Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தலில் மதவாதத்தைக் கிளப்பிவிடும் சிவசேனா மற்றும் இந்துசமயப் பேரவை!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநகரசபைத் தேர்தலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மாநகர முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவதற்கென பல கட்சிகள் தமது கட்சிகளிலிருந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்து அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டிருந்தது.

இதில், தமிழரசுக் கட்சி சார்பாக இம்மானுவேல் ஆர்னோல்ட் மாநகர முதல்வர் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தவர்களைப் பயமுறுத்தும் வகையில் சிவசேனை மற்றும் இந்து சயம அமைப்புக்கள்  அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

அவ்வறிக்கையில், மாநகர சபைக்கான முதன்மை வேட்பாளர் தெரிவின்போது இந்துக்களின் மனம் கோணாதபடி நடந்துகொள்ள வேண்டும் என இந்து சமயப் பேரவை அறிக்கை வெளியிட்டிருந்தது.

சிவசேனை அமைப்பு சைவத்தையும், தமிழையும் காக்கும் வேட்பாளர்களுக்கு சைவ வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று துண்டறிக்கை ஒட்டியிட்டிருந்தது.

இந்தச் சிவசேனை அமைப்பானது, மும்பையிலிருந்து தமிழர்களை தமிழ்நாட்டுக்கு விரட்டியடித்ததுடன், தமிழர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கக்கூடாது எனவும், தமிர்களின் கடைகளை அடித்துடைத்து பல அட்டூழியங்களைச் செய்திருந்ததை யாரும் எளிதில் மறக்கமுடியாது.

இந்நிலையில், இந்த அமைப்பானது 2016ஆம் ஆண்டளவில் தமிழ் மக்களிடையே மத உணர்வுகளைத் தூண்டி அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கையில் இந்தியாவின் றோ அமைப்பால் உருவாக்கப்பட்டது.

இதற்காக தமிழ் அரசியல்வாதிகளான மறவன்புலவு சச்சிதானந்தம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரைக் களமிறக்கியுள்ளது.

இவர்களால் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அடிக்கடி மதவெறியைத் தூண்டும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

Exit mobile version