Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரிகளும் அவர்களின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்…

அமெரிக்காவினை மையமாகக் கொண்டு செயற்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்வேறு நாடுகளில் உரிமைப் போராட்டங்களை அழிப்பதில் பிரதான பங்கு வகிப்பது மட்டும் அல்லாமல், தாமே தமக்கு தேவையான அரசுகளை உலகெங்கும் கவிழ்க்க செயற்படுவதுடன், தாமே முன்னின்று சில அரசுகளை வழி நடத்தி வருவது மட்டும் அல்லாமல், தங்கள் கட்டுக்குள் உலகின் சகல அரசுகளும் இருக்கும் வகையில், அந்நாடுகளில் இனவாதங்களையும், போலி புரட்சிகளையும் தோற்றுவித்து, அதிகாரங்களை மக்களிடம் இருந்து பிடுங்கி, தங்கள் கைகளை எங்கும் ஓங்கச் செய்தது மட்டும் இல்லாமல், எங்கும் தங்கள் நிர்வாக கட்டமைப்புகளை பயன்படுத்தி, அரசுகளை கைக்குள் வளைத்து போட்டுக்கொண்டு, தாமே இனிவருங்காலங்களில், உலகில் சமாதானத்தை ஏற்படுத்த போவதாக கூறிக்கொண்டு, தங்கள் செல்வாக்குகளினால் உலக அரச நிர்வாகங்களை, விலைக்கு வாங்கி, அவைகளை மக்கள் மையமாக அல்லாது, தனியார் வசமாக்கி, தனியார் நிறுவனங்களின் உதவியோடு, தாமே எங்கும் தலைமையை மாற்றும் அளவிற்கு, பலம் பெற்றதோடு மட்டும் அல்லாமல், தங்களுக்கே உரித்த பாணியில், தாமே முன்னின்று சகல மக்கள் போராட்டங்களையும் திசை மாற்றி வருகின்றன.

உலகெங்கும் உள்ள அரசுகளில், அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளின் உதவிகளை பெற்று, உலகெங்கும் உள்ள வளங்களை சூறையாடுவதற்காக, முதலில் மக்களின் பெயரால், விடுதலை போராட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு, பின்னர் அவற்றை ஆயுதப்போராட்டமாக்கி, இருபக்கங்களிற்கும் ( அரசுகளிற்கும், அரசுகளிற்கு எதிராக விடுதலை கேட்டு போராடும் போராட்ட குழுக்களிற்கும் ), ஆயுதங்களை வழங்கி, நாடுகளை அழிப்பது மட்டும் அல்லாது, நாடுகளில் உள்ள வளங்களினை, எவருக்கும் தெரியாமல், அங்கிருக்கும் முதலாளித்துவ நிறுவனங்களின் துணைகொண்டு, அபகரிப்பதை நோக்காகக்கொண்டு, உலக நாடுகள் எங்கும் தன்னார்வ நிறுவனங்கள், ஆயுத வியாபாரிகளான,

News Corporation CEO Rupert Murdoch, listens to introductions during a forum on The Economics and Politics of Immigration in Boston at which Murdoch and New York Mayor Michael Bloomberg spoke, Tuesday, Aug. 14, 2012. (AP Photo/Josh Reynolds)

ரூபர்ட் மேடொர்ச் ( Rupert Murdoch ) ( இவர் லொக்ஹீட் மார்டீன் “Lockheed Martin” எனும் உலகின் மிகபெரிய ஆயுத நிறுவனத்தின் உரிமையாளராவார். அத்துடன் இவர் புளூம்பேர்க் எனும் தன்னார்வ நிதிக்கொடுப்பனவு நிறுவனத்தினை ஆரம்பித்து, அதன் துணைகொண்டு, சிரியா, லெபனான், யேமன் போன்ற பல நாடுகளில் யுத்தத்திற்கான சூழ்நிலைகளை ஒரு புறம் உருவாக்கிகொண்டு, மறுபுறம் அரசுகளிற்கும், புரட்சிப்படைகளிற்கும் ஆயுதங்களினை விற்று, தனக்கு சொந்தமான ஊடகங்களினை பயன்படுத்தி, மக்களிடம் இருந்து உண்மைகளை மறைத்து, மக்களை முட்டாள்களாக்கி. மக்களினை கொன்று குவித்து இலாபம் சம்பாதித்து வருகின்றார்.),

