
பால் தக்கரே போன்ற இந்து அடிப்படைத மதவெறியார்களால் ஆட்கொள்ளப்பட்டதாக மும்பாயில் கூறிய ரஜனிகாந் இன் திரைப்படம் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்படுவதன் சற்று முன்பாக மட்டும் அவருக்கு ஈழத் தமிழர்கள் மீது இரக்கம் பிறக்கும்.
சீமான், வை.கோ, நெடுமாறன், திருமாவளவன் போன்ற வாக்குப் பொறுக்கிகள் ஈழத் தமிழர்கள் அவலத்தை அரசியல் வியாபாரமாக்குவதைப் போன்று சினிமாவிலும் இந்த அவல வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கான விளம்பரச் சுவரொட்டி ஒன்றில் பிரபாகரனுடன் கமலஹாசன் கைகோர்த்துக்கொண்டு நிற்பதாக இன்று மதுரையில் வெளியிடப்பட்டடிருந்தது.
முஸ்லீம்கள் மீதான இந்து பாசிச ஒடுக்குமுறையைக் கலையாக்கிய கமலஹாசனுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு?
தமிழ் நாட்டின் சினிமாக் குப்பைகளைப் புறக்கணிப்பதன் ஊடாகவே அவமானகரமான வியாபாரிகளை வெளியேற்றுவதற்கான முதல் போராட்டத்தை ஆரம்பிக்க முடியும்.