Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இனியன் என்னும் ராஜராஜசோழன் தூக்கில் தொங்கினான் : பொன்னிலா

இனியொரு... by இனியொரு...
08/20/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
44
Home பிரதான பதிவுகள் | Principle posts

சட்டக்கல்லூரி நான்காம் ஆண்டு மாணவரும் ஈழப் போராட்டம், மனித உரிமை விஷயங்களுக்காக போராடியவருமான தோழர் அசோக்குமார் என்னும் இனியன் இரண்டு நாட்களாகியும் நினைவு வராமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கிறார். நினைவு வருமா? பிழைப்பாரா? பிழைத்தாலும் முன்பைப் போல நினைவாற்றலோடு எழுந்து நடக்க முடியுமா? எதுவுமே தெரியவில்லை.

தன் பிள்ளையின் எதிர்காலம் குறித்த எந்த நம்பிக்கையும் இல்லாத அந்த ஏழைத் தாய் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வருவோரையும் போவோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். நமக்காக பல பிரச்சனைகளுக்காகவும் போராடிய தோழர் இனியனைத் தாக்கிய திருக்கழுக்குன்றம் காவல்நிலைய அதிகாரி ஆல்பர்ட் விலசனும் அவரது அடியாள் படையும் இன்னும் தண்டிக்கப்படாத நிலையில் சாதி வெறி என்னும் இருண்ட மேகம் மிக வேகமாக நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. தலித்துக்களுக்காகப் பேசவோ போராடவோ உண்மையான தலைவர்கள் எவரும் இல்லாத நிலையில் சில காலம் குறைந்திருந்த தாக்குதல் மீண்டும் தமிழகம் முழுக்க தலையெடுக்கிறது.

அத்தியாவசியப் பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, மின்வெட்டு, நிலங்கள் பறிக்கப்படுதல், வலுக்கட்டாய இடப்பெயர்ச்சி என மக்களின் துன்பங்கள் அதிகரித்துச் செல்லச் செல்ல மக்கள் வன்முறையும் ஒரு பக்கம் வெடித்து வருவதைக் காண முடிகிறது. அத்தகைய தன்னெழுச்சிப் போராட்டங்களைக் கூட போலீஸ் இரும்புக் கரம் கொண்டு நொறுக்கும் போது தலித்துக்கள் எல்லாம் எம்மாத்திரம். அப்படி தன்னெழுச்சியாய் கிளர்ந்ததுதான் கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம்.

சென்னை சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவரான அசோக்குமார் என்னும் இனியனை திருக்கழுக்குன்றம் போலீசார் தாக்கியது தொடர்பாக, 18-ஆம் தேதி சென்னை பாரிமுனைச் சந்தியை மறித்து நடந்த ஏழு மணி நேரப் போராட்டம். வழக்கம் போல மத்யமரின் பப்ளிக் நான்சென்ஸ் மனோபாவத்தையும் மீறி சுமார் ஏழு மணி நேரம் சென்னையை உலுக்கியது.

17-ஆம் தியதி அசோக்குமார் பயணம் செய்த பேருந்தில் அவருக்கும் பக்கத்து இருக்கைக்காரருக்கும் வாய்த்தகராறு ஏற்பட டிரைவர் பேருந்தை திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி இருவரையும் போலீசிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றிருக்கிறார். தன்னை ஒரு சட்டக்கல்லூரி மாணவர் என்று அறிமுகம் செய்து கொண்ட இனியனை திருக்கழுக்குன்ற காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் தலைமையில் சில போலீசார் விசாரித்துக் கொண்டிந்த போது.

அங்கு வந்த இன்னொரு காவலர் ‘’சார் இவன் தான் சார் இலங்கையில் போர் நிறுத்தம் கேட்டுப் போராடுவான். போஸ்டர் ஒட்டி டார்ச்சர் பண்ணுவான். செங்கல்பட்டு இலங்கைத் தமிழர் அகதி முகாம் பிரச்சனையிலும் நமக்கெதிராக கூட்டம் போட்டு போஸ்டர் ஒட்டினதெல்லாம் இவனும் இவனோட ஆளுங்களும்தான் சார்” என்று வந்த காக்கிச் சட்டை போட்டுக் கொடுக்க. திருக்கழுக்குன்ற காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் ’’பறத் தேவுடியாப் பயலா நீயி…… என்றபடி எட்டி உயிர் நிலையில் உதைத்திருக்கிறார். அடுத்தது அத்தனை காக்கிச் சட்டைக்காரர்களும் ஒன்று சேர்ந்து இனியனைச் சுற்றி நின்று ஆல்பர்ட் விலசன் தலைமையில் நிர்வாணமாக்கி உதைத்திருக்கிறார்கள். அடிவயிற்றிலும், விதைப் பகுதியிலும் விழுந்த உதைகளைத் தாங்கிக் கொள்ள முடியாத இனியன் அப்படியே நிலைகுலைந்து விழ நிர்வாணமாக லாக்கப்பில் போட்டிருக்கிறார்கள். மெள்ள மெள்ள இனியன் லாக்கப்பிலேயே நினைவும் இழக்க பொய்யான தகவலைச் சொல்லி போலீஸ் இனியனின் உறவினர்களை அழைக்க அவர்கள் வந்து மருத்துவமனையில் சேர்த்திருக்க்கிறார்கள்.

அங்கு கொண்டு செல்லப்பட்ட இனியன் காவல்துறையினரின் தாக்குதலால் வலி தாங்க முடியாமலும் அவமானத்தாலும் தூக்கில் தொங்கி விட்டார். தூக்கில் தொங்கி கொஞ்ச நேரம் கழித்து தூக்கில் தொங்கியவரை இறக்கி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இனியன் இப்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவீர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

தாக்குதல் நடந்து இரண்டு நாட்களாகியும் இன்னமும் குற்றவாளிகளான திருக்கழுக்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்படவில்லை.

இனியன் தூக்கில் தொங்கினார் என்று செய்தி கசியத் துவங்க சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் பாரிமுனை சந்திப்பை நான்கு பக்கமும் அடைத்து போராடினார்கள்.திருக்கழுக்குன்றத்தில், செங்கல்பட்டில், விழுப்புரத்தில், கோவையில், என வழக்கறிஞர்களும் சட்டக்கல்லூரி மாணவர்களும் போராடத் துவங்க சென்னையில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் ஏழு மணி நேரம் நீடித்தது. அந்த போராட்டத்தில் கூட போலீசும் அரசும் நீதித்துறையும் மாணவர்களை எப்படியாவது ஏமாற்றி கலைந்து போகச் செய்ய மட்டுமே நினைத்ததே தவிற குற்றவாளியான ஆல்பர்ட் வில்சனை கைது செய்யவோ சஸ்பெண்ட் செய்யவோ முன்வரவில்லை. ஜாமீனில் வெளிவரக்கூடிய லேசான காயத்தை ஏற்படுத்தியதாக ஒரு வழக்கை மட்டும் ஒப்புக்கு பதிவு செய்து அந்த சாதி வெறியனை பாதுகாத்திருக்கிறது தமிழக அரசு.

முப்பது லட்சம் நாற்பது லட்சம் செலவு செய்து தனியார் பொறியியல் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் கோடீஸ்வர வீட்டுப் பிள்ளைகளும் சமீபத்தில் சில போராட்டங்களை நடத்தியதைப் பார்த்தோம். காரணம். கல்லூரி வண்டி சரியில்லை, லேபில் விளக்கில்லை, டீயில் டிகாஷன் இல்லை, காபியில் கலர் இல்லை என்பதுதான் அவர்கள் போராட்டத்தின் நோக்கம்.

