Thursday, March 12, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இனப்படுகொலையும் நினைவாற்றலும் தேர்தலும் : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
12/15/2009
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

நவீன சமூகவியல் ஆய்வு உக்திகளில் சமூக நினைவாற்றல் (Social memory) என்பது தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கிறது.சமூகத்தில்  தாக்கத்தை  ஏற்படுத்தும்  குறித்த சம்பவம்  தொடர்பான மக்களின்  கூட்டு நினைவுத்திறனே  சமூக நினைவுத் திறனாகும்.

 socialMemoryஉதாரணமாக சுனாமி ஏற்படுத்திய அனர்த்தங்கள், அவலங்கள் அழிவுகள் எல்லாம் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்வு முறையை மிக நீண்ட காலத்திற்குப் பாதித்திருந்தது. இரவு நேரங்களில் கடல் அலைகளின் இரைச்சலை கேட்டாலே தூக்கமின்றி வாழ்கின்ற அவலம் மிக நீண்ட காலத்திற்கு நீடித்தது. இவ்வாறான அனர்த்தங்களின் பின்னான நினைவுத் திறனின் வாழ்வுக்காலம் ஏறக்குறைய சில வருடங்கள் நீடிக்கும். இவை குறித்த விளக்கங்கள் சில வேளைகளில் இதிகாசக் கதைகள் (mythical stories) போன்ற வடிவங்களைப் பெற்று சமூகம் முழுவதும் பரவிச் செல்வதுண்டு.

அரசியல் மாற்றங்கள் குறித்த இவ்வாறான நிகழ்வுகளின் நினைவுக் காலம் மக்கள் மத்தியில் மிகக் குறுகியதாகவே காணப்படுகிறது. கூட்டு நினைவாற்றல்(Collective Memory) அல்லது சமூக நினைவாற்றல் என்பது தனிமனிதனின் நினைவுத் திறனிலிருந்து மாறுபட்டு சமூக நிகழ்வுகளை உருவாக்குகின்றது. அரசியல் வாதி ஒருவர் முன்வைக்கும் கருத்துக்களின் குறித்த இந்த நினைவாற்றலின் வாழ்வுக்காலம் (Lifetime) என்பது பொதுவாகக் குறிகியதாகவே காணப்படுகிறது.

உதாரணமாக இலங்கையின் அரசியலில் மிகக் சிக்கலான காலகட்டமான மகிந்த அரசு நிகழ்த்திய வன்னிப் படுகொலைகளைக் காணலாம். இக்காலப்பகுதியில் மங்கள சமரவீர போன்ற அரசியல் வாதிகள் மகிந்த அரசின் மனித உரிமை மீறல் குறித்தும், தமிழ் பேசும் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவது குறித்தும் பேசினார். அவரின் அரசியல் தளம் ஒரு முற்போக்கு ஜனநாயக வட்டத்தை முன்வைத்துக் உருவமைக்கப்பட்டிருந்தது.

ஒரு சில மாதங்களுக்கு உள்ளாகவே அதன் இதே இனப்படுகொலையின் இன்னொரு சூத்திரதாரியான சரத் பொன்சேகாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குகிறார் அவர்.

சமூக நினைவாற்றல் குறித்த ஆய்வுகள் இன்றெல்லாம் தன்னார்வ நிறுவனங்களின்(NGO) அடிப்படைப் பயன்பாட்டுக்கு உட்படுகிறது. சமூகத்தின் விரக்தி மற்றும் எதிர்ப்புணர்வு போராட்டத்திற்கான ஆதாரமாக மாற்றம்பெறும் அசைவுகளைக் கையாள்வதற்கான ஆய்வுகளில் ஒன்றாக இது பயன்படுத்தப்படுகிறது. போராட்டத்தையும் சமூக மாற்றத்தையும் நோக்கித் வளர்ச்சியடைய வல்ல சமூக நினைவாற்றலின் வாழ்வுக்காலம் முதலில் கணிப்பிடப்படுகிறது.

இவ்வாழ்வுக் காலத்தை நீடிக்கும் புறக்காரணிகள் கண்டறியப்படுகின்றன. இறுதியாக இப் புறக்காரணிகளை மழுங்கடித்து சமூக நினைவாற்றலின் வாழ்வுக்காலத்தை குறுகியதாக்கி, எதிர்ப்பரசியலைச் சீர்குலைத்து அரசின் அதிகார மட்டத்திற்கு சேவைசெய்தலே இத் தன்னார்வ நிறுவனங்களின் இறுதிப் பணியாகிறது.

சமூகத்தின் அரச அதிகாரத்திற்கு எதிரான மக்களின் நினைவுத்திறனை கணித்துக்கொள்ளும் தன்னார்வ நிறுவனங்கள் அதனைக் கட்டுப்படுத்தவும், அதன் வாழ்வுக்காலத்தைக் குறைக்கவும் புதிய சமூக உதவித் திட்டங்களை முன்வைக்கின்றன.

