Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா:இந்து பாசிஸ்டின் பேச்சு

praveen-togadiaகுஜராத் மாநிலம் பாவ் நகரில் மேகானி சர்க்கிள் பகுதியில் உள்ள வீட்டை முஸ்லிம் வியாபாரி ஒருவர் வாங்கியுள்ளார். இந்துக்கள் அதிகம் வாழும் அந்த பகுதியில் முஸ்லிம் ஒருவர் எப்படி வீடு வாங்கலாம் என்று விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தளம் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தின்போது விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசுகையில், ‘‘இந்த வீட்டை வாங்கி குடியேறியுள்ள முஸ்லிம், அடுத்த 48 மணி நேரத்துக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும். இல்லையெனில் வீட்டை முற்றுகையிடுவோம்’’ என்றார்.
முஸ்லீம்களுக்கும் சிறுபான்மைத் இனக்குழுக்களுக்கும் எதிரான முரண்பாடுகளையும் வன்முறைகளையும் தூண்டிவிட்டு அதனை வாக்குகளாகச் சேகரிக்கும் பாரதீய ஜனதாவும் அதன் துணை அமைப்புக்களும் இந்தியாவின் அவமானச் சின்னங்கள்.
இந்தியா முழுவது பேரழிவுகளை ஏற்படுத்தவல்ல இச் சமூக விரோத அமைப்புக்களை இன்றும் உலாவ விட்டுள்ள காங்கிரஸ் மற்றும் ஏனைய வாக்குக் கட்சிகளும் இந்துத்துவ பாசிசத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்களே.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பொதுசெயலர் பிரவீண் தொகாடியா மீது பல்வேறு கட்சிகள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். ஆயிரமாயிராய் படுகொலைகளை நடத்திவிட்டு மோடி சுதந்திரமாக சுற்றிவரும் நிலையில் தேர்தல் அதிகாரிகள் நேற்று மாலை பிரவீன் தொகாடியாவின் பேச்சு அடங்கிய வீடியோ பதிவை பார்த்தனர். பிறகு பிரவீண் தொகாடியா மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வேறு கூறினர்

Exit mobile version