அரேபிய ஜனநாயகப் புரட்சியானது பாட்டாளி வர்க்கப் புரட்சியல்ல என்பதால் ஏகாதிபத்தியங்கள் இறுதியில் தமது அரசியல் தந்திரோபாய நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளும் என்பதால் அதனை ஆதரிக்க முடியாது என இடதுசாரி சந்தர்ப்பவாதிகள் கூறுகின்றனர்.
இந்தக் கூற்று ஏகாதிபத்தியமும் அதனோடு கைகோர்த்துச் செயலாற்றும் முதலாளித்துவமும் தற்கொலை செய்துகொள்ளத் தயாரில்லை என்பதை மட்டுமே இந்தக் கூற்று எமக்கு உணர்த்துகிறது.
துனிசியாவில் ஆரம்பித்த இயக்கம் எகிப்து, லிபியா, யெமென், ஜோர்டான், அல்ஜீரியா, மரோக்கோ, ஈராக், ஓமான் போன்ற நாடுகளைவரை விரிவடைந்து மட்டுமன்றி, ஈரான் மற்றும் சீனா வரைக்கும் சென்றுள்ளது. அது மட்டுமல்ல ஏகாதிபத்தியங்களின் இருதயப் பகுதியான ஐரோப்பா வரைக்கும் இது விரிவடையாலாம் எனவும் அங்கெல்லாம் சமநிலையில் சீர்குலைவை ஏற்படுத்தாலாம் எனவும் மறுசீரமைப்பாளர்களும், ஆதிக்க வர்க்கத்தினரும் அச்சமடைகின்றனர். இவ்வாறுதான் உழைக்கும் வர்க்கத்தை இஸ்லாமையும் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளையும் காட்டிப் பயமுறுத்தில் பிளவுபடுத்தி வைத்திருந்தனர்.
மக்கள் எழுச்சி வளர்ச்சியடையுமாயின் லிபியாவிலும் அதற்கு வெளியிலும் ஏகாதிபத்தியங்கள் இராணுவத் த லையீடு செய்வதற்குத் தயாராக இருக்கின்றன.
அரேபிய ஜனநாயகப் புரட்சி மிக அவதானமாக முன்னேறிச் செல்கிறது. இதுவரை நேரடியான ஏகாதிபத்திய இராணுவத் தலையீடுகள் இல்லையெனினும் தன்னார்வ நிறுவனங்களூடான தலையீடு காணப்படுகிறது.
பிரஞ்சு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்(
PC maoiste de France) அறிகையிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு பகுதி..







