Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் ஆரம்பித்துவிட்டது!

உலகின் மிகப்பெரும் மத அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்களாக அல் கயிதா போன்ற ஜிகாத் அமைப்புக்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட்டாலும், உலகின் மிகப்பெரும் பயங்கரவாத மத அடிப்படைவாத இயக்கம் ராஷ்தியா சுயம் சேவக் சங் (RSS) என்ற அமைப்பே. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கைலும் ஐரோப்பிய நாடுகளிலும் கிளைகளைக் கொண்டிருக்கும் ஆ.எஸ்.எஸ் இந்தியாவில் நான்குமுறை தடைசெய்யப்பட்டது.

ஐரோப்பிய பாசிச அமைப்புக்களால் கவரப்பட்டு 1925 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஹிட்லர். முசோலீனி போன்ற மனிதக் கொலையாளிகளை பின்பற்றுவதாக தனது அரசியல் திட்ட முன்மொழிவிலேயே கூறும் ஆர்.எஸ்.எஸ் இந்திய மக்களை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரதும் எதிரி.

இந்தியா முழுவதும் தனது பயங்கரவாதப் பயிற்சி முகம்களை நடத்திவந்த ஆர்.எஸ்.எஸ் இன் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரே இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ஆளும் பாரதீய ஜனதா கட்சியைத் தனது முன் முகமாகப் பயன்படுத்திவந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, 1985 ஆம் ஆண்டு தனது ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான நன்கு பயிற்றப்பட்ட நரேந்திர மோடியை பாரதீய ஜனதாவிற்கு அனுப்பிவைத்தது. பார்பனீய இந்துத்துவ பயங்கரவாதத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் முன்முகமாக பாரதீய ஜனதாவும் செயற்படுகின்றன.

இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாதப் பயிற்சி முகம்களைக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று உலகின் நான்காவது பெரிய இராணுவ பலத்தைக் கொண்டிருக்கும் இந்தியா என்ற நாட்டையே ஆட்சி செய்து வருகிறது.

உலகின் பல நாடுகளிலிருந்து திரட்டப்படும் பணம் தன்னார்வ நிறுவனங்களின் முகமூடியில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சென்றடைகிறது. SEWA, Childline,India Development and Relief Fund போன்ற பெயர்களில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் இன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுகின்றன. இந்த அமைப்புக்களின் பின்னணியில் இந்தியாவிற்கு வெளியில் வாழும் பார்பனீய மத அடிப்படைவாதிகள் இயங்கினாலும் சில மர்மமான நிதி வழங்குனர்கள் நாசி அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் என்ற தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

India Development and Relief Fund என்ற நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஜேர்மனிய நாடுகளில் இயங்கிவருகின்றது. இந்த நிறுவனம் CISCO என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனத்திடமிருந்தும் மேலும் பல நிறுவனங்களிடமிருந்தும் நிதி திரட்டியதற்கான ஆதரங்கள் வெளியாகின.

உலகின் மிகப்பெரிய அரசு ஒன்றை சடவிரோத பயங்கரவாத அமைப்பு ஒன்றே நடத்திவருகிறது என்றாலும் அதற்கான எதிர்ப்புக்குரல்கள் இந்தியாவிற்கும் அதற்கு வெளியிலும் கேட்பதில்லை.
மக்களை மத அடிப்படைவாதத்தினுள் அமிழ்த்திவிட்டு அவர்களை ஒட்டச் சுரண்டுவதற்காக அதிகாரவர்க்கம் அடிப்படைவாதத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது.

இந்துத்துவ பயங்கரவாதத்தின் நிழல் கூடப்படாமலிருந்து தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் ஆர்.எஸ்.எஸ் வன்முறையைத் தூண்ட முயற்சிப்பதை அண்மைக்கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

மதவாத அமைப்புக்கள், ஆச்சிரமங்கள், ஆர்.எஸ்.எஸ் குண்டர்படைகள், ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பெற்ற ஹெச்.ராஜ சர்மா போன்ற தலைவர்கள் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான காட்சி ஊடகங்கள் ஆர்.எஸ்.எஸ் இன் பிரச்சார அங்கமாக இயங்கி வருகின்றன. ஹெச்.ராஜா என்ற ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி ஒருவர் சினிமாக் கவிஞரான வைரமுத்துவை பொதுவெளியில் மிரட்டிய பின்னரும், ஹெச்.ராஜாவைப் பற்றிப் பேசாத ஊடகங்கள் வைரமுத்து சரியா தவறா என விவாதங்களை நடத்திவருகின்றமை, ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் தனது பயங்கரவாத நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டமைக்கன அறிகுறிகள்.

ஆர்.எஸ்.எஸ் இன் பயங்கரவாத நடவடிக்கைகளிருந்து தற்காத்துக்கொள்வதற்கான அரசியல் செயற்பாடுகள் எல்லத் தளத்திலும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மக்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் முன்னெடுபதற்கான அவசியம் அவசரமானது.

Exit mobile version