இம்மாதிரி பணக்கொழுப்பெடுத்த இவர்களின் போராட்டங்களில் எனக்கு எப்போதுமே அனுதாபம் இருந்ததில்லை காரணம். எந்த பொதுப்பிரச்சனைக்காவது இவர்கள் வந்திருப்பார்களா? கல்வி தனியார் மயமாக்கப்பட்டு பெரும் வணிகக் கொள்ளையில் ஈடுபடும் கல்வி வள்ளல்கள் குறித்தெல்லாம் இவர்கள் என்றாவது கவலைப்பட்டிருப்பார்களா? இடஒதுக்கீடு,சமச்சீர்கல்வி, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி போன்ற கோஷங்களில் இந்த மாணவர்களின் கருத்தைக் கேட்டுப்பாருங்கள் அப்போது தெரியும் இந்த பாப்கார்ன் பேபிகளின் உண்மை முகத்தை.

சரி உன் பிரச்சனைக்குத்தானே போராடுகிறாய் அதற்கு ஏன் முகத்தை மாவோயிஸ்டுகள் மாதிரி இப்படி துண்டால் மூடி விட்டு டிவியில் பேசுறீங்க………….துணியை எடுத்துட்டு துணிச்சலா பேச வேண்டியதுதானே என்றால் பயம் அவன் ஆள் வெச்சு அடிப்பானாம்………….ஆனால் சட்டக் கல்லூரி மாணவர்கள்.
சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பிரச்சனை என்றாலும் அரசியல் பிரச்சனை என்றாலும் ஈழத்தில் போர் நிறுத்தம் கோரினாலும் இட ஒதுக்கீடு கோரிக்கை என்றாலும் முதலில் போராடுவது சட்டக்கல்லூரி மாணவர்கள் அல்லது வழக்கறிஞர்கள்தான் காரணம்.

அவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருகிறார்கள். அதுவும் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து படிக்க வருகிறார்கள். ஆகவே சமூக உணர்வும் கோபமும் ஏனைய ஆதிக்க சாதி மாணவர்களுக்கு இருப்பதை விட கூடுதலாகவே இவர்களுக்கு இருக்கும். போராடும் சக்திகளில் தலித் மாணவர்கள் இருக்கும் போது போராட்டங்களை ஒடுக்கும் சக்திகளாக இருக்கும் காவல்துறையில் யார் அதிகம்? ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட ஒரு இனத்தை மிக அதிகமாக காவல்துறையில் சேர்த்தார்கள். ஜெ ஆட்சியில் கொடியன்குளம், என்றால் கருணாநிதி ஆட்சியில் மாஞ்சோலை தொழிலாளர்கள் 19 பேர் அடித்துக் கொல்லப்பட்ட தாமிரபரணிப் படுகொலை என எதை எடுத்துக் கொண்டாலும் அதற்கு முழுக் காரணமும் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியைச் சார்ந்த சாதி வெறி போலீஸ்தான் காரணம். இதை நான் மண்டைக்காடு கலவரத்தில் அநாமதேயமாக கொல்லப்பட்ட மீனவ மக்கள் படுகொலையில் துவங்கி கண்டு வருகிறோம். நாடார்கள், தேவர்கள், நாயக்கர்கள், போன்ற சமூகத்தவர்கள் போலீசில் செல்வாக்குச் செலுத்தும் நிலையில் தலித்துக்களின் எதிர்ப்புப் போராட்டத்தை தமிழக போலீஸ் எதிர்கொள்கிற விதத்தை காக்கிச் சட்டைக்குள் இருக்கும் சாதி வெறியை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

சட்டகல்லூரி மாணவர் இனியனைத் தாக்கியதும் இதே சாதி வெறிதான். இது ஏதோ காவல்துறையில் மட்டுமே உள்ளது என்று நினைத்து விடாதீர்கள். அரசு அலுவலகத்தில், பொது வெளியில் என எல்லா இடங்களிலும் நிரவி நிற்கிறது சாதி வெறி.

பார்ப்பன எதிர்ப்பு, சாதி மறுப்பு என்றெல்லாம் பேசிய திராவிட இயக்கம் தமிழ் மக்களை கலசார ரீதியில் மாற்ற என்ன முயர்ச்சியை மேற்கொண்டது எனத் தெரியவில்லை. பார்ப்பனர்களிடம் மட்டுமே குவிந்து கிடந்த அதிகாரத்தை பார்ப்பனரல்லாத முற்பட்ட சாதிகளுக்கும், பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதிகளுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்த திராவிட இயக்கம் தலித் மக்களை வீதியில் விட்டு விட்டது. பார்ப்பன எதிர்ப்பு என்கிற அளவில் பேசப்பட்ட திராவிடக் கொள்கை அதற்கப்பால் எதையுமே செய்யாமல் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் தலித் மக்களுக்கு எதிராகச் செய்யும் வன்கொடுமைகளைத் தட்டிக் கேட்காததோடு அதை ஓட்டுச் சீட்டு அரசியலுக்காக ஊட்டி வளர்க்கவும் செய்து விட்டது. திராவிட இயக்கத்தின் போக்கில் அது பெரியாருக்குப் பின்னர் நீர்த்துப் போய் விட்ட நிலையில், தமிழ் தேசியவாதிகளை மட்டும் சாதி வெறி விஷயத்தில் யோக்கியமானவர்களாக நினைத்து விடாதீர்கள். தமிழ் ஈழம், தனித் தமிழ்நாடு, காவிரி, முல்லை இதைத் தாண்டி ஒரு தமிழன் இன்னொரு தமிழனின் வாயில் திணிக்கிற மலத்தை மறைமுகமாக அவர்களின் சாதி மனம் ஆதரிக்கிறதே தவிற தலித் மக்களுக்காக அவர்களின் சமத்துவ வாழ்வுரிமைக்காக போராடியதே இல்லை. இதை எழுதும் போது ஒரு செய்தி படித்தேன்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட மு.க. அழகிரி பரிந்துரைத்திருப்பதாகவும். சட்டமன்றத் தேர்தலுக்குள் எப்படியாவது மதுரை விமானநிலையத்துக்கு தேவரின் பெயரை வைத்து விட வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் ஆவலில் இருப்பதாகவும் அதற்கான மும்மூரமான வேலைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. விமானநிலையம் மட்டுமல்ல அங்கிருக்கும் உயர்நீதிமன்ற கிளைக்குக் கூட தேவர் கோர்ட் என்று பெயர் வைத்தாலும் ஆச்சரிப்பட ஒன்றும் இல்லை. பயமாய் இருக்கிறது. கொண்டாடப்படும் எந்தச் சாதியிலும் பிறக்காத மனிதர்கள் ஒழிந்து கொள்ளவோ தபிக்கவோ ஒரு இடமில்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் வருகிறது. இந்த பயத்தைத்தான் குஜராத்தில், காயர்லாஞ்சியில், மண்டைக்காட்டில், தாமிரபரணியில், வெண்மணியில், கொடியங்குளத்தில், உத்தபுரத்தில் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.இல்லை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த பயம்தான் இனியனை தூக்கில் தொங்கவிட்டது. என்ன செய்யப் போகிறோம்?

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

Sri Lanka - Stop the Genocide and Ethnic Cleansing - meeting 21st August 2010 - Westminster - London

Comments 44

  1. இளா says:
    16 years ago

    வெட்கமாக இருக்கிறது.. வாழ்க சூத்திர ஆட்சி…

    • thamilan says:
      16 years ago

      தமில்நாட்டு டதமிலா எப்பபொது விலிது எல்ல பப்கொரை

      Tamils Tamil nadu wake up your too much in factional in fighting flim star worship. Tamil who went to the west in recent IT boom in Indian can you please see around the world not counting dollars to Rupees.

