Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்

சிங்கள மக்களுக்கு நாட்டின் பாதுகாலவனாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் பாசிட் ராஜபக்ச தமிழ் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மில்லியன்களைக் கொள்ளையடித்தார். இங்கே தான் சாதாரணமானவனின் கலர்க் கனவுகளில் வந்துபோகும் காட்சிகள் இடம்பெற்றன.

கங்லே, முரளிதரன், சுபாஸ், சிவசாமி

தன்னைத் தூக்கில் போடப்போகிறார்கள் என சோக கீதம் இசைக்கும் நமது இனக்கொலைக் கலாநிதி மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தின் சகோதரர்களை மட்டும் அதிகாரத்தில் வைத்திருக்கவில்லை. ஒன்றுவிட்ட சகோதரர், இராண்டாம் மச்சான், மூன்றாம் மருமகன் என்று ஒரு பட்டாளமே இணைந்து இலங்கைத் தீவைக் கொள்ளையடிக்கிறது. அண்மையில் ஒரு நிகழ்வில் சமூகச் செயற்பாடாளர் சுகி என்ற தமிழ்ப் பெண் சிங்களப் பெண் ஒருவருடன் பேசும் காணொளியில் இலங்கை என்ற அழகான தீவில் ஏன் இவ்வளவு குத்துவெட்டுக்கள் என துயர்படிருந்தார்.

அந்தத் துயரத்தின் உச்சம் ராஜபக்ச என்றால், அதன் பங்குதாரர்கள் லைக்கா போன்ற பல தமிழ் நிறுவனங்களும் தேசியத் தமிழர்களும் கூடத்தான்.

லைக்கா திரைப்படத்திற்கு நமது இளைய தளபதி விஜய் கதாநாயகன் போல மகிந்த ராஜபக்சவின் மைத்துனர்களில் ஒருவரான லலிந்ரா ஹெட்டியாராய்ச்சி என்பவர் தான் லைக்கா ‘கதையாடல்களின்’ தளபதி.

WiMax (Worldwide Interoperability for Microwave Access) என்பது கைத் தொலைபேசியிலிருந்து இன்டர்னெட் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான தொழில் நுட்பம்.

இத்தொழில் நுட்பம் வெளியான போது உலகின் பல நாடுகளின் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மில்லியன்கள் செலவழித்து தொலைபேசி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைப் பெற்றுகொண்டன.

அவ்வாறு ஒப்பந்ததைப் பெற்றுக்கொள்வதற்கு நாடுகளின் தொலைபேசி ஒழுங்கமைப்பு நிறுவனம் (regulatory authority) அனுமதி வழங்க்க வேண்டும். இந்த அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவில் பில்லியன் பெறுமதியான ஊழல் நடைபெற்றது தெரிந்ததே.

இதே ஊழல் இலங்கையில் லைக்காவும் இலங்கை அரச பாசிஸ்டுக்களும் கூட்டிணைந்து காதும் காதும் வைத்தமாதிரி நடத்தப்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் ஏகதிபத்திய சார்பு அரசாங்கம் 150 வருட வரலாறுகொண்ட அரச நிறுவனமான சிறீ லங்கா ரெலிகொம் இன் பங்குகளை வெளி நாட்டுப் பல்தேசிய நிறுவனத்திற்கு விற்றது. வாங்கியவரோ ராஜபக்சவின் பரம எதிரி  இனமான தமிழ் இனத்தைச் சேர்ந்த மலேசியர்.  அவரது நிறுவனம் 55 வீதமான பங்குகளை வாங்கிக்கொள்ள மிகுதி 45 வீதம் சிறீ லங்கா ரெலிகொம்மிடம் இருந்தது. அதில் 50 வீதம் அரசிற்குச் சொந்தமானது.

தமிழன் என்றால் தனியான ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் என்ற அடிப்படையில் அணுகும் தமிழ் உணர்வாளர்களும் இனவாதிகளும் இவர்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..

எது எவ்வாறாயினும் ராஜபக்ச குடும்பத்தின் பொன்முட்டை போடும் வாத்துக்களில் சிறீ லங்கா ரெலிக்கொம் உம் ஒன்று. இலங்கையில் ரெலிக்கொம் ஒழுங்குபடுத்தும் சேவை (Telecommunications Regulatory Commission (TRC))ராஜபக்சவின் கண்காணிப்பிலேயே இன்றும் உள்ளது. ஆக அனுமதிப் பத்திரங்களைப் வழங்குவதும் பறிப்பதும் ராஜபக்ச மட்டுமே.

