Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இந்திய முதலாளிகளின் சுவிஸ் வங்கி ரகசியங்கள்

இனியொரு... by இனியொரு...
02/15/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

உங்களுக்கு மாதச் செலவுக்கு மேல் அதிகமாக பணம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம் வங்கிக் கணக்கில் கணிசமான தொகை கையிருப்பில் இருக்கிறது அது மாதா மாதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. வங்கியிலிருந்து உங்களை தொலைபேசியில் அழைப்பார்கள்.

இத்தகைய அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் HNI – உயர் நிகரமதிப்பு நபர் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள்.
இத்தகைய அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் HNI – உயர் நிகரமதிப்பு நபர் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

“சார், நீங்க பணத்தை ஃபிக்சட் டெபாசிட்டில் போடலாமே, அதுக்கு இத்தனை சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.” என்பார்கள். “ம்யூச்சுவல் ஃபண்டில் போட்டால் இத்தனை ஆண்டில் இத்தனை மடங்கு அதிகமாகி விடும்” என்பார்கள். “காப்பீடு” என்பார்கள், “முதலீட்டு வாய்ப்புகள்” என்பார்கள், “வரிச் சலுகை” என்பார்கள். “சேமிப்பு” என்பார்கள்.

இத்தகைய அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் HNI – உயர் நிகரமதிப்பு நபர் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

இதற்கெல்லாம் மேல் அதிஉயர் நிகரமதிப்பு கொண்ட நபர்களில் சிலரைப் பற்றிய ஒரு பட்டியல் சென்ற வாரம் (ஞாயிற்றுக் கிழமை – பிப்ரவரி 8, 2015 அன்று) வெளியாகியிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் எச்.எஸ்.பி.சி வங்கியின் சுவிட்சர்லாந்து கிளையில் கணக்கு வைத்திருந்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவர்களில் 1,195 பேர் இந்தியர்கள்.

அந்த வங்கி சாதாரண லோக்கல் பொதுத்துறை ஸ்டேட் வங்கி இல்லை. இன்னும் ‘திறமை’யாக செயல்படும் தனியார் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கூட இல்லை. தனது அதிஉயர் பணக்கார வாடிக்கையாளர்கள் தமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள அனைத்து விதமான சட்டபூர்வ மற்றும் சட்டத்துக்கு புறம்பான சேவைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்த பன்னா……….ஆஆஆ….ட்டு வங்கி அது.

தனது அதிஉயர் பணக்கார வாடிக்கையாளர்கள் தமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள அனைத்து விதமான சட்டபூர்வ மற்றும் சட்டத்துக்கு புறம்பான சேவைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்த பன்னா……….ஆஆஆ….ட்டு வங்கி
தனது அதிஉயர் பணக்கார வாடிக்கையாளர்கள் தமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள அனைத்து விதமான சட்டபூர்வ மற்றும் சட்டத்துக்கு புறம்பான சேவைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்த பன்னா……….ஆஆஆ….ட்டு வங்கி

ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கியான எச்.எஸ்.பி.சி, இந்நபர்களுக்கு பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு, பணச் சலவை  (கருப்பை வெள்ளையாக்குதல்) மையமாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள்தான் இப்போது வெளியாகியிருக்கின்றன.

அந்த ஸ்விஸ் வங்கிக் கிளையில் இரகசிய எண் அடிப்படையிலான கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று உங்கள் நாட்டில் கருப்புப் பணம், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்படும் பணம் பற்றிய விவாதங்கள் கிளம்பி அரசியல்வாதிகளும், அண்ணா ஹசாரேக்களும் சவடால் அடிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனால், எதுவும் நடந்து விடப் போவதில்லை என்றாலும் எதுக்கு ரிஸ்க் என்று உங்களுக்கு தோன்றுகிறது.

அதை உணர்ந்து, சிறந்த ஒரு தனியார் நிறுவனமாக, வாடிக்கையாளரின் விருப்பத்தை நிறைவேற்றும் முகமாக, எச்.எஸ்.பி.சியின் ஸ்விஸ் கிளை உங்களுக்கான திட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்றும் சேவையையும் தானே செய்து விடுவதாக முன்வருகிறது.