      You have failed save the Tamil in Ceylon. That Tamil Eelam would example county for you guys in TN. North indian and other sates want to keep in subjugation not in enlightenment  

  2. அருண் says:
    16 years ago

    திராவிட இயக்கத்தின் நேர்மறை விஷயங்கள் போய் இப்போது ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பார்ப்பனர்களிடமும். இன்னொரு பக்கம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளிடம் உள்ள மேல் மட்ட பிரிவினரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டிருகிறது. தமிழகம் தனக்கான மாற்று அரசியல் பாதையைத் தேடிக் கொள்ள வேண்டும்.

    • ஏடு குண்டல வாடா says:
      16 years ago

      ஆல்பட் வில்சன் பார்பனனா?

      • thamilmaran says:
        16 years ago

        வெள்ளயனும் ஒருவகை பார்ப்பணனே

  3. சகோதரன் says:
    16 years ago

    இனியன் இனி வருவாரா!

  4. அருண் says:
    16 years ago

    துவண்டு போய் சுய நினைவின்றிக் கிடக்கிறான் இனியன். நினைக்கவோ, பார்க்கவோ மிகவும் வெதனையாக இருக்கிறது. இபப்டிப் போய் தூக்கில் தொங்கவா? அவனை வீட்டில் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள். தொங்கத்தான் போகிறோம் தொங்குவதற்கு முன்னால் அந்த எஸ், ஐ நாயின் குத்திக் கொன்று விட்டாவது தூக்குப் போட்டிருக்கலாம். சே…. அருவருப்பாக இருக்கிறது தமிழகச் சூழல்.

    • ஏடு குண்டல வாடா says:
      16 years ago

      அந்த இனியன் இதை செய்திருக்கனும்…

  5. auto says:
    16 years ago

    தமிழ் நாட்டு மக்கள் அவர்கள் பிரச்சனைக்காகப் போராட வேண்டும். அது நடக்காவிட்டால் விடுதலைக்கான வழியே இல்லை

  6. mohanraj jebamani says:
    16 years ago

    anti bramin protest or anti hindi protest are not real. it is just to keep the tamilians attention towards those slogans. it was a ploy drafted and enacted by the telugus.

    • xxx says:
      16 years ago

      You have some sense of humor!!! Ha. Ha. Ha.

      • Bharathi says:
        16 years ago

        Backward Caste people are enjoying all the benefits and at the same time suppressing the Dalits. Yellow Shawl Film Producer Thatha will take up the Anti Brahmin shouts every now and then to divert the attention. Only few people among the dalits have understood that. Above article should be read by all. I recommend M.Venkatesan’s book on ‘EVR’ to Mr.XXX.

  7. Yathavan says:
    16 years ago

    அடக்குமுறைகள் உள்ளவரை போராட்டங்கள் தொடரும்

  8. murugu says:
    16 years ago

    மாணவர் போராட்டத்தைச் சீரழித்தது திராவிட இயக்கம். போராட்ட குணம் இன்று சட்டக் கல்லூரி மாணவர்களிடம் மட்டுமே தங்கியுள்ளது. அதற்கு ஆதரவு தெரிவிப்பது கடமை.

    முருகு.

  9. kannappu says:
    16 years ago

    இந்தக் கொடூரத்தைச் சகித்தல் ஒரு பாரிய மானிடக்குற்றம்!
    தமிழ் மகனே நீ இனியும் சாதிச்சாக்கடைக்குள் நெளியாதே!
    இதோ பார் எத்தனை கோடி மனிதர் உன் முன்னால்! நீ சாதியைச் சொல்லி இவர்களுக்கு முன்னால் என்ன சாதிக்கப்போகிறாய்? உன்னில் ஒருவனை நீ இழிந்தவனாய்க் கண்;டால் அவனுக்கு கல்வியைக்கொடு காணியைக்கொடு விழுந்தவனைக் காப்பற்றவேண்டியதுதான் மானிடப்பண்பு… தமிழே ஒன்றாய்ப் பார்.. ஒற்றுமையாய்ப் பலப்படு..சாதி ஒழிப்பவனே தன் இனத்தைக் காப்பவன்..சாதி ஒரு சாபம்! சாதித் தவளைகளே வெளிவாருங்கள்.. வெளிச்சம் அங்கே மின்னுது…ஒன்றாகு..இந்தக் கொடுமை ஒழியவேண்டும்.. ஒவ்வொரு மனிதனும் உண்ணவேண்டும் உறங்க வேண்டும்..மட்டுமல்ல தன்மானக்காற்றைத் தான் பிறந்த மண்ணில் சுவாசிக்கவேண்டும்.. வ

  10. feroz says:
    16 years ago

    இனியும் இந்த போலி ஜனநாயகத்தைநம்பி ப்ரியொஜனம் இல்லை எனவெ ஒரு புதிய ஜனநாயக புரட்சிக்கு அனி திரல்வொம்

  11. ХИХИ says:
    16 years ago

    டேய் பாடுங்கள ..உங்க இனியன் புல் மப்புல பஸ் ல இருந்தவன்கிட்ட பிரச்னை பண்ணி இருக்கண்டா வெங்காயம் களா…
    தெரியாம தான் கேக்குறேன் உங்க அக்க ,ஆய் ,பொண்டாட்டி சேலைய புடிச்சு உருவுனா சும்மா இருப்பிங்கலடா ?
    முதலில் ஓட்டுனரும் ,

    நடத்துனரும் பேருந்தை காவல் நிலயம் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏன்டா?

    அங்கே அவர்களால் அந்த இனியனை கட்டுபடுத்த இயலவில்லை .அவர்கள் அவனை கீழே இறங்க சொல்லி இருக்கலாம் ஆனால் அவன் தன ஒரு சட்ட மேதை என்று நினைத்து அவர்களை அடிக்க சென்று இருக்கலாம்..வேறு வழி இல்லாமல் அவர்கள் காவல் நிலையத்திற்கு பேருந்தை ஒட்டி சென்று விட்டனர்.

    இவ்வாறு சறுக்கு அடித்து விட்டு சென்றால் அங்கே காவலன் என்ன ராஜா மரியதைய கொடுப்பான் .அதன் நைய புடைத்தான் .அவமானம் தங்காமல் தூக்கு போட்டுள்ளான்.

    இனியனோடு பிரச்சினை இடுபட்ட இன்னொரு நபரின் நிலை என்ன.? அவரை ஏன் காவல்துறை தண்டிக்கவில்லை காரணம் இனியன் தண்ணி அடித்து விட்டு பிரச்னை செய்ததான் .

    முதலில் இனியன் சரக்கு அடிக்கவில்லை என்று அவனுடைய இரத்தத்தை சோதித்து அதனை அறிக்கையை ஸ்கேன் செய்து இங்கே கண்பித்து விட்டு அப்புறம் உங்கள் சவ்டலை அடியுங்கள்..
    அப்புறம் தலித் என்ற கூடரதிக்குள் ஓடி ஒளிந்து கொள்ளலாம் நீங்கள்.
    அதற்க்கு என்னமோ ஆட்சியாளர்களை குறை சொல்றது எல்லாம் ஏமாற்று வேலை.

    • kathirvel says:
      16 years ago

      சம்பவத்தில் நான் பஸ்சிலும் போலிசிலும் நின்றவன். அப்படி எதுவும் நடக்கவில்ல்லை. இனியன் குடி போதையில் இல்லை. மிக நிதானமாக நாகரீகமாக தான் நடந்துகொண்டார். சாட்சி தேவைபட்டால் சொல்ல தயார்.

      • ХИХИ says:
        16 years ago

        சரி கதிர்..நீங்கள் சொல்வது உண்மை என்றால் பேருந்தை ஏன் அவர்கள் காவல்நிலையம் கொண்டு செல்ல வேண்டும் என்பது என் முதல் சந்தேகம்.

