Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கனடா தமிழ் காங்கிரசின் பொங்கல் நிகழ்வில் ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் சிறிலங்கா தூதருக்கு அழைப்பு!

கனடாவில் தமிழ் காங்கிரசினால் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வரும் தமிழ் மக்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் நிகழ்வுக்கு ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் கனடாவுக்கான சிறிலங்கா தூதுவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

யுத்த காலத்தில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களிடையே பல்வேறு அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு, பல அமைப்புக்கள் தாயக மக்களுக்கு உதவி செய்ததுடன், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு எதிராக ஒன்றிணைந்து போரடினர்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தபின்னர், இவ்வாறான அமைப்புக்களின் செயற்பாடுகள் அனைத்தும் தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளன. சிறிலங்கா அரசாங்கம் தனது தந்திரோபாயத்தின்மூலம் இவ்வமைப்புக்களை வளைத்துப்போட்டு வருகின்றது.

இவ்வாறு சிறிலங்கா அரசாங்கத்தின் தந்திரோபாயத் திட்டத்திற்கு கனடாவின் தமிழ் காங்கிரசும் பலியாகியுள்ளது.

இச்செய்தியினை தமிழ் காங்கிரஸ் நிராகரித்ததுடன், தமிழ் காங்கிரசினால்  கொண்டாடப்படும் நிகழ்வை ஆவணமாக்குவதற்கு ரூபவாகினி கூட்டுத்தாபனம் தம்மிடம் அனுமதி கோரியதாகவும் தாம் அதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் தமிழ் காங்கிரஸ் அமைப்பு கூறிவருகின்றது.

ரூபவாகினி கூட்டுத் தாபனமானது சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம். இதில் பணியாற்றுபவர்களும் சிறிலங்கா அரசாங்கத்தின் கைக்கூலிகள்.

இவ்வாறிருக்கும் நிலையில், யுத்த காலப்பகுதியில் ரூபவாகினி உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு, மக்களை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.

இவ்வாறான ஒரு நிறுவனமே, ஒருபுறம் மக்களுக்காக உதவுவதாகக் கூறிக்கொண்டு, மறுபுறத்தில் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெறுவதுடன், அரசாங்கத்தின் சூழ்ச்சிக்கும் விலைபோய் வருகின்றது.

Exit mobile version