எச்.எஸ்.பி.சியின் ஸ்விஸ் கிளை உங்களுக்கான திட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்றும் சேவையையும் தானே செய்து விடுவதாக முன்வருகிறது.
எச்.எஸ்.பி.சியின் ஸ்விஸ் கிளை உங்களுக்கான திட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்றும் சேவையையும் தானே செய்து விடுவதாக முன்வருகிறது.

“சார், நீங்க பேசாம ஸ்விஸ் குடியுரிமை வாங்கிடுங்க, அப்புறம் யாரும் உங்கள தொட முடியாது. உங்க பணத்தை ஸ்விஸ்ல வச்சிகிட்டு மொரீஷியஸ் மூலமா இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்யலாம். நினைச்சபடி வெளிநாட்டில செலவழிக்கலாம்.” என்று அதற்கான நடைமுறைகளை விளக்குவார் வங்கி பிரதிநிதி. அதை ஏற்றுக் கொண்டால், நீங்கள் ஸ்விஸ் குடிமகன், ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டும் அந்த நாட்டில் தங்கி இருந்தால் போதும், இந்தியாவில் உங்கள் (கொள்ளை) தொழிலை வழக்கம் போல தொடரலாம்.

swiss-leaks-bannerநாட்டுப் பற்றோ அல்லது தொழிலின் கட்டாயங்களோ உங்களை குடியுரிமை மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் செய்தால், அடுத்த வழியை வங்கி பிரதிநிதி முன் வைப்பார்.

“சரி சார், இந்திய குடிமகனாகவே இருந்துக்கோங்க. ஆனா, வருசத்துக்கு 6 மாசத்துக்கு மேல் வெளிநாட்டில இருக்கிறதா திட்டம் போட்டுக்கோங்க. அப்போ நம்ம கணக்கில நீங்க போடற பணம் எதுக்கும் இந்தியால வரி கட்ட வேண்டாம்” இது உங்களுக்கு ஒப்புதலாக இருந்தால், வங்கியே அதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்து, கட்டணத்தை வாங்கிக் கொள்ளும்.

சூட்கேஸ் நிறைய கரன்சி நோட்டாக பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு போக விரும்பினால் (தேர்தலில் வினியோகம் செய்ய உங்களுக்கு அது தேவைப்பட்டிருக்கலாம்) அதற்கும் ஏற்பாடு செய்து தந்திருக்கிறது அவ்வங்கிக் கிளை
சூட்கேஸ் நிறைய கரன்சி நோட்டாக பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு போக விரும்பினால் (தேர்தலில் வினியோகம் செய்ய உங்களுக்கு அது தேவைப்பட்டிருக்கலாம்) அதற்கும் ஏற்பாடு செய்து தந்திருக்கிறது அவ்வங்கிக் கிளை

“நம்ம தொழிலுக்கு 6 மாசம் வெளிநாட்டில் இருப்பதெல்லாம் சரிப்படாது” என்றோ, “வயசான காலத்தில இப்படி அல்லாட முடியாது” என்றோ நீங்கள் கருதினால், அதற்கும் ஒரு வழி வைத்திருந்தார்கள்.

“சரி உங்கள பணத்தை எல்லாம் இன்னொரு கணக்குக்கு மாற்றி விடுவோம். அந்தக் கணக்கு ஒரு கம்பெனி பெயரில் இருக்கும், அந்த கம்பெனி ஒரு டிரஸ்டுக்கு சொந்தமா இருக்கும், அந்த டிரஸ்டு உங்களுக்கு நிதி உதவி செய்றதா இருக்கும். இப்போ உங்களை யாரும் தொட முடியாது. எப்ப வேணுமோ அப்ப, அந்த கம்பெனி கணக்கில இருந்து உங்க இந்திய கம்பெனிக்கு பணத்தை கடனாகவோ, முதலீட்டாகவோ கொடுத்துக்கலாம். எந்தத் தலைவலியும் கிடையாது. கம்பெனி எந்த நாட்டில எப்படி பதிவு செய்றது, அறக்கட்டளையை எப்படி உருவாக்குவது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.” என்று அதையும் செய்து தருவார்கள்.

