Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சசிகலா கும்பலின் 2000 கோடி சொத்துக்கள் முடக்கம் !

வரதன் by வரதன்
10/09/2020
in தமிழகம், பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள் தமிழகம்

அதிமுக –வில் நடந்து வந்த கோஷ்டி மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்து ஓபிஎஸ் கும்பல் எடப்பாடி கும்பலிடம் சரணடைந்திருக்கிறது. ஜெயா மறைவுக்கு பிறகு சசிகலா காலில் விழுந்து ஆட்சியைப் பிடித்த எடப்பாடி கும்பல் பின்னர் தனி ஆவர்த்தனம் செய்து தன்னை நிலை நாட்டிக் கொண்டது. முக்கியமாக பாஜக-வின் அடிமைகளாக பினாமியாக விலை போய் தமிழகத்தில் ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டது. சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ்-ஐ களத்தில் இறக்கிய பாஜக பின்னர் அது தேறவில்லை என்றதும் எடப்பாடி கும்பலை மடக்கி ஓபிஎஸ்ஸோடு இணைத்தது. துணை முதலமைச்சர், ஒருங்கிணைப்பாளர் என்ற பாத்திரங்களோடு ஓபிஎஸ் திருப்திப் பட்டார்.

இடையிடையே அதிமுக கும்பலின் மீது வருமான வரித் துறையை ஏவி விட்டதன் மூலம் பாஜக அவ்வப்போது தனது அடிமை அதிமுக கும்பலை மிரட்டி வந்தது. அப்போது அவர்கள் போட்ட வழக்குகள் எவையும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. அதே போன்று கொடநாடு கொலை வழக்குகளும் ஊற்றி மூடப்பட்டன. இதற்கு மேலும் இன்றைய கொரோனா காலம் வரை அதிமுக கும்பல் அடித்த கொள்ளையும் ஊழலும் எழுத்தில் அடங்காது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொன்னது போல இவர்கள் கொரோனா காலத்திலும் கொரோனா கோடிஸ்வரர்களாக உருவெடுத்து விட்டனர்.

இதனடையே திவாகரன் கும்பல் சசிகலா ஆசியுடன் தனி ஆவர்த்தனம் செய்ய முற்பட்ட போது அந்த கும்பலுக்கு பாடம் புகட்டும் வண்ணம் 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை, சோதனைகளை பல்வேறு இடங்களில் நடத்தியது.

தற்போது சசிகலா விடுதலை ஆகப் போகிறார். அவர் வெளிவந்து எடப்பாடி ஓபிஎஸ் கும்பலுக்கு ஒரு இடையூறாக இருக்குமளவு செல்வாக்கு இல்லை என்றாலும் ஒரு செக்மேட் வைக்க வேண்டும் என்பதற்காக தற்போது சசிகலா கும்பலின் 2000 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கம் செய்துள்ளது வருமான வரித்துறை.

மோடி அரசு 2016-ம் ஆண்டு ஊழல் மற்றும் கருப்பு பணம், கள்ள நோட்டுக்களை ஒழிக்கப் போவதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது. இதனால் ஊழலும் ஒழியவில்லை, அச்சில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் திரும்ப வந்துவிட்டன, ஒரு சிறு அளவைத் தவிர. மாறாக சில நூறு இந்திய மக்கள் செத்துப் போனதும், சிறு தொழிகள் அழிந்ததும், பல கோடி மக்கள் வாழ்வாதாராத்தை இழந்ததும்தான் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஆகப்பெரும் வேதனை மற்றும் சாதனை.

அந்த நேரத்தில் பாஜக பிரமுகர்கள் பலர் பல மாநிலங்களில் தங்களிடமுள்ள மதிப்பிழந்த பல கோடி ரூபாய்களை இரவோடு இரவாக மாற்றி விட்டனர். அதே போன்று சசிகலா கும்பலும் தன்னிடம் உள்ள நோட்டுக்களை மாற்றி சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பினாமி பெயர்களில் வாங்கியிருக்கிறார். பல நூறு பாஜக பிரமுகர்களின் பினாமி மோசடிகளை கண்டு கொள்ளாத வருமான வரித்துறை சசிகலா கும்பலை குறிவைக்க காரணம் அதிமுக அடிமை ஆட்சியின் மீதான தனது கடிவாளத்தை இறுக்கி வைப்பதுதான்.

அந்த வகையில் 2017-ம் ஆண்டில் சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மொத்தம் ஐந்து நாட்கள் இந்த சோதனை நீடித்தது. அப்போது சசிகலா கும்பல் 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி, 1,500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு மோசடி செய்தது  கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த விவரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் 2019-நவம்பரில் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியது. தொடர்ந்து 2020 செப்டம்பர் ஒன்றில் 300 கோடி ரூபாய் சொத்துக்களையும், தற்போது கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் நிலம் ஆகிய சொத்துக்களை உள்ளிட்டு 2000ம் கோடி ரூபாய் சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியது. என்ன தலை சுற்றுகிறதா? பிடிபட்ட சொத்துக்களே இத்தனை கோடி என்றால் பிடிபடாத சொத்துக்கள் எத்தனை மடங்கு இருக்கும்?

ஏனெனில் இப்படி சுற்றி வளைத்து சொத்துக்களை மடக்கிய பிறகும் சசிகலா கும்பலின் ஜெயா டிவியோ, தினகரனின் தொழில்களோ எவையும் முடங்கி விடவில்லை. இத்தனைக்கு பிறகும் அவர்கள் பில்லியனர்தான்.

பாஜக-வின் திட்டப்படி அதிமுக எடப்பாடி கும்பல் அடிமைகளை வைத்து வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காய்களை நகர்த்த இருக்கிறது. அதற்கு இடையூறாக இருக்க கூடாது என்பதற்கான மிரட்டல்தான் இந்த சொத்து முடக்கம். ஒருவேளை சசிகலா கும்பலையும் மிரட்டி எடப்பாடி கும்பலுக்கு எந்த பிரச்சினையும் தரக்கூடாது என்று பேரம் பேசினால் இந்த முடக்கம் நாளடைவில் நீர்த்துப் போய்விடும்.

ஜெயா சசி கும்பல் 90-களின் ஆரம்பத்தில் இருந்து தமிழகத்தை சூறையாடியிருக்கிறது. அந்த ஊழல் மோசடி சொத்துக்கள் இன்றளவும் சசிகலா கும்பலின் கையில்தான் இருக்கிறது. ஒரு தேர்தல் உத்திக்காக மட்டுமே மோடி அரசின் வருமான வரித்துறை சசிகலா கும்பலின் சொத்துக்களை முடக்குவதாக நாடகமாடுகிறது.

மக்கள் சொத்துக்களை சூறையாடிய இந்த கும்பலின் சொத்துக்களை மக்களே நேரடியாக மீட்காத வரை இவர்கள் அடங்க மாட்டார்கள்!

– வரதன்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
Tags: சசிகலாஎடப்பாடி பழனிச்சாமிதினகரன்பாஜகமோடி அரசுஜெயலலிதாவருமான வரித்துறைஓ.பன்னீர் செல்வம்இளவரசிஅதிமுக
ShareTweetShare
வரதன்

வரதன்

Next Post
மாணவர்களோடு தெருவில் சண்டை போட்ட துணைவேந்தர்

மாணவர்களோடு தெருவில் சண்டை போட்ட துணைவேந்தர்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...