Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியாவில் பணக்காரர்களுக்கு மட்டுமே இனிமேல் உயர் கல்வி

பிரித்தானியாவில் பல்கலைக் கழகப் கற்கைக் கட்டணம் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டதால் பல்கலைக் கழக அனுமதிக்கு விண்ணப்பித்தவர்களின் தொகை 9 வீத்ததால் குறைந்துள்ளது. இலவசக் கல்வியாக இருந்த பல்கலைக் கழகக் கல்விக் கட்டணத்தை சிறிதுசிறிதாக அதிகரித்த பிரித்தானிய அதிகாரம் மக்கள் அறியாமலேயே கல்வி மேல்தட்டுவர்க்கத்திற்கான ஒன்றாக மாற்றியமைத்துள்ளது. பொருளாதர நெருக்கடியைக் காரணமாக முன்வைத்து கற்கைக் கட்டணம் மேலும் அதிகரிக்கபடும் என எதிர்வு கூறப்படுகின்றது. கல்வி என்பது அனைவருக்குமான ஒன்று என்ற நிலை இப்போது இல்லை என பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தெரிவித்தார்.

Exit mobile version