
மன்னார் மாவட்டத்திலுள்ள மாதர் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், இளைஞர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள் ஆகிய அமைப்புக்களிலிருந்து பேருந்தில் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சங்கம் மற்றும் கழகங்களில் இருந்து தலா 50 பேர் வரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அழைத்துச் செல்லப்படும் ஒவ்வொருவருக்கும் காலை, மதிய உணவுகளும், கொடுப்பனவாக ஆயிரம் ரூபா தருவதாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பின் மன்னாருக்கு திரும்பிய பின்னரே பணம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் ரிஷhட் பதியூதீன் உட்பட ஆளும் கட்சி அமைப்பாளர்கள், பணம் தருவதாக வாக்குறுதி அளித்து மக்களை அழைத்துச் சென்றுள்ளனர். குடும்ப வறுமை காரணமாக மன்னார் மாவட்டத்தில் இருந்து பெண்களே கூடுதலாக சென்றுள்ளனர்.