடைவெளி நிரப்புவதற்காக,அங்கு போய் “பனி”க்கவிதை பாய் விரித்திருக்கிறார்.

      “என்னுடன் தொடர்பான, அறிந்த, செவிமடுத்த விடயங்களில் நான் காணும் உண்மைகளை” எழுத முடியாமல்,ஏறக்குறைய தெரிந்த ஆட்களுக்கு முன்னால்,குளிரில் விறைப்பாக கதை பேசியிருக்கிறார்.

      இங்கே மௌனமாகி விட்டார்.

    • Raj says:
      13 years ago

      அசோக் அண்ணா! உங்களுடைய பதிவில் தோழர் பரா அவர்களைப் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். இலக்கிய சந்திப்பு நோக்ககளான இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் ஆகியோர்களின் ஜனநாயக விரோத செயட்படுகளுக்கு எதிராகவும், ஏகத்துவ அதிகாரத்திற்கு எதிரான குரலாகவும் விளங்கி வந்தது என்று. இதன் ஆரம்ப கால செயட்பர்ட்டலர்களில் ஒருவராக தோழர் பராவும் இருந்து வழிநடத்தி வந்திருந்தார் என்று ஆனால் தட்ஸ் சமயம் இவரின் இந்த நோக்கம்களுக்கு முற்று முழுதான எதிர் திசையில் இவர் உடைய குடும்ப உறுப்பினர்கள் இலங்கை அரச அதரவு நிலைப்பாடை எடுத்திருப்பதாக அறிய முடிகிறது. 

      • puspha says:
        13 years ago

        உமா யாருடுடைய அழுத்தத்துக்கும் தலை ஆட்டுகிற பொண்ணு அல்ல பெண்ண்கள் சந்திப்பை முன்னின்று நடுத்துபவர்களில் முக்கியமானவர்.ஆனால் நீங்கள் சொல்லும் இலங்கை அரசுக்கான அதரவு நிலைப்ப்பாடு என்பது …. பெண் என்ற அடிப்படையில் இலங்கையில் நடந்து முடிந்த இன அழிப்பு யுத்தத்தில்l தமிழ் பெண்கள் எப்படி பாதிக்க பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தொடர்ச்சியாக மகிந்தா ராணுவத்தால் எப்படி நெருக்கு வாரத்திற்குள் உள்ளக்கபட்டு வருகிறார்கள் என்பது நாம் சொல்லி ஒரு பெண் செயட்பார்ட்டாலருக்கு தெரிய வேண்டிய விடயம் அல்ல. ஆனல் இங்கு மனதுத்கு உறுத்திற விடயம் ஏந்த அரசு எங்கள் மக்களுக்கு இந்த அவலங்களை தந்ததோ அந்த அரசுக்கு ஆலவட்டம் எடுக்க புறப்பட்டு இருப்பது பெண்கள் மனதை புண் படுத்துவது ஆகும் .

        • selvan says:
          13 years ago

          புஸ்பா அக்கா, நீங்கள் உமாவை மாத்திரம் குறிப்பிட்டு உள்ளீர்கள் ஆனால் இலங்கைக்கு இலக்கிய உலா செல்லும் குழுவில் மேலும் பல பெண்கள் செல்க்கிறார்கள். அதீதா, விஜி இதில் குறிப்படப்படும் பெண்கள் சகல அடக்கு முறைகளுக்கும் எதிராக ஒரு காலத்தில் குரல் எழுப்பியவர்கள்.இன்று எப்படி மகிந்தாவிற்கு அதரவு நிலையை எடுத்துள்ளார்கள். இவர்கள் முன்னம் கதைத்தது எல்லாம் பொய்யா.

