Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை முன்வைக்க அரங்கம் தயாராகி வருகிறது.

இனியொரு... by இனியொரு...
11/03/2010
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

இலங்கை காலனியாதிக்கத்திலிருந்து விடுதலையடந்த நாளிலிருந்து  ஒவ்வொரு பெருந்தேசியவாத  அரசாங்கங்களும்  தயாராகி வந்தவாறே இனப்படுகொலை நிகழ்த்தும் இலங்கை அரசும் இப்போது தயாராகிவருகிறது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து பேசவேண்டிய அரசு மௌனமாக உள்ள நிலையில், சிங்கள அரசியல் தலைவர்கள் பலர் அரசியல் தீர்வு இப்போது அவசியமற்றது எனக் கூறிவருகிற நிலையில், தமிழர் தரப்பிலிருந்து அரசியல் தீர்வு குறித்துப் பேசப்படுவதனைக் காணமுடிகிறது.
இந்த வகையில் தமிழ் அரசியல் கட்சிகளின் அரங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்கத் தயாராகி வருவதாக அதன் செயலாளரும், தேசிய விடுதலை முன்னணியின் தலைவருமான சிவாஜிலிங்கம் தெரிவித்திருப்பதாக “சுடர் ஒளி” செய்தி வெளியிட்டிருக்கிறது. இதே வேளை அரங்கத்தில் த.தே.கூட்டமைப்பினரையும் கலந்து கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்திருந்த போதும் இதுவரை அவ்வாறானதொரு அழைப்பு தமக்கு விடுக்கப்படவில்லை என த.தே.கூ. தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, தீர்வு யோசனைகளை முன்வைக்காமைக்கு தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்காததே காரணம் என அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அந்த நிகழ்ச்சித் தொடரின் ஒரு அங்கமாக இந்த தீர்வு யோசனை முன்வைப்பு இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.
இதற்கிடையில் எமது கவனத்தை ஈர்த்திருக்கிற ஒரு விடயத்தினைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக நடந்த நடந்த கலந்துரையாடலில் நூலகர், நடைபெற்ற சம்பவத்தினை அறிக்கையாக முன்வைத்திருந்தார். பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளை விட மேலும் பல மோசமான தகவல்களை அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆயினும் அதனைப் படைத்தரப்பினர் மறுத்திருந்ததுடன் பத்திரிகைகளே வேண்டாத செய்திகளை வெளியிட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்கள்.
இக்கூட்டத்திற்கு தலைமையேற்றிருந்த டக்ளஸ், நூலகத்தில் கடந்த 23 ஆம் திகதி இடம் பெற்றது ஒரு சிறிய குழப்பமே. இங்குள்ள ஊடகங்கள்தான் அதனை ஊதிப் பெருப்பித்துள்ளன. இங்கு நடந்தது உண்மையாக உணரப்படுமானால் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் என்ற வகையில் மன்னிப்புக் கோருகிறேன்” எனக்கூறியிருக்கிறார்.
ஆயினும் யாழ்.மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் கனகரத்தினம் விந்தன், ஊடகங்கள் உண்மையான செய்திகளைத்தான் வெளியிட்டன. அவற்றில் வெளிவந்த தகவல்களை விடக் கூடிய சம்பவங்கள் பொது நூலகத்தில் அன்று நடைபெற்றுள்ளது. ஆகவே ஊடகங்கள் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.
தவறிழைத்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒரு வசனத்தைக்கூட இந்தக்கலந்துரையடலில் கலந்து கொண்டவர்கள் கூறவில்லை என அதிருப்தி தெரிவக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் குழப்பம் விளைவித்தார்கள் எனக்கூறிப் பல பல்கலைக்கழக மாணவர்கள் பிணை வழங்கப்படா நிலையில் சிறையில் இடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் யாழ.பொது நூலகத்தில் நடந்தது மட்டும் சிறு குழப்பம் ! எப்போதோ அருசக்கெதிராக எழுதிய கட்டுரை பாரிய குற்றம். பொது நூலகச் சம்பவம் மட்டும் சிறுகுழப்பம். “நடந்தது உண்மையாக உணரப்படுமானால் … மன்னிப்புக் கோருகிறேன்” என்ற ஒரு வார்ததையுடன் பிரச்சினைக்குத் தீர்வு.
இந்த நிலையில் அரங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை முன்வைக்கத் தயாராகிறது.
ஆளும் கட்சி வட பகுதியில் தனது கட்சியின் அதிகராத்தினை வலுவுடையதாக்கிக் கொண்டு அதன் மூலம் தீர்வொன்றினை காண முற்பட்டு வருவதனையே நடைபெறும் நிகழ்சி நிரல்கள் எடுத்துக் காட்டுகின்றன. அரச அமைச்சர்கள் வட பகுதிக்கு விஜயம் செய்து மக்களுக்கான உதவிகைளை வழங்கி வருவது அதிகரித்துள்ளது. நாமல் ராஜபக்ஷ – தனது புதிய அல்லது பழைய நண்பர் ரங்காவுடன் அடிக்கடி வன்னிக்குச் செல்வதும் பல வேலைத்திட்டங்களையும், அன்பளிப்புகள் வழங்கி வருவதனையும் காணமுடிகிறது. வட மாகாண சபைக்கான தேர்தலில் கிழக்கு மாகாண சபையினை விட முன்னேற்றகரமான ஒரு நிலையினை அடைந்து விட அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதே வேளை த.தே.கூட்டமைப்பினர் தாம் விரைவில் தயாரித்து வெளியிட உள்ளதாகக் கூறிய இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசைனையை உடன் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் இலங்கை அரசுடன் கூட்டமைப்பு பேச்சு நடாத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு என இந்தியத் தூதுவர் அசோக். காந்தா தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியத் தூதுவரின் அழைப்பிற்கிணங்க இந்திய உயர்ஸ்தானிகர் வாசஸ்தலத்திற்குச் சென்ற த.தே.கூட்டமைப்பினரிடம் இக்கருத்து கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பல நாட்களாக அரசிற்கும் த.தே.கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு வரப்பட்டதாயினும் அவ்வாறானதொரு பேச்சுவார்த்தை இதுவரை மேற்கொள்ளப் பவடவில்லை. மாறாக அரசுடன் இயங்கும் கூட்டரங்கமே தாம் தயாரிக்கவுள்ள அரசியல் தீர்வு யோசனை குறித்து கலந்துரையாட த.தே.கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுப்போம் எனத் தெரிவித்திருந்தது. ஆயினும் அவ்வாறும் இதுவரை நடைபெறவில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வஞ்சிக்கப்படும் மலேசிய தமிழ் கல்வி ,போராடும் மக்கள்- ஒரு பார்வை : சை.கிங்ஸ்லி கோமஸ்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In