Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வட-கிழக்கில் வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர் போராட்டம், அரசாங்கத்திடம் வேலை தாருங்கள் எனக் கேட்கமுடியாதென சம்பந்தன் தெரிவிப்பு!

வட-கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தாம், இப்பட்டதாரிகளுக்கு வேலை தருமாறு அரசாங்கத்திடம் கேட்கமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலையைக் கேட்டுப் பெற்றுக்கொண்டால் தன்னால் உரிமையைப் பெற்றுக்கொள்ளமுடியாதுபோகும் என அதற்கான காரணத்தையும் தெரிவித்திருந்தார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாங்கிக்கொடுப்பது சம்பந்தரின் உரிமையில்லையா? நாட்டின் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாகாணங்களாக வடக்குக் கிழக்கே உள்ளன. வடக்குக் கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கவேண்டிய சம்பந்தன் போன்றவர்கள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கத்திடம் வேலை கேட்டால் உரிமையைக் கேட்கமுடியாது என தெரிவித்துள்ளமை வேடிக்கையானதே?

அரசாங்கத்தின் கைக்கூலிகளாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  அண்மையில், வரவுசெலவுத் திட்டத்திற்கு நிபந்தனையில்லாது ஆதரவளிப்பதற்கு அரசாங்கத்திடமிருந்து 2 கோடியினை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டது.

அத்துடன், அவர்களுக்கு வேண்டிய வீடுகள், சொகுசு வாகனங்கள், அதைவிட பாதுகாப்புக்காக 30 விசேட அதிரடிப்படையினர் என பல்வேறு சலுகைகளைப் பெற்று உல்லாச வாழ்க்கை வாழும் சம்பந்தன் போன்றவர்களால் எப்படி கூலித்தொழில் செய்து அன்றாடம் தமது வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றிச் சிந்திக்கமுடியும்?

Exit mobile version