இதற்கெல்லாம் மேலும் நீங்கள் விடாப்பிடியாக, சூட்கேஸ் நிறைய கரன்சி நோட்டாக பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு போக விரும்பினால் (தேர்தலில் வினியோகம் செய்ய உங்களுக்கு அது தேவைப்பட்டிருக்கலாம்) அதற்கும் ஏற்பாடு செய்து தந்திருக்கிறது அவ்வங்கிக் கிளை, “இது இல்லீகல் சார், கவனமா கொண்டு போங்க, பிடிபட்டா சிக்கல்” என்ற எச்சரிக்கையுடன். இதைத் தவிர மேலே சொன்ன மற்ற நடவடிக்கைகள் எல்லாமே “லீகல்” என்று அழைக்கப்படும் சட்டத்துக்குட்பட்டவைதான்.

அப்பா அம்பானி செத்த பிறகு சொத்து பிரிப்பில் அம்மா அம்பானி தனது இரண்டு புதல்வர்களுக்கும் பிரித்துக் கொடுத்த ஸ்விஸ் கணக்கின் பிரிவினையாகக் கூட இது இருக்கலாம்.
அப்பா அம்பானி செத்த பிறகு சொத்து பிரிப்பில் அம்மா அம்பானி தனது இரண்டு புதல்வர்களுக்கும் பிரித்துக் கொடுத்த ஸ்விஸ் கணக்கின் பிரிவினையாகக் கூட இது இருக்கலாம்.

உதாரணமாக, பிரிட்டிஷ் தொழிலதிபர் ரிச்சர்ட் கேரிங் வங்கிக் கிளையிலிருந்து $50 லட்சம் (சுமார் ரூ 33 கோடி) ஸ்விஸ் பிராங்கு மதிப்பிலான கரன்சி நோட்டுகளை வாங்கி சென்றிருக்கிறார். அவர் தனது கணக்கிலிருந்து அமெரிக்க அதிபர் பில், ஹில்லாரி மற்றும் அவர்களது மகள் செல்சீ கிளின்டன் பெயரிலான அறக்கட்டளைக்கு $10 லட்சம் நன்கொடை அளித்திருக்கிறார். எச்.எஸ்.பி.சி தனது வாடிக்கையாளர்களுக்காக நடத்திய திருவிளையாடல்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கார்டியன் நாளிதழின் கட்டுரைகளைப் பாருங்கள்.

இத்தகைய ‘நேர்மை’யான சேவைகளை வழங்கிய வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்களின் பட்டியலில் இந்திய வாடிக்கையாளர்களில் முதன்மையானவர்கள் முகேஷ், அனில் அம்பானி சகோதரர்கள். 2006-ம் ஆண்டு இருவரது கணக்கிலும் ஒரே அளவில் ரூ 165 கோடி இருந்திருக்கிறது. அப்பா அம்பானி செத்த பிறகு சொத்து பிரிப்பில் அம்மா அம்பானி தனது இரண்டு புதல்வர்களுக்கும் பிரித்துக் கொடுத்த ஸ்விஸ் கணக்கின் பிரிவினையாகக் கூட இது இருக்கலாம்.

திருபாய் அம்பானியின் மகள் நீத்தா அம்பானி இப்போது கோத்தாரி குடும்ப மருமகள். அவர்களது கணக்கில் ரூ 195 கோடி இருந்திருக்கிறது. இந்தியாவில் தனியார் விமான சேவை ஆரம்பித்து, ‘திறமை’ காட்டிய ஜெட் ஏர்வேஸ் முதலாளி நரேஷ் கோயலின் கணக்கில் ரூ 116 கோடி இருந்திருக்கிறது.

தொழிலதிபர் மனு சாப்ரியா குடும்பத்தினர் கணக்கில் ரூ 874 கோடி ரூபாய், வீட்டு அலங்கார பொருட்கள் இறக்குமதி செய்து விற்கும் மகேஷ் தரானி கணக்கில் ரூ 251 கோடியும், ரியல் எஸ்டேட் செய்யும் ஷ்ராவன் குப்தா, ஷில்பி குப்தா கணக்கில் ரூ 209 கோடியும் இருந்திருக்கின்றன. உள்ளூரில் மைனர் செயினும், ஸ்கார்பியோ காரும் என்று சுற்றும் ரியல் எஸ்டேட் கட்ட பஞ்சாயத்து ரவுடிகள் கவனிக்க.

