Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஊடகங்களும் மலையக மக்களும் ஒரு நோக்கு : சை.கிங்ஸ்லி கோமஸ்

இனியொரு... by இனியொரு...
07/25/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
4
Home பிரதான பதிவுகள் | Principle posts

மலையகம் மிக நன்றாக உள்ளது எமது இருப்புக்கு ஒரு குறையும் இல்லை – ஊடகங்களும் மலையக மக்களும் ஒரு நோக்கு

எந்த ஒரு நாட்டினதும் நாடித்துடிப்பினைக் காட்டக்கூடிய சாதனமாக ஊடகங்கள் காணப் படுவது எழுத்தரிவுள்ளோர் ஏற்றுக் கொண்ட உண்மையாகும் எமது நாட்டிலும் ஊடகங்கள் தனது முகத்தை காலத்திற்கு காலம் வேறு வேறு விதமாக காட்டியுள்ளமை வரலாற்றில் பதியப் பட்டுள்ளது.

தமிழ் தேசியவாதம் தலை தூக்கியிருந்த காலக் கட்டத்தில் தமிழ் ஊடகங்களில் எத்தனை எத்தனை ஊடகங்கள் நடு நிலைமையாய் இருந்தன என்பது மாத்திரம் இன்றி சிங்கள இன வாதத்தினை தூண்டும் ஊடகங்களுக்கு சரி சமமாக தமிழ் ஊடகங்களும் தமிழ் தேசியவாதத்திற்கு ஊதுகுழலாய் இருந்தமை மறைக்க முடியாத உண்மையாகும். இன்று யுத்தத்தின் கொடூரங்களைப்பற்றி புலம்பிக் கொண்டிருக்கும் தமிழ் ஊடகங்கள் நடந்து முடிந்த மனித படுகொலைகளுக்கும் பொருள் பன்பாட்டு கலாச்சார அழிவுகளுக்கும் தாங்களும் பங்கு தாரர்கள் என்பதனை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

ஊடகங்களும் ஊடக நிறுவனங்களும் அவரவர்களுக்கான தனிப்பட்ட நோக்கினையும் கொள்கையினையும் கொண்டிருந்தப் போதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் ஊடகவியலாளர்கள் தங்கள் சமூகத்தை நேசிக்கின்றனர் என்பதற்கான பல சான்றாதாரங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றது ஊடகங்களினூடாக தங்களின் சமூக இருப்பிற்காய் உயிர் நீத்த ஊடகவியலாளர்கள்
ஏராளம்.ஆனாலும் நாங்கள் செய்யும் எழுதும் படைக்கும் அல்லது தொகுத்து வழங்கும் ஒரு விடயம் இரண்டு மனிதர்களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்துமாக இருந்தாள் இரண்டு சமூகங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துமாக இருந்தால் ஒரு மக்கள் கூட்டத்தின் ஐக்கியத்தினை சிதைக்குமாக இருந்தால் அந்தபடைப்பு ஒரு நச்சுப் படைப்பு என்றே அடையாளப்படும்.

தமிழ் தேசியத்திற்கு துணைப்போனவர்கள் தாங்கள் என்ன செய்கின்றார்கள் என்று அறியாமலே யுத்தத்திற்கு துணைப் போனவர்களாவார்கள் இவர்களளின் படைப்புகள் துப்பாக்கியின் தோட்டாக்களுக்கு இணையானவையாகும் இந்தப் படைப்புகள் காலத்தின் தேவையறிந்து சற்று தீர்க்கத்தரிசனத்துடன் சர்வதேச ஆயுத வியாபாரிகளினதும் ஆயுத தரகர்களினதும் தேவைக்காய் எழுதாமல் இருந்திருந்தால் இன்று நாம் கண்ட இந்த கோர அனுபவங்களை தவிர்த்து இருக்கலாம்.

