Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

உலகின் மிகப்பெரும் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் : உலக மக்கள் ஆதரவு

இனியொரு... by இனியொரு...
09/12/2012
in இன்றைய செய்திகள்
0 0
111
Home இன்றைய செய்திகள்

உலகின் மிகப்பெரும் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் கூடங்குளத்தில் ஜெயலலிதா அரச போலிஸ் படைகளால் தாக்குதலுக்கு உள்ளாகின்றது. மக்கள் பாதிக்கப்படுவதை சகிக்கமுடியாமல் உதயகுமார் சரணடையத் தயார் என அறிவித்தார். இடிந்தகரை வந்த உதயகுமாரை கூடியிருந்த மக்கள் கைதாகக் கூடாது என மறுத்துள்ளனர். இந்திய, தமிழக அரசுகள் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அணு உலையைத் திறக்க, ஆயுதப்படையை இறக்கி கொடுமைபடுத்துகின்றனர்.
அணு உலைக்கு எதிராக உலகம் முழுவதும் இதுவரை நடைபெற்ற எழுச்சிகளில் கூடங்குளம் மக்கள் போராட்டம் மிகப் பெரியது. இது இப்போது கூடங்குளம் மக்களின் பிரச்சனை மட்டுமல்ல. இந்திய மக்களின் பிரச்சனை. இலங்கை மக்களின் பிரச்சனை. தெற்காசிய மக்களின் உரிமைப்போராட்டம். ஆக, மக்கள் இப்போது உதயகுமார் சரணடைவதற்கு அனுமதிக்கவில்லை. தவிர, தமிழகம் முழுவதும் மக்கள் கலை இலக்கியக் கழகம் உட்பட பல்வேறு கட்சிகள் இடிந்தகரை மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

உதயகுமாரை தேடியலையும் கடலோரக் காவற்படை

Comments 111

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Till the day I die I will not forget the way BJP Leader Lal Krishna Adavani pronounced Kuddankulam. He had difficulty in pronunciation. He is Sindhi from Karachi. It is Kalaignar Karunanithi that established that one need not know Hindi to be Indian.

  2. நெடுதுயிலோன் says:
    14 years ago

    ஏகதிபத்தியத்திர்க்கான முதல் ஆணி கூடங்குளத்தில் அடிக்கப்பட்டதாக உலகசரித்திரத்தில் எழுதப்பட்டாயிற்று.

  3. முருகன் says:
    14 years ago

    அமெரிக்க ஏகாதிபத்திய சார்புக்கான அரசியலில் இது சாதகமான ஒரு போராட்டம். அணு சக்தி ஒப்பந்தத்தை இதுவரை எதிர்த்து ஒரு வரிகூட பேசியது கிடையாது. எல்லா அமெரிக்க சார்பு என்.ஜி.ஓ க்களும் இதை முன்னெடுத்து செல்கின்றன. காரணம் ஏகாதிபத்தியத்திற்குள் இருக்கும் போட்டியில் ஒரு ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி அமெரிக்கா தனது காலாவதியான அணு உலைகளை கடைவிரிக்க திட்டம் தீட்டுகிறது. அணு ஒப்பந்தத்தை ஒழிக்காமல் அணு உலை ஒழிப்பு என்று பேசுவது என்பது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. சுப.உதயகுமார், கேஜ்ரிவால் போன்றவர்களின் நோக்கம் அமெரிக்க ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதை தவிர வேறொன்றுமில்லை. இதைத்தான் எகிப்து, லிபியா, தற்போது சிரியா ஆகிய நாடுகளில் தனக்கு சார்ப்பான அரசுகளை என்.ஜி.ஓ.க்களின் துணைக்கொண்டு சாதித்திருக்கிறது. இப்போது இந்தியாவில் எங்கே ரஷ்ய ஏகாதிபத்திய சார்பு போய்விடுமோ என்ற நிலையில் அதை அடிபணிய வைத்து அமெரிக்க சார்பு கொண்டுவருவதற்கு வேலை செய்கிறது. அதனால்தான் கூடங்குளம் மட்டும் மூடுவது என்ற நிலைபாட்டை எடுக்கின்றனர். மிகப்பெரும் ஆபத்தான உலகத்தை பலமுறை அழிக்கவல்ல அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அழிக்கக் கோரவில்லை. ஆனால் எக்காலத்திலும் சுயமான சுதேசியமான பாதுகாப்பான நவீன அணு உலையை கொண்டுவர உத்தேசிக்கப் போவதில்லை. 
    இவர்கள் இன்று பல கோடிப் பேரின் உயிரைப் பறித்துக்கொண்டிருக்கிற நிலக்கரி அனல் மின் நிலையங்களை மூடக் கோரவில்லை. போபால் போன்ற பல்வேறு வேதியியல் அதாவது கெமிக்கல் நிறுவனங்களை மூடக்கோரவில்லை. ஏனென்றால் அது எல்லாம் முடியாது என்று தெரியும். இவை கூட இன்று இலட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதே போல் அதில் இன்று முன்னேற்றமும் கண்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதைதான் மனிதன் சவாலாக எதிர்க்கொள்கிறான். ஆனால் அணு ஆயுதம் ஒழிப்பில் ஈடுபடாமல் பூச்சாண்டி காட்டுகிறார்கள். மாவோவின் அணு ஆயுதக் கட்டுரைதான் இவர்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது. இவர்களில் ஒரு பிரிவினர் கம்யூனிஸ்டுகள் என்ற பேரால் மார்க்சியத்தை புதைத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு வாலாக மாறிப்போவது என்பது சரியானது வழிமுறையல்ல. இன்னும் சொல்லப்போனால் மக்களின் அச்ச உணர்வை பயன்படுத்தி தனது லட்சியத்தை சாதிப்பது ஒரு மதவாதியின் வேலை அதை இன்று என்.ஜி.ஓ. க்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களை ஒரு உயர்ந்த லட்சியத்தை நோக்கி, உன்னத சமூகத்தை படைக்க தன்னிலைக்க்கு உயர்த்த வேண்டிய கம்யூனிஸ்டுகள் வாலாக போனதுதான் மிச்சம். இதுதான் தெலுங்கானா போராட்டம் முதற்கொண்டு நடந்துகொண்டிருக்கிறது. அவர்களை உணர்ச்சியூட்டி ஒரு தவறான வழிக்காட்டுதலில் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்பவர்களாக மாற்றிவருகிறார்கள். 
    உண்மையில் பெரும்பாண்மை மக்கள் தெளிந்தே இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தன் சுயநலத்திற்காக குழப்பி அதில் மீன் பிடிக்க எண்ணுகிறார்கள். நாட்டின் விடுதலை வேண்டி, ஒரு சுதேசியமான வளர்ச்சியை கட்டியமைக்க, ஒரு ஜனநாயக அரசை கட்டியமைக்க முயலாமல் குறுக்கு வழியில் சாதிக்க முடியும் என்று நினைத்து தன்க்கு தானே சவக்குழியை தோண்டிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு சில கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள். இதை எதிர்த்து அமெரிக்க அடிவருடித்தனத்தை முறியடிக்கவும், இந்த அரசு அணு சக்தி ஒப்பந்தம் என்ற பேரால் தனது அடிமைத் தனத்தை நிறுவுவதை எதிர்த்தும், சுதேசியமான பொருளாதாரத்தை, அரசை கட்டியமைக்க வேண்டியும் மக்கள் அணிதிரள வேண்டிய அவசியம் இருக்கிறது. 
    என்.ஜி.ஓ.க்களில் கூடாரத்தை தூக்கியெறியவும், இந்த அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடி அரசை தூக்கியெறியவும் ஒரு சுதந்திரமான ஜனநாயகமான குடியரசை நிறுவவும் அணிதிரளவேண்டும் என்று கோருகிறேன். 
    சிந்தியுங்கள்! மார்க்சியத்தை உயர்த்திப் பிடிப்போம்.
     

    • thevan says:
      14 years ago

      முருகன்!
      கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் என்பது அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் , ரஷ்ய அணு உலை தொழில் நுட்பம் போன்றவற்றிற்கு எதிரானதாகவும் அதே நேரம் ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ.க்களின் வலையில் சிக்காத மக்கள் போராட்டமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் . சரி தானே முருகன்?

      நான் இதை 100% ஆமோதிக்கிறேன்

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Guys Robert Zoelleck the Chairman of the World Bank talked about a multi polar world before retiring. They have given the leadership also to a South Korean. It is a time tested rhetoric this IMPERIALISM thing.

  5. முருகன் says:
    14 years ago

    //மிகப்பெரும் ஆபத்தான உலகத்தை பலமுறை அழிக்கவல்ல அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அழிக்கக் கோரவில்லை. ஆனால் எக்காலத்திலும் சுயமான சுதேசியமான பாதுகாப்பான நவீன அணு உலையை கொண்டுவர உத்தேசிக்கப் போவதில்லை.//
    கூடங்குள அணு உலையை ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுவித்து ஒரு சுதேசியமான அரசு சார்பான அணு உலையாக கட்டியமைக்கவேண்டும். அதே நேரத்தில் மக்களுக்கும் அரசுக்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகளை அரசு பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்க்கவேண்டும். அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு தோள்கொடுப்பதும், அவர்களின் பிற்போக்கான கருத்தான அணு உலையை மூடு என்ற கருத்துக்கு வாலாக மாறாமல் அணு உலையின் சுதேசியமான வளர்ச்சிக்கும் அதை சுதந்திரம் பெற்ற ஒரு குடியரசை நிறுவுவதற்கும் போராட முன்வருவதும் அதற்காக மக்களை அணிதிரட்டுவதும் வேண்டும். 
    உற்பத்தி சக்தி ஏகாதிபத்தியத்தின் கையில் ஒரு பிற்போக்கு அரசு கையில் இருப்பதை விடிவிப்பதற்கு உற்பத்தி உறவான இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளிவரவே போராடவேண்டுமேயன்றி, உற்பத்தி சக்தியையே அதாவது அணு உலையையே தகர்த்தெரிவது என்பது அரஜாகமான வழிமுறையே ஆகும். இதைத்தான் ஏகாதிபத்தியவாதிகள் என்.ஜி.ஓ க்கள் மூலமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதற்க்கு நாம் வாலாக மாறிக்கொண்டிருக்கிறோம்

    தயவு செய்து மாவோவின் (மாபெரும் விவாதம் நூல்) அணு ஆயுதம் குறித்து கூறியிருப்பதை தெரிந்துக்கொள்ளத்தான் முயற்சியாவது செய்வோமோ. மார்க்சிய அடிப்படையிலான மூல நூல்களைப் படிப்பது என்றால் இன்றைய காலக்கட்டத்தில் மார்க்சியவாதிகளுக்கு அலர்ஜியாகவே மாறிவிட்டது. இன்று மார்க்சியவாதிகளாக உதயகுமார் போன்றவர்களே மற்றவர்களுக்கு மாறிவிட்டிருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

    போராட்டம் எவ்வகையில் என்பது ஒரு புறம், மறுபுறம் எதற்காக போராடப் போகிறோம் என்பது முதன்மையானது. ஆனால் இங்கு போராட்ட முறைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம். இன்று உற்பத்தி சக்திகளை அது இன்றும் மனிதனை பாதிக்கக் கூடிய நிலகரி அனல் மின்நிலையமாக இருந்தாலும், கெமிக்கல் நிறுவனமாக இருந்தாலும், அணு உலையாக இருந்தாலும் இதை சரியாக மாற்றுவதற்கான ஒட்டு மொத்தமான முயற்சியும், அதை மக்கள் சொத்தாக மாற்றக்கூடிய ஒரு புரட்சிகர வழிமுறையும் தேவை. 

    என்.ஜி.ஓ க்கள் பின் செல்வது மட்டுமல்ல, அவர்கள் சொல்லுகிற கருத்தே மார்க்சியமாக மாறிப்போனதுதான் அவலநிலை. பூச்சாண்டிகளையே முதன்மைப்படுத்தி மனிதகுல வரலாறு நெடுகிலும் சவாலை வெல்வதில், இயற்கையை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதிலுமான போராட்டத்தில்தான் மனிதகுல வளர்ச்சி இருக்கிறது. ஏகாதிபத்தியவாதிகள் இயற்கையை அழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவுக்கு தற்போது கம்யூனிஸ்டுகள் இயற்கையோடு பணிந்து வாழ்வது அதாவது அதாவது அறிவியலே மனிதகுலத்துக்கு எதிரானது, உற்பத்தி சக்தியே மனித குலத்துக்கு எதிரானது என்ற ஏகாதிபத்தியவாதிகளின் கைக்கூலியான என்.ஜி.ஓ க்களின் குரலை உயர்த்திப் பேசுவதும் அதற்காக அவர்களோடு கைக்கோர்ப்பதும் நடந்துக்கொண்டிருக்கிறது. மக்களுக்கான அடுத்த வளர்ச்சிக்கான விசயத்தை கொண்டுவருவதற்கு உற்பத்தி உறவுகளை ஏகாதிபத்தியம் அடிமை நாடு, பிற்போக்கு அரசு ஒடுக்கப்படும் மக்கள், சோசலிசம் அல்லாத அரசு ஆகியவற்றை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை மார்க்சிய தத்துவத்தில் அதை மார்க்சிய வழியில் எதிர்க்கொள்வதற்கான வேலையை செய்யவேண்டியுள்ளது. இயற்கைக்கும் சமூகத்திற்குமான முரண்பாடு என்பது எப்போது முன்னணிக்கு வரும் என்றால் வர்க்கமற்ற ஆட்சியை முன்னணிக்கு கொண்டுவரும்போதுதான். இப்போது உள்ள இயற்கை சீரழிவெல்லாம் ஏகாதிபத்திய உறவால் வருகிறது. அதே நேரத்தில் இதுவரையில் சோசலிசமல்லாத இந்த முதலாளித்துவ அல்லது அதற்கு முந்தைய உற்பத்தி உறவுகளைக் கொண்டுள்ள அரசு தன் சுயநலத்திற்காக கண்டுபிடித்துள்ள அனைத்து கண்டுபிடிப்புகளும் மனிதகுலத்திற்கு எதிரானது என்ற முடிவு மிகவும் மோசமான முடிவேயாகும். அந்தக் கண்டுபிடிபுகளை எப்படி மக்களுக்கானதாக மாற்றவேண்டி போராடவேண்டும் என்பதே முதன்மையானதாகும். எந்த அரசாக இருந்தாலும் மனித குல இருப்புக்காக இயற்கையை எதிர்த்துப் போராடியே வந்திருக்கிறது. அந்த வகையில் பொதுவான சவால்களை அனைத்து உற்பத்தி உறவுகளும் எதிர்க்கொண்டுதான் உள்ளது. ஆனால் அதனால் தீர்வுகாணமுடிவதில்லை. அதற்கு அந்த உற்பத்தி உறவே தடையாக மாறிவிடுகிறது. அந்த வகையில் அணு சக்தி என்பது மனிதனுடைய அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது. ஆனால் அது ஏகாதிபத்தியத்தின் கையில் இருக்கும்போது அதன் அலட்சியமான போக்கால் ஆபத்துக்களை எதிர்க்கொள்ள நேரிடுகிறது. அதற்குத் தீர்வாக மார்க்சியம் அதை மக்கள் மயமாக்குவதையே, சோசலிசத்திற்கு கொண்டு செல்வதையே உற்பத்தி உறவுகளை மாற்றுவதையே தீர்வாக வைத்துள்ளதே தவிர உற்பத்தி சக்தியை தகர்தெரிவதை தீர்க்கவாக அமைத்துக்கொண்டது இல்லை. ஆகையால் சோசலிசத்திற்கான தீர்வை நோக்கி இடைக்காலமாக அதை சுதேசிய கட்டமைப்போடு, அரசுடமையாக்குவதை நோக்கி தனது வழிமுறையை அமைத்துக்கொள்வதே சரியானது. மற்ற அராஜக முறைகள் எந்தவகையிலும் தீர்வினை தந்துவிடாது.

    • thevan says:
      14 years ago

      நல்லது முருகன்!

      ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகள் :

      ஆக உங்கள் குற்றச்சாட்டு என்பது ரஷ்ய அணு உலை தொழில் நுட்பம் மூலம் நிறுவப்படும் கூடங்குளம் அணு உலையை சோசலிசத்திற்கான தீர்வை நோக்கி இடைக்காலமாக அதை சுதேசிய கட்டமைப்போடு, அரசுடமையாக்குவதை நோக்கிய இயல்பான வழிமுறையை இந்த ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகள் திசை திருப்புகின்றன.

      இந்த ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகள் தான் இந்தியாவையே சோசலிசத்திற்கான தீர்வை நோக்கி நகரவிடாமல் தடுக்கிறார்கள்.ரஷ்ய அணு உலை தொழில் நுட்பம் மூலம் நிருவப்படுவதால் இது நிச்சயமாக அரசுடமையாக்கப்படும்.

      ஆகவே இதை எதிர்ப்பது தவறு . உங்கள் குற்றச்சாட்டு இதுதான்,சரியா முருகன்?

      //அதே நேரத்தில் இதுவரையில் சோசலிசமல்லாத இந்த முதலாளித்துவ அல்லது அதற்கு முந்தைய உற்பத்தி உறவுகளைக் கொண்டுள்ள அரசு தன் சுயநலத்திற்காக கண்டுபிடித்துள்ள அனைத்து கண்டுபிடிப்புகளும் மனிதகுலத்திற்கு எதிரானது என்ற முடிவு மிகவும் மோசமான முடிவேயாகும். //// 100% சரி , ஆனால் அணு உலை I phone அல்ல. உற்பத்தி சக்தி தேவை ,மாற்றுக்கருத்து இருக்கமுடியாயது , மக்களின் பாதுகாப்பு ,அடிப்படை ஜனநாயக உரிமைகள்,அடிப்படை சமூக வாழ்வாதரங்கள் போன்றவற்றை முன்னிறுத்திய அரசின் உற்பத்தி சக்தி முறையை வரவேற்போம்.

      • thevan says:
        14 years ago

        முதலாளித்துவ அல்லது அதற்கு முந்தைய உற்பத்தி உறவுகளைக் கொண்டுள்ள அரசு தன் சுயநலத்திற்காக கண்டுபிடித்துள்ள அனைத்து கண்டுபிடிப்புகளும் மனிதகுலத்திற்கு எதிரானது என்ற முடிவு மிகவும் மோசமான முடிவேயாகும்///// முதலாளித்துவ அல்லது அதற்கு முந்தைய உற்பத்தி உறவுகளைக் கொண்டுள்ள சமூக அமைப்பில் ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகள்,திரிபுவாதிகள், மக்கள் போராட்டங்களின் எதிரிகள், மக்களுடன் இணைந்து சமூக அமைப்பை மாற்ற முனையாதவர்கள் உருவாவது இயல்பு என்று ஏன் தான் மார்க்சும் மாவோவும் சொல்லாமல் போனார்களோ. முதலாளித்துவ அல்லது அதற்கு முந்தைய உற்பத்தி உறவுகளைக் கொண்டுள்ள சமூக அமைப்பை பாதுகாக்கும் திரிபுவாதிகளின் , சோசலிசத்திற்கான தீர்வை நோக்கி இடைக்காலமாக அதை சுதேசிய கட்டமைப்போடு, அரசுடமையாக்குவதை நோக்கி தனது வழிமுறையை அமைத்துக்கொள்ளாதவர்களின், மற்றும் மக்களிற்காக போராடதவர்களின் மக்கள் போராட்டங்களின் மீதான தாக்குதலே இந்த “ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகள்” என்ற முத்திரை குத்தல்களாகும்.

        மக்கள் போராட்டங்களுடன் இணைந்து இந்த ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகளை ,அம்பலப்படுத்தி , மக்களின் பாதுகாப்பு ,அடிப்படை ஜனநாயக உரிமைகள்,அடிப்படை சமூக வாழ்வாதரங்கள் போன்றவற்றை முன்னிறுத்தி,

        இன்று இருக்கும் முதலாளித்துவ அல்லது அதற்கு முந்தைய உற்பத்தி உறவுகளைக் கொண்டுள்ள சமூக அமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த போராடுவதே சரியான வழிமுறையாகும்.

  6. முருகன் says:
    14 years ago

    //“ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகள்” என்ற முத்திரை குத்தல்களாகும்.//
    இது முத்திரை குத்தல்கள் அல்ல. எகிப்தில் நடந்தது இதுதான். லிபியாவில் நடந்ததும் இதுதான். இன்னும் சிரியாவில் ஈரானில் இன்னும் பல நாடுகளில் நடந்துக்கொண்டிருப்பதும் இதுதான். அமெரிக்க சார்பு அரசுகள் அம்பலமாகிவிடுவதாலோ அல்லது அது தனது சிறந்த ஒரே அடிமையாக மாறுவதற்கு மறுப்பதாலோ அதற்கு மாற்றன ஒரு அரசும் அல்லது அதை பணியவைக்கும் ஒரு முறையாகவும் இந்த என்.ஜி.ஓ க்களை பயன்படுத்துகிறது. என்.ஜி.ஓ க்கள் என்றாலே ஏதோ காந்திய வழிமுறை என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அது ஆயுதம் தாங்கிய அமைப்புகளாகவும் இருக்கிறது என்பது அதிர்ச்சியான உண்மை. இதுதான் லிபியாவில் நடந்தது, நடந்துக்கொண்டிருப்பது. விசயம் அது எதற்கு சேவை செய்கிறது என்பதுதான். 

    இங்கு அணு உலை வேண்டாம் என்றும், கூடங்குள அணு உலை ஒப்பந்தம் வெளியிடப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தை, அதாவது அனைத்து அணு சக்தி ஒப்பந்தங்களையும் வெளியிடவேண்டும் என்று கோரவில்லை. பிச்சை போடும் அணு இழப்பீடு மசோதாக்களை எதிர்க்கவில்லை. மாறாக ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் அணு உலையை மட்டுமே எதிர்ப்பது என்பது தன் ஆதிக்கத்தை அமெரிக்கா என்.ஜி.ஓ க்களை வைத்து சாதித்துக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு ஒரு பெரிய பயம் இருக்கிறது. அந்த பயம் அறிந்து வந்ததல்ல. அவை உருவாக்கப்பட்டது. என்.ஜி.ஓ வால் உருவாக்கப்பட்டது. அந்த பயம்தான் அவர்களது மூலதனம். அதை வைத்துதான் மக்களின் உண்மையான தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையை திசை திருப்பி ஏகாதிபத்தியத்திற்கு மாமா வேலை பார்ப்பதற்கான வழியாக மாற்றிக்கொள்கிறார்கள். 

    மக்கள் பயத்திலோ அல்லது உணர்ச்சி வசப்பட்டோ அல்லது ஒரு தவறான கருத்துக்கு ஆட்பட்டோ அப்படி ஒரு நிலை எடுத்து போராடுவது என்பது சரியானதாகிவிடாது. அதற்கு என்னெற்ற உதாரணங்கள் கூறலாம். குஜராத்தில் இந்து மக்களை உணர்சி வெறியூட்டி ஒரு பாசிச கருத்தாக்கத்தை கட்டியமைத்து மற்ற மத மக்களைத் தாக்கினார்கள். இது மக்கள் கருத்து என்று அவர்கள் பின் சென்று விட முடியுமா. தெலுங்கான போராட்டம். ஒரு இனத் தேசத்திற்குள்ளே ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை சாதகமாக்கி ஒரு தேசியத்தை இரண்டாக உடைக்க ஆளும் வர்க்கம் அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டது. இதை ஏற்றுக்கொள்ள முடியுமா, ஏன் ஈழத்திலே சிங்கள மக்களிடம் இன வெறியை ஈழத் தமிழர்களுக்கு எதிராக தூண்டி ஒரு பாசிச கட்டமைப்பை கட்டியமைத்தார்கள். அந்த மக்கள் பின் தான் செல்லமுடியுமா. ஏன் இட்லர் கூட மக்களிடம் ஆரிய இன வெறியைத் தூண்டி மற்ற இனங்களை வேட்டையாட பயன்படுத்திக் கொண்டான். அதை சரி என்று சொல்லிவிட முடியுமா. இங்கு மக்கள் பலத்தை தவறான வழியில் குழப்பி தனக்கு அதாவது ஆளும் வர்க்கங்களுக்கு அல்லது ஏகாதிபத்தியங்களுக்கு சாதகமாக சேவை செய்வதாக மாற்றியமைப்பதை வரவேற்க முடியாது. அதே போல் இடிந்தக் கரையிலும் மதவாதிகள் போல் ஒரு பீதியை மக்கள் மத்தியில் ஊட்டி (ஊரில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்குவது என்பார்கள்) அவர்களை தனக்கு சேவை செய்யும் ஒரு அடிமையாக மாற்றுவதையே வழிமுறையாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஏகாதிபத்தியவாதிகளின் என்.ஜி.ஓ. க்கள். 

    மீண்டும் மீண்டும் மவுனம் காக்காதீர்கள். உலகத்தை பல முறை அழிக்கவல்ல அணு ஆயுதத்தை இப்போது தயார் நிலையில் வைத்துள்ள அமெரிக்காவை எதிர்த்து, மற்ற ஏகாதிபத்திய அணு ஆயுதங்களை எதிர்த்து வாய்மூடி மவுனியாக இருப்பது என்பது யாருக்கு சேவை செய்கிறார்கள் என்பது தெரியவில்லையா. இதில் முத்திரை குத்துவது எங்கே இருக்கிறது. உங்களது அறியாமையோ அல்லது நயவஞ்சகமோ மட்டும்தான் இருக்கவேண்டு. இரண்டுமே ஆபத்துதான். 

    மக்களோடு இணைந்துதான் போராட வேண்டும் என்பது ஒரு சரியான கருத்தை சரியான சமூகத்தை படைப்பதற்கு தலைமை ஏற்று அவர்கள் உங்கள் பின்னால் இணைந்து போராட அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும். இங்கு மக்களோடு வேலை செய்வதென்பது உங்கள்  மார்க்சிய கருத்து நிலையிலிருந்து ஒரு உன்னத மக்களுக்கான சமூகத்தை படைக்க அவர்களோடு இருந்து பணியாற்றவேண்டும். இங்கு மக்களின் வாலாக அல்ல, அவர்களின் தலைமையாக அவர்களின் தளபதிகாளாக மார்க்சியத்தை நிறுவுவதற்கு பணியாற்ற வேண்டும். 

    இன்னும் சொல்லப்போனால் இதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்க்கைக்கு மாற்று வேண்டி போராடுவதும், விவாசாய நிலங்களை இழந்தவர்களுக்கு மாற்று வேண்டி போராட வேண்டியதும் அவசியம். அதற்காக தொழிற்சாலையையே அடித்து நொறுக்குவது என்ற அராஜகமான வழிமுறை அந்த மக்களை காட்டுமிரண்டி நிலைக்கு தள்ள நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்று பொருள். அதை விடுத்து அதை மக்கள் சொத்தாக மாற்ற அனைத்து தனியார் தொழிற்சாலைகளையும் பறிமுதல் செய்து மக்கள் உடமையாக்க வேண்டும். அரசுடைமையாக்க வேண்டும். அரசை ஒரு இறையாண்மையுள்ள சுதந்திரமான குடியரசாக்கப் போராடவேண்டும். இதுதான் நம்முன் உள்ள கடைமை. மற்றவையெல்லாம் குறுக்கு வழியில் போகாத ஊருக்கு வழிதேடுவதாகும்.

    அமெரிக்காவின் திட்டம் என்னவென்றாவது தெரியுமா. அவர்களது இராணுவ செயல்தந்திர திட்டம் என்னவென்று தெரியுமா. அமெரிக்காவின் அடிமை நாட்டில் அந்த ஆளும் வர்க்கங்கள் அம்பலப்பட்டுப் போனால் அவர்களுக்கு மாற்றாக மற்றொரு அடிமையை என்.ஜி.ஓ. க்கள் மூலம் உருவாக்கி அதே அடிமையை உருவாக்குவது. மற்றொன்று தனக்கு சேவை செய்ய மறுக்கும் அரசுகளை அதாவது வேறு ஏகாதிபத்தியத்தின் அடிமையினை அல்லது பல்வேறு நாட்டினுடைய அரைக்காலனி அடிமையினை மாற்றி தனக்கு முழுமையாக ஒத்துழைக்கக் கூடிய அரசினை உருவாக்க என்.ஜி.ஓ. க்களை பயன்படுத்தி தனக்கான ஒரு காலனி அரசை உருவாக்குவது. இதுதான் அமெரிக்காவின் பகிரங்கமாக அறிவித்துள்ள இராணுவ செயல்தந்திரம். இதை படித்து புரிந்துகொண்டால்தான் உலகம் முழுவது என்ன நடந்துக்கொண்டிருக்கிறது, அதில் இந்தியாவில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பது புரிந்துகொள்ள முடியும். இல்லையென்றால் தன்னியல்பு போக்குக்கு அடிபணிந்து நாம் இல்லாமல் கரைந்து போவோம் என்பது திண்ணம். 

    • thevan says:
      14 years ago

      இது முத்திரை குத்தல்கள் அல்ல///

      முதலாளித்துவ அல்லது அதற்கு முந்தைய உற்பத்தி உறவுகளைக் கொண்டுள்ள சமூக அமைப்பை பாதுகாக்கும் திரிபுவாதிகளும் , சோசலிசத்திற்கான தீர்வை நோக்கி இடைக்காலமாக அதை சுதேசிய கட்டமைப்போடு, அரசுடமையாக்குவதை நோக்கி தனது வழிமுறையை அமைத்துக்கொள்ளாதவர்களும், மற்றும் மக்களிற்காக போராடதவர்களும் இந்த “ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகள்” என்ற முத்திரையை மக்கள் போராட்டங்களின் மீது குத்துவார்கள் என்பது தான் என் கருத்து.தவறாக புரிந்துள்ளீர்கள் போலுள்ளது.

      இப்போது உடன் படுவீர்கள் என்று நம்புகிறேன்.

      ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகள் சரியானவை என்று எனது கருத்து எந்த இடத்திலும் அமையவில்லை.
      உங்கள் கவனத்திற்கு :மக்கள் போராட்டங்களுடன் இணைந்து இந்த ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகளை ,அம்பலப்படுத்தி , மக்களின் பாதுகாப்பு ,அடிப்படை ஜனநாயக உரிமைகள்,அடிப்படை சமூக வாழ்வாதரங்கள் போன்றவற்றை முன்னிறுத்தி,

      இன்று இருக்கும் முதலாளித்துவ அல்லது அதற்கு முந்தைய உற்பத்தி உறவுகளைக் கொண்டுள்ள சமூக அமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த போராடுவதே சரியான வழிமுறையாகும்.

      • நாவலன் says:
        14 years ago

        தேவன்,
        பொருத்தமான பதில்! இன்றைய காலத்தின் போராடும் மக்கள் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய வாசகங்கள்!!
        நாவலன்

        • Dr. Sri S. Sriskanda says:
          14 years ago

          That is right. Prime Minister Dr. Man Mohan Singh is also saying the same thing about the non govenrnental organisations from the western countries.

      • முருகன் says:
        14 years ago

        //ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகளை ,அம்பலப்படுத்தி , மக்களின் பாதுகாப்பு ,அடிப்படை ஜனநாயக உரிமைகள்,அடிப்படை சமூக வாழ்வாதரங்கள் போன்றவற்றை முன்னிறுத்தி,//

        இதில் எல்லாம் யார் வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் அதற்காக அணு உலையே கூடாது என்று கூறுவது இதை எப்படி தீர்க்கும் என்று தெரியவில்லை. அதை தெளிவுப்படுத்துங்கள். 

        அன்று நெருப்பு சந்தித்த அதே பிரச்சினைதான், அன்று பல்வேறு புதியபுதிய இயந்திரங்கள் புகுத்தப்படும்போது சந்தித்த அதே பிரச்சினைதான், நிலக்கறி, எண்ணெய் ஆகியவற்றை கண்டுபிடித்தபோது சந்தித்த அதே பிரச்சினைதான் இன்றும் நான் அணு ச்கதியிலும் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் கைவிடுவதால் மேற்கண்ட விசயங்களை அடைய முடியும் என்றோ அல்லது அவர்களிடம் நெருங்க ம்டியும் என்றோ உற்பத்தி உறவினை மாற்றியமைக்க முடியும் என்றோ கூறுவது எப்படி என்று விளக்கமுடியுமா?

        உற்பத்தி உறவுகள் குறிப்பாக முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் அதாவது முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி உறவுகள் மாற்றியமைப்பதற்கான சாத்தியக் கூறே அந்த சமூகத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிய்தான். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஒரு கம்யூனிஸ்ட் தடையாக இருக்கக் கூடாது என்பது ஆசான்கள் வகுத்த கோட்பாடுகள். அந்த உற்பத்தி சக்திகள் வளர்ந்தால்தான் உற்பத்தி உறவுகளை தூக்கியெறிய அந்த சமூகம் இடம் கொடுக்கும். இந்த பிரச்சினைதான் நாம் அரபு நாடுகளில் சந்திக்கும் பிரச்சினை. அங்கு உற்பத்தி சக்தியின் வ்ளர்ச்சிக்கு அவர்களின் மத அடிப்படை வாதமும் அதைப் பாதுகாக்கும் (தனது சுரண்டலுக்கு மிகவும் பிற்போக்கான ஆட்சிமுறை ஏகாதிபத்தியத்திற்கு உகந்தது) ஏகாதிபத்தியமும் தடையாக மாறியிருக்கிறது. ஆகையால் ஏகாதிபத்தியவாதிகள் அங்கு அமைத்திருக்கும் நிறுவனங்களை அழித்து ஒழிப்பதல்ல அங்கு தீர்வு, அங்கு அதை தனதாக்கி அதே உற்பத்தி சக்திகளை, நிறுவனங்களை ஒரு திட்டமிட்ட முறையில் முறையாக வளர்த்தெடுப்பதுதான் அங்குள்ள முதன்மையானப் பிரச்சினை. அப்போதுதான் அங்கு புதிய ஜனநாயகப் புரட்சிக்கோ, அல்லது சோசலிசப் புரட்சிக்கு வாய்ப்பாக வழியாக அமையும்.

        ஆகையால்தான் உற்பத்தி சக்திகளின் அரைகுறையான நுழைவு என்பதை நமக்கான ஒரு சுதேசிய தன்மையுடன் மாற்றியமைத்தலும், நாமே அப்படிப்பட்ட உற்பத்தி சக்திகளை கட்டியமைத்தலும் அவசியம். இதில்தான் இந்த அணு சக்தி அவசியம் ஏற்படுகிறது. மின்சாரம்தான் தொழில்மயம் ஆவதற்கோ அல்லது விவசாய வ்ளர்ச்சிக்கோ அடிப்படையாகும். அதுதான் எல்லா தொழில்மயத்திற்கும் உயிர்போன்றதாகும். விவசாயத்திற்கும் இன்று உயிராதாரமான பிரச்சினையில் நீர் பெரும்பங்கு என்றால் அதை பயன்படுத்த மின்சாரம் என்பது அவசியமானதாகமாக ஆகிவிட்டது. 

        நீர் பற்றாக்குறை உலகம் முழுவதும் ஒரு புறம் என்றால், இந்தியாவில் அதனால் இரு இனங்களே வெட்டி சாய்த்துக்கொள்ளும் அளவுக்கு பற்றாக்குறை (நதி நீர்க்கள் இணைத்தால் அதில் ஓரளவு முன்னேற முடியும்), மற்றொரு புறம் நிலக்கறி பற்றாக்குறை, தரமின்மை, எண்ணெய் மிகவும் விலை உயர்ந்த பொருளாக மாறிவிட்டது, இன்னொரு பக்கம் காற்று வருடத்தில் மூன்று அல்லது நான்கு மாதம் மட்டுமே சீசன், அடுத்து மிகக் குறைந்தளவான குப்பை போன்ற மாற்று மின்சரம் தயாரிப்பது இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரு முழுமையான மின்சாரத்திட்டம் அணு சக்தியுடன் திட்டமிடும்போதுதான் நம் போன்ற பெரிய நாடுகளுக்கு மின்சக்திப் பிரச்சினை தீரும். அந்த வகையிலேயே அணு உலையைத் திறக்கக் கோரவேண்டும். அதில் மக்களின் தொடர்ச்சியான பாதுகாப்பிற்கும், வாழ்வாதத்திற்கும் உத்தரவாதத்திற்காகப் போராடவேண்டும். 

  7. thevan says:
    14 years ago

    திரிபுவாதிகளும்,அரசுடமையாக்குவதை நோக்கி தனது வழிமுறையை அமைத்துக்கொள்ளாதவர்களும், மற்றும் மக்களிற்காக போராடதவர்களும் தம்மை பாதுகாத்துக் கொள்ள,இந்த போராட்டம் தவறான வழிகாட்டல்கள் , தலைமைகள் ,நோக்கங்கள் ,இலக்குகள் கொண்டவை ஆக கூட இருக்கலாம், ஆனால் உணர்வு பூர்வமாக போராடும் மக்களை,இரு மக்கள் விரோத சக்திகளான ,அரசுகள்,ஏகாதிபத்திய அடிவருடிகள் இவர்களின் இடையில் சிக்குண்ட பாதிக்கப்படும்,பாதிப்புக்கு உள்ளாகப்போகும் மக்கள் நிலை பற்றிய ஒரு அக்கறை இல்லாத ,இவர்களை வழிகாட்ட தவறும்,இந்த மக்களுடன் இணைந்து போராடத் தவறும் சக்திகள் தான் இந்த மக்களின் முதன்மை விரோத சக்திகள் ,ஏகாதிபத்திய அடிவருடிகள் ,அரசுகளை விட மிக ஆபத்தானவை.மக்களின் போராட்டத்தை கொச்சை படுத்தும் உரிமை இந்த விரோத சக்திகளிற்கு இல்லை என்பதுவே என் கருத்து.