இந்தப் பட்டியலில் உள்ள அரசியல்வாதிகளில் முன்னாள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர் பிரணீத் கவுர், முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அன்னு தாண்டன், முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் நாராயண் ரானேவின் மனைவி நீலம் ரானே, மகள் நிலேஷ் ரானே, முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் வசந்த் சாத்தேவின் குடும்பத்தினர், மற்றும் பால் தாக்கரேவின் மருமகள் ஸ்மிதா தாக்கரே ஆகியோரும் அடங்குவார்கள்.

“இந்தக் கணக்கெல்லாம் சட்ட பூர்வமானவைதான்.” “நான் பல ஆண்டுகளாகவே என்.ஆர்.ஐ-ஆக இருக்கிறேன்,” “நான் பல ஆண்டுகளாகவே வெளிநாட்டுக் குடிமகன்”
“இந்தக் கணக்கெல்லாம் சட்ட பூர்வமானவைதான்.” “நான் பல ஆண்டுகளாகவே என்.ஆர்.ஐ-ஆக இருக்கிறேன்,” “நான் பல ஆண்டுகளாகவே வெளிநாட்டுக் குடிமகன்”

முழுப்பட்டியலை தெரிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பட்டியலைப் பாருங்கள்.

எச்.எஸ்.பி.சி ஸ்விஸ் விபரங்கள் வெளியானதும்

“இந்தக் கணக்கெல்லாம் சட்ட பூர்வமானவைதான்.”
“நான் பல ஆண்டுகளாகவே என்.ஆர்.ஐ-ஆக இருக்கிறேன்,”
“நான் பல ஆண்டுகளாகவே வெளிநாட்டுக் குடிமகன்”

என்று டிசைன் டிசைனாக விளக்கமளித்து சுவிஸ் வங்கி அளித்து சேவைகளை முழுமையாக தாம் பயன்படுத்தியிருப்பதை உறுதி செய்கிறார்கள், இந்த யோக்கியர்கள்.

இத்தகைய நபர்கள் இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் படித்து, இந்தியாவில் தொழில் செய்து பணத்தை குவித்தாலும் இந்தியாவில் வசிக்காத இந்தியர் என்ற அந்தஸ்தில் தமது வருமானத்தை வெளிநாட்டில் வைத்துக் கொண்டு நாட்டுக்கு பட்டை நாமம் போட்டிருக்கின்றனர். அதற்கு எச்.எஸ்.பி.சி போன்ற ‘உத்தம’ வங்கியின் சேவையை பயன்படுத்தியிருக்கின்றனர்.

எச்.எஸ்.பி.சி பட்டியலை வெளிக் கொண்டு வந்த எர்வே ஃபல்சியானி என்ற பிரெஞ்சு-இத்தாலிய கணினி பொறியாளர்
எச்.எஸ்.பி.சி பட்டியலை வெளிக் கொண்டு வந்த எர்வே ஃபல்சியானி என்ற பிரெஞ்சு-இத்தாலிய கணினி பொறியாளர்

எச்.எஸ்.பி.சி வங்கியின் ஜெனீவா கிளை 2006-ம் ஆண்டு எர்வே ஃபல்சியானி என்ற பிரெஞ்சு-இத்தாலிய கணினி பொறியாளருக்கு தனது தரவுத்தளத்தை சீர்செய்யும்படி பணி கொடுத்திருக்கிறது. தரவுத் தளத்தை பார்த்த பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். உலகெங்கிலும் உள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், ஆயுதத் தரகர்கள், வைர வியாபாரிகள், போதை மருந்து கடத்தல்காரர்களின் கணக்கு விபரங்களையும், அவை தொடர்பாக நடந்திருந்த திருவிளையாடல்களையும் பார்த்த அவர் அந்த விபரங்களை நகல் எடுத்திருக்கிறார். கிரிமினல் மாஃபியா கும்பலுக்கும், கார்ப்பரேட் வங்கி, தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடு எங்கு தொடங்குகிறது என்று சொல்ல முடியாதுதான்.