மலையகம்

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ஊடக நிருவனங்கள் தங்களின் அரசியலை எவ்வாறு அரங்கேற்றினர் என்பதற்கான பதில் இன்று பாராளுமன்றத்தில் இருக்கும் ஊடக முகங்கள் எமக்கு காட்டி நிற்கின்றன.இதில் தமிழ் மொழி சார்ந்தவர்கள் மலையகத்தினை ஊன்று கோளாய் ஊன்றியே நிமிர்ந்தவர்களாகும்.மலையகத்தின் ரொட்டியும் சம்பலும்; தேர்தல் பிரச்சாரத்தின் அடையாளமாய் ஆனதுடன் எங்களின் கிளிந்த ஆடைகள் அவர்கள் அணியும் கோட்டும் சூட்டும் ஆகியது.மாவின் விலை ஏற்றம் அவர்களின் வார்த்தைக்கு வண்ணம் ஊட்டியதே ஒழிய அவர்கள் சார்ந்திருக்கும் தலைமைகளுக்கு சிறிய தூண்டலைக்கூட கொடுக்க வில்லை.இதில் இன்னும் ஒரு வேடிக்கை யாதெனில் இந்த ஊடக வியாபாரிகளின் பின்னால் சில ஆசிரிய பெரு மக்களும் சுற்றி திரிந்தனர் ஏன் என்று வினவிய போது எவ்வாராவது குறிப்பிட்ட ஊடகத்தின் பிராந்திய செய்தியாளராகி விட வேண்டும் என்று கூறினர் வெட்கப் பட வேண்டிய நிலை ஏற்பட்டது மலையகத்தில் கற்றவர்கள் அனைவருக்கும்.

மலையக மக்களுக்காய் எழுத வந்தேன் மலையக மக்களின் விடுதலை பற்றி பேச வந்தேன் என்று வீர முழக்கம் இட்ட இன்னும் சிலர் ஒரே ஒரு சாகித்திய விழா பரிசைப் பெற்ற உடன் மலையகம் மிக நன்றாக உள்ளது எமது இருப்புக்கு ஒரு குறையும் இல்லை என்று மந்திர உச்சாடனம் பன்னத்துவங்கி விட்டார்கள் ஏனென்றால் விருது வழங்கிய விழாவில் நாயகனின் பேச்சே அது.

மலையக மக்கள் இன்னும் முகவரி இல்லாதவர்களாகவும் 80 வீதமானவர்கள் லயங்களிலே வாழ்பவர்களாகவும் இந்த நூற்றாண்டின் மனித வளர்ச்சியினை எட்டாதவர்களாகவும் வாழ்வதனைக் காணக்கூடியதாய் உள்ளது.

மலையக மக்கள் பற்றி கதைக்காதவர்கள் யாரும் இல்லை ஏமாற்றப்படுகின்றார்கள் ஏய்க்கப் படுகின்றார்கள் தேர்தல் காலத்தின் போது விற்கப்படுகின்றார்கள. இவை அனைத்துமே பலராலும் பல காலமாக கதையாடி வரும் விடயமாகும் எதிர் கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சிகளின் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மேடைகளில் மலையக மக்களின் கண்ணீர் துடைக்க தங்களால் மாத்திரமே முடியும் என்று முழக்கம் இட்டு விட்டு தாங்கள் ஆட்சியை பிடிப்பதற்காக யாரோடு கூட்டு சேர வேண்டும் என்பதனை தீர்மானிப்பதன் மூலம் மீண்டும் மலையக மக்கள் மரக்கப்பட்ட மனிதர்களாகி விடுவார்கள்.இதற்கு சமாந்தரமாக ஊடகங்களும் ஊடகவயளாலர்களும் ஏமாற்றுபர்கள் அரச யந்திரத்துக்குள் பங்கு தாரர்களானதன் காரணத்தினால் மலையக மக்களை மறந்து விட்டு மலைரயக மக்களை நசுக்கும் பாதங்களின் பயணங்களைப் புகழத் துவங்கி விடுவார்கள் இந்த இடத்தில் சற்று நிதானித்து சிந்திக்கும் இடத்து இந்த ஊடக உலகம் குறைந்த பட்சம் ஒடுக்கும் இந்த கால்களை எதிர்க்கும் சிறு சிறு சக்திகளின் குரல்களைக் கூட இருட்டடிப்பு செய்வது அனுபவத்தால் பட்ட பாடங்களாகும். தேர்தல் காலங்களாக இருக்கட்டும் தொழிலாளர் தினங்களாக இருக்கட்டும் மலையக மக்களை நசுக்குபவர்களுக்கு கொடுக்கப் படும் முக்கியத்துவம் மலையக மக்களை ஆண்டாண்டு கால அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்ய முயற்சிப்பவர்கள் ஊடகங்களால் ஈரட்டடிப்பிற்குள்ளாக்கப் பட்டு விடுவார்கள்.