  8. thevan says:
    14 years ago

    இன்று வரை ரசியா சார்பு , அமெரிக்க எதிர்ப்பு என்ற சிறிய ,குறுகிய ,பழைமைவாத சிந்தனைக்குள் பலர் இருக்கிறார்கள். இது மார்க்சின், மாவோவின் தவறல்ல, இது மார்க்சியத்தை , மாவோயிசத்தை தான் இருக்கும் சமூகத்தை பற்றி புரியாது ,தெளிவு பெறாது ,ஜதார்த்த கண்ணாடி இன்றி வார்த்தைக்கு வார்த்தை சமூகத்தில் அமுல்ப்படுத்த முனையும் ,சமூகத்தை வெம்பி பழுக்க பண்ண முனையும்,அதாவது நேரடியாகவே நிலப்பிரபுத்துவதிலிருந்து சமூகவுடைமைட்கு தாவ முற்படும் புத்தக பூச்சிகளின் , கற்பனை வாதிகளின் ஒரு சிறிய உதாரணமே இந்த மக்கள் போரரட்ட விரோத கருத்துக்கள்.

  9. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Thevan, did you see Richard Quest in CNN – Cable News Network. He said, India’s ability to deliver and then talked about the Treaty of Versailles. That is the end of world war one, World is expecting a lot from India – Bharat. 

  10. முருகன் says:
    14 years ago

    //இவர்களை வழிகாட்ட தவறும்,இந்த மக்களுடன் இணைந்து போராடத் தவறும் சக்திகள் தான் இந்த மக்களின் முதன்மை விரோத சக்திகள் ,ஏகாதிபத்திய அடிவருடிகள் ,அரசுகளை விட மிக ஆபத்தானவை.மக்களின் போராட்டத்தை கொச்சை படுத்தும் உரிமை இந்த விரோத சக்திகளிற்கு இல்லை என்பதுவே என் கருத்து.//

    இங்கு மக்களின் வாழ்வாதாரம், அவர்களின் அரசியல் உரிமை ஆகியவற்றை பற்றிய விசயம் எல்லாம் மறைக்கப்பட்டு, பின்னுக்குத் தள்ளப்பட்டு அவர்களை ஒற்றை இலக்கை நோக்கி அதாவது அணு உலையை மூட வேண்டும் என்ற ஒற்றைப் பார்வையை நோக்கி மக்களை ஏமாற்றி இழுத்துக்கொண்டு செல்கிறார்கள். இவர்கள் இலக்கு அவர்களின் மாற்று வாழ்வாதரப் பிரச்சினையோ அல்லது அவர்களின் பாதுகாப்பினை உத்திரவாதப் படுத்துவதைப் பற்றிய பிரச்சினையோ அல்ல, ஏன் உங்கள் பிரச்சினையும் அதுவல்ல அதை வைத்து தன் கருத்தான அணு உலையை மூடு என்ற ஒற்றை இலக்கைத் தவிர வேறொன்றும் இல்லை. அணு உலை என்றாலே ஏதோ இந்த மனித குலத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்ற பிற்போக்கான அபத்தமான கருத்து. இது நீங்கள் சுயமாக பெற்ற கருத்தல்ல. இது உங்களுக்கு ஊட்டப்பட்ட கருத்து. இதுதான் என்.ஜி.ஓ. க்களின் வெற்றி. பிறகு அவர்களை அப்புறப்படுத்தி நீங்கள் இருந்தாலும், என்.ஜி.ஓ வின் உடல் இல்லை என்று சொல்லலாம், ஆனால் அவர்களின் உயிர் போன்ற கருத்து உங்களிடம் பற்றிக்கொண்டது என்றே உண்மை. இதை மக்கள் என்ற போர்வையில் நீங்கள் ஒளிந்துக்கொள்வதுதான் பரிதாபம்.

    மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அவர்களின் பயத்தினை மூலதனமாக்கி அதையே தனது கருத்துக்கு அடிப்படையாக மாற்றும் பிழைப்பு வாத கும்பலின் கருத்தினை வழிமொழியாதீர்கள். அடுத்து ரசிய சார்பு என்பதல்ல. எந்த ஏகாதிபத்தியத்தை நாடு இங்கு நிறுவனங்களை நிறுவினாலும் அது அந்நிய சார்புதான். அதை இந்த நாட்டின் சொத்தாக மக்களின் சொத்தாக மாற்ற வேண்டும் அதற்கு மக்களை திரட்டிப் போராட வேண்டும். இதில் உங்களுக்கு ஊசலாட்டம் ஏதாவது இருக்கிறதா என்பது தெரியவில்லை. 

    அவர்களுடன் இணைந்து எந்த அடிப்படையில் போராடுவது. தெலுங்கான போராட்டம் அந்த மக்களின் உணர்வுப் பிரச்சினைதான். அந்த பகுதியின் ஏற்றத் தாழ்வான வளர்ச்சியால் ஏற்பட்ட முரண்பாடுதான். ஆனால் அதற்குத் தீர்வு தனித் தேசியமாக பெயர் கொடுத்து பிரிப்பது என்ற அடிப்படையில் அவர்களின் ஏற்றத்தாழ்வான பிரச்சினையை தனது சுயநலத்திற்காக அந்த ஆளும் வர்க்கங்களும் அதை வழித் தொழும் அறிவாளிகளும், இயக்கங்களும் ஒரு தேசியத்தையே இரண்டாக உடைக்கும் நிலைக்குச் சென்றார்கள். இந்த வாழ்வாதரப் பிரச்சினையை உணர்வுப் பிரச்சினையாக மாற்றினார்கள். அதனால் அவர்களோடு இணைந்து ஒரு தேசியத்தை இரண்டாக துண்டாடுவது சரியானதாகாது. (இது ஈழத்தில் உள்ள விசயத்திற்கும் பொருந்தும்). இங்கு மக்களை ஒரு சரியான நிலையிலிருந்து அதாவது அந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை ஒரே இனமாக தேசிய அங்கீகரிப்பதோடு, ஒரு தன்னாட்சி பெற்ற ஒரு பிரதேசமாக சிறப்பு கவனம் செலுத்தி வளர்க்கப் போராட தன் பக்கம் ஒரு மார்க்சியவாதி திரட்டியிருக்க வேண்டும். இதுதான் அவர்களுடன் இருந்து போராடுவது ஆகும். ஆனால் அதை விடுத்து அந்த தேசிய மக்களை இரண்டாக பிளக்க ஆளும் வர்க்கம் தூண்டிவிட்டதை விதைத்த தவறான கருத்தால் ஏற்பட்ட உணர்வை ஏற்று அவர்களுடன் இருந்து போராடுவது என்பது ஆளும் வர்க்கத்திற்கு, ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதே. 

    இன்னொரு வகையும் உண்டு. அதை மீண்டும் நினைவுப் படுத்துகிறேன். குஜராத்தில் மதவெறி மக்கள் மனதில் விதைத்து அந்த குறிப்பிட்ட ஒரு குழுவினை திரட்டி ஒரு மதவெறியை தூண்டி மோசமான நிகழ்வு இருக்கிறது. அதற்கு எதிரான ஒரு தனிநபர் பயங்கரவாத நடவடிக்கையும் இருக்கிறது. இரண்டிலும் நாம் மக்கள் என்ற உணர்வில் அவர்களுடன் இணைந்து போராட முடியாது. அது ஏதோ ஒரு வகையில் அரசுக்கு ஆளும் வர்க்கத்திற்கு ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதுதான். 

    இப்போது பிரச்சினைக்கு வருகிறேன். இங்கு அடிப்படை பிரச்சினை அவர்களின் மாற்று வாழ்வாதரப் பிரச்சினை, அவர்களுக்கு உலையினை பற்றிய தெளிவுப்படுத்த வேண்டியப் பிரச்சினை. தொடர்ச்சியான பாதுகாப்பினை உத்திரவாதப்படுத்த வேண்டியப் பிரச்சினை, மீனவர்களுக்கு அவர்களின் வாழ்வாதரப் பிரச்சினையை உத்திரவாதப் படுத்துதல், மருத்துவப் பிரச்சினையை உத்திரவாதப் படுத்துதல், இவையெல்லாம் தொடர்ச்சியாக உத்திரவாதப் படுத்துவதற்கு ஒரு கமிட்டி இன்றைய அரசு கட்டமைப்பில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாள்ர்களின் பிரதிநிதிகள், அணு சூழலியல் போன்ற அறிவாளிகள், இவர்களை உள்ளடக்கிய ஒரு கமிட்டியை அமைத்து தொடர்ச்சியாக ஒழுங்குபடுத்தவேண்டும். இதற்காகப் போராடவேண்டும். அதுவும் மக்களுடன் இணைந்து போராடவேண்டும். இதுதான் அவர்களின் உண்மையான உணர்வு. ஆனால் அணு உலையே கூடாது அதுவே உலகத்தை அழிக்கவல்ல ஒரு ஆயுதம் என்ற கருத்தினை வைத்து தனது சேவையை ரசிய ஏகாதிபத்தியத்திற்காகட்டும் இல்லை அமெரிக்க, பிரான்ஸ் ஏகாதிபத்தியத்திற்காகட்டும். எல்லாம் முறியடிக்க வேண்டியவையே. 

    அணு உலையை திறக்க வேண்டும் என்பது நாட்டின் உற்பத்தி சக்திகான வளர்ச்சிப் பிரச்சினை. அதை சுதேசியமாக சரியாக மாற்றியமைக்கப் போராடுவது என்பது உற்பத்தி உறவுகளுக்கிடையிலான பிரச்சினை. நான் உற்பத்தி உறவுகளை மாற்றியமைத்து ஒரு சுதந்திர ஜனநாயக குடியரசை அமைப்பதின் மூலமாக மட்டுமே சுதந்திரம், ஜனநாயகம், மக்கள் உரிமையை உத்திரவாதப் படுத்த முடியும். இவையெல்லாம் தகர்த்தெரிய வேண்டும் என்பது கம்யூனிசம் முதன் முதலாக சந்தித்த பிரச்சினையான இயந்திரங்களை உடைத்தல் என்ற அராஜகமான பிரச்சினையே மீண்டும் நாம் சந்திக்க நேரிடுகிறது. இது அராஜகமான வழிமுறை. இதை நம்முடையதாக மாற்றுவத்ற்கு அரசை ஜனநாயகப் படுத்துவதற்கானப் போராட்டமும், அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு ஒரு இறையாண்மை அரசை ஏற்படுத்துவதற்கான போராட்டமும் செய்து முடிக்கப்படும்போதுதான், ஒரு சோசலிச அரசினை அமைக்கப்படும் போதுதான் இதை முழுமையா (அழுத்தம்) மாற்றியமைக்க முடியும், உத்தரவாதப் படுத்தமுடியும். அதற்கு அவர்களுடன் இருந்து பணி சேய்ய வேண்டும். அவர்களுக்கு தெளிவுப் படுத்த வேண்டும். அவர்களின் வாலாக அல்ல, அவர்களின் தலையாக தளபதிகளாக, முன்னணிகளாக. இதுதான் அவர்களுடன் இருந்து பணியாற்றுவதற்கான பொருள். மற்றவையெல்லாம் அந்த மக்களை ஏமாற்றி நயவஞ்சகமாக அவர்களின் உணர்வுகளை தனக்கு சாதகமாக்கி, அவர்களின் பயத்தினை தனக்கு சாதகமாக்கி இந்த பிற்போக்கு அரசுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் ( எந்த ஏகாதிபத்தியமாக இருந்தாலும்) சேவை செய்வதேயாகும்.

  11. thevan says:
    14 years ago

    அடிப்படை பிரச்சினை மாற்று வாழ்வாதரப் பிரச்சினை,உலையினை பற்றிய தெளிவுப்படுத்த வேண்டியப் பிரச்சினை. பாதுகாப்பினை உத்திரவாதப்படுத்த வேண்டியப் ,.வாழ்வாதரப் பிரச்சினையை உத்திரவாதப் படுத்துதல், மருத்துவப் பிரச்சினையை உத்திரவாதப் படுத்துதல், இவையெல்லாம் தொடர்ச்சியாக உத்திரவாதப் படுத்துவதற்கு ஒரு கமிட்டி இன்றைய அரசு கட்டமைப்பில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாள்ர்களின் பிரதிநிதிகள், அணு சூழலியல் போன்ற அறிவாளிகள், இவர்களை உள்ளடக்கிய ஒரு கமிட்டியை அமைத்து தொடர்ச்சியாக ஒழுங்குபடுத்தவேண்டும். //// நன்றிகள் முருகன்,

    முதலாவது நன்றி: இவை எல்லாம் உத்தரவாதப் படுத்தப்படவில்லாததால் தான் இந்த உணர்வுபூர்வமான,நியாயமான மக்கள் போராட்டமே என்பதை ஏற்றுக்கொண்டதிற்கு.

    இரண்டாவது நன்றி: நீங்கள் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகள் ,உத்திரவாதப் படுத்துதல்கள்,ஒழுங்குபடுத்தல்கள்,உலையினை பற்றிய தெளிவுப்படுத்தல்கள் எதுவுமே இதுவரை அணு உலையை திறக்க வேண்டும் என்றும் , இந்த மக்கள் போராட்டம் தவறு என்றும் கூறும் உங்களைப் போன்ற “முற்போக்கு சிந்தனையாளர்களால்” கூட முன்னெடுக்கப் படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டதிற்கு.

    மூன்றாவது நன்றி: நீங்கள் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகள் ,உத்திரவாதப் படுத்துதல்கள்,ஒழுங்குபடுத்தல்கள்,உலையினை பற்றிய தெளிவுப்படுத்தல்கள் எதுவுமே இதுவரை முன்னெடுக்கப் படவில்லை என்று தெரிந்தும் அணு உலையை திறக்க வேண்டும் என்று கூறும் இந்த உணர்வுபூர்வமாக ,நியாயமாக போராடும் மக்கள் நிலை பற்றிய ஒரு அக்கறை இல்லாத ,இவர்களை வழிகாட்ட தவறும்,இந்த மக்களுடன் இணைந்து போராடத் தவறும் சக்திகள் தான் இந்த மக்களின் முதன்மை விரோத சக்திகள் என்பதை ஏற்றுக்கொண்டதிற்கு.

    நான்காவது நன்றி; இந்த மக்களின் முதன்மை விரோத சக்திகள் தான் ,அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ரசிய ஏகாதிபத்திய அடிவருடிகள் ,மக்கள் விரோத அரசுகள் உடன் கூட்டு சேர்ந்து உணர்வுபூர்வமான,நியாயமான மக்கள் போரட்டங்களை கொச்சைப்படுத்த முன்னிற்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டதிற்கு.

    சுருக்கமாக :நீங்கள் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகள் ,உத்திரவாதப் படுத்துதல்கள்,ஒழுங்குபடுத்தல்கள்,உலையினை பற்றிய தெளிவுப்படுத்தல்கள் எல்லாம் நிறைவு பெற்றிருந்தால் ,அரசு நிறைவேற்றி இருந்தால் இந்த போராட்டமே நடந்திராது. நீங்கள் குற்றம் சாட்டுவது போல்(கொச்சைப்படுத்த) அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் , ஏகாதிபத்திய அடிவருடிகளின் பின் இந்த உணர்வுபூர்வமான,நியாயமான மக்கள் போயிருக்க மாட்டார்கள் .

    //அரசை ஜனநாயகப் .. போராட்டமும், அந்நிய ..விடுபட்டு ஒரு இறையாண்மை.. போராட்டமும் செய்து முடிக்கப்படும்போதுதான், ஒரு சோசலிச …போதுதான் இதை முழுமையா (அழுத்தம்) மாற்றியமைக்க முடியும், உத்தரவாதப் படுத்தமுடியும். அதற்கு அவர்களுடன் இருந்து பணி சேய்ய வேண்டும். அவர்களுக்கு தெளிவுப் படுத்த வேண்டும்///

    100% சரியே .இவற்றை செய்வதற்குரிய தலைமை எங்கே போனது?மேலே கூறியவற்றை நோக்கி எதுவரை நகர்ந்துள்ளது?இன்று இருக்கும் சமூக அமைப்பில் இது இப்போது சாத்தியமா? இல்லை எனில் எப்போது?

    எனது குற்றச்சாட்டு .இப்படியான கூடன்குளம் போன்ற போராட்டங்களுடன் இணைந்து போரடுதுவதன் மூலம் மட்டுமே மேற்கூறியவற்றை மாற்றியமைக்க முடியும், உத்தரவாதப் படுத்தமுடியும்.அதைவிடுத்து கொசைப்படுத்துவதன் மூலமல்ல.

    சமூக அமைப்பு பற்றி உங்கள் கவனத்திற்கு :முதலாளித்துவ அல்லது அதற்கு முந்தைய உற்பத்தி உறவுகளைக் கொண்டுள்ள சமூக அமைப்பில் ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகள்,திரிபுவாதிகள், மக்கள் போராட்டங்களின் எதிரிகள், மக்களுடன் இணைந்து சமூக அமைப்பை மாற்ற முனையாதவர்கள் உருவாவது இயல்பு என்று ஏன் தான் மார்க்சும் மாவோவும் சொல்லாமல் போனார்களோ.
    இதற்காகப் போராடவேண்டும். அதுவும் மக்களுடன் இணைந்து போராடவேண்டும். ///

  12. thevan says:
    14 years ago

    ///அணு உலை என்றாலே ஏதோ இந்த மனித குலத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்ற பிற்போக்கான அபத்தமான கருத்து ///
    இதே இந்திய அரசு அணு உலை விபத்துகளை விட சிறிய தாக்கம் தந்த போபால் விச வாயுக் கசிவின் பின் மக்கள் நலனை முன்னிறுத்தி செயல் பட்டு இருந்தால் , அல்லது போபால் விபத்துகளை விட சிறிய தாக்கம் தரும் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் பட்டாசு தொழிட்சாலைகளை நெறிப்படுத்தியிருந்தால் இந்த கூடன்குளம் அணு உலை என்றாலே ஏதோ இந்த மனித குலத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்ற என்.ஜி.ஓ. க்களின் கருத்துருவாக்கத்தை இந்திய அரசு வென்று இருக்கலாம்.
    உற்பத்தி சக்தி முதலிடத்தில் மக்கள் நலன் இரண்டாவது பட்சம் இது தான் உங்கள் நிலைப்பாடு .அணு உலைக்காக அதுவும் ஏற்கனவே மக்கள் பற்றியே கவலைப்படாத(போபால் விச வாயு, பட்டாசு தொழிட்சாலை) அரசின் திட்டத்திற்காக மக்கள் நலனை பின் தள்ளுவது என்பது தவறு, மக்கள் விரோத கருத்தும் கூட.

  13. முருகன் says:
    14 years ago

    நன்றிகளை நீங்களே எழுதி நீங்களே உதிர்த்திருக்கிறீர்கள். எதற்கு என்று உங்களுக்கே தெளியவில்லை என்பதே நிச்சயம். மக்கள் ஏமாற்றுபவர்களின் பின் செல்லும் எல்லா கருத்தும் ஞாயம் என்பது உங்கள் கருத்து. 

    நான் கூறிய பல்வேறு விசயங்களை மவுனம் சாதிப்பதிலிருந்தே தெரிகிறது, எப்படி மார்க்சியத்தை வழிமொழிவது என்பது உங்களிடம் உள்ள வறட்சி. மக்களின் பிரச்சினையை எப்படி தீர்வை நோக்கி வழிநடத்திச் செல்வது என்பது இல்லாமல், அவலங்களை மட்டும் பேசுவது என்பது முதலாளித்துவ அறிவுஜீவிகளின் வாதம். அதில் சிக்குண்டு எப்படி சிந்தனை ரீதியாக தவிக்கிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.

    மக்கள் நேரடியான தீர்வினை நோக்கி செல்லத் தெரியாமல் தவிர்க்கும் போது அவர்களுக்கு அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதல்ல அதை எப்படி தீர்த்து வென்றுவருவது என்பதை கற்றுக்கொடுக்க தயாரில்லை. வசதியாக ஒரு சீர்திருத்த ஏன் சில நேரங்களில் பிற்போக்கான வழிமுறைகளை வைத்து மக்களை தன் பக்கம் அணிதிரட்டுவதும் நடக்கிறது. அதை அறியாத செய்யும் ஜனநாயகவாதிகளும் இருக்கிறார்கள், அறிந்தே செய்யும் என்.ஜி.ஓ. க்களும் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும் அது மார்க்சிய அறிவு ஆகாது. நீங்கள் வியாக்யானம் மட்டுமே செய்கிறீர்கள் அதை மாற்றியமைக்க ஒரு போதும் விரும்பியவர்களாக இல்லை. அல்லது அதற்கான அறிவைப் பெறவில்லை. 

    மொத்தம் உள்ள 17 நிபந்தனைகளில் 6 நிபந்தனைகள் கூடங்குள அணு உலையில் நிறைவேற்றப்படிருக்கிறது. இதில் மற்ற நிபந்தனைகளை ஒரு சிலவை உடனடியாக நிறைவேற்றி திரக்கவேண்டியது. ஒரு சில தன் செயல்பாட்டினூடே செய்யப்படவேண்டியவை. அதை கால நிர்ணயத்தோடு செய்யவேண்டும் என்று கோரவேண்டும். 

    ஆனால் இதில் எல்லாம் பிரச்சினை இல்லை. அணு உலையை மூடவேண்டும். அதற்கு காரணத்தை தேடுகிறீர்கள். இந்த 17 நிபந்தனைகளை நிறைவேற்றினாலும் நீங்கள் திறக்க கோரப்போவதில்லை. உங்கள் நோக்கம் மூடுவது மட்டுமே. நானும் கோருகிறேன். ஆனால் பிரச்சினைகளை தீர்த்து அணு உலையைத் திறக்கக் கோருகிறேன். விசயம் நோக்கம்  மட்டும்தான். வேறு வேறு நோக்கம், காரணம் ஒன்று. நீங்கள் மனித இனம் விஞ்ஞானப் பிரச்சினையத் தீர்க்காது அது முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணுகிறீர்கள். நான் இது மனித இனம் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள்தான் என்று கூறுகிறேன். இதில் மக்களை இழுப்பது வேடிக்கையானது.

    நான் கூறும் கீழ்க்காணும் விசயத்தை குறித்து கூறும் விசயத்திற்கு வழக்கம்போல் மவுனம் காக்கலாம்.
    ஜெர்மனி தன் இனவெறி செயலுக்கு ஜெர்மானிய மக்களின் ஆதரவு பெற்று அவர்களூடேதான் இனவெறி அழிப்பினையும், ஏன் நாடுபிடிக்கும் கொள்கையினையும் நிறைவேற்றியது. அங்கே அந்த மக்களின் தவறான வழிநடத்தல்களை எதிர்த்துப் போராடாமல் ஆளும் வர்க்கத்தின் வாலாய் போனதால் அங்கு எந்த கம்யூனிச இயக்கமும், ஜனநாயக இயக்கங்களும் வளரமுடியாமல் போனது. இனவெறி இயக்கத்தில் நசுங்கிப்போனது.
    தெலுங்கான பிரச்சினையும் அப்படித்தான். குஜராத் பிரச்சினையும் மகக்ளை திரட்டித்தான் செய்கிறார்கள். மசூதி இடிப்பும் மக்களை திரட்டித்தான் செய்கிறார்கள். அஸ்ஸாம் இனக்கலவரமும் மக்களைத் திரட்டித்தான் செய்கிறார்கள். ஆகையால் மக்களை இனவெறி மயக்கத்திலோ அல்லது மதவெறி மயக்கத்திலோ, அல்லது ஏகாதிபத்திய அடிவருடி கருத்தியல் மயக்கத்திலோ திரட்டுவது என்பது எல்லாம் சரியானதல்ல. மக்களை எல்லாவிதமான மயக்கத்திலிருந்து ஒரு சரியான மார்க்சிய வழியில் திரட்டுவதுதான் சரியானது.

    ஈழத்தில் சிங்கள் மக்களின் இனப் பிரச்சினையை சிங்கள அரசு இனவெறியை ஊட்டி இன்று அது ஒரு பொதுப்போக்காக வளர்ந்து தமிழ் இனத்தினை கொன்று குவிப்பதற்கு பின்புலமாக இருந்தது. ஆனால் அந்த இனவெறி வளரும்பொது எந்த கம்யூனிச இயக்கமும் இனப்பிரச்சினையின் தீர்வினை சொல்லாமல் ஜாதிப்பிரச்சினையை முதன்மைப்படுத்தி அல்லது மவுனம் சாதித்து அந்த சிங்கள மக்களின் பின் செல்வதாக நினைத்து அந்த ஆளும் வர்க்கத்தின் பின் சென்றதால் ஒரு கொடிய இனவெறி படுகொலையை மவுன சாட்சியாக அதே மக்கள் வேடிக்க பார்க்க நேர்ந்தது. மக்கள் அணிதிரளுவது அவர்கள் வாழ்வாதாரத்தை நோக்கி. ஆனால் என்.ஜி.ஓ. க்களும் மற்றவர்களும் அதை அணிதிரட்டுவது தன் சுயநல நோக்கத்திற்காக ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் என்.ஜி.ஓ. கருத்தியலுக்காக. 

    இது ஏதோ அணு உலை எதிர்ப்பில் மட்டும் இல்லை. அணை கட்டுவது, நதிநீர்களை இணைப்பது, பல்வேறு விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் எதிர்ப்பது அல்லது ஒழிப்பது என்ற நிலை எடுத்திருக்கிறார்கள். அதில் ஒரு பகுதிதான் இந்த அணு உலையே கூடாது என்பது. 

    உங்கள் நோக்கத்தை மறைத்துவிட்டு அணு உலையை மூடு என்று கோருவது மிகவும் சதித்தனமானது. எல்லா சுற்றுசூழலியலாளர்களும் அதை மாற்றியமைப்பதை பற்றி பேசவில்லை. முதலாளித்துவ வெறியினால் ஏற்பாடும் மாசுபடுதலைப் பற்றிப் பேசவில்லை, இயற்கையை விஞ்ஞான முறையிலே மாற்றியமைப்பதையே எதிராகப் பேசுகிறார்கள். ஏகாதிபத்தியத்தின் கொள்கைகள்தான் மாசுபடுதலுக்கும் இயற்கை அழிவுக்கும் காரணம். ஆனால் ஏகாதிபத்தியத்தை எதிர்க்காமல் மவுனமாக இருப்பதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் பரிதாபப்படத்தான் செய்ய முடியும்.

    இதையெல்லாம் சரிசெய்ய தலைமையில்லையே என்று சொல்லி ஏகாதிபத்தியத்தின் அடிவருடியான என்.ஜி.ஓ. க்களின் பின்னால் செல்வது சதித்தனமானது. அந்த சரியான மார்க்சிய தலைமையை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்கப் போராடவேண்டும். அவர்களுடன் ஒட்டுண்ணிப் போல் இருந்தால் அந்த நோய்தான் அந்த இரத்தம்தான் நம்முடன் கலந்துபோக்கும் அதாவது நாம் ஆளும் வர்க்கத்தின் தொங்கு சதையாக மாற்றப்படுவோம். ஒரே நாளில் சரியான தலைமையை பெற்றெடுக்க முடியும் என்று கற்பனை காணுவதல்ல. ஒரு சுதேசியமான அமைப்பியல் நடைமுறைகூட இல்லையென்றால் எக்காலத்திலும் சரியான தலைமையை வென்றெடுக்க முடியாது. இங்கு சரியான கருத்தியலை புரட்சிகர கருத்தியலை உருவாக்கிக்கொண்டு நாம் மக்களிடம் செல்லவில்லை என்றால் நாம் ஒரு சிறுத்து ஆளும் வர்க்கத்தின் பகுதியாக மாற்றப்படுவோம். அது இந்திய ஆளும் வர்க்கமாகட்டும் அல்லது ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாகட்டும். 

    உற்பத்தி சக்தி முதலிடத்தில் மக்கள் நலன் இரண்டாம் இடத்தில் என்று நீங்கள் வரிசைப் படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது. 
    நெருப்பு கண்டுபிடிப்பும், நிலக்கரியின் கண்டுபிடிப்பும், பெட்ரோல் போன்ற இரசாயண பொருட்களின் கண்டுபிடிப்பும் கண்டுபிடித்தபோது எல்லா விபத்துக்களையும் எதிர்க்கொண்டோம். ஆனால் அப்படி கண்டுபிடிக்கப்பட்டப் பிறகு இதில் எது அதிகப்பட்ச பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தப்பட்டிருக்கிறதோ அதை உலகில் உள்ள எந்த நாட்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று கோருவது ஞாயமானது. அதிலும் பொருளாதார நலன்கள், மற்ற விசயங்கள் பின்பற்றப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி அப்படி ஒரு விஞ்ஞானமே ஏற்கப் போவது இல்லை என்று கூறுவது மனித குல வளர்ச்சியை நீங்கள் கீழே கொண்டுவருவதுதான். இது மனித குல வளர்ச்சியை மட்டுப்படுத்தி நாகரீகமற்ற நிலைக்கு மக்களைத் தள்ளுவதுதான். 

    இவையெல்லாவற்றையும் அரசுடைமையாக்கப் போராடுவதும், சோசலிசத்தைப் படைக்கப் போராடுவதும்தான். அதற்காக அவை எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் அழிக்க நினைப்பது அராஜகவாதமேயாகும். எல்லா விஞ்ஞானத்தையும் மக்களின் சொத்தாக மாற்றுவதின் மூலம் மட்டுமே முழுமையான பாதுகாப்பும், வளர்ச்சியினையும் எட்ட முடியும். அதுவரையில் அது கூடவே கூடாது என்பது கற்பனையில் வாழும் வேற்றுலக மனிதர்கள் அன்றி வேறில்லை. 

    ஆகையால் எல்லா பாதுகாப்பு முறைகளையும் நிறைவேற்றுவது அணு உலையைத் திறக்கவேயன்றி வேறில்லை. ஆகையால் உடனடியான ஆபத்து பிரச்சினைகள் அகற்றப்பட்டிருப்பதால் அணு உலை திறக்க கோருவதுதான் சரியான நடைமுறை. தொடர்ந்து அணு உலைப் பாதுகாப்புப் பிர்ச்சினைகளை மக்கள் கமிட்டிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், விஞ்ஞானிகள் என்ற கூட்டின் கமிட்டியினை நியமிக்க போராடுவது அணு உலை மூலம் எழும் பிரச்சினைகளை மாற்ற அதன் முடிவுகளை செயல்படுத்தக் கோருவதும்தான் ஞாயமானது. 

    அரசாங்கம் இதுவரையில் பேசித் தீர்ப்பதற்கான வழிமுறைகளை இதுவரையில் எப்படி செயல்படுத்தவில்லையோ அதேப்போல் எதிர்த்துப் போராடுபவர்களும் அதை தீர்ப்பதற்கான கமிடியினை அமைக்கக் கோரியோ அணு உலையை திறக்க வேண்டும் என்ற நோக்கோடு தீர்ப்பதையோ விரும்பவில்லை. இரண்டுமே மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். இரண்டையும் உத்தரவாதப் படுத்த நாம் போரடுவது ஒன்றே வழி. சிறிதாயினும் சரியான வழியே சிறப்பானது. மார்க்சிய வழியினில் சிந்திக்காமல் அராஜகமான வழிமுறையான நிலப்பிரபுத்துவ சிந்தனை முறையினையோ அல்லது பிற்போக்கான முதலாளித்துவ வழிமுறையினையோ பின்பற்றுவது அறிவீனமாகும். உற்பத்தி சக்தியின் வளர்ச்சியினை சுதேசியமாக மாற்றுவது என்பதே மகக்ளுக்கானதாக மாற்றுவது என்பதே தீர்வு அதை ஒழித்துக்கட்டி நீங்கள் எதையும் சாதிக்கப்போவது இல்லை அராஜகத்தைத் தவிர.

  14. thevan says:
    14 years ago

    மக்கள் ஏமாற்றுபவர்களின் பின் செல்லும் எல்லா கருத்தும் ஞாயம் என்பது உங்கள் கருத்து./// இது உங்கள் கற்பனை .எந்த ஆதாரங்கள்,எங்கே உள்ளன? எனது எந்த கருத்துக்கள் இந்த முடிவிற்கு உங்களை தூண்டியது? //நான் கூறிய பல்வேறு விசயங்களை மவுனம் சாதிப்பதிலிருந்தே தெரிகிறது//

    இருவரும் ஒத்துக்கொண்ட விடயங்களில், மற்றும் எம் முன் உள்ள மக்கள் போராட்டம் பற்றிய முரண்பாடுகள் தவிர்ந்த நீங்கள் கூறிய,கூறும் பல்வேறு விசயங்களை மவுனம் சாதிப்பதினால் தவிர்பதுவே எனது நோக்கம்.வேறு ஒரு தலைப்பில் , சந்தர்ப்பத்தில் மவுனம் கலைப்பேன்.

    முதலில் எம் முன் உள்ள கூடங்குள மக்கள் போராட்டம் பற்றிய முரண்பாடுகள் அதாவது எவ்வாறு, யாரால், எந்த இலக்கிற்காக,ஏன் என்பனவற்றை பற்றி ஒரு பொது கருத்துக்கு வர முயற்சிப்போம்.

    சுருக்கமாக எனது கருத்து: இப்படியான கூடன்குளம் போன்ற போராட்டங்களுடன் இணைந்து போரடுதுவதன் மூலம் மட்டுமே மேற்கூறியவற்றை மாற்றியமைக்க முடியும், உத்தரவாதப் படுத்தமுடியும்.அதைவிடுத்து கொசைப்படுத்துவதன் மூலமல்ல.

    நீங்கள் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகள் ,உத்திரவாதப் படுத்துதல்கள்,ஒழுங்குபடுத்தல்கள்,உலையினை பற்றிய தெளிவுப்படுத்தல்கள் எதுவுமே இதுவரை முன்னெடுக்கப் படவில்லை என்று தெரிந்தும் அணு உலையை திறக்க வேண்டும் என்று கூறும் இந்த உணர்வுபூர்வமாக ,நியாயமாக போராடும் மக்கள் நிலை பற்றிய ஒரு அக்கறை இல்லாத ,இவர்களை வழிகாட்ட தவறும்,இந்த மக்களுடன் இணைந்து போராடத் தவறும் சக்திகள் தான் இந்த மக்களின் முதன்மை விரோத சக்திகள்..

    எனது கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?இல்லை எனில் , இதில் எந்த கருத்துடன் அல்லது எந்த வசனத்துடன் நீங்கள் முரண் படுகிறீர்கள்?

    உங்கள் கருத்து :

    அரசாங்கம் இதுவரையில் பேசித் தீர்ப்பதற்கான வழிமுறைகளை இதுவரையில் எப்படி செயல்படுத்தவில்லையோ/// ஏன் செயல்படுத்தவில்லை? இதற்காக யார் போராட வேண்டும் ?இந்த போராட்டத்திற்கான தலைமை எங்கே? இந்த தலைமை வெற்றிடத்தில் மக்களின் முதன்மை விரோத சக்திகள் , அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ரசிய ஏகாதிபத்திய அடிவருடிகளை தலைமை தாங்க விட்டது மக்கள் தவறா? இவை தான் நான் உங்களுடன் முரண்படும் கருத்துக்கள்/கேள்விகள் . கருத்துக்கள்/கேள்விகள் : சுருக்கமான, நேரடியான மாற்று கருத்து, எதிர் கேள்விகளை மட்டும் எதிர் பார்கிறேன்.திசை திருப்பல் கருத்துகளிற்கு மவுனம் தான் பதில்.

  15. முருகன் says:
    14 years ago

    //இந்த தலைமை வெற்றிடத்தில் மக்களின் முதன்மை விரோத சக்திகள் , அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ரசிய ஏகாதிபத்திய அடிவருடிகளை தலைமை தாங்க விட்டது மக்கள் தவறா?//
    இங்கு தவறு சரி என்பதல்ல. இங்கு பல்வேறு பிரச்சினைகள் இந்த பிற்போக்கான சமூகத்தில் தோன்றுகிறது. எல்லா பிரச்சினைகளிலும் எல்லாராலும் தலையிடுவது கிடையாது. ஏனென்றால் புரட்சிகர கட்சிகளின் பலம் குறைவானதே. அது எந்தக் கட்சிகளாக இருந்தாலும். ஆனால் இந்தியாவிலேயே அதிக என்.ஜி.ஓ. க்களை கொண்ட தமிழகத்தில் அவர்களுடைய பலம் அதிகம். ஆகையால் புரட்சிகர கட்சிகளின் பலம் எவ்வளவு குறைவானதோ அவ்வளவு கருத்து முரண்பாடுகளுடன் கூடிய பிளவுகளும் அதிகம். இங்கு எது மார்க்சியம் என்பதை நிறுவுவதற்கே மாபெரும் போரட்டத்தினை சந்திக்க நேரிடுகிறது. 

    இதில் சில பிரச்சினைகளில் மிக முன்னணியில் உள்ள பிரச்சினைகளில் பலத்துக்கு தகுந்தாற்போல் புரட்சிகரக் கட்சிகள் தலையிடுகிறது. பெரும்பாலும் கருத்து பிரச்சாரமாகவே இருக்கிறது. இந்தக் காலக்கட்டமும் அவ்வாறே. இதன் பலத்தினை பொறுத்து ஒரு சில பிரச்சினைகளில் ஒரு சில இடங்களில் சட்டத்தினை மீறிய போராட்டமும் நடக்கிறது. இதுவும் ஒரு வரம்புரைக்கு உட்பட்டதாகவே அதாவது பிரச்சாரத்தின் உயர்ந்த கட்டத்தில்தான் இருக்கிறது. மற்ற பிரச்சினைகளுக்கு எந்த புரட்சிகர அமைப்பும் தலைமை கொடுப்பது இயலாமல் பலவீனமாக இருக்கிறது. அதற்கான முயற்சியினை வென்றெடுக்க முடிந்த மட்டும் அதிக பட்சமாக போராடுகிறது. அப்படி தலைமை கொடுக்காமல் போகும் எல்லா பிரச்சினைக்கும் புரட்சிகர கட்சிகளை, ஜனநாயக சக்திகளை, ஜனநாயக இயக்கங்களை முதன்மை விரோத சக்தியாக பார்ப்பது நீங்கள் கற்பனாவாத கம்யூனிஸ்டாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது திண்ணம். 

