Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலம் பெயர் பிழைப்புவாதிகளின் பகல் கனவுகள் : விஜயகுமாரன்

daydreamஉலக வரலாறுகளில் ஆளும்வர்க்கங்கள், மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தன என்பதற்கு ஒரு சான்றைக் கூடகாட்டமுடியாது. போராட்டங்களை மக்களின் அரசியல், பொருளாதாரகோரிக்கைகளை வெண்றெடுக்கவைத்தன. அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டுமணி நேர வேலை, காலனித்துவத்திற்கு எதிரான தேசியவிடுதலைகள்,பொதுவுடமைக்கட்சிகளின் போராட்டங்கள் என்பவற்றை வரலாறு காட்டுகிறது.

புலிகளின் பின்னடைவிற்குப்பிற்கான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு புகலிடத்தில் உள்ள பல குழுக்கள் போட்டி போடுகின்ற்ன.ஆனால் தமிழ் மக்களின் பிணங்களை மிதித்துக்கொண்டு உயிர் பிழைத்த தமிழனை காட்டிக்கொடுக்கிறார்கள்.

புலிகளின் வலதுசாரி அரசியல்,ஜனநாயகமறுப்பு ஆயுதமோகம், மக்களின் பிரச்சனைகளை முன்வைக்காமல் தமது குழுநலன் சார்ந்து பிரச்சனைகளை அணுகியமைபோன்றவை, இன்றையபின்னடைவுகளிற்கான பிரதான காரணிகளாகும். எந்தவீழ்ச்சியில் இருந்து தமிழ் மக்களை மீட்கப்புறப்பட்டு இருக்கும், தம்மை தமிழ் ஜநாயகவாதிகள் என்று கூறிக்கொள்ளும் பிழைப்புவாதிகள், இலங்கையின் மிகப்பெரிய கொலைகாரன்,ஊழல்,குடும்ப அரசியல்,ஜனநாயமறுப்பு என்பவற்றின் மொத்தவியாபாரியான மகிந்தாவின் கால்களை கழுவுவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத்தருவார்களாம் என மற்றவர்களை நம்பச்சொல்கிறார்கள்.

வன்னி முகாம்களை பார்வையிடச்சென்ற இக்குழுக்களில் ஒன்றினது அறிக்கை, இலங்கைஅரசின் பச்சைப்பொய்களை விட பல மடங்கு பொய் பேசுகிறது. மரணித்த மக்கள், நோயாளிகள், வண்புணர்ச்சிக்கு உள்ளான பெண்கள்,போதிய உணவு , இருப்பிட சுகாதார வசதிகள் வழங்கப்படாமை போன்ற எதுவுமே இந்த மேட்டுக்குடி வாழ்வு வாழ நினைக்கும் கும்பலுக்குத் தெரியவில்லை.

தேசம் நெற் இணையத் தளத்தில் மகிந்தாவின் நாட்டிற்காக உயிரையே விடுவேன் என்ற புல்லரிக்க வைக்கும் வீர வசனங்களை -இவ்வசனங்களை தமிழ் நாட்டு முதிய வியாபாரி கருணாநிதி தான் எழுதிக் கொடுத்தாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்- வெளியிட்டு பாதம் பணிகின்றனர். தேசத்தில் வெளிவந்த கிலாரி கிளிங்டன் வன் புணர்ச்சியை இலங்கை ராணுவம் ஆயுதமாகப் பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டு குறித்த கட்டுரைக்குப் பின்னூட்டமிட்ட அனைவருமே இலங்கை அரசைக் காப்பாற்றவே முனைப்புக் காட்டினார்கள். ‘அமரிக்க ராணுவம் பாலியல் வன்முறைகளில் ஈடுபடவில்லையா’, ‘எந்த நாட்டு ராணுவம் செய்யவில்லை’ என்ற அடிப்படையிலேயே இவர்களின் வாதம் அமைந்திருந்தது.

இவர்களுக்கு எல்லாம் தமிழ்ப் பெண்களின் அழுகுரல்கள் கேட்பதில்லை. அவர்களுக்கு நிகழ்ந்த பயங்கரங்கள், அவர்களின் அவலக் குரல்கள், இலத்திரனியல் கொலைக்கு உட்படுத்தப்படுகிறது. பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகளிற்காக தேசத்தை ஏன் குற்றம் சாட்டவேண்டும் என யாராவது நினைத்தால், இலங்கை அரசையோ,மகிந்தாவையோ விமர்சித்து நேரத்திற்கு எழுதிப்பாருங்கள் தேசம் அதனைபிரசுரிக்காது. இது பலருடைய அனுபவம்.

தமிழருவிமணியனின் சந்திப்பு பற்றிய ஒரு கட்டுரையில் தேசம் ஆசிரியர் அக்கூட்டத்திற்கு வந்த புலி ஆதரவாளர்கள் இன்னமும் பகல் கனவில் மிதப்பதாகக் கவலை கொள்கிறார். பெரும்பாலன புலிஆதரவாளர்கள் அரசியல்ரீதியாக வளர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் தமிழ்தேசியம், இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பவற்றிற்காகவே புலிகளை ஆதரிக்கிரார்கள். ஆனால் இவர் போன்ற அரசியல் மேதைகள், நரபலி வேட்டையாடும் மகிந்தாவிற்கு ஊடாக தமிழ் ளிற்கு விடுதலை பெற்று தந்து விடப்போகிறார்களாம்.

நுண்ணரசியல், அடையாள அரசியல் போன்றவற்றின் முலம் தமிழ் மக்களின் போராட்டத்தை சிதைக்கபேரினவாதிகள் முயல்கிறாகள்.இதன் ஒரு வெளிப்பாடுதான் பின்நவீனத்துவவாதி சுகன்,இலங்கை தேசியகீதம் தமிழில் இருப்பதாக கூறிப் பாடிக்காட்டியது. சமயக் குப்பைகள், வணிக தமிழ் சினிமாப்படங்கள், தமிழககாங்கிரஸ்கோமாளிகளின் பேச்சுக்கள்,வணிகசஞ்சிகைகள் M.G. இன் அண்ணாயிசம் பற்றிய அரும் பெரும் விளக்கம் எல்லாம் தமிழில் தான் இருக்கிறது. பின்நவீனத்துவ வாதிகள் இவற்றை எல்லாம் அருத்த கூட்டங்களில் பாடிப்பயன்பெறலாம்.

மரம் சும்மா இருக்க நினைத்தாலும் காற்று அதை விடுவதில்லை என்ற மாவோவின் வரிகளிற்கு ஏற்ப பேரினவாதத்ற்கு எதிரான ஈழமக்களின் போராட்டம் மீண்டும்வீறுகொண்டு எழும் போது ஈழமண்ணில் இருந்தே அதன் தலைமைசக்திகளும் எழப் போகின்றன இப்புலம்பெயர் பிழைப்புவாதிகளின் தலைமைக்கனவுகள் ஒரு நாளும் பலிக்கப்போவதில்லை.

Exit mobile version