Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழப் போராட்டத்தை ஆதரிக்கிறோம் : நேபாள மாவோயிஸ்ட் கட்சி

உலகில் ஒருபுறம் ஈழ மக்களின் உரிமைப் பேராட்டம் தற்போது ஒடுக்கப்பட்டுவிட்டாலும் மறுபுறம் நேபாள மக்களின் உரிமைப் போராட்டம் ஒடுக்கப்பட முடியவில்லை.இந்தியாவின் தொடர்ச்சியான தலையீடும் ஆதிக்கமும் இருந்தும் நாம் அவற்றையெல்லாம் வெற்றிகொண்டுள்ளோம். போராட்டத்தின் திசைவழியைத் திட்டமிடல் என்பது இதன் அடிப்படையாக அமைந்திருந்தது.

நேபாளத்தில் அரசியல் சாசனத்தை எழுதி முடிப்பதற்கான நாள் என வரும் மே-28ஐ நிர்ணயித்து இருந்தாலும் அவ்வாறு செய்து முடிப்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. போராட்டத்தின் முதல் பகுதியான ஜனநாயகப் புரட்சியில் நாம் வெற்றியடைந்துள்ளோம். போராட்டம் இன்னும் தொடர்கிறது என்று தனது உரையாடலை ஆரம்பித்தார் தோழர் லஷ்மண் பந்த்.

நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினரான தோழர் லஷ்மண் பந்த் சென்ற மாதம் சென்னை வந்திருந்த போது இது பற்றி அவரிடம் கலந்துரையாடினோம். டெல்லியை மையமாகக் கொண்டு செயற்பட்டுவரும் அவர் Indo-Nepal People’s Solidaily Forum ஐ புனரமைப்பதில் ஈடுபட்டு உள்ளார். சென்னைக்கு வந்திருந்த அவரிடம் தோழர் சபாநாவலன், தோழர் பாஸ்கர் (ஆசிரியர் குழு உறுப்பினர், ‘புதிய போராளி’ இதழ்) பத்திரிகையாளர் அருள் எழிலன் ஆகியோர் உரையாடினர்.

தோழர் லஷ்மண் பந்த் பகிர்ந்துகொண்ட கருத்துகளின் சாராம்சம் பின்வருமாறு.

நேபாளம் Climax ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. வரும் மே 28 அன்று அரசியல் சாசனம் எழுதி முடிவதற்கான இறுதி நாள் ஆகம். மே 20 வாக்கில் அரசியல் சாசனத்தை எழுதி முடிக்க வேண்டிய காரணத்திற்காக பெரும் மக்கள் போராட்டம் தொடங்கப்படும்.

இதை நசுக்குவதற்காக இந்திய விரிவாதிக்கம் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் அவசரநிலை பிரகடனம் செய்யப்படலாம்

நேபாள மாவோயிஸ்ட் கட்சியானது எந்தவொரு விளைவிற்கும் தயாராகவே இருக்கும் நோக்கில் அதற்கான தயாரிப்பில் இருந்துகொண்டிருக்கிறது. முடியாட்சியை ஒழித்து ஜனநாயகக் கூட்டாட்சி குடியரச (Federal Democratic Republic) என்பதை நிறுவிய இக்கட்சியானது இப்பொழுது புதிய ஜனநாயகப் புரட்சி என்ற இலக்கை நிறைவு செய்யும் நோக்கில் இருக்கிறது. 1996ல் தொடங்கப்பட்ட மக்கள் யுத்தமானது முன்வைத்த நோக்கம் இதுவே.

இந்தியத் தலையீடு:

இந்திய விரிவாதிக்கம் மிகப் பெரிய இடைஞ்சலாக இருந்து வருகிறது. ஆணவம் நிறைந்த தலையீடு அன்றாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நேபாளத்தில் எங்களை புலிகளைப்போல் ஒழிக்க முடியும் எனவும் ஒழிக்க வேண்டும் எனவும் பேசப்படுகிறது. அது முடியாது. ஏனெனில், புலிகளிடம் இருந்த குறைபாடுகளான.

ஆகியன எங்களிடம் இல்லை.

மேலும் எங்களுக்கு,

(அ) உலகத் தொழிலாளி வர்க்கத்தின் ஆதரவு உண்டு. குறிப்பாக இந்திய புரட்சிகர சக்திகளின் ஆதரவு உண்டு. இது அடிப்படையானது என கருதுகிறோம்.

(ஆ) மக்கள் விடுதலைப் படை (People’s Liberation Army) இருக்கிறது.

(இ) இளங்கம்யூனிஸ்ட் கழகம் (Young Communist Leaged) என்ற துணை இராணுவப் படை இருக்கிறது.

(ஈ) இமயமலைப்பகுதி முதல் தெராய் பகுதிவரை கட்சியின் அடித்தளம் இருக்கிறது.

இந்த நிலைமையில் இந்தியா தலையீடு செய்யுமானால் முழு நேபாளமே எழும். இந்திய விரிவாதிக்கமும் வியட்னாம் தேசிய விடுதலை (அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்த) போரை மறக்காது. இதனால்.

(அ) வீழ்த்தப்பட்ட மன்னர் கியானேந்திராவின் ஆதரவு சக்திகளைப் பயன்படுத்தும்.

(ஆ) பொருளாதார தடையை அமலாக்கும்.

 

திபெத் விடுதலை போராட்டத்தையும் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் கொள்கையளவில் ஆதரிக்கிறோம். இந்திய சீன முரண்பாடு சில சந்தர்ப்பங்களில் எமக்குச் சாதகமானதாக இருந்தாலும், சீனாவை ஒரு அப்பட்டமான முதலாளித்துவ சர்வாதிகார நாடாகவே நாங்கள் பார்க்கிறோம்.

இப்பொழுது ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிக்கிறோம். எதிர்காலத்திலும் ஆதரிப்போம். அவர்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு இலங்கை அரச சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை உலகின் ஒடுக்கப்பட்ட மக்களோடு இணைந்து முன்னெடுக்கவேண்டும். மக்கள் யுத்தமாக இலங்கையின் புறச் சூழலுக்கு ஒத்த போராட்டமாக முன்னெடுத்தால் சர்வதேச ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவோடு வெற்றிகொள்ள முடியும்.

இந்தியாவின் புரட்சிகர சக்திகள் மக்கள் திரள் அடித்தளம் இல்லாமல் மக்கள் இயக்கமாக இல்லாமல் இருக்கின்றன. பேரளவு தியாகம் செய்தும் மக்கள் எழுச்சி இல்லாமல் இருப்பது என்பது கேள்விக்குரியது. எனினும் எத்தகைய வழி மாதிரியை இந்தியப்புரட்சி மேற்கொள்ளவேண்டும் என்பதை இந்தியப் புரட்சிகரச் சக்திகளே தீர்மானிக்க வேண்டும்.

அதே போல், நேபாளத்திற்கு உரிய மாதிரி என்பது பிரத்யேகமானதாகவே இருக்கும். நாடாளுமன்றத்தையோ அமைதி வழிமுறையையோ பயன்படுத்துவது என்பது மிகவும் தற்காலிகமானதே.

தொகுப்பு  :  பாஸ்கர்
Exit mobile version