    இதிலிருந்த் அடுத்த கட்டத்திற்கு எப்படி போவது. முதலில் எது மார்க்சிய வழி என்பதை தெளியாமல் மக்களை திரட்டுகிறேன் என்பது வேடிக்கையாக இருக்கிறது. இங்கு ஆளும் வர்க்கம், ஆளும் கட்சிகள், ஏகாதிபத்தியவதிகள், ஜனநாயகம் என்ற பேரால், மனித உரிமை இயக்கங்கள் என்ற பேரால் தன் கருத்துக்கு சார்பாக மக்களை அணி திரட்டி வைத்திருக்கிறது. அல்லது செல்வாக்கு செலுதி தனக்கு சார்பான கருத்துக்களையே பதியவைத்திருக்கிறது. உண்மையான பிரச்சினைக்கு பதிலாக குறிப்பாக ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு பதிலாக அனைத்துவிதமான திசைதிருப்பல்களுக்கும் அரசு வாய்ப்புக்காக காத்துக்கிடக்கிறது. இவர்கள் மக்களின் உண்மையான பிரச்சினையிலிருந்து திசை திருப்பி உற்பத்தி உறவான ஏகாதிபத்திய உறவுகளை பின்னுக்குத் தள்ளி அதை ஒழிப்பதிலிருந்து பாதுகாத்து உற்பத்தி சக்திகளை மக்களுக்கு எதிராக நிறுத்தியிருக்கிறது. இது உலக சமூக மாமன்றம் என்ற 2004 வருடம் நடத்திய இயக்கத்திலிருந்தே ஏகாதிபத்தியவாதிகள் ஜனநாயகத்தின் பேரால் மனித உரிமை என்ற பேரால் தன் பக்கம் ஏகாதிபத்தியவாதிகள் என்.ஜி.ஓ. க்களை வைத்து திரட்டி வைத்திருக்கிறது. இப்போது நீங்கள் எவ்வளவு பேசினாலும் அவர்களின் பயத்தினை போக்க முடியாது. 

    என்.ஜி.ஓ. க்களை முற்றாக முடக்கி நாம் மக்களிடம் செல்லவேண்டுமானால் இந்த அரசு அனுமதிக்காது. இப்போது கூட என்.ஜி.ஓ. க்கள் தலைமையில் நடப்பதால்தான் இன்னும் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இல்லையென்றால் தற்போது எல்லா கிராமங்கள் உள்ளும் புகுந்து ஓவ்வொருத்தராக வேட்டையாடி இருக்கும் வட இந்தியாவில் மலைவாழ் மக்களை பச்சை வேட்டைப் போல் வேட்டையாடி இருக்கும். அங்கு அகிம்சை வழியில் போராடுவதாக கூறுகிறார்கள். ஆனால் கூடங்குளத்தை தகர்ப்பதற்காக மக்களை அங்கு கொண்டு செல்கிறார்கள். இது அமெரிக்காவின் அடிவருடியான என்.ஜி.ஓ. க்களின் திட்டம். அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முயலவில்லை இதற்கு நாம் தான் புரட்சிகர கட்சிகள்தான் போராட வேண்டும். ஆனால் அதன் இறுதி நோக்கம் பிரச்சினைகளை தீர்த்து திறப்பதை நோக்கமாக கொண்டிருக்கவேண்டும். இல்லையென்றால் மக்களுக்கு எதிரானதாகவே இருக்க நேரிடும். 

    மக்களுடன் இணைந்து போராடுவது என்பது எந்த காலத்தில் எப்படி என்று புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஒரு பிரச்சினையின் தீர்வுக்கு மாற்றாக இன்னொரு தவறான தீர்வினை நோக்கி ஏற்கெனவே திரட்டியிருக்கும்பொது அதை மாற்றியமைக்க புரட்சிகர கட்சிகளுக்கு வெகு காலம் ஆகிவிடுகிறது. அது பலத்தை பொறுத்து சில நேரங்களில் இயலாமையைக் கூட கொண்டுவந்து விடுகிறது. அதற்காக மக்களுக்கு விரோதி என்று முடிவு கட்டுவோமானால் இங்கு ஏகாதிபத்திய ஆதரவோடு எந்தவித பொருளாதார நெருக்கடியும் ஆளும் நெருக்கடியும் இல்லாமல் மக்களோடு மக்களாக இருந்துகொண்டு மக்களின் முதுகில் குத்தும் வேலை செய்துகொண்டிருப்பவர்களே இந்த் நாட்டின் அக்கறையுள்ள மனிதர்களாக, இயக்கமாகத் தெரியும். இது விபரீதமான சிந்தனை. ஆகையால்தான் முதலில் புரட்சிகரமான சிந்தனை இல்லையென்றால், புரட்சிகரமான தத்துவம் இலலையென்றால் ஒரு புரட்சிகரமான கட்சி இருக்க முடியாது. நீங்கள் மக்கள் மத்தியில் இருந்து வேலை செய்யும் முன் புரட்சிகரமான தத்துவதை அடைய வேண்டியது அவசியம். வெறும் நடைமுறை என்றால் யாருக்கான நடைமுறை. 

    இறுதியாக இதில் மக்கள் தவறும் இல்லை, அதே நேரத்தில் பலவீனமான நிலையில் சிந்தனையிலும், தத்துவத்திலும், ஏன் அமைப்பிலும் இருக்கும் புரட்சிகர கட்சிகள் மக்கள் விரோதிகளும் அல்ல. இங்கு ஒரு மார்க்சியத்தை வந்தடைவதற்கான எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை. ஏகாதிபத்தியக் கருத்திற்கு ஏதோ ஒரு வகையில் உள்வாங்கியே இருக்க நேரிடும் தருணமும் இருக்கிறது. முதலில் மார்க்சியத்தை எது மார்க்சியம் என்று நிறுவ வேண்டியிருக்கிறது. செய்வதெல்லாம் மார்க்சியம் என்று கொச்சைப் படுத்திக்கொண்டிருக்கிறோம். இதை முறியடிக்க முதலில் உற்பத்தி சக்தியைப் பற்றியும், உற்பத்தி உறவுகளைப் பற்றியும் மார்க்சியம் என்ன சொல்கிறது. ஒரு சமூக மாற்றத்தில் என்ன பங்கு வகிக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள அவசியமாகிறது. 

    மக்களுக்கு தெளிவுபடுத்தவது அரசு அக்கறை கொள்ளவில்லை என்றால் அதற்கு நாம் தான் போராடவேண்டும். இன்னும் சொல்லப்போனால் நாம் தான் தெளிவுப்படுத்த வேண்டியிருக்கிறது. இங்கு நாம் என்பது ஜனநாயக சக்திகள். புரட்சிகர சக்திகள் என்ற அளவிலே சொல்கிறேன். அப்படி இந்த அரசு தெளிவுபடுத்தாத எத்தனையோ விசயங்கள் இருக்கிறது. அதை செய்ய வேண்டியது நமது கடமையாகிறது. அதே நேரத்தில் அப்படி செய்யக்கூடிய ஒரு அரசை அது மக்கள் நல அரசை அமைக்கப் போராட வேண்டியிருக்கிறது. முதலில் நாம் புரிந்துக்கொள்வது பிறகு மக்களுக்கு தெளிவுப்படுத்துவது. 

    இங்கு அணு உலை பற்றிய புரிதலே மார்க்சியத்திற்கு எதிராக இருப்பதுதான் உயர்ந்தபட்ச அவலம். முதலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு சரியான மார்க்சிய முடிவை வந்தடைய போராட வேண்டியிருக்கிறது. இங்கு அணு உலை என்பதே இந்த சமூகத்தினை, இந்த உலகத்தினை அழிப்பதற்காக கண்டுபிடித்த அழிவு சக்தி மட்டுமே என்று நினைப்பது மோசமானது. அப்படி நிச்சயமாக இல்லை. அதில் சில பிரச்சினைகளை எதிர்க்கொண்டிருக்கிறோம் என்பது இருந்தாலும் அதை சவாலாக ஏற்று வெற்றிக்கொள்ள வேண்டுமே தவிர. அதையே ஒழித்துக்கட்டுவது வரலாற்றை பின்னுக்கு இழுக்கும் மிக கற்பனையான முட்டாள்தனமான வேலையையே செய்கிறோம். அதை எப்படி ஆக்க சக்தியாக மாற்றுவது. மக்களுக்கானதாக மாற்றுவது, பாதுகாப்பானதாக மாற்றுவது என்பது அதன் நடைமுறையூடே கற்றுக்கொள்ள வேண்டிய விசயமாகும். ஆனால் இப்போது உள்ள நடைமுறை என்னவென்றால் அதை முற்றிலுமாக முடக்குவது, 100 சதவீதம் சாசுவதமாக் உத்தரவாதமாக எக்காலத்திலும் அது எந்த தவறும் நடக்காது என்றும், எல்லா கற்பனைக்கும் அது பதில் சொல்ல வேண்டும் என்று நினைப்பதும் அறிவியலையே கேலிக்குறியதாக மாற்றுவது என்று பொருள். 

    இதுவரையில் உலகத்தில் என்னென்ன விசயங்கள் அணு உலை வைப்பதற்கு வைத்திருகிறது என்பதை விளக்குங்கள், அதில் உலகத்தில் எது உயர்ந்த மிகவும் புதிய வகையிலான அம்சங்களை கொண்டுள்ளது என்பதை விளக்குங்கள். அதில் கூடங்குளம் எந்தெந்த அம்சங்கள் நிறைவேற்றியிருக்கிறது. எதை எதை செய்யவில்லை என்று கருதுகிறீர்கள். எதை செய்த பிறகு திறக்க வேண்டும் என்று குறிப்பாக கூறமுடியுமா. முதலில் நாம் புரிந்துகொள்ள முயற்சிசெய்வோம். பிறகு மற்றவர்களுக்கு தெளிவு படுத்துவோம்.

    நீங்கள் கேட்கலாம். இதையெல்லாம் தான் ஏற்கெனவே எல்லோரும் சொல்லியிருக்கிறார்களே என்று. அவர்கள் சொல்வதெல்லாம் அணு உலை என்றாலே எப்படி எல்லாம் நம்மை கொல்லும் என்று அதாவது எந்த பாதுகாப்பும் இல்லாத வெடிக்கும் அணு சக்தியைப் பற்றி கூறுவதாகும். இதையெல்லாம் நூறு சதவீதம் மக்களின் பாதுகாப்பை எக்காலத்திலும் யாராலும் உத்தரவாதப் படுத்தமுடியாது என்பதே தற்போது போராடுபவர்களின் கருத்தாகும். ஆனால் மார்க்சியம் எதை அறியமுடியாது என்று அனுகுபவர்களை அறிவொனாவாதிகள் என்கிறார். உலகம் இதுவரை அறியப்படாததே உள்ளது அறிய முடியாதது அல்ல. அதுவும் அதை பயன்படுத்துவதன் மூலமே அதை அறிந்துக்கொள்ள முடியும். அந்த வகையில் அனைத்து விஞ்ஞானங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும். அது இன்று ஏகாதிபத்தியத்தின் கையில் வைத்திருந்து நம்மை பயன்படுத்த விடாமல் தடுத்து அவர்களின் பாதத்தினை எதிர்ப்பார்த்து காக்க வைத்திருக்கிறது. நாம் அநத விலங்கினை உடைத்து சுதேசியமாக நாம் கட்டியமைக்க வேண்டியவை ஏராளாம். அதில் அணு உலையும் ஒன்று.

    ஆகையால் தற்போதுள்ள நிலையில் அணு உலை ஏதாவது ஒரு ஏகாதிபத்தியதிடமே உள்ளது. அதனால் அவர்களை சார்ந்தே இருக்கிறது. நாம் அதை முறியடிக்க வேண்டியது ஒரு நீண்டகால கடமையாக இருக்கிறது. ஆனால் தற்போது ஹைட் சட்டம் போன்ற ஏகாதிபத்தியத்தி அடிவருடி சட்டத்தினை ஏற்றுக்கொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தினை ஒழித்துக்கட்டி, அரசியல் அடிமைத் தனத்தை உள்ளடக்காத ஒரு அணு சக்தியை கட்டியமைக்க வேண்டியதாகிறது. அப்படி கட்டப்படும் அணு உலைகள் அரசே ஏற்று நடத்தவேண்டும். அதே போல் மேலும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் கொண்டுவருவதற்கு ஏகாதிபத்தியத்தினை எதிர்த்தும், அவர்களுடைய ஒப்பந்தத்தை எதிர்த்தும் போராடவேண்டும். இதில் பலவீனத்தை ஒழித்து பலமடைய போராட வேண்டியிருக்கிறது. அந்த காலத்தை எதிர்நோக்குவோம். அதுவரையில் இருக்கும் வாய்ப்பினை மார்க்சியத்தினை நிறுவுவதற்குப் போராடுவோம். 

  16. thevan says:
    14 years ago

    தலைமை கொடுக்காமல் போகும் எல்லா பிரச்சினைக்கும் புரட்சிகர கட்சிகளை, ஜனநாயக சக்திகளை, ஜனநாயக இயக்கங்களை முதன்மை விரோத சக்தியாக பார்ப்பது நீங்கள் கற்பனாவாத கம்யூனிஸ்டாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள் ///

    மன்னிக்கவும்.மீண்டும் சுருக்கமாக எனது கருத்தை வாசிக்கவும். திரிபுபடுத்த வேண்டாம்.

    ..

    1..நாம் போரடுவது ஒன்றே வழி. சிறிதாயினும் சரியான வழியே சிறப்பானது என்ற உங்கள் கூற்று சரியானதே.அதன் படி தலைமை கொடுக்காதாது புரட்சிகர கட்சிகள் என்று கூறிக்கொள்வோரின் தவறு.

    2..புரட்சிகர கட்சிகளின் பலம் கூடும் வரை மக்கள் போராடக் கூடாது என்று கூறுவது தவறு.

    3.இந்த தலைமை வெற்றிடத்தில் மக்களின் முதன்மை விரோத சக்திகள் , அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ரசிய ஏகாதிபத்திய அடிவருடிகளை தலைமை தாங்க விட்டது மக்கள் தவறு. என்று கூறுவது தவறு

    4.பிரச்சினைகள் ,உத்திரவாதப் படுத்துதல்கள்,ஒழுங்குபடுத்தல்கள்,உலையினை பற்றிய தெளிவுப்படுத்தல்கள் எதுவுமே இதுவரை முன்னெடுக்கப் படவில்லை என்று தெரிந்தும் அதற்கு எதிராக தம் பலவீனம் காரணமாக தலைமை கொடுத்து போராடாமல்,சரி தலைமை தான் குடுக்க பலம் இல்லை எனில் தன்னியல்பாகவே போராடிக்கொண்டிருந்த மக்களுடன் இணைந்து போராடியிருக்கலாமே , மக்களை வழிகாட்டியிருக்கலாமே. என்னுமொரு தவறு இது.

    5.அதை விடுத்தது தம் பலவீனத்தை,தவறுகளை மூடி மறைக்க மக்கள் போராட்டங்களின் மீது சேறு பூசுவோர் புரட்சிகர கட்சிகளை, ஜனநாயக சக்திகளை, ஜனநாயக இயக்கங்களை சார்ந்தவர்களாக இருக்கவே முடியாது.

    ஆகவே முதலாளித்துவ அல்லது அதற்கு முந்தைய உற்பத்தி உறவுகளைக் கொண்டுள்ள சமூக அமைப்பை பாதுகாக்கும் திரிபுவாதி, முதன்மை விரோத சக்தி ஆக தான் இருக்க முடியும்.இருப்பது நீங்கள் விடும் மகா தவறு.

  17. முருகன் says:
    14 years ago

    //ஆகவே முதலாளித்துவ அல்லது அதற்கு முந்தைய உற்பத்தி உறவுகளைக் கொண்டுள்ள சமூக அமைப்பை பாதுகாக்கும் திரிபுவாதி, முதன்மை விரோத சக்தி ஆக தான் இருக்க முடியும்//

    சரியாக கூறியிருக்கிறீர்கள். உற்பத்தி சக்தியினை தடுப்பது அந்த பழைய சமூக உற்பத்தி உறவுகளை கட்டிக் காப்பாற்றத்தான் என்பது உங்களுக்குப் புரியவில்லையா. முதன் முதலில் சந்தித்தப் பிரச்சினை வேலை வாய்ப்பை பறித்த, மக்களை நாடோடிகளாக்கின தொழிற்சாலை இயந்திரங்களை அடித்து நொறுக்கியதுதான். இது அராஜகமாகவே பார்க்கப்படவேண்டும். அதை தமதாக மாற்றும்போதுதான் அதை மக்களுக்கானதாக மாற்ற முடியும். பாதுகாப்பானதாக மாற்றமுடியும். இதை மீண்டும் மீண்டும் நினைவுப் படுத்த விரும்புகிறேன். 

    அதற்கிடையில் அந்த மகக்ள் தன்னியல்பாக போராடுகிறார்கள் என்பது முழுக்கப் பொய். அவர்கள் அவர்களின் வாழ்வாதாரங்களுக்காக மட்டுமே போராட்டத்தினை தொடங்கினார்கள். அதாவது இழப்பீடு, பாதுகாப்பு, அவர்களுக்கான கட்டுமான வசதிகள் குறித்து மட்டுமே போராடத் தலைப்பட்டார்கள். ஆனால் என்.ஜி.ஓ க்கள் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பீதியூட்டி அணு உலையே கூடாது. அணு உலை இருக்கும் வரை நீங்கள் உயிருடனே இருக்க முடியாது. அதை ஒழித்து கட்டினால்தான் உங்கள் வாழ்க்கை என்ற அராஜக வழிமுறையினை கொண்டு அவர்களின் பின்னால் மக்களைத் திரட்டி அடிமை சேவகம் செய்ய எத்தனித்தார்கள். 

    மக்கள் தன்னியல்பு போராட்டத்தின் நோக்கம் வேறு அதை மடைமாற்றிக்கொண்ட என்.ஜி.ஓ. க்களின் நோக்கம் வேறு. இதில் நீங்கள் தலைமை கொடுப்பது என்பது ஒரு அம்சம் மட்டுமே. ஆனால் இப்போதும் அதை அப்படியே அனுமதித்தால் அது ஏகாதிபத்தியத்திற்குத்தான் சேவைசெய்யும். இதில் மக்கள் போராட்டம் என்பது ஒரு காரணம்தான்.

    ஒரு அணை கட்டுவதில் அந்த அணை கட்டுவதற்காக விரட்டப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டும் என்பது தீர்வு. ஆனால் அதற்காக அணையே கட்டக்கூடாது என்பது அராஜகம். அது அந்த பின் தங்கிய சமூகத்தை ஏதோ ஒரு வகையில் கட்டிக்காப்பதற்கு அனுமதியளிப்பதாகவே ஆகும். அதுப் போலத்தான் அணு உலையும். அதில் மறுவாழ்வும் பாதுகாப்பும் கேட்டுப் போராடுவது மக்களின் உரிமை ஆனால் அதையே அணு உலையே தகர்க்க வேண்டும் என்று பீதியூட்டி அதை தகர்ப்பதற்காக போராடுவது அராஜகம். 

    இது தற்போது தொழிற்சாலையில் கூட பிரதிபலிக்கிறது. இப்போது எல்லா இடங்களிலும் திட்டமிட்டே இந்த அராஜக வழிமுறையை மக்கள் மத்தியில் உலவவிட்டு அவர்களை திசைதிருப்பிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அங்கு இல்லை என்பதற்காக அந்த மக்களை பலிகடாவாக்க முயல்வதை கண்டிப்பது அவசியம். இல்லையென்றால் ஹிட்லர் செய்த அத்தனை செயலையும் கம்யூனிச கட்சி தலைமை தாங்கவில்லை என்பதால் அந்த மக்கள் இனவெறி கொலைக்கு துணைப்போவதை ஏற்பதுபோல் ஆகிவிடும். 

    ஈழத்தில் சிங்கள மக்கள் இனவெறி படுகொலைக்கு துணை போனதை சிங்கள கம்யூனிச கம்யூனிச கட்சி வேடிக்கை பார்ப்பது போல் ஆகிவிடும். அதை கண்டிப்பது முதல் அவசியம். இல்லையென்றால் அந்த மக்களை சமூக நடவடிக்கையிலிருந்து பிரித்து உண்மையான நோக்கத்தினை செயல்படுத்த முடியாமல் போய்விடும். 

    கல்பாக்கம் முதல் கூடங்குளம் வரை அணு உலைகள் இருக்கத்தான் செய்கிறது. இதுவரை எந்த அணு உலை விபத்தும் நடக்கவில்லை என்பதும் நீங்கள் அறிவீர்கள். ஹூண்டாயில் கூட வருடத்திற்கு 10 நபர்கள் தொழிற் விபத்தால் இறப்பது, ஊணமாகுவதும் நடக்கிறது. அதற்காக அதை அடித்து நொறுக்கவேண்டும், அந்த நிறுவனத்தை நிர்மூலமாக்க வேண்டும் என்று கோரமாட்டார்கள். அதை மக்கள் உடமையாக மாற்றுவதற்கு அரசுடைமையாக்குவதற்குதான், அந்நிய முதலீடுகளை பறிப்பதற்குத்தான் போராடுவார்கள். அந்நிய முதலீட்டில் வரும் நிறுவனங்களை எதிர்த்துப் போராடத்தான் செய்கிறார்கள். அவர்கள் பலமாக இருக்கும் போது அவர்கள் உள்ளே நுழைந்து கடை பரப்பி விடுகிறார்கள். அது வரையில் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்காதே என்ற பிரச்சாரம், அதற்குப் பிறகு அந்நிய மூலதனங்களை பறிமுதல் செய்வோம் என்றுதான் மாறுகிறது. வந்துவிட்டதே என்பதால் அதை அடித்து நொறுக்க வேண்டும் நிர்மூலமாக்க வேண்டும் என்று கோருவது கிடையாது. அது எவ்வளவு சீரழிவை, எவ்வளவு வேலை வாய்ப்பை பறித்திருந்தாலும், எவ்வளவு மக்களை நாடோடியாக மாற்றியிருந்தாலும் அதை அரசுடைமையாக்குவதற்கோ அல்லது அந்நிய மூலதனத்தை பறிமுதல் செய்வோம் என்ற அடிப்படையிலேயே போராடுகிறோம். மேற்கண்ட சீரழிவை உருவாக்கியிருக்கிறது என்பதற்காக அதை நிர்மூலமாக்க கோருவது அராஜகவாதமேயாகும். இது உற்பத்தி சக்தியை முடக்கி பழைய சமூகத்தினை உத்தரவாதப் படுத்துவதேயாகும்.

    ஆப்கானிஸ்தானில், ஈராக்கில் போன்ற எல்லா நாடுகளிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தியிருக்கிறது. அங்கு கம்யூனிச கட்சி தலைமை தாங்கவில்லை என்பதற்காக அவர்களை விரோத சக்திகளாக பார்த்தால் நீங்கள் எந்த ஜனநாயக சக்தியினையும் பயன்படுத்த முடியாத மூளியாக நிற்பீர்கள். அதே நேரத்தில் ஒரு தவறான தலைமையின் கீழ் அடிமைப்படுத்தலுக்கு எதிராகப் போராடுவதற்குப் பதில் மத அடிப்படையில் தன்னியல்பாக திரண்டு அடித்துக்கொள்வதை வேடிக்கைபார்க்கக் கூடாது. அதை கண்டித்து சரியான விசயத்துக்கு போராடுவதற்கான வழிமுறையை தொடங்க வேண்டியுள்ளது. அது சூழ்நிலையை பொறுத்து காலம் எடுத்துக்கொள்ளும். சில நேரங்களில் அவர்கள் அந்த கருத்தை உள்வாங்கக் கூட முடியாத நிலையில் இருப்பார்கள். தங்கள் வாழ்க்கை அனுபவத்தில் அடிப்பட்டு அதை கற்றுக்கொள்ளக் கூட நேரிடும். அப்படித்தான் ஒரு சரியான தலைமைக் கூட உருவாகும். அப்படி உருவாகியவர்தான் உமர் முக்தர். அவர் எந்த கம்யூனிசவாதியும் தலைமைத் தாங்கு உருவாகவில்லை. 

    இங்கு எதை எடுத்துச் செல்வது எந்த விசயத்திற்கு தலைமை தாங்குவது என்பதுதான் பிரச்சினை. ஒரு இடத்தில் முழு மதவெறி தூண்டியபிறகு உடனே போய் அங்கு மாற்றுக்கருத்தை ஜனநாயக வித்தை விதைக்க முடிவதில்லை. ஆனால் அதற்கான கருத்துப் பிரச்சாரத்தை எடுக்கும்போதுதான் பிற்காலத்தில் கூட அங்கு அந்த பிரச்சினை தீர்க்கப்படுகிறது. அதுவரையில் நீங்கள் ஒரு சரியான ஜனநாயக கருத்தை எடுத்துச் சென்றால் கூட அவர்களை எட்டுவது கிடையாது. ஏனென்றால் அரசு பலமாக அவர்களை சிந்தனை ரீதியாக ஏற்கெனவே அணிதிரட்டிவிட்டதுதான் காரணம். 

    அதுபோல்தான் கூடங்குளத்திலும், என்.ஜி.ஓ. க்கள் மக்களை ஒரு கருத்தின் கீழ் திரட்டிவிட்டது. தற்போது அவர்கள் பலமாக இருக்கிறார்கள். எந்தளவுக்கு என்றால் புரட்சிகர கட்சிகளைக் கூட அணு உலையை மூடு என்று பேசவைக்கும் அளவுக்கு. இந்த சூழ்நிலைதான் வேடிக்கையானது ஆபத்தானது. அதாவது ஜெர்மனியில் ஹிட்லர் தன் தாய் நாட்டை காப்பது என்ற கொள்ளை கொள்கைக்கு அங்குள்ள கம்யூனிசவாதிகள் பெரும்பகுதியினரை அதே கொள்கையின் கீழ் மக்களுடன் இருப்பது என்ற பேரால் எப்படி தன் பின்னால் திரட்டிக்கொண்டு அதை எதிர்க்கும் கம்யூனிசவாதிகளை தனிமைப் படுத்தினானோ, அல்லது கொல்லவும் செய்தார்களோ அதே போல் இதுவும் கருநிலையியே உருவாகியிருக்கிறது. இதை தடுக்கவில்லை என்றால் அங்கு சந்தித்த பிரச்சினையையே இங்கும் ஒரு சரியான கம்யூனிச கட்சி சந்திக்க வேண்டியிருக்கும், சந்தித்துக் கொண்டிருக்கிறது. 

    ஏகாதிபத்தியத்திற்குள் முரண்பாட்டினை எப்போதும் இந்த அரசு தனது லாபத்திற்கு ஊக்குவிக்கும். என்.ஜி.ஓ. க்கள் எப்போதும் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் நிலையையே எடுக்கும். புரட்சிகர கட்சிகள் தங்கள் தவறுகளிலிருந்து மீண்டுவரவேண்டும். அதற்கு அவர்களை மக்களின் எதிரிகளாக நிலை நிறுத்துவர்களாக நிறுத்துவர்களேயானால் இங்கு ஒரு ஹிட்லர் ஆட்சியினை கொண்டுவர சேவை செய்த குற்றத்துக்கு ஆளாக நேரிடும். 

    இங்கு செயலுக்கு செல்லுமுன் வழிமுறையையும், தீர்வினையும் மார்க்சிய வழியில் உருவாக்கிக் கொள்வது அவசியம். அதில் பல தவறுகள் புரட்சிகர கட்சியில் எழலாம். ஆனால் மீண்டும் மீண்டும் மார்க்சிய ரீதியில் தம்மை புணரமைத்துக்கொண்டு எழுந்து நிற்க எல்லோரும் உதவவேண்டியது அவசியம். இந்தத் தவறு ஒரு குழந்தை எழுந்து நடக்கும் போது பலமுறை விழுந்து எழுந்து நடக்குமே அந்த தவறு. இதை குழந்தையைக் கொஞ்சகொஞ்சமாக கூட வைத்தே கொல்லும் என்.ஜி.ஓ க்களிடம் இருந்து காப்பது அவசியம். அதற்கு அவர்களின் கருத்தினை அம்பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. 

    அவர்கள் எல்லா ஜனநாயகம் என்ற பேரால் மக்கள் மத்தியில் ஊடுருவத்தான் செய்கிறார்கள். அவர்கள் பணம் வாங்கமலும் தியாகம் செய்யலாம். அது யாருக்கானது என்பது தான் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசு தனது இராணுவத்தை வடகிழக்கு மாநிலங்களில் அனுப்பி வேட்டையாடுகிறது. அவர்கள் எல்லாம் தியாகம் செய்தவர்கள்தான். ஆனால் யாருக்காக. அதில் கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்கவில்லை என்பதற்காக அவர்களை மக்கள் விரோதிகள் என்று கூறுவீர்களேயானால் நீங்கள் யாரென்பது மக்கள் தெளிவார்கள். இங்கு திரிபுவாதிகளும் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவுக்கு மார்க்சியத்தை மறந்த புரட்சிகரவாதிகளும் இருக்கிறார்கள் என்பது பெரிய உண்மை. ஒரு சரியான மார்க்சிய வழிமுறையை வந்தடைய ஒரு பெரிய விவாதத்தை நடத்த வேண்டிய மிகவும் பலவீனமான நிலையில்தான் புரட்சிகர கட்சிகள் இருக்கிறது. அந்தளவுக்கு அந்நிய வர்க்க கருத்துக்கள், ஏகாதிபத்திய கருத்துக்கள், ஆளும் வர்க்க கருத்துக்கள் பலமாக கோலோச்சுகின்றது புரட்சிகரக் கட்சிக்குள். இதைத் துடைத்தெறிய மிகப் பெரிய தத்துவப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலையில் இருப்பது மறந்து விட்டால் இங்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

    மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைக்காதீர்கள். பல்வேறு நிகழ்வுகளிலிருந்து படிப்பினையை பெறுவதற்குத்தான் பல்வேறு நிகழ்வுகளை இங்கு பதியவைக்கிறேன். ஏனென்றால் ஒரு விசயத்தில் முடிவுக்கு வரமுடியாத சூழ்நிலையேற்பட்டால் அதை எப்படி ஒழுங்குபடுத்துவது எப்படி ஒத்த கருத்திற்கு வந்தடைவது என்பதற்கு பல்வேறு நிகழ்வுகளின் அனுபவங்கள் வரலாறுகள்தான் நமக்கு வழிகாட்டு. இறுதியில் அது சரியா தவறா என்பது மார்க்சிய லெனினிய ரீதியில் அதை உரசிப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. அந்த வழியில் நடைபோட இனி தத்துவ ரீதியாக விவாதிக்க முயற்சிப்போம். மீண்டும் மீண்டும் மக்கள் போராட்டத்தை கொச்சைப் படுத்துகிறீர்கள் என்று புலம்பவேண்டாம். இது கொச்சைப்படுத்துவதல்ல, ஒரு தவறான தலைமையின் கீழ் (மதம் போல்) திரண்டுள்ளதை விடுவித்து அவர்கள் நம் பக்கம் ஒரு சரியான மார்க்சிய லெனினிய வழியின் பக்கம் வென்றெடுக்க இது ஒரு கருத்துப் பிரச்சாரம் மட்டுமே. இந்தக் கருத்து அவர்களை எட்டினால்தான் உங்கள் தலைமையினையே அவர்கள் ஏற்பார்கள். அதற்கான முதல் படிதான். இல்லையென்றால் ஆளும் வர்க்க கருத்தக்களிலே நாம் அமிழ்ந்துப் போவோம். 

    தவறுகளை திருத்திக்கொள்ள அனைவரும் தயார். எந்தத் தவறு என்று சுட்டிக்காட்டுங்கள். முதலில் அணு உலை வேண்டுமா வேண்டாமா என்று முடிவுக்கு வந்தால்தான் அதை எப்படி பாதுகாப்பாக மக்களுக்கானதாக மாற்றுவது என்பதை நோக்கி நகர முடியும். வேண்டவே வேண்டாம் என்றால் நீங்கள் போகாத ஊருக்கு வழிகேட்கிறீர்கள் என்று பொருள். இது முட்டுசந்தில் மக்களை நிறுத்துவதற்கு வழிகோலும்.  தொடர்வோம் ஒரு சரியான தத்துவப் போராட்டத்திற்கு ஒருமித்த ஒரு மார்க்சிய லெனினிய கருத்துக்களை நோக்கி.

  18. Pothuvudaimai Seemaan says:
    14 years ago

    மேற்குறிப்பிட்ட விவாதம் சுவையாகவும், சரியான திசையை நோக்கி செல்வதால், இதில் என்னுடைய கருத்தையும் பதிய வைக்கிறேன்.
    முதலிலேயே இவ்விவாதத்தில் முருகனுடன் உடன்படுகிறேன் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

    அவர் குறிப்பிட்ட முக்கியப் பிரச்சனையையே நீங்கள் புரிந்துக்கொள்ளவில்லை.

    மக்கள் போராட்டம் அனைத்தையும் நாம் ஆதரிப்பதில்லை. பிறகு எதை ஆதரிப்பது, எதை எதிர்ப்பது என்ற கேள்வி முன்னுக்கு வரும்.

    வரலாற்று பொருள்முதல்வாத வழியிலான பார்வையில் போராட்டத்தின் நோக்கமும், அதன் தலைமையும், வழிமுறையும். (இங்கு தலைமை என்பது மனிதர்கள் அல்ல. அதன் கருத்து) என்பதைப் பொருத்தது.

    மேற்குறிப்பிட்ட பத்தியை வேண்டுமானால் பலமுறை படித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், இதில் முருகன் பல முறை சொல்லி நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை.

    இப்போது கூடங்குள போராட்டத்தைப் பற்றிப் பார்ப்போம்:
    அணு சக்தி தேவை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இதை மாவோ “மாபெரும் விவாதத்தில்” கூறியுள்ளார். ஸ்டாலின் தலைமையிலான அரசும் அணு உலையையும் நிறுவியது, அணு குண்டையும் உருவாக்கியது. அதிலிருந்து நீங்கள் சுருக்கமாக விளங்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். சோவியத் அரசுகளே அதை மக்களுக்கானது என்பதாலேயே அதை நிர்மானித்தார்கள். இதனாலும் நாம் அணு சக்தி மக்களுக்கானதுதான் என்றும், அணு சக்தி மக்களுக்கு எதிரானது அல்ல என்றும் முடிவுக்கு வர இயலும். ( நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அப்படி கூறுகிறேன். ஆனால் வேண்டும் என்று நான் கூறுவதற்கு அறிவியல் மற்றும் பொருள்முதல்வாத அடிப்படையிலேயே)

    இப்படி இருந்தும், இப்பொழுது எழுந்துள்ளப் இப்போராட்டத்தை எப்படிப் பார்ப்பது.ஏற்கெனவே கூறியதுபோல் எப்போராட்டத்தை ஆதரிப்பது என்ற பத்தியைப் படித்துப்பாருங்கள்.

    மக்கள் நலனுக்கு எதிராக, மக்களே எழுந்து போராடுகிறார்கள். அப்படி என்றால் நம் நிலை என்ன. போராட்டத்தின் நோக்கம் “அணு உலையை மூடு” என்பது மக்களுக்கு எதிரானது. இப்போராட்டத்தின் தலைமை (கருத்து மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள்) இரண்டுமே அரசு சாரா அமைப்பினுடையது. அரசு சாரா அமைப்பு என்பதே ஏகாதிபத்தியத்தின் உறுப்பு. இதில் வேடிக்கை என்னவென்றால் “அரசும்” ஏகாதிபத்தியக் கைக்கூலி, போராடும் “அரசு சாரா அமைப்புகளும்” ஏகாதிபத்தியத்தின் உறுப்பு. இதிலிருந்து என்ன புரிகிறது; பலதுருவ ஏகாதிபத்தியத்தின் எடுப்பிடியாக உள்ள இந்திய அரசை எதிர்த்து அமெரிக்க ஏகாதிபத்திய உறுப்பான அரசு சாரா அமைப்பு போராடுகிறது. எதற்கு? தனக்கு முழுமையாக சேவை செய்யக் கோரி.

    தலைமையும் தவறு, நோக்கமும் தவறு, கருத்தாக்கமும் தவறு. ஆனால் இது மக்கள் போராட்டமா?
    மக்கள் போராட்டம் என்று மார்க்சியவாதி கூறினால் அதற்கு பொருளுண்டு. மக்கள் நலனிற்காக, அம் மக்களின் முன்னேற்றத்திற்காக, சிறந்த நோக்கத்திற்காக, ஒரு ஜனனாயகமான அல்லது குறைந்தபட்சம் ஜன நாயகத்தை நோக்கிய தலைமையுடன் (கருத்து ரீதியாக) நடத்தும் போராட்டமே மக்கள் போராட்டம். இப்போது சொல்லுங்கள் இது மக்கள் போராட்டமா? இது மக்களே, தன்னுடைய சவக்குழிக்கு தானே செல்லும் போராட்டம்.

    இதை எந்த மார்க்சியவாதியும் அனுமதிக்க மாட்டான்.

    உங்கள் நிலையில் நீங்கள் குழம்பியுள்ளீர்கள். மக்கள் திரண்ட தலைமை – “அணு உலையை மூடு” என்ற கோரிக்கையுடையது. அதனால், அம்மக்களுமே அக்கருத்துக்கு ஆட்பட்டுள்ளார்கள். இது அவர்களின் நலனிற்கு எதிரானது. உங்கள் குழப்பம் இங்குதான் அடங்கியுள்ளது. நீங்களும் அணு உலை மக்களுக்கு எதிரானது என்று தன்னளவில் நினைக்கிறீர்கள். ஆனால் மக்கள் திரண்ட தலைமையை தவறானது என்று உங்களுக்கு படுகிறது. அதனால் நீங்கள் அம்மக்களோடு நின்று வேறு தலைமைக்கு நாம் வழிமொழிய வேண்டும் என்று கருதுகிறீர்கள். இங்கேதான் உங்களுடைய குழப்பம். “அணு உலையை மூடு” என்பதே மக்களுக்கு எதிரானது. பகுதியளவு சிந்தனை ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கு எதிராக நிற்கவும் செய்யும். அதுப்போல்தான் இவ்விசயமும். இது பகுதியளவு கோரிக்கை, ஒட்டுமொத்த அரசியலில் இந்திய அரசின் குறைந்தப்பட்ச சுயேட்சைத் தன்மையையும் அழிக்கும் பாத்திரத்தை இப்போராட்டம் ஆற்றுகிறது. அமெரிக்காவின் ஆசியில்லாமல், ஒரு அணுவும் (அணு உலையும் உட்பட) அசையாது என்பதை அந்த ஏகாதிபத்தியம் காட்ட முயற்சிக்கிறது. இதனால் இந்திய அரசு தனது தேவையை பூர்த்தி செய்ய அமெரிக்காவின் தனியார் அணு உலை அமைப்புகளை இந்நாட்டில் கொண்டுவருவதில் போய் முடியும்.

