Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒட்போர் சின்னத்தோடு, புலிககொடிகளோடு பாரதிராஜா அவமானப்படுத்திய மக்களின் போர்குணம்

otpor1‘புரட்சி வியாபார’ அமைப்பான ஒட்போர் இன் சின்னத்தோடு அழைப்பு விடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான புலிக்கொடிகளோடு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நேற்று -05.04.2012- லண்டனில் நடைபெற்றது. தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடாத்தக்கோரியும், 65 ஆண்டுகால இன அழிப்பிற்கு நீதி வழங்கும் வகையில் ஐ.நா. சர்வதேசசுயாதீன விசாரணையை நடாத்த வலியுறுத்தியும் இந்த்த்ச் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று பி.ப 2:30 மணிக்கு ரவல்கர் சதுக்கத்தில் இருந்து புறப்பட்டு பிரித்தானியப் பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக ஆர்ப்பாட்டத்தோடு பி.ப 4:00 மணிக்கு நிறைவடைந்தது. இப் பேரணியில் கலந்துகொண்ட்அ மக்கள் முன்னிலையில் தென்னிந்திய தமிழ் திரைப்பட இயக்குனரான பாரதிராஜா உரையாற்றினார்.

அறுபது வருடங்களுக்கும் மேலாக சூறையாடப்பட்டு இரத்தம் படிந்து உறைந்து கிடக்கும் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் வியாபாரிகளின் கரங்களில் விழுந்து சீரழிக்கப்பட்டுள்ளது.

துயரம்படிந்த தேசத்தின் ஒலியும் அழுகுரலும் அவர்களின் காதுகளுக்கு எட்டுவதில்லை. புலம் பெயர் நாடுகளில் தமது உடலை உருக்கி உழைப்பாக்கிய பணத்தின் கணிசமான பகுதியைப் போராட்டத்திற்கு வழங்கியவர்கள், போராடுவதற்காகவே வாழ்ந்தவர்கள், இன்றும் போர்க்குணத்தோடும் போராடும் உணர்வோடும் வாழ்கிறார்கள்.
நேற்றைய போராட்டத்தில் பங்காற்றியவர்களும் அவர்கள் தான்.

இவர்களின் உணர்வுகளை விற்பனை செய்து தமது அடையாளங்களையும் பாதுகாக்கும் தலைமைகள் ஒரு சந்ததியையே அழித்துக்கொண்டிருக்கும் கொலையாளிகள்.

ஈழத்தில் முப்பது வருடங்களின் தவறான போராட்ட வழிமுறைகளின் தவறுகளை விமர்சிப்பதையும் புதிய வழிமுறைகளைக் கண்டறிவதையும் கூட துரோகம் எனக் கூறும் இந்தக் கூட்டத்தின் ஒரே குறி தமது இருப்பு மட்டுமே.
மகிந்த ராஜபக்சவின் கிரிமினல் அரசு இனப்படுகொலையை வெற்றிகரமாக நடத்தியதும் இன்றும் இனச் சுத்திகரிப்பை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருப்பதற்கும் அவமானகரமான இந்த வியாபாரிகள் துணை போகிறார்கள். போர்க்குணம் மிக்க மக்கள் இவர்களின் கபட நாடகத்திற்குப் பலியாகிறார்கள்.

ஒட்போர் என்ற புரட்சி வியாபார அமைப்பு நேற்று நடைபெற்ற போராட்டத்தின் பின்புலத்தில் செயற்பட்டதா என்பது குறித்துத் தெளிவில்லை. ஆனால் ஒட்போரின் சின்னம் பயன்படுத்தப்பட்டிருப்பது சந்தேகத்திற்குரியது.

தாம் வாழ்ந்து உயர்ந்த ஈழ மண்ணில் மனித் விழுமியங்களை மக்களின் அவலங்களோடு இணைத்துக் கண்டுகொண்ட மக்கள் கூட்டம் போர்க்குணத்தோடு பங்குபற்றிய போராட்டம் ஒன்றில் இந்தியாவின் கடைந்தெடுத்த சினிமா வியாபாரி சேறடித்த நிகழ்வு அருவருப்பானது.

புலிகளின் எந்தத் தவறையும் நாம் விமர்சிக்கத் தயாரில்லை என்று கூறுவதற்காக புலிக் கொடிகளைப் பறக்கவிடுகின்றவர்கள் போர்க்குணம் மிக்க மக்கள் அல்ல. இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தாம் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுவதைத் தவிர வேறு தீர்வுகள் கிடையாது.

அந்தப் போராட்டத்தின் அழிவின் சாம்பல்களிலிருந்து கூடக் கற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு கூட்டம் போராட்டத்தின் தன்மையைத் திசைதிருப்பி அழிப்பதை எல்லாம் மக்கள் போராட்டம் என்று அழைப்பது மக்கள் போராட்டத்திற்கு அவமானமாகும்.

துனீசியாவில் ஆரம்பித்து எகிப்து ஈறாக இன்று சிரியா வரை தூண்டப்படும் எழுச்சிகளின் பின்புலத்தில் ஒட்போர் என்ற அமைப்பே செயற்பட்டிருக்கிறது. மில்லியன் கணக்கில் அமரிக்க உளவு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ளும் இந்த நிறுவனம் அமரிக்க அரசின் ஆணைப்படி எழுச்சிகளை ஆரம்பித்து அவற்றை அழித்துவிடுகின்றன.

இவற்றை எல்லாம் புரிந்துகொண்டும் இந்த நூற்றாண்டின் கோரமான மனித அழிவின் பின்பும் தமது சொந்த நலனுக்காக மக்களின் உணர்வுகளத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளும் வியாபாரிகளும் தமிழ்ப் பேசும் மக்களின் எதிரிகளே.

மேலும் படிக்கவேண்டிய பதிவுகள்:

‘புரட்சி’ வியாபாரம் – The revolution business
தமிழக மாணவர் போராட்டங்களின் வெற்றி, உலகத்திற்கு முன்னுதாரணம் 
NGO களால் கடத்தப்பட்ட வால் ஸ்டிரீட் போராட்டம் – ஓராண்டு நிறைவு-கற்றுக்கொள்ளல் 
The Drawback Of Nepal’s Revolution : The NGO’s Harvest
ஒட்போர் (OTPOR) புரட்சி வியாபார அமைப்பில் தமிழகப் பேராசிரியர்

 

Exit mobile version