
இனப்படுகொலைக்கு ஆதரவளித்த ஏகபோக அரசுகளுக்கு நாட்டின் இறையாண்மையைப் பகிர்ந்தளித்த ராஜபக்ச இன்று ஆதிக்கப்ப் போட்டியில் சிக்குண்டுள்ளார். ஒரு புறத்தில் சீனாவும் மறுபுறத்தில் அமரிக்க-இந்தியக் கூட்டும் ராஜபக்சவிற்கு அழுத்தங்களை வழங்குகின்றன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஊடாக ராஜபக்சவை அகற்றி இன்னொரு பேரினவாதியை அதிகாரத்தில் அமர்த்த அமரிக்க சார்பு அணி முயல்வதாக ராஜபக்ச அச்சமடைந்துள்ளார்.
சில நாட்களின் முன்னர் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை இலங்கை உயர் நீதிமன்றத்திலேயே நடத்த வாய்ப்புகள் காணப்படுவதாக ராஜபக்சவின் சட்ட ஆலோசகர்கள் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்கள். ஐ.நா இன் மேற்பார்வையில் இவ்வாறான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறியுள்ளார்கள்.இதனைத் தொடர்ந்து ஷிராணி பண்டாரநாயக்க போன்ற நேர்மையான நீதிபதிகளை அதிகாரத்தில் வைத்திருந்தால் ஆபத்து ஏற்படும் என ராஜபக்ச குடும்பம் முடிவிற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து நாளை 05.11.2012 ராஜபக்ச தனது ஆதரவாளர் குழாமுடன் ஷிராணிக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளனர். வறிய குடும்பம் ஒன்றிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதியான ஷிராணி, ராஜபக்சவின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடந்து போராடுவேன் என்று அறிவித்துள்ளார்.