இந்தப் பட்டியலின்படி 2006-07ம் ஆண்டில் இந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருந்த உலகப் பணக்காரர்களின் வங்கிக் கையிருப்பின் மதிப்பு $13,000 கோடி (இன்றைய நாணய மதிப்பில் சுமார் ரூ 8 லட்சம் கோடி).

எர்வே 2009-ம் ஆண்டு இந்த கிரிமினல் வங்கிக் கணக்கு விபரங்களை பிரெஞ்சு போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார். பிரெஞ்சு அரசு அதை பல்வேறு நாட்டு அரசுகளுக்கு தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் 2011-ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசுக்கு 600-க்கும் அதிகமான இந்தியர்களின் பெயர் தெரிய வந்திருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியலை வெளிப்படையாக வெளியிடவோ, கணக்கு வைத்திருந்த முதலாளிகள் மீதோ, அவர்களுக்கு உதவி செய்த எச்.எஸ்.பி.சி அதிகாரிகள் மீதோ எந்த நடடிக்கையும எடுக்கவோ செய்யாமல் மூடி மறைத்தனர், இந்திய அரசும் உச்சநீதிமன்றமும். இந்தப் பணத்துக்கு முறையாக வரி கட்டியிருக்கிறார்களா என்று விசாரணை செய்யப் போவதாக சவடால் விட்டு, எதிர் முகாமைச் சேர்ந்த பணக்காரர்கள் மீது சோதனை நடத்துவதற்கு அதை பயன்படுத்திக் கொண்டனர்.

“முகேஷ் அம்பானியோ, ரிலையன்ஸ் நிறுவனமோ தனது தனியார் வங்கி பிரிவில் கணக்கு வைத்திருக்கவில்லை” என்று எச்.எஸ்.பி.சி உறுதிபட கூறியிருந்தது.
“முகேஷ் அம்பானியோ, ரிலையன்ஸ் நிறுவனமோ தனது தனியார் வங்கி பிரிவில் கணக்கு வைத்திருக்கவில்லை” என்று எச்.எஸ்.பி.சி உறுதிபட கூறியிருந்தது..

ஜனவரி 2012-ல் முகேஷ் அம்பானியை வருமான வரி விசாரணையில் மாட்டி விட்டதற்காக எச்.எஸ்.பி.சி வங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டதாக எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த நேரத்தில் “முகேஷ் அம்பானியோ, ரிலையன்ஸ் நிறுவனமோ தனது தனியார் வங்கி பிரிவில் கணக்கு வைத்திருக்கவில்லை” என்று எச்.எஸ்.பி.சி உறுதிபட கூறியிருந்தது.

“முகேஷ் அம்பானியோ, ரிலையன்ஸ் நிறுவனமோ தனது தனியார் வங்கி பிரிவில் கணக்கு வைத்திருக்கவில்லை” என்று எச்.எஸ்.பி.சி உறுதிபட கூறியிருந்தது.

பன்னாட்டு வங்கி முறைகேடுகள்
பன்னாட்டு வங்கி முறைகேடுகள்

கிரேக்க நாடு தொடர்பான 2,000 பேர்களின் விபரங்கள் அந்நாட்டு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருக்கின்றன. தனது நாட்டு பண முதலைகளின் பட்டியலை பிரெஞ்சு அரசிடமிருந்து பெற்றுக் கொண்ட அமெரிக்க அரசோ, எச்.எஸ்.பி.சி வங்கியின் மீது நடவடிக்கை எடுக்காமல் சிறு அபராதத் தொகை விதித்து வழக்கை முடித்துக் கொண்டது. அதே நேரம், எர்வே ஃபால்சியானி மீது ஸ்விட்சர்லாந்து வங்கி ரகசிய சட்டங்களை மீறியதற்காகவும் தொழில்துறை உளவு செய்ததற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு நாட்டு அரசுகளும் தாம் யாருக்காக செயல்படுகின்றன என்பதை தெளிவுபடுத்திக் கொண்டிருந்தன.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லா மோண்ட என்ற பத்திரிகையின் வசம் 1.3 லட்சம் பெயர்களைக் கொண்ட இந்த முழுப்பட்டியலும் வந்து சேர்ந்தது. அப்பத்திரிகை இங்கிலாந்தின் கார்டியன், இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட உலகளாவிய பத்திரிகையாளர் கூட்டமைப்புடன் சேர்ந்து வங்கிக் கணக்கு விபரங்களில் குறிப்பிட்டிருந்த முகவரிகளை சரிபார்த்து சென்ற வாரம் முழுப் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 1,688 இந்தியர்களின் விபரங்களை முறையாக சரிபார்த்து, 1,195 பேர் வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொண்டிருந்ததாக அடையாளம் கண்டிருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களிலும் பாக்வாரா, கோட்டயம், ஸ்ரீநகர், லூதியானா, சிம்லா போன்ற சிறு நகரங்களிலும் ஆய்வு செய்து இந்தப் பணியை முடித்திருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இந்தியர்களின் கணக்கு விபரங்களை சரிபார்த்து வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ்
இந்தியர்களின் கணக்கு விபரங்களை சரிபார்த்து வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ்