இந்த வேளையில் வாய்மக்ஸ் சேவையை நடத்த சிறீ லங்கா செலிகொம் ரெலிகொம் ஒழுங்கமைப்புச் சேவையிடம் அனுமதி கோரியது. ஏனைய தொலைபேசிச் சேவைகளான சண்ரெல் மற்று,ம் டயலோக் ஆகியவற்றிற்கு வழங்கப்பட சிறீ லங்கா ரெலிகொம் இற்கு நிராகரிக்கபட்டது.

இலங்கை அரசு ஒரு பகுதியைச் சொந்தமாக வைத்திருக்கும் சிறீ லங்கா ரெலிகொமின் கோரிக்கை பல தடவைகள் நிராகரிக்கப்பட்டமை பலருக்குப் புரியாத புதிரானது. தனது சொந்த நிறுவனத்திற்கே அனுமதி வாங்க அரசு ஆழமாகப் பரிசீலிக்கிறது என்று மகிந்தவின் மைந்தர்கள் பலர் புழகாங்கிதமடைந்தனர்.

இலங்கையின் ரியல் எஸ்டேட் முதலை கிருஷ்ணா செல்வநாதனுடன்(நடுவில்) ஹெட்டியாராய்ச்சி(வலது)

இந்த நிலையில் ஸ்கை நெட்வேர்க் என்ற 20 ரூபாய் கொம்பனிக்கு நிறுவனத்திற்கு வாய்மாக்ஸ் சேவையை வழங்க அனுமதி வழங்க்கப்பட்டது.

இலங்கையில் தொலைபேசி சேவையை நடத்தாத இந்த நிறுவனம் உருவான கதையே தனியானது. இது ராஜபக்ச வடை சுட்டு விற்ற கதை.

20 இலங்கை ரூபாய்கள் பங்கு போட்டு ஸ்கை நெட்வேர்க் என்ற நிறுவனம் நுகேகொட என்ற இடத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் நடத்துனராக அஜந்தா குணதாச என்பவர் பதிவு செய்யப்பட்டார். பின்னர் சரியாக ஒரு வருடம் வரை ஸ்கை நெட்வேர்க் எந்த நெட்வேர்க்கும் செய்யாமல் உறங்கிக்கொண்டிருந்தது.

மார்ச் மாதம் 15 ஆம் திகதி 2007 இல் அதாவது வன்னிப் படுகொலைகள் நடைபெறுவதற்கு சரியாக இரண்டு வருடங்களின் முன்பதாக லைக்கா நிறுவனம் ஸ்கை இன் உறக்கத்தைக் கலைக்கிறது. போத்துக்கல்லில் லைக்கா நிறுவனத்தின் கிளை நிறுவனமான Hastings Trading E Services (Portugal subsidiary of Lyca Group) ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலவழித்து ஸ்கை நெர்வேர்க்சின் 95 வீதமான பங்குகளை வாங்கிக்கொள்கிறது. இப்போது 20 ரூபா கம்பனி 950000 சக 20 ரூபா கம்பனியாகிவிட்டது.

(அட, போர் நடப்பதற்கு ஒரு வருடங்களின் முன்னரே லைக்கா இலங்கை அரசுடன் தொடர்பு வைத்திருந்தது என்றால், புலம்பெயர் நாடுகளிலிருந்து யார்யாரெல்லாம் என்ன தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற விபரங்கள் சுடச்சுட ராஜபக்ச அரசிற்குக் கிடைத்திருக்குமே! இதில் ஏன் சந்தேகம் கொள்ள வேண்டும்!!)

இது நடந்ததும்ஸ்கை நெட்வேர்க்கை ஆரம்பித்த  கருணதாச ஸ்கை இலிருந்து விலகிக் கொள்கிறார். அவர் விலகியதும் புதிய தலை ஒன்று ஸ்கை நெட்வேர்க்ஸின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. ஹிமால் ஹெட்டியாராச்சி என்ற இலங்கையின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான அவர் நமது இனக்கொலை வைத்தியக் கலாநிதி மகிந்த ராஜபக்சவின் மைத்துனர்.