அன்மைக் காலமாக மலையகப் பிரதேசத்தில் தொலைக்காட்சி கலாச்சாரம் மிகவும் சீரழிந்த கலாச்சாரமாக மாரி வருகின்றது.எமது நாட்டின் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒன்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை மாத்திரம் வழங்குவதாக பெருமைப்பட முடியாவிட்டாளும் குறைந்த பட்சம் நாட்டின் செய்திகளாவது நேரம் தவராமல் பார்க்க உதவுகின்றது ஆனால் அட்டன் கொட்டகலை நோர்வுட் பொகவந்தலாவை தலவாக்கலை மஸ்கெலியா பன்டாரவலை அப்புத்தலை காவத்தை என எங்கெல்லாம தமிழ் மக்கள் செரிந்து வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் தமிழ் மக்களுக்கு இலங்கையில் பூகம்பம் வந்தாளும் தெறிவதில்லை கேபல் டீவி மூலமும் டிஸ் என்டனாக்கள் மூலமும் சினேகாவினதும்; பிரசன்னாவினதும் திரு மணத்தினை பார்த்து கூப்பாடு போட்டவண்ணம் இருக்கின்றார்கள். மலையகத்தின் மிக முக்கிய தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் இலங்கை செய்திகளை மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பார்க்காது இந்திய தொலைக்காட்சிகளை பார்ப்பதற்கு உதவிகளையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வருவது பலரும் அறிந்த விடயமாகும் இதற்கு காரணம் அவ்வப்போது சில அரசியல்வாதிகளின் முகத்திரைகள் விரும்பியோ விரும்பாமளோ கழட்டப்படுவதாகும். கூரைகளில் பூட்டப்பட்டுள்ள டிஸ் என்டனாக்களை காட்டி மலையக மக்கள் முன்னேரி விட்டார்கள் என்று கூறும் அரசியல் வாதிகளின் கபடத்தனங்கள் ஊடகங்களின் மூலமே அரங்கேற்றப்படுகின்றது என்பது பொய்யானதல்ல. மலையகத்தில் பல தோட்டங்களில் மலம் கழிப்பதற்கு மலசல கூடம் இல்லாவிட்டாளும் கலாச்சார அசிங்கங்களைக் காட்டும் டிஸ் என்டனாக்கள் பொருத்தப் பட்டு இருப்பது வெட்கித் தலைக் குனிய வைக்கும் விடயமாகும்.
ஊடகங்கள் தொடர்பாக நோக்கும் போது உலக ஊடக வரலாற்றில் அதிகமானவை வியாபார நோக்கத்தினை மைய்யப் படுத்தியவையாகும். ஊடகங்களுக்க மனிதர்களை சரியானப் பாதையில் வழிநடத்த வேண்டிய தலையாய பொருப்பு காணப்படுகின்றது. ஊடகத்துரையில் கடமையாற்றும் பலருக்கு தங்களின் முகாமைத்துவத்திற்கு விசுவாசமாக வாழ வேண்டியது தொழில் பாதுகாப்பு காரணத்தால் கட்டாயமாகும் மலையக ஊடகவியலாளர்கள் வீடற்ற நாடற்ற தொழிலாளர்களின் இருப்பு தொடர்பாகவும் மாற்றம் தொடர்பாகவும் விடுதலைத் தொடர்பாகவும் பேச கடமைப்பட்டுள்ளனர் என்பது சுட்டிக்காட்டப் பட வேண்டிய விடயமாகும்.

முகாமைத்துவத்திற்கும் அரசியல் வாதிகளுக்கும் மாத்திரம் அல்ல மக்களுக்கும் விசுவாசமாக வாழவேண்டியது அணைவரினதும் தார்மீக பொறுப்பாகும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பிரிட்டன் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டாவது காலாண்டில் 0.7% சரிகிறது : சரியும் ஐரோப்பா

Comments 4

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Yes, there are four kinds of Tamils in Sri Lanka – Shri Lanka. North, East, West and Central Hill Country.

  2. ramu says:
    14 years ago

    சிறந்த கட்டுரை மலையகத்தில் மாற்று ஊடகங்களின் செயற்பாடு அவை மீதான விமர்சனம் ஆகியன குறித்தும் தேடி எழுதுவது அவசியம்

    • kingsley says:
      14 years ago

      thanks I will try my best

  3. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Yes, Ramu, there are Sengunthars at Kottagala and Nanu Oya, too. Minister Indika Gunawardede said i right: there are Sri Lankan Tamils, Hill Country Tamils and Class Needs, in this country.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...