          • selan says:
            13 years ago

            இங்கு குறிப்பிடப்படும் பெண்களில் விஜீ அவர்கள் புலிகள் கருணா உடைவில் கருணாவிற்கு சார்பாக வேலைசெய்தவர். பிற்பாடு கருணா பிள்ளையான் உடைவின் பிற்பாடு பிள்ளையானுக்கு சார்பாக வேலைசெய்து வருகிறார் ஆகவே இவரைப் பற்றி பெரிதாக அளடிக்கொல்வதில் அர்த்தம் இல்லை. இவர்கள் தமது சொந்த பிழைப்புக்காக அரசியலும் இலக்கியமும் செய்பவர்கள்.அதீதா வின் அரசில் நிலைப்பாடும் இப்பொழுது அப்பலத்துக்கு வந்துள்ளது. ஒட்டு மொத்தமாக மகிந்தா மகராசனுக்கு குடை பிடிக்க புறப்பட்டு இருக்கிறார்கள்.உமாவின் பதிவு ஒன்று ஏதுவரை இணையத்தில் இருந்து இணைக்கப்படுகிறது
            -உமா

            “எனது கணவர் காணமல் போய் வருகின்ற ஜனவரி 24ம் திகதியுடன் இரண்டு வருடங்கள் ஆகப்போகின்றன. அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து என் கணவர் சம்பந்தமாக நான் எழுப்பிய கேள்விகளிற்கு எனக்கு இன்னும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.எனது பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. எனது மூத்த மகன் க. பொ.த சாதரணப்பரீட்சை எழுதி சித்தியடைந்த நிலையில் அவனது மேற்படிப்பிற்காக மேலதிக பணம் தேவைப்படுகின்றது. எனது இளைய மகன் தந்தை காணாமல் சென்றதைத் தொடர்ந்து சுகயினமுற்றிருக்கிறார். இவரது வைத்தியச் செலவையும் கவனிக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் எனது கணவர் வெளிநாடொன்றில் ஒளிந்திருப்பதாகக் கூறுகின்றது. அப்படியானால் ஜனவரி 24க்கு முன்பாக எனது கணவர் இருக்கும் இடத்தை அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும.; இனி ஒரு பெண் தனது கணவரை இழப்பதையும் பிள்ளைகள் தமது தந்தையை இழப்பதும் தடுக்கப்படவேண்டும். இல்லையெனில் நான் மேல் மட்டத்தில் சில நடவடிக்கைகளை எடுக்க நேரிடுமென இலங்கை அரசை நோக்கி அண்மையில் சவால் விட்டிருக்கிறார் காணாமல் சென்ற ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொடவின் மனைவி சகோதரி சந்தியா எக்னலிகொட. “

            இந்த சவாலிற்கும் கசகறணம் நாவலிற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் யோசிக்கலாம். இந்த 30 ஆண்டுகால யுத்தத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். யுத்தத்தினால் ஏற்பட்ட அனைத்து அனர்த்தங்களிற்கும்; முகம் கொடுத்திருக்கிறார்கள் பெண்கள். புள்ளிவிபரங்களின்படி நாடளவில் 89000 பேர் கணவர்மாரை இழந்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 49 000 பெண்கள் கணவர்மாரை இழந்துள்ளனர். இப்பெண்கள் பொருளாதா ரீதியில் பல இன்னல்களிற்கு முகம் கொடுப்பதோடு குடும்பச்சுமையை சுமக்கவேண்டியவர்களாகவுமுள்ளனர். போராட்டத்தின பேரில் கொலை செய்யப்பட்ட ஒவ்வொரு உயிரும் அவள் பெற்றெடுத்து பத்திரப்படுத்திய அவளது சொத்துக்கள். இராணுவத் தாக்குதல்களின் போதிலும், சகோதரப்படுகொலைகளின்போதும், இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட அனைத்து உயிர்களிலும் ஓடுவது பெண்களின் இரத்தம். உலகெங்கிலும் நடைபெறும் யுத்தங்களில் பெண்கள் தான் ளழகவ வயசபநவள. இராணுவத்தின் பழிவாங்கல்களிற்கும், ஒரு இனம் மீதான வெறுப்பைக் காட்டவும் பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படுகிறார்கள்.விடுதலைப்புலிகளினால் நிகழ்த்தப்பட்ட சகோதரப்படுகொலையின் போதும் பெண்கள் மாற்று இயக்கத்தவர்களை மறைத்தும், கொல்ல வந்தவர்களை விரட்டியும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இறுதிக்கால யுத்தத்தில பெண்கள் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர். அதே நேரம் போரை நிறுத்தக் கூறியும்; காணமல் போன தமது புதல்வர்மாரையும் கணவர்மாரையும் மீளத்தரும்படிக்கோரியும் பல பெண்கள் போராட்டங்களில் தம்மை இணைத்துக் கொணடனர்.

          • Rajan says:
            13 years ago

            இன அழிப்பின் பிற்பாடு எவர ஒருத்தர் இந்த இன அழிப்பு அரசுக்கு சார்பாக செயட்படுகிரர்களோ அவர்கள் சகலரும் மனித விளிமியன்களுக்கு எதிரானவர்களாக கொள்ளப்பட வேண்டும். 

            இன அழிப்பின் பிற்பாடு எவர ஒருத்தர் இந்த இன அழிப்பு அரசுக்கு சார்பாக செயட்படுகிரர்களோ அவர்கள் சகலரும் மனித விளிமியன்களுக்கு எதிரானவர்களாக கொள்ளப்பட வேண்டும். 

          • Kanesh says:
            13 years ago

            உமாவின் பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் புள்ளிவிபரம்  வடக்கு கிழக்குள் 89000 பெண்கள் தமது கணவர்மாரை இழந்து உள்ளார்கள் என்று. இது வரை நடந்த யுத்தத்தில் 300000 மூன்று லட்சம்  தமிழ் மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.இந்த கொடுமைகளை புரிந்தவர்கள் யார் இந்த கொடுமைகளை புரிந்தவர்களுக்கு நாம் துணை போக முடிமா இவர்களுக்கு நாம் தண்டனை பெற்று குடுக்க முடியாதா 

  16. மனோ says:
    13 years ago

    முன்னர் தமிழ் எழுத்தாளர் மாநாடு என்ற பெயரில், இனப்படுகொலை நடந்த கையோடு மகிந்த அரசுக்கு சாமரைவீச ஒரு குழு புறப்பட்டு அம்பலப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கிறதே!
    அவர்களது இரண்டாம் பதிப்புதான் இந்த இலக்கிய சந்திப்பு முயற்சி.
    முதலாவது புலத்து எழுத்தாளர்களின் முன்கையெடுப்பு என்றால், இது புலம் பெயர் எழுத்தாளர்களது முறை!!
    சலுகைகளையும், சந்தர்ப்பங்களையும் பங்கு போட்டுக்கொள்வதில் போட்டி இருக்க வேண்டாமா?
    சபாஷ், சரியான போட்டி!
    அதிகாரத்தை வழிபடுவதற்கு இவர்கள் எப்படி ரவுண்டு கட்டி அடிக்கிறாங்கள் என்பதை கவனியுங்கள்.
    கேட்டால், அதற்கு ஜனநாயகம் கொடிகட்டிப்பறப்பதாக கதைவிடுவார்கள்.

  17. Ragu says:
    13 years ago

    அசோக், நீங்கள் சொல்லும் நியாயப் பாடுகள் நியாயத்தை ஏற்படுத்தவில்லையே. இதற்கும் அரசிற்கும் என்ன சம்பந்தம்?அப்படி ஒன்று உருவாகாமல் எப்படி அதை வழி நடத்தலாம் என்றே சிந்திக்க வேண்டும். இலங்கைப்  பிரச்சனைகளைப் பேசியே காலத்தை ஓட்டும் இணையங்களும், புலம் பெயர் புரட்சியாளர்களும் இங்கு வரத் தயங்குவது ஏன் ? தமிழில் தானே பேச்சுகளும் ,கலந்துரையாடல்களும் இருக்கும். பாதிக்கப்பட்ட மக்களும்,வெளிநாடு செல்ல முடியாத ஆர்வாலர்களையும் நீங்கள் எப்போ தான் சந்திக்கப் போகிறீர்கள்?பல விஷயங்களை நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும்.தயவு செய்து இதற்க்கு அரசியல் சாயம் பூசி அடுத்த கட்டத்தை நிறுத்த வேண்டாம். சரியாக கையாள்வது பற்றி விவாதியுங்கள். அல்லது இலங்கையில் புதிய கட்டமைப்புடன் அடுத்த நிகழ்வை ஆரம்பிப்பதற்கு அத்திவாரம் இடுங்கள். நன்றி 

    • Mathy says:
      13 years ago

      ரகு அவர்களே! நீங்கள் ஒன்றும் தெரியாதவர் மாதிரி எழுதுகிறீர்கள் இதை முன்னின்று ஒழுங்கு படுத்துபவர்கள் புகலிடத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான வேலை செய்பவர்கள் இதை விட வேறு என்ன ஆதாரம்.வவேண்டும் இதில் குறிப்பிடும் நபர்கள் வெளிபடையாக மகிந்தாவிற்கு ஆதரவாக வேலை செய்பவர்கள் மற்றும் மகிந்தாவின் தமிழின படுகொலையை ஆதரித்தவர்கள் தற்போதும் ஆதரித்து வருபவர்கள் 

    • Kumar says:
      13 years ago

       புகலிட இலக்கிய சந்திப்பின் ஆரம்பம் புலத்தில் சுதந்திரமாக பேச எழுத செயற்பட முடியாத சுழலில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களினால் புகலிடத்தில் ஆரம்பிக்கப்பட அமைப்பே புகலிட இலக்கிய சந்திப்பு. இது ஆரம்பிக்கப்பட ஏதுவான சூழ்நிலை புலத்திலும் புகலிடத்திலும் நிலவியது புலத்தில் அரசின் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையும் மற்றும் இந்திய இராணுவத்தின் தமிழ் மக்கள் மீதான படுகொலையும், புலிகள், ஏனைய தமிழ் இயக்கங்களின், மக்கள் மீதான ஒடுக்குமுறையும், புகலிடத்தில் புலிகளின் ஏகத்துவ அதிகாரத்திற்கு எதிராகவும் அமைந்ததே புகலிட இலக்கிய சந்திப்பு. இதில் தமிழ் மக்கள் மத்தியில்  இருக்கும் சாதி,பெண்ணிய,பிரதேச,பால்  ஒடுக்குமுறைக்கும் தமிழ் மக்கள் மத்தயில் ஜனநாயகத்திற்கும், மற்றும் இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கும் எதிரான குரலாகவும் விளங்கி வந்தது. கடைசிக்கால பகுதியில் இதன் பண்பில் மர்ற்றம் வரத் தொடங்கியது இதன் தர்க்க ரீதியான நீட்சி தான் தற்பொழுது இவர்கள் வந்தடைதிருக்கும் இடம். இதில்  ஆர்ச்சரியப்படுவதர்க்கு ஒன்றும் இல்லை. இதில் அக்கறை உள்ளவர்கள் இதுவரை ஏன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தற்போது எல்லவற்றையும் இழந்து நிற்கும் புகலிடஇலக்கிய சந்திப்பு குழுவை  இலங்கைக்கு கொண்டுசென்று என்ன செய்ய இருகிறார்கள். யாதும் அறியோம்

  18. Ragu says:
    13 years ago

    யார் என அடையாளப் படுத்துதல் அவர் அவர் சார்ந்த அணி பிரகாரமே அமைகிறது. நீங்கள் சரியான ஒன்றைக் காட்டுங்கள் ,அமையுங்கள் மக்கள் சரியானதை நோக்கி நடக்கட்டும். இணைய வசதிகள் அற்ற சூழலில் வாழும் , சில சமூகம் பற்றிய அக்கரை யுள்ளவர்களுக்கு  சரி, பிழைக்கு நடுவில் குழப்பமே எஞ்சுகிறது. புலம் பெயர் தேசங்களில் சௌகரியங்களுக்கு நடுவில் வாழும் நீங்கள் எமக்கு உதவ நினைத்தால், இந்த சூழலைக் கருத்தில் கொண்டு விசயங்களைப் பேசுங்கள்.அரசின் அனுமதி அற்று எந்த விழாக்களும், நிகழ்வுகளும் நடத்தப் படமுடியாத சூழலில் ,எம் கருத்துக்களையும் ,எதிர்காலத்தையும் எப்படி முன்நெடுப்பது என்பது பற்றி விவாதிக்க வேண்டும்.அதில் எமது நோக்கத்தை எப்படி மக்களிடம் சேர்ப்பது என்பது பற்றியும் விவாதிப்போம். 

  19. நெருஞ்சி says:
    13 years ago

    இலக்கியப் பரிமாற்றம் முதல் கொள்கை வரையறுக்கபபடுவதுவரை,
    புதிய தொழில்நுட்பம், வசதிகளை,தன்னகத்தே கொண்டிருக்கிறது.

    உலகத்தலைவர்கள் பறந்து போய்,நேரே சந்திப்பது என்பது,வெறும் குறியீடு,விளம்பரம்,அல்லது விளங்கு மொழியில் ஒரு “பெரிய பிள்ளையாகப் போன விழா”.

    ஆனால் இங்கே பேர் போட்ட இலக்கியச் சோமாரிகள்,
    முடிச்சவிழ்ப்பதற்காக,புகலிடமிருந்து, கொல்லிடம் செல்ல முனைகிறார்கள்.அவர்களுக்கு உடல் பரிசம் தேவைப்படுகிறது.

    “அடிமைகளாக வாழ்வோம்;நம்மினத்தை அடிமைகளாக வாழ வைப்போம்” எனக் கங்கணம் கட்டியபடி,ஒரு இனவழிப்பு அரசாங்கத்தை தூக்கிப் பிடிக்கும் குறியீட்டு,கூட்டு முயற்சியே,இவர்களது இந்த இலக்கிய சந்திப்பு.

    “அரசின் அனுமதி அற்று எந்த விழாக்களும், நிகழ்வுகளும் நடத்தப் படமுடியாத சூழலில்”,கருத்துப் பரிமாற்றம் செய்ய நேரே வா என, கணணி முன்னால் இருந்தபடி,(ஊரில் இருப்பதாகக் காட்டும்)ரகு! நீங்கள் வரன் தேடுகிறீர்கள்.

    ரகு! உங்களுக்கு நல்ல வரமும்,வேண்டியவர்களிடமிருந்து, கிடைக்கட்டும்.

    • Ragu says:
      13 years ago

      கருத்தியல் விவாதங்களுக்குப் பதில் சொல்லாது ,எதோ பிதற்றுகிறீர் .சமூக நலன் சார்ந்து விவாதங்களை முன்னெடுப்பதே சமூகப் போராளியின் நோக்கமாக இருக்க வேண்டும் . இலாப நோக்கோடு யாரும் குந்திதியிருந்து கவலைப்பட முடியாது. உண்மை இருக்குமாயின் கூட்டிணைவின் மூலம் சந்தர்ப்பவாத அரசியலில் இருந்து மக்களை ஒன்றிணைக்க விவாதியுங்கள் . உங்கள் வித்துவான்களை உங்கள் சொந்த இணையப் புரட்சியில் காட்டுங்கள் . பொதுத் தளத்தில் மக்கள் நலனை மட்டும் பேசுங்கள். இந்த நிகழ்வில் உண்மைகளை வெளிப்படுத்துவதில் ,என்ன செய்யவேண்டும் அல்லது அதற்க்கு மாற்றாக அல்லது ஈடாக அடுத்த கட்டத்தை உருவாகுவது பற்றிப் பேசுவோம். ஏனெனில் நான் இந்த”இனியொரு”  இணையத்தை ‘ஓரளவு சரி’ என்று நம்புகிறேன். . நன்றி. 

      • Valavan says:
        13 years ago

        ரகு நீங்கள் இனியோரு இணையதளத்தை நம்புவது சரிதான் அவர்கள் தான் இன்று உண்மையான செய்திகளையும், சரியான கருத்துகளையும் மக்கள் முன் வைக்க கிறார்கள். நீதிக்கும் அநீதிக்குமான போராட்டத்தில் நீதியின் பக்கம் நிற்பவர்கள்.தொடர்தும் இப்பணியை தொடர என் வாழ்த்துக்கள் 

  20. நெருஞ்சி says:
    13 years ago

    ரகு!
    நீங்கள் இலங்கையில் இருப்பதாக காட்டிக் கொண்டு எழுதுகிறீர்கள். “இனியொரு” மேலாளர்களால்,உங்கள் இருப்பிடம் கண்டு பிடிக்கப்பட்டு, வெளி வந்து விடும் என்கிற காரணத்தால்,அவர்களை “ஓரளவு சரி” என்ற மதிப்பெண்களுடன் சமரசம் செய்ய முனைகிறீர்கள்.

    எழுதப்பட்டவரின் கட்டுரையும்,போடப்பட்ட படமும் சொல்லுகின்ற செய்தி வெளிப்படையானவை.

    இதில் எனது செய்தி இதுதான்:
    போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழினம்,பணையக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
    வெற்றி பெற்ற இனம்,தோற்ற இனத்தின் “பெண்டாளுதல்” முதல் வெற்றிக் கொண்ட நிலப்பரப்பின் ஒவ்வொரு அலகிலும்,வெற்றிக் கொடி ஏற்றுகிற ஆர்ப்பரிப்பு நடந்தேறிக்கொண்டு இருக்கிறது.

    இந்தக் கணங்களில்அங்கு எதுவும் செய்ய முடியாது.

    அந்த மக்களைக் பணையக் கைதிகளாக்க உதவிய புலம்பேராளர்கள்,தாம் வாழும் நாடுகளின் ஊடாக,அவர்களின் பணையக் கைதி நிலையை,முதலில் அறுத்தெறிய வேண்டும்.

    அதன் பிறகு,நீங்கள் எதிர்பார்க்கிற “பிடில் வாசிப்போர்”,அங்கே இலக்கியச் சந்திப்பு செய்யட்டும்.

  21. Ragu says:
    13 years ago

    குதர்க்கம் பேசுவதற்கு என் நேரத்தை செலவிட என்னால் முடியாது .உமக்கு என் ip Address  , 103.247… என்று ஆரம்பிக்கும். எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சமூகத்தை நேசிப்பவர்கள் புகலிடங்களை விடவும்,தாய் நாட்டில் ஏதாவது செய்ய வேண்டும் என்றே ஆசைப்பட்டேன். உங்களுடன் விவாதிப்பது  என் நோக்கமல்ல.”இனியொரு” தனது நேர்மையான தொடர்பாபாலர்களை  ஒவொன்றாக இழக்கின்றது நன்றி 
     ETISALATLKNET
    descr:          Etisalat Lanka (Private) Limited.
    descr:          No. 78, Grandpass Road
    descr:          Colombo 14

  22. நெருஞ்சி says:
    13 years ago

    எனது எழுத்துகளை,பிதற்றல்,குதர்க்கம் என்கிற இரட்டைக் கண்ணாடி வைச்சுப் பார்க்கிற ரகு!

    தேசங்களின் பெரிய தலைநகரங்களில் இருந்து கொண்டு,”தொட்டுப் பார்த்து இலக்கியம் பேச வேண்டும்.” என்பது வெறும் விளம்பரமே.

    “ஏதாவது செய்ய நினைத்தால்”,தனி மனிதனாகச் செய்ய முடியாது.

    அதற்காக, எந்தச் சிறகுகளின் அணைப்புக் கிடைத்தாலும் அருமருந்தே என நினைப்பது தவறே.

    அது மட்டுமல்ல,குளத்தோடு கோவிச்சுக் கொண்டு குண்டி கழுவாமல் இருக்கேலாது.

  23. நெருஞ்சி says:
    13 years ago

    இந்த Raphel என்கிறது,
    மனித இனத்தை,”விலங்கினங்கள்” என்று மோப்பம் பிடித்தபடி வந்தது.;
    அதன் மொழியில் “‘Na’vi’” என நவின்றது;
    பின் “இந்த தாவரம் ஒரு ஆண்பால்.” எனப் பால் தேடியது;

    “இனியொரு ஆசிரியருக்கு…!” எனத் தொடங்கி கடைசியில் “ஆசிரையரே!” சாதி இழுத்திருக்கிறது.

    இதெல்லாம் நல்ல இலக்கியந்தான்.

  24. இனியொரு.. says:
    13 years ago

    மீண்டும் நட்புடன் நெருஞ்சிக்கு,
    உரையாடல் என்பது முதலில் ஒரு கருத்தை அதன் முரண்பாடுகள் உடன்பாடுகள் ஊடாகச் செழுமைப்படுத்துவதே.முன்னதாக உங்கள் கருத்துக்கள் இனியொருவிலிருந்து நீக்கப்பட்டதாக பெரும் போராட்டமே நடத்தியிருக்கிறீர்கள்.சிறிய இடைவெளிக்குப் பின்னர் நீங்கள் மீண்டும் கருத்துக்களத்தில் இணைந்துகொண்டீர்கள். தனிமனிதர்களை அதுவும் துணிவோடு தமது பெயர்களில் கருத்துக்களை எழுதுகின்றவர்களைக் கொச்சைப்படுத்துவது போன்ற விவாதங்கள் ஒரு கட்டுரையின் முழுமையை அழித்துவிடும்.
    கட்டுரை முன்வைக்கின்ற கருத்தைப் பல சந்தர்ப்பங்களில் பின்னூட்டங்கள் முழுமையாக்கியுள்ளன. நெருஞ்சி மட்டுமன்றி மேலும் பலர் ஏனையோர் மீதான வன்மங்களை கருத்துக்களாக முன்வைக்கின்றனர். கட்டுரையோடு குறைந்தபட்ச தொடர்பு கூட இல்லாமல் முன்வைக்கப்படும் இவை போன்ற குறுகிய கதையாடல்களை நிராகரித்து மாற்று உரையாடல் தளத்தை வளர்த்தெடுக்க அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.
    -இனியொரு

    • Norway Nackeera says:
      13 years ago

      பின்னோட்டக்களம் என்பது மேலுள்ள படைப்பு சம்பந்தமாக மட்டும் பேசப்படவேண்டியது. அதை விடுத்து தனிநபர்தாக்குதல்கள்: வக்கிரவெளிப்பாடுகள்: மற்றைய இணையத்தளங்கள் பற்றிய அனாவசியமாக: நாகரீகம் அற்றமுறையில் எழுத்துக்கள் என்றும் ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்கோ: சரியான கருத்துக்களுக்கே; உரையாடல்களுக்கோ வழிவகுக்காது பின்நோட்டக்களம் என்பது அரட்டை அடிக்கும் சட் ரூமுகள் அல்ல. அதற்கு வேறு இடங்கள் உள்ளன. ஒரு இணையத்தளம் படைப்பில் ஒரு வசனத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் அது கேட்கப்படவேண்டிய இடம் இனியொரு அல்ல. குழந்தைகள் வாத்தியாரின் கிள்ளுகிறார் துள்ளுகிறார் என்பது போல் நடந்து கொள்வது எழுதுபவர்களின் அறிவையும்: அதன் தரத்தையுமே காட்டும். எங்கு எதைக்கேட்பது: யாரிடம் கேட்பது என்பதையோ அறியாது பின்நோட்டக்களத்தை ஒரு பொழுது போக்கான வக்கிரவலிப்புக்களமாக: அரட்டை அறைகளாக துர்பியோகம் செய்பவர்களை இனியொரு தடை செய்வதன் மூலமாக ஒரு ஆரோக்கியமான: கட்டுரைகள் சம்பந்தமான: கருத்து முரண்பாடுகளை மரியாதையுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமாவே கட்டுரையின் நிலையை அறியமுடியும். இதை விடுத்து முரண்பாடுகளை தனிமனிதர்கள் வளர்த்துக் கொள்ளும் களமாக பின்நோட்டக்களத்தைப் பாவிக்காது இருப்பதே வளர்ச்சியடைந்த மனிதர்கள் செய்யப்கூடியது. தயவு செய்து பின்நோட்டக்களங்களைப் பார்த்தீர்கள் என்றால் தெரியும் ஒரு தனிமனிதன் பின்நோட்டக்களத்தை திசைமாற்றி எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிடுவான். அதனால் கட்டுரையின் கருத்துக்கள் பேசாப்பொருளாகப் போய்விடும். ஒரு தனிமனிதனால் காயப்பட்ட: குத்தப்பட்ட பலர் மீண்டும் இங்கே எழுதமாட்டார்கள் விரும்பமாட்டார்கள். இது இணையத்தளத்தைப் பாதிக்கும். இணையத்தளங்கள் எத்தனையோ சிரமங்கள் மத்தியில்தான் வெளிவருகின்றன. அதை விட இது தின்னம் மணித்துளிகளுக்கு அளவே கிடையாது. ஆதலால் யாரையும் காயப்படுத்தாது முரண்பாடுகளை வளர்க்காது அவரவர் தமது கருத்துக்களைப் பதிவு செய்யலாமே. தன்னினத்தையே மதிக்க முடியாத நாம் எப்படி மற்றை இனங்களுடன் இணைந்து வாழமுடியும். விசும்புக்கு வேட்டையாடுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுக்காமல் விடுவதே சாலச்சிறந்தது. அவர்கள் தாம் யார் தமது அறிவு இவ்வளவுதான் என்பதை தம் எழுத்துக்களின் மூலமே தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். தொடர்ந்து ஆரோக்கியமாக: மனிதநேயத்துடன் சகலரையும் மதித்து எமது கருத்துக்களை முன்வைப்போம்.
      நன்றியுடன் நோர்வே நக்கீரா

  25. thevan says:
    13 years ago

    சமூக அக்கறையுள்ளவர்கள், இலக்கியவாதிகள் உட்பட பின்வரும் சொற்பதங்களை (may 2009,புலிகளின் இருப்பின் பின்) மீளாய்வு செய்வது இன்றைய தேவையாக உள்ளது.குழப்பங்களிற்கு தீர்வு இங்கிருந்து தான் வரமுடியும்.

    1.இலக்கியம் என்றால் என்ன ?

    .

    .

    2.இலக்கியவாதிகள் என்றால் யார் ?

    .

    3.புகலிட இலக்கிய ஆர்வலர்களின் சந்திப்பின் பொது நோக்கு ,இலக்குகள் எவை ?

    காட்சிகள், கள நிலை மாறும் போது மீளாய்வு நிகழ்ந்து புதிய அணிகள் உருவாவது இயல்பு .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...