Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்ச சகோதர்கள் கம்பனியில் பிளவு

ராஜபக்ச சகோதரர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பசில் ராஜபக்சவிற்கு எதிராக ஏனைய இரு சகோதர்களும் செயற்பட்டு வருவதாகவும், பசிலிடமிருந்து அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படு விட்டதாகவும் தெரியவருகிறது. பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த போதிலும் தனது பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலிருப்பதாகத் தெரியவருகின்றது. நிதியமைச்சில் பசிலின் நிதி ஒதுக்கீட்டிற்குப் பொறுப்பாகவிருந்த ஆரியரத்ன காரணங்கள் எதுவுமின்றி அமைச்சிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சிறி லங்கா சுதந்திரக கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட முன்னை நாள் உறுப்பினர்களுடன் பசில் பேசிவருவதாகவும் அத் தொடர்புகளை மகிந்த குழுவினர் ஒட்டுக்கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த ஒட்டுக்கேட்பு விடயத்தை அறிந்துள்ள பசில் ராஜபக்ஷ, தான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமல், அதற்காக வேறு முக்கிய நபர் ஒருவரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவின் மனைவியும் மகன் நாமல் ராஜபக்சவும் பசிலை ஓரம்கட்டும் முயற்சியில் பிரதான பாத்திரம் வகித்ததாகக் கூறப்படுகிறது.

புலம் பெயர் நாடுகளிலும், அரச ஆதரவுத் தமிழர்கள் மத்தியில் இந்த முரண்பாட்டின் வெளிப்பாடுகளைக் காணக்கூடியதாகவுள்ளது. பசில் ராஜப்கசவொடு தொடர்பிலிருந்த குழுக்கள் அதிகாரங்களை இழந்துவருகின்றன. சிலர் திடீரென இலங்கை அரசிற்கு எதிராகக் குரலெழுப்ப ஆரம்பித்துள்ளனர். கோதாபய ராஜபக்சவின் கே.பியுடனான தொடர்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ள அரச ஆதரவுக் குழுக்களின் மறுபகுதியினர்.

இவர்களிடையேயான சச்ச்ரவுகள் இலங்கையில் ஜனநாயக இடைவெளி ஒன்றை ஏற்படுத்துமானால் அது நம்பிகையின் முதல் படியாக அமையும்.

Exit mobile version