Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்! : இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்.

வவுனியா சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகள் மீதான இலங்கை பாதுகப்பு படையினரின் மூர்ககத்தனமான கூட்டு தாக்குதலை இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் வன்மையாக கண்டிக்கிறது.

அரசாங்கத்தினால் பயங்கரவதிகளாக அழைக்கப்படும் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்து சித்திரைவதை செய்வதை விடுத்து எந்த வித நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டுமென்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக கேந்திரம் கோருகிறது.

இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் அழைப்பாளர்களான தோழர்கள் இ.தம்பையா, டபிள்யூ .வீ சோமரத்ன விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்படப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாதிகள் என்று அரசாங்கத்தால் அழைக்கப்படும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி, சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சில அரசியல் கைதிகள் எவ்வித குற்றச்சட்டுகளுமின்றி பல ஆண்டுகளாக தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் ; சிலர் வழக்கு விசாரணைகள் தொடரும் நிலையிலும் சிலர் வழக்கு விசாரனைகள் இல்லாமலும் மறியல் சாலைகளில் சிறை வைக்கப்படுள்ளனர். வேறு சிலர் நீதிமன்றகளினால் விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது மனித உரிமைகள், மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானதாகும்.

இதன் விளைவாக கைதிகள் மத்தியில் அமைதியின்மை தோன்றியுள்ளது. வவுனியா சிறைச்சாலையில் நடைப்பெற்ற போராட்டமும் கைதிகளின் விரக்தியினதும் அமைதியின்மையினதும் வெளிப்பாடே ஆகும்.

அரசாங்கம் கைதிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவ்விதமான அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக சிறைச்சாலை அதிகாரிகளை மீட்கும் நடவடிக்கை என்னும் பேரில் வவுனியா சிறைக்குள் இருந்த கைதிகளுக்கு எதிராக ஒரு ஆயுத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் கைதிகள் தொடர்ந்து துன்புறுத்தப்ப்ட்டும் வருகின்றனர்.

நீடித்த சிறை வைப்பும் துன்புறுத்தல்களும் கைதிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவ்வையிலும் வழிவகுக்காது. மாறாக பிரச்சினைகளை மேலும் உக்கிரமடையச் செய்யவே உதவும்.

மூன்று வருடங்களுக்கு முன்பே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்த போதும், கைதிகள் உட்பட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அர்ததமுள்ள நடவடிக்கைகளை அரசங்கம் எடுக்கவில்லை.கைதிகளை பொருத்தவரையில் அனுதாபம் கொண்டதாக மக்களுக்கு காட்டிக்கொண்டு. அடையாளமாக ஒரு சிலரை விடுவித்துள்ளது.

எனவே அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வற்புறுத்தி ஜனநாயக, இடதுசாரி, புரட்சிகர ச்க்திகள், மனித உரிமை செயற்ப்பாட்டாளர்கள் இணைந்து பொதுவான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் தமிழர்களாக இருக்கின்ற போதும் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தனியொரு தேசிய இனத்துக்கு வரையறுக்கப்பட்டதாக இருக்க முடியாது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில், எங்களது மக்கள் ஐக்கியப்பட்டு செயற்ப்பட்ட பாரம்பரியத்தை கொண்டுள்ளனர். 1971, 1988 ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கைதானவர்களை விடுவித்து கொண்டது எடுத்து காட்டாகும்.

இ.தம்பையா, டபிள்யூ .வீ சோமரத்ன

அழைப்பாளர்கள்
இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்.

Exit mobile version