    இது பயங்கரமான அழிவு பாதை. அணு உலை வேண்டும் என்ற சொல்லும்போதே, அது அரசுடமையாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். இப்போராட்டத்தின் வெற்றி இதற்கு எதிராக அமெரிக்காவின் ஆசிப்பெற்ற தனியாரின் லாபவெறிக்கு கொண்டுசெல்லும். இது மக்களுக்கு எதிரானது என்று படவில்லையா. இப்பயங்கரத்திற்கு நீங்கள் துனை செலிகிறீர்களா!! அறியாமையில் செய்யும் தவறு, மிகப் பாரதூரமான விளைவுக்கு செல்லும். மீண்டும் ஒரு புகிசிமா விபத்திற்கு கொண்டு செல்லும். நீங்கள் கூறியது போல் இது ஐ-போன் அல்ல. தனியாரை விட்டு வேடிக்கை பார்ப்பதற்கும். புகுசிமா விபத்து தனியாரின் லாப வெறியால், நிகழ்ந்த விபத்து. அம்முதலாளி விபத்தை தவிர்க்க இயன்றும் அதை தன் லாப வெறிக்காக நிகழ வைத்த விபத்து.
    இம்மக்கள் போராட்டத்தின் வெற்றி, அடுத்த புகுசிமாவிற்கான பாதை. புரிந்தால் நன்று. அல்லது வரலாறு அதை நிரூபிக்கும். இது சாபம் அல்ல. சமூக – அறிவியலின் விதி.

    • thevan says:
      14 years ago

      வணக்கம் சீமான் :

      என் கேள்விகளும் ஆதங்கமும்:

      1.20 வருடங்களாக தொடரும் இந்த மக்களின் போராட்டத்தை அவர்கள் அவர்களின் வாழ்வாதாரங்களுக்காக மட்டுமே போராட்டத்தினை தொடங்கினார்கள். அதாவது இழப்பீடு, பாதுகாப்பு, அவர்களுக்கான கட்டுமான வசதிகள் குறித்து மட்டுமே போராடத் தலைப்பட்டார்கள்,ஏன் இந்த மக்களின் போராட்டத்தை புரட்சிகர சக்திகள் கையில் எடுக்கவில்லை ?எடுக்காதது தவறில்லையா? மக்களுடன் இணைந்து போராடியிருக்கலாமே , மக்களை வழிகாட்டியிருக்கலாமே தவறில்லையா?

    • thevan says:
      14 years ago

      sorry second try :easy to read and understand ஐயா சீமான் அவர்களே !

      நீங்களும் கற்பனாவாதியோ? வாழ்க கற்பனாவாதிகளின் புரட்சி !! முதலாளித்துவ அல்லது அதற்கு முந்தைய உற்பத்தி உறவுகளைக் கொண்டுள்ள சமூக அமைப்பை பாதுகாக்கும் திரிபுவாதிகளின் புரட்சி !!!.

      ரஷ்ய அணு உலை தொழில் நுட்பம் மூலம் நிருவப்படுவதால் இது நிச்சயமாக அரசுடமையாக்கப்படும்.

      ஆகவே இதை எதிர்ப்பது தவறு . உங்கள் குற்றச்சாட்டு இதுதான்,சரியா ஐயா சீமான் அவர்களே?

      இன்று வரை ரசியா சார்பு , அமெரிக்க எதிர்ப்பு என்ற சிறிய ,குறுகிய ,பழைமைவாத சிந்தனைக்குள் பலர் இருக்கிறார்கள். இது மார்க்சின், மாவோவின் தவறல்ல, இது மார்க்சியத்தை , மாவோயிசத்தை தான் இருக்கும் சமூகத்தை பற்றி புரியாது ,தெளிவு பெறாது ,ஜதார்த்த கண்ணாடி இன்றி வார்த்தைக்கு வார்த்தை சமூகத்தில் அமுல்ப்படுத்த முனையும் ,சமூகத்தை வெம்பி பழுக்க பண்ண முனையும்,அதாவது நேரடியாகவே நிலப்பிரபுத்துவதிலிருந்து சமூகவுடைமைட்கு அதுவும் மக்களுடன் இணைந்து போராடாது தாவ முற்படும் புத்தக பூச்சிகளின் , கற்பனை வாதிகளின் ஒரு சிறிய உதாரணமே இந்த மக்கள் போரரட்ட விரோத கருத்துக்கள்.

      தான் இருக்கும் சமூகத்தை பற்றி புரியாது ,தெளிவு பெறாது ,ஜதார்த்த கண்ணாடி இன்றி ஆரம்பகால சோவியத் சமூகம்,அதனை தலைமை தாங்கிய அரசு,கட்சி போலவே இந்திய சமூகமும் ,தலைமை தாங்கும் அரசுகளும் கட்சிகளும் உள்ளது என்ற கற்பனை ,கனவு கலையாமல் இருக்க வாழ்த்துக்கள்.

      அமெரிக்க பிழை ஆகவே ரசியா சரி ,ஆகவே ரசியா தொழில் நுட்பத்துடன் கூடிய அணு உலை சரி,இதனால் அணு உலையை எதிர்த்து மக்கள் ,அரசு சாரா அமைப்பு தலைமையில் போராடுவது பிழையான அமெரிக்காவிற்கு சாதகமாக போய்விடும். என்பதனால் இதில் மக்கள் அரசு சாரா அமைப்பு தலைமையை ஏற்றுக்கொண்டு போராடுவதால் இந்தப் போராட்டத்தை எதிர்க்க வேண்டும் , கொச்சைப்படுத்த வேண்டும்.

      இந்த கொச்சைப்படுத்தல் சமன் பாட்டில் அல்லது இந்த தர்க்கத்தில் இந்திய அரசு ,போராடும் மக்கள், அவர்களின் வாழ்வாதாரங்கள் எங்கே போனது?

      அதற்காகத் தான் சோவியத் தொழில் நுட்பத்துடன் கூடிய அணு உலையால் “மட்டும்” மக்களிற்கு பாதிப்பு இல்லை ஆனால் அரசு சாரா அமைப்பு(NGOs) தவறாக “பீதியூட்டி” மக்களை போராட தூண்டுகிறது என்ற நிலைப்பாட்டையும், அமெரிக்காவின் அணு உலை “மட்டும் தான்” மீண்டும் ஒரு புகிசிமா விபத்திற்கு கொண்டு செல்லும் என்ற சரியான பயமுறுத்தல்(NGOகள் போலவே “பீதியூட்டி”) நிலைப்பாட்டையும் எடுத்துள்ளீர்களோ? வாழ்க.

      குறிப்பு;

      ஷோரோநோபில் (Chernobyl ) இருப்பது அமெரிக்காவில் அல்ல .

      போபால் விச வாயுக்கசிவு நடக்கும் போது இந்தியாவை அமெரிக்க அரசாளவில்லை.

      விளக்கம்;

      1.அணு உலை விபத்து அமெரிக்காவின் அணு உலைக்கு மட்டுமானதல்ல,

      2.இந்திய அரசும் மக்கள் விரோதமானது தான்.

      • pothuvudaimai seeman says:
        14 years ago

        உங்களுடன் விவாதிப்பது சற்று கடினம் தான். நான் ஒரு விசயத்தை விளக்கினால், நீங்கள் முற்றிலும் புரியாமல், தவறாக புரிந்துக்கொண்டு, நீங்களே கேள்வியும் கேட்டு, நீங்களே பதிலும் கூறி முடித்து விடுகிறீர்கள். இந்த தவறான புரிதல் எங்கிருந்து வருகிறது. சரி. இவ்வளவு பெரிய விவாதத்தில் நீங்கள் அணு சக்தி வேண்டும் என்று கூறுகிறீர்களா? அல்லது வேண்டாம் என்பது நிலைப்பாடா? இக்கேள்வி கேட்பதற்கு காரணம், என்ன விளக்கம் கூறினாலும், அதை திரித்து தனது பானியில் புரிந்துக்கொண்டு, அந்த தவறான புரிதலுக்கு தானே பதில் எழுதி கொள்கிறீர்கள். இது எப்பொழுதும் எதிரிகள் கையாளும் சூழ்ச்சி. முதலில் மூலத்தை குழப்பிவிட்டால், பின்னர் பதில் சொல்வது எளிது.இதை தெரிந்தே செய்வதுபோல் தோன்றுகிறது. இதைக் குறிப்பிடுவதற்கு கீழ்வருபவை ஆதரமாக கொள்வோம்!!

        //ரஷ்ய அணு உலை தொழில் நுட்பம் மூலம் நிருவப்படுவதால் இது நிச்சயமாக அரசுடமையாக்கப்படும்.//
        கூடங்குள அணு உலை இரு அரசுகளுக்கான ஒப்பந்தம். இதில் தனியார் முதலீடு கிடையாது. இது அரசு ஏற்று நடத்துகிறது. இதில் ஏதாவது சந்தேகம் உண்டா?

        அடுத்த பதிலளிப்பதற்கு முன்னர், அணு சக்தி பற்றிய உங்கள் நிலைப்பாட்டை வைக்காமல், நீங்கள் பேசினால், விவாதத்தில் நீங்கள் எதிரியாகவே நான் பதிலுரைப்பேன். இதுவரை ஜன நாயக சக்தியாகவே காண்கிறேன்.

        //இன்று வரை ரசியா சார்பு , அமெரிக்க எதிர்ப்பு என்ற சிறிய ,குறுகிய ,பழைமைவாத சிந்தனைக்குள் பலர் இருக்கிறார்கள்//
        கூடங்குள அணு உலை ஆஸ்திரேலியாவுடனோ அல்லது ஆப்பிரிக்க நாட்டுடன் இணைந்து செய்திருந்தாலும், இந்த நிலைப்பாட்டையே சொல்லியிருப்பேன். இதிலிருந்து மேற்கூறிய உங்கள் குற்றச்சாட்டு உங்களுக்குத்தன் பொருந்தும் என்பது புரியும் என்று நினைக்கிறேன். தனியார் மூலதனங்களை அணு சக்தியில் வருவதை அனுமதியோம் என்றுதான் கூறினேன். அமெரிக்க எந்த நாட்டிலாவது ஏகாதிபத்திய நிறுவனங்களின் முதலீடு இல்லாமல் சென்றுள்ளதா?

        //அதற்காகத் தான் சோவியத் தொழில் நுட்பத்துடன் கூடிய அணு உலையால் “மட்டும்” மக்களிற்கு பாதிப்பு இல்லை ஆனால் அரசு சாரா அமைப்பு(NGOs) தவறாக “பீதியூட்டி” மக்களை போராட தூண்டுகிறது என்ற நிலைப்பாட்டையும், அமெரிக்காவின் அணு உலை “மட்டும் தான்” மீண்டும் ஒரு புகிசிமா விபத்திற்கு கொண்டு செல்லும்//
        நான் எங்கேயும் இதை சோவிய தொழில் நுட்பம் என்று குறிப்பிடவே இல்லை. உற்பத்தி சக்தி தனியாரிடம் இருப்பதால்தான் பல்வேறு விபத்துக்களும், மக்கள் நலனற்ற கொள்கை கடைப்பிடிப்பும் தொடர்கிறது என்பதை முருகன் ஏற்கெனவே நிறைய விளக்கிவிட்டார் என்பதாலேயே, நான் சுருக்கமாக தனியாரின் கீழ் அணு சக்தி வந்தால், தன் லாப வெறிக்காக அனைத்துவிதமான பாதுகாப்பு அம்சங்களிலும் கைகழுவி விடுகின்றனர் என்று கூறினேன். அதுதான் புகுசிமாவிலும் நடந்த்தது. 

        இப்படி சிறு பிள்ளையை உட்காரவைத்து தலையில் குட்டி கேள்வி பதிலாக, அனைத்தையும் எழுதி தருவது சற்று கடினமான உள்ளது. எனக்கு பதில் கொடுத்து புரட்சியை நாளை நடத்திவிட மாட்டீர்கள். எழுதியதை சற்று நிதானமாக படித்து, அதில் உள்ள கருத்துக்களை சரியாக புரிந்துக்கொண்டு பதில் எழுதுங்கள். நிதானம் தவறினால், சரியானவற்றை முழுமையாக எடுத்துக்கொள்ள முடியாது.

  19. thevan says:
    14 years ago

    மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைக்காதீர்கள்.

    NGO கள் தவறானவை தான் இது நாம் இருவரும் ஒத்துக்கொண்ட ஒரு கருத்து.

    தவறான தலைமையின் (ங்கோ கள்) கீழ் (மதம் போல்) திரண்டுள்ளதை இதுவும் நாம் இருவரும் ஒத்துக்கொண்ட ஒரு கருத்து.

    உற்பத்தி சக்தி தேவை தான் இதுவும் ஒத்துக்கொண்ட ஒரு கருத்து தான்.
    மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைக்காதீர்கள். போதும் .உங்கள் திசை திருப்பல்கள், போதும் உங்கள் மக்கள விரோத முகமூடியை காப்பாற்றும் புலம்பல்கள் . தவறுகளை திருத்திக்கொள்ள அனைவரும் தயார். எந்தத் தவறு என்று சுட்டிக்காட்டுங்கள்///

    1..நாம் போரடுவது ஒன்றே வழி. சிறிதாயினும் சரியான வழியே சிறப்பானது என்ற உங்கள் கூற்று சரியானதே.அதன் படி தலைமை கொடுக்காதாது புரட்சிகர கட்சிகள் என்று கூறிக்கொள்வோரின் தவறு.
    இல்லையா?
    2..புரட்சிகர கட்சிகளின் பலம் கூடும் வரை மக்கள் போராடக் கூடாது என்று கூறுவது தவறு.இல்லையா?

    3.இந்த தலைமை வெற்றிடத்தில் மக்களின் முதன்மை விரோத சக்திகள் , அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ரசிய ஏகாதிபத்திய அடிவருடிகளை தலைமை தாங்க விட்டது மக்கள் தவறு. என்று கூறுவது தவறு இல்லையா?

    4.பிரச்சினைகள் ,உத்திரவாதப் படுத்துதல்கள்,ஒழுங்குபடுத்தல்கள்,உலையினை பற்றிய தெளிவுப்படுத்தல்கள் எதுவுமே இதுவரை முன்னெடுக்கப் படவில்லை என்று தெரிந்தும் அதற்கு எதிராக தம் பலவீனம் காரணமாக தலைமை கொடுத்து போராடாமல்,சரி தலைமை தான் குடுக்க பலம் இல்லை எனில் தன்னியல்பாகவே போராடிக்கொண்டிருந்த மக்களுடன் இணைந்து போராடியிருக்கலாமே , மக்களை வழிகாட்டியிருக்கலாமே. என்னுமொரு தவறு இது இல்லையா?. 5.அதை விடுத்தது தம் பலவீனத்தை,தவறுகளை மூடி மறைக்க மக்கள் போராட்டங்களின் மீது சேறு பூசுவோர் புரட்சிகர கட்சிகளை, ஜனநாயக சக்திகளை, ஜனநாயக இயக்கங்களை சார்ந்தவர்களாக இருக்கவே முடியாது.இவ்வாறு மக்கள் போராட்டங்களின் மீது சேறு பூசுவோர் ஒரு திரிபுவாதி, மக்களின் முதன்மை விரோத சக்தி ஆக தான் இருக்க முடியும்.இருப்பது நீங்கள் விடும் மகா தவறு.இல்லையா? PLEASE
    NO MORE திசை திருப்பல்கள், மக்கள விரோத முகமூடியை காப்பாற்றும் புலம்பல்கள்.

    //// அவர்கள் அவர்களின் வாழ்வாதாரங்களுக்காக மட்டுமே போராட்டத்தினை தொடங்கினார்கள். அதாவது இழப்பீடு, பாதுகாப்பு, அவர்களுக்கான கட்டுமான வசதிகள் குறித்து மட்டுமே போராடத் தலைப்பட்டார்கள்./// தன்னியல்பாகவே போராடிக்கொண்டிருந்த மக்களுடன் இணைந்து போராடியிருக்கலாமே , மக்களை வழிகாட்டியிருக்கலாமே. என்னுமொரு தவறு இது இல்லையா?.

    • thevan says:
      14 years ago

      இந்த தவறான புரிதல் எங்கிருந்து வருகிறது. /// இந்த விவாதம் பல தலைப்புகளையும் உபதலைப்புகளையும் உள்ளடகியுள்ளது .

      தலைப்பு 1: கூடன்குள மக்கள் போராட்டம் : தலைமை யார் ? எதற்காக?எவ்வாறு?….இன்னும் பல உபதலைப்புகள்.

      மக்கள் போராட்டம் பற்றி எனது கருத்து,நிலைப்பாடுகளை , மற்றும் மாற்று கேள்விகளையும் தெளிவாகவே முன் வைத்துள்ளேன். இதில் ஒரு பொதுக்கருத்திட்கு அல்லது என்னுடன் முரண்பட்டு முருகனோ நீங்களோ இது வரை வரவில்லை. இது ஒரு புறமிருக்கட்டும் .

      தலைப்பு 2:.அணு உலை :உப தலைப்புகள் ; அணு உலை தேவையா ?அணு உலையின் நோக்கம் ,யாரால் ?யாருக்காக? அணு உலையால் வரக்கூடிய நன்மை .தீமைகள்.அவற்றின் அளவுகள். இன்னும் பல உள்ளன .

      இவற்றில் என்னுடைய ஆதங்கமான 20 வருடமாக போராடும் மக்களின் போராட்டத்தை ஆதரிக்காது, சேர்ந்து போராடாது, ஒட்டு மொத்த போராட்டத்தை கொச்சை படுத்துவதற்கு எதிராக தேவை ஆன அளவு அணு உலை பற்றி எனது கருத்து,நிலைப்பாடுகளை , மற்றும் மாற்று கேள்விகளையும் தெளிவாகவே முன் வைத்துள்ளேன். இருந்தும் உங்கள் கேள்விகளிற்கு பதில் :

      கூடங்குள அணு உலை இரு அரசுகளுக்கான ஒப்பந்தம். இதில் தனியார் முதலீடு கிடையாது. இது அரசு ஏற்று நடத்துகிறது. இதில் ஏதாவது சந்தேகம் உண்டா? // எதிர் பார்த்த கேள்வி தான் .பதில் ஏற்கனவே சொல்லியுமுள்ளேன் .

      இரு அரசுகளுக்கான ஒப்பந்தம்.ஆகவே இது மக்களிட்கானது என்று கூறுகிறீர்களா ?அப்படியாயின் அமெரிக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டால் மட்டும் தான் மக்களிற்கு விரோதமானதா? அமெரிக்காவுடன் போட்டால் என்ன, ரசியவுடன் இந்திய அரசு இரு நாட்டு ஒப்பந்தம் போட்டாலும் என்ன அது இந்திய அரசிற்கு,அதிகார மையத்திற்கு , அதன் பின் நிற்கும் வர்க்கத்திற்கு மட்டும் உரியது .இந்திய மக்களிட்குரியதல்ல.

      சுருக்கமாக இந்திய அரசும் மக்கள் விரோதமானது தான்.
      // அணு சக்தி வேண்டும் என்று கூறுகிறீர்களா? அல்லது வேண்டாம் என்பது நிலைப்பாடா? // அணு உலை பற்றி எனது கருத்து,நிலைப்பாடுகளை , மற்றும் மாற்று கேள்விகளையும் தெளிவாகவே முன் வைத்துள்ளேன். இருந்தும் உங்கள் கேள்விற்கு பதில் உற்பத்தி சக்தி தேவை ,மாற்றுக்கருத்து இருக்கமுடியாயது , மக்களின் பாதுகாப்பு ,அடிப்படை ஜனநாயக உரிமைகள்,அடிப்படை சமூக வாழ்வாதரங்கள் போன்றவற்றை முன்னிறுத்திய அரசின் உற்பத்தி சக்தி முறையை வரவேற்போம். //தனியார் மூலதனங்களை அணு சக்தியில் வருவதை அனுமதியோம் என்றுதான் கூறினேன்./// நானும் கை கோர்க்கிறேன் உங்களுடன் . இதே கைகள் இன்று இருக்கும் முதலாளித்துவ அல்லது அதற்கு முந்தைய உற்பத்தி உறவுகளைக் கொண்டுள்ள சமூக அமைப்பை முதலில் மாற்றுவோம்.மக்களின் பாதுகாப்பு ,அடிப்படை ஜனநாயக உரிமைகள்,அடிப்படை சமூக வாழ்வாதரங்கள் போன்றவற்றை முன்னிறுத்திய அரசின் உற்பத்தி சக்தி முறையை வரவேற்போம்.

      அதாவது சமூக படிமுறை வளர்சிக்கு மட்டும் நானும் கை கோர்க்கிறேன் உங்களுடன் .
      அமெரிக்க எந்த நாட்டிலாவது ஏகாதிபத்திய நிறுவனங்களின் முதலீடு இல்லாமல் சென்றுள்ளதா? /// புரியலை.ஏன் என்னிடம் இந்த கேள்வி என்று . அமெரிக்கா சரியென்று நான் எந்த இடத்திலும் கூறவில்லை , நான் கூற முற்படுவது அமெரிக்க தவறு ஆகவே அமெரிக்கா எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் இருக்கும் அரசோ தனிநபரோ சரியென்ற முடிவு தவறு. //// தனியாரிடம் இருப்பதால்தான், மக்கள் நலனற்ற கொள்கை கடைப்பிடிப்பும் தொடர்கிறது என்பதை முருகன் ஏற்கெனவே நிறைய விளக்கிவிட்டார் /// தான் இருக்கும் சமூகத்தை பற்றி புரியாது ,தெளிவு பெறாது ,ஜதார்த்த கண்ணாடி இன்றி ஆரம்பகால சோவியத் சமூகம்,அதனை தலைமை தாங்கிய அரசு,கட்சி போலவே இந்திய சமூகமும் ,தலைமை தாங்கும் அரசுகளும் கட்சிகளும் உள்ளது என்ற கற்பனை ,கனவு கலையாமல் இருக்க வாழ்த்துக்கள். இந்திய அரசே தனியார் கொம்பனி தான் .வாரிசு அரசியல்(இன்னும் மன்னர் ஆட்சி) ,ஊழல் நிரம்பிய அதிகாரிகள்(மக்கள் நலனை மீறிய நிர்வாக சீர்கேடு) , மாற்றுத் அரசியல் தலைமை தெரிவிற்கு இடமே இல்லை(பிற்போக்குவாத அதிகார அடிவருடிகளான முகமூடி போட்ட மக்கள் விரோதிகள்) , போராட தயாராகும் மக்களை திரிபு படுத்த பல கட்சிகள் ,தனிநபர்களை(திரிபுவாதிகள்) பலமாக கொண்ட இந்திய அரசு என்பதை நீங்கள் மக்கள் அரசு என்று மார்தட்டினால் … என்னால் பரிதாபப்படத்தான் முடியும். வாழ்க இந்திய மக்களின் நியாய பூர்வமான போராட்டம்.வாழ்க, வெல்க நியாய பூர்வமான கூடன்குள போராட்டம்

  20. thevan says:
    14 years ago

    அடுத்த பதிலளிப்பதற்கு முன்னர், அணு சக்தி பற்றிய உங்கள் நிலைப்பாட்டை வைக்காமல், நீங்கள் பேசினால், விவாதத்தில் நீங்கள் எதிரியாகவே நான் பதிலுரைப்பேன். இதுவரை ஜன நாயக சக்தியாகவே காண்கிறேன்///உங்களைத்தான் என் முதன்மை எதிரியாக நான் முகம் கொடுக்க விரும்புகிறேன்,மகிழ்ச்சி அடைகிறேன் . ஏனெனில் நீங்கள் ,உங்களைப் போன்றவர்கள் தான் மக்களின் முதன்மை எதிரிகள் என்பதனால். உங்களைப் போன்றவர்களின் முகமூடியை கிழிப்பதில் கிடைக்கும் வெற்றி தான் மக்களின் வெற்றிக்கு முதல் படி.

    • pothuvudaimai seeman says:
      14 years ago

      சொல்வதை விளங்கிக்கொள்ளவே கேள்வி பதில் போட்டு பிரித்து பிரித்து சொல்ல வேண்டியுள்ளது. இதில் வேறு முகமூடியை கிழிக்கிறேன் என்று எழுதுகிறீர்கள். என்ன விளங்கியது. அமெரிக்க வைத்தால் தனியார்மயம், ரசிய வைத்தால் சோசலிசமா? என்ற கேள்வி வேறு. இது விதாண்டவாதம். இந்திய அரசு தரகு முதலாளித்துவ அரசுதான். சீரழிந்த அரசுதான். கூடன்குளம் விசயத்தில் குறைந்தபட்சம் நீதிமன்றங்களும், அறிஞர்களும், ஜன நாயகவாதிகளும் கேள்வி எழுப்பும் உரிமை பெற்றுள்ளோம். நீதிமன்றம் கண்டிக்கிறது. (அதனால் நீதிமன்றம் மக்களுக்கானது என்ற பொருளல்ல.). இதே பன்னாட்டு நிறுவனங்கள் அணுசக்தியில் கடை விரித்தால், இதெல்லாம் நடக்க வாய்ப்புள்ளதா.. இது குறைந்தபட்ச உத்திரவாதம். உற்பத்தி சக்தியை வளர்த்துக்கொண்டே புரட்சியில் முன்னேறுவது. உற்பத்தி சக்தி வளர்ச்சி, புரட்சிக்கு சேவை செய்யும் என்பதே மார்க்சியம்.

      //இவற்றில் என்னுடைய ஆதங்கமான 20 வருடமாக போராடும் மக்களின் போராட்டத்தை ஆதரிக்காது, சேர்ந்து போராடாது, ஒட்டு மொத்த போராட்டத்தை கொச்சை படுத்துவதற்கு //

      கடந்த 70 வருடங்களாக அரசு சாரா அமைப்பு, இப்போராட்டங்களை மக்களை சேர்த்து வருகிறார்கள். கூடங்குளத்தில் 20 வருடங்களாக மக்கள் போராடவே இல்லை. புகுசிமா விபத்திற்கு பின்தான் பலம் பெறுகிறது. 20 வருடங்களாக தொண்டு நிறுவனங்கள்தான் போராடியதே தவிர, புரட்சிகர சக்திகளோ, மக்களோ போராடவே இல்லை. புரட்சிகர சக்திகளும் போராட முடியாது. நாம் உலக முழுக்க உற்பத்தி உறவுகளை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்தும், போராடியும் வருகிறோம். தனியாக அணு உலைக்கு என்று எங்கும் போராட முடியாது. இப்படி பகுதி பகுதியாக எல்லா விசயத்திற்கும் போராட இயலாது. வருடத்திற்கு ஓரிரண்டு பெரிய விசயத்தில், புரட்சிகர சக்திகள் தனது நிலைப்பாட்டை வைத்து, அனைத்தும் தழுவி அம்பலப்படுத்தி போராட்டம் நடத்துகிறது. ஏன் மக்கள் புரட்சிகர சக்திகளை தலைமை ஏற்க மறுக்கின்றனர். இது மக்களின் பொறுப்பற்றதனம் இல்லையா… உண்மையில் மக்களும் புரட்சிகர தலைமையை ஏற்கும் மன நிலைக்கு இன்னும் வரவில்லை. புரட்சிகர சக்திகள் ஏதோ அந்த மக்களை ஒன்று திரட்டி கடலை மிட்டாய் ஏன் வாங்கித் தரவில்லை என்பதுப்போல் கேள்வி கேட்கிறீர்கள். தவறான தலைமையின் பின் செல்வதால் இழப்பும், சேதாரமும் யாருக்கு அதிகம். மக்கள்தான் தனது தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள்தான் போராடவேண்டும். புரட்சிகர சக்திகள் தலைமையைத்தான் (கருத்து ரீதியாக) தர இயலும். இப்படி இருக்க மக்கள் போராடக் கூடாதா என்றால் போராடலாம், ஆனால் ஜனநாயக சக்திகளுடன் ஒன்றுபட்டு, வாழ் உரிமைக்கான, ஜன நாயகத்திற்கான போராட்டமாக இருக்க வேண்டும்.  அப்படி இல்லாதபோது ”மக்கள் போராட்டம்” என்று கூறுவதே அபத்தம். அது வெல்லட்டும் என்று கூறுவது அதைவிட அபத்தம். இழப்பு நம் தமிழ் மக்களுக்கே!! இங்கே வெறுமனே உங்களோடு விவாதித்துக் கொண்டு மட்டும் நாங்கள் இல்லை. கள வேலையிலும் உள்ளோம். 

      மக்களும் மன ரீதியாக தயாராக வேண்டும். அதுவரையில் அப்போராட்டத்தில் உள்ள பாரதூரமான விளைவுகள் பற்றியும், அதில் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறோம். 

      நாம் தலைமை ஏற்காததாலேயே அது மக்கள் போராட்டம் இல்லை என்று சொல்லவில்லை. அது தோற்க வேண்டும் என்று கூறவில்லை. இப்போது அது அணு உலையை மூடு என்ற ஒற்றை கோரிக்கையாக அம்மக்களிடம் பதிய வைக்கப்பட்டுள்ளதால், அது ”மக்கள் போராட்டமாக” இல்லை என்று கூறுகிறோம். போராட்டத்தின் முழக்கம் மாற்றப்பட்டால், அது மக்கள் போராட்டம்தானே!!! பின்னர் ஏன் அதை நாம் தவறாக கூறப்போகிறோம்!! மிக குறுகிய கண்ணோட்டத்துடன் அனைத்தையும் பார்க்க வேண்டாம். நாம் கற்றுக்குட்டிகள் அல்ல. முன்னணிகளாக இருக்க வேண்டும் என்றால் அனைத்தையும் தழுவி சிந்திக்க வேண்டும். ஒரு போராட்டத்தின் வெற்றியும்/தோல்வியும் அடுத்த போராட்டதின் மீது தாக்கம் செலுத்தும் என்பதை நாம் அறிவோம். அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டே இந்த விமர்சனங்களை நான் வைக்கிறேன்.

  21. thevan says:
    14 years ago

    pothuvudaimai seeman///பொதுஉடைமை சீமான் // பொதுஉடைமை சீமான் பெயரை மாத்தவும் முதலில், சீமான் என்பதுவே ஒரு அடிமை தேவை இந்த பெயரிற்கு .அதைவிட பொதுஉடைமை என்பது இன்று இருக்கும் இந்திய சமூக அமைப்பிலிருந்து அதாவது மன்னராட்சிக்கு சற்று குறைவான வாரிசு ஆட்சியிலிருந்து பொதுஉடைமை சமூக அமைப்பிற்கு தாவ கனவு காணும் ஒரு கற்பனைப் பெயர் இது , இந்த பெயரிட்குரிய சிந்தனை வருவதும் உம் தவறல்ல , பெயரின் தவறு .ஆகவே பெயரை மாத்தவும்.

  22. Dr. Sei S. Sriskanda says:
    14 years ago

    This is indeed snowballing into a big issue. Outside India is anybody else interested in this other than those of us here in the North and East of Sri Lanka – Shri Lanka?

  23. thevan says:
    14 years ago

    பன்னாட்டு நிறுவனங்கள் அணுசக்தியில் கடை விரித்தால்//// மக்கள் விரோத பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்(vs) மக்கள் விரோத(சீரழிந்த அரசு) அரசு ;இது நமது விவாதப் பொருள் அல்ல.நான் பன்னாட்டு நிறுவனங்கள் தான் சிறந்தது என்று கூறவேயில்லை . இரண்டுமே மக்களிற்கு விரோதமானவை . நாம் இருவரும் இதில் உடன் படுகிறோம் . இத்துடன் மக்கள் விரோத அரசு எதிர்(VS) மக்கள் விரோத பன்னாட்டு நிறுவனங்கள்,மக்கள் விரோத NGOs,மக்கள் விரோத அமெரிக்கா, ரசியா : விவாதத்தை நிறுத்துவோம்.

    மக்கள் நலனை முன்னிறுத்துவோம் விவாதப் பொருள் ;1. அணு உலை :

    மக்கள் விரோத இந்தியஅரசின் கையில் உள்ள அணு உலை மக்களுடையதா ,மக்களிட்கானதா,மக்களின் பாதுகாப்பை ,நலனை ….முன்னிறுத்தியதா ? இல்லை என்பது என் நிலைப்பாடு.

    விவாதப் பொருள் ;2. இந்த அணு உலை (மட்டும் அல்ல அரசைக்கூட) மக்களுடையதாக்க ,மக்களிட்கானதாக்க,மக்களின் பாதுகாப்பை ,நலனை ….முன்னிறுத்தியதாக்க மக்கள் போராட வேண்டும் .போராடுகிறார்கள் .மக்களுடன் இணைந்து முற்போக்கு ஜனநாயக மக்கள் நலனில் அக்கறையுள்ள சக்திகள் அவர்களை சரியான திசையில் நகர்த்த வேண்டும். இது என் நிலைப்பாடு.

    இதில் மக்கள் போராட்டம் பற்றிய உங்கள் நிலைப்பாடு ,வாதத்தின் இலக்கு தெளிவாக தெரியவில்லை .இதனால் உங்கள் மக்கள் போராட்டம் பற்றிய வாதங்கள் , நீங்கள் மக்கள் விரோத அமெரிக்கா,மக்கள் விரோத பன்னாட்டு நிறுவனங்கள்,NGOsகள் VS மக்கள் விரோத அரசு,போன்ற மக்கள் விரோத காரணிகளை ஒப்பிட்டு பார்க்கும் வாதத்திற்குள் ,முடக்கி மக்களுடன் இணைய ,இணைந்து போராட மறுப்பதை நியாயப்படுத்துவது அல்லது விவாதத்தை திசை திருப்புவது
    போல் தெரிகிறது.

    அத்துடன் உங்கள் அணு உலை பற்றிய வாதத்தின் கருத்து :

    மக்கள் விரோத இந்தியஅரசின் கையில் உள்ள அணு உலை மக்களுடையதா ,மக்களிட்கானதா,மக்களின் பாதுகாப்பை ,நலனை ….முன்னிறுத்தியதா

    என்ற கேள்விகளையும் மீறி ,பின்தள்ளி இந்திய நாட்டிற்கு அணு உலை சக்தி தேவை .இந்த உற்பத்தி சக்தியின் உதவியுடன் “மட்டும்” தான் இன்று இருக்கும் இந்திய சமூக அமைப்பை,அரசை மக்கள் நலன் சார்ந்ததாக மாற்ற முடியும் என்பது போலுள்ளது .

    //உற்பத்தி சக்தியை வளர்த்துக்கொண்டே புரட்சியில் முன்னேறுவது. உற்பத்தி சக்தி வளர்ச்சி, புரட்சிக்கு சேவை செய்யும் என்பதே மார்க்சியம்.//

    சரி ,

    நீங்கள் விதண்டவதமாக எடுத்தாலும் பரவாயில்லை :உற்பத்தி சக்தி வளர்ச்சி “மட்டும்” புரட்சிக்கு சேவை செய்யாது.இது தான் என் ஆதங்கத்தின் அடிப்படையே . மீண்டும் என் ஆதங்கத்தின் அடிப்படை : இந்த அணு உலை (மட்டும் அல்ல அரசைக்கூட) மக்களுடையதாக்க ,மக்களிட்கானதாக்க,மக்களின் பாதுகாப்பை ,நலனை ….முன்னிறுத்தியதாக்க மக்கள் போராட வேண்டும் .போராடுகிறார்கள் .மக்களுடன் இணைந்து முற்போக்கு ஜனநாயக மக்கள் நலனில் அக்கறையுள்ள சக்திகள் அவர்களை சரியான திசையில் நகர்த்த வேண்டும்.

    நீங்கள் போராடவில்லை, போததற்கு எதிராகவும் இருப்பதுவே என் கவலை .ஆதங்கத்தின் அடிப்படை.

  24. முருகன் says:
    14 years ago

    மேற்கூறிய விவாதத்தில் என் கருத்தினை தொடர்ந்து ஒரு விவாதம் எழுந்துள்ளது. 

    முதலில் பெயர் மாற்றம் பற்றி. இதில் என் பெயர் ஒரு வகையில் கற்பனைக் கடவுளை பிரதிபலிப்பது. என் பெயர் மட்டுமல்ல தேவன் அவர்கள் உங்கள் பெயரும் கூட. ஆகையால் இது போன்ற விவாதத்தை பொதுத்தளத்தில் நிறுத்தலாம்.

    அடுத்து //மக்கள் விரோத இந்தியஅரசின் கையில் உள்ள அணு உலை மக்களுடையதா ,மக்களிட்கானதா,மக்களின் பாதுகாப்பை ,நலனை ….முன்னிறுத்தியதா//
    கண்டிப்பாக சோசலிச அரசின் கீழ் மட்டும்தான் மக்களுடையதாக இருக்க முடியும். அது தவிர எந்த அரசின் கீழும் மக்களுடையதாக இருக்காது. சரி அதனால் அதை தகர்ந்து எறிந்துவிடலாமா? அல்லது வராமல் தடுக்கலாமா? நிச்சயமாக மக்கள் நலனை முன்னிறுத்தவில்லை. அது உற்பத்தியில் தலைமைப் பாத்திரம் வகிக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் (அது தரகு முதலாளித்துவமாக இருக்கலாம், ஏகாதிபத்திய முதலாளித்துவமாக இருக்கலாம் அல்லது சுதேசிய முதலாளித்துவமாகக் கூட இருக்கலாம்) நலனை முன்னிறுத்துகிறது என்பது தான் நூற்றுக்கு நூறு உண்மை. எல்லா உற்பத்தி சக்திகளும் அங்கு எந்த ஆளும் வர்க்கம் கோலோச்சுகிறதோ அவர்களுக்கு சொந்தமானதே. அதற்காக அதை தகர்தெரிவோமா? நிர்மூலமாக்கலாமா? 