        இனியனை விட்டு விடுங்கள் . நீங்களும் நானும் பேருந்தில் பயணம் செய்கிறோம் மற்றும் பலரும் இருக்கிறார்கள் .

        எதோ ஒரு வகையில் நானே ஒரு வரிடம் பிரச்சினை செய்து அவரை அடிக்க சென்றுவிடுகிறேன். உடனே பேருந்தில் உள்ளோரும் பேருந்து ஓட்டுனரும் என்ன சொல்லுவார்கள் “இந்தபா பேருந்தை விட்டு கீழே இறங்கி நீங்கள் அடித்து கொள்ளுங்கள் .முதலில் பேருந்தை விட்டு கீழே இருந்குங்கள் என்பர்.அவர்களுக்கு கட்டுப்பட்டு கீழே இறங்கிவிட்டாலோ அல்லது அமைதி காத்தாலோ அவர்கள் பேருந்தை தொடச்சியாக இயக்கி இருப்பார். இயல்பான மனிதன் கூட இப்படிதான் செய்து இருப்பான். அனால் அந்த இயல்பை மீறி பேருந்தில் இருந்தவர்களிடம் கடுமையாக நான் எதாவது செய்து இருந்தால் பேருந்து ஓட்டுனர் வேறு வழி இன்றி காவல் நிலையம் கொடு சென்றிருப்பார்.இது படிக்காத பாமரன் கூட அறிந்த ஒன்று.

        இந்த இடத்தில சிந்திக்க வேண்டிய ஒன்று
        “கரணம் இல்லாமல் பேருந்தை ஏன் அவர்கள் காவல்நிலையம் கொண்டு செல்ல வேண்டும்.யாரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அடி வாங்க செய்ய வேண்டும் என்பது எந்த ஓட்டுனருக்கும் எண்ணம் 99 % இருக்க வாய்ப்பில்லை.நமக்கேன் வம்பு ஒதுங்கி கொள்வார்கள்.இந்த இனியனின் செயல்பாடு அவர்களால் கட்ட்படுத்த முடியாத அளவிற்கும்,பொது நாகரிகத்திற்கு இடைஞ்சலாகும் கட்டாயம் இருந்திர்க்க வேண்டும்.எனவே பேருந்து காவல் நிலையம் செல்லாமல் இருந்தால் இந்த பிரச்சனையே இருந்திருக்காது.இனியன் மப்புல இல்லாமல் இருந்தால் அவர்கள் காவல் நிலையம் செல்வது தெரிந்து கொஞ்சம் சுதாரித்து கீழே கூட இறங்கி இருக்கலாம்.அவ்வரும் செய்யவில்லை.அவர்கள் வண்டியை காவல் நிலையம் ஒட்டி செல்வது கூட அவனுக்கு தெரிய வில்லை.

        அங்குள்ள காவலர்கள் இதை ஒரு வாய்பாக பயன்படுத்தி உள்ளனர்.
        மது அருந்தியவனை அடித்தால் அவன் நீதி மன்றத்தில் கூட வதட மூடியது.அவன் மேல் பொய் வழக்குகளை போட்டு போதையில் இவ்வாறு செய்தான் என்று கூறி விடுவார்கள்.

        தமிழ் தேசய அதரவு ஊடகங்களும்,ப்லோக்கேர்களும்,வோர்ட் பிரஸ் களும் மட்டுமே இந்த செய்தி வெளி இட்டுள்ளன.

        தமிழகத்தின் முன்னணி இதழ்களில் இத்தகைய செய்திகள் வந்ததா என்று தெரியவில்லை.

        மருத்துவ அறிக்கையில் மது அறிந்தியது உண்மையெனில் இந்த பிரச்னை அப்படியே அமுங்கி விடும் பொறுந்திருந்து பாப்போம்.
        இதை நம்பி மற்ற மாணவர்களும் போராட்டத்தில் ஈடு பட்டு கல்வி நேரத்தை பாலாக்கு கின்றனர்.

        முடிந்தால் இனியனின் இரத்த பரிசோதனை அறிக்கையில் ஆல்ஹகால் இல்லை என்பதை ஆதாரத்தோடு வெளியிட்டால் உங்களின் கட்டுரைக்கு பலம்.இல்லையில் ஒரு பொய்யை மறைக்கு ஒன்பது பொய்யை பல பெயர்களில் ,நான் பார்த்தேன்,இருந்தேன் என்று வெளி இட்டு நியாய படுத்துவது அறிவுடைமை அல்ல.நன்றி உறவுகளே.

        • yyy says:
          16 years ago

          ஒரு பொதுப்புத்தியில் இருந்து ஒரு அநாகரீகமான தாக்குதலை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். பேருந்தில் கலாட்டா செய்தார். குடித்திருந்தார் என்று இட்டுக் கட்டுவதன் மூலம்….. அவரது உயிர் வதையை போலீசின். தமிழக அரசி சாதி வெறீயை நியாயப்படுத்துகிறீர்கள்.

          • ХИХИ says:
            16 years ago

            இன்றைய தினமணியில் வந்த செய்தி இது
            ——————————————————
            தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சட்டக் கல்லூரி மாணவர் அசோக்குமாரின் சிகிச்சை செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதற்கான உத்தரவை அவர் சனிக்கிழமை வழங்கினார்.

            சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி மாணவர் அசோக்குமார். பஸ்ஸில் பயணம் செய்த போது பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு, போலீஸôரால் அவர் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து,செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் அதன்பின், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சட்டக் கல்லூரி மாணவர் அசோக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

            இந்த நிலையில், தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

            மாணவர் அசோக்குமார் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மாணவர் ஆவார். மேலும், அவரது பெற்றோர் அவரின் சிகிச்சைக்கான செலவை மேற்கொள்ள இயலாதவர்கள் என்பதால் அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான செலவு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

            ————————————————–
            தினமணியில் இந்த செய்திக்கு உள்ள வாசகர்களின் பின்னூட்டத்தை அப்படியை கீழே தருகிறேன்..
            —————————————————
            கருத்துக்கள்

            சட்டம் படிக்கும் போதே ரவுடித்தனமும்,அராஜகமும் செய்யும் இந்த மாணவர்களை நாடே அறியும். சிலவருடங்களுக்கு முன்நடந்த மாணவர் கலகத்தில் மிருகத்தனமான தாக்குதல், அந்தவழியாக செல்லும் பேருந்தின் கூரை மீது ஏறி செய்யும் கலாட்டாக்கள், பெண்களிடம் செய்யும் பாலியல் அத்துமீறல்கள், சகபயணிகளிடம் எப்பொழுதும் சண்டை, சச்சரவுகள் இதெல்லாம் நாம் சட்டம் படிக்கும் மாணவர்கள் நமக்கு வக்கீல்கள்,மாணவர் சங்கங்களின் பலம் இருக்கிறது என்ற திமிர்.
            By rahim
            8/22/2010 12:34:00 PM

            You Shit @@@@@
            By Tamil
            8/22/2010 12:13:00 PM

            மாணவர் அசோக் குமார் செய்தது என்ன என்பதையும் தீர விசாரிக்க வேண்டும். பெண்களிடம் பேருந்தில் சில்மிஷம் செய்ததால் பேருந்து ஓட்டுனர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதை போராட்டம் நடத்திய மாணவர்கள் ஏன் சொல்லவில்லை.. காவல்துறை அடித்ததும் தவறுதான் அதை விட மிகப்பெரிய தவறை அசோக்குமார் செய்ததற்கு மாணவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்..
            By பாரதி
            8/22/2010 11:53:00 AM