ஜே.பி மோர்கன் குடும்ப சாம்ராஜ்ஜியம் ( J.P Morgan ) ( இவர்கள் உலகெங்கும் உள்ள வளங்களை சுவீகரிக்கும் நிமித்தம், தன்னார்வ நிறுவனங்களை ஆரம்பித்தது மட்டும் அன்றி, தமது தேவைக்காக கப்பல்களை தயாரித்து, அதன் மூலம் சகல நாட்டு வளங்களையும் கொள்ளையடிப்பது மட்டும் அன்றி, தங்களே தமது வியாபாரங்களின் காப்பாளர்களாக இருப்பதன் மூலம், தமது வியாபார இலாப நட்டங்களை, போலி கணக்குகளை தயார் செய்து, அரசுகளை பாவித்து, மறைப்பதன் மூலம், தமக்கு தேவையானவற்றை சாதித்து கொள்கின்றனர். இவர்களின் கட்டுப்பாட்டுக்கு கீழேயே, உலகில் உள்ள சகல நிறுவனங்களினதும், பங்கு பரிவர்த்தனை மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பண மாற்று விகித அடிப்படையில் பங்கு விலை எண் சுட்டிகள் ஆகியன வெளியிடப்பட்டு வருகின்றன.),

லரி ஃபிங் குடும்ப சாம்ராஜ்ஜியம் ( Lary Fink ) ( ஆளும் ஐக்கிய அமெரிக்க அரசின் கொடுக்கல் வாங்கல் உட்பட, அனைத்து பண பரிமாற்றங்களையும், தமது நிறுவன கணக்குவிபரங்களுடன் கொண்டு, தவணை முறையில், ஆளும் மற்றும் எதிர்கட்சிகளுக்கு பணம் மற்றும் உதவிகள் அனைத்தையும் வழங்குவதன் ஊடாக, தமக்கு தேவையான அனைத்து காரியங்களையும் சாதித்துகொண்டு, தங்கள் நிறுவன பங்குபர்வர்த்தனைகளை, எவருக்கும் தெரியாது பேணுவதுடன், தாமே தமது வியாபார முகவர்களை உலகெங்கும் தெரிவு செய்து, அவர்கள் மூலம், தமது வியாபார கொடுக்கல் வாங்கல்களை, தங்கள் நிறுவனத்தினூடே நடத்துவதன் ஊடாக, தமது நிறுவனத்தின் கட்டுக்குள் நிதி கொடுப்பனவுகள் அனைத்தையும் வைத்திருப்பதன் ஊடாக, உலகின் மறைமுக கொடுப்பனவு நிறுவன சாம்ராஜ்ஜியத்தை அமைத்து, உலகில் உள்ள சகல வங்கிகளையும் தங்களின் கட்டுக்குள் ஆட்சியாளர்களின் உதவியுடன் கொண்டுவந்து, தமக்கு தேவையானவற்றை சாதிப்பதுடன், தமது இச்சைக்கு ஏற்ப வங்கி கடன்களை நிறுவனங்களுக்கு வழங்குவது மட்டும் அன்றி தாமே கடன்களுக்கு உரிய வட்டி வீதங்களை நிர்ணயிப்பதுடன், தாமே தமக்கு தேவையான ஆட்களை பதவிக்கு கொண்டுவந்து அமர்த்துவதன் ஊடாக, தங்களுக்கு தேவையானவற்றை சாதித்து, தமது சாம்ராஜ்ஜிஜத்தை கட்டியமைத்து வருகின்றனர்.),