    அணை பற்றிய விசயத்திற்கு வருவோம், இங்கு நிலம் எப்படி தனி நிலப்பிரபுக்களிடம் இருக்கிறது, மடத்தின் சொத்தாக நிலம் இருக்கிறது. இல்லையென்றால் தற்போது பன்னாட்டு, தரகுமுதலாளித்துவத்தின் கையில் பன்னை நிலமாக இருக்கிறது. இந்த நிலங்கள்தான் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் குவிந்திருக்கிற நிலம். மக்கள் கையில் நடுத்தர விவசாயியாக, பணக்கார விவசாயியாக இருப்பவர்கள் ஒரு பகுதியினர். இதையெல்லாம் தாண்டி இதில் உழுதுகொண்டிருப்பவர்கள் தான் நிலமில்லாத விவசாயிகள் 70 சதவீதம் பேர். தற்போது அணைகள் திறக்கப்பட்டாலோ, அல்லது நதி நீர்கள் இந்தியா முழுவதும் இணைக்கப்பட்டாலோ, அல்லது புதிய அணை கட்டினாலோ அதில் எல்லாம் பலன் அடையப் போவது கண்டிப்பாக மேற்கண்ட நிலப்பிரபுக்களே, பன்னாட்டு நிறுவனங்களே. அவர்களின் நலனை ஒட்டியே எல்லா காலங்களிலும் நதி நீர் ஆதரங்கள் ஒழுங்குபடுத்தப் படுகின்றன. ஆனால் அங்கு வாழும் மக்கள் அணை கட்டினால் வெளியேற்றப்படுகிறார்கள், நதி நீர்கள் இந்தியா முழுக்க இணைக்க திட்டமிட்டால் அங்கு வெளியேற்றப்படுபவர்களும் அதே மக்கள் தான். அதற்காக இதையெல்லாம் தடுத்து தகர்ந்தெரிந்துவிடலாமா, அல்லது கரு நிலையிலேயே சிதைத்துவிடலாமா. இதில் எந்த பாதுகாப்பும் இல்லாமல், எந்த வாழ்வாதாரமும் இல்லாமல் வெளியேற்றப் படப்போகிறார்கள் மக்கள். அப்போது அந்த மக்களுக்கு மாற்று ஏற்பாடு கேட்டு போராடப் போகிறோமா, அல்லது பாதுகாப்பு, உயிரிழப்பு என்று கேரள கூறுவது போல் அணை உடைந்து இத்தனை லட்சம் பேர் சாவப் போகிறார்கள் என்று பீதி கிளப்பி முடக்கவது போல் முடக்கப் போகிறோமா. என்னை கேட்டால் இந்தியா முழுவதும் புதிய அணையை கட்டக் கோருவதும், நதி நீர்கள் இணைக்கக் கோருவதும், அதே நேரத்தில் அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களை வழங்கப் போராடுவதும் தேவை. ஆனால் எப்படி இருந்தாலும் அதை அனுபவிக்கப் போகிறவர்கள் ஆளும் வர்க்கங்களே. அவர்களுக்காகவே அதை திட்டமிடப்போகிறார்கள். 

    இப்படி மக்களின் போராட்டம் என்பது அவர்களின் வாழ்வாதரத்திற்கு, அணு உலை கட்டுவது என்பது உற்பத்தி சக்தியின் வளர்ச்சிக்கு. இன்று அது ஆளும் வர்க்கத்திற்காக இருந்தாலும் அது கண்டிப்பாக மக்களை தனிமைப் படுத்திவிட்டு அல்ல. 

    முக்கியமாக அழுத்தமாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, இப்படி வளரும் உற்பத்தி சக்தியால்தான் உற்பத்தி உறவை தூக்கியெறியவேண்டிய நிலையை இன்னும் கூர்மையாக்கும். இது தான் ஒரு பாட்டாளிவர்க்கத் தலைமையை உண்மையிலேயே கொண்டுவரும்.

    மார்க்சின் வார்த்தையில் சொல்லவேண்டுமானல் “எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை; புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை.” (அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை – முன்னுரை; பக்கம் 11: மார்க்ஸ்)

    • thevan says:
      14 years ago

      இதையே தான் பொதுவுடைமை சீமானும் சுருக்கமாக சொன்னார் “உற்பத்தி சக்தியை வளர்த்துக்கொண்டே புரட்சியில் முன்னேறுவது. உற்பத்தி சக்தி வளர்ச்சி, புரட்சிக்கு சேவை செய்யும் என்பதே மார்க்சியம்.”
      ஆகவே

      உற்பத்தி சக்திக்காக என்ன விலையும் மக்கள் கொடுத்தே ஆகவேண்டும் என்று கூறுகிறீர்களே இது தான் திரிபு வாதம்

      .

      முகமூடியை கிழிப்பதில் கிடைக்கும் வெற்றி.

  25. நாவலன் says:
    14 years ago

    முருகன்,
    மார்க்சை மேற்கோள் காட்டி உற்பத்தி சக்திகளைப் பற்றிப் பேசுகின்ற காலத்தைக் கடந்து மாவோவின் புதிய ஜனநாயகப் புரட்சி என்று நீண்டதூரம் வந்தாயிற்று.
    உற்பத்தி என்பது முழுமையாக ஏகாதிபத்தியங்களால் அவர்களது தேவைக்கு ஏற்பக் கையாளப்படுகிறது. இது சிக்கலானது எனினும் நான்கு அடுக்குகளைக் கொண்டதாகக் காணப்படுகிறது.
    1. திட்டமிடல்
    2. சந்தைப்படுத்தல்
    3. அடிப்படை உற்பத்தி
    4. நிலையற்ற தொடர்பற்ற உற்பத்தி.
    இவற்றிற்கு பல நேரடி உதாரணங்களை உங்களுக்குத் தரலாம்/
    கணணி குறித்த் உற்பத்தி சாதனங்களையே எடுத்துக்கொள்ளுங்கள்.
    லினெக்ஸ் என்ற கணனியை இயக்கும் மென்பொருளும், மைக்ரோ சொப்ட் என்ற இன்னொன்றும் இன்று பொதுவாகப் பிரபலமானவை.
    மைக்ரோ சொப்ட் மிகவும் பலவீனமான சில வருடங்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியற்று மாறும் தன்மை கொண்ட மென்பொருள். இலகுவில் பழுதடையும் தன்மைகொண்ட வைரஸ்களால் தாக்கப்படும் தன்மை கொண்டது. மைக்கோசொப்ட் உலகத்தைக் கட்டுப்படுத்தும் பல்தேசிய நிறுவனம். அதனை அடிப்படையாக கொண்ட பல பல்தேசிய நிறுவனங்களும் அமரிக்காவில் உண்டு. சைமன் ரெக், சோபோஸ், கொம்பியுட்டர் அசோசியேட், போன்ற பல் நூறு நிறுவனங்கள். கணணி தயாரிக்கும் போது கூட மைக்ரோசொப்டின் மென்பொருள் இயக்கிக்கு அனுமதி பெற்றே தயாரிக்கின்றனர்.
    மைக்ரோ சொப்ட் உலகை ஆக்கிரமிக்கக் காரணம் அமரிக்க ஏகபோகம்., அதனைச் சார்ந்து இயங்கும் பல்தேசிய நிறுவனங்கள், பணம் மூலதனம் அனைத்தும் தான்.
    மறுபுறத்தில் லைனக்ஸ் தன்னார்வ நிறுவனங்களால் இயக்கப்படுகிறது. வங்களில் இயங்கும் பண வழங்கிகள், புகையிரத்ச் சேவை, போன்ற நீங்கள் நாளாந்தம் காணு,ம் அனைத்துமே லைனக்ஸ் வகையான மென்பொருட்களிலேயே இயங்குகின்றன. அதனை மூலதனச் சந்தைக்கு வரவிடாமல் தடுக்கும் ஏகாதிபத்தியங்கள் தமது தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
    லைனக்ஸ் இற்குப் பணம் வழங்கும் பிரதான நிறுவனங்களில் இன்டெல் உம் ஒன்று. சாதாரணமாக நீங்கள் வீட்டில் பாவிக்கும் கணனியில் கூட பி.எக்ஸ்.ஈ என்ற அடிப்படையான இயக்கி உங்களுக்குத் தெரியாமல் லைனெக்சிலேயே இயங்குகிறது.
    இனி, லைனெக்ஸ் சாமான்யர்கள் பாவிக்கும் நிலை ஏற்பட்டிருக்குமானால், இந்தியா போன்ற நாடுகள் மைக்ரோ சொப்டில் தங்கியிர்யிருக்க வேண்டிய தேவை இல்லை. அங்கே உற்பத்தி சக்திகள் இயல்பாக வளர்ந்திருக்கும். செக்க்யுரிட்டி நிறுவனங்கள் தேவை இல்லை. உலகம் தொழில் நுட்பத்தின் அடுத்த சந்ததிக்கு இலகுவாகவே சென்றிருக்கும்.
    இந்தியாவிலேயே திட்டமிட்டிருப்பார்கள். சந்தைப்படுத்தலும் நடந்திருக்கும். உற்பத்தி சக்திகள், தேசியப் பொருளாதாரம் வளர்ந்திருக்கும். தொழில் நுட்பத்தை தமது கைகளில் வைத்திருப்பதற்காக ஏகாதிபத்தியங்கள் ஏற்படுத்திக்கொண்ட ஒழுங்கு முறைதான் இது.
    ஆக, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி திட்டமிட்டுத் தடைப்படுத்தப்படுகிறது.
    அதனை சமூகப் பொருளாதாரப் புரட்சி ஒன்றின் அடிபடையிலேயே வென்றெடுக முடியும். மாவோ புதிய ஜனநாயகப் புரட்சி என்றார். அதன் உள்ளடக்கம் இன்றைய உலக ஒழுங்கில் சற்று மாறுபட்டுள்ளது. ஆக மாவோயிச சிந்தனைகள் என்று வைத்துக்கொள்ளலாம். கணணி ஒரு உதாரணம் மட்டுமே எல்லைத் துறையிலும் எறக்குறைய இதுதான் நடைபெறுகிறது.
    இனி கூடங்குளம். அணு உலைகள் எவ்வாறு இயங்குகின்றன அதனூடாக உற்பத்தி சக்திகளை எவ்வாறு ஏகாதிபத்தியங்கள் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கின்றன என்பது பலராலும் கூறப்பட்டுள்ளது.
    தரவுகள் இல்லை ஆனால் சிறப்புப் பொருளதார மண்டலங்களில் இந்தியாவைச் சுரண்டுவதற்காக வழங்கப்படும் மலிவு விலை மின்சாரத்தை மக்களின் தேவைக்காகப் பயன்படுத்தினால் அதன் முதல் சிக்கல் தீர்க்கப்படும். அதேவேளை ஜேர்மனியையும், பெல்ஜியத்தையும் அதேபோன்ற பிற நாடுகளையும் பின்பற்றி மின்சாரத்தை மாற்று வழிகளில் உருவாக்குவதற்கான மூலதனச் செலவை பல்தேசிய நிறுவனங்களிலிருந்து அரசுகள் பெற்றுக்கொண்டால் அணு உலைகள் தேவை இல்லை. இங்கு எல்லாமே பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலின் அடிப்பையிலிருந்தே ஆரம்பிக்கிறது.

    • pothuvudaimai seeman says:
      14 years ago

       நிறைய விவாதித்து விட்டோம். மீண்டும் மீண்டும் சொன்னதையே வெவ்வேறு கோணத்தில் விளக்கியும் ஆகிவிட்டது. அதனால் முடிவாக சில குறிப்பு

      1. இன்றைய மூன்றாம் உலக நாடுகளின் அணு சக்தியில் (அணு உலையானாலும் அணு குண்டானாலும்) வளர்ச்சி என்பது ஏகபோக ஆதிக்கத்தை தகர்க்க பயன்படும். குறிப்பாக நம்முடைய நாட்டின் அணு சக்தி வளர்ச்சி, குறிப்பிட்டளவு சுயேட்சையான பாத்திரத்தை ஆற்றி வந்துள்ளது. (123 ஒப்பந்தத்தை தவிர). 

      2. மூன்றாம் உலக நாட்டின் அணு குண்டும், அணு சக்தியும் – தங்களுடைய சுதந்திரத்தை காப்பாற்றிக்கொள்ள பெருமளவில் பயன்படும்.  வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையில், சமூக அரசியல் அடித்தளத்தில், அணு சக்தி மக்களுக்கானது, ஜன நாயகத்திற்கானது, சுதந்திரத்திற்கானது என்பதை பறைசாற்றுவோம்.

      3. தொண்டு நிறுவனங்களுக்கு கீழ் நடத்தும் போராட்டம், ஏகாதிபத்திய அரசுகளின் போராட்டமே. இவை எள்ளளவும் ஆதரிக்க முடியாது. (எகிப்து, லிபியா, சிரியா.. தொடரும்).

      4. அரசியல் கட்சிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஜனநாயக அமைப்பினர் உள்ளடக்கிய அமைப்பை ஏற்படுத்தி, அம்மக்களின் உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும். இச்சக்திகளுக்கு கீழ் போராடும் மக்கள் திரளும்வரை இப்போராட்டத்தை எவரும் ஏற்கக்கூடாது. ஏற்றால் அது ஏகாதிபத்தியத்திற்கே சேவை செய்யும்.

      5. கூடங்குள அணு உலையைத் திறந்தாலும், அது முழு செயல்பாட்டிற்கு வர 6 மாதங்களாகும். இக்காலகட்டத்தை மேற்கூறிய அமைப்புகளை அமைத்து பிரச்சனைக்குத் தீர்வுகாண முன் நிபந்தனையாக்கி, இந்திய அரசை திறக்க நெருக்க வேண்டும்.

      6. கூடங்குள அணு உலையை குலைக்க எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கே சேவை செய்யும். மற்ற வாழ்வுத்துறையில் போராடும் மக்களுக்கே  மிக பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும். 

      7. காலாவதியான அணு உலைகளை மூடவேண்டும். பழைய, புனரமைக்ககூடிய அணு உலைகளை, உடனே புனரமைக்கவேண்டும். தனியாரை அணு உலை அமைக்க ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

      8. விஞ்ஞானத்தின் விளைவுகளாக சூழல் கேட்டையும், மனித வாழ்வாதாரத்திற்கு எதிரானது என்று பீதியூட்டி இயற்கைவாதம் பேசுவது ஏகாதிபத்தியவாதமே, அராஜகவாத அணுகுமுறையே, நீடிக்கும் உற்பத்திமுறையை கட்டிக் காப்பதே!!

      8. ஏகாதிபத்திய உற்பத்தி உறவுகளும் மற்றும் தனியார் நிறுவனங்களின் லாப நோக்கமே சுற்றுப்புறச்சூழல் மற்றும் பல்வேறு சீர்கேடுகளுக்கு காரணம் என்று மூடிமறைத்து, உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கும் போராட்டத்தில் ஈடுபடாத எந்த போராட்டமும் மக்களுக்கு எதிரானதே!! எதிர்க்கவேண்டியதே.

      9.  காற்று, சூரிய் சக்தி, அனல், புனல் மற்றும் அணு உள்ளிட்ட அனைத்தும் தழுவிய ஒரு தன்னிரைவு உற்பத்திக்காக போராடுவோம். இந்திய அரசை நெருக்குவோம். போராட்டத்தை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திருப்புவோம். புரட்சிக்கு அணித்திரள்வோம்.!!

      ஆரோக்கியமான விவாதத்திற்கு பங்கெடுத்த அனைவருக்கு மிக்க நன்றி.

      • thevan says:
        14 years ago

        pothuvudaimai seeman///பொதுஉடைமை சீமான் // பொதுஉடைமை சீமான் பெயரை மாத்தவும் முதலில், சீமான் என்பதுவே ஒரு அடிமை தேவை இந்த பெயரிற்கு .அதைவிட பொதுஉடைமை என்பது இன்று இருக்கும் இந்திய சமூக அமைப்பிலிருந்து அதாவது மன்னராட்சிக்கு சற்று குறைவான வாரிசு ஆட்சியிலிருந்து பொதுஉடைமை சமூக அமைப்பிற்கு தாவ கனவு காணும் ஒரு கற்பனைப் பெயர் இது , இந்த பெயரிட்குரிய சிந்தனை வருவதும் உம் தவறல்ல , பெயரின் தவறு .ஆகவே பெயரை மாத்தவும். பெயரின் தவறு நிரூபிக்கப்பட்டுள்ளது உமது “முடிவாக சில குறிப்புகள்”(முடிவாக சில எனது சீமானின் குறிப்புகள் என்றிருந்தால் நன்று) . மற்றும் “அனைவருக்கு மிக்க நன்றி” என்ற உமது சீமனிட்குரிய தொனி.
        !
        //முடிவாக சில குறிப்பு//சீமானே! நான் உமது அடிமையல்ல உம் முடிவான கருத்துக்களை கைகட்டி கேட்பதற்கு . 3. தொண்டு நிறுவனங்களுக்கு கீழ் நடத்தும் போராட்டம், ஏகாதிபத்திய அரசுகளின் போராட்டமே. இவை எள்ளளவும் ஆதரிக்க முடியாது. (எகிப்து, லிபியா, சிரியா.. தொடரும்).///. என்ற கருத்துடன் மட்டும் உடன் படுகிறேன் .இந்த தலைமை வெற்றிடத்தில் மக்களின் முதன்மை விரோத சக்திகள் , அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ரசிய ஏகாதிபத்திய அடிவருடிகளை தலைமை தாங்க விட்டது “மக்கள் தவறு” என்று கூறுவது தவறு”. மக்கள் விரோத அமெரிக்கா,மக்கள் விரோத பன்னாட்டு நிறுவனங்கள்,NGOsகள் VS மக்கள் விரோத அரசு,போன்ற மக்கள் விரோத காரணிகளை ஒப்பிட்டு பார்க்கும் வாதத்திற்குள் ,முடக்கி மக்களுடன் இணைய ,இணைந்து போராட மறுப்பதை நியாயப்படுத்துவது அல்லது விவாதத்தை திசை திருப்புவதை அம்பலப்படுத்துவோம் என்ற பின் குறிப்புடன். ஆரோக்கியமான விவாதத்திற்கு பங்கெடுத்த அனைவருக்கு மிக்க நன்றி.

        • pothuvudaimai seeman says:
          14 years ago

          இங்கே நடத்தும் எந்த விவாதமும் உமக்க அல்ல . நமது விவாதம் மற்றவர்களின் அறிவைத் தூண்ட. இங்கே விவாதித்தற்கு காரணம், ஏதோ நான் உங்களை ஒரு புரட்சியாளராக வளர்க்க அல்லது என் வழிக்கு கொண்டுவருவதற்காக அல்ல. படிக்கும் மக்களுக்கு இப்படியும் சமூகத்தில் கருத்துக்கள் நிலவுது என்பதற்காக. 

          ////முடிவாக சில குறிப்பு//சீமானே! நான் உமது அடிமையல்ல உம் முடிவான கருத்துக்களை கைகட்டி கேட்பதற்கு . //
          இங்கு போட்ட குறிப்புகள் (சில குறிப்பு), படிக்கும் மக்களுக்காக ஒரு தொகுப்பு போட்டுள்ளேன். மூடத்தனமாக அடிமை அல்ல என்று கூறுவது, ஒரு அற்பனிடம் விவாதிப்பதுபோல் உள்ளது.

          //pothuvudaimai seeman///பொதுஉடைமை சீமான் // பொதுஉடைமை சீமான் பெயரை மாத்தவும் முதலில், சீமான் என்பதுவே ஒரு அடிமை தேவை //
          இப்பெயர் சிற்ப்பாக உள்ளது என்பதால் அல்ல. அது ஒரு வேடிக்கையானப் பெயர். இரண்டுக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பதற்காகவே வைக்கப்பட்டது. இவ்வளவு பேசும் எனக்கு, நீங்கள் குறிப்பிட்டது அறியாதவையா!! சரி. தேவன் என்பது என்ன புரட்சிகரமானப் பெயரோ!! இப்படிப் பெயரைப் பற்றி இவ்விடத்தில் விமர்சிப்பது ஒரு மூடச் செயல்.

          //மக்களுடன் இணைய ,இணைந்து போராட மறுப்பதை நியாயப்படுத்துவது அல்லது விவாதத்தை திசை திருப்புவதை அம்பலப்படுத்துவோம்//
          மக்களுடன் புரட்சிகரக் கடசிகள் தொடர்ந்து போராடியே வந்துள்ளது. அதன் தலைமை ஏற்கத்தான் மக்களை இவ்வாளும் வர்க்க திசைத் திருப்புசிறது.  புரட்சிகர கட்சிகளுக்கு எவ்வளவு இதில் பங்கு உள்ளது என்று கருதுகிறீர்களோ, அதே அளவுக்கு மக்களுக்கும் பங்கு உள்ளது என்பதை பல முறை கூறிவிட்டேன். உங்களோடு இங்கு மட்டும் உட்கார்ந்து கதை பேசிவிட்டு அப்படியே ஓடிப்போகிறவர்கள் அல்ல நாங்கள். களத்தில் நிற்பவர்கள்.  மக்கள் நியாயமான (ஜனநாயகத்திற்கான) போராட்டத்தில் எகிப்திலும், சிரியாவிலும், லிபியாவிலும் தொண்டு நிறுவனங்கள் தலைமையை  கைப்பற்றியது. ஏன் அங்கு வேறு ஜனநாயக சக்திகளே இல்லை என்பதாலா? இப்போது அப்போராட்டம் வெற்றிப் பெற்று விட்டது. யாருக்கு சேதாரம் அதிகமாக உள்ளது? இப்போது ஜனநாயகம் வென்றுவிட்டதா? அது ஒரு ஏகாதிபத்தியத்தின் போராட்டம். அதேப்போல்தான் இங்கும். இக்கூடங்குளப் போராட்டமும் “அணு உலையை மூடு” என்பது மக்களுக்கு எதிரானது. இது ஒரு ஏகாதிபத்தியத்தின் போராட்டம். இப்படி கனவு உலகப் புரட்சி, மக்களை தவறாக அழைத்து சென்று நிற்கதியில் நிற்க வைக்கும் உங்களைப் போன்றவர்களின் சேவை வாழ்க!! மீண்டும் மீண்டும் இதையே பேசிக் கொண்டிருப்பது கடினமாக உள்ளது. நீங்கள் தொடருங்கள். பின்பு வேறொரு விவாதத்தில் தொடருவோம்.

  26. முருகன் says:
    14 years ago

    //உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி திட்டமிட்டுத் தடைப்படுத்தப்படுகிறது.//

    முற்றிலும் சரியான உண்மை. உற்பத்தி சக்தி அரைக்காலனி நாடுகளில் ஏகாதிபத்தியம் தனக்கேற்ற வகையிலேயே வளர்க்கிறது என்பது உண்மை. ஆனால் உற்பத்தி சக்தியே அளவு மாற்றத்தில் நிகழவில்லை என்றால் அது சரியான கருத்து இல்லை. நாம் ஏன் ஏகாதிபத்தியத்தை அகற்றக் கோருகிறோம் என்பதற்கு நீங்கள் தரும் விளக்கம் சரி. ஆனால் எந்த மாற்றமும் நிகழாமல் சமூகம் இயங்கா நிலையில் இருக்கிறது என்பதில்தான் மாற்றுக்கருத்து இருக்கிறது. இங்கு உற்பத்தி சக்தி ஏகாதிபத்தியம் தனக்கேற்ற வகையில் மாற்றியமைத்துக்கொள்கிறது. அதற்கு உள்நாட்டில் இருக்கும் ஆளும் வர்க்கங்கள் அதனைச் சார்ந்து நிற்கிறது. அதானல் சமூகத்தின் இயல்பான வளர்ச்சியை தடைப் படுத்துகிறது. அதே போல் அராஜகமான முறையினை கைக்கொள்கிறது. ஆகையால் ஒரு சமூகப் புரட்சியினை நடத்தி அந்த உற்பத்தி சக்திக்கு தடையாக இருக்கிற உற்பத்தி உறவுகளை அகற்றக் கோருகிறோம். எக்காலத்திலும் உற்பத்தி சக்தியினை நாம் அகற்றக் கோருவதில்லை, அல்லது தடுக்கக் கோருவதில்லை, அது சுரண்டல் வடிவத்திற்காக இருந்தாலும் அந்த உற்பத்தி உறவைத்தான் மாற்றியமைக்க போராடுகிறோம். 

    அடுத்ததாக  //இனி கூடங்குளம். அணு உலைகள் எவ்வாறு இயங்குகின்றன அதனூடாக உற்பத்தி சக்திகளை எவ்வாறு ஏகாதிபத்தியங்கள் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கின்றன என்பது பலராலும் கூறப்பட்டுள்ளது.//

    அது தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை யாரும் மறுக்கவில்லை. அதனால்தான் அந்த ஏகாதிபத்திய அடிமைத் தளையிலிருந்து ஆளும் வர்க்கத்திடமிருந்து விடுவித்து அந்த உற்பத்தி சக்தியின் கட்டற்ற வளர்ச்சிக்கு போராட வேண்டியிருக்கிறது. 

    • thevan says:
      14 years ago

      Please read on productive forces and destructive forces.
      technical progress boosting productivity often does not mean human progress at all. The design of production technologies may not be suited to human needs or human health, or technologies may be used in ways which do more harm than good. In that case, productive forces are transformed into destructive forces. misinterpretation of PRODUCTIVE FORCE to productive energy:

      atomic energy shouldn’t be considered and generalised as productive energy without considering human needs and human health,welfare…. and who should own this “exceptional” atomic energy should be debated. .

      In Kudankulam issue: atomic energy fails in both count;

      1 .not considering human needs and human health,welfare.,security… .on and on.

      2.INDIA owner/controller of that atomic energy doesn’t care about human needs and human health,welfare….

      • thevan says:
        14 years ago

        ஆக்க விசை ,அழிவு விசை ,அணு சக்தி ,ஆக்க சக்தி , அழிவு சக்தி இவற்றுக்குள் உள்ள கருத்துகளை திரிபு படுத்துகிறார்கள்;திரிபுவாதிகள் மக்களை, மக்கள் நலனை பின்தள்ளி . அம்பலப்படுத்படவேண்டும் இவர்கள் முகமூடிகள்.

      • pothuvudaimai seeman says:
        14 years ago

        2 factors which you considered for the closure of koodankulam is really ridiculous.

        if you apply to any sector, you would come to the same conclusion. For eg: if you apply this in Thermal power,  Thermal power posses more damages to environment and human values than Atomic station. second factor of yours is remains same to this. From your conclusion, can we protest for the closure of thermal power plant. This would lead to the destruction of productive force. Revolutionaries never in the way, you told.

        Revolution become evident when the productive force cannot progressed further. But the destruction of productive forces would not be by the revolutionaries. you may know better than me.

        If so, Please quote the source of your conclusion for my reference, if any.

        • thevan says:
          14 years ago

          If so, Please quote the source of your conclusion for my reference, if any. // source of your conclusion : what do you mean?which conclusion on which topic? Most of my conclusions on any topics are obvious and understandable for any layman. if you are talking about my conclusion of your misinterpretation on “productive force”, then please define or explain us what is “productive force” and “dsetructive force”. It will explain.

  27. thevan says:
    14 years ago

    instead of உற்பத்தி சக்தி why ஆக்க விசை? REASON: if the tamil word for productive force is ;உற்பத்தி சக்தி, then what is the tamil word for destructive forces?

  28. thevan says:
    14 years ago

    GOOD, NOW WE ARE MOVING INTO PRODUCTIVE FORCE and MARX TOPIC.

    koodankulam is really ridiculous///
    of course. it will be ,until you get to know the meaning of productive force as quoted by MARX.

    And it will be ridiculous ,until you prove us that :

    1: Marx also wouldn’t have bothered about harm or good for HUMAN to produce any ENERGY to produce”productive force”.

    2.MARX wouldn’t have bothered about who owns or controls that harm or good for HUMAN ENERGY because that energy is needed to produce “productive force”.

    • இனியொரு.. says:
      14 years ago

      சமூகத்தை வகைப்படுத்தல்

      மார்க்சிய ஆய்வு முறை என்பது சமூகக் கட்டமைப்பை அடித்தளம் மேற்கோப்பு என்ற இரண்டு படிமங்களாகப் வேறுபடுத்துகிறது வகுக்கிறது. அடித்தளத்திற்கும் மேற்கோப்பிற்கும் சதா மாறுகின்ற உறவு இருந்துகொண்டே இருக்கிறது என்றும் அது கருதிகிறது.

      அடித்தளம் என்பது உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் அவற்றிற்கிடையேயான உள்முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டது.

      அடித்தளம்

      முதளாளித்துவ சமூகத்தில் உற்பத்தி உறவு என்பது பிரதானமாக மூலதனத்தை வசமாக்கிவைத்திருக்கும் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலானதாகும். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இதே உறவு என்பது நிலத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் நிலப்பிரபுக்களுக்கும் பண்ணை அடிமைகளுகும் இடையிலானதாகும். காலனியாதிக்க நாடுகளில் இந்த உற்பத்தி உறவு என்பது மிகவும் சிக்கலான அமைப்பைக்கொண்டிருந்தன. உலகமயமாதலின் பின்னான காலப்பகுதியில் உலக முதலாளிகளும் இந்த உற்பத்தி உறவுகளின் நேரடியான அங்கமாக மறியுள்ளனர்.

      மூன்றாமுலக நாடுகளில் இவை வெறுமனே முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான உறவு, அல்லது நிலப்பிரபுக்களுக்கும் பண்ணையடிமைகளுக்கும் இடையிலான உறவு என்ற இலகுவான வரைவிற்கு அப்பால் புதிய வேறுபட்ட உறவுகளை உலக முதலாளித்துவத்தின் இணைவோடு உருவாக்கியுள்ளது என்பது மட்டுமல்லாது, முகாமைத்துவ வர்க்கம் அதன் உற்பத்தித் திறனுள்ள மக்கள் பிரிவு உற்பத்தித் திறனற்ற பிரிவு போன்ற சிக்கலான உற்பத்தி உறவு முறைகள் உருவாகியுள்ளன.

      உற்பத்தி சக்திகள் என்பது மனித உழைப்பு ஈறாக பல்வேறு உற்பத்திக் கருவிகளைக் குறிக்கும். காலனியாதிக்கதிற்குட்பட்ட நாடுகளில் தமது அன்னிய மூலதனத்தை இன்னாடுகளில் உட்செலுத்துவத்ற்காக உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை எகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டுத் தடுத்தன. இதன் விளைவாக உற்பத்தி உறவுகளின் அமைப்பு முறையானது மிகவும் சிககலான அமைபாக மாறியது.

      உற்பத்தி உறவுகளையும் உற்பத்தி சக்திகளையும் சார்ந்த சமூகத்தின் பகுதியையே மார்க்சிய ஆய்வுமுறை சமூகத்தின் அடித்தளம் என வரையறுக்கிறது.

      மேற்கோப்பு

      தவிர, கலை, கலாச்சாரம், தேசியம், சிந்தனை முறை, சட்டம், சமூக ஒழுங்கு, சாதியம், மக்கள் பிரிவுகள் போன்றன சமூகத்தின் மேற்கோப்பு என என வரையறுக்கப்படும்.

      ஆக, சமூகத்தின் அடித்தளமும் அதன் இயக்கமும் தான் மேற்கோப்பை நிர்ணயிக்கும். அதேவேளை மேற்கோப்பின் மாற்றங்கள் அடித்தளத்தின் இயக்கத்தைத் தீர்மானிக்கும் காரணியாக அமைவதில்லை எனினும், அடித்தளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

      மன்னராட்சிக் காலத்திலிருந்த சட்டங்களும் அதன் அமைப்பு முறைகளும் முழுமையான நிலப்பிரபுத்துவ அடித்தளத்திற்கேற்றவாறு அமைந்தன. முதலாளித்துவ சமூகத்தில் இதே அமைபு முறை முற்றாக மாறிப் போனதுடன் புதிய அமைப்பு முறைகள் உருவாகின.
      பெண்கள் மனித இனத்தை உற்பத்தி செய்யும் அடிமை இயந்திரமாக இருந்த நிலை நிலப்பிரபுத்துவ சமூகத்தில் கணப்பட்டது.

      • முருகன் says:
        14 years ago

        விளக்கத்திற்கு நன்றி. உற்பத்தி சக்தி, உற்பத்தி உறவுகளை குறித்தான சில விவாதங்களைத் தர நேர்ந்தால் நன்று. அதன் இயங்கியல் அம்சமும் உற்பத்தி சக்திகளின் வரலாற்றுப் பாத்திரத்தினையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்க முனைந்தால் இந்த விவாதத்தில் உதவிகரமாக இருக்கும்.

  29. Sr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Thevan, 1963 educational reforms forced us to study science in Tamil. In 1970 we had the option to learn in English at the Peradeniya Campus. About this nuclear rector I think at the Centre they have done all the studies. Now they do not know how to control matters like this at State level.

  30. முருகன் says:
    14 years ago

    குழந்தாய் மார்க்ஸ் உங்களுக்கு பதில் சொல்லுகிறார். 
    “.. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆரய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல்ல இதை துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம் கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் – சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத் துறைகளில் – இந்தப்போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்துகொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும். ஒரு தனி நபர் தன்னப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக, இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரன்பாடுகளின் மூலமாக, உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்க முடியும்.”

    உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளையே சார்ந்து இருக்கும். உற்பத்தி உறவுகள் அந்த உற்பத்தி சக்திகள் மீது ஒரு தாக்கத்தை, செல்வாக்கை உருவாக்கும். அந்த செல்வாக்குஇரண்டு வகையில் வெளிப்படும். உற்பத்தி சக்தியோடு இயைந்து இருந்தால் அதனை வளர்க்கும். அதனோடு பொருந்து போகவில்லை என்றால் உற்பத்தி சக்தியின் வளர்ச்சியினை தடுக்கும். இந்த இயங்கியல் பார்வை இல்லையென்றால் நாம் எந்த மாற்றத்தினையும் செய்ய முடியாது. 

  31. thevan says:
    14 years ago

    மக்கள் போராட்டம், எவ்வாறு போராடவேண்டும் பற்றிய முருகனின் கருத்து :இப்போது பிரச்சினைக்கு வருகிறேன். இங்கு அடிப்படை பிரச்சினை அவர்களின் மாற்று வாழ்வாதரப் பிரச்சினை, அவர்களுக்கு உலையினை பற்றிய “தெளிவுப்படுத்த” வேண்டியப் பிரச்சினை. தொடர்ச்சியான பாதுகாப்பினை உத்திரவாதப்படுத்த வேண்டியப் பிரச்சினை, மீனவர்களுக்கு அவர்களின் வாழ்வாதரப் பிரச்சினையை உத்திரவாதப் படுத்துதல், மருத்துவப் பிரச்சினையை உத்திரவாதப் படுத்துதல், இவையெல்லாம் தொடர்ச்சியாக உத்திரவாதப் படுத்துவதற்கு ஒரு கமிட்டி இன்றைய அரசு கட்டமைப்பில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாள்ர்களின் பிரதிநிதிகள், அணு சூழலியல் போன்ற அறிவாளிகள், இவர்களை உள்ளடக்கிய ஒரு கமிட்டியை அமைத்து தொடர்ச்சியாக ஒழுங்குபடுத்தவேண்டும். இதற்காகப் போராடவேண்டும். அதுவும் மக்களுடன் இணைந்து போராடவேண்டும். இதுதான் அவர்களின் உண்மையான உணர்வு. ஆனால் அணு உலையே கூடாது ஆனால் அணு உலையே கூடாது அதுவே உலகத்தை அழிக்கவல்ல ஒரு ஆயுதம் என்ற கருத்தினை வைத்து தனது சேவையை ரசிய ஏகாதிபத்தியத்திற்காகட்டும் இல்லை அமெரிக்க, பிரான்ஸ் ஏகாதிபத்தியத்திற்காகட்டும். எல்லாம் முறியடிக்க வேண்டியவையே. சுருக்கம் :

    அணு உலையால் மக்களிற்கு நிறைய பிரச்சனைகள் உண்டு , போராடத்தான் வேண்டும், அதுவும் மக்களுடன் இணைந்து போராடவேண்டும்,ஆனால் உலையை மூடக்கூடாது
    அணு உலை யார் கையில் இருக்கவேண்டும், எப்படி ஜனநாயகப் படுத்துவது பற்றிய முருகனின் கருத்து : இதை நம்முடையதாக மாற்றுவத்ற்கு அரசை ஜனநாயகப் படுத்துவதற்கானப் போராட்டமும், அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு ஒரு இறையாண்மை அரசை ஏற்படுத்துவதற்கான போராட்டமும் செய்து முடிக்கப்படும்போதுதான், ஒரு சோசலிச அரசினை அமைக்கப்படும் போதுதான் இதை முழுமையா (அழுத்தம்) மாற்றியமைக்க முடியும், உத்தரவாதப் படுத்தமுடியும். அதற்கு அவர்களுடன் இருந்து பணி சேய்ய வேண்டும். அவர்களுக்கு “தெளிவுப் படுத்த வேண்டும்”. அவர்களின் வாலாக அல்ல, அவர்களின் தலையாக தளபதிகளாக, முன்னணிகளாக. இதுதான் அவர்களுடன் இருந்து பணியாற்றுவதற்கான பொருள். மற்றவையெல்லாம் அந்த மக்களை ஏமாற்றி நயவஞ்சகமாக அவர்களின் உணர்வுகளை தனக்கு சாதகமாக்கி, அவர்களின் பயத்தினை தனக்கு சாதகமாக்கி இந்த பிற்போக்கு அரசுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் ( எந்த ஏகாதிபத்தியமாக இருந்தாலும்) சேவை செய்வதேயாகும். “அவர்களுக்கு தெளிவுப் படுத்த வேண்டும் ” சுருக்கம் :

    அரசை ஜனநாயகப்படுத்துவதற்கு நிறைய பிரச்சனைகள் உண்டு , போராடத்தான் வேண்டும், அதுவும் மக்களுடன் இணைந்து போராடவேண்டும்,ஆனால் உலையை மூடக்கூடாது. எந்த மக்களுடன் இணைந்து போராடப் போறாரோ தெரியவில்லை.அப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தால் கூடன்குள மக்களுடன் நின்று, NGO களை அம்பலப்படுத்தி, “தெளிவுப் படுத்தி” சரியான திசையில் மக்களை அணிதிரட்டியிருப்பார் . இது போன்ற மக்கள் அணியுடன் சேர்ந்து அரசை ஜனநாயகப்படுத்துவதற்கு போராடுவார் என்றும் நம்பலாம். ஆனால் கூடன்குள மக்கள் போராட்டத்தை வழி நடத்தாது கொச்சை படுத்தும் இவர் தான் இந்திய அரசை ஜனநாயகப்படுத்துவார் ,அணு சக்தியை மக்கள் மையப் படுத்துவார் என்று எல்லோரும் நம்புவோமாக. இணைந்து போராடாவிட்டாலும் உலையை மூடக்கூடாது என்பதில் நல்ல “தெளிவு”

  32. முருகன் says:
    14 years ago

    //இணைந்து போராடாவிட்டாலும் உலையை மூடக்கூடாது என்பதில் நல்ல “தெளிவு”//
    முல்லை பெரியாறில் இணைந்து போராடவில்லை கேரள மக்களிடம். சரி அவர்கள் சொல்வது போல் அணை உடைந்து விடும் என்று ஏற்றுக்கொண்டு அந்த மக்களின் ஆசையை நிறைவேற்ற முல்லை பெரியாறு அணையை இடித்துவிடலாமா.