எச்.எஸ்.பி.சி ஸ்விஸ் கிளையில் கணக்கு வைத்திருந்த இந்திய வாடிக்கையாளர்களின் கையிருப்பு 2006-ம் ஆண்டில் மொத்தம் ரூ 25,000 கோடி. இந்த விபரங்கள் ஒரே ஒரு ஸ்விஸ் வங்கி தொடர்பானவை மட்டுமே. ஸ்விட்சர்லாந்தின் சுமார் 300 தனியார் வங்கிகளில் மொத்தம் $2 லட்சம் கோடிக்கும் (சுமார் ரூ 120 லட்சம் கோடி) அதிகமான உலகப் பணக்காரர்களின் பணம் கையாளப்படுகிறது என்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவற்றில் இந்திய முதலாளிகள் வைத்திருந்த கணக்குகளையும் சேர்த்தால்தான் வெளிநாட்டில் புழங்கும் இந்திய பணத்தின் முழு பரிமாணமும் தெரியவரும்.

மேலும், இந்தியாவின் கருப்புப் பணத்தின் அளவை ஸ்விஸ் கணக்குகளின் கையிருப்பு மட்டும் தீர்மானிக்கவில்லை.

மொரீஷியஸ் போன்ற வரியில்லா சொர்க்கங்கள் வழியாக அன்னிய நேரடி முதலீடு.
மொரீஷியஸ் போன்ற வரியில்லா சொர்க்கங்கள் வழியாக அன்னிய நேரடி முதலீடு.

இந்திய முதலாளிகள் வெளிநாட்டு வங்கிகளில் போடும் பணத்தை மொரீஷியஸ் போன்ற வரியில்லா சொர்க்கங்கள் வழியாக அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் நாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2012 வரை இந்தியாவுக்குள் வந்த அன்னிய நேரடி முதலீட்டில் 38% குட்டித் தீவான மொரீஷியஸ் நாட்டிலிருந்து வந்திருக்கிறது. 2012-13ல் மொத்த அன்னிய நேரடி முதலீடான $1800 கோடி (சுமார் ரூ 1.1 லட்சம் கோடி)யில் $805 கோடி (சுமார் ரூ 49,000 கோடி) மொரீஷியசிலிருந்து வந்திருக்கிறது.

இந்தப் பணத்தில் பெரும்பகுதி இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறைக்கு போயிருக்கிறது. 2005-ம் ஆண்டுக்கும் 2010-க்கும் இடையே ரியல் எஸ்டேட்டில் அன்னிய முதலீடு 80 மடங்கு அதிகரித்து 2010-ல் அதன் மதிப்பு $570 கோடி (ரூ 35,000 கோடி) ஆக இருந்தது. ஒரு தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி 2012-ல் ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களில் 30% வரை கருப்புப் பணமாக இருந்தது.

மும்பையில் சராசரி தனிநபர் வருமானத்தை ஈட்டும் ஒரு சாதாரண குடிமகன் 800 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றை சொந்தமாக வாங்குவதற்கு 100 ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்ற அளவுக்கு இந்த வெளிநாட்டுப் பண சுனாமி சராசரி இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறது.

