வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு தேவையான உடனடி உதவிகளை வழங்குவதற்காக 51 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவசரகால நிவாரண பிரதி இணைப்பாளர் கதரின் பிறேக் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
வெள்ளத்தினால் 43 பொதுமக்கள் பலியாகியுள்ளதுடன் 4 பேர் காணமல் போயுள்ளதாக அனர்ந்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்த பின்னர் நாளை வெள்ளிக்கிழமை கதரின் பிறேக் திரும்பிச் செல்லவுள்ளார். _








ஏழை நாடுகளீல இயற்கையும் விரோதியாய் இருப்பதும் இறவன் விளயாட்டின் விந்தை.