Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்க சித்திரவதைகளின் சூத்திரதாரி: நிவேதா நேசன்

ciatortureஅமெரிக்க அரசும் அதன் உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ உம் மனித குலத்திற்கு எதிராக நடத்தும் சித்திரவதைக் ‘கலையை’ உருவாக்கிக் கொடுத்த ஜேம்ஸ் மிச்சையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது ‘மகத்தான பணியை’ ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அமெரிக்க அரசு தனது எதிரிகள் என்று சுட்டிக்காட்டுபவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் பொறிமுறையை இந்த மனிதரே பக்கம் பக்கமாகக் காகிதங்களில் எழுதிக்கொடுத்துள்ளார்.

உளவியலாளரான இவர் தனது மனிதாபினமற்ற கொடூரச் செயற்பாடுகளை இன்றும் சரி என வாதிடுகிறார். விமானப்படையில் உளவியலாளராக வேலைபார்த்து ஓய்வு பெற்ற மிச்சையில் ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை விட அதிகமாகக் கொடூரமான சித்திரவதைத் திட்டங்களை வரைந்து கொடுத்துள்ளார். பெட்டிகளுக்குள் மனிதர்களை நாட்கணக்கணக்கில் அடைத்து வைத்திருத்தல். ஒரே இடத்தில் சங்கிலிகளால் நாட்கணக்கில் கட்டிப்போடுதல், பல நாட்களுக்கு உறக்கமின்மையைத் தூண்டுதல், தலைகளைச் சுவர்களோடு மோதுதல், நகங்களுக்குள் ஊசிகளை நுளைத்தல் போன்றவற்றை விட மேலும் கோரமான சித்திரவதைகளை அமெரிக்க சீ.ஐ.ஏ இற்கு வரைந்துகொடுத்துள்ளார்.

40 மில்லியன் டாலர்கள் செலவு செய்து 6600 பக்கங்களைக் கொண்ட சித்திரவதைகள் தொடர்பான அறிக்கைய செனட் சபை தயார் செய்தது. இந்த அறிக்கையில் ஜேம்ஸ் மிச்சையிலின் பெயர் சித்திரவதைகளின் சூத்திரதாரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இதுவரை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்வில்லை.

செனட் சபைக் குழு இதனை இரகசியமாக வைத்துள்ளது.

செனட் குழுவின் தலைவரான டயான் பிஸ்டையின். இது எமது நாட்டை அவமதிப்பதாகும் என்கிறார். ஒரு நாட்டின் மதிப்பிற்கு மாறுபட்ட வகையில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டிருப்ப்தாகக் கூறுகிறார்.
தான் உருவாக்கிய சித்திரவதைப் பொறிமுறை கைதிகளிடமிருந்தும், சந்தேக நபர்களிடமிருந்தும் தகவல்களைப் பெறுவதற்குப் பயனளித்துள்ளதாக ஜேம்ஸ் மிச்சையில் கூறுகிறார்.

James Mitchel

சி.ஐ.ஏ. செய்த இத்தகைய கொடூரங்கள் வெளியாவது இது முதல்முறையல்ல. “சி.ஐ.ஏ.வின் கருந்தளங்கள்” என அறியப்பட்ட இரகசிய சித்திரவதைக் கூடங்களைப் பற்றியும் அதற்கு ஐரோப்பிய நாடுகள் வழங்கும் ஒத்துழைப்பு பற்றியும் 2005-இல் சில அமெரிக்கப் பத்திரிகைகள் செதிகளை வெளியிட்டன. அப்போது ஐரோப்பிய சபை நடத்திய விசாரணையில் ஏறத்தாழ இருபது நாடுகள் சி.ஐ.ஏ.வுக்குத் துணைபுரிந்தது அம்பலமாகியது. 2006 ஜனவரியில் ஐரோப்பிய நாடாளுமன்றம் அமைத்த மற்றொரு விசாரணைக் குழு அளித்த அறிக்கை, 2001-2005 காலகட்டத்தில் ஐரோப்பிய விமான வழித்தடத்தின் ஊடாக மட்டுமே சி.ஐ.ஏ. 1245 தடவை விமானங்கள் வழி ஆட்கடத்தலில் ஈடுபட்டதை அம்பலப்படுத்தியது. 2012-ஆம் ஆண்டு மனித உரிமை கண்காணிப்பகம் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சி.ஐ.ஏ. ஆப்கான் ஆக்ரமிப்பின் போது “வாட்டர் போர்டிங்” என்ற கொடூர தண்ணீர் சித்திரவதையை கைதிகள் மீது ஏவியதாகக் குற்றம் சாட்டியது. ஆனால், “இந்தச் சித்திரவதைகள் உயரதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, அமெரிக்க நலனுக்காகவே நடந்தது” என்பதால், அதன் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது என்றார் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர்.

செனட் சபையும், மனித உரிமை கண்காணிப்பகம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தமது ‘பணியைத் திறம்படச் ‘ செய்கின்றன. இது சீ.ஐ.ஏ இன் தன்னிச்சையான நடவடிக்கை எனவும் அமெரிக்க அரசிற்குத் தெரியாமலேயே இவையெல்லாம் நடைபெறுகின்றன எனவும் அமெரிக்க அரசிற்கு ஜனநாயக முகமூடி போடும் வேலையையே இவர்கள் செய்கின்றனர்.

54 நாடுகள் தமது நாட்டு சட்டங்களுக்கும் பன்னாட்டு மனித உரிமை சட்டங்களுக்கும் விரோதமாக அமெரிக்க உளவுத் துறையின் சிறைப்படுத்தல், சித்திரவதை நடவடிக்கைகளில் பங்கேற்றன’ என்று மற்றொரு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நாடுகளில் இலங்கையும் அடங்கும். 2003, 2006 ஆம் ஆண்டுகளில் சித்திரவதை செய்யும் கைதிகளை இரகசியமாகக் கடத்துவதற்கான தரிப்பிடமாக இலங்கை விமான நிலையம் பயன்படுத்தப்பட்டது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கையில் சமாதானத்தை நிலைனாட்டப் போவதாகவும் ராஜபக்ச அரசைத் தண்டிக்கப் போவதாகவும் நாடகமாடும் அமெரிக்க அரசும் அதன் கூறுகளும் அடிப்படையில் ராஜபக்சவின் நண்பர்களே.

Exit mobile version