Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோபட் கான்டேயை விடுதலை செய்! : டி.அருள் எழிலன்

gandyவடகிழக்கில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தனது போரைoperation of green hunt என்னும் பெயரில் தீவீரப்படுத்தியிருக்கிறது இந்திய அரசு. வடகிழக்கின் பெரும்பலான ஆதிவாசிப் பழங்குடி மக்கள் இந்தியாவின் இராணுவ நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நேரடியான இராணுவ நடவடிக்கை, என்கவுண்டர்கள், சட்டவிரோதக் காவல், பொருளாதாரத் தடை என்று வழமையாக இராணுவம், மக்களுக்கு எதிராக எதை எல்லாம் ஒரு கருவியாக பயன்படுத்துமோ அதை எல்லாம் வடகிழக்கு மாநிலங்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. மேற்குவங்கம் லால்கரின் தொடங்கிய இராணுவ கூட்டு நடவடிக்கை, சட்டீஸ்கர், நாகாலாந்து, மணிப்பூர், ஜார்கண்ட், பீகார், ஒரிஸ்ஸா போன்ற மாவோயிஸ்டுகள் செல்வாக்கு மிகுந்த மாநிலங்களுக்கும் பரவியிருக்கிறது.

ஆனால் இந்தியாவின் இந்நடவடிக்கை ரகசிய நடவடிக்கை. பல நேரங்களில் ஊடகங்கள் இதை ஊதிப் பெரிதாக்கு விட்டுவதால் மாவோயிஸ்டுகளை நினைத்த மாதிரி இராணுவத்தால் கையாள முடியாத நிலையில் கடுமையான ஊடகத் தணிக்கையை உள்துறை அமைச்சகம் மிரட்டல் தொனியில் மேற்கொண்டிருக்கிறது. பல எழுத்தாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் ஆதரவு ஊடகங்கள் முடக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்தான் மாவோயிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும், மிக முக்கியமான தலை சிறந்த இடது சாரி சிந்தனையாளருமான கோபட் கான்டேயை தெற்கு டில்லியில் வைத்து வைத்து கடந்த செப்டம்பர் 22 -ஆம் தியதி கைது செய்தது டில்லி போலீஸ். வழக்கம் போல் ஒரு தீவிரவாத எழுத்தாளரைக் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

இந்திய மாவோயிஸ்டுகள் முன்னெப்போதையும் இல்லாத அளவுக்கு அரசின் நேரடி யுத்தத்திற்கு இப்போது முகம் கொடுக்கிற நிலையில் கான்டே யின் கைது மாவோயிஸ்டுகளுக்கு பெரும் இழப்புதான். 13 பேரைக் கொண்ட பொலிட்பியூரோவில் ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், ( இதில் ஒருவரை ஜார்கண்ட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போது மாவோயிஸ்டுகள் அவரை மீட்டுச் சென்றார்களாம்) கான்டேயும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் ஜார்கண்ட் மாநில புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் இந்துவாரைக் கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள். சிறையிலுள்ள தங்களின் சகாக்களான சத்ர தர்ம கோட்டே, பூஷன் யாதவ், கோபட் கான்டே , ஆகியோரை விடுவிக்கச் சொல்லி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை ஒன்றை வைத்தனர். இப்படி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார் என்றோ, இப்படியான கோரிக்கையை மாவோயிஸ்டுகள் வைத்திருக்கிறார்கள் என்றோ மத்திய உள்துறை அமைச்சகம் வெளிக்காட்டிக் கொள்ளாத நிலையில், அக்டோபர் எட்டாம் தியதி இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் இந்துவாரின் தலையை அறுத்து நெடுஞ்சாலை ஓரமாக வீசி விட்டுச் சென்று விட்டனர்.