            ஒருவரை தாக்கி அவருக்கு மன அளவிலும் உடல் ரீதியிலும் கடுமையான காயங்களை ஏற்ப்படுத்தி அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விட்டு …அவர் ஆதிதிராவிடர் ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அவருடைய மருத்துவச் செலவினை ஏற்றுக்கொள்வதாக கருணாநிதி முகத்தில் புன்னகை தவழ அறிவிப்பு விடுவதைக் கண்டு ….ஆதிதிராவிடர்கள் அனைவரும் ஓட்டுப் போட்டுவிடவா போகிறார்கள் ???….இந்த மாணவன் பெற்ற காயங்களுக்கு …சிந்திய ரத்தத்திற்கு …படும் வேதனைகளுக்கு கருணாநிதி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் ! இது சம்பந்தமா யாராவது கோர்ட்டுல கேஸ் போடுங்களேன் ! அந்த கேஸ் தீர்ப்பு கிடைக்கிற வரையில் கலைஞர் டிவி சொத்துக்களை அறிக்கை ஜப்ப்தி பண்ணி வையுங்க ! இந்த அநியாயத்திற்கு பொறுப்பேற்று கருணாநிதி ராஜினாமா செய்வதே நியாயமானது !!! @ rajasji
            By rajasji
            8/22/2010 11:18:00 AM

        • thamilmaran says:
          16 years ago

          அழுவது மட்டும்தான் நமது வேலையா?கிழக்கில் சூரியனாய் இருக்கும் தகுதியை இளவயதினர்க்கு இந்த புலம்பல் ஏற்படுத்துமா?குழந்தயின் அழுகைபோல அடம்பிடிப்பதுதான் அழகா.யோசித்துப் பாருங்கள் இனியொருவை திறந்தவுடன் சோழனின் மரணம்தான் வருகிறது.மண்ட காய்கிறது.காலையில் கூட இதுதான் தலைப்புச் செய்தியகிறது.

  12. thamilmaran says:
    16 years ago

    பிரச்சனைகள் ஏற்படும்போது இடிந்து விடாது தீர்வுக்காக தன்னம்பிக்கையோடு முடிவு எடுக்க வேண்டும்.யாரையோ பழிவாங்கவே அல்லது நம்மை அழித்து நம்மை கீரோவாக்கவோ முயல்வது அறீவுபூர்வமானதல்ல.எல்லாப் பிரச்சனைகளூக்கும் தீர்வுகள் உண்டு.இனியன் உண்ர்ச்சி வசப்பட்டு விட்டார்.

  13. samaran says:
    16 years ago

    எல்லாப் பிரச்சனைகளூக்கும் தீர்வுகள் உண்டு.

  14. ХИХИ says:
    16 years ago

    வரலாற்றை புரட்டி பாருங்க இந்தியாவிலேயே தாழ்த்த பட்டவர்களுக்கு அதிக முன்னரிமை அழித்து சமுகத்தில் அவர்களை தூக்கிவிட்ட மாநிலம் தமிழ்நாடு.அவ்வாறு செய்தவர் கலைஞர் கருணாநிதி. வரலாறு தெரியாமல் உளறக்கூடாது.

    சாத்திய கொடுமைகள் என்பது ஆயிரம் காலத்து களை. அதை ஒரு நூற்றாண்டிலேயே கலைந்தது திராவிட இயக்கங்கள். இருப்பினும் இந்த கொடுமை அங்கங்கே தலை தூக்கி கொன்றுரிக்கின்றன.அமெரிக்காவிலே கறுப்பர் என்று சொல்லகூடிய ஒபாமாவே 21 நூற்றாண்டில் தான் அமெரிக்க அதிபராகவே முடிந்தது.கறுப்பர் ஆட்சியிலே இருக்கும் போதே அங்கே ஒரு சில்லா கறுப்பின கொடுமைகள் நிகழ்ந்து கொட்னுதான் இருக்கின்றன. அதனால் ஒபாமாதான் அதற்க்கு கரணம் என்று கூற முடியுமா?

    இன்றைக்கு மேற்கு வங்கத்திலே நடக்க கூடிய பிரச்சினை என்ன? மாவோயிஸ்டுகள் என்ற பழங்குடி மக்கள் பிரச்சினை தான். அவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பு இல்லாமல் விரக்தியில் துப்பாக்கி ஏந்துகிறார்கள்.

    இங்கே தமிழகத்தில் தலித்துகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் கம்யுனிஸ்ட் ஆட்சி தான் அங்கே நடக்கிறது. அங்கே ஒரு தீர்வு கொடுக்க முடியாத கம்யுனிஸ்டுகள்
    இங்கே தலித்துகள் என்ற போர்வையின் மூலமாக ஆட்சி அசைத்து அதன் மூல வோட்டுகளை போருக்க பார்கிறார்கள்.திருமாவை விட இவர்களுக்கு தான் தலித்துகள் மீது ரொம்ப பாசம்.ஏனென்றால் அதன் தலைவர்கள் பிரகாஷ் காரத்,பிருந்த காரத்,யெச்சுரி அக்மார்க் குத்தின தலித்துகள் நம்பி தொலையும் . இவர்கள் தான் தலித்துகளை பாதுகாக்கும் கட்சியின் தலைவர்கள் . ஆட்டுக்குட்டிக்கு ஓநாய் காவால் என்று மேற்கு வங்க மாவைஸ்ட் கதி தான் இங்குள்ள தலித்துகளுக்கும் என்பதை மறந்து விடாதிர்கள்.

  15. vinothan says:
    16 years ago

    கருணாநிதியின் குடும்பம் செய்யாத கொலை, கொள்ளைகளையா இந்த 5க்கும் 10க்கும் கை நீட்டுகின்ற காவல்துறையினர் செய்து விட்டார்கள், சுயநலம், பதவி, ஊழல், போன்ற பொறுக்கித்தனத்தை கருணாநிதியென்ற விசக்கிருமியால் ஊட்டப்பட்டுவிட்டது , தமிழகத்தில் உள்ள் அடிமைத்தமிழர்களும் சுயநலவாதிக்ளும் அதற்க்கு பஜனை பாடிக்கொன்டிருக்கின்றார்கள், கருணாநிதியென்ற விசக்கிருமியின் குடும்பத்தை தமிழகத்திலிருந்து அடித்து விரட்டாதுவரை தமிழனுக்கு விமோசனம் கிடையாது, இந்த மாண்வனை தாக்கிய காட்டுமிரான்டித்துறையினர் கருணாநிதியின் பேரனை தாக்கியிருக்கலாமே.???

  16. savukku says:
    16 years ago

    மீண்டும் காக்கி உடை தனது கோர முகத்தை காட்டியிருக்கிறது. கருணாநிதி ஆட்சியாக இருந்தாலும் சரி. ஜெயலலிதா ஆட்சியாக இருந்தாலும் சரி. காவல் துறை எப்போதும் காட்டுமிராண்டித் துறையாகவே இருந்து வந்திருக்கிறது. பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு போடுவதானாலும் சரி, பிடித்தவர்கள் வீட்டில் சட்டி கழுவுவதானாலும் சரி, மனித உரிமை ஆர்வலர்ளை தீவிரவாதிகள் போல சித்தரித்து, சமயம் கிடைக்கும் போது, அவர்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதானாலும் சரி, அவ்வாறு சிக்கியவர்களை அடித்துத் துவைப்பதானாலும் சரி. இரண்டு ஆட்சிகளிலுமே காவல்துறையினர் காட்டுமிராண்டிகளாகத்தான் இருந்து வருகிறார்கள்.