வேலை வாய்ப்பு, வளர்ச்சியை உருவாக்குபவர்கள் என்ற பெயரில் மலிவு விலையில் நிலம், சலுகை விலையில் மின்சாரம், தண்ணீர், இயற்களை வளங்களை அள்ளிக் கொள்ள காடுகள், மலைகள், கடற்கரைகளுக்கு குத்தகை, வரிச் சலுகைகள் என்று குளிப்பாட்டப்படுகின்றனர் இந்த முதலாளிகள். அவர்களுக்கு கொடுக்கும் சலுகைகளுக்கான செலவுகளை ஈடுகட்ட கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் போன்ற குடிமக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மேலும், தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து முறையான ஊதியம் வழங்காமல், ஒப்பந்த முறையில் குறைந்த கூலி கொடுத்து சுரண்டுவதன் மூலமாகவும் கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர் இந்தப் பண முதலைகள்.

மும்பையில் சராசரி தனிநபர் வருமானத்தை ஈட்டும் ஒரு சாதாரண குடிமகன் வீடு ஒன்றை சொந்தமாக வாங்குவதற்கு 100 ஆண்டுகள் உழைக்க வேண்டும்
மும்பையில் சராசரி தனிநபர் வருமானத்தை ஈட்டும் ஒரு சாதாரண குடிமகன் வீடு ஒன்றை சொந்தமாக வாங்குவதற்கு 100 ஆண்டுகள் உழைக்க வேண்டும்

அவர்கள் தமது பணத்தை இது போன்ற வரியில்லா சொர்க்கங்களில் பதுக்கி வைக்கிறார்கள் என்ற உண்மை ஊடகங்கள் மத்தியிலும், முதலாளித்துவ அறிவுஜீவிகள் மத்தியிலும் பெரிய அளவு சலசலப்பை ஏற்படுத்தி விடவில்லை.

இத்தகைய முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தம், வங்கிக் கடன்களை வழங்க முன்னுரிமை, விவசாய நிலங்களை மலிவு நிலையில் கைப்பற்றி கொடுத்தல், உற்பத்தி வரி, வருமான வரிச் சலுகை என்று அவர்களுக்கு சேவை செய்கின்றன மத்திய, மாநில அரசுகள். இவர்கள் நடவடிக்கைகள் தொடர்பாக வரி வசூலிக்க வேண்டிய வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் அரசியல் நோக்கங்களுக்காக பழி வாங்க மட்டும் பயன்படுத்தப்படுகின்றன. வருமான வரித்துறை அப்படி நடவடிக்கை எடுத்தாலும் வோடபோன் வழக்கில் செய்தது போல உயர், உச்சநீதி மன்றங்கள் அதை ரத்து செய்து விடுகின்றன.

ஊடகங்களோ, இத்தகைய பணப் பாய்ச்சலும் அது உருவாக்கும் வளர்ச்சி என்ற குமிழிகளும்தான் நாட்டை முன்னேற்றும் என்று பிரச்சாரம் செய்கின்றன.

இந்த சூழலில் எச்.எஸ்.பி.சி ஆவணங்கள் வெளிப்படுத்தியிருக்கும் உலகு தழுவிய நிதிக் கும்பலின் கொள்ளையையும், சட்ட விரோத செயல்களையும் தடுத்து நிறுத்த முடியாதபடி இந்த அரசு அமைப்புகள் சீரழிந்து போய் விட்டன என்பதை மறுக்க முடியுமா?

தொடர்புடைய சுட்டிகள்:

தொடர்புடைய சுட்டிகள்

  • Opinion: For Black Money, Look in India, Not Switzerland
  • Rs 25,000 crore in Swiss accounts is huge, but guess how big India’s illegal economy is
  • India’s land, and not Switzerland, is where the hunt for black money should begin
  • Five reasons why the Indian Express Swiss account story is incredibly important
  • Ambanis are most prominent names on list of Swiss account holders revealed in Express investigation
  • The List: Who’s Who & How Much
  • HSBC documents reveal criminal conspiracy of banks and governments
  • HSBC files reveal mystery of Richard Caring and the £2m cash withdrawal

நன்றி : வினவு

 

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலிஸ் கொலைவெறித் தாக்குதல்

மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலிஸ் கொலைவெறித் தாக்குதல்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...