Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இன அழிப்புக்கு இந்திய அரசு எவ்வைகையில் உதவுகின்றது? : S.G.ராகவன்

இனியொரு... by இனியொரு...
04/01/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
3
Home பிரதான பதிவுகள் | Principle posts

manmohanபோரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான இந்தியாவின் வீடமைப்புத் திட்டம், வன்னியில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதை, இலங்கை இராணுவத்தின் வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான “இந்தியாவின்” போரைத்தான் தாம் நாடத்தியதாக இலங்கை அதிபர் ராஜபக்சே பகிரங்கமாக கூறியிருக்கிறார் இவை செய்திகள்தான்.
தற்போது வடகிழக்கில் நடப்பவை என்ன? இலங்கை அரசு மிகத் தீவிரமாக இன அழிப்பை நடாத்தி வருகின்றது, இவ்வின அழிப்புக்கு இந்திய அரசு எவ்வைகையில் உதவுகின்றது என்பதை பார்ப்போம்

1. இலங்கை அரசு வடகிழக்கில் தமிழர் தாயகத்தில் அரச காணிகள் , தனியார் காணிகள் என்பவற்றை அபிவிருத்தி என்ற போர்வையில் பறிமுதல் செய்து இராணுவத்தினரையும் சிங்கள மக்களையும் குடிஏற்றுகின்றனர்

2. வலுக்கட்டயாமாக தமிழர்களை அவர்களின் வாழ்விடங்களில் இடம் பெயரச் செய்து, அவர்களின் காணிகளை கைப்பற்றுகின்றனர் .

3. இலங்கை அரசு செய்த, செய்து கொண்டிருக்கின்ற இனப் படுகொலை, இன ஒதுக்கல் கொள்கை காரணமாக நாட்டை விட்டு புலம் பெயர்ந்து சென்ற, சென்று கொண்டிருக்கின்ற தமிழர்களின் காணிகளை இலங்கை அரசு, மற்றும் சிங்களப் படைகள் அடாத்தாகவும் , இலங்கை அரசின் தமிழர் விரோத சட்டங்கள் மூலமாகவும் பறிமுதல் செய்கிறது.

4. தமிழர் காலம் காலமாக வழிபட்டு வந்த கோவில்கள் கலாச்சார வாழ்விடங்கள் திட்டமிட்ட வகையில் தமிழர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப் படுகிறது.

5. வடக்கு கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரித்து வெலிஓயா எனும் புதிய மாவட்டத்தை தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவு திருகோணமலை போன்ற மாவட்டங்களை இணைத்து அங்குள்ள பெருவளவு தமிழர்களை விரட்டி அடித்தும் (முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் 1984 இல் முல்லைத்தீவு மணலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இனப் படுகொலையில் இப்பகுதிகளில் பூர்விகமாக வாழ்த்த தமிழ் மக்கள் பெருமவளவில் கொல்லப் பட தற்போது எஞ்சி இருக்கும் தமிழ் மக்களின் காணிகளையும் சிங்கள அரசு பறிமுதல் செய்கிறது. அங்கு சிங்கள குடியேற்றங்களை செய்து வருகிறது.

6. இப்பொழுது தீவிரமாக தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றம் நிகழந்துவரும் பிரதேசங்கள் மாவட்ட அடிப்படையில் தருகிறேன்.#

sri_Lanka_mapயாழ்ப்பாண மாவட்டம் – மாதகல், தெள்ளிபலை, பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி, வளலாய் , மாவிட்டபுரம், கைதடி , ஆனையிறவு, வடமராச்சி கிழக்கு, போன்ற பகுதிகளில் சிங்கள மக்கள் இரவோடு இரவாக நிரந்திரமாக் குடியேற்றப் பட்டு விட்டார்கள் இவர்களில் பெருமளவில்இராணுவத்தினரின் குடும்பங்களாகும் , இவ்வாறு குடியேற்றப்பட்ட சிங்கள குடியிருப்புகளில் சிங்களப் பாடசாலைகள் , பௌத்த கோவில்கள் , தபால் அகங்கள் உட்பட்ட சகலவசதிகளும் அடங்கும் . இப்பகுதிகளில் பூர்விகமாக வாழந்த மக்கள் அனைவரும் விரட்டப் பட்டு அகதிகளாக அநாதரவான நிலையில் உள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம்– கிளிநொச்சி நகர், முழங்காவில், முறிகண்டி , மற்றும் சிங்களப் படைகள் நிலை கொண்டுள்ள முகாம்களில் நிரந்தர வீட்டுத் தொகுதிகள் அமைக்கப் பட்டு அங்கும் சிங்களவர்கள் குடியேற்றப் படுகின்றனர்.