ரிச்சர்ட் ஆர்மிடேஜ்  ( Richard Armitage ) ( இவர் ரேதியோன் “Raytheon” எனும் மிகப்பெரிய ஆயுத‌ நிறுவனத்தின் உரிமையாளரும், போயிங் எனும் மிகப்பெரிய ஆயுத நிறுவனத்தில் பங்குகளை கொண்டவரும், எயர் பஸ் எனும் இன்னுமொரு மிகப்பெரிய‌ ஆயுத நிறுவனத்தில் பங்குகளை உடையவ‌ரும் ஆவார். இவர் பல நிறுவனங்களை ஆரம்பித்து வைத்து கொண்டு, அவற்றை மையமாக வைத்து, நாடுகளின் பொருளாதாரத்தினை வீழ்ச்சி பாதைக்கு இட்டு சென்று, அங்குள்ள அரசுகளை போர்க்குற்றம், ஊழல், வங்கிசரிவு, பண வீக்கம் உட்பட பல சதி வலைகளில் விழ வைப்ப‌தன் மூலம், தனது வியாபரங்களினை முன்னெடுத்துக்கொண்டு, தங்கள் அரசுகளின் ஊடாக, அமெரிக்காவில் இருந்துகொண்டு, தமக்கு தேவையான முன்னெடுப்புகளை, தன்னால் ஆரம்பிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனங்களான “பேர்கொஃப் பவுண்டேசன்” மற்றும் “கிரிஸிஸ் குறூப்” மற்றும் பல தனியார் நிறுவனங்களால் ஆரம்பிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் துணை கொண்டு முன்னெடுப்பதுடன், தமது பின்னணி பற்றிய விபரங்களை எவரும் அறியாது, மிகவும் நேர்த்தியான முறையில் தனது கொள்ளைகளை முன்னெடுத்துக்கொண்டு, மக்களினை ஏமாற்றிகொண்டு, தனது வியபாரங்களை, அரசுகளில் அங்கம் வகிக்கும் முக்கிய புள்ளிகளின் துணைகொண்டு முன்னெடுத்து, உலக நாடுகளெங்கும் உள்ள வளங்களினை சுவீகரித்துவருகின்றார். ),

புஸ் குடும்ப சாம்ராஜ்ஜியம் ( Bush Family Empire ) ( இவர்கள் குடும்பம், இற்றைக்கு இருநூறு ஆண்டுகள் முன் இருந்து, தமது பதவிகள் கொண்டு, சகல நாடுகளில் உள்ள வளங்கள் உள்ளிட்ட சகல இராணுவ படைகளையும் கைக்குள் இட்டுக்கொண்டு, தமது வியாபார சாம்ராஜ்ஜியத்தை கட்டியமைத்து, அதனூடு தங்களுக்கு தேவையான சகல தேவைகளையும் அடைவதோடு, தாங்கள் விரும்பும் ஆட்சிகளை உலகெங்கும் உள்ள நாடுகளில் ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் தாம் விரும்பியபடி புதிய புதிய‌ சட்டங்களை உருவாக்கி, உலகில் உள்ள விவசாயம் உட்பட சகலவற்றையும், தனியார்மயமாக்கி, இயந்திரமயமான உலகினை அமைத்து, மனித உழைப்பினை கேள்விக்கிடமாக்கி, இங்கிலாந்தினை மையமாக கொண்டியங்கும் ஊடக கட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் தத்தமது தொழில் நகரங்களை அமைத்து, தமக்கு தேவையான ஆட்சியாளர்களை பதவிக்கு கொண்டுவந்து, அவர்கள் துணை கொண்டு, தங்கள் சாம்ரஜ்ஜியத்தை மென்மேலும் பலம்வாய்ந்ததாக்கி, இன்று வரை உலகினை தம் கட்டுக்குள் வைத்திருந்து ஆட்சி புரிந்து வருகின்றனர். ),

