Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“உயிர் வாழும் பிரபாகரன்” : S.G.ராகவன் (கனடா)

prabhakaranபிரபாகரன் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற விட்டுக்கொடுப்பற்ற தற்கொடையாளன். நீதியும் தேவையும் கருதிய இனவிடுதலைப் போராட்டம் ஒன்றை நடத்திய விடுதலை அமைப்பொன்றின் வெல்லப்பட முடியாத தலைவன். அவன் இப்போராட்டத்தில் கைக் கொண்ட வழிமுறைகள் சரியானதுக்காக பிழையானதாக இருந்ததாக கவலைப்படுதல் எம்மில் பலரிடம் இருந்தது. இவனின் போரியல் உத்தி இவனின் ராணுவக் கட்டமைப்பு வளர்ச்சி என்பன ஆரிய மேலாதிக்க சிந்தனா வாதிகளுக்கு கிலேசத்தை உண்டாக்கின.

விடுதலைப் புலிகளை போரில் வெல்ல முடியவில்லை என்றபோது இந்திய இலங்கை புலனாய்வு மையமும் கொள்கைவகுப்பு பிரிவும் நேர்கோட்டில் சிந்தித்தன. அவர்களின் அல்லக்கைகளும் அந்த நேர்கோட்டில் எலும்புத் துண்டுகளுக்காக நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு திரிந்தன. அந்த அல்லக்கைகளும், கும்பலில் கோவிந்தாவாக இந்திய இலக்கை பணத்துக்காக குடுத்த காசுக்கும் கூடுதலாக நல்லா கூவின. We want tamil eelam, Our leader piraapakaran, எங்கள் தலைவன் சூரிய தேவன் எனக் கூவியபோது, விடுதலை புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் இவங்களின் குள்ளநரி கூவலினை பிரித்தறியமுடியவில்லை அல்லது பிரித்து அறிய முதல் அனைத்தும் முடிந்து விட்டது அல்லது வஞ்சக புகழ்ச்சி செய்யும் சூழ்ச்சியாளர்கள் யாரென இனங்காண முடியவில்லை அல்லது புலிகளின் தலைமை வஞ்சகரின் வஞ்சக புகழ்ச்சியில் வீழ்ந்து கிடந்தது..

அதற்கிடையில் இந்திய இலங்கை புலனாய்வு மையங்கள் புலிகளின் பல்வேறு துறைகளுக்குள்ளும் ஊடுருவிவிட்டன. இதுவே பின்னாளில் புலிகளுக்குள் பல் வேறு மட்டங்களிலும் பல்வேறு துறைகளில் நிகழ்ந்த குழப்பங்களுக்கும் காரணமாகும்.

தமிழ்ச்செல்வன்

ஒரு சிறிய உதாரணம் புலிகளின் வாகனப் பொறுப்பாளர் குட்டி , அரசியல் பொறுப்பாளர் தமிழ் செல்வன் ,மற்றும் பாப்பா போன்றவர்களின் உறவினர்கள் பலர் EPDP அமைப்பில் இயங்கிக் கொண்டிருந்தனர், இந்த உறவினர்கள் மூலமாக இலங்கை இந்திய புலனாய்வு மையங்கள் EPDP இன் துணையுடன் ஊடுருவ முயன்றன, இம்முயற்சி 1995 களில் சுவிஸ் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்த மேற்ச் சொன்ன புலிகளின் தலைவர்களின் உறவினர்கள் மூலமாக ஆரம்பிக்கப்பட்டது. இச்சம்பவம் பின்னாளில் தினமுரசு பத்திரிகையில் (1995ல்) அற்புதனால் சூட்சுமமாக சொல்லப் பட்டது.

குட்டி என்ற புலிகளின் வாகனப் பொறுப்பாளர் பற்றிப் பார்ப்போம். கிழக்கு போராளிகள் மனமுறிவுக்கும் பிரதேசவாதம் அதன் மூலம் தலை தூக்கவும் குட்டியின் நடவடிக்கைகள் பெருமளவில் உதவின. வன்னி முறியடிப்புச் சமர் மற்றும் ஓயாத அலைகள் ஜெயந்தன் படையணி உட்பட்ட கிழக்கு படையணிகள் குட்டியிடம் இருந்து ஒழுங்கான வழங்கல்களை பெறவில்லை (உணவு போன்ற பொருட்கள்) மற்றும் போராளிகள் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றும் பொருட்களை சேகரிக்கும் பணி வாகனத்துறையிடம் கொடுக்கப் பட்டபோது போராளிகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கூட போராளிகளின் எதிர்ப்பை மீறியும் வலோத் காரமாக பறித்துச் செல்லப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற ஜெயந்தன் படையணி குட்டியின் வாகன அணியை பின் தொடர்ந்து புதுக் குடியிருப்பில் வைத்து துப்பாக்கி பிரயோகம் செய்ததது.

போலி தலைமைத்துவ விசுவாசம் மூலமாக தம்மை இயக்கத்துக்குள் தகவமைத்துக் கொண்ட குட்டி போன்ற இவர்களால் இயக்கம் பலத்த பாதிப்புகளை சந்திக்கப் போகின்றனர், என்பதை புலிகள் தலைமை உணராமல் விட்டது ஆச்சிரியமே.