    என்ன ஆனது உங்களுக்கு. என்ன பேசுகிறொம் என்றாவது புரிந்துதான் பேசுகிறீர்களா. நீங்கள் அவர்களை உங்கள் பின்னை திரட்டி விசயத்தை சாதிப்பது ஒன்று. ஆனால் அந்த உணர்வை வைத்து சமூகத்தினை நகர்த்தி செல்ல முடியாது. ஒரு சில நேரங்களில் ஆளும் வர்க்கம், அவர்களின் எடுபிடிகள் பலமாக இருப்பார்கள். பாட்டாளி வர்க்க சக்தி பலவீனமான நிலையில் (இங்கு தத்துவ ரீதியாக ஒரு கட்சியாக திரட்டிய மக்களை குறிப்பிடுகிறேன்) இருக்கும். அதை எப்படி வென்று மாற்றிக் காட்டுவதற்கானப் போராட்டம். இந்தப் போராட்டத்தில் நீங்கள் மக்களோடு இணைந்து அவர்களோடு நெருங்கி இருந்தால் மட்டுமே நீங்கள் தலைமைத் தாங்கும் சக்தியாக மாறமுடியும். அந்த விசயத்தில் பரவலாக இன்னும் பின் தங்கியே இருக்கிறோம். அது எந்த அமைப்பாகட்டும். அப்படி நெருக்கமாக இல்லாதபோது அவர்களின் வாலாக மட்டுமே இருக்க நேரிடும். அப்படி ஒரு விசயம்தான் எல்லா புரட்சிகர கட்சிக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவர்களின் உண்மையான பிரச்சினைக்கு போராடுவது இன்று புறந்தள்ளப்பட்டு ஏகாதிபத்தியத்தின் எடுபிடி குரலாக இருக்கும் அணு உலையை மூடு என்ற முழக்கம் மட்டுமே முன்னுக்கு கொண்டு வந்து திசை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    அணு உலை வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருப்பதாவது உங்களுக்கு தெளிவாக தெரிகிறது. ஆனால் உங்களுக்கு அணு சக்தி வேண்டுமா வேண்டாமா. அப்படி மறுப்பது மார்க்சிய ரீதியானதா? இந்த சமூகத்தில் அணு சக்தி வேண்டாம், சோசலிச சமூகத்தில், ஒரு மக்கள் அரசாங்கத்தில் ஏற்றுக்கொள்ளலாமா? எல்லை எப்போதுமே அணு சக்தி வேண்டாமா? அப்படி என்றால் மாவோ அணு குண்டே வேண்டும் என்று வரையறுத்திருக்கிறாரே அதை ஏற்கப் போகிறோமா? அணு சக்திக்கா சீன மக்கள் முன்னுரிமை கொடுத்து கற்றுக்கொள்ள சொன்னாரே மாவோ அதை மறுக்கப்போகிறோமா? இப்படி நீங்கள் பதில் சொல்ல வேண்டியதும் அப்படி பதில் சொல்வதற்கு முன் நீங்கள் நல்ல “தெளிவு”டன் இருக்க வேண்டியது அவசியம். இதற்கு உங்கள் “தெளிவான” பதிலை தாருங்கள். குறைந்தது உங்கள் கருத்தையாவது புரிந்துகொள்ள நான் முயற்சிக்கிறேன்.

    என்னற்ற புரட்சிகர அமைப்புகள் சந்தர்ப்பவாத நாடகம் ஆடுகிற நிலைமையில்தான் கூடங்குளம் பிரச்சினையை கையாள்கிறார்கள். அணு சக்தி ஒப்பந்தம் போட்ட போது அப்போது ஒரு நிலை எடுத்தவர்கள் இப்போது ஒரு நிலை. அணு சக்தி குறித்து மார்க்சியம் என்ன சொல்கிறது. ஸ்டாலின் என்ன சொன்னார் என்ன செய்தார், மாவோ என்ன சொனனர் என்ன செய்தார் என்பதை விவாதிக்கலாமே. அதிலாவது ஒரு பொதுக் கருத்தை எட்ட முயற்சி செய்யலாமே. 

    இந்த மக்கள் திரட்டல் என்ற ஜாலத்தை வைத்துக்கொண்டு இன்று எது சரியான கருத்து என்பதை வ்ந்தடைய முடியவில்லை. முல்லை பெரியாறு அணை பூகம்பம் வரும் பகுதியில் கட்டியிருக்கிறார்கள், அங்கு எரிமலை இருக்கிறது. அந்த அணை பலவீனமாக இருக்கிறது என்று எல்லா கூறுகளையும் அதற்கும் கூறுகிறார்கள். அங்கு மக்களின் பயத்தினை தெளிய வைக்கும் வரைக்கும் முல்லை பெரியாறில் தண்ணீரை தேக்காமல் இருப்பதற்கு நீங்கள் ஒப்புதல் தருவீர்களா? அந்த மக்களின் பயத்தினை போக்காதது உங்கள் தவறு ஆகையால் தமிழகத்திற்கு எந்த தண்ணீரும் கிடையாது என்று பிரச்சாரம் செய்வீரா. இப்படி என்னற்ற சிக்கலில் நீங்கள் எழுப்பும் பிரச்சினை இருக்கிறது. 

    இப்படி ஊருக்கு ஒரு ஞாயம் சொல்லப்போனால் இறுதியில் சந்தர்ப்பவாதிகளின் சிகரம் என்றாகிவிடும். இப்படியெல்லாம் தான் தோன்றித் தனமாக எதையாவது பேச முடியாது என்பது அறியவும். ஒரு அடிப்படையில் இருந்து பேசுங்கள். அதற்கு மேற்கூரிய விசயத்தில் பொருத்தி உங்களின் ஞாயத்தை கூறுங்கள். உங்கள் கருத்தினை அப்படியாவது பலப்படுத்தி என்னைப் போன்றவர்களுக்காவது புரியவையுங்கள். காத்திருக்கிறேன் முழு பதிலுக்கும்.

  33. Sr. Sri S, Sriskanda says:
    14 years ago

    Murugadas, The Executive President Junius Richard Jayawardene wanted the term Democratic Socialist Republic. This is a welfare state the believes in free market economy.

  34. thevan says:
    14 years ago

    புரியவையுங்கள்/// பலதடவை கூறியுள்ளேன் , மீண்டும்
    தலைப்பு :: அணு சக்தி 1. அணு சக்தி வேண்டுமா வேண்டாமா?:”இந்த சமூகத்தில் அணு சக்தி வேண்டாம்”,இந்த மக்கள் விரோத ,மக்கள நலனை முன்னிறுத்தாத அரசின் அணு சக்தி வேண்டாம். இது இருவரும் ஒத்துக்கொண்ட கருத்து. யார் கையில் ,கட்டுப்பாட்டில்:
    சோசலிச சமூகத்தில், ஒரு மக்கள் அரசாங்கத்தில் ஏற்றுக்கொள்ளலாமா? ஆக குறைந்தது மக்களின் பாதுகாப்பு ,அடிப்படை ஜனநாயக உரிமைகள்,அடிப்படை சமூக வாழ்வாதரங்கள் மக்கள நலனை போன்றவற்றை முன்னிறுத்திய அரசாங்கத்தில் வரவேற்போம்.இதுவும் இருவரும் ஒத்துக்கொண்ட கருத்து. மேலும் : சோசலிச , மக்கள் அரசாங்கத்தில் மக்கள நலனை முன்னிறு த்திய, அரசாங்கத்தில் : இந்த போராட்டமே தேவையில்லை இது என் கருத்து.இருவரும் ஒத்துக்கொண்ட கருத்தாக இருக்கும் .
    மக்கள நலனை முன்னிறுத்தாத அரசில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுவும் இருவரும் ஒத்துக்கொண்ட கருத்தாக இருக்கவேண்டும் என்பது தான் என் கருத்து . உங்களுடையதோ திரிபுபடுகிறது. என்பது தான் என் கருத்து.

  35. thevan says:
    14 years ago

    தலைப்பு போரரட்டம் :

    வெளிப்படையான முதன்மையான நேரடி எதிரி ,பிரச்னை இந்த அரசு தான் ,என்பதை இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

    இந்தப்பிரச்சனையை எவ்வாறு கையாள்வது : “தெளிவுபடுத்தி” சரியான திசையில் மக்களை அணிதிரட்டி,மக்களுடன் இணைந்து போராடுவது தான் ஒரே ஒரு வழி.இதை இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

    இந்த மக்களுடன் இணைந்து போராடும் வழியில் வரக்கூடிய மறைமுகமான எதிரிகளில், மக்களுடன் நின்று போராட்டத்தை மழுங்கடிப்போர் ஒரு வகை , மக்கள் போராட்டத்தை எதிர்த்து மழுங்கடிப்போர் இன்னொரு வகை. எவ்வாறு இவர்களை கையாள்வது பற்றி பார்போம்.

    1.மக்களுடன் “”” நின்று””” போராட்டத்தை மழுங்கடிப்போரில் முதன்மையானவை ஏகாதிபத்திய அடிவருடிகள்,NGO கள். இவர்களை கையாள்வது:மக்களை “தெளிவுபடுத்தி” ,சரியான திசையில் மக்களை அணிதிரட்டி,மக்களுடன் இணைந்து போராடுவது தான் ஒரே ஒரு வழி.

    இதை இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். இதன் மூலம் மக்களுடன் நின்று போராட்டத்தை மழுங்கடிக்கும் பிற எதிரிகளையும் எம் பக்கம்,மக்கள் பக்கம் வெல்லலாம்.மறுக்கிறீர்களா? மறுப்பதாயின், திருத்தவும் என் கருத்தை.

    2.மக்கள் போராட்டத்தை “”””எதிர்த்து”””” போராட்டத்தை மழுங்கடிப்போர் ; யார் யாராக இருக்க கூடும் என்றும் ,இவர்களை எவ்வாறு கையாள்வது பற்றியும் முருகனும், பொதுவுடைமை சீமானும் மக்களிற்கு தெளிவு படுத்துவார்கள். நன்றி.

  36. thevan says:
    14 years ago

    போராட்டம் பற்றி முருகன் மற்றும் பொதுவுடைமை சீமானின் தெளிவு படுத்தல் :

    நாங்கள் மக்களோடு இணைந்து நெருங்கி இருந்தால் மட்டுமே தலைமைத் தாங்கும் சக்தியாக மாறமுடியும்.இதில் இன்னும் பின் தங்கியே இருக்கிறோம். இது எங்கள் பலவீனம் தான் .இதனால் தான் அணு உலையால் வரக்கூடிய மக்களின் உண்மையான பிரச்சினையை நாம் உணர முடியவில்லை, போததற்கு கொச்சை படுத்தியுமுள்ளோம் என்பதை எண்ணி மனம் வருந்துகிறோம்.அணு உலையால் வரக்கூடிய மக்களின் உண்மையான பிரச்சினையை ,மக்களின் பாதுகாப்பை,நலனை , வாழ்வாதாரத்தை அரசு தீர்க்க வேண்டும், உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை , நாம் மக்கள் பற்றிய, எங்கள் தெளிவின்மை , பலவீனம் காரணமாக முன் வைக்காததும் எம் தவறுதான். நன்றி.

  37. thevan says:
    14 years ago

    அணு உலை பற்றி முருகன் மற்றும் பொதுவுடைமை சீமானின் தெளிவு படுத்தல் :

    எம் பலவீனம் காரணமாக நாம் இந்திய அரசிற்கு எதிராக போராடவில்லை,மக்கள் நலன் பற்றிய கோரிக்கை ஏதும் வைக்கவில்லை என்று கவலைப்படவேயில்லை, ஏனெனில் இந்திய அரசு தன்னியல்பாகவே அணு உலை மூலம் மக்கள் நலனை முன்னிறுத்தி,மக்களிற்கான உற்பத்தி சக்தியை பெருக்கி ,மக்களிற்கான அரசாக முன்னேறும்.ஆனால் இந்த இந்திய அரசை இழுத்து விழுத்த முனையும் ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளின் கையை ஓங்க விட்டது , நாம் எம் தேசத்திற்கு செய்த துரோகம் தான். முக்கிய குறிப்பு :இதில் எங்களுக்கே ஒரு குழப்பமும் உள்ளது இந்திய அரசு மக்கள் நலனை முன்னிறுத்துவாத , அல்லது ஏகாதிபத்திய,பன்னாட்டு நிறுவனங்கள் சார்பா என்று. எமக்கென்ன கவலை .

  38. thevan says:
    14 years ago

    அணு சக்தி குறித்து மார்க்சியம் என்ன சொல்கிறது. ஸ்டாலின் என்ன சொன்னார் என்ன செய்தார், மாவோ என்ன சொனனர் என்ன செய்தார் என்பதை விவாதிக்கலாமே. அதிலாவது ஒரு பொதுக் கருத்தை எட்ட முயற்சி செய்யலாமே. //// ஐயா முருகா, சாமி .
    .போதுமடா சாமி 1. ஸ்டாலின், மாவோ,மார்க்ஸ் இதில் எவருமே மக்கள் நலனை மீறி உற்பத்தி சக்தியை கூட்ட வேண்டும் என்று கச்சையை கட்டியிருக்க மாட்டார்கள் .இல்லை கச்சையை கட்டினவர்கள் தான் என்று நீர் நிரூபித்தால் நான் மார்க்சின் கச்சையை உருவுவேன் .

    2. ஸ்டாலின், மாவோ இருந்த சமூக அமைப்பு வேறு ,நீங்கள் இருக்கும் இந்திய சமூக அமைப்பு வேறு .
    முருகா!!.

    3..ஸ்டாலின், மாவோ அணு சக்தி தேவை என்று கூறிய காரணத்திட்கும், உங்கள் ராஜீவ் ,கலாம் ,சோனியா, மன் மோகன் கூறுவதற்கும் நிறைய வேறு பாடு உண்டு முருகா!!.பழனிக்கு போ முருகா .

    4..அமெரிக்காவிலும் அணு உற்பத்தி சக்தி உள்ளது ,அங்கே என்ன மக்கள் சொத்தாகவா உற்பத்தி சக்தி உள்ளது,அங்கே என்ன மக்கள் ஆட்சிக்கான போராட்டமா நடக்கிறது .மக்கள் உடைமை ஆக்கப்படுமா?

    நீங்கள் மட்டும் இந்த அணு உற்பத்தி சக்தி தேவை , இந்த அரசை மக்கள் ஆட்சியாக்க என்று கூறுவது எந்த விதத்தில் நியாயப்படுத்தப்படும் .

    எல்லாமே முகமூடிகளின் விளையாட்டு . அதில் நீங்கள் முக்கிய பங்கு. அம்பலம்மாக்கியதையிட்டு பெரும் மகிழ்ச்சி . நன்றி முருகா , சீமா. இனிமேல் வேறு முகமூடி,கொண்டை போட்டு வரவும்.ஆனால் ஒரு எச்சரிக்கை, நாங்கள் உங்கள் கொண்டையை தூரத்தில் இருந்தே கண்டு பிடித்துடுவோமேலே

  39. thevan says:
    14 years ago

    பொதுஉடைமை சீமானின் அடிமைகளையும் , முருகனின் பக்தர்களையும் மக்கள் சார்பாக சிந்திக்க , தெளிவு படுத்துவதற்குரிய சந்தர்ப்பம் தந்ததிற்கு இந்திய அரசின் அடிவருடிகள்,இந்திய மக்கள் விரோதிகள், ஆன சீமானிட்கும், முருகனிட்கும். நன்றி நன்றி நன்றி .இனிமேல் வேறு முகமூடி,கொண்டை போட்டு வரவும்.. இத்துடன் இந்த விவாதம் முடிவிற்கு வருகிறது . மீண்டும் அடுத்த முகமூடி போட்டு வரும் இந்திய மக்கள் விரோதிகள் தலையிடும் தலைப்புகளில் சந்திப்போம்

  40. Pothuvudaimai Seemaan says:
    14 years ago

    திரிபுவாதிகள் என்று கூறும் மார்க்சியவாதி, (தேவன்)திரிபுவாதிகளான நம்மை மார்க்சியம் நிரூபிக்க சொல்வது வேடிக்கையான விந்தை. மார்க்சியத்தை பேசாமலேயே, மூலவர்களின் எந்தக் குறிப்பும் இல்லாமலேயே திரிபுவாதிகளை எதிர்த்து மாபெரும் போர்புரிந்து எங்களுடைய முகமூடியை கிழித்து சாதனைப் படைத்த தேவனுக்கு நன்றி. இந்த அருஞ்செயல் தேவனால் (கடவுள் போன்ற கற்பனாவதிகள்) மட்டுமே முடியும். அவருக்கு மார்க்சியம் என்பதே அருவருப்பு சொல்லாகிவிட்டது போலும். இந்திய அரசு கொண்டு வந்த பாசிச சட்டமான பொடா சட்டம், யாரை வேண்டுமானாலும் இச்சட்டத்திற்குள் தீவிரவாதி என்று முத்திரை குத்தி போட்டுவிடும். அந்த அப்பாவிதான் தான் தீவிரவாதி அல்ல என்று நீருபித்து வெளிவர வேண்டும். இயலாமைகூட அச்சட்டத்தின்கீழ் தீவிரவாதமே. அதுப்போலவே இவர் நம்மை முகமூடி கிழிப்பார், மார்க்சிய பேசமலேயே திரிபுவாதி என்பார். நாம் நல்லவர்கள், வள்ளவர்கள் என்பதை நாமே நிரூபிக்கவில்லையென்றால், நாம் திரிபுவாதிகள் என்பதை நாமே எழுதி தந்து, அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளவேண்டும். மிகச் சிறந்த பாசிஸ்டுகளின் எடுபிடிகளோடு போராடுகிறோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

  41. Pothuvudaimai Seemaan says:
    14 years ago

    //இந்த சமூகத்தில் அணு சக்தி வேண்டாம்”,இந்த மக்கள் விரோத ,மக்கள நலனை முன்னிறுத்தாத அரசின் அணு சக்தி வேண்டாம்//

    தேவனின் கருத்து மார்க்சியக்கூடாரத்தில் இருக்கும் NGOக்களின் நிலைப்பாடே:
    ஏகாதிபத்தியங்கள் அணு சக்தியை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்க வேண்டும் என்று போராடுகிறது, மிரட்டுகிறது, போர் புரிகிறது. ஏகாதிபத்தியங்களும் இதையேதான் சொல்லுகிறது. மூன்றாம் உலக நாட்டின் அரசுகளுக்கும் அதன் தாசர்களுக்கும் அணு சக்தியை பயன்படுத்த தெரியாது. அவைகள் மக்கள் நலன் சார்ந்த அரசுகள் அல்ல. அவைகளை காப்பாற்றி மக்களை பாதுகாக்க தெரியாது. இன்னும் ஒரு படி மேலே சென்று சில நாடுகள் பொறுக்கி நாடுகள், அவைகளிடம் அணு சக்தி கிடைத்தால், உலகத்தை அழிக்கும். ஜனநாயகத்தை அழிக்கும் என்று கூறுகிறது.

    ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளான நீங்களும் ஒரு NGOகளே. அதனால்தான் கற்பனாவாதத்தில், மன்னிக்க வேண்டும் – கூட்டாளிகளின் (NGO) போராட்டத்தை மடைமாற்றாமல் அப்படியே கொண்டு செல்ல முயற்சிக்கிறீர்கள்.

    மாவோவின் கருத்துப்படி மூன்றாம் உலக நாடுகள் அணு குண்டு வைத்துக்கொள்வதில் உங்களுக்கு உடன்பாடில்லை (மாபெரும் விவாதம் படிக்க). குருச்சேவின் கொள்கைப்படி சரணாகதிப்பாதைதான் உங்களின் சுதந்திரம், அமைதிவழி மாற்றம்.

    NGOகளால் நடத்தப்பட்ட லிபியாவின் மக்கள் போராட்டம் உங்கள் கருத்துப்படி (கூடங்குள நிலைப்பாடுபடி) மாபெரும் வெற்றி. “Operation Sucess, Patient dead”. இப்படிக் கொண்டு மக்களை மரணகுழியில் தள்ளும் உம்மைப் போன்றோர்கள் மார்க்சியவாதி. NGOகளை அங்கு தலைமைதாங்கவிட்ட பாவத்திற்கும், அப்போராட்டத்தை அம்பலப்படுத்திதியதற்கும் நாங்கள் திரிபுவாதிகள்.

    உங்கள் கருத்துப்படி நாங்கள் திரிபுவாதிகளாக இருப்பதே எம்மகளுக்கு சாலச் சிறந்தது.

  42. Pothuvudaimai Seemaan says:
    14 years ago

    //இந்திய அரசு தன்னியல்பாகவே அணு உலை மூலம் மக்கள் நலனை முன்னிறுத்தி,மக்களிற்கான உற்பத்தி சக்தியை பெருக்கி ,மக்களிற்கான அரசாக முன்னேறும்.//

    தரகுமுதலாளித்துவ அரசின்கீழ் அரசுக்கடமைப்பை தகர்ப்போம் என்று கூறி அதன் எஜமானின் வாலைப் பிடிக்க துனைக்கழைக்கும் – தேவன்:

    தனியார்மய, தாராளமய உலகமய காலக்கட்டத்தில், பழைய உடன்பாட்டின் அடிப்படையில் ஒரு அரசு நிறுவனமே ஏற்று நடத்தும் ஒரு அணு ஆற்றலைக் கண்டால் உங்களைப் போன்ற ஒரு ஏகாதிபத்திய எடுபிடிகளுக்கு சற்று ஆத்திரமாகத்தான் இருக்கும். உங்கள் மறைமுக நோக்கமே, அரசுக்கட்டுமானங்களை நொறுக்கி தனியார் ஆதிக்கத்திற்கு இட்டுச்செல்லவதே. மீறிப்பேச்சினால் இந்திய அரசு ஒரு தரகுமுதலாளித்துவ அரசுத்தானே என்று கூறுவது. அப்படியென்றால் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்கினால் நீங்கள் போராட வேண்டிய அவசியமே இல்லை. எனென்றால் எப்படியும் எந்த பொதுத்துறை நிறுவனமும் மக்கள் நலனிலிருந்து செயல்படப்போவதுமில்லை, செயல்படவும் முடியாது. அதேப்போல் அந்த நிறுவனங்களை கட்டியமைத்த அரசும் மக்கள் அரசல்ல. எனவே அதை அடித்து நொறுக்குவோம்… அதற்கு சவக்குழு வெட்டுவோம் என்று மறைமுகமாக அழைக்கிறீர்கள்.

    அற்புதமான உள் நோக்கம் கொண்ட வாதம். அனைத்துவிதமான இறையாண்மையையும் ஏகாதிபத்தியத்திற்கு நேரடியாக காவு கொடுக்கும் அறுசுவை மருந்து.

    இப்படிப்பட்ட தேசத்துரோகத்துக்கு உடன் செல்லவில்லை என்பதால் நம் மீது பாய்கிறார் தேவன். உங்களைப் போன்று துரோகிகளுக்கு மார்க்சியவாதியாக இருப்பதற்கு, உங்கள் வார்த்தையில் மக்களின் திரிபுவாதிகளாக இருப்பதே மேல்!!

  43. thevan says:
    14 years ago

    மக்கள் போராட்டத்தை “”””எதிர்த்து”””” போராட்டத்தை மழுங்கடிப்போர் ; யார் யாராக இருக்க கூடும் என்றும் ,இவர்களை எவ்வாறு கையாள்வது பற்றியும் முருகனும், பொதுவுடைமை சீமானும் மக்களிற்கு தெளிவு படுத்துவார்கள். நன்றி.

    இவர்கள் எவ்வாறு மழுங்கடிப்பர் : மக்கள் போராட்டத்தை எந்த விதத்திலும் கொச்சை படுத்தியே ஆவார்கள்.

    கொச்சை படுத்துவதை இலகுவாக்க தாங்களே அடிவருடிகளை மக்கள் போராட்டங்களுடன் இணைப்பார்கள்,அல்லது இணைவதை ஊக்குவிப்பார்கள் .

    • Pothuvudaimai Seeman says:
      14 years ago

      //இவர்கள் எவ்வாறு மழுங்கடிப்பர் : மக்கள் போராட்டத்தை எந்த விதத்திலும் கொச்சை படுத்தியே ஆவார்கள்.//
      மக்கள் ஒன்றுபட்டு போராடிவிட்டால், அது மக்கள் போராட்டமா! சரி. அப்பொழுது கேரள மக்களின் முல்லை பெரியாற்று அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தருவதை எதிர்த்த போராட்டம் மக்கள் போராட்டம். அதனால் உங்கள் கருத்துப்படி அணையை உடைக்க வேண்டும். ஏனென்றால், இவ்வரசு தரகுமுதலாளித்துவ அரசு. அது மக்கள் நலனிலிருந்து செயல்படாது, ஒழுங்காக பராமரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த அணை உடைந்தால் லட்சக்கணக்கான கேரள மற்றும் தமிழக மக்கள் உயிரிழப்பார்கள் என்று ஏகப்பட்ட பீதியை உங்களைப் போன்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்று பிரச்சாரம் செய்துவிட்டார்கள். இப்போது இப்பிரச்சாரம் பற்றி உங்களின் கருத்து. தமிழக மக்களின் கோரிக்கையை குப்பையில் போட்டு, கேரள மக்களுக்கு வால் பிடிப்பீர்களா!!!

      கர்நாடக நதி நீர்ப்பிரச்சனையும் இதே தான் என்பதை பெருசாக சொல்லி தெரிய ஒன்றுமில்லை. தமிழகத்தில் கூட நடக்காத அளவிற்கு கர்நாடக மக்களும், அரசியல் கட்சிகளும் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதை எதிர்த்து மிகப் பரந்தப்பட்ட போராட்டத்தை ஒற்றுமையுடன் இருந்து போராடிக் காண்பித்த வரலாறு உண்டு. தமிழக மக்களின் நலனை காட்டிக் கொடுத்து, கர்நாடக மக்களின் கோரிக்கையை கொச்சைப்படுத்தாமல், புனிதப்படுத்துவீர்களா!!

       நரமாமிச மோடியின் தலைமையில் நடந்த மக்கள் போராட்டம், மாபெரும் ஜனநாயகத்திற்கான போராட்டம்.  சிறுபான்மையின் தீவிரவாதத்தை தட்டிகேட்ட பெரும்பான்மையின் ஜனநாயகப் போராட்டம். புனிதப்படுத்தலாமா!! அல்லது வழிகாட்டலாமா!!

      காங்கிரசின் மேற்பார்வையில் நடந்த பா.ஜ.கவின் தொண்டர் படை நடத்திய பாபர் மசூதி இடிப்பு போராட்டம், சுமார் 5000 மேற்பட்டோர் கலந்துக்கொண்ட வெகுஜனப் போராட்டம். ஆதரிக்க தகுந்ததா!!!

      ஈழத்தில் தமிழினத்திற்கு எதிரான பெரும்பான்மை இனமான சிங்களவர்களின் கொலையாட்ட கலவரங்களை ஆதரிக்கலாமா?

      இப்படி சர்வதேச ரீதியிலும் அடுக்கிக் கொண்டே போகலாம்!!!

      இம்மக்களுக்குப் பின் ஒலிந்துக்கொண்டு உங்கள் உண்மை முகத்தை காட்ட மறுக்கிறீர்கள்!!! அதற்கு உங்களுக்கு, இந்த அப்பாவி மக்கள் தேவைப்படுகிறார்கள். எப்படி சிங்கள இனவெறியர்களுக்கும், நரமாமிச மோடியின் கும்பலுக்கும், கர்நாடக ஆளும்வர்க்கத்திற்கும், கேரள ஆளும் வர்க்கத்திற்கும் வர்க்கப் போராட்டத்தை எளிமையாக மறைத்து மக்களின் விடிவை வர்க்கப் போராட்டமற்ற பாதையில் காட்டுகிறார்களோ, அதைப் போல் செவ்வனே செய்ய, எங்கள் கருத்துக்கள் உங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுகிறது. பாவம் போய் மக்களுக்குப்பின் திரைசீலை போட்டு ஒலிந்துக் கொள்ளுங்கள். ஒரு நாள், அம்மக்கள் விளகி சரியான பாதையில் திரளும்போது, உங்கள் முகங்கள் கிழிக்கப்படாது, வெளிச்சத்திற்கு வரும். முகங்களை கிழிக்க நாங்கள் தேவனல்லவே…. நான் சாதாரன சீமானாயிற்றே!!!

      • thevan says:
        14 years ago

        ஆக மொத்தத்தில் நீங்கள் இருவருமே ஒத்துக்கொண்ட கூடன்குள மக்களின் உண்மையான “அரசால் உருவான” வாழ்வாதாரப் பிரச்சனைக்காக மக்கள் போராடக்கூடாது . இதுவா உங்கள் பதில்?

        சரி, போராடுவதாக இருந்தால் எப்படி,யார் தலைமையில் போராடவேண்டும், அந்த போராட்டத்திற்கு எப்படி ஆதரவு கொடுப்பீர்கள் என்றாவது கூறுங்களேன்?

        நீங்கள் சுற்றி சுற்றி போராட்ட முறையில் இருக்கும் தவறுகளை தூக்கிபிடித்து போராட்டத்தை மழுங்கடிகிறீர்கள் , மக்கள் போராட்டத்தை “”””எதிர்த்து பின்வருமாறு கூறி மழுங்கடிப்பர் : போராட்ட முறையில் தவறு இருக்கிறது ஆகவே எல்லா போராட்டமும் தவறு . போராட்ட முறையில் தவறு இருக்கிறது ஆகவே மக்களிற்கு பிரச்னை இல்லை. போராட்ட முறையில் தவறு இருக்கிறது மக்கள் பிரச்னைக்கு தீர்வு தேவை இல்லை “கொண்டையை தூரத்தில் இருந்தே கண்டு பிடித்துடுவோமேலே ” நீங்கள் இருவருமே ஒத்துக்கொண்ட “அரசால் உருவான” கூடன்குள மக்களின் உண்மையான வாழ்வாதாரப் பிரச்சனைக்கான அரசிடம் இருந்து வரவேண்டிய உத்தரவாதங்கள் பற்றி, இதுவரை எதுவுமே முன்வைக்கவில்லை. இதுவே போதும் நீங்கள் யாரின் அடிவருடி என்பதை அறிய.

        மூடு,இடி என்று நான் கூறவில்லை. கூடன்குள மக்களின் உண்மையான “அரசால் உருவான” வாழ்வாதாரப் பிரச்னைக்கு,பாதுகாப்பிற்க்கு அரசு உத்தரவாதம் அளிக்கவேண்டும். இது தான் என் நிலைப்பாடு.
        சுருக்கமாக: மக்கள் விரோத அரசால் மக்களிற்கு பிரச்னை உண்டு , மக்களிற்கு தீர்வு வேண்டும்.

        நதி நீர் :மக்களிற்கு (கேரளா ,தமிழ் நாடு ) நீர் பிரச்னை உண்டு, மக்களிற்கு (கேரளா ,தமிழ் நாடு ) தீர்வு வேண்டும்.

        • Pothuvudaimai Seeman says:
          14 years ago

          //மூடு,இடி என்று நான் கூறவில்லை. //
          மூடு என்பதுதான் உங்கள் வாதம். ஏன் மறைக்கிறீர்கள். நீங்கள் போட்ட பதில்களை நீங்களே படித்து பாருங்கள். இவ்வரசின் கீழ் அணு உலை ஏற்க முடியாது என்று கூறியுள்ளீர்கள். இதன் பொருளே மூடு என்பது தான். அதைதான் ஏகாதிபத்தியவாதியான சுப.உதயகுமாரின் கருத்தும்.

          //“அரசால் உருவான” கூடன்குள மக்களின் உண்மையான வாழ்வாதாரப் பிரச்சனைக்கான அரசிடம் இருந்து வரவேண்டிய உத்தரவாதங்கள் பற்றி, இதுவரை எதுவுமே முன்வைக்கவில்லை.//
          இது முற்றிலும் உண்மைக்கு புரம்பான வாதம். புரட்சிகரக் கட்சிகள் தலைமை தாங்கினால் மட்டுமே சரியானது, இல்லையென்றால் மக்கள் போராட்டத்தை அத்தனையும் காட்டிகொடுக்கப்படும் என்று நாங்கள் சொல்லவில்லை. திரித்து நீங்கள் கூறுகிறீர்கள். அரசால் ஏற்பட்ட “மக்கள் பிரச்சனைக்கு” ஒரு ஜனநாயக அமைப்பை ஏற்படுத்தி அனைத்து மக்கட் பிரிவினரின் கமிட்டி ஒன்று ஏற்படுத்த உடனடியாக நிர்பந்தித்து, அணு உலையை திறந்து அதன் முழு செயல்பாடு வருவதற்குள் தீர்க்க வைக்க அரசை நிர்ப்பந்தித்து போராடவேண்டும். இது மிகச் சிறந்த வழி என்று எங்களால் ஏற்கெனவே பல முறை வைக்கப்பட்டாயிற்று. சுறுக்கமாக 10 முடிவுகளை வைத்திருந்தேன். வேண்டுமென்றால் அதை ஒரு முறை சென்று படித்துப்பாருங்கள். 

          இல்லையென்றால் அணு உலையை திறப்பதற்கும், மக்கள் பிரச்சனையைத் திறப்பதற்கும் நீங்கள் ஒரு வழி மக்களுக்கு சொல்லி நீங்கள் திரட்டுங்கள். நீங்கள் எந்த ஒரு வழியையும் வைக்காமல், வெறும் கேள்விகளை முன் வைப்பதில் பெரும் வல்லவர் நீங்கள்… அப்படி ஒரு வழிமுறை எங்களுக்கு மார்க்சியம் கற்றுக்கொடுக்கவில்லை. விமர்சனத்தோடு சேர்ந்து மாற்று வழியை வைக்கவில்லை என்றால் அவன் க்ம்யூனிஸ்டே இல்லை என்று எங்களுக்கு கத்துக்கொடுத்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதிலிருந்து நாங்கள் விலகவில்லை… நீங்கள்?

      • thevan says:
        14 years ago

        மக்கள் போராட்டத்தை “”””எதிர்த்து பின்வருமாறு கூறி மழுங்கடிப்பர் : போராட்ட முறையில்,தலைமையில் தவறு இருக்கிறது ஆகவே எல்லா மக்கள் போராட்டமும் தவறு . போராட்ட முறையில் தவறு இருக்கிறது ஆகவே மக்களிற்கு பிரச்னை இல்லை. போராட்ட முறையில் தவறு இருக்கிறது ஆகவே மக்கள் பிரச்னைக்கு தீர்வு தேவை இல்லை போராட்ட முறையில், தலைமையில் தவறு இருக்கிறது ஆகவே எதனால் பிரச்சனை உருவாகியதோ அதனை பாது காக்கவேண்டும்.
        மக்கள் போராட்டத்தை “”””எதிர்த்து”””” போராட்டத்தை மழுங்கடிப்போர் ; முருகனும், பொதுவுடைமை சீமானும் தான் என்று மக்களிற்கு தெளிவு படுத்தியத்திட்கு . நன்றி.

    • முருகன் says:
      14 years ago

      சரியான விளக்கத்தை அளித்த பொதுவுடைமை சீமான் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.  எந்த விசயத்துக்கும் பதிலே கூறாமல் தேவன் அவர்கள் புதிய புதிய கேள்விகளை மட்டும் கேட்டுக்கொண்டு போவதுதான் சலிப்பூட்டுவது. சுப உதயகுமார் பின்னால் சென்ற மக்கள் தான் நீங்கள் சொல்லும் மக்களா அல்லது தமிழகம் முழுவதும் உள்ள மக்களை சொல்லுகிறீர்களா. 

      நான் விவாதித்த விசயத்தில் என்ன கருத்தை வைத்தேன் என்பதைக் கூட தெரிந்துகொள்ளமுடியவில்லை. நீங்கள் மக்களை புரிந்துகொண்டவர் என்பது வேடிக்கையான விசயம்தான். 

      நான் அணு உலையைத் திறக்க வேண்டும் என்று கோருகிறேன். அதை புரிய வைக்க முல்லை பெரியாறு பற்றிய எடுத்துக்காட்டினையும் கூறியுள்ளேன். இந்த சமூகத்திலேயே உற்பத்தி சக்தியை எப்படி பார்ப்பது என்பதைத்தான் தெளிவாக கூறியுள்ளேன். 

      மக்களுடன் நெருங்கி இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மக்களின் வாலாகவே இருக்க நேரிடும் என்று மாவோ சொல்கிறார். நீங்கள் மக்களுடன் இல்லாமல் ஏகாதிபத்தியத்தின் எடுபிடி கருத்தினை வைத்துக்கொண்டுள்ள உதயகுமாரின் பின்னால் சென்றால் இப்படித்தான் தடுமாற்றம் இருக்கும். உங்களுக்கு மார்க்சியத்தின் குருவாக உதயகுமாரே இருக்க முடியும். சரி அவரோடு நீங்கள் எவ்வளவு நட்பு பாராட்டுகிறீர்கள். எந்த முனையில் இணைந்தீர்கள்.