வன்னி இனப்படுகொலையானது இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரிய அரசியல் அனர்த்தம். உலகின் மனிதாபிமானிகளையும், ஜனநாயக சக்திகளையும், இடதுசாரிகளையும் உலகின் புதிய ஒழுங்கமைவின் கோரம் குறித்து சிந்திக்கவைத்த நிகழ்வு.

இதன் பின்னரான அரசியல் மாற்றங்க்ள், புதிய அரசியல் சக்திகளின் வரவு, புதிய ஒழுங்கு குறித்த பார்வை என்பன எல்லாமே தன்னார்வ நிறுவனங்களையும், உலகின் நீண்டகால சந்தைப் பொருளாதாரத்தின் நிலையான தன்மை குறித்துத் துயர்ப்படும் ஏகபோகங்களையும் இலங்கையின் பக்கம் நோக்கிக் கவனத்தைத் திருப்பியுள்ளது.

ஒரு புறம் தன்னார்வ நிறுவனங்கள் புற்றீசல் போல இலங்கை அரசியலின் சகல மட்டத்தையும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. மறுபுறத்தில் உலக வல்லரசுகள் தத்தமது வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்திவைத்துள்ளன.

முள்ளி வாய்க்காலில் புலிகள் இயக்கத்தின் பிரதானிகளின் சரணடைவின் போது பேச்சுக்களில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினரான சந்திரநேருவை இலங்கையிலிருந்து அமரிக்க அரசே பாதுகாத்து சிங்கப்பூர் ஊடாக பிரித்தானியாவிற்குக் கொண்டுவந்தது என்று இனியொருவிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்த சாட்சிகளில் ஒருவராக அவர் பயன்படுத்தப்பட முடியும் என்ற ஒரே காரணத்தினாலேயே அவர் பாதுகாக்கப்பட்டு இங்கிலாந்திற்கு அனுப்பிவைக்கப்படதாக அபிபிராயப்படுகிறார். “ராஜபக்ச அமரிக்காவுக்கு இன்னும் பிரச்சனை கொடுத்தால் அமரிக்கா அவரை விட்டுவைக்காது” என்கிறார் அவரது மொழியில்.

இன்றய இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் பின்னணியிலுள்ள அரசியல் என்பது போரின் வெற்றி தொடர்பானதும் சிங்களப் பேரின வாதத்தின் வெற்றி தொடர்பானதுமான சிங்கள சமூகத்தின் நினைவுத் திறனைப் பாதுகாப்பதும் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் நினைவுத் திறனை அழிப்பதிலிருந்தும் தான் கட்டியமைக்கப்படுகிறது.

பௌத்ததின் புனிதம் குறித்த வரலாற்றுவழிவந்த சமூக நினைவுத்திறனின் கால அளவை நீடிப்பதற்குரிய அனைத்துப் புறக் காரணிகளையும் உள்வாங்க்கொள்ளும் சிங்கள பௌத்த பாசிச அரசியல் என்பது, பின் காலனியப் பகுதி முழுமையும் இலங்கையில் இரத்த ஆற்றை ஓடவிட்டுள்ளது.அவர்களில் யார் சிறந்த பௌத்த மேலாதிக்கவாதி என்பதை நிறுவுதலும் சிங்கள மக்களை அச்சிந்தனையை நோக்கி வளர்த்தலும் தான் அவர்களின் அரசியல். மறுபுறத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்பது தமிழ் பேசும் மக்களின் அழிவிலிருந்தே கட்டமைக்கப்படுகிறது.

ஒடுக்குமுறையாளர்கள் தமது இரத்த வெறியாட்டத்தையெல்லாம் நிகழ்த்தி முடித்த பின்னர், தமது ஒடுக்குதல் சார்ந்த நினைவாற்றலை முற்றாக அழித்து மறுபடி அழிப்பிற்காகத் தம்மைத் தயார்படுத்திக்கொள்தலே அரச அதிகாரத்தின் அரசியல் வழிமுறை. இலங்கைத் தேர்தலில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைத் தமது அரசியலாக வரித்துக்கொண்ட இரு எதிர் முகாம்களும் இந்த செயன்முறையைத் தான் நமது சமூகத்தின் மீது திணிக்க முற்படுகின்றன. சந்திர நேரு குறிப்பிடும் அமரிக்க ஏகாதிபத்தியமும், தென்னாசியாவின் துருவ வல்லரசான இந்தியாவும் இதே சிங்கள பௌத்த மேலாதிக்கவாத சிந்தனையின் நினைவுத்திறனைப் பேணுதலிலிருந்தே தமது ஆதிக்கத்தைக் கட்டமைத்துக்கொள்ள முனைகின்றன.

வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டியும், அதிகார முறைகளும் இதே அரசியல் பின்னணியைத் தான் முன்னிறுத்துகின்றன.
இலங்கை இனப்படுகொலை முற்போக்கு அறிவுசார் பகுதிகளின் உரைகல். ஒடுக்குமுறையின் புதிய வடிவங்களை வெளிப்படையாகப் புரிய வைத்திருக்கிறது. உலகின் மனிதாபிமானிகளையும், இடதுசாரிகளையும், தமிழ்ப் பேசும் இலங்கை மக்களையும், தமிழகத்தின் உணர்வாளர்களையும், முற்போக்கு அணியையும் ஒடுக்கு முறையின் கோரத்தை உணரவைத்திருக்கிறது.

தன்னார்வ நிறுவனங்களின் பிடியிலோ, தேர்தல் அமைபின் தந்திரோபாய வலையிலோ அமிழ்ந்து சீரழிந்து செல்லாமல், மக்களின் நினைவாற்றலை அரச ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டத்தை உருவமைக்கும் வழிமுறையாக மாற்றும் அரசியல் தளம் பலப்படுத்தப்பட வேண்டும். இரண்டு பிரதானமான போர்க் குற்றவாளிகள் பெற்றுக்கொள்ளும் அரசியல் அங்கீகாரம் நிராகரிக்கப்பட வேண்டும். கொலையாளிகள் பங்குபெறும் அரசியலும் தேர்தலும் நிராகரிக்கப்படுவதற்கான பிரச்சாரம் இலங்கையிலும் உலகம் முழுமையிலும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இதனூடாக மட்டுமே ஒடுக்குமுறைக்கெதிரானதும், இனப்படுகொலை குறித்ததுமான நினைவாற்றல் பேணப்பட வாய்ப்புண்டு.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சரணடந்தவர்களைக் கொலைசெய்த குற்றம் குறித்து : பொன்சேகா சிறைத் தண்டனை வழங்க முடியும்

Comments 2

  1. sakthivel says:
    16 years ago

    கட்டுரையில் நல்ல விசயங்கள் உள்ளன. தொண்டுநிறுவனங்களைப்பற்றிய உண்மை நிலவரங்களை தொடர்ச்சியான பரப்புரைகளினூடாக எல்லொருக்கும் தெரிவிக்கவேண்டிய கடமை அறிவாளிகளின் முக்கிய கடமையாக உள்ளது. அதுவும் யுத்தம் முடிந்த(?) இலங்கையை முற்றுகையிடுவதே தொண்டுநிறுவனங்களின் குறியாக உள்ளது. போராட்ட உணர்வுகளை மறக்கடிக்கவும், மழுங்கடிக்கவும் ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் தங்கள் பணியினைச் செய்ய புறப்பட்டிருக்கின்றன.

    83 களில் இந்தியாவில் பயிற்சிபெற்ற ஈழப்போராளிகள் தொண்டு நிறுவனங்களின் வலைக்குள் சிக்குண்டுபோன வரலாறும் உள்ளது. தொண்டு நிறுவனங்களின் ஏகாதிபத்தியங்களின் கைகூலிகள் என்று தெரிந்தும் அவர்கள் கொடுக்கிற பணத்தினை பெற்று அனுபவிப்பது புத்திசாலியின் கடமை என்று பேசப்பட்டது. வாங்குபவன் புத்திசாலியானால் கொடுப்பவன் அதிபுத்திசாலியாக இருக்கிறான் என்பதை மறந்து விடுகிறோம்.

    கட்டுரை குறிப்பாக சமுதாய சிந்தனைபற்றிய படிப்பறிவுள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ளப்படுகிறது.
    இன்னும் இயல்பான மக்கள் மொழிகளில் எழுத்து அமைந்தால் நன்றாக இருக்கும்.

  2. Shiva says:
    16 years ago

    “வன்னி இனப்படுகொலையானது இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரிய அரசியல் அனர்த்தம். உலகின் மனிதாபிமானிகளையும் ஜனநாயக சக்திகளையும் இடதுசாரிகளையும் உலகின் புதிய ஒழுங்கமைவின் கோரம் குறித்து சிந்திக்கவைத்த நிகழ்வு.”
    “இரண்டு பிரதானமான போர்க் குற்றவாளிகள் பெற்றுக்கொள்ளும் அரசியல் அங்கீகாரம் நிராகரிக்கப்பட வேண்டும். கொலையாளிகள் பங்குபெறும் அரசியலும் தேர்தலும் நிராகரிக்கப்படுவதற்கான பிரச்சாரம் இலங்கையிலும் உலகம் முழுமையிலும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.”

    மிகவும் உண்மை. ஆனால் தென் இலங்கையில் உள்ள முக்கிய இடதுசாரிகட்கு (பாராளுமன்ற இடதுசாரிகளல்ல) இன்னமும் சரியாக விளங்கவில்லையே.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...