Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உண்ட வீட்டுக்குள் 1 இற்கு இருந்த முதல்வர்: ஈழ மாறன்

விக்கி விக்கி தமிழ் பேசும்
முதல்வரே, தமிழ் மானம் காக்க வந்த
நரைவிழுந்த கரிகாலா
நடுநிலமை என்று சொல்லி
நரி வேலை செய்ததுவேன்.

உயர்மன்றில் அமந்திருந்து
அரசோடு உறவாடிக் கொண்டாய்.
மகிந்தாவின் அரண்மனையில்
உணவுண்டு கிடந்தாய்
தமிழீழம் கேட்டவனை சிறைசெல்ல வைத்தாய்
வடக்கென்று ஒரு பகுதி இருக்கென்று மறந்தாய்

பிரேமானந்தா பெண் பித்தன்
அவன் பின்னாலே போனவன் நீ
சித்தனா இல்லை முக்தனா?
முல்லைத் தீவிலே தீமூட்டினான்
முள்ளி வாய்க்காலில்
குய்யோ முறையோ என்றெம்மினம் கூவி யழ
கொத்துக் கொத்தாய் குண்டிட்டு அழித்தான்
மீதிப் பேரை முள்வேலிக்குள் அடைத்தான்.
கொழும்பில் இருந்து
கொழுத்துக் கிடந்த உன்
நடுநிலமை மூளக்கு
பட்டினியில் வாடிய உன்
பாவித் தமினத்தை விடுடா திறந்தென்று
அறிக்கை விட மறந்தாய் – பின்
கன்னியரை மோசம் பண்ணி
வல்லுறவு கொண்டு, சிதைத்துப் பின் கொன்றவனை
பிறேமானந்தம் கண்டவனை
விட்டுவிடு என்றெழுந்து அறிக்கை விட்ட
மாமனிதா
நடுநிலமை என்று சொல்லி நாறிக் கிடக்கும்
உன் நேர்மையினை
வாந்தி எடுத்தாய் அறிக்கையாய் இன்று

மகிந்த இருக்கும் வரை
மசிந்து திரிந்தாய்
செத்த பிணம் போல
சத்தமின்றிக் கிடந்தாய்
மகிந்த போனபின்னே
மானத் தமிழா உனக்கு
ஈனத்தமிழன் கொலை
இனவழிப்பாய் தெரிந்தது ஏன் ?
இனத் தீயை மூட்டிவிட்டால்,
மகிந்த மீண்டும் மகுடம் சூட்டிடுவான்
மீதித் தமிழரையும் அவன்
காவுகொடுப்பான் என்று கனவு கண்டாயோ

புலம்பெயர் நாடு வந்தாய்
பினாமி கூட்டத்தோடு
கூட்டமிட்டாய், தின்று
கும்மாளமிட்டாய்
சாமியுடன் திரிந்தவனே
எம்மினம் சாகும் போதோ
சிறைப் பட்டு சிதைந்த போதோ
உச்ச தண்டனை கொடுத்து
எஜமான் விசுவாசம் காட்டி விட்டு
வெளிநாட்டில் குளிரில்
உழைத்த காசை
தேசம் விடுவிக்க கொடுத்த காசை
சுருட்டி வயிறு வளத்தவரோடு
ஒட்டினாய் உன் புத்தி காட்டினாய்
நாய் விசுவாசம் போட்டாய்
பதவிப் பிச்சை போட்ட வீட்டில்
மலம் கழித்துப் போனவனே
நீ யார் என் இனம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல

Exit mobile version