மிக எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் இந்துவாரின் மனைவ்யும் பிள்ளைகளும் கதறியழுத போது, மாவோயிஸ்டுகள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்ற எரிச்சலே நம்மிடம் தோன்றுகிறது. ஒரு இன்ஸ்பெக்டரை கடத்திச் சென்று கழுத்தை அறுப்பதினால் இப்பிராந்தியத்தின் வலிமையான இரக்கமில்லாத ஒரு இராணுவத்திடம் எதைக் கோரிப் பெற்று விட முடியும் என நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

 மூன்று தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகளை வைத்த கோரிக்கையை தந்திரமாக மறைக்கும் சிதம்பரம், இன்ஸ்பெக்டரின் உயிரை ஒரு பொருட்டாகவே நினைக்காத குரலும் இது இருக்கிறது.

பிரிட்டீஷ் ஆட்சிக்குப் பிறகு சுதந்திர இந்தியாவை உருவாக்கிய நேரு பல்வேறு ராஜ்ஜியங்களாக சிதறிக் கிடந்த பிரதேசங்களை ஒருங்கிணைத்து இந்தியாவை உருவாக்கினார். சிலருக்கு ஆசைகள் காட்டியும், போலி வாக்குறுதிகள் கொடுத்தும், பணியாத ராஜ்ஜியங்களுக்கு படைகளை அனுப்பியுமே இன்றைய இந்தியா உருவாக்கப்பட்டது. அந்த வகையில் காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்று வரை உதாசீனப்படுத்துகிறது என்பதோடு, காஷ்மீர் மக்கள் நிரந்தரமான இராணுவ முகாம்களுக்குளோளேயே வாழ வேண்டியதாயிற்று. வடகிழக்கு மக்கள் எப்போதும் தங்களை இந்தியர்களாக கருத்திக் கொண்டது இல்லை. காரணம் இந்தியா எப்போதும் தங்களின் செல்வந்த முதலாளிகளின் அந்தப்புரமாகவே வடகிழக்கை நடத்தி வந்தது. டாட்டா, பிர்லா, பாம்பே டையிங், அம்பானி என இந்திய தொழில் முதலாளிகளின் பண்ணை நிலங்களாக வடகிழக்கு மாற்றப்பட்டது. பழங்குடிகளின் நிலங்கள் அவர்களிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டு காப்பியும் தேயிலையும் பயிரிடப்பட்டன.

 இந்தியாவில் உலகமயம் அறிமுகமான நிலையில் நிலம் எந்த வடிவத்திலும் மக்களுக்கானது இல்லை என்பதை இந்தியா வடகிழ்ககில் இப்போது உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு மக்களின் தனி நாடு கோரிக்கை, டில்லியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரம் பலவீனமடைய வேண்டும் என்பதால் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்கிற மாவோயிஸ்டுகள். வடகிழக்கு மக்களின் வர்க்கப்புரட்சியை முன்னெடுத்துச் செல்லல், அவர்களின் நிலம், மொழி , பண்பாட்டுக் கோரிக்கைகளை ஆதரித்தல் என இன்று மாவோயிஸ்டுகள் வலுவான மக்கள் செல்வாக்குப் பெற்ற இடங்களாக வடகிழக்கு மாறியிருக்கிறது.

முன்னாட்களில் நக்சலைட்டுகள் என்றும் நகசல்பாரிகள் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஆயுதக் கிளர்ச்சியார்கள் தெலுங்கனாவிலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும், தமிழகத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். தென்னிந்தியாவில் மாவீயிஸ்டுகள் வலுவிழந்த நிலையில், வடகிழ்ககில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட் சதுர மைல் பரப்பில் ஒரு மினி சிவில் நிர்வாக அமைப்பையே மாவோயிஸ்டுகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசுக்கு எதிரான மாவோயிஸ்டுகளின் இன்றைய போராட்டம் என்பது அதன் உருமாற்றத்திற்கு வருவதற்கு முன்னால் பல்வேறு குழுக்கள் வடகிழக்கு மக்களின் பிரச்ச்னைகளுக்காக போராடினார்கள். மற்றபடி பிரச்சனை நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் அல்ல, அதிகாரத்தின் கரம் கொண்டு மக்களை நசுக்கும் இந்தியாவே பிரச்சனைக்கு காரணம். அதற்கு கோப்ட கான்டேதான் ஒரு உதாரணம். சரி யார் இந்த கோப்ட கான்டே……

தொடரும்..

Exit mobile version