லைக்கா தலைவர் சுபாஸ்கரனும் சிவசாமியும்

ஹெட்டியாராய்ச்சி ஸ்கையின் புதிய தலைவர் என்றாலும் அது ஆரம்பத்தில் பதிவுசெய்யப்பட்ட இடம் அவருக்கே சொந்தமானது. அதாவது 20 ரூபாய் கொம்பனியின் முகவரிக்கு உரியவர் ஹெட்டியாராச்சி!

ஹெட்டியாராச்சியுடன் இணைந்து லைக்காவின் சார்பாக அதன் பிரித்தானிய இயக்குனர்களில் ஒருவரான மிலின்ட் கங்லே ஸ்கையின் இயக்குனர்களில் ஒருவராக இணைந்துகொள்கிறார். ஜுன் மாதம் 1ம் திகதி 2007 ஆம் ஆண்டு இக் கைங்கரியங்கள் நடைபெறுகிறது. இதற்காக லைக்காவின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்குப் பயணம் செய்து சினமன் ஹொட்டேலில் களியாட்ட விருந்து ஒன்றை நடத்திற்று.

இலங்கையின்தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இதுவரை சிறீ லங்கா ரெலிகொம்மிற்குத் வழங்காது தடுத்துவந்த வாய்மக்ஸ் சேவைக்கான அனுமதிப் பத்திரத்தை இப்போது ஸ்கைனெட்வேர்க்கிற்கு வழங்குகிறது.

அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட ஸ்கைனெட்வேர்க் என்ற 20 ரூபா கொம்பனி இப்போது சிறீலங்கா ரெலிகொம்மை அணுகி தம்மிடம் வாய் மக்ஸ் லைசன்ஸ் இருப்பதாகத் தெரிவிக்கிறது. தமது தொலைபேசி இன்டர்னெட் வியாபாரத்தை ஆரம்பிக்க வேண்ண்டிய நிலையிலிருந்த சிறீ லங்கா ரெலிகொம் என்ற அரை அரச நிறுவனம் வேறு வழியின்றி ஸ்கைனெட்வேர்க்கிடம் உள்ளை அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்த முடிவு செய்கிறது.

2007 ஜூன் மாதம் 29ம் திகதி யிடப்பட்ட குறிப்பேடு இலக்கம் Pள்C /T /65/2007 இன் அடிப்படையில் ஸ்கைனெட்வேர்க்கிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள முடிவுக்கு வருகிறது. 100 மில்லியன் அமெரிக்க டோலர்களை கொடுத்து லைக்காவின் 40 வீதப் பங்குகளை வாங்க்கிகொள்கிறது 20 ரூபாய் நிறுவனம் இப்போது மில்லியன்கள் புரளும் பல்தேசிய நிறுவனமாய் மிளிர்கிறது.

இதன் பின்னர் ஸ்கைனெற்வேர்கின் இயக்குனர் சபையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அந்த நிறுவனத்தின் 70 வீதப் முதலீட்டை சிறீலங்கா ரெலிகொம் மேற்கொள்ள அதன் வருமானத்தில் 60 வீதம் ஸ்கைனெட்வேர்க் இற்கே வழங்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்படுகிறது.

இது தான் 20 ரூபாய் நிறுவனம் இன்று மல்ரி மில்லியன் வருமானம் தரும் பல்தேசிய நிறுவனமாக மாறிய கதை. ராஜபக்ச மக்களின் தலையில் உளுந்தரைத்து லைக்காவுடன் சேர்ந்து வடைசுட்டு விற்ற கதை.