ரொக்கஃபெல்லர் குடும்ப சாம்ராஜ்ஜியம் ( Rokefeller ) ( ஆயுத விற்பனை நிறுவனமான போயிங் நிறுவனத்தின் பங்குதாரரான இவர், பல வியாபார கூட்டமைப்புக்களை கட்டுக்குள் வைத்திருப்பதன் ஊடாக, விலைகளை தாமே நிர்ணயம் செய்வது மட்டும் அல்லாமல், தங்களுக்கு தேவையான ஆட்களை, பதவிக்கு கொண்டுவர தேவையான அழுத்தங்களை, அரசுகளின் மேல், தமது கைக்குள் இருந்து இயங்கும் வங்கிகளில் சரிவினை ஏற்படுத்துவதன் மூலம் பிரயோகிப்பது மட்டும் அல்லாமல், தாமே முன்னின்று தமக்கு தேவையான, சகல இராணுவ பொறிமுறைகளையும் வாங்கி, மற்றைய நாடுகளுக்கு வழங்குவதன் ஊடாக, இராணுவ தளபாடங்களை ஏற்றுமதி செய்வது மட்டும் அல்லாமல், இராணுவ உதவிகளை முன்னின்று வழங்குவதன் ஊடாக, மற்றைய நாடுகளில் உள்ள விடுதலை கோசங்களை இல்லாமல் ஒழிப்பதுடன், தங்களுக்கு தேவையான கைப்பொம்மை அரசுகளை உலகெங்கும் உருவாக்கி ஆண்டு வருகின்றர்.),

ஹென்றி கிஸ்ஸிங்கர்  ( Henry Kissnger ) ( இவரும் போயிங் எனும் மிகப்பெரிய ஆயுத நிறுவனத்தின் பங்குதாரியாவார்.),

கோச் பிரதர்ஸ் ( Koch Brothers ) ( இவரும் மிகப்பெரிய ஆயுத நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ஒரு பங்குதாரியாவார்.), போன்றோரால் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருவது மட்டும் அல்லாமல், அவர்களே முன்னின்று அவர்களுக்கு தேவையான சில நாடுகளில், பயங்கரவாதம் என்கிற போர்வைக்குள், விடுதலை போராட்டங்களை உள்ளடக்குவதன் ஊடாக, தங்கள் சுய விருப்பங்களை நிறைவேற்றிவருவது மட்டும் அல்லாமல், தங்களுக்கே உரித்தான பாணியில் யுத்த நிறுத்தங்களை தேவையான காலங்களில் உருவாக்குவதன் ஊடாக, தமது கொள்கைகளை நிறைவேற்ற, பல இனங்களின் விடுதலை போராட்டங்களை, தமது வியாபார யுக்திகளை பயன்படுத்தி, நசுக்கி, அழித்து, இலாபமடைந்து வருவது மட்டும் அல்லாமல், தங்கள் வியாபாரங்களை வியாபிப்பதற்காக, உள்ளூர் உற்பத்திகளை அழிக்கும் தந்திரோபாயங்களை பயன்படுத்தி, உள்ளூர் வியாபாரங்களை அழிப்பது மட்டும் அல்லாமல், தங்கள் சுய தேவைக்காக, இலாபங்களுடன் இயங்கும் உப அரச நிறுவனங்களை, தமது அழுத்தங்களை பிரயோகிப்பதன் ஊடாக மூடவைப்பது மட்டும் அன்றி, தமது வியபார உற்பத்தி பொருட்களை, விளம்பர உத்திகளை பயன்படுத்தி விநியோகம் செய்வது மட்டும் அல்லாமல், அவற்றால் மக்களுக்கு ஏற்படும் தீங்குகளை மறைக்க, தாம் ஆர‌ம்பித்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், தம்மால் ஆரம்பிக்கப்பட்ட ஊடகங்களையும், தம் கட்டுக்குள் இருக்கும் ஊடகங்களையும், பயன்படுத்துவது மட்டும் அல்லாமல், தாமே தங்கள் இச்சைக்கு அரசுகளை உலகெங்கும் அமைத்து, மக்களை அடக்கி ஆண்டு வருகின்றனர்.

