இலங்கையில் பேரினவாதம் தமிழினத்தை அழிப்பதில் விரைந்து செயற்பட்டு வருகின்றது. வெளியே தெரியாமல் கறையான் புத்தகத்தை அரிப்பது போல் இது நடைபெற்று வருகின்றது. இந்த ஆபத்திலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு தமிழ் மக்கள் தங்களிடமுள்ள வேற்றுமைகளைக் களைந்து ஓரணியில் திரளவேண்டும். -இவ்வாறு தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் பிரதேச சபை எல்லையில் அமைந்துள்ள பெருவெளி கிராமத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மூதூர் பிரதேச சபையில் போட்டியிடும் கூட்டமைப்பின் வேட்பாளர்களை தமிழ் வாக்காளர்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், வவுனியா மாகாணசபையின் உபதலைவர் ரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.