மன்னார் மாவட்டம் – மடு , திருக்கேதீசுவரம் (சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற 2500 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழர் பிரதேசம்) மன்னார் மேற்கு பிரதேசம் என்பன தற்போது வேகமாக சிங்களக் குடியேற்றம் நிகழும் பிரதேசங்களாகும்.

வவுனியா மாவட்டம் – நெடுங்கேணி , மாமடு, கனகராயன் குளம், உட்பட இன்னும் பல பிரதேசங்கள் அரச ஆதரவுடன் தீவிரமாக சிங்கள மக்கள் குடியேற்றப் படுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம்: கொக்கிளாய் , நாயாறு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு,முள்ளியவளை , தண்ணீரூற்று, இரணைமடு, மற்றும் முல்லைத்தீவு கடலோரப் பிரதேசங்கள் போன்ற தமிழர் பிரதேசங்கள் சிங்களவர்கள் குடியேற்றங்கள் அரச ஆதரவோடு நடைபெறுகின்றன.

திருகோணமலை மாவட்டம் : மாவட்டத்தின் பெரும்பான்மை பிரதேசங்கள் ஏலவே ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டன, ஏனைய பகுதிகளிலும் தொடர் குடியேற்றங்கள் நடை பெறுகின்றன.

மட்டக்களப்புமாவட்டம் : வாகரை, குடும்பி மலை போன்ற பிரதேசங்கள் மிகத் தீவிரமாக சிங்கள குடியேற்றம் நடைபெறுகின்றது. இங்கு ஏலவே தமிழர் பிரதேசம் ஓன்று புனானை என சிங்கள பெயர் மாற்றப் பட்டு அங்குள்ள தமிழர்கள் கொள்ளப் பட்டு துரத்தி அடிக்கப் பட்டு விட்டனர்.

அம்பாறை மாவட்டம் : இம்மாவட்டம் முழுவதுமே தற்போது திகாமடுல்ல என சிங்கள பெயராக மாற்றப் பட்டு எஞ்சி இருக்கும் தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் பறிக்கப் பட்டு கொண்டிருக்கிறது. அதில் தற்போது பொத்துவில் என்ற தமிழ் தொகுதி சிங்கள மயமாக மாற்றப் படுகிறது . ஏலவே பாணமை எனும் தமிழ் பிரதேசம் சிங்கள மயமாக்கப் பட்டு விட்டது அங்குள்ள தமிழர்கள் பயத்தின் காரணமாக வலுகட்டாயமகா சிங்களவர்களாக மூன்று தலைமுறைக்கு முதல் மாற்றப் பட்டுவிட்டனர் இங்குள்ள தமிழர்களில் வயது முதிந்தவர்களுக்கு மாத்திரம் தமிழ் தெரியும். அவர்களது பிள்ளைகள் சிங்களப் பெயரோடு தமிழ் தெரியாதவர்களாக மாறிவிட்டனர்.

· இவ்வின அழிப்புக்கு இந்திய அரசு எவ்வைகையில் உதவுகின்றது?

இந்தியாவின் புகழ் 50000 வீட்டுத் திட்டம், இலங்கை, இந்திய கூட்டு சதித் திட்டம் என்பதே உண்மை ஏனெனில் இவ் வீட்டுத் திட்டத்தில் 75 சதவீதமானவை சிங்கள ராணுவ குடியிருப்புகளுக்கும், சிங்கள குடியிருப்புகள் கட்டவுமே பயன் படுகின்றன. இதில் வெளிப் படையாக மடு , நெடுங்கேணி, மணலாறு மற்றும் வவுனியா என்பவற்றில் சிங்கள வடமாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில் சிங்கள குடியேற்றம் இந்திய அரசின் வீட்டுத்திட்ட நிதி உதவியுடன் நடை பெறுகின்றது. இவ்விடயம் தமிழ் அரசியல் வாதிகளால் இந்திய தரப்புக்கு தெரியப் படுத்தியும் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை இந்தியாவின் தூதுவர், உதவி தூதுவர் என்போருக்கு இவ்விடயம் முறைப்பாடு செய்யப்பட்டும் எந்த மாறுதலும் இல்லை.

இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து இலங்கை வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர் பெரும் பான்மையை அழித்து அவர்களை சிறுபான்மை ஆக்கும், அல்லது முற்றாகவே தமிழர்களை இலங்கையில் இருந்து ஒழிக்கும், திட்டம் இவர்களிடம் இருப்பதாகவே தெரிகிறது.

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் தமிழர் விரோத போக்கு காரணமாக ஒரு இனத்தை அழிக்கும் கொடிய செயல் திட்டத்தை இலங்கை அரசுடன் சேர்ந்து இந்திய அரசு செய்கிறது. இதன் மூலம் இந்திய அரசு அடையப் போகும் நன்மை எதுவும் இல்லை. இவை எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். இந்தியா நினைப்பது ஓன்று மாத்திரமே! தமிழ் நாட்டுக்கு அருகில் இலங்கையில் தமிழர் பலம் பொருந்தி இருப்பதை விரும்பவில்லை. இந்த தெளிவற்ற தமிழர் விரோத மனப் பான்மையே இலங்கையில் தமிழர்களை இன அழிப்பு செய்ய இந்திய அரசு தூண்டுகிறது.

இதனை தமிழ் நாட்டு தமிழர்கள் எவ்வித அரசியல் சாயமும் அற்று ,வன்முறையற்று ,தமிழ் நாட்டையும் தாண்டி இந்தியா முழுவதும் முன்னெடுத்துச் சென்று இலங்கையில் தமிழ் இனப் படுகொலை இந்திய அரசின், பூரண உதவியுடன் நடைபெறுகின்றது என்பதை அம்பலப் படுத்தி அதனை நிறுத்தி ஈழத் தமிழர்களுக்கு உரிமையை வாங்கி கொடுப்பதே சிறந்த செயல் பாடாக அமையும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
Tags: பேரினவாதம்அரச பயங்கரவாதம்
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை த.தே.ம.மு முற்றாக நிராகரிக்கின்றது

சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை த.தே.ம.மு முற்றாக நிராகரிக்கின்றது

Comments 3

  1. உமா says:
    13 years ago

    இலங்கையின் களநிலவரத்தை எதுவித பக்கசார்பு ம் இன்றி விபரிக்கும் கட்டுரை. இலங்கை அரசையோ அல்லது இந்திய மத்திய அரசையோ குறைகூறிப் பயன் இல்லை. ஒருவரை ஒருவர் குறைகூறுவதிலும், தான் சொல்வதே சரியெனவும் பிடிவாதம் பிடிக்கும் ஈழத்தமிழர்களான நாம் மாறும்வரை இந்நிலையே தொடரும். எமது கண்குருடானாலும் பரவாயில்லை மற்றவருக்குச் சகுனம் சரியில்லாமல் இருந்தால் ுபோதும் என்பதே எமது கொள்கை. ஒரு சில புறநடைகள் இருக்கலாம். இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தனர் என இன்னும் சொற்ப ஆண்டுகளில் சரித்திரத்தில் நமது பிள்ளைகள் படிக்கும். அதற்குத் தயவுசெய்து எம்மைத்தவிர வேறு எவரையும் காரணம் சொல்லாதீர்கள்.

  2. tamil sangam says:
    13 years ago

    உங்கள் தரவுகளுக்கு நன்றி ஆனால் தரவுகள் போதாது என்னும் நி றைய தரவுகள் தந்திருக்கலாம் புத்தளமும் , சிலாபமும் நீர்கொழும்பு போன்ற இடங்களிலும் தமிழர் களின் அடையாளம் அழிக்க பட்டு விட்டதே இதனை நிறுத்துவதாயின் நாம் முறியடிப்பு ராஜதந்திரத்தை பயன்படித்திக்கொள்ளவேண்டும்

    • tamil sangam says:
      13 years ago

      இந்த Link ஐ கட்டாயம் பார்க்கவேண்டும்

      https://www.facebook.com/photo.php?fbid=442547252489099&set=a.127607360649758.29778.100002014846086&type=1&theater

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...