உலக நாடுகள் எங்கும், பயங்கரவாதத்தின் மீதான யுத்தம் என்கிற போர்வைக்குள், சகல மக்கள் போராட்டங்களும் உள்ளடக்கப்பட்டு, தங்கள் இச்சைக்கு ஏற்ப, போராட்டங்கள் அழிக்கப்பட்டு வருகின்றமை, உலகில் உள்ள மக்கள் யாவரும் அறிய வேண்டிய உண்மையாகும். உலக‌ நாடெங்கும் இயங்கும் ஊடகங்களில் அனேகமானவை, வியாபார நிறுவனங்களால் நடாத்தப்பட்டு வருகின்றமை மக்களிடம் சென்றடைய வேண்டிய பல உண்மைகளை சென்றடையாமல் தடுக்க ஏதுவாக அமைகின்றது. இங்கிலாந்து அரச குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட்டது என்று ஊடகங்களில் குறிப்பிடப்படுகின்றபோதும், பல நாடுகளில், பல்தேசிய நிறுவனங்களின் அதிகாரங்கள் பெருக, ஊடகங்களின் அதிகாரமே துணையாக இருப்பது மட்டும் அல்லாமல், இங்கிலாந்து அரச குடும்பம் ஆயுத வியாபாரிகளுடனும், பெரு வியாபாரிகளுடனும், தொடர்புகளை பேணி வருவது மட்டும் அல்லாமல், இங்கிலாந்து அரச குடும்பத்தின் கட்டுக்குள் இன்னமும் உலகம் இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