    அதற்கு முக்கிய காரணம், ஆட்சியாளர்களுக்கு இந்த காட்டுமிராண்டித்தனம் தேவைப் படுவதுதான். ஜெயலலிதாவுக்கு, கருணாநிதியை நள்ளிரவில் கையை முறுக்கி கைது செய்ய காட்டு மிராண்டிகள் தேவை. கருணாநிதிக்கு, ஈழத் தமிழர்களையும், அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் அடித்துத் துவைக்க காட்டுமிராண்டிகள் தேவை.

    அதனால், இரண்டு திராவிட கட்சிகளுமே காக்கிச் சட்டைகளை கையைக் காட்டினால் கடிக்கும் வேட்டை நாய்களாகவே உருவாக்கி வைத்திருக்கின்றன.

    அந்த வேட்டை நாய்களுக்கு இரையானவர்தான் தோழர் இனியன். இவரின் இயற்பெயர் அஷோக் குமார். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர். பெயருக்கேற்றார் போல இனியவர். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.

    சவுக்கு முதன் முதலாக இனியனை சந்தித்து இரண்டு ஆண்டுகள் இருக்கும். ஒடிசலாக ஐந்தடி உயரத்தில் ஒரு உருவம். தமிழக மக்கள் உரிமைக் கழக அலுவலகத்தில் தான் இனியனை சவுக்கு சந்தித்தது. அமைதியாக இருப்பார். அலுவலகத்துக்கு வந்தால் எதுவுமே பேச மாட்டார். சவுக்கு அவரிடம் பேசி கலாட்டா செய்தால் கூட, மென்மையாக ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அமைதியாகத் தான் இருப்பார்.

    மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வருபவர். மதியம் உணவு உண்ண காசு இருக்காது. மதியம் கல்லூரி தொடங்கும் என்பதால், சவுக்கும் நண்பர்களும் உண்ணச் செல்லும் போது, அவரை கட்டாயம் அழைத்துச் செல்வோம். வழக்கறிஞர் புகழேந்தி அவரை காலை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி நீதிமன்றம் சென்று, அங்கே நடக்கும் வழக்கு விவாதங்களை பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்ன அறிவுரையை ஏற்று, ஒரு வாரம் சென்றார். அங்கே ஆங்கிலத்தில் படித்த துரைகள் வாதாடுவதை கண்டு ஒன்றும் புரியாமல், பிறகு அலுவலகத்திலேயே இருப்பார். ஏதாவது வேலை சொன்னால் புன்னகையோடு செய்வார்.

    இதுதான் இனியவன். அவர் படிப்பை தொடர, அமைப்பு பொருள் உதவி செய்து வந்தது. பிறகு சில நாட்கள் கழித்து, அமைப்பிடம் பொருள் உதவி பெறுவதற்கு சங்கடப் பட்டுக் கொண்டு, நான் வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறேன் என்று கூறி விட்டார்.

    அமைதியாக இருந்த இனியவனின் மற்றொரு முகம் செங்கல்பட்டு அகதிகள் முகாமில், ப்ரேம் ஆனந்த் சின்கா என்ற எஸ்பியும், சேவியர் தன்ராஜ் என்ற உதவி எஸ்.பியும், சேர்ந்து நடத்திய நள்ளிரவு தாக்குதலுக்குப் பிறகு தெரிந்தது. தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டில் நடத்தப் பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பம்பரமாய் சுற்றி வேலை பார்த்தார். போஸ்டர் ஒட்டுவது முதல் ஆர்ப்பாட்டத்திற்கான அத்தனை வேலைகளையும் முன் நின்று செய்தார். செங்கல்பட்டு அகதிகள் மீதான காவல்துறையினரின் கொடிய தாக்குதல், அவரை கடுமையாக பாதித்திருக்கிறது என்பதை பார்க்க முடிந்தது.

    இப்படி பம்பரமாகச் சுற்றி அவர் செய்த வேலையே அவருக்கு வினையாக முடிந்தது காலத்தின் கோலம் தானே… ?

    செங்கல்பட்டு அகதிகள் மீதான தாக்கதலில் முன் நின்று தாக்குதலை நடத்தியவர் அப்போது செங்கல்பட்டு காவல்நிலைய ஆய்வாளராக இருந்த ஆல்பர்ட் வில்சன் என்பவர்.

    நேற்று மாலை 6 மணியளவில் இனியன் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கும் வேற்று மொழிக்காரர் ஒருவருக்கும் வாய்த் தகராறு ஏற்படுகிறது. இந்த தகராறு வலுக்க, ஓட்டுநர் பேருந்தை திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்திற்கு ஓட்டுகிறார். அங்கே தகராறு செய்த இருவரும் இறக்கி விடப் படுகிறார்கள். சட்டக் கல்லூரி மாணவர்தானே… நம்மை என்ன செய்யப் போகிறார்கள் என்று காவல் நிலையம் செல்கிறார்.

    அங்கே இனியனை விசாரித்துக் கொண்டிருக்கும் போது குப்புசாமி என்ற காவலர், உதவி ஆய்வாளரிடம் “சார் இவன் மனித உரிமை இயக்கத்துல இருக்கான் சார். எப்போ பாத்தாலும் கூட்டம் போட்டு நம்மைத் திட்டுவான் சார்“ என்கிறார். உதவி ஆய்வாளர் “என்னடா எஸ்.சியா “ என்று கேட்கிறார். இனியன் ஆமாம் என்றதும் அருகில் இருந்த காவலர் குப்புசாமி பளாரென்று இனியன் கன்னத்தில் அறைகிறார். இனியன் “விசாரிக்காம அடிக்காதீங்க சார்“ என்கிறார்.

    அப்போது அங்கே வந்த ஆல்பர்ட் வில்சன் “பறத் தேவிடியாப் பையனுக்கு என்ன திமிரு பாத்தீங்களா ? “ என்று உரத்தக் குரலில் கூறி, இனியனை ஷூ காலால் நெஞ்சில் எட்டி உதைக்கிறார். “இவன் துணிய அவருங்கையா ? ஹ்யூமர் ரைட்ஸா பேசறான் ? அடிக்கிற அடியில இந்தத் தேவடியாப் பையன் பேசவே கூடாது“ என்று சொல்லி முடிக்கும் முன்பே, அருகில் இருந்த காவலர்கள் சத்தினசாமி, நட்ராஜ், முனுசாமி, குப்புசாமி, பார்த்திபன், சௌந்தர்ராஜன், ராஜேந்திரன் உள்ளிட்ட காவலர்கள், இனியனின் உடைகளை அவிழ்க்க பொறுமை இல்லாமல் கிழித்து எரிகின்றனர். நிர்வாணமாக நின்ற இனியன் இரண்டு கைகளையும் வைத்து தன்னை மறைத்துக் கொள்ள “என்னடா பொட்டையா நீ“ “எதுக்குடா மறைக்கிற “ என்று மறைத்த கைகளின் மேல் லத்தியால் அடித்திருக்கின்றனர்.

    பிறகு ஒரு மணி நேரத்திற்கு சரமாரி அடி. பிறகு நிர்வாணமாகவே லாக்கப்பில் போட்டு அடைத்திருக்கிறார்கள். இனியன் நினைவிழக்கும் நிலையில் இருந்த போது, வாளியில் தண்ணீரை பிடித்து லாக்கப்புக்குள் ஊற்றியிருக்கிறார்கள்.

    இரவு 3.30 மணி அளவில் இனியனின் உறவினர்கள் வந்து இனியனை செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்திருக்கின்றனர். அனைவரும் கண்ணயர்ந்த நேரம் மருத்தவமனையிலிருந்து வெளியேறிய இனியன், வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து, குற்றுயிரும், குலை உயிருமாக இனியனை இறக்கி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

    நீங்கள் செய்த காரியத்தை மன்னிக்க முடியாது தோழர் இனியன். உங்களை நிர்வாணப் படுத்தி அடித்த ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் மற்றும் உதவி ஆய்வாளர் சரவணின் சங்கை அறுத்திருந்தீர்களென்றால் பாராட்டியிருக்கலாம். ஆனால், நீங்கள் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றதை சவுக்கு ஒரு போதும் மன்னிக்காது.

