Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவையின் மகன் வலிகாமம் பிரதேசத்தில் போட்டி!

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இவர் வலிகாமம் பிரதேசத்தில் போட்டியிடவுள்ளார். வலிகாமம் பிரதேசத்திலிருந்து வலிகாமப் பிரதேச தவிசாளர் சுகிர்தன், உபதவிசாளர் சஜீவன் மற்றும் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தற்போது வடக்கில் தமிழ் அரசியல் வாதிகள் தாம் பதவிகளை வகிக்கும்போதே தமது பிள்ளைகளையும் அரசியலில் களமிறக்கி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவில் கல்வி கற்றுவந்த மாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போது யாழிற்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், யாழின் வலிகாமப் பிரதேசத்தில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் அத்தொகுதியில் மாவை சேனாதிராஜாவின் மகனை போட்டியிடுவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவே களமிறக்கியுள்ளார்.

தேர்தலில் வெற்றிபெறுமிடத்து வலிகாமம் பிரதேசத்து உப தவிசாளராகப் பதவி வகிக்கும் சஜீவன் அப்பதவியிலிருந்து அகற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், அண்மையில் யாழிற்கு வருகை தந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் மாவை சேனாதிராஜா வெளிவிவகார அமைச்சில் வேலையொன்றை ஒழுங்குபடுத்தித் தருமாறு கோரியிருந்த நிலையில், அவருக்கு தான் வேலை பெற்றுத் தருவதாக மங்கள சமரவீர உறுதியளித்திருந்தார்.

இவ்வாறான அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றபின்னர் மக்களைப் பற்றிச்சிந்திப்பதேயில்லை. இவர்களை தொடர்ந்தும் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்வது மக்களின் சாபக்கேடன்றி வேறல்ல.

Exit mobile version