Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆனந்தசங்கரி, சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கிடையில் முரண்பாடு, உடைகிறதா தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு?

உள்ளூராட்சித் தேர்தலையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இடம்பெற்ற ஆசனப் பங்கீடுகளினால் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஈபிஆர்எல்எவ் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற கூட்டணி உருவாகியது.

தற்போது தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஈபிஆர்எல்எவ் இற்குமிடையில் ஆசனப் பங்கீட்டில் முரண்பாடு தோன்றியுள்ளது.

வவுனியா நகரசபைத் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வேட்பாளர்களை நியமிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மறுத்துவருகின்றார். இதனையடுத்து ஆனந்த சங்கரிக்கும், சிவசக்தி ஆனந்தனுக்குமிடையில் சுமார் இரண்டு மணித்தியாலங்களாக பேச்சு இடம்பெற்றது.

சிவசக்தி ஆனந்தன் இணக்கம் தெரிவிக்காத நிலையில், கோபமடைந்த ஆனந்த சங்கரி, மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

எந்தப் பிரச்சனையால் ஈபிஆர்எல்எவ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகியதோ, அதையே தற்போது தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து சுரேஸ்பிரேமச்சந்திரன் செய்து வருகின்றார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தமது சுயலாபத்துக்காகவே போட்டியிடுகின்றனர். இதில் சம்பந்தனுக்கு விதிவிலக்காக செயற்படுபவர்கள் எவருமேயில்லையென்பதே யதார்த்தம்.

 

Exit mobile version