    இனியன் தற்கொலை முயற்சி செய்தி, காற்றிலே வதந்தியாக மாறி, இனியன் இறந்து விட்டார் என்று சட்டக் கல்லூரி வளாகங்களிலே பரவுகிறது. தகவல் அறிந்த சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் உடனடியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையை மறிக்கிறார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    மற்ற எல்லா போராட்டங்களையும், காவல்துறையை விட்டு ஒடுக்க முயற்சிக்கும் கருணாநிதி, இந்த மாணவர்களின் எழுச்சியை பார்த்து பம்மினார். காவல்துறை கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இணை ஆணையர் சேஷசாயி மாணவர்களிடம் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று பேச்சு வார்த்தை நடத்துகிறார். செங்கல்பட்டு ஆர்.டி.ஓ பத்மஜா தேவிதான், பனையூர் இரட்டை கொலைவழக்கில் குற்றம் சாட்டப் பட்டு காவல் நிலையத்தில் இறந்த ராஜன் மரணத்தையும், திண்டுக்கல் பாண்டி என்கவுண்ட்டரையும் விசாரித்தது. அந்த அதிகாரி எப்படி அறிக்கை கொடுப்பார் என்று தெரியாதா ?

    ஆனால் மாணவர்கள் மசியவில்லை. எந்த பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை. சம்பந்தப் பட்ட காவல்துறையினரை இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

    இதற்கு நடுவே, மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் ஆஜராகி, மாணவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும், மாணவர்கள் போராட்டம் நடத்தவதையும் பற்றி முறையிட்டார். அவரை ஒரு அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்ட நீதிபதிகள், அதையே ரிட் மனுவாக கருதி, மாலை 5 மணிக்கு விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையின் இறுதியில் பாதிக்கப் பட்ட மாணவர் உடனடியாக சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இனியன் கொடுத்த புகார் மனுவின் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கை டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.

    மூன்று வாரத்துக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவின் விபரங்களை வழக்கறிஞர் சங்கரசுப்பு, மாலை 6.00 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் இருந்த மாணவர்களிடம் சொன்னார். விபரங்களை கேட்டறிந்த மாணவர்கள் பலத்த கரகோஷத்தோடு கலைந்து சென்றார்கள்.

    நீதிமன்ற உத்தரவுப் படி காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. என்ன தெரியுமா ? ஒரே ஒரு பிரிவு தான். 323. இது என்ன தெரியுமா ? லேசான காயத்தை ஏற்படுத்தவது. இது பிணையில் வரக்கூடிய பிரிவு என்பது முக்கிய அம்சம்.
    ஏதோ ஒரு வகையில் இந்த அளவுக்காவது நிவாரணம் கிடைத்ததே என்ற வகையில் மகிழ்ச்சி.

    இந்த போராட்டத்தில் இருந்த முக்கிய செய்தி என்னவென்றால், காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை மாநகரின் ஒரு முக்கிய சந்திப்பை மாணவர்கள் மறித்து எந்த வாகனத்தையும் நகர விடாமல் நிறுத்தி வைத்துள்ளார்களே ? இதனால் பொதுமக்கள் எவ்வளவு சிரமப் படுவார்கள் என்ற அக்கறை துளியும் காவல்துறையினருக்கோ, கருணாநிதிக்கோ இல்லை. ஏழு மணி நேரமாக அந்த சாலைகள் மறிக்கப் பட்டே கிடந்தன. இரு சக்கர வாகனங்களை கூட மாணவர்கள் அனுமதிக்கவில்லை.

    இது போல பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கி நடக்கும் ஒரு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையினரை எங்காவது கண்டிருக்கிறீர்களா ?

    இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார் சென்னை மாநகர காவல் ஆணையாளர் ? ஏழு மணி நேரம் நகரத்தின் முக்கிய சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறதே…. என்ன செய்து கொண்டிருந்தார் ராஜேந்திரன் ? என்ன செய்து கொண்டிருந்தார் என்பது யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் ராஜேந்திரன்.

    அவர் உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டோடு இரண்டு மணி நேரம் எட்டு நிமிடங்கள், ஜாபர் சேட் மனைவி பர்வீன் மீது அவருக்கு வந்திருக்கும் மோசடி புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எப்படி மூடுவது, புகார் கொடுத்தவர் நீதிமன்றம் போனால் அதை எப்படி சமாளிப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்.

    இப்படிப் பட்ட ஒரு மோசமான நிர்வாகத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ?
    http://www.savukku.net/2010/08/blog-post_18.html

    • ХИХИ says:
      16 years ago

      சவுக்கு உன்னோட வலைதளத்துல நான் பின்னோடோம் போட்டேனே அது முதல் பப்ளிஸ் பணித்து அப்புறம் இங்க வ. உனக்கெல்லாம் எவன் தமிழ மயிறு உரிமை கழகம் நு பேரு கொடுத்தான்.நீ ஒரு யோக்கியன இருந்த என்னோட கமெண்ட் புப்ளிஷ் பண்ணி இருக்குனும் செய்ய வில்லை.நீ எல்லாம் எதுக்கு எழுத வர.

      • rukku says:
        16 years ago

        இது சவுக்கு இல்லீங்க, இனியொரு ங்கிற தளம்,,நீங்க ரென்சனிலை எதுக்கோ எயுதி எதிலையோ மாறி சொடுக்கியிட்டீங்க, றிலாக்ஸ் றிலாக்ஸ்,

  17. aravindan says:
    16 years ago

    தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்குடமே சாதிய சக்திகள் அணி திரளுகின்ற ஒரு மோசமான காலகட்டம இது. புதிய தலைமுறையிடம் இது திட்டமிட்டு குவாட்டர் மற்றும் பிரியாணி உதவியுடன் வளர்க்கப்படுகிறது. சினிமாக்களின் பண்பாடு என்னும் பேோர்வையில் மானம் வீரம் என்ற சாக்கில் சாதி பெருமைப்படுத்தப் படுகிறது. பிறகு ஒரு வலுவான அமெளண்டுக்கு பெரிய கட்சிகளிடம் தேர்தல் நேரத்தில் விற்கப்பட்டு சாதித்  தலைவர்களின் சட்டைப்பைகள் நிறைக்கப்படுகிறது. இதற்கு இடையில் கட்டுகளில் இருந்து வெளிவரத்துடிக்கும் தலித்துகள் அடக்கி ஒடுக்கப்பட்டு கற்கால தமிழகம் நோக்கி விரட்டப்படுகிறார்கள். இதற்கு தீர்வு தலித்களுக்கென்று ஒரு நியாயமான தலைவர் அவர் பின்னால் ஒற்றுமையுடன் எல்லா தலித்களம் அணி திரள்வது.
    விமான நிலையத்துக்க தேவர் பெயர் வைக்கும் முன் அழகிரி தன் வீட்டுக்கு அவர் வெயர் வைக்கட்டும். என் வரிப்பணத்தில் கட்டப்படும் ஒரு கக்கூசுக்குக் கூட எந்த ஒரு சாதித்தலைவரின் பெயரையும் வைக்க எவனுக்கம் உரிமையில்லை.

