அச்சுறுத்தல் காரணமாக இரண்டு TNA வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் போட்டியிட்ட இரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தேர்தலிலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்பு மனுக்கள் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட இருந்ததாகவும், வேட்பாளர்கள் திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டதனால் மீண்டும் வேட்பாளர் பட்டியலில் திருத்தங்களை செய்ய நேரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் தொடர்புடைய அரசியல் கட்சிகள் ஏனைய கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மற்றும் கருணா குழுக்களின் வன்முறைகள் இந்தத் தேர்தலில் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது.