Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

எனது நிழல் நியாயம் கேட்கிறது : பாமினி

இனியொரு... by இனியொரு...
01/03/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

female_cardresஎனக்கு யாழ்ப்பாணம் தெல்லிப்பளை தெரியாது. கனவுவும் கற்பனையுமாக தெல்லிப்பளைக்கு ஒரு உருவத்தைக் கொடுத்து வைத்திருந்தேன். அங்கெல்லாம் இராணுவத்தின் பாதுகாப்புவலைய எல்லைக்குள் விழுவதற்கு முன்பு பனைமர நிழலில் கண்களை மூடி கரங்களைக் கோர்த்து பால்ய நண்பர்களுடன் ஒடி விளையாடியது மங்கலாக நினைவிருந்தது. ஆமிக்காரன் வந்ததும் கூட்டத்தோடு கூட்டமாக ஓமந்தைக்கு வந்து குடியேறியது கூட அம்மா அழும் போது மட்டும் தான் வலிக்கும்.

தொண்ணுற்று மூன்றாம் ஆண்டில் எனக்கு எட்டு வயது நிரம்பியிராதா வேளையில் யாழ்ப்பாணத்தைக் கடந்து கூட்டத்தோடு கூட்டமாக வெளியேறிய காலத்தில் நல்லூர்க் கோவிலில் அப்பா கற்பூரம் கொழுத்தி அழுதபோது நானும் அழுதேன். எனக்கு சரியாக என்ன நடந்தது என்று விளங்கியிருக்கவில்லை.

ஊர் நினைவுகளோடு ஓமந்தையில் ஏழு வருடங்கள் ஓடிய நாட்களை அம்மா துரத்திப் பிடித்துக்கொண்டிருந்தார். நான் நாட்காட்டியிலிருந்து விலகி ஓடியே பெரியவளாகிவிட்டேன். அம்மாவுக்கு ஆறுதல் சொல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டதை எண்ணிப்பார்க்கும் போது அப்பாவின் கடின உழைப்பின் துயரம் தெரிந்தது.

2000 ஆம் ஆண்டு கடைசிப் பகுதியாக இருக்கும் என நினைக்கிறேன். தமிழீழம் கிடைத்தால் எல்லாம் துன்பங்களும் தீர்ந்துவிடும் என்று படுக்கைப் பாயிலிருந்தபடி அப்பா எங்களுக்கெல்லம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அம்மாவும் நானும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தோம். அம்மாவைக் கலியாணம்முடித்து ஒரு வருடத்துக்குள்ளாகவே நான் பிறந்துவிட்டேனாம். கல்யாணத்துக்கு முதல் அப்பா ஒரு இயக்கத்தின் ஆதரவாளராம். பெயர் கூட அப்போ சரியாக நினைவுக்கு வரவில்லை. இயக்கம் அழிக்கப்பட்டது அப்பாவுக்கு கவலை என்றாலும் பழசை எல்லாம் கதைச்சுக் கொண்டிராமல்ஆகவேண்டியதைப் பார்க்கவேண்டும் என அடிக்கடி சொல்லுவார்.

அம்மாவோடு அதிகமாகப் பேச்சுக்கொடுத்தாலும் அப்பா தான் எனக்கு ஹீரோ. அப்பா வேலைக்குப் போகாத நாளில் அவரோடு சைக்கிள் கரியரில் அமர்ந்து கடைக்குப் போய் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடும் நாளெல்லாம் எனக்குத் தீபாவளி தான்.

அப்பா தொடர்ந்தார்.. ‘எங்கட ஊரில என்ன குறை? என்ன பாவம் செய்தமெண்டு இப்பிடி அலைய வேணும்?? உலக நாடுகள் எல்லாம் கனகாலத்துக்குப் பார்த்துகொண்டிருகாது என்று பூனகரியில் நடத்தின கூட்டத்தில இயக்கப் பொறுப்பாளர் சொன்னவர். ஆனா நாங்களும் போராட வேணும்.. வீட்டுக்கு ஒருத்தர் இயகத்தில சேரவேணும் என்று வேற சொன்னவர்’.

எனக்கு அண்டைக்கு முழுவது உறக்கம் வரவில்லை. திரும்பித் திரும்பி படுத்துகொண்டிருந்தேன். அம்மா அடிக்கடி எழுந்து எனக்கு உடல் நலக் குறைவோ என்று கேட்டார்.

மறுநாள் எல்லாருக்கும் முன்னதாகவே எழுந்துவிட்டேன். அப்பா வேலைக்குப் போகும் வரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தேன்.

அப்பா சொன்னது சரிதானே அம்மா, நான் ஏன் இயக்கத்தில சேரக்கூடாது என்றேன். அம்மா ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டா. நீ ஒரே பிள்ளை அப்படி எல்லாம் பேசாத. பதினைந்து வயதில இயக்கத்துக்கெல்லாம் போகக்கூடாது. நீ வளர்ந்து அப்பாவையும் என்னையும் பார்த்துக்கொள்ள வேணும் என்றார்.

அன்றைக்கு அப்பா தாமதமாகவே வந்தார். நாங்கள் இரண்டு பேரும் வாக்குவாதப் பட்டதில் அப்பாவுக்காகக் காத்திருந்தோம். இரண்டு பேரும் பேசிக்கொள்ளவில்லை. ஞாயிற்று கிளமை என்பதால் வீட்டிலேயே நாள் முழுவதும் அம்மாவோடு தொலைந்துபோனது. இரவுச் சாப்பாடு எட்டு மணிக்குச் சாப்பிடும் போது எனக்கும் அம்மாவுக்கும் இன்னும் வாக்குவாதம் முற்றியது. அப்பா வந்தால் எப்படியும் இயக்கத்துக்குப் போக விடுவார் என்றேன். சாப்பாட்டை இடையில் விட்டுவிட்டு உறங்கப் பாயில் குப்புறப் படுத்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் மட்டும் பேசாமலிருந்த அம்மா சாப்பாட்டுக் கோப்பையோடு ஊட்டிவிட அருகில் வந்தும் நான் அடம்பிடித்தேன். அம்மா கதவுப்பக்க மூலையிலிருந்த அழ ஆரம்பித்துவிட்டா.

அப்பா வரும் சத்தம் கேட்டதும் கண்களைத் துடைத்துக்கொண்டு இரண்டு பேரும் எதுவும் நடக்காதது போல நாடகமாடினோம். மங்கலாக விளக்கு எரிந்துகொண்டிருந்து. அப்பா சாப்பாட்டுக் கோப்பையோடு எனக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டார்.

அப்பா சாப்பிட்டு முடித்ததும் அம்மா ஆரம்பித்துவிட்டார். நான் இயக்கத்துக்குப் போக ஆசைப்படுவதாகச் சொன்னார். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அப்பா நீண்ட நேரம் ஒன்றும் பேசாமல் படுக்கப் போய்விட்டார். எனக்கு உறக்கம் வராமல் அப்பாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். சின்ன வயதில் நல்லூரில் கற்பூரம் கொழுத்திய போது அப்பாவின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை இரவின் மங்கலான ஒளியில் பார்த்தேன். எனக்குத் தெரியும்; நானும் அப்பாவும் அன்று இரவு முழுவதும் உறங்கவில்லை.

காலையில் அப்பாவின் கண்கள் சிவந்திருந்தன. வேலைக்குப் போகும் முன்னர் எனக்குச் சொன்னார் ‘அவசரப்படாத குஞ்சு’.

எனக்கு எதுவும் சரியாக விளங்கவில்லை. அன்றைக்குப் பள்ளியில் எதுவும் ஏறவில்லை. பக்கத்துவிட்டு சியாமினி அக்கா ஓமந்தை இயக்க முகாமில் படையணிப் பயிற்சி முடித்துவிட்டு ஒரு நாள் வீட்டுக்கு வந்து தங்கிச் சென்ற போது அம்மா சமைச்சு சாப்பாடு கொடுத்தது நினைவுக்கு வந்தது.

தொடரும்..
(யாவும் கற்பனை அல்ல)

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சல்மான் கான் சென்ற வாகனம் மோதிய சிறுவர்கள் இன்னும் ஆபத்தான நிலையில்

சல்மான் கான் சென்ற வாகனம் மோதிய சிறுவர்கள் இன்னும் ஆபத்தான நிலையில்

Comments 1

  1. குமார் says:
    11 years ago

    யாவும் கற்பனையில்லை”
    ஆயின் பலது கற்பனைதானே!

    மேலும் இது தொடர்ந்து வெளிவராது.ஏனைய ஆக்கங்களைப்போலவே ஏதோ ஒரு வகையில் புலிகளை குறை கூறும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

    வேண்டாம் புலம்பல்கள்..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...