ஐயாத்துரை சிவசாமி

இதே காலப்பகுதியில், 16.03.2007 அன்று மிலின்ட் கங்லே ஸ்கை நெட்வேர்க்கின் இயக்குனர்களில் ஒருவராக இணைந்துகொள்ள சரியாக 3 மாதங்களின் முன்னர் சென்னையில் ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்படுகிறது. லைக்கா புரடக்ஷன் என்ற நிறுவனம் சென்னை அசோக் நகரில் கங்லே மற்றும் லைக்காவின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிவாசமி ஆகியோரை இயக்குனர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்படுகிறது. தமிழகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள தொப்புள் கொடி உறவின் கயிறுகளாக கங்லேயும் சிவசாமியும் திரைப்படம் தயாரிக்க இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆகின்றனர். 8 கோடி இந்திய ரூபாய்களை முதலீடு செய்வதாக இந்த நிறுவனம் பதிவு செய்யப்படுகின்றது. சிவசாமி பங்குதாரராக மற்றொரு நிறுவனமும் சென்னையில் பதிவு செய்யப்படுகிறது அதன் பெயர் ஞானம் பிலிம் பிரவேட் லிமிடட்.

இதே காலப்பகுதியில் சிவசாமி மற்றும் கங்லே ஆகியோரை இயக்குனர்களாகக் கொண்டு லைக்க லொஜிஸ்டிக், லைக்கா ஹொட்டேல்ஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் சென்னையில் ஆரம்பிக்கப்படுகின்றன.

சென்னையிலும் ஐயர்லாந்திலும் பிரித்தானியாவிலும் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான லைக்கா பிளையிலும் சிவசாமி இயக்குனர். லைக்கா பிளை இலங்கை அரச விமானச் சேவையான சிறீ லங்கன் ஏயர் லைன்சின் பிரித்தினியாவிற்கான பிரதிநிதிகள். பல்சோறும் கையுமாக சிறீ லங்கன் ஏயர் லைன்சில் பயணம் செய்யும் புலம் பெயர் தமிழர்கள் லைக்காவின் விளம்பரங்களை பயணத்தின் நடுவே விமானத்தின் தொலைக்காட்சியில் பார்த்து மகிழலாம்.

தமிழ் நாட்டில் உணர்வாளர் பட்டியலில் முதல் வரிசையிலிருக்கும் இயக்குனர் சேரன் நடித்த  சினிமாவான பிரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படம் ஞானம் பிலிம்ஸ் இன் தயாரிப்பே. இலங்கையில் ராஜபக்ச குடும்பத்துடன் டீலை முடித்த கையோடு தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்ற ‘பெருமையை’ இது பெற்றுக்கொள்கிறது. ‘ஞானம் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் அ.சுபாஸ்கரன் தயாரிக்க.. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கரு.பழனியப்பன்’ என்ற செய்திகளை தமிழ் நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.

இப்போது லைக்கா புரடக்ஷன் நிறுவனம் மற்றொரு புலம் பெயர் நிறுவனமான ஐங்கரன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் கத்தி. தலைப்பிலேயே இரத்தம் தெறிக்கும் வன்முறை கொண்ட இத்திரப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் என்ற பிரபல இயக்குனர் இயக்கிவருகிறார்.

நமது இளைய தளபதி விஜய் உடன் ராஜபக்ச குடும்ப நண்பர்களான லைக்கா குழுமமும் இணைந்து வன்முறைக் கலாச்சாரத்தை விற்பனை செய்யும் திரைப்படம் கத்தி! கத்திக் கத்தியே தொண்டை வரண்டு போன தமிழக உணர்வாளர்கள் தாக்குதல் பட்டியலில் கத்தி இணையுமா என்பது கேள்விக்குறி.

சேரன் இடம்தெரியாது மறைந்து விட்டார். விஜய் அவ்வப்போது அரசியல் முத்துக்க்ளை உதிக்கிறார். பாலியல் வக்கிரங்களையும், சமூக விரோத வன்முறைகளையும் இணைந்து சாம்பார் போட்டு விற்பனை செய்வதையே எதிர்காக தமிழ்க் கலாசாரக் காவலர்கள் ராஜபக்ச சுட்ட வடை தமிழ் நாட்டில் மூக்கைத் துளைக்கும் போது என்ன செய்யப்போகிறார்கள்?

http://www.skynetwork.lk/about.html

சேரன் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம்

பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்

இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு

வியாபாரி! : விஜி.

‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி

Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses

லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்

http://www.eelamdaily.com/news/11847/57/.aspx

http://www.huffingtonpost.co.uk/2013/11/18/sri-lanka-david-cameron_n_4296542.html
http://www.dailynews.lk/local/cameron-tories-funded-big-diaspora

 

Exit mobile version