      மார்க்சியம் மக்கள் நலனை முன்னிறுத்தினால் ஏற்றுக்கொள்வேன் இல்லை யென்றால் மார்க்சிய கோவணத்தையும் உருவிவிடுவீர்கள் என்று கூறவது வேடிக்கையானது. மார்க்சியம் சைர்யானது என்பதற்கு காரணம் அது மக்கள் நலனை மட்டுமே சிந்தப்பதே காரணம். ஆனால் தரகு முதலாளிகளின் நலனை, ஏகாதிபத்தியத்தின் நலனை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தப் படக்கூடிய உதயக்குமாரே அனைத்து மக்களின் பிரதிநிதியாக கருதுவதுதான் வேடிக்கையானது. 

      பொதுவுடைமை சீமானும், முருகனும் வெவ்வேறு நபர் என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பது வேடிக்கையானது. 

      இலங்கையில் ஒரு பேரினவாத அரசில் இருக்கும் மக்கள் பெரும்பாண்மையாக தமிழர்களை ஒடுக்குவதை ஆதரிக்கிறார்கள். அதற்கான போராட்டமாக புத்துபிட்சுக்களுடன் சேர்ந்து அவர்கள் நடத்துகிறார்கள். அவர்களை நீங்கள் பாராட்டி கொச்சைப் படுத்தாம் அங்கீகரித்துவிட்டு போங்கள். நீங்கள்தான் மக்களின் உண்மையான நேசகர். 

      • thevan says:
        14 years ago

        மக்களுடன் நெருங்கி இருக்க வேண்டும்// நாங்கள் மக்களோடு இணைந்து நெருங்கி இருந்தால் மட்டுமே தலைமைத் தாங்கும் சக்தியாக மாறமுடியும்.இதில் இன்னும் பின் தங்கியே இருக்கிறோம். இது எங்கள் பலவீனம் தான் .இதனால் தான் அணு உலையால் வரக்கூடிய மக்களின் உண்மையான பிரச்சினையை நாம் உணர முடியவில்லை, போததற்கு கொச்சை படுத்தியுமுள்ளோம் என்பதை எண்ணி மனம் வருந்துகிறோம்.அணு உலையால் வரக்கூடிய மக்களின் உண்மையான பிரச்சினையை ,மக்களின் பாதுகாப்பை,நலனை , வாழ்வாதாரத்தை அரசு தீர்க்க வேண்டும், உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை , நாம் மக்கள் பற்றிய, எங்கள் தெளிவின்மை , பலவீனம் காரணமாக முன் வைக்காததும் எம் தவறுதான். நன்றி.

  44. Dr. Sei S. Seiskanda says:
    14 years ago

    Visit TSV.HARI.com. This new to me.

  45. thevan says:
    14 years ago

    கோவணத்தையும் //நல்லது ,மீண்டும் வாசிக்கவும் என் 5 அல்லது 6 கருத்துகளையும் கேள்விகளையும்.பதிலையும் கூறவும். //அதற்கான போராட்டமாக புத்துபிட்சுக்களுடன் சேர்ந்து அவர்கள் நடத்துகிறார்கள்.//. 1.சரியான தகவல் பிழையான உதாரணம். பிக்கு, மோடி ,….நதி நீர் ….இந்து முஸ்லிம் ..இந்திய பாகிஸ்தான் ….

    2..விதிவிலக்குகள் உதாரணமாகாது. அணு சக்தி தேவை என்று கூறுவோர் எல்லாம் ஸ்டாலின், மாவோ அல்ல.

    • Pothuvudaimai Seeman says:
      14 years ago

      //“அரசால் உருவான” கூடன்குள மக்களின் உண்மையான வாழ்வாதாரப் பிரச்சனைக்கான அரசிடம் இருந்து வரவேண்டிய உத்தரவாதங்கள் பற்றி, இதுவரை எதுவுமே முன்வைக்கவில்லை.//
      இது முற்றிலும் உண்மைக்கு புரம்பான வாதம். புரட்சிகரக் கட்சிகள் தலைமை தாங்கினால் மட்டுமே சரியானது, இல்லையென்றால் மக்கள் போராட்டத்தை அத்தனையும் காட்டிகொடுக்கப்படும் என்று நாங்கள் சொல்லவில்லை. இவ்விவாதம் முழுவதும் இதை திரித்து பலமுறை நீங்கள் கூறிவிட்டீர்கள். இது மறந்த நடந்த விசயம் அல்ல. உங்கள் ஏகாதிபத்திய வாதத்திற்கு நாங்கள் குறுக்கே நிற்பதால், எங்க்களை கொச்சைப்படுத்துவதற்காக மறந்துவிட்டீர். அரசால் ஏற்பட்ட “மக்கள் பிரச்சனைக்கு” ஒரு ஜனநாயக அமைப்பை ஏற்படுத்தி அனைத்து மக்கட் பிரிவினரின் கமிட்டி ஒன்று ஏற்படுத்த உடனடியாக நிர்பந்தித்து, அணு உலையை திறந்து அதன் முழு செயல்பாடு வருவதற்குள் தீர்த்து வைக்க அரசை நிர்ப்பந்தித்து போராடவேண்டும். நாங்கள் போராடுகிறோம். புரட்சிகர கட்சிகள் தலைமைக்கு வரும் வரை, இது மிகச் சிறந்த வழி என்றும் வர்க்கப்போராட்டத்தை கற்றுகொள்ளவும், போராட்டத்தை தீவிரபடுத்தவும் சிறந்த ஒன்று என்று எங்களால் ஏற்கெனவே பல முறை வைக்கப்பட்டாயிற்று. சுறுக்கமாக 10 முடிவுகளை வைத்திருந்தேன். வேண்டுமென்றால் அதை ஒரு முறை சென்று படித்துப்பாருங்கள். 
      இல்லையென்றால் அணு உலையை திறப்பதற்கும், மக்கள் பிரச்சனையைத் திறப்பதற்கும் நீங்கள் ஒரு வழி மக்களுக்கு சொல்லி நீங்கள் திரட்டுங்கள். நீங்கள் எந்த ஒரு வழியையும் வைக்காமல், வெறும் கேள்விகளை முன் வைப்பதில் பெரும் வல்லவர் நீங்கள்… அப்படி ஒரு வழிமுறை எங்களுக்கு மார்க்சியம் கற்றுக்கொடுக்கவில்லை. விமர்சனத்தோடு சேர்ந்து மாற்று வழியை வைக்கவில்லை என்றால் அவன் க்ம்யூனிஸ்டே இல்லை என்று எங்களுக்கு கத்துக்கொடுத்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதிலிருந்து நாங்கள் விலகவில்லை… நீங்கள்?

  46. cheran says:
    14 years ago

    அணு உலை தன வரலாறு பாத்திரத்தை நெறயு செயும்

  47. thevan says:
    14 years ago

    இவ்வரசின் கீழ் அணு உலை ஏற்க முடியாது என்று கூறியுள்ளீர்கள். இதன் பொருளே மூடு என்பது தான். அதைதான் ஏகாதிபத்தியவாதியான சுப.உதயகுமாரின் கருத்தும்.///
    please read முருகன்

    Posted on 09/24/2012 at 11:44 pm 1.
    taken out of context . 2.why didn’t you ask the same question to MURUGAN? not too late, only three days gone.

    ……………………………………………………………………………………………………………………………………….. உங்களிடம் இருந்து எதிர் பார்த்த குற்றம் கண்டுபிடிப்பு தான்.நல்ல கேள்வி, மீண்டு என் நிலைப்பாட்டை தெளிவு படுத்த. MURUGANs “”””””இந்த சமூகத்தில் அணு சக்தி வேண்டாம்”””””””,

    FYI :read my answer for Murugan’s Question. உங்களுக்கு அணு சக்தி வேண்டுமா வேண்டாமா. அப்படி மறுப்பது மார்க்சிய ரீதியானதா? “”””””இந்த சமூகத்தில் அணு சக்தி வேண்டாம்”””””””, சோசலிச சமூகத்தில், ஒரு மக்கள் அரசாங்கத்தில் ஏற்றுக்கொள்ளலாமா? வேண்டாமா?

    தலைப்பு :: அணு சக்தி 1. அணு சக்தி வேண்டுமா வேண்டாமா?:”இந்த சமூகத்தில் அணு சக்தி வேண்டாம்”,:இந்த மக்கள் விரோத ,மக்கள நலனை முன்னிறுத்தாத அரசின் அணு சக்தி வேண்டாம். இது “”””இருவரும்”””(Murugan and me but not you” ஒத்துக்கொண்ட கருத்து. …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….. //யார் கையில் ,கட்டுப்பாட்டில்:
    சோசலிச சமூகத்தில், ஒரு மக்கள் அரசாங்கத்தில் ஏற்றுக்கொள்ளலாமா? /// ஆக குறைந்தது மக்களின் பாதுகாப்பு ,அடிப்படை ஜனநாயக உரிமைகள்,அடிப்படை சமூக வாழ்வாதரங்கள் மக்கள நலனை போன்றவற்றை முன்னிறுத்திய அரசாங்கத்தில் வரவேற்போம்.இதுவும் “””இருவரும்””””” ஒத்துக்கொண்ட கருத்து. “””இருவரும்””””” MURUGAN AND ME but not you. …………………………………………………………………………………………. மேலும் : சோசலிச , மக்கள் அரசாங்கத்தில் மக்கள நலனை முன்னிறு த்திய, அரசாங்கத்தில்/// : இந்த போராட்டமே தேவையில்லை இது என் கருத்து.இருவரும் ஒத்துக்கொண்ட கருத்தாக இருக்கும் .
    therefore மக்கள நலனை முன்னிறுத்தாத அரசில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுவும் இருவரும் ஒத்துக்கொண்ட கருத்தாக இருக்கவேண்டும் என்பது தான் என் கருத்து . உங்களுடையதோ திரிபுபடுகிறது. என்பது தான் என் கருத்து.

    ……….

    • முருகன் says:
      14 years ago

      //ஆனால் உங்களுக்கு அணு சக்தி வேண்டுமா வேண்டாமா. அப்படி மறுப்பது மார்க்சிய ரீதியானதா? இந்த சமூகத்தில் அணு சக்தி வேண்டாம், சோசலிச சமூகத்தில், ஒரு மக்கள் அரசாங்கத்தில் ஏற்றுக்கொள்ளலாமா? எல்லை எப்போதுமே அணு சக்தி வேண்டாமா? அப்படி என்றால் மாவோ அணு குண்டே வேண்டும் என்று வரையறுத்திருக்கிறாரே அதை ஏற்கப் போகிறோமா? அணு சக்திக்கா சீன மக்கள் முன்னுரிமை கொடுத்து கற்றுக்கொள்ள சொன்னாரே மாவோ அதை மறுக்கப்போகிறோமா?//

      நான் மேலே எழுதிய கேள்விகளை எப்படி புரிந்துக்கொள்கிறீர்கள் என்பது தெரியவில்லை. //இந்த சமூகத்தில் அணு சக்தி வேண்டாம், சோசலிச சமூகத்தில், ஒரு மக்கள் அரசாங்கத்தில் ஏற்றுக்கொள்ளலாமா?// இதில் எங்கும் முற்றுப் புள்ளியே இல்லையே. எல்லாம் அரைப் புள்ளிதான் உள்ளது இறுதியில் கேள்விக்குறி உள்ளது. அது எனது கருத்தல்ல. உங்கள் கருத்தினை தெளிவாக மேற்கண்ட கேள்விகளுக்கு கேட்டேன். இன்னும் மாவோ சொல்லிய “அணு குண்டு வேண்டும், அது எல்லா ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் வேண்டும்” என்று மாபெரும் விவாதத்தில் அணு குண்டு பூச்சாண்டி காட்டாதீர்கள் என்ற தலைப்பில் எழுதியிருப்பது. இதையெல்லாம் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதற்காக எழுதிய கேள்விகள். என் கேள்விகளையே எனது கருத்தாக திரித்து நாம் இணைந்து விட்டோம் என்றால் உங்களை எப்படித்தான் சொல்வது. அமைதியாக இருக்கும் மக்களைப் பார்த்து ஜெயலலிதா நாங்கள் ஏற்றிய விலைவாசியை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று கொக்கரிக்காராரே, அதுப் போல் நீங்கள் கூறுவது மோசமானது. அடுத்தடுத்து வந்த எந்த கேளிவிக்கும் எனது கருத்தாக கூறுவது பிதற்றல். அதில் உங்கள் நிலையை தெளிவுபடுத்த கூறியிருந்தேன். 

      //இவ்வரசின் கீழ் அணு உலை ஏற்க முடியாது என்று கூறியுள்ளீர்கள்// என்று கூறியிருப்பது முற்றிலும் ஏற்கக் கூடியதல்ல. எல்லா அரசின் கீழும் உற்பத்தி சக்தியின் வளர்ச்சியினை தடுக்க முடியாது. அதே நேரத்தில் உற்பத்தி சக்தியினை மக்கள் சொத்தாக மாற்றுவதற்கு போராடிக்கொண்டுதான் இருப்போம். மக்கள் நலனை ஏற்காத அரசில் நீங்கள் ஆபத்து நிறைந்தது என்றி அணையையும் ஏற்கப் போவதில்லை. ஏவுகணையையும் ஏற்கப் போவதுமில்லை, எந்த கட்டுமானத்தையும் ஏற்கப் போவதில்லை. ஏன்? காப்பீடு, வங்கி ஆகியவைக் கூட மக்கள் நலனுக்கானது அல்ல. அவையும் இங்குள்ள ஆளும் வர்க்கத்திற்கு நிதி மூலதனம் திரட்டுவதற்காக கட்டியமைக்கப் பட்டதுதான். ஆகையால் எல்.ஐ.சி, அரசு வங்கிகள் ஆகியவற்றை நிமூலமாக்கப் போராடினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. 

    • முருகன் says:
      14 years ago

      மேற்கண்ட கூற்றில் //ஆனால் உங்களுக்கு அணு சக்தி வேண்டுமா வேண்டாமா. அப்படி மறுப்பது மார்க்சிய ரீதியானதா? இந்த சமூகத்தில் அணு சக்தி வேண்டாம், சோசலிச சமூகத்தில், ஒரு மக்கள் அரசாங்கத்தில் ஏற்றுக்கொள்ளலாமா? எல்லை எப்போதுமே அணு சக்தி வேண்டாமா? அப்படி என்றால் மாவோ அணு குண்டே வேண்டும் என்று வரையறுத்திருக்கிறாரே அதை ஏற்கப் போகிறோமா? அணு சக்திக்கா சீன மக்கள் முன்னுரிமை கொடுத்து கற்றுக்கொள்ள சொன்னாரே மாவோ அதை மறுக்கப்போகிறோமா?//

      நான் மேலே எழுதிய கேள்விகளை எப்படி புரிந்துக்கொள்கிறீர்கள் என்பது தெரியவில்லை. //இந்த சமூகத்தில் அணு சக்தி வேண்டாம், சோசலிச சமூகத்தில், ஒரு மக்கள் அரசாங்கத்தில் ஏற்றுக்கொள்ளலாமா?// இதில் எங்கும் முற்றுப் புள்ளியே இல்லையே. எல்லாம் அரைப் புள்ளிதான் உள்ளது இறுதியில் கேள்விக்குறி உள்ளது. அது எனது கருத்தல்ல. உங்கள் கருத்தினை தெளிவாக மேற்கண்ட கேள்விகளுக்கு கேட்டேன். இன்னும் மாவோ சொல்லிய “அணு குண்டு வேண்டும், அது எல்லா ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் வேண்டும்” என்று மாபெரும் விவாதத்தில் அணு குண்டு பூச்சாண்டி காட்டாதீர்கள் என்ற தலைப்பில் எழுதியிருப்பது. இதையெல்லாம் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதற்காக எழுதிய கேள்விகள். என் கேள்விகளையே எனது கருத்தாக திரித்து நாம் இணைந்து விட்டோம் என்றால் உங்களை எப்படித்தான் சொல்வது. அமைதியாக இருக்கும் மக்களைப் பார்த்து ஜெயலலிதா நாங்கள் ஏற்றிய விலைவாசியை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று கொக்கரிக்காராரே, அதுப் போல் நீங்கள் கூறுவது மோசமானது. அடுத்தடுத்து வந்த எந்த கேளிவிக்கும் எனது கருத்தாக கூறுவது பிதற்றல். அதில் உங்கள் நிலையை தெளிவுபடுத்த கூறியிருந்தேன். 

      //இவ்வரசின் கீழ் அணு உலை ஏற்க முடியாது என்று கூறியுள்ளீர்கள்// என்று கூறியிருப்பது முற்றிலும் ஏற்கக் கூடியதல்ல. எல்லா அரசின் கீழும் உற்பத்தி சக்தியின் வளர்ச்சியினை தடுக்க முடியாது. அதே நேரத்தில் உற்பத்தி சக்தியினை மக்கள் சொத்தாக மாற்றுவதற்கு போராடிக்கொண்டுதான் இருப்போம். மக்கள் நலனை ஏற்காத அரசில் நீங்கள் ஆபத்து நிறைந்தது என்றி அணையையும் ஏற்கப் போவதில்லை. ஏவுகணையையும் ஏற்கப் போவதுமில்லை, எந்த கட்டுமானத்தையும் ஏற்கப் போவதில்லை. ஏன்? காப்பீடு, வங்கி ஆகியவைக் கூட மக்கள் நலனுக்கானது அல்ல. அவையும் இங்குள்ள ஆளும் வர்க்கத்திற்கு நிதி மூலதனம் திரட்டுவதற்காக கட்டியமைக்கப் பட்டதுதான். ஆகையால் எல்.ஐ.சி, அரசு வங்கிகள் ஆகியவற்றை நிமூலமாக்கப் போராடினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. 

  48. cheran says:
    14 years ago

    அணு உலை எதிர்பு என்ற பேயரில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை திசை திருப்ப முயலவேண்டாம்

    • Dr. Sri S. Sriskanda says:
      14 years ago

      That is a good one Cheran. I think we are all Sri Lankan Tamils beating the hell out of us in this issue.

  49. thevan says:
    14 years ago

    புரட்சிகர கட்சிகள் தலைமைக்கு வரும் வரை, // ………………………………………………………………………………………………………………..
    நண்பா, “””புரட்சிகர கட்சிகள் தலைமைக்கு வரும் வரை”””என்ற இந்த கருத்தில் மட்டும் தான் எங்களுக்குள் அடிப்படையில் முரண் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ,நம்புகிறேன் ..மற்றைய தலைப்புகளில் கூடிய வரை மக்கள் நலனை முன்னிறுத்தும் இடங்களில் நாம் உடன்படுவதாக எனக்கு படுகிறது. ……………………………………………………………………………………………………………………..

    “புரட்சிகர கட்சிகள், தலைமை,போராட்டம் ” என்ற தலைப்புகளில் அல்லது நிலைப்பாட்டில் உங்களிடம் இருந்து வந்த சில கருத்துக்கள்,கருத்துக்கள் கூறப்பட்ட இடம் ,பொருள் எம்மிடம் இருந்த, இருக்கும் அடிப்படை”””வரும் வரை””” என்ற முரண் காரணமாக உங்களை மக்களின் நட்பு சக்தியாக எனக்கு காட்டவில்லை என்பது உண்மை.எனது வருத்தம்.

    …………………………………………………………………………………………………………………

    அதே போல் “மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு ,மக்கள் நலனை முன்னிறுத்தாத அரசு , அந்த அரசின் அணு உலை” என்ற தலைப்புகளில் அல்லது நிலைப்பாட்டில் என்னிடம் இருந்து வந்த சில கருத்துக்கள்,கருத்துக்கள் கூறப்பட்ட இடம் ,பொருள் எம்மிடம் இருந்த, இருக்கும் அடிப்படை முரண் காரணமாக என்னை “முகமூடி போட்ட”” /போலி மக்களின் நட்பு சக்தியாக,அடிவருடியாக உங்களிற்கு காட்டியிருக்கலாம். இருந்தால் எனது வருத்தங்கள்.

    ……………………………………………………………………………………………………………………………………………மேற்கூறியவற்றில் உடன் படவில்லை ஆயின் நாம் முன்னோக்கி பார்க்க முடியாது. ஏதாவது திருத்தபட வேண்டுமாயின் திருத்தவும்.

    ………………………………………………………………………………………………………………….

    புரட்சிகர கட்சிகள் தலைமைக்கு வரும் வரை///: எவ்வாறு வரும்? மக்களுடன் இணைந்து போராடாமல் எவ்வாறு வரும்? .

    இதுவே இது மட்டுமே நான் முதலில் இருந்து உங்களுடன் முரண்படும் ஒரே ஒரு கருத்து.

    நீங்கள் இணைந்து போராடாமல் இருப்பதட்குரிய கூறும் காரணங்கள் ( பலவீனமாக உள்ளோம், ஏன் மக்கள் புரட்சிகர சக்திகளை தலைமை ஏற்க மறுக்கின்றனர். இது மக்களின் பொறுப்பற்றதனம் இல்லையா….போன்றவை ) ஏற்றுக்கொள்ளவே முடியாதவை.

    …………………………………………………………………………………………………………………………..இந்த காரணங்களை, ,நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்யாவிடில், மக்களுடன் இணைந்து போராடாவிடில் ,நீங்கள் மக்களின் நட்பு சக்தியாக இருக்க முடியாது ,புரட்சிகர கட்சிகள் உருவாகாது,தலைமை கொடுக்க முடியாது, ,மக்கள் நலன் பின்தள்ளப்படும் ,சமுக ,அரசமைப்பில் மாற்றம் வராது என்பதுவும் உண்மை.

    ………………………………………………………………………………………………………………………………இந்த புரட்சிகர சக்திகள் மக்களுடன் இணைந்து போராடாமல் இருக்கும் நிலைப்பாட்டை தான் ஏகாதிபதிய அடிவருடிகளும்,மக்கள் விரோதிகளும் ,மக்களின் துயரில் அரசியல் இலாபம் தேடுவோரும் விரும்புவதும் ,பிரர்த்திப்பதுவுமாகும்.ஆகவே உங்கள் நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்வீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

    ………………………………………………………………………………………………………………………………எனது முடிவு:மீள் பரிசீலனை செய்வீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

    நன்றி.

    ………………………………………………………………………………………………………….மக்களுடன் இணைந்து போராடாவிடில், புரட்சிகர கட்சிகள் தலைமைக்கு வரும்….ம்ம் … ஆனா வராது .

    வரும் என்பது கனவு கற்பனை. வராது என்பதுவே நிஜம் .

  50. Pothuvudaimai Seemaan says:
    14 years ago

    //why didn’t you ask the same question to MURUGAN? not too late, only three days gone. //

    //நான் அணு உலையைத் திறக்க வேண்டும் என்று கோருகிறேன். அதை புரிய வைக்க முல்லை பெரியாறு பற்றிய எடுத்துக்காட்டினையும் கூறியுள்ளேன். இந்த சமூகத்திலேயே உற்பத்தி சக்தியை எப்படி பார்ப்பது என்பதைத்தான் தெளிவாக கூறியுள்ளேன்.
    // – Posted on 09/26/2012 at 6:51 pm

    இந்த விவாதம் நெடுகிலும் அப்படி அவர் குறிப்பிட்டதாக எனக்கு தோன்றவில்லை.
    இதற்கு பதில் முருகன் தான் தரனும். நம்முடையே நடப்பது கருத்துக்கான விவாதமே!! இந்த இடத்தில் முருகன் அந்த கருத்தை வைத்தால், முருகனுமே ஏகாதிபத்தியவாதத்தை முன்னெடுக்கிறார் என்பதில் அம்பலமாவார். ஆனால், இதற்கு பதில் அவரே கூறட்டும், பின்பு அவர் நிலை நமக்கு புலப்படும்.

  51. thevan says:
    14 years ago

    அவர் குறிப்பிட்டதாக எனக்கு தோன்றவில்லை///.assume you haven’t seen MURUGAN’s view. fine, I agree. Then why ,how did you “only” manage to pick my answer for Murugan’s question?. This is called “taken out of context” to divert or dilute or misinterpret the context.

  52. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    IAEA – International Atomic Energy Authority – is an effective body in inpection. Egyptian El Baradei served in it well too.

  53. thevan says:
    14 years ago

    //“அரசால் உருவான” கூடன்குள மக்களின் உண்மையான வாழ்வாதாரப் பிரச்சனைக்கான அரசிடம் இருந்து வரவேண்டிய உத்தரவாதங்கள் பற்றி, இதுவரை எதுவுமே முன்வைக்கவில்லை.//………………………………………….இது முற்றிலும் உண்மைக்கு புரம்பான வாதம்………………………………………………………………………………………………………………………………………………………………………
    சுறுக்கமாக 10 முடிவுகளை வைத்திருந்தேன். வேண்டுமென்றால் அதை ஒரு முறை சென்று படித்துப்பாருங்கள்/// …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………. கூடன்குள மக்களின் உண்மையான வாழ்வாதாரப் பிரச்சனைக்கான அரசிடம் இருந்து வரவேண்டிய உத்தரவாதங்கள் பற்றி, I can’t see anywhere, sorry. ……………………………………………………………………..Oh ,I see, are you saying there are no கூடன்குள மக்களின் உண்மையான வாழ்வாதாரப் பிரச்சனை.? ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………… you are not saying this 1.போராட்ட முறையில் தவறு இருக்கிறது ஆகவே மக்களிற்கு பிரச்னை இல்லை. …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………… but you are saying this: 2. மக்களிற்கு பிரச்னையே இல்லை ஆகவே போராட்டமே தவறானது தான். WELL DONE POTHUVUDAIMAI SEEMAN

    • Pothuvudaimai Seemaan says:
      14 years ago

      //மக்களிற்கு பிரச்னையே இல்லை ஆகவே போராட்டமே தவறானது தான். WELL DONE POTHUVUDAIMAI SEEMAN//

      Posted on 09/27/2012 at 3:41 am
      //“அரசால் உருவான” கூடன்குள மக்களின் உண்மையான வாழ்வாதாரப் பிரச்சனைக்கான அரசிடம் இருந்து வரவேண்டிய உத்தரவாதங்கள் பற்றி, இதுவரை எதுவுமே முன்வைக்கவில்லை.//

      இந்த இடுக்கையில் என் பதில் உள்ளது.
      நான் கூறியதாக சொல்லும் இந்த கூற்று அடிப்படை முகாந்தரமற்றது.

      • thevan says:
        14 years ago

        1. அரசால் உருவான” கூடன்குள மக்களின் உண்மையான வாழ்வாதாரப் பிரச்சனைக்கான அரசிடம் இருந்து வரவேண்டிய உத்தரவாதங்கள் பற்றி, இதுவரை எதுவுமே முன்வைக்கவில்லை.
        …………………………………………………………………………………………………………………………………………….2.மக்கள் போராட்டத்தை “”””எதிர்த்து பின்வருமாறு கூறி மழுங்கடிப்பர் :மக்களிற்கு பிரச்னை இருக்கிறது ஆனால் போராட்ட முறையில் தவறு. ……………………………………………………………………………………………………………………….3.நீங்கள் இணைந்து போராடாமல் இருப்பதட்குரிய காரணங்கள் ( பலவீனமாக உள்ளோம், ஏன் மக்கள் புரட்சிகர சக்திகளை தலைமை ஏற்க மறுக்கின்றனர். இது மக்களின் பொறுப்பற்றதனம் இல்லையா….போன்றவை ) ஏற்றுக்கொள்ளவே முடியாதவை.பதில்? …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….4.அணு உலை தேவை உற்பத்தி சக்தியை பெருக்க என்று கூறுவோர் எல்லாரும் புரட்சிகர சக்திகள் அல்ல .பதில்?…. …………………………………………………………………………………………………………………..: Summary:உற்பத்தி சக்தி வளர்ச்சி “மட்டும்” புரட்சிக்கு சேவை செய்யாது.இது தான் என் ஆதங்கத்தின் அடிப்படையே . மீண்டும் என் ஆதங்கத்தின் அடிப்படை : இந்த அணு உலை (மட்டும் அல்ல அரசைக்கூட) மக்களுடையதாக்க ,மக்களிட்கானதாக்க,மக்களின் பாதுகாப்பை ,நலனை ….முன்னிறுத்தியதாக்க மக்கள் போராட வேண்டும் .போராடுகிறார்கள் .மக்களுடன் இணைந்து முற்போக்கு ஜனநாயக மக்கள் நலனில் அக்கறையுள்ள சக்திகள் அவர்களை சரியான திசையில் நகர்த்த வேண்டும்.

        நீங்கள் போராடவில்லை, போததற்கு எதிராகவும் இருப்பதுவே என் கவலை .ஆதங்கத்தின் அடிப்படை.

  54. முருகன் says:
    14 years ago

    //நான் அணு உலையைத் திறக்க வேண்டும் என்று கோருகிறேன். அதை புரிய வைக்க முல்லை பெரியாறு பற்றிய எடுத்துக்காட்டினையும் கூறியுள்ளேன். இந்த சமூகத்திலேயே உற்பத்தி சக்தியை எப்படி பார்ப்பது என்பதைத்தான் தெளிவாக கூறியுள்ளேன்.//

    மேலே உள்ள கூற்று சரியாகவே கொடுக்கப்பட்டுள்ளது. ஆம் இதுவே என் கருத்து. மேலே கண்ட அதே விசயத்தை மீண்டும் தெளிவு படுத்த எண்ணுகிறேன். முக்கியமாக ஒன்று அதாவது நான் தேவன் அவர்களுக்கு கேட்ட கேள்வியை என்னுடைய கருத்தாக எடுத்துக்கொள்வது. இது அபத்தமானது அல்லது வேண்டுமென்றே என் கருத்தை திருத்தி திசைமாற்ர்றி விடுவது. 

    என் கருத்தை மீண்டும் ஒரு முறை ஆழமாக பதியவைக்கிறேன். 

    நான் அணு உலை திறக்க வேண்டும் என்று கோருகிறேன். எல்லா அணு உலையும் அது எவ்வகைப் பட்ட அரசாயினும் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று கோருகிறேன். அதாவது அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ்மட்டுமே இயக்க வேண்டும் என்று கோருகிறேன். தொழில்நுட்பத்தை வாங்கலாம். அது வரவேற்கப் படவேண்டியதே. ஆனால் முதலீட்டினை போட்டு அந்நிய நிறுவனமே நடத்தி இங்கிருந்து லாபத்தை லவட்டிக் கொண்டு போவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். அந்நிய முதலீடு போட்டு இங்கு அணு உலை தொடங்குவதை முறியடிக்க வேண்டும். அப்படி ஏற்கெனவே தொடங்கியிருந்தால் அதை அரசுடைமையாக்க, அந்நிய மூலதனத்தை பறிமுதல் செய்ய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அணு உலையையே முடக்குவது அல்ல. அவையெல்லாம் நம் சொத்து. அது மட்டுமில்லாமல் எதிர்கால சக்தி அணு சக்தியே என்பது தெளிவாகத் தெரிகிறது. மற்றவை எல்லாம் உப சக்தியாகவே மாறும். இதுவே எனது கருத்து. 

    இப்போது கூட அணு உலையைத் திற என்றும், மக்களின் பொருளாதார வாழ்விற்கு உத்தரவாதத்தை அளிக்கக் கோரியும், அவர்களின் பாதுகாப்பினை அரசு உத்தரவாதத்தினை கொடுக்க வேண்டும், மக்கள், விஞ்ஞானிகள் ஆகியோரைக் கொண்ட ஒரு கமிட்டி அமைத்து அதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதும், அவர்களுக்கு இதுவரையில் ஏற்பட்ட இழப்பீடுகளுக்கு அரசு பொறுப்பேற்று அதை வழங்க வேண்டும் என்றும், அணு உலையையே அரசுடைமையாக்க வேண்டும் என்றும் (அப்படி இதுவரை செய்யவில்லை என்றால்) என்று போராடினால் ஐக்கியப்பட வாய்ப்பிருக்கிறது. 

    மக்களின் அப்படிப்பட்ட போராட்டத்தினைத்தான் இன்று சுப உதயகுமார் அமெரிக்காவின் பிரதிநிதி ஒற்றைக் கோரிக்கையாக மாற்றி அதாவது அணு உலையை மூடு என்ற ஒற்றை முழக்கமாக மாற்றி அணி திரட்டியுள்ளார். எப்போது ஒரு குறிப்பிட்ட மக்கள் அந்த ஒற்றை முழக்கத்தை ஏற்றுக்கொண்டு பின்சென்றார்களோ அது தற்கொலைக்கு ஒப்பாகும். அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சொம்மா இருக்க முடியாது. 

    அதனால் தான் இப்படி ஏமாற்றும் இந்த சுப உதயகுமார் அவர் பின்னாலிருக்கும் சர்ச் பிஷப்புகள், அவர்களுக்கு வழிகாட்டும் பாம்பே பிஷபுகள் ஆகியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், அந்த தன்னார்வு தொண்டு அமைப்புகளுக்கு அந்த பிஷப்புகளுக்கு வரும் அந்நிய நிதியினை தடுக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் அரசு மக்களுக்கான இழப்பீட்டினையும், மீனவர்களுக்கான வாழ்வாதார பிரச்சினைகளையும் தீர்க்கவேண்டும் என்றும், பாதுகாப்பினை உத்தரவாதப் படுத்தவும் மக்கள் கமிட்டியை சார்ந்து இயங்கவேண்டும் என்றும், அப்படி அரசு மறுத்தால் அந்த அரசினை தூக்கியெறிய ஒரு நெடிய போராட்டத்தினை நடத்தி இவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் எவ்விதத்திலும் உத்தரவாதம் அளிப்பதற்கான அரசை சோசலிச அரசை அமைப்பதற்கு போராட வேண்டும் என்றும் கோரவேண்டும். 

    அதுவரையில் அணு உலையை முடக்குவது அல்ல அணு உலையை இயக்கிக்கொண்டே அதன் உத்தரவாதத்தைப் பெற வேண்டியுள்ளது, அல்லது மாற்றியமைக்க வேண்டியுள்ளது. 

    நான் கூறிய அனைத்து எடுத்துக்காட்டுகளும் மிகவும் பொருத்தமானவையே. எல்லாம் உற்பத்தி சக்தி என்ற முறையிலேயே அந்த எடுத்துக்காட்டை கூறியிருக்கிறேன். முல்லை பெரியாறு ஆனாலும், அணைப் பிரச்சினை ஆனாலும், தெலுங்கானப் போராட்டம் ஆனாலும், குஜராத் நரந்திரமோடியின் நர மாமிச வேட்டையானாலும், பாபர் மசூதி இடிப்பானாலும், ஜெர்மனியின் இன வெறி தூண்டிய நிகழ்வானாலும், இலங்கையில் சிங்கள இனவெறி தூண்டி தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுத்ததாகட்டும் எல்லாவற்றிலும் மக்களை அவர்கள் பிரச்சினையை பேசி ஏதோ ஒரு மயக்கத்தில் ஆழ்த்தி அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக, நயவஞ்சகமாக ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக செயல்பட அதே மக்களை திரட்டுகிறார்கள். இவர்களிடம் விளக்கி மாற்றி ஒரு சரியான பாதைக்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் மக்கள் ஒரு பெரிய இழப்பிற்கு பிறகே அனுபவத்தினைப் பெற்று மாறி வருகிறார்கள். அதுவரையில் சில நேரங்களில் அந்த மயக்கதிலிருந்து விடுபடுவதும் இல்லை. 

    இது உண்மையான புரட்சிகர கட்சிகளின் கடுமையான காலம். மார்க்சியத்தினை துறந்த கட்சிகளுக்கும், ஏகாதிபத்திய அடிவருடியான என்.ஜி.ஓ. க்களுக்கும் ஒரு பொற்காலம். அதை மாற்றிக்காட்ட மக்களை மீட்டெடுக்க மாபெரும் போராட்டத்தினை நடத்த வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு போராட்டத்தில் இழப்புகளைக் கூட சந்திக்க நேரலாம், ஜெர்மனியில் கம்யூனிச கட்சி போராடியபோது சந்தித்த இழப்புகளைப் போல. 

    மீண்டும் ஒரு விசயத்தை கூறிக்கொள்ள வேண்டும் . மக்களோடு நெருக்கமாக் இருக்க வேண்டும். ஆனால் நம் நிலைக்கு மார்க்சிய நிலைக்கு மக்களை உயர்த்த வேண்டும். மக்களோடு அவர்களின் கருத்து நிலைக்கு (இது சாரம்சத்தில் ஏற்கெனவே ஏகாதிபத்தியவாதிகள், இந்த பிற்போக்கு அரசுகளின் கருத்தையே பதிய வைத்து வந்துள்ளவர்கள்) தாழ்ந்து விடக் கூடாது. இதைத்தான் மக்களின் வாலாக மாறுவதல்ல, ஒரு சரியான கருத்தினை அடிப்படையில் மக்களோடு நெருக்கமாக பணியாற்ற வேண்டும். ஆனால் அது ஒரு நிகழ்வில் ஏற்பட்டு விடுவதில்லை. அதற்கு ஒரு காலம் தேவைப் படுகிறது. அது வரையில் மக்களின் நல்லெண்ணத்தை பெறுவதும், மார்க்சியத்தை அவர்கள் மத்தியில் நிலை நிறுத்துவதற்கும் போராடுவோம். 

    • thevan says:
      14 years ago

      இந்த ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகளை ,அம்பலப்படுத்தி ,தன்னார்வு தொண்டு அமைப்புகளுக்கு, வரும் அந்நிய நிதியினை தடுக்க வேண்டும் என்றும், …………………………100%agree………………………………………………….நான் அணு உலை திறக்க வேண்டும் என்று கோருகிறேன்……………………………………………………………………………………………………………… ……………………………………………………..அதே நேரத்தில் அரசு மக்களுக்கான இழப்பீட்டினையும், மீனவர்களுக்கான வாழ்வாதார பிரச்சினைகளையும் தீர்க்கவேண்டும் என்றும், ………………….agree……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………பாதுகாப்பினை உத்தரவாதப் படுத்தவும், மக்கள் கமிட்டியை சார்ந்து இயங்கவேண்டும் என்றும், ……………………………………………………………………………agree.. அப்படி அரசு மறுத்தால் அந்த அரசினை தூக்கியெறிய ஒரு நெடிய போராட்டத்தினை நடத்தி இவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் எவ்விதத்திலும் உத்தரவாதம் அளிப்பதற்கான அரசை சோசலிச அரசை அமைப்பதற்கு போராட வேண்டும் என்றும் கோரவேண்டும். well said MURUGAN………………………………………………………………………………………………………………………………………உத்தரவாதம் உத்தரவாதப் படுத்தியதன் பின்…நான் அணு உலை திறக்க வேண்டும் என்று கோருகிறேன்……..HOPE YOU WILL AGREE with these small changes…Thanks Murugan,..