2002 இல் வந்த சமாதானம் குட்டி போன்றோருக்கு இயக்கத்துக்குள் இலங்கை அரசுக்கு ஊடுருவலை மேற் கொள்ள வசதி ஏற்படுத்தும் தருணம் நன்றாகவே அமைந்தது, 2005 இல் குட்டி கொழும்பில் கடத்தப்பட்டதாக செய்தி வருகிறது. ஆனால் குட்டி கடத்தல் நாடகத்தை தானே நிகழ்த்தினார். கோடிக்கணக்கான புலிகளின் பணத்தோடு கடத்தல் நாடகமாடிய குட்டி கொழும்பில் இலங்கை அரச புலனாய்வு அமைப்புடன் சேர்ந்து இருந்து 2009 புலிகள் அழியும் வரை தனது காட்டி கொடுப்புகளை செய்து கொண்டிருந்தார்.

தனக்கு நெருக்கமான பல போராளிகள் மூலமாக மறைமுகமாகவும் நேரடியாகவும் தொடர்பு கொண்டு இலங்கை அரசுக்கு தகவல்களை வழங்கினார். புலிகள் எதிர் சமர் , ஊடுருவல் சமர் என்பவற்றைச் செய்யும் முயற்சிகள் எல்லாம் குட்டியும் குட்டியை போன்ற இன்னும் சந்தர்ப்பவாத தொங்கு தசைகளின் ஊடுருவல் தகவல் மூலம் இலங்கை அரசுப் படைகள் பெற்று கொண்டன.

ஆனால் எம்மில் பலர் பிரதேசவாத உணர்வோடு அனைத்தையும் கருணா மட்டுமே காட்டிக் கொடுத்ததாக பேசுகின்றனர். இதை இலங்கை அரசும் நன்றாகவே விரும்புகிறது. கருணாவே காட்டி கொடுப்பாளன் என அழுத்திச் சொல்வதன் மூலம் கிழக்கையும் வடக்கையும் இனம் சார்ந்து ஒடுக்கு முறைக்கு எதிராக ஓன்று சேர்ந்து போராடுவதை தடுக்கும் உத்தி பின்னப்படுகிறது.

ஆக இப்படிப் பட்ட சுத்து மாத்துகளுக்கும் காட்டிக் கொடுப்புகளுக்கும் உரித்தான குட்டி இப்போ எங்கே????? …………

2009 இல் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், வெளிநாடுகளில் இருக்கும் புலிகளை அங்குள்ள புலம் பெயர் தமிழர்களை அழிக்கும் அல்லது கட்டுப் படுத்தும் புதிய திட்டத்தோடு பிரான்ஸ் இல் இருந்து புலிகளின் பிரமுகராக வலம் வருகிறார் குட்டி. இம்முறை பிரான்ஸ் இன் மாவீரர் தினக் கொண்டாட்டத்தில் யாரும் இவரை கண்டீர்களா?

மேல் சொன்ன விடயங்கள் தவறு என புலிகளின் (??…) பிரதி நிதிகள் மறுப்பார்களா? ஆக குட்டி போன்ற சிலருக்கு பிரபாகரன் இருப்பதாக கூறவேண்டும். ஏனெனில் இன்னுமொரு புரட்சிகர தலைமை தோன்றாமல் இருக்கச் செய்ய வேண்டிய அனைத்தையும் இந்திய இலங்கை புலனாய்வு மையங்கள் செய்யும், அப்படிச் செய்ய குட்டி போன்றோரின் பங்களிப்பு தேவைப்படும். அத்துடன் இன்னுமோர் தலைவன் வந்தால் தங்களது தலைக்கு குறிவைக்கப்படும். ஆக இவர்களுக்கு எல்லாம் பிரபாகரன் என்ற பெயர் வேண்டும்.

பிச்சை புண்ணை காட்டி பிச்சை எடுப்பது போல மாவீரர்களையும் பிரபாகரனையும் காட்டி பிச்சை எடுப்பதை நிறுத்துங்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் எங்கள் மாவீரர்களை மாசு படுத்தாதீர்கள்.
இந்த வெட்கங் கெட்ட பிச்சைகாரர்களுக்கு பிச்சை போடுவதை எந்த சுய சிந்தனை உள்ள எந்த தமிழர்களும் செய்ய மாட்டார்கள் இனிமேல் செய்யவும் கூடாது.

பிரபாகரன் சூரியத்தேவன் என்பதுவும் அவன் உயிர் வாழ்கிறான் அவன் வந்த பின் மீண்டும் ஆயுத போர் தொடங்கும் என்பதும், பிரபாகரனை திட்டித் தீர்க்கும், அபகீர்த்தியை உண்டாக்கும் பிரச்சாரங்களும் பலதடவைகளில் ஒரு இடத்தில் இருந்து வருகிறது. உண்மையை விசுவாசிப்போர் மக்கள் நலன் உள்ளோர் தெளிவுள்ளோராக இருந்து பொது சிந்தனை ஊடாக சமூகப் போலிகளை இனங்காண வேண்டும், மக்களுக்கு இனங் காட்டவும் வேண்டும்.
புரட்சிகர மக்கள் கூட்டத்திற்கு பிரபாகரன் மாவீரன். பூ(ஞ்)ச்சாண்டிகளுக்கு பிரபாகரன் வாழும் சூரியத் தேவன். இதுதான் இன்றைய நிலை.

(கருத்துக்களும் விபரங்களும் முழுமையாகக் கட்டுரையாளரைச் சார்ந்ததே…இனியொரு… பொறுப்பல்ல)

Exit mobile version