    • thamilmaran says:
      16 years ago

      அரவிந்தர் கருத்தை வைகோ முதல் விஜயகாந்த் வரை ஏற்றூக்கொள்ளமாட்டார்களே.அரவிந்த், என்ன செய்வது தமிழகத்தில் சாதிகள் எம்.ஜி.ஆரால் வந்தது ஜெயலலிதாவால் உயிரூட்டப்பட்டது இப்போது கலைஜரால் தகர்க்கப்படுகிறது.சமத்துவபுரம் கண்ட கலைஜரால் நல்லதை இந்தியா கேட் கும்.

      • sup2 says:
        16 years ago

        யோவ் தமிழ் மாறன்,
        கலைஜர் கலைஜர் என்று அந்தாளை கொலை செயாதமா. கொலைஞர் கலைஞரை , கலைஞர் என்று எயுதப் பயகப்பா!

  18. rukku says:
    16 years ago

    கன நேரமா பாத்த்கண் பூத்துப்போச்சு ஒருத்தரையும் காணயில்லை , எல்லாரும் எங்கை போய் நிக்கிறீங்கள் , கை கசகசக்குது, யாராவது ஏதாச்சும் இசகுபிசகாத்தொடங்குங்கோப்பா ,,

  19. ХИХИ says:
    16 years ago

    அழகிரியின் மனைவி ஒரு தாழ்த்த பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பது தெரியுமா?
    கலைஞர் சொல்கிறார் என் வீட்டில் எத்துனை சாதிகள் என்று எனக்கே தெரியாது என்று.
    இவ்வாறு உள்ள ஒரு அரசியல் தலையை காட்டுங்கள் முதலில் இந்தயாவில் .

    • rukku says:
      16 years ago

      கருணா வின் ஐந்து மனைவிகளும் ஒவ்வொருத்தர் ஒவ்வொருசாதி ஒவ்வொரு மொழிக்காரர், மூத்தமனைவி பத்மாவதி பழம்பெரும் பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி,மலயாள பூர்வீகம் தமிழ்நாட்டில்பிறந்து வளர்ந்தவர் , தயாளு பாட்டி தெலுங்கு , ராசாத்தியம்மா (தெரியவில்லை) கிருத்திகா கர்நாடகா,இப்படியிருக்கும் போது//அழகிரியின் மனைவி ஒரு தாழ்த்த பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பது தெரியுமா?
      கலைஞர் சொல்கிறார் என் வீட்டில் எத்துனை சாதிகள் என்று எனக்கே தெரியாது என்று.
      இவ்வாறு உள்ள ஒரு அரசியல் தலையை காட்டுங்கள் முதலில் இந்தயாவில் //. என்றால் யராவது நரிக்கொம்பு, பாசிமணி விக்கிறவர்களை தேடிப்புடிச்சு விசாரிச்சாத்தான் உண்மையின் தரிசனம் கிடைக்கும்,

  20. thamilmaran says:
    16 years ago

    சிதம்பரம் ஜெயராமன் மலையாள பூர்வீகங்களா? தப்புங்க அவர் அசல் தமிழுங்க.அப்புறம் தயாளூ அம்மா முதலியாருங்க. சும்மா தெலுங்கு மலையாளம் எனக் கத விடாதீங்க.

    • maniyin says:
      16 years ago

      ஜெயலலிதாவை தமிழிச்சி என்று ஒத்தக்காலில் நிண்ணவர்தானே நிங்க,

    • maniyin says:
      16 years ago

      நானொன்றும் குறை கூறுவதற்காக சொல்லவில்லை நானும் ஒருகாலத்தில் நிறையப்பிரபலங்களை தமிழர்களென எண்ணியதுண்டு, அவர்களில் ஒருசிலர், 1 எம்.ஜீ ஆர்,, 2டி.எம், சௌந்தரராஜன், 3கே,பி,ஸ்ரீனிவாஸ், 4சுசீலா, 5எம் எஸ் விசுவநாதன், 6நம்பியார், 7சி எஸ் ஜெயராமன், 8வாணிஜெயராம், **(இன்னும் இன்னும்),ஆகியோரை தமிழர்களென்றுதான் நானும் நினைத்ததுண்டு, ஆனால் அவர்களின் பூர்வீகம் அயல் மானில மொழிக்குரியவர்களென பின்புதான் தெரிய வந்தது இருந்தும் அவர்களை மதிப்புடன்தான் பார்க்கிறேன் போற்றுதலுக்குரியவர்களாகத்தான் சமூகமும் வைத்திருக்கிறது இன்னும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் தென்னிந்தியா திராவிடநாடாக இருந்தபோது (சென்னை மாகாணம்)இன்றய தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்தவர்கள் அவர்கள் பலர் தமிழர்களாகவே வாழுகின்றனர், கருணாநிதியில் எனக்கு வேதனை இருப்பதால் அவரை இழிக்கவேண்டுமென எண்ணமல்ல, அவர் ஒரு சராசரி இந்திய அரசியல்வாதி,, அந்தக்குணம் அவரிடம் இல்லாமலிருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது முடியாத ஒன்று, இருந்தும் அவரது வயதுக்கும் அனுபவத்திற்கும்அவரது செயல்கள் அருவருக்கச்செய்கிறது

      • thamilmaran says:
        16 years ago

        சிதம்பரம் ஜெயராமன் எப்படி மலையாளீயாக இருக்கமுடியும்?ஜெயலலிதா தமிழ் அய்யங்கார்..முத்துவேலர் தெலுங்கரல்ல.ஆக இனியொரு வாசகர்களூக்கு நாம் பிழையான தகவல்லள தரக் கூடாது.

        • rukku says:
          16 years ago

          தயவுசெய்து கலப்படமில்லாத தமிழ்க்கருத்துக்களை எடுத்து விடுங்க சரியாக இருக்கும்பட்சத்தில் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்ளுகின்றோம்,

          • thamilmaran says:
            16 years ago

            நம் தாயாய் இருக்கும் தமிழ் வாரிக் கொடுத்திருக்கும் வார்த்தைகள் பல.சமஸ்கிருதம் தமிழிடம் கடன் வாங்கிக் கடன் கொடுத்திருக்கிறது.தேவாரத் தமிழ்,திருவாசகத் தமிழ்.தேனாக இனிக்கும் தமிழ்.என் தாய் தமிழ் என்பதில் பெருமையும்,கர்வமும் எனக்கு உண்டு.

  21. Soorya says:
    16 years ago

    மலிவு! மலிவு! வாசித்துவிட்டீர்களா, கருணா புகழ்மாலை எழுதியவர்: டமில்மாரன்.

  22. aravindan says:
    16 years ago

     தமிழகத்தில் சாதித்திமிர் ஏறி அலையும் எநதவொரு பிற்படுத்தப்பட்ட சாதியையும் குழந்தையை மிரட்டுவது போலாவது மிரட்டியிருப்பாரா கலைஞர். அவருக்குத் தெரிந்ததெல்லாம் குடும்பம் குடும்பம் குடும்பம் மட்டுமே! பாகப்பிரிவினை மட்டுமே அவருடைய இன்றைய கவலை. வடக்கே வன்னியர் மேற்கே கவுண்டர் தெற்கே தேவர். என்றும் இவர்களை கலைஞர் அடக்கி வைக்கப் போவது இல்லை.

  23. buunaa says:
    16 years ago

    கொலைஜர் கர்ணாநிதி க்கு மடும் தேன் குடும்பும் இரிக்கா எல்லெருகும் குட்ம்ப்ம் ஒண்டு, கர்ணாநிதிகுமூனு அவிராலை ஓக்கமுடியும் குடும்பம் வெசிருகிரார் ,புதிசய் இப்ப ஒரு புன்டை கிடச்சா நீஙக ஓக்கிரது இலலயா அப்பிட்தான் கலஜர் அவிர்நல்லா புன்டை நக்கி ஓக்குவார்,புன்டை கர்னா

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...