Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மரணத்தின் வாசல்வரை சென்று வந்த திமுத்துவுடனான உரையாடல் ஒலி வடிவில்

பாசிச ராஜபக்சவின் அரசபடைகளால் கடத்தப்பட்டு கொலைசெய்வதற்காகத் தடுத்து வைக்கப்பட்டு மரணத்தின் வாசல்வரை சென்றுவந்த திமுத்து ஆட்டிகலவுடனான உரையாடல் கீழே தரப்படுகிறது. முன்னிலை சோசலிசக் கட்சியின் பெண்கள் அணியின் பொறுப்பாளரான திமுத்து உரையாடலின் போது தன்னைச் சுய விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.தொலைபேசி தெளிவின்மை தடங்கல்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலின் ஒலி வடிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசிற்கு அழுத்தங்கள் வராமல் இருந்திருந்தால் நிச்சயமாகத் தன்னைக் கொலைசெய்திருப்பார்கள் என்று கூறும் திமுத்து, அபாயகரமான சூழலிலும் மக்களை அணிதிரட்டிப் போராடுவது ஒன்றே எமக்கு முன்னுள்ள ஒரே வழி என்று கூறும் போது தன்னம்பிக்கையும், உறுதியும், சமூக உணர்வும் மக்கள் பற்றும் வெளிப்படுகிறது.

ராஜபக்ச போன்ற சர்வாதிகரிகள் மக்கள் பலத்துடனேயே நிலைத்து நிற்கிறார்கள். மக்களை அணிதிரட்டி அவர்களுக்குப் போராடக் கற்றுக்கொடுத்து சர்வாதிகாரிகளை மக்களிலிருந்து அன்னியப்படுத்துவதே இன்று பிரதான கடமை என்க்கூறும் திமுத்து அதற்கன ஆதரவுத்தளத்தை அனைத்து மக்கள் பிரிவுகளிடமிருந்தும் எதிர்பார்க்கிறார்.

தாம் ஆபத்தின் மத்தியில் எப்போதும் அழிக்கப்படலாம் என்ற நிலையிலேயே வாழ்வதாகக் கூறும் அவர் கூடங்குளத்தில் நிகழந்தது போன்று மக்கள் போராட்டங்களை அழிக்க அரச அதிகாரங்கள் முயலும் என்றாலும் மக்களை அணிதிரட்டி ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டங்களூடாக அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார்.

பல வருடங்களின் பின்னர் இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராக தமிழ்ப் பேசும் மக்களோடு சிங்கள மக்களும் இணைந்து போராடிய லண்டன் ஆர்ப்பாட்ட நிகழ்வைக் கூறும் திமுத்து இது ஒரு சிறந்த முன்னுதாரணம் என்கிறார்.

இனியொருவில் சமூகப்பற்றுள்ளவர்களின் மேலதிக கேள்விகளுக்கான பதில்களை திமுத்துவிடம் பெற்று பிரசுரிக்கப்படும்.

அரசியல் முரண்பாடுகள் உடன்பாடுகளுக்கு அப்பால் ராஜபக்சவின் மரணப்பொறிக்குள் வாழும் பெண்போராளி ஒருவரின் இந்த வாக்குமூலங்கள் வரலாற்றில் பதியப்படும்.

-இனியொரு..

https://inioru.com/wp-content/uploads/2012/dimuth.mp3?_=1

சில தினங்களில் பிரேம்குமார் குணரத்னத்தின் நேர்காணல் பிரசுரிக்கப்படும்.

Exit mobile version