  55. thevan says:
    14 years ago

    Murugan, I can see your problem, I think you are trying to implement the words of MARX or MAO without undersatnding the REALITY.தான் இருக்கும் சமூகத்தை பற்றி புரியாது ,தெளிவு பெறாது ,ஜதார்த்த கண்ணாடி இன்றி ஆரம்பகால சோவியத் சமூகம்,அதனை தலைமை தாங்கிய அரசு,கட்சி போலவே இந்திய சமூகமும் ,தலைமை தாங்கும் அரசுகளும் கட்சிகளும் உள்ளது என்ற கற்பனை ,கனவு கலையாமல் இருக்க வாழ்த்துக்கள்.

  56. thevan says:
    14 years ago

    தோழர் மாவோ இந்த முரண்பாட்டைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார். “உற்பத்தி சக்திகள் வேகமாக வளர்ச்சியடைந்தால் -உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளோடு பொருந்திவரா. மேற்கட்டுமானம் உற்பத்திஉறவுகளுடன் பொருந்தி வராது. இந்தச் சந்தர்ப்பத்தில் உற்பத்தி சக்திகளுடன் பொருந்திவரும் வகையில் மேல் கட்டுமானமும் உற்பத்தி உறவுகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும்”என்றும், “முதலில் உற்பத்தி உறவுகள் மாற்றப்படவேண்டும். அதன் பிறகு மட்டுமேஉற்பத்தி சக்திகள் பரந்த அளவில் வளர்ச்சியடைய முடியும். இது ஒரு உலகுதழுவிய விதி”என்றும் கூறுகிறார். எனவே அணுசக்தித் துறையில் தனியார் மற்றும் ஏகாதிபத்தியபன்னாட்டுக் கம்பெனிகளை ஒழித்துக்கட்டி அரசே ஏற்று நடத்தும்போது மட்டுமேஅணுமின்சாரம் தயாரிக்க முடியும். விபத்துகளின்றி இயங்கவும் முடியும். மேலும்ஏகாதிபத்திய புதிய காலனிய உற்பத்தி உறவுகளுக்கு முடிவுகட்டி சோசலிசம் மற்றும்நாடுகளின் விடுதலை ஜனநாயகத்தை உருவாக்குவது என்ற திசையில்தான் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை முழுமையாகக் கட்டவிழ்த்துவிடவும் முடியும்.

    I don’t understand these words and meanings. COULD any of you MURUGAN or POTHUVUDAIMAI SEEMAN please explain me in simple tamil.not with மேல் கட்டுமானமும் ,உற்பத்தி சக்திகளின் உற்பத்தி உறவுகளுக்கு words please. ………………………………………………………………………………………………………………………………..தனியார் மற்றும் ஏகாதிபத்தியபன்னாட்டுக் கம்பெனிகளை “”””ஒழித்துக்கட்டி அரசே”””” ஏற்று நடத்தும்போது /// “”””ஒழித்துக்கட்டி அரசே”””” I haven’t seen this term in MURUGAN’s or SEEMAN’s comments of defending Koodankula nuclear power plant. may be தோழர் மாவோ’s quote is wrong.

    or misquoted MAO’s quote ………………………………………………………………………………………………………..LET ME KNOW PLEASE.

  57. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Look like you guys are drifting. I saw Chernobyl disaster in 1986 while in USA.

    • Sharva says:
      14 years ago

      I too had the privilege of working with some people who were trying to do the clean-up. The biggest problem was to ensure the electronics won’t fry under the radiation. We had to approach CERN in Swiss for assistance. They had some certified components that could withstand certain amount of radiation for a certain period of time.

      • Dr. Sri S. Sriskanda says:
        14 years ago

        It is good to know that Mr. Sharva. Their Geiger Counters looked archaic to the ones that we were using in our labs in USA. Now the Russians know how much they are behind in technology compared to the rest of the Europe. India is very special in many ways.

  58. thevan says:
    14 years ago

    bit more fine tuning on our views: தொழில்நுட்பத்தை வாங்கலாம்////// please read the 123 pact between INDIA and USA, to find out what sort of conditons are there. . அது வரவேற்கப் படவேண்டியதே.
    INDIA would not be independant on this nuclear energy matter, but will be the slave to USA.. so called “pothuvudaimai” (anti USA) SEEMAN AGRRES with this by saying: குறிப்பாக நம்முடைய நாட்டின் அணு சக்தி வளர்ச்சி, குறிப்பிட்டளவு சுயேட்சையான பாத்திரத்தை ஆற்றி வந்துள்ளது. (123 ஒப்பந்தத்தை தவிர) ask him what is in 123 pact. ///ஆனால் முதலீட்டினை போட்டு அந்நிய நிறுவனமே நடத்தி இங்கிருந்து லாபத்தை லவட்டிக் கொண்டு போவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். அந்நிய முதலீடு போட்டு இங்கு அணு உலை தொடங்குவதை முறியடிக்க வேண்டும். அப்படி ஏற்கெனவே தொடங்கியிருந்தால் அதை அரசுடைமையாக்க, அந்நிய மூலதனத்தை பறிமுதல் செய்ய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். //// if you can’t பறிமுதல் செய்ய then what? close this அணு உலை is the only optin, is not it? USA is diluting this demand by empolying pro USA NGO’s in the field. அணு உலையையே முடக்குவது அல்ல.:this would be wrong view, it serves the purpose of USA.,don’t you think so?

    • Dr. Sri S. Sriskanda says:
      14 years ago

      Mr. Thevan, conflict or overlap of interests. That is how the human mind works.

  59. thevan says:
    14 years ago

    MURUGAN!!!! .

    bit more fine tuning on our views:

    …………………………………………………………………………………………………………………………………………………………தொழில்நுட்பத்தை வாங்கலாம்//////

    please read the 123 pact between INDIA and USA, to find out what sort of conditons are there. .
    …………….. …………………………………………………………………………………………………………………….

    //தொழில்நுட்பத்தை வாங்கலாம் அது வரவேற்கப் படவேண்டியதே///.

    ………………………………………………………………………………………………………………………………….INDIA would not be independant on this nuclear energy matter, but will be the slave to USA..

    so called “pothuvudaimai” (anti USA) SEEMAN AGRRES with this by saying: குறிப்பாக நம்முடைய நாட்டின் அணு சக்தி வளர்ச்சி, குறிப்பிட்டளவு சுயேட்சையான பாத்திரத்தை ஆற்றி வந்துள்ளது. (123 ஒப்பந்தத்தை தவிர) ask him what is in 123 pact.

    ………………………………………………………………………………………………………………………..

    ///ஆனால் முதலீட்டினை போட்டு அந்நிய நிறுவனமே நடத்தி இங்கிருந்து லாபத்தை லவட்டிக் கொண்டு போவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். அந்நிய முதலீடு போட்டு இங்கு அணு உலை தொடங்குவதை முறியடிக்க வேண்டும். அப்படி ஏற்கெனவே தொடங்கியிருந்தால் அதை அரசுடைமையாக்க, அந்நிய மூலதனத்தை பறிமுதல் செய்ய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். ////

    if you can’t பறிமுதல் செய்ய then what? close this அணு உலை is the only option, is not it?

    Indian Gov and

    USA are diluting this demand “அந்நிய மூலதனத்தை பறிமுதல் செய்” by deploying pro USA NGO’s in the field.
    if you don’t get involved:

    VAIKO or ANY PRO INDIAN GOV OR PRO USA ers will spoill this Kudankula AGITATION. WAIT AND SEE.

    ……………………………………………………………………………………………………………………….அணு உலையையே முடக்குவது அல்ல///.:this would be wrong view, it serves the purpose of USA.,don’t you think so?

  60. முருகன் says:
    14 years ago

    ”உற்பத்தி உறவுகளின் ஓரளவு வளர்ச்சி உற்பத்தி உறவுகளில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்குகிறது; ஆனால் எப்போதும் உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்பட்ட பிறகே உற்பத்தி சக்திகள் மாபெரும் வளர்ச்சி அடைகின்றன.”

    ”உற்பத்தி உறவுகள் என்பவை உற்பத்தி சாதனங்களின் உடைமை, உற்பத்தி நிகழ்முறையில் மக்களுக்கிடையிலான உறவுகள், பங்கீட்டு முறை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். சொல்லப்போனால், உடைமை முறையிலான புரட்சியே அடிப்படையாகும்”

    – மாவோ

    உற்பத்தி சக்தியினை வளர்ப்பதற்குத்தான் புரட்சியே தேவைப்படுகிறது. இங்கு உற்பத்தி சக்தியில் வரும் பிரச்சினைகளை அதைவிட மேலான உற்பத்தி உறவுகளை கொண்டுவரும்போதுதான் தீர்க்க முடியும். 

    நீங்கள் உற்பத்தி சக்திக்கெதிரான போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மார்க்சியம் உற்பத்தி உறவுகளுக்கு எதிரான போரட்டத்தையே புரட்சி என்கிறது. தற்போது கூறுங்கள் நீங்கள் அராஜகவாதியா இல்லை வறட்டுவாதியா என்பது. தற்போதே உற்பத்தி சக்தியில் எழும் மனித குல வளர்ச்சியின் பற்றாக்குறையை இந்த சமூகத்திலேயே தீர்க்க எண்ணுகிறீர்கள். இந்த உற்பத்தி சக்தியில் உள்ள குறைபாட்டினை நீங்கள் உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கும்போதுதான் தீர்க்கமுடியும்.

    எடுத்துக்காட்டு நெருப்பு: ஆரம்பத்தில் நெருப்பு காட்டை அழைத்தது, காட்டையே நம்பி வாழ்ந்தவர்களை அழித்தது. நெருப்பினை மனிதகுலம் பயன்படுத்த ஆரம்பித்தபோது அதை உருவாக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ தெரியாது, மனித குலம் வளர்ச்சி அடைய அடைய அந்த நெருப்பினை அடக்கி ஆள தெரிந்துக்கொண்டான். இன்றும் அதன் முழு ஆற்றலை கட்டுப்படுத்த தெரிந்துகொண்டான் என்று கூறிவிட முடியாது. இன்றும் மிகப் பெரிய தீ விபத்துக்கள், எண்ணெய் நிறுவனத்தில் ஏற்படும் தீ விபத்துக்கள் ஆகியவற்றை முழுவதுமாக கட்டுப்படுத்த தெரிவதில்லை. எந்தளவுக்கு மனித இனம் முன்னேறியிருக்கிறதோ அந்தளவுக்கே அதை கட்டுப்படுத்த தெரிந்துக்கொண்டோம். அதே நேரத்தில் இதையெல்லாம் கற்றுக்கொண்ட பிறகு நெருப்பை பயன்படுத்துவோம் என்று நினைத்திருந்தால் மனித இனமே இருந்திருக்காது. இன்னும் காட்டுமிராண்டி நிலையில்தான் வாழ்ந்துக்கொண்டிருப்போம். ஏனென்றால் அதுதான் உணவினை பதப்படுத்தவும், சமைக்கவும் பயன்பட்டது. அதுதான் இரும்பை, உலோகத்தை உருக்கி அதன் மூலம் உற்பத்தி கருவிகளை பயன்படுத்த முடிந்தது. (இதில் ஒரு வேடிகக் என்னவென்றால் முதலில் உலோகம் மனிதனை மனிதன் வேட்டையாடவே இனம் இனமாக அழித்துக்கொள்ளவே இந்த உலோகம் பயன்பட்டது). உற்பத்தி சக்தியான இந்த உலோகத்தையும் அதன் அதற்கு பயன்பட்ட அந்த நெருப்பினையும் ஒழித்துவிட்டு, ஒரு உன்னதமான சோசலிச சமூகத்தில் கூட அல்ல ஒரு கம்யூனிச சமூகத்தில் அந்த நெருப்பையும், அந்த உலோகத்தையும் உருவாக்கலாமா. ஏனென்றால் அந்த உலோகம்தான் இன்று வளர்ச்சியடைந்து குண்டுகளாக, கத்திகளாக பல கோடிப் பேரை தினம் தினம் அழித்துக்கொண்டிருக்கிறது. 
    இதற்கு மாறாக உற்பத்தி உறவினை அடிப்படையில் அமைந்த மனித குலத்திற்கு எதிராக மட்டுமே பயனபடுத்தி வந்த இனக்குழு சமூகத்தினை ஒழிந்து வர்க்க சமூகமான அடிமை சமூகம் உருவாகி, அடிமை சமூகத்தினை ஒழித்து ஒரு நிலப்பிரபுத்துவ சமூகத்தினை ஒழித்து, ஒரு முதலாளித்துவ சமூகத்தினை உருவாக்குவதற்கு, பிறகு சோசலிச சமூகத்திற்கு என்று உற்பத்தி உறவுகளை மாற்றியமைத்து அந்த நெருப்பின் ஆற்றலை இன்று ஆக்க சக்திக்காக பெருவீதமாக பயன்படுத்தும் நிலை ஏற்படுத்தியது, அதன் கோரத்தினை அடக்க ஆளவும் கற்றுக்கொண்டது என்று உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பது சரியானதா. இதில் எது அராஜகம் உற்பத்தி சக்தியான அணு சக்தியா, உற்பத்தி உறவான முதலாளித்துவமா எதை ஒழிப்பது புரட்சி. அதற்கு மேற்கோளாக மாவோவின் கருத்தினை கொடுத்திருக்கிறேன். ஏனென்றால் மாவோ ஏதோ மார்க்சிலிருந்து மாற்றிவிட்டார் என்ற வாதம் வருகிறது. 

    உலையையே முடக்குவது அல்ல என்ற எனது கூற்றுக்கு நீங்கள் மறுமொழி கூறியபோது அது தவறான கூற்று என்றும், அது அமெரிக்காவிற்கு சேவை செய்கிறது என்பதாக நீங்கள் கருதவில்லையா என்றும் கேட்டிருக்கிறீர்கள். எல்லா உற்பத்தி பொருட்களும் நம்மைப் போன்ற ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப் பட்ட நாடுகளில் அவர்களுக்கே பிரதானமாக சேவை செய்கிறது. இதில் அமெரிக்கா மட்டுமல்ல இது போன்ற வேறு சில ஏகாதிபத்தியவாதிகளுக்கும் சேர்த்தே. அதற்காக நாம் செய்யும் எல்லா உற்பத்தியையும் நிறுத்தி விடலாமா. அழித்து விடலாமா. இது அராஜகத்தைத் தவிர வேறு எதுவும் கொண்டுவராது. அப்படி உற்பத்தி செய்வதை மாற்றியமைக்கத்தான் உற்பத்தி உறவினை மாற்றியமைக்க புரட்சியினை கோருகிறோம். நீங்கள் தலைகீழாக புரிந்துக்கொண்டிருக்கிறீர்கள். அப்படி அவர்களிடமிருந்து பறிமுதல் செய்ய தற்போது முடியவில்லை என்றால் எல்லாவற்றையும் மூடுவது என்று முடிவெடுப்பது அதைவிட மிக உச்சபட்ச அராஜகமாகும். இப்படி ஒரு முடிவு எல்ல உற்பத்தியிலும் எடுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏன் அணு உலைக்கு மட்டும் இதை பொருத்துகிறீர்கள். அனேகமாக அதன் ஆற்றலில் அளவினைக் கண்டு மட்டுமே பயம். இந்த பயம்தான் பின் தங்கிய மக்களின் அறியாமை. அதையே மார்க்சியத்தை பின்பற்றுபவர்கள் செய்வது அறிவுடைமையாகுமா. 

    அணு சக்திக்கு வருவோம். காலவதியான அணு உலைகளை மூடக் கோருவதும், புதிய தொழில்நுட்ப ரீதியிலான அணு உலைகளை திறக்கக் கோருவதும், அணு உலை பாதுகாப்புக் கோரி போராடுவதும், தனியார் முதலீட்டின் அடிப்படையில் அமையும் அணு உலைகளை எதிர்த்து அதை அரசுடைமையாக்கக் கோருவதும், அணு சக்தி வளர்வதற்கும் பாதுகாப்பிற்கும் தடையாக இருக்கக் கூடிய உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கப் போராடுவதும்தான் நம்முன் இருக்கும் ஒரே வழி.

    அதை விடுத்து உற்பத்தி சக்தியில் இருக்கும் முரண்பாடுகளை தீர்க்க இந்த சமூகத்திலேயே முடியும் என்று நினைப்பது வறட்டுவாதமேயாகும். அதற்காகவே பல்வேறு புரட்சிகர அமைப்புகள் என்.ஜி.ஓ. க்களின் கருத்தினை ஏற்று சுற்றுப்புற சூழல் சீர்கேடுகளை எதிர்த்து போராடுவதையும், இயற்கைக்கும் மனிதனக்கும் உள்ள முரண்பாடுகளை இந்த சமூகத்திலேயே தீர்க்க முடியும் (வேதியல் பொருட்கள், மைக்கா, பல்வேறு கழிவுகள் இன்னும் இது போல) என்று கோருவதும் கற்பனா வாத சோசலிஸ்ட்டுக்கள் என்பதையே காட்டுகிறது. 

    //நம்முடைய நாட்டின் அணு சக்தி வளர்ச்சி, குறிப்பிட்டளவு சுயேட்சையான பாத்திரத்தை ஆற்றி வந்துள்ளது. (123 ஒப்பந்தத்தை தவிர)// என்ற கருத்திற்கு 123 ஒப்பந்தம் என்பது என்ன என்று கேட்கப்பட்டிருக்கிறது. அது சம்பந்தமான கருத்துக் கூறியவர் அது குறித்து பதில் அளிக்கவில்லை என்பதால் அதையும் நானே அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளேன். 

    இது அமெரிக்க இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தையே குறிக்கும். இது தற்போது போடப்பட்டிருக்கும் இரஷ்ய ஒப்பந்தத்திலிருந்து வேறுபட்டதாகும். அதாவது அணு சக்தி ஒப்பந்தம் அமெரிக்காவுடன் நாம் போட்டிருப்பது ஒரு அடிமை ஒப்பந்தம். அது ஹைட் சட்டத்திற்கு உள்ளடக்கிய ஒப்பந்தமாகும். அதாவது அமெரிக்கா இராணுவ அரசியல் நடவடிக்கை எந்த நாட்டின் மீதாவது எடுத்தால் அதற்கு துணையாக நம் இராணுவம் பொருளாதாரம் சேவை செய்யவேண்டும். தற்போது ஈரானுக்கு அமெரிக்க சார்பாக நாம் செய்வது. ஏற்கெனவே ஆப்கானில் நாம் செய்துகொண்டிருப்பது. இவையெல்லாம் நம் முடிவல்ல அமெரிக்க இராணுவ அணு சக்தி ஒப்பந்தத்தாலேயே செய்கிறோம். அவர்களுக்காகவே செய்கிறோம். அதில் இந்திய ஆளும் வர்க்க நலன் ஒரு தரகர் என்றளவில் உள்ளடங்கியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து நாம் பின்வாங்கினாலும், அல்லது அமெரிக்காவே துண்டித்துக்கொண்டாலும் (இராணுவ, அரசியல் ஒத்துழைப்பைப் பொறுத்து இது அமையும்) நாம் நம் அணு உலைகளை அவர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டுசெல்ல வேண்டும். நாம் எந்த அணு சக்தி ஆய்வினையும் மேற்கொள்ளக் கூடாது. எல்லாவற்றையும் அழிக்க வேண்டும். ஏற்கெனவே நாம் தோரியத்தில் முன்னேறியிருப்பதிலிருந்து ஒரு பின்னோக்கியப் பாய்ச்சல். ஆகையால்தான் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் என்று கோரவேண்டும். அதற்காக அணு சக்தியையே அழிக்க வேண்டும் என்று கோரமுடியாது. 

    ஆனால் மேற்கண்ட எந்த விளக்கத்திற்கும் பதில் சொல்லாமல் நீங்கள் புதிய கேள்விகளை கண்டுபிடிக்கப் போகிறீர்கள் என்பது நிச்சயம். அதற்கும் பதில் அளிப்பதின் மூலம் நான் என்னை சரியாக வளர்த்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்கிறேன். ஆனால் நிச்சயம் நீங்கள் அகநிலைவாத சிந்தனைக்குள், ஏற்கெனவே ஏற்படுத்திக்கொண்ட மைண்ட் செட் (mind set) இருந்து வெளிவர முயற்சிக்க வேண்டும். நேர்மையாக விவாதிக்க வேண்டும். மாவோவோ அல்லது வேறு மார்க்சிய ஆசான்களோ நான் கூறிய மேற்கூரிய கருத்துக்கள் சோசலிச கட்டத்துக்கானது என்பதை எங்காவது கூறியிருக்கிறார்களா என்பதை கூறவும். நானும் அறிந்து தெளிந்துகொள்ள தயார். அதை விடுத்து தங்கள் கற்பனையை தங்களின் ஆசையை அணு உலை விசயத்தில் திணிக்காதீர்கள். இதுவே கற்பனாவாத சோசலிச கருத்துக்களாகும்.

    • Dr. Sri S. Sriskanda says:
      14 years ago

      Mr. Murugan, the guerilla tactics of Chairman Mao only suited Ho Chi Minh who fought the French and Americans in Vietnam. 

  61. thevan says:
    14 years ago

    இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் என்று கோரவேண்டும்///காலவதியான அணு உலைகளை மூடக் கோருவதும், புதிய தொழில்நுட்ப ரீதியிலான அணு உலைகளை திறக்கக் கோருவதும், அணு உலை பாதுகாப்புக் கோரி போராடுவதும், தனியார் முதலீட்டின் அடிப்படையில் அமையும் அணு உலைகளை எதிர்த்து அதை அரசுடைமையாக்கக் கோருவதும், அணு சக்தி வளர்வதற்கும் பாதுகாப்பிற்கும் தடையாக இருக்கக் கூடிய உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கப் போராடுவதும்தான் நம்முன் இருக்கும் ஒரே வழி.//// இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் என்று கோரவேண்டும்/// ஏன் இந்த பம்மாத்து கோரிக்கை. ஏன் இந்த முகமூடி. இரத்து செய்யாவிட்டாலும் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்ததம் மூலம் வந்த அணு சக்தி தேவை என்ற கோரிக்கையையும் நிலைப்பாட்டையும் முன் வைத்துக்கொண்டு ஏன் இந்த பம்மாத்து கோரிக்கை. ஏன் இந்த முகமூடி.

    புரியலை.
    உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.???x £%

    • முருகன் says:
      14 years ago

      //இரத்து செய்யாவிட்டாலும் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்ததம் மூலம் வந்த அணு சக்தி தேவை என்ற கோரிக்கையையும் நிலைப்பாட்டையும் முன் வைத்துக்கொண்டு ஏன் இந்த பம்மாத்து கோரிக்கை// எப்போது எங்கே? எனக்கே தெரியாத என் கருத்து உங்களுக்கு தெரிந்திருக்கிறதே? நீங்கள் இந்தியாவின் அதி சிறந்த ஜோசியக்காரரோ?

      போர்ட்டு கம்பெனி வந்துவிட்டது இந்தியாவுக்குள். அதை கைப்பற்றப் போகிறீரா அல்லது அவர்களிடம் கொடுத்து வழியனுப்பப் போகிறீர்களா. கார்கம்பெனியே இந்தியாவுக்கு வேண்டாம் என்கிறீரா? அமெரிக்காவின் கார் கம்பெனி வேண்டாம் என்கிறீரா? விசித்திரமான சிந்தனையாளர். நீங்கள் மார்க்சிய அடிப்படையை ஏற்கிறீரா என்பதை அறியாமலே உங்களுடன் விவாதிப்பது எந்தவொரு முடிவையும் நீங்கள் வந்தடைய முடியாது. 

      • thevan says:
        14 years ago

        போர்ட்டு கம்பெனி வந்துவிட்டது இந்தியாவுக்குள். அதை கைப்பற்றப் போகிறீரா அல்லது அவர்களிடம் கொடுத்து வழியனுப்பப் போகிறீர்களா/// 1.கைப்பற்றுதல்:போபால் யூனியன் கார்பைடை நீங்கள் 30 வருடங்களிட்கு முன் கைப்பற்றிய விதம் இந்த ஊரே அறியும். கார்கம்பெனியே இந்தியாவுக்கு வேண்டாம்/// எதுக்கு சாமி ஏகாதிபத்திய எதிர்ப்பு , NGO கள் எதிர்ப்பு முகமூட்டிகள்.

  62. thevan says:
    14 years ago

    நீங்கள் உற்பத்தி சக்திக்கெதிரான போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்//

    அமெரிக்காவிலும் உற்பத்தி உறவு இருக்கிறது ,அதே உற்பத்தி உறவு வேண்டும் என்று தான் அடம் பிடிக்கிறீர்கள் . வாழ்க

    • முருகன் says:
      14 years ago

      அமெரிக்காவே தனது எஜமானனாக ஏற்று தற்போது அணு உலையை ஆதரித்துகொண்டிருந்துவிட்டு இது என்ன கேள்வி? இதுவரை நான் கொடுத்த பதிலில் எந்த பதிலும், அல்லது எந்த கருத்தும் கூறாமல் கிளைக்கு கிளைக்கு தாவிக்கொண்டே போவது வேடிக்கையாக இருக்கிறது. மதவாதி போல் ஒரு கருத்தை ஏற்றிக்கொண்டு என்ன பேசினாலும் இருதியில் “நீ எப்படி பேசினாலும் எல்லாம் கடவுள் செயல்தான்” என்று கூறுவாரே அதேப் போல் எதை பேசினாலும் இருதியில் அமெரிக்கா, ரஷ்யா என்று வாதத்தை திசை திருப்புவது வேடிக்கையாக இருக்கிறது. நான் கூறிய எந்த கருத்துக்கும் இறுதிவரை எந்த ஆமோதிப்பும், அல்லது எந்த மறுப்பும் எடுத்துக்காட்டுகளோடு கூறாமல்,அ ல்லது மார்க்சிய அரசியல் நின்று விவாதிககாமல் மனம் போன போக்கில் விவாதிப்பது உங்களுக்கு பொழுதுபோகவில்லை என்பதையே காட்டுகிறது.

  63. thevan says:
    14 years ago

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தேவை தான், ஆனால் அது இந்திய சமூக, அரசியல் அமைப்பில் வளர்ச்சியை மாற்றத்தை கொண்டுவரக்கூடியதாக இருக்க வேண்டும். விடுத்து இன்று இருக்கும் இந்திய சமூக அரசியல் அமைப்பை, வளர்ப்பதட்க்காக , பாதுகாக்கவாக இருந்தால் அது பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒழிய, இந்தியாவின் சமூகத்தின் வளர்ச்சி அல்ல.

    அதாவது பொருளாதார வளர்ச்சியும் சமூகத்தின் வளர்சியும் சமாந்தரமாக ஆக இருக்க வேண்டும். இந்தியாவின் சமூக வளர்ச்சிஜை கட்டுப்படுத்துவதே மேல்கத்தய நாடுகளின் சதி.தவறான ,பலவீனமான மக்கள் விரோத போராட்டக்குழுக்களை உருவாக்கி மக்கள் போராட்டங்களை மழுங்கடிக்கும்.,அதாவது இன்று இருக்கும் இந்திய சமூக அரசியல் அமைபிற்கு மறைமுக உதவி.

    • முருகன் says:
      14 years ago

      மேற்கண்ட கருத்துக்கள் பொதுவாக சரியாகவே இருக்கிறது. ஆனால் அது எந்தக் கருத்து எந்தக்குழு என்பதை புரிந்து எந்தக் கருத்துக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்பதை தெளிந்து செயல்பட்டால் நல்லதுதான். அதேப் போல் பொருளாதார வளர்ச்சியும் சமூகத்தின் வளர்ச்சியும் சமமாக இருக்கவேண்டும் என்பது சோசலிச சமூகத்தில் பெருமளவு சாத்தியம். இடைப்பட்ட சமூகத்தில் அதற்கான போராட்டம் மட்டுமே முன்னெடுக்க முடியும். 

      முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி சக்திகளின் உயர்ந்த மட்ட வளர்ச்சி உற்பத்தியை ஒன்று குவித்து செயல்படுத்தும். ஆனால் அதனுடைய பரிவர்த்தனை சமமாக இருக்காது. அதனுடைய பலன் ஒரு கும்பலை மட்டுமே சென்றடையும். அதை ஒழுங்குபடுத்துவதான் சமூகப் புரட்சியாகும். இங்கு உற்பத்தி உறவுகளே அந்த உற்பத்தி சக்திக்கு தடையாகி போனதால், அந்த உற்பத்தி உறவுகளை தகர்ந்தெரிந்து அந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டத்திற்கு அதை ஒழுங்குபடுத்தவும் ஒரு புதிய உற்பத்தி உறவுகளை கொண்டுவரவேண்டியிருக்கிறது. அது இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியைத் தவிர, மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தைத் தவிர வேறு மாற்றமில்லை. 

  64. thevan says:
    14 years ago

    எப்போதும் உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்பட்ட பிறகே உற்பத்தி சக்திகள் மாபெரும் வளர்ச்சி அடைகின்றன- மாவோ///////// ”அர்த்தம்1 .உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்பட முன் உற்பத்தி சக்திகள் மாபெரும் வளர்ச்சி அடையாது .ஆகவே உற்பத்தி சக்தியினை வளர்ப்பதற்குத்தான் “”””””புரட்சியே””””” தேவைப்படுகிறது. இங்கு உற்பத்தி சக்தியில் வரும் பிரச்சினைகளை அதைவிட மேலான “”””புரட்சிகரமான உற்பத்தி உறவுகளை”””””””””” கொண்டுவரும்போதுதான் தீர்க்க முடியும்.

    உற்பத்தி உறவுகளில் “”””””புரட்சிகரமான மாற்றம் அற்ற””””” உற்பத்தி சக்திகளின் மாபெரும் வளர்ச்சி மட்டும் (அது எப்படி வந்தாலென்ன, யாரிடம் இருந்து பெற்றால்லென்ன), தேவை என்பதன் மூலம் நீங்கள் உற்பத்தி உறவுகளில் புரட்சிகரமான மாற்றதிற்கெதிரான போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். அதாவது இன்று இருக்கும் இந்திய சமூக அரசியல் அமைபிற்கு மறைமுக உதவி.

    • முருகன் says:
      14 years ago

      இன்னும் கூட தெளிவில்லாதவராகவே இருக்கிறீர்கள். அல்லது உங்கள் கருத்துக்கு எதிராகவே நீங்களே இருக்கிறீர்கள். உற்பத்தி உறவுகளை மாற்றுவதே உற்பத்தி சக்தியை பெருமளவில் வளர்ப்பதற்குத்தான் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இப்போது அதே உற்பத்தி சக்திக்கு எதிராகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இப்போதும் நீங்கள் போராட வேண்டியது உற்பத்தி உறவுகளுக்கு எதிராகவே.

      அணையை உடைப்பது அராஜகம். அதை விடுத்து அணையால் பலனடையும் நிலபிரபுக்களை, மடாதிபதிகளை, அந்நிய பன்னை நிறுவனங்களை ஒழித்து அந்த இடத்தில் மக்களின் உடைமைகளை, தேசிய உடைமையாக மாற்றுவதே சாலச் சிறந்து. நீங்கள் கற்பனாவாத சோசலிசத்திற்கு செல்ல ஆசைப்படுகிறீர்கள். அதாவது ஆரம்பத்தில் விவசாயிகள் நவீன மயத்தை எதிர்த்து அன்று தொழிற்சாலை கருவிகளை அடித்து நொறுக்கினார்கள். அதே நிலையைத் தான் உங்கள் சிந்தனை காட்டுகிறது. நீங்கள் போராடவேண்டியது முதலாளிகள் வைத்துக்கொண்டிருக்கும் உற்பத்தி கருவிகளை எதிர்த்து அல்ல முதலாளிகளை எதிர்த்து. மீண்டும் மீண்டும் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அதுவரையில் எந்த கம்பெனிகளையும் நிறுவவிட மாட்டோம் என்பதோ, எந்த நவீன மயத்தையும் ஏற்க மாட்டோம் என்பதோ அல்ல. இங்கு உடமை மட்டுமே பிரச்சினை. அந்த கருவியல்ல. தயவு செய்து பழைய குப்பையில் தலையிலிருந்து கொட்ட முயற்சி செய்யுங்கள், விதண்டாவாதம் செய்யாதீர்கள்.

  65. thevan says:
    14 years ago

    அப்படி அரசு மறுத்தால் அந்த அரசினை தூக்கியெறிய ஒரு நெடிய போராட்டத்தினை நடத்தி இவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் எவ்விதத்திலும் உத்தரவாதம் அளிப்பதற்கான அரசை சோசலிச அரசை அமைப்பதற்கு போராட வேண்டும் என்றும் கோரவேண்டும்///// போராட வேண்டும் ,போராடுவோம் ஆனால். அணு உலைகளை திறக்க வேண்டும். அணு உலைகளை திறக்க போராடுவதும்தான் நம்முன் இருக்கும் ஒரே வழி. அணு உலை பாதுகாப்புக் கோரி போராடுவதும், //// பாதுகாப்பு கோரிக்கை நிறைவேறாவிட்டாலும் அணு உலைகளை திறக்க வேண்டும். அணு உலைகளை திறக்க போராடுவதும்தான் நம்முன் இருக்கும் ஒரே வழி. தனியார் முதலீட்டின் அடிப்படையில் அமையும் அணு உலைகளை எதிர்த்து அதை அரசுடைமையாக்கக் கோருவதும்,/// அரசுடைமையாக்காவிட்டாலும் தனியார் முதலீட்டின் அடிப்படையில் அமையும் அணு உலைகளை திறக்க வேண்டும். அணு உலைகளை திறக்க போராடுவதும்தான் நம்முன் இருக்கும் ஒரே வழி. அணு சக்தி வளர்வதற்கும் பாதுகாப்பிற்கும் தடையாக இருக்கக் கூடிய உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கப் போராடுவதும்தான் நம்முன் இருக்கும் ஒரே வழி/// உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கப் போராடாவிட்டாலும் அணு உலைகளை திறக்க போராடுவதும்தான் நம்முன் இருக்கும் ஒரே வழி. வாழ்க அணு உலை திறப்பு போராட்டம் .

    • முருகன் says:
      14 years ago

      இன்றுள்ள உடனடி இலக்கு நீண்ட கால இலக்கு என்று இரண்டு திட்டங்கள் உண்டு. தற்போது சேவைத் துறைகள் எல்லாம் தனியார் மயம் ஆக்கிவிட்டார்கள். அதை எதிர்த்து அனைத்தும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று எல்லா புரட்சிகர அமைப்புகளும் போராடுகிறது. அதே போல் அரசு நிறுவனங்களை தனியார்மயம் படுத்துதலை எதிர்த்தும் போராடுகிறார்கள். இந்த உலகமய காலக்கட்டத்தில் அனைத்தை தனியார் மயத்தையும் ஒழித்து அரசுடைமையாக்கப் போராடக்கோருவது உடனடி திட்டமாகவும், முதலாளித்துவ சமூகத்தையே ஒழிப்பது நீண்ட காலத் திட்டமாகவும் இருக்கும்.

      தொழிற்சங்கம் நடத்தும் புரட்சிகர அமைப்புகள் கூட அந்நிய நிறுவனத்தில் கூலி உயர்வுக்கும், ஒப்பந்தத் தொழிலாளர் ஒழிப்புக்கும் போராடவேண்டியுள்ளது. அதே நேரத்தில் கட்சி அந்த முதலாளித்துவ கட்டமைப்பையே தூக்கியெறிய மக்களை திரட்ட வேண்டியிருக்கிறது. இது இரண்டும் இல்லையென்றால், ஒன்று அராஜகவாதம் தலைதூக்கும், அல்லது வலது சந்தர்ப்பவாதம் தலைதூக்கு. தயவு செய்து இன்றுள்ள நடைமுறை அரசியலில் பங்குகொள்ளுங்கள். இல்லையென்றால் கற்பனைவாத சோசலிச சித்தாந்தமே உங்களிடம் பலம்பெறும். நடைமுறையில் ஊன்றி நின்றால் உண்மையில் உடனடி இலக்கு நீண்ட கால இலக்கு ஆகியவற்றை தெளிவு பெற முடியும்.

  66. thevan says:
    14 years ago

    நன்றி முருகன்!!! இன்றுள்ள “”உடனடி இலக்கு”” :அணு உலை பாதுகாப்புக் கோரி போராட வேண்டும்,மக்களின் பாதுகாப்பு ,அடிப்படை ஜனநாயக உரிமைகள்,அடிப்படை சமூக வாழ்வாதரங்கள் போன்றவற்றை முன்னிறுத்தி போராட வேண்டும் என்பதை ,புரிந்துள்ளதிற்கு, ஏற்றுக்கொண்டதிற்கு , ………………………………………………………………………………………………………………………. இவை நிறைவேறாவிட்டால் உறுதிப்படுத்தப்படாவிட்டால், செய்யாவிட்டால் என்ன செய்வீர்கள் ? இதற்கு பதிலை கூறுங்கள்.

    இந்த “உடனடி இலக்குகள்” நிறைவேறா விட்டாலும் பரவாயில்லை,இவற்றிக்காக போராடாவிட்டாலும் பரவாயில்லை அணு உலை திறக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு நிச்சயம் திரிபு வாதிகளின் நிலைப்பாடே. ……………………………………………………………………………………………………………………உடனடி இலக்கையே கொச்சைப்படுத்தும் திரிபுவாதிகள் நிச்சயம் நீண்ட இலக்கிட்க்காக போராடுவார்கள்: வாழ்க அணு உலை திறப்பு போராட்டம் .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...