மறைந்த அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இலங்கை வந்துள்ளார்.
குறித்த காலத்திற்கு இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் ஒரேயொரு ஜனாதிபதி தானே தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருகிறார். இப்போது இந்த நான்கு வருடங்களிலும் அவர் என்ன தான் செய்து வந்துள்ளார் என்ற விடயங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. இந்த அறிக்கையின்படி அவருடைய சராசரிச் செலவு 19 மில்லியன்கள். மகிந்த ராஜபக்சவின் கணக்கு வழக்கு விபரங்கள் வருமாறு: ஹெட்ஜிங் விவகாரம்: பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அஸந்த டி மெல் மகிந்த ராஜபக்சவின்
இன்றைய ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான சரத் பொன்சேகாவின் நேர்காணல்கள் தொடர்பாக பாக்கியசோதி சரவணமுத்துவின் CPA ( Centre for Policy Alternatives) நிறுவனம் விடுத்திருந்த கண்டன அறிக்கையின் முதல் பகுதி. அப்போதைய இராணுவத் தளபதியின் இந்த நேர்காணல் 28/11/2008 அன்று வழங்கப்பட்டிருந்தது. இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கனடாவிலிருந்து வெளியாகும் நஷனல் போஸ்ட் செய்திப் பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணல் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதுடன் அதுதொடர்பான எமது மறுப்பையும் தெரிவிக்கிறோம். இலங்கை அரசியல் சூழல் குறித்து சரத்
ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள். அந்த நான்காவது தூண் சரியான முறையில் பேணப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான். எல்லைகளைத் தாண்டிய ஊடகவியலாளர் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இதற்கு நல்லதொரு சான்றாகும். வாசிக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல்வேறு தகவல்களை உள்ளடக்கி அதன் வருடாந்த அறிக்கை வெளிவந்திருக்கிறது. உலக நாடுகளில் 2009 ஆம் ஆண்டில் 76 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 33 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள். 573 பேர் கைது செய்யப்பட்டதுடன் 1456 பேர் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்கள்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் அநீதியொழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவியாக திருமதி சாந்தினிதேவி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மலையக மக்கள் முன்னணியின் உயர்மட்ட அரசியல் குழு இன்று கொழும்பில் கூடி ஏகமனதாக இந்தத்தீர்மானத்தினை எடுத்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் பூதவுடல் அன்னாரின் ராஜகிரிய இல்லத்தில் தற்போது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட யுத்த வெற்றியின் பின்னர் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்ட தற்போதைய ஜனாதிபதி 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய மகிந்த சிந்தனை உறுதிமொழிகளை காலால் எட்டி உதைத்துவிட்டு பொது மக்களை முழுமையாக மறந்துவிட்டு தனது குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டு வருகிறார். ஊழலும், குடும்பமும் அரசசாட்சி செய்வதுடன் ஊடக சுதந்திரம் உள்ளிட்ட மக்களின் ஜனநாயக உரிமைகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க எந்த வேலைத் திட்டங்களும்
சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி சந்திரசேகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 52 . இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சரை உடனடியாக கொழும்பின் நவலோக்க வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும், சிகிச்சை பலனின்றி அவர் மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் பிரபல அரசியல்வாதியாக திகழ்ந்த அவர், பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவராவார். 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்த