அரச பயங்கரவாதம் உலகெங்கும் தலை விரித்து ஆடுகின்றபோதும், அதனை மக்கள் உணராது இருக்க, பல் தேசிய நிறுவனங்களின் துணையோடு, உலகெங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, மக்களிடம் இருந்து உண்மைகள் மறைக்கப்படும் விதத்தில், அறிக்கைகள் தயார் செய்யப்படுவதன் மூலம், அவை தடுத்து நிறுத்தப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றிற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்யும் பங்களிப்பும் அளப்பரியது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் கட்டுக்குள், சில தன்னார்வம் மிக்க, துடிப்புள்ள இளையவர்களை உள்வாங்குவதன் ஊடாக, தாங்கள் நினைக்கும் காரியங்களை இலகுவில் நிறைவேற்ற கூடியதாக இருப்பது மட்டும் அன்றி, தாங்களே மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணரும் பிரதிநிதிகளாக தம்மை அடையாளப்படுத்துவதன் ஊடாக, உண்மை நிலவரங்களை மற்றும், பிரச்சனையின் மைய கருக்களை, மக்கள் இலகுவில் தேடி அறிய முடியாமல் இருக்கும் வகையிலும், தங்களே தமது கணக்கு விடயங்களை பரிசீலிப்பதன் ஊடாக, அதிலும் முறைகேடுகளை செய்வது மட்டும் அன்றி, தாங்கள் தமது சுய வியாபார நோக்கங்களையும் தங்கள் மேலதிகாரிகள் துணை கொண்டு நிறைவேற்றுவதுடன், நாடுகளில் உள்ள வளங்கள் அனைத்தையும் தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து, அதன் மூலம் மக்கள், தாம், அடையவேண்டிய அபிவிருத்திகளை, அடையாது தடுப்பது மட்டும் அன்றி, தாங்களே அரசுகளை கொண்டு நடத்தும் அளவிற்கு, செல்வாக்கு செலுத்ததொடங்கியுள்ளது மட்டும் அன்றி, அவற்றின் கைகளை பலப்படுத்த, பல நாடுகளில், அவற்றிற்கு சாதகமான அரச அமைப்புக்களை ஆரம்பித்தது மட்டும் அன்றி, அவற்றின் மூலம், தாமே தமக்கு தேவையான மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும் உருவாக்கி, அவற்றின் மூலம், தாமே அரசுகளை கொண்டு நடத்தும் அளவிற்கு தரமுயர்ந்ததுடன், இனிவரும் காலங்களில், தாங்களே மக்களின் பாதுகாவலர்களாக தங்களை அடையாளப்படுத்திகொண்டு, எதிர்வரும் காலங்களில் உலகின் சமாதானத்திற்காக தாங்கள் உழைக்கபோவதாக, காரணங்களை கூறி, செயற்படுவதற்கான அங்கீகாரங்களினை, தமக்கு நிதி வழங்கும் முதலாளிகளின் ஊடாக பெற்று, தாங்களே தம்மை நிர்வகித்துகொண்டு, மக்களை பற்றியோ அல்லது மக்கள் போராட்டங்களை பற்றியோ, எவ்வித அக்கறையும் கொள்ளாது, தாம் அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களையும் நிர்வகிக்கும் தகுதியுள்ளவர்கள் என்கிற மாய தோற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக, தம்மை அங்கீகரிக்கும் சமூக கட்டமைப்பை ஏற்படுத்தி, இலாபம் அடைந்து வருவது மட்டும் அல்லாமல், இயற்கை அழிவிற்கு காரணமான நிறுவனங்களை, மக்களிடம் இருந்து, தமது போலி அறிக்கைகள் மூலமும், தம்மாலான கொள்கைகளை, அரசுகளின் பின்னணியில் இருந்து அமுல்படுத்துவத‌ன் மூலமும், கொள்கைகளை பரப்புவதன் மூலமும், காப்பாற்றுவது மட்டும் அல்லாமல், தாங்களே இயற்கை அழிவிற்கு காரணமானவற்றை கண்டறிந்து, அதனை சீர் செய்வதாக கூறிக்கொண்டு, அவற்றை காக்கும் அரணாக தொழிற்படுவது மட்டும் அன்றி, தங்களுக்கு தேவையான நிதிகளை பெற்று, அவற்றை இயற்கை சீரழிவுக்கு எதிராக பயன்படுத்தாமல், தங்கள் சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துவது மட்டும் அல்லாமல், தாங்களே, தங்கள் நிறுவனங்களை நடத்தும் இவர்களை பற்றிய உண்மையை மக்கள் புரிந்துகொண்டு, தங்கள் பிரச்சனைகளிற்காகவும், சூழல் மாசடைதலுக்கு எதிராகவும், தாங்களே மக்கள் பங்குகொண்டு, உண்மைகளை வெளிப்படுத்தும், சமூக கட்டமைப்புக்களை அமைப்பது மட்டும் அன்றி, அவற்றைக்கொண்டு, தாம் எதிர்கொள்ளும், சமூக, அரசியல் மற்றும், கலாச்சார சீரழிவுகளையும், சூழலில் இவ்வமைப்புக்கள் ஏற்படுத்தும் அழிவுகளையும், எதிர்கொண்டு சீரமைக்க முன்வரவேண்டும். இதன்போது ஏற்படும், பொருள் மற்றும் அறிவியல் செலவீனங்களை, சமூகத்தில் இருக்கும் அன்பர்களே, தமாக முன்னின்று ஏற்றலே, இம்மிருகங்கள் போன்ற நிறுவனங்களிடம் இருந்து, மக்களையும், சூழலையும் காப்பதற்கு உதவும். இவற்றை எவ்வளவு முறையாகவும், இலகுவாகவும் செய்கின்றோமோ, அவ்வளவுத்துக்கு, நாம் எம்மை காப்பது மட்டும் அல்லாமல், நாம் எமது சந்ததியினர்கள், உலகில் இருக்கும் வளங்களை அனுபவிக்கும் வகையிலும், அவர்களே தங்களை தாங்கள் ஆளும் வகையிலும் இருக்கக்கூடிய, மக்கள் ஆட்சியை, மற்றைய இன மக்களுடன் ஒற்றுமையாக அமைத்து, உலகினை உண்மையான‌ முன்னேற்ற வழிக்கு இட்டு செல்ல முடியும். இன்றைய தேவை இதுவேயாகும். உலகில் உள்ள சகல இன மக்களும், இன, மத, மொழி, சாதி,ஏற்ற, தாழ்வு பாகுபாடின்றி, இதற்காக முன்னின்று உழைப்பதற்கு, முன்வரவேண்டும் என்பதுடன், முதலாளித்துவத்தை வேருடன் சாய்த்து, முதலாளித்துவத்தால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளில் இருந்து, உலகினை காக்கவும் முன்வரவேண்டும்.